kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: The Earth - continuation


Senior Member

Status: Offline
Posts: 107
Date:
The Earth - continuation


பூமியின் மகிமையான எதிர்காலம் ‍‍ - தொடர்ச்சி

வித்தியாசங்களின் ஆரம்பம்:

இயேசு கிறிஸ்துவின் இராஜ்யத்திற்கும் இந்த பொல்லாத உலகத்தின் ஆளுகைக்கும் ஏராளமான வித்தியாசங்கள் காணப்படும். நீதியை அடிப்படையாகக் கொண்டு இயேசு கிறிஸ்துவின் இராஜ்யம் செயல்படும். ( ஏசா. 11:4 )  அந்த பரிசுத்த ஆளுகைக்கு ஆதாரமாக கிறிஸ்துவும் அவருடைய மண்வாட்டியாகிய சபையும் செயல்படும். ( 1 பேது. 2:9 ) இந்த ராஜாங்கத்தின் நோக்கமே மனித குலத்தை நல்வழிப்படுத்தி பரிசுத்தத்திற்குள் அழைத்துச் செல்வதேயாகும். அவருடைய நியாயத்தீர்ப்புகள் பூமியிலே நடக்கும் பொழுது பூச்சக்கரத்துக் குடிகள் நீதியைக் கற்றுக் கொள்வார்கள். ( ஏசா. 26: 9 ) இந்த ஆளுகையிலே கடல் தண்ணீரால் நிறைந்திருக்கிறது போல பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும். ( ஏசா. 11: 9 ) பூமியின் குடிகளில் சிறியோர் முதல் பெரியோர் வரைக்கும் எல்லோரும் தேவனை அறிந்து கொள்வார்கள். ( எரே. 31:34 ) இந்த ராஜாங்கத்தைக் கொண்டு கர்த்தர் ஜனங்கள் எல்லாரையும் ஒருங்கிணைத்து அவரைத் தொழுது கொள்ள பாஷையை சுத்தமானதாக மாற்றுவார். ( செப். 3: 9) சீயோனிலிருந்து வேதமும் எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும். ( ஏசா. 2:3,  11:9,  எரே. 31:34 ) இந்த தேவனுடைய வார்த்தைகளின் மூலமாக தேவ ஞானமானது கிறிஸ்துவின் ஆளுகையிலே பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களைக் கொண்டு மனித குலத்திற்குக் கற்பிக்கப்படும் என்பது தெளிவாகப் புலனாகிறது. இந்த ஆளுகையின் காலத்தில் தற்பொழுது உபயோகத்திலிருக்கும் தொலைத்தொடர்பு        வசதிகளையும், நவீன அச்சுக் கலையையும், இனிமேல் கண்டுபிடிக்க இருக்கும் புதிய யுக்திகளையும் உபயோகப்படுத்தி தேவனைப்பற்றிய அறிவை இந்த பூச்சக்கரத்து மக்களுக்குப் போதிப்பார்கள் என்று நம்பலாம். தேவனுடைய வார்த்தையும் சட்ட திட்டங்களும் தெளிவாகவும், உறுதியாகவும் கற்றுத்தரப்படும். எத்தகைய சந்தேகமோ அல்லது குழப்பமோ இல்லாமல் தனி மனிதனின் தேவனுக்கடுத்த கடைமைகள் இன்னது என்றும் அவனுடைய அயலானுக்கடுத்த பொறுப்புகள் இன்னது என்றும் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கும். ஏசாயா தீர்க்கன் இதனைக் குறித்து எழுதும் பொழுது ஒவ்வொருவனும் பூரண சம்மதத்துடன் தேவனைப்பற்றி தெரிந்து கொள்ளவும், அவர் அருளும் ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக் கொள்ளவும் வாஞ்சிப்பான் என எழுதியிருக்கிறார். நம் கர்த்தரின் பர்வதத்திற்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள், அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார். நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள். ( ஏசா. 2 : 3 )  மேலும் ஏசாயா தீர்க்கதரிசி தன்னுடைய புத்தகத்தில் அவர் ராஜ்யபாரம் செய்யும் பொழுது கற்கள் பொறுக்கிப் போடப்பட்டிருக்கும், கோணலானது செவ்வையாக்கப்பட்டு கரடு முரடானவை சமமாக்கப்பட்டு பள்ளமெல்லாம் உயர்த்தப்பட்டு, சகல் மலையும், குன்றும் தாழ்த்தப்படுமென எழுதியிருக்கிறார். ( ஏசா. 40:4, 42:16, 62:10 ) தீர்க்கதரிசி அடையாள பாஷையிலே இந்த ராஜ்யத்திலே நீதிக்கு வரும் தடைகள் நீக்கப்பட்டு பூமியில் தீமையின் ஆளுகை ஒழிக்கப்படும் என்று உணர்த்தி இருக்கிறார். அப்புறப்படுத்தப்படும் மிகப் பெரிய கல் சாத்தானே. இந்த சாத்தான் பூமியின் குடிகளை மோசம் போக்காதபடிக்கு கட்டப்படுவான். ( வெளி. 20: 7 8 ) எல்லா தடைகளும் நீக்கப்பட்டு மனிதனுடைய விரோதிகளும் காணப்பட மாட்டார்கள். ( ஏசா. 35:9 ) மேலும் மனிதனின் தன்னல எண்ணங்கள், விழுந்துபோன அரசியல், மத, சமூக, பொருளாதார நிறுவன‌ங்களின் ஆளுகை நீக்கப்படும். தற்சமயம் காணப்படும் எல்லாவித அதிகாரங்களும் அடையாள மொழியில் கூறப்பட்டுள்ளபடி தீக்கிரையாக்கப்படும் ( 2 பேது. 3 : 10 ). மனித பலவீனத்தை பயன்படுத்தி நடத்தப்படும் எல்லா சமூக விரோத செயல்பாடுகளும் நீக்கப்படும். இன்று நிலவி வரும் தன்னல பொருளாதார கொள்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். இந்த ராஜாங்கத்திலே ஜீவ தண்ணீரும், ஆசீர்வாதங்களும் இலவசமாக எல்லோருக்கும் தரப்படும். ( ஏசா. 55:1,  வெளி. 22: 17 ) ஏழை, பணக்காரன்  என்ற பாகுபாடு இல்லாமல் போகும். யார், யார்மேலும் அதிகாரம் செலுத்த முடியாது. அவனவன் தன் தன் வேலையில் மகிழ்ந்திருப்பான். அவர்கள் விருதாவாக உழைப்பதுமில்லை, அவர்கள் சந்ததி அழிவிற்கு நீங்கலாயிருப்பார்கள். ( ஏசா. 65: 21 23 )

தேச‌ங்க‌ளுக்கு இடையே இருந்த‌ ப‌கைக‌ள், வ‌ன்முறைக‌ள், விரோத‌ங்க‌ள், ப‌ல்வேறு இன‌ங்க‌ளின் ம‌த்தியில் இருந்த க‌ச‌ப்புக‌ள், வைராக்கிய‌ங்க‌ள் போன்ற‌வ‌ற்றிர்க்கு முடிவு வ‌ரும். இந்த‌ ப‌ரிசுத்த‌ ப‌ர்வ‌த‌மெங்கும் தீங்கு செய்வாருமில்லை, கேடு செய்வாருமில்லை. ச‌முத்திர‌ம் ஜ‌ல‌த்தினால் நிறைந்திருக்கிற‌து போல் பூமி க‌ர்த்த‌ரை அறிகிற‌ அறிவினால் நிறைந்திருக்கும். ஏனென்றால் ராஜாங்க‌ம் இயேசு கிறிஸ்துவினுடைய‌தாய் இருப்ப‌தால் என‌ காண்கிறோம். ( ஏசா. 11: 9 ) இயேசு கிறிஸ்துவின் ஆளுகைக்கீழ் ம‌னித‌ ச‌முதாய‌ம் த‌ங்க‌ள் ப‌ட்ட‌ய‌ங்க‌ளை ம‌ண் வெட்டிக‌ளாக‌வும், த‌ங்க‌ள் ஈட்டிக‌ளை அரிவாள்க‌ளாக‌வும் அடிப்பார்க‌ள். ஜாதிக்கு விரோத‌மாய் ஜாதி ப‌ட்ட‌ய‌ம் எடுப்ப‌தில்லை. இனி அவ‌ர்க‌ள் யுத்த‌த்தைக் க‌ற்ப‌துமில்லை. ( ஏசா. 2:4 ) ஜ‌ன‌க்க‌ள் அழிவிற்கேதுவான‌ த‌ங்க‌ளுடைய‌ ஆயுத‌ங்க‌ளை ச‌மாதான‌த்துக்க‌டுத்த‌ உற்ப‌த்திக்கு உத‌வும்  உப‌க‌ர‌ண‌ங்க‌ளாக‌ மாற்றி த‌ங்க‌ளுக்கும், த‌ங்க‌ளைச் சார்ந்த‌வ‌ர்க‌ளுக்கும் ஆசீர்வாத‌மாக்குவார்க‌ள். தேவ‌னை நேசிப்ப‌த‌ன் மூல‌ம் ச‌க‌ல ம‌னித‌ குல‌மும் ச‌மாதான‌த்துக்க‌டுத‌த‌வ‌ற்றில் நாட்ட‌ம் கொள்ளும். ஏன் மிருக‌ங்க‌ளுக்கு இடையே இருக்கும் வ‌ன்முறைக்கு ஒரு முடிவு வ‌ரும். ஓனாய் ஆட்டுக்குட்டியோடே த‌ங்கும். புலி வெள்ளாட்டுக் குட்டியோடே ப‌டுத்துக் கொள்ளும். பால‌ சிங்க‌மும், காளையும் ஒருமித்திருக்கும். ஒரு சிறு பைய‌ன் அவைக‌ளை ந‌ட‌த்துவான். ப‌சுவும், க‌ர‌டியும் கூடி மேயும். அவைக‌ளின் குட்டிக‌ள் ஒருமித்து ப‌டுத்துக் கொள்ளும். சிங்க‌ம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும். ( ஏசா. 11: 6 7 )

பூமியின் மீதான‌ சாப‌ம் நீக்க‌ப்ப‌டும். இய‌ற்கை ச‌க்திக‌ள் க‌ட்டுப்ப‌டுத்த‌ப்ப‌ட்டு ம‌னித‌ குல‌த்திற்கு இன்ன‌ல் நேராம‌ல் பார்த்துக் கொள்ள‌ப்ப‌டும். பூமியெங்கும் வியாபித்துள்ள‌ வ‌ற‌ட்சி நீக்க‌ப்ப‌டும். வெட்டாந்த‌ரை த‌ண்ணீர் த‌டாக‌மும், வ‌ற‌ண்ட‌ நில‌ம் நீரூற்றுக‌ளுமாகும். ( ஏசா. 35:7 ) தாவ‌ர‌ங்க‌ளை அழிக்கும் கொள்ளை நோயும், வியாதியை கொண்டுவ‌ரும் கிருமிக‌ள் முற்றிலுமாக‌ அழிக்க‌ப்ப‌டும். இவைக‌ள் யாவும் பூமி த‌ன் சிற‌ந்த‌ ப‌ல‌னைக் கொடுக்க‌ உத‌வும். இத‌‌ன் மூல‌ம் உய்ர்த்தெழுந்துவ‌ரும் கோடிக்க‌ண‌க்கானோர் போஷிக்க‌ப்ப‌டுவ‌ர். ( ச‌ங். 67:6, எசேக். 34: 25 - 27 )

இழ‌ந்து போன‌தை திரும்ப‌ப் பெறுத‌ல்

தேவ‌னின் வ‌ல்ல‌மை கிறிஸ்து மூல‌மாக‌ வெளிப்ப‌ட்டு இழ‌ந்து போன‌தை திரும்ப‌ப்பெற‌ வ‌ழி வ‌கை செய்யும். முத‌லாவ‌தாக‌ விழுந்து போன‌ ஆதாமின் சாப‌த்திலிருந்து ம‌னுக்குல‌ம் இயேசு கிறிஸ்து த‌ன்னை ஜீவ‌ ப‌லியாக‌ ஒப்புக் கொடுத்த‌த‌ன் மூல‌மாக‌ மீட்க‌ப்ப‌டும் இந்த‌ மீட்பான‌து ஆதாமின் மூல‌மாக‌ வ‌ந்த‌ ம‌ர‌ண‌த்திலிருந்து விடுவிக்க‌ப்ப‌ட்டு ம‌ர‌ண‌ம் ஜெய‌மாக்க‌ப்ப‌டும். இத‌னால் கிறிஸ்துவும் அவ‌ருடைய‌ ம‌ண‌வாட்டி ச‌பையும் ம‌ரித்த‌வ‌ர்க‌ளை எழுப்பி அவ‌ர்க‌ள் தேவ‌னுடைய‌ வார்த்தையையும், அவ‌ருடைய‌ நீதியையும் க‌ற்றுக்கொள்ள‌ வ‌ழி வ‌கை செய்யும். ( யோவான் 5 : 28, 29 )
கிறிஸ்துவின் தியாக‌த்தின் பிர‌தி ப‌ல‌னாக‌ வியாதிக‌ள் சொஸ்த‌மாக்க‌ப்ப‌டும். ஒருவ‌னும் தான் வியாதியில் அல்ல‌ல் ப‌டுகிறேன் என்று சொல்ல‌ மாட்டான். ஏன் என்றால் அவ‌னுடைய‌ மீறுத‌ல்க‌ள் ம‌ன்னிக்க‌ப்ப‌ட்டிருக்கும். ( ஏசா. 33: 24 )  ஆதாமின் சாப‌த்தினால் ம‌னித‌ குல‌த்தை வாட்டி வ‌தைக்கின்ற‌ ச‌ரீர‌ சுக‌வீன‌ங்க‌ள், புற்று நோய், இருத்ய‌க் கோளாறுக‌ள், வ‌யோதிக‌ முதிர்ச்சி, மூளை‍ - ந‌ர‌ம்பு ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ வியாதிக‌ள் அனைத்தும் சொஸ்த‌மாக்க‌ப்ப‌டும். உயிர்த்தெழுந்து வ‌ரும் ம‌னித‌ குல‌ம் க‌ல்ல‌றையிலிருந்து எழுந்து வ‌ரும் பொழுது தேவ‌ன் அருளிய‌ பூர‌ண‌ ச‌ரீர‌த்தில் உயிரப்பிக்க‌ப்ப‌டும். அது ஆதாமின் சாப‌த்திற்கு் உட்ப‌ட்டிருக்காது. ( 1 கொரி. 15:38 -40 ) இவ்வாறு சாப‌த்திலிருந்து விடுவிக்க‌ப்ப‌ட்டிருப்ப‌தினால் ராஜ்ய‌த்தின் காரிய‌ங்க‌ளை தெளிவாக‌ப் புரிந்து கொண்டு அத‌ற்குக் கீழ்ப‌டிந்து உத்த‌ம‌ இருத‌ய‌த்தோடே ப‌ரிசுத்த‌த்தை ப‌ற்றிக்கொண்டு முன்னேறுவார்க‌ள். ( ஏசா. 35 : 8 )
எப்ப‌டியெனில், அவ‌ர‌வ‌ர் பூமியில் ம‌ரிக்கும் பொழுது எந்த‌ சுபாவ‌த்தோடு ம‌ரித்தார்க‌ளோ அதே சுபாவ‌த்தோடு உயிர்த்தெழுவார்க‌ள். அவ‌ர்க‌ளுடைய‌ எண்ண‌ங்க‌ள், நோக்க‌ங்க‌ள், ந‌ட‌த்தை போன்ற‌வை த‌ன்ன‌ல‌த்தோடும், குறையுள்ள‌தாக‌வுமே இருக்கும். ஆனால் ராஜ்ய‌த்திலே அவ‌ர்க‌ள் அவைக‌ளை விட்டு நீங்கி அவ‌ர‌வ‌ர் வாஞ்சையின்ப‌டி ம‌ன‌ம் பொருந்தி செவி கொடுத்தால் பூர‌ண‌ புருஷ‌ர்க‌ளாக்க‌ப்ப‌டுவ‌ர். ச‌த்திய‌ வ‌ச‌ன‌ம் இத‌னைக் குறித்து தான் இவ்வாறு சொல்கிற‌து-அவ‌ர்க‌ளுடைய‌ க‌ல்லான‌ இருத‌ய‌த்தை எடுத்துப்போட்டு அவ‌ர்க‌ளுக்கு ச‌தையான‌ இருத‌ய‌த்தைக் கொடுப்பேன். ( எசே. 11:19,20 ) ம‌னித‌னுடைய‌ இய‌ல்பான‌ சுபாவ‌த்திற்கு மாறாக‌ ராஜ்ய‌த்தில் இது எவ்வாறு சாத்த்ய‌மாகிற‌து ?

இந்த‌ ராஜ்ய‌த்தின் ஆசீர்வாத‌ங்க‌ளைக் காணும் பொழுது தேவா‌தி தேவ‌ன்  ம‌னித‌ குல‌த்தின் மீது வைத்திருக்கும் அன்பின் ஆழ‌த்தைக் காண‌ முடியும். இந்த‌ அன்பு அவ‌ன் மீது ஊற்ற‌ப்ப‌டும் பொழுது ஏற‌க்குறைய‌ அனைவ‌ர‌து க‌ல்லான‌ இருத‌ய‌மும் உருகிவிடும். இந்த‌ ஆசீர்வாத‌ நிக‌ழ்ச்சியைத்தான் ஏசாயா சேனைக‌ளின் க‌ர்த்த‌ர் ம‌லையிலே ஆய‌த்த‌ம் ப‌ண்ணியிருக்கும் ம‌னித‌ குல‌ம் காணாத‌ பெரிய‌ விருந்து என்கிறார். ( ஏசா. 25 : 6-8 ) இந்த‌ ஆசீர்வாத‌த்திற்கு உட‌ன்ப‌டுவ‌தின் மூல‌ம் ம‌னித‌ குல‌த்தின் சாப‌ங்க‌ள் நீக்க‌ப்ப‌டும். இதோ, இவ‌ரே ந‌ம்முடைய‌ தேவ‌ன். இவ‌ருக்காக‌த்தான் காத்திருந்தோம். இவ‌ர் ந‌ம்மை இர‌ட்சிப்பார். இவ‌ரே க‌ர்த்த‌ர், இவ‌ருக்காக‌க் காத்திருந்தோம், இவ‌ருடைய‌ இர‌ட்சிப்பினால் க‌ளிகூர்ந்து ம‌கிழ்வோம் என்ப‌ர். ( ஏசா. 25:9 ) ம‌னித‌ குல‌த்தின் க‌டின‌த் த‌ன்மையை நீக்கிய‌ பிற்பாடு தேவ‌ன் த‌ம‌து நியாய‌ப்பிர‌மாண‌த்தை அவ‌ர்க‌ள் உள்ள‌த்திலே வைத்து, கிறிஸ்துவும், ம‌ண‌வாட்டி ச‌பையும் ப‌ல‌வித‌ அனுப‌வ‌ங்க‌ள் மூல‌ம் அவ‌ர்க‌ளை சீராக்கி அதை அவ‌ர்க‌ள் இருத‌ய‌த்திலே எழுதுவார்க‌ள். ( எரே. 31:33) முழு உண‌ர்வோடு அவ‌ர்க‌ள் ம‌ற்ற‌வ‌ர்க‌ளையும் வ‌ழி ந‌ட‌த்துவார்க‌ள். அவ‌ர்க‌ளை த‌ண்ணீருள்ள‌ ந‌திக‌ள‌ண்டைக்கு இட‌றாத‌ செம்மையான‌ வ‌ழியிலே ந‌ட‌க்க‌ப்ப‌ண்ணுவார். ( எரே. 31: 9 )

இவைக‌ள் ந‌டைபெறும் ச‌ம‌ய‌த்தில் தேவ‌ன் மாம்ச‌மான‌ யாவ‌ர் மேலும் அவ‌ர் ஆவியை ஊற்றுவார். ( யோவேல் 2 :28 ) சுவிசேஷ‌ யுக‌ ஆர‌ம்ப‌த்தில் ச‌பை தெளிவாக‌ ச‌த்திய‌த்தை அறிந்திருந்த‌தைப் போல ராஜ்ய‌த்தில் ம‌னித‌ குல‌ம் ச‌த்திய‌த்தின் உண்மைக‌ளை, தேவ‌னுடைய‌ குணாதிச‌ய‌ங்க‌ளை, அவ‌ருடைய‌ கொள்கைக‌ளை, ச‌ட்ட‌ங்க‌ளை தெளிவாக‌ப் புரிந்து கொண்டு அத‌ன்ப‌டி ந‌ட‌க்க‌ த‌ங்க‌ளை அர்ப்ப‌ணித்து த‌ங்க‌ள் இருத‌ய‌ங்க‌ளையும், சிந்த‌னைக‌ளையும் நிர‌ப்பிக் கொள்வார்க‌ள். ம‌னித‌ குல‌த்தின் இருத‌ய‌த்தின் எண்ண‌ங்க‌ளும், ஒழுக்க‌மும் தேவ‌னையும்‍-கிறிஸ்துவையும் போல் மாற்ற‌ப்ப‌ட்டு எல்லோரும் மீண்டும் தேவ‌னுடைய‌ புத்திர‌ர் ஆவார்க‌ள். ஆவியின் க‌னியால் அவ‌ர்க‌ள் இருத்ய‌ங்க‌ள் நிர‌ப்ப‌ப்ப‌ட்டு உன்ன‌த‌ நிலையை தேவ‌னுடைய‌ அகாபே அன்பினால் அடைவ‌தே இந்த‌ மாறுத‌ல்க‌ளுக்கு அடையாள‌மாகும். இதுவே செம்ம‌றியாடு-வெள்ளாடு உவ‌மையில் கூற‌ப்ப‌ட்டிருக்கிற‌து. இந்த‌ செம்ம‌றி ஆட்டின்  குணாதிச‌ய‌ங்க‌ளைப்ப‌ற்றி ம‌த்தேயு 25:34-40 வ‌ரையில் காண்கிறோம். இத்த‌கைய‌ சுபாவ‌த்தை உடைய‌வ‌ர்க‌ளாக‌ இருக்கும் ப‌ட்ச‌த்தில் இறுதி சோத‌னையில் வெற்றி க‌ண்டு நித்திய‌த்தை சுத‌ந்த‌ரித்துக் கொண்டு தேவ‌னுடைய‌ வாக்குத்த‌த்த‌தின்ப‌டி  ஆளுகை செய்ப‌வ‌ர்க‌ளாக‌க் காண‌ப்ப‌டுவோம். இந்த‌ விய‌க்க‌த்த‌க்க‌ மாறுத‌ல் தேவ‌னுடைய‌ உன்ன‌த‌ வ‌ல்ல‌மையினாலே சாத்திய‌மாகும்.

இந்த‌ இராஜ்ய‌த்தின் முடிவு ஒரு இறுதி சோத‌னையோடே கூடிய‌து. வேத‌த்தில் சொல்ல‌ப்ப‌ட்ட‌ பிர‌கார‌ம் அது " கொஞ்ச‌ கால‌ம் " ( வெளி. 20: 2,3,7-10) இந்த‌ சோத‌னையின் போது சாத்தான் க‌ட்ட‌விழ்க்க‌ப்ப‌ட்டு ம‌னித‌ குல‌த்தை ஏமாற்ற‌ க‌டைசி வாய்ப்பு கொடுக்க‌ப்ப‌டுகிற‌து. தேவ‌னோடு ச‌ரியான‌ உற‌வு கொள்ளாத‌வ‌ர்க‌ளையும், அவ‌ருடைய‌ வார்த்தைக்கு கீழ்ப‌டியாத‌வ‌ர்க‌ளையும் இந்த‌ சோத‌னை அடையாள‌ம் காட்டும். சாத்தான் அழிக்க‌ப்ப‌டுவ‌தே இந்த‌ சோத‌னையின் முடிவின் உச்ச‌க்க‌ட்ட‌மாகும். ( ரோ. 16: 20 ) தேவ‌னுடைய‌ கொள்கைக்கும், நீதியின் ஆளுகைக்கும் எதிரான‌ எல்லா செய‌ல்பாடும் ஒரு முடிவுக்கு கொண்டுவ‌ர‌ப்ப‌டும். எல்லா எதிரிக‌ளும் அழிக்க‌ப்ப‌ட்டு ராஜ்ய‌ம் பிதாவினிட‌த்துக்குத் திரும்பும். ( 1 கொரி. 15: 24-28 ) ம‌த்திய‌ஸ்த‌ரின் வேலை முடிந்து ம‌னுக்குல‌ம் பாதுகாப்போடு சிருஷ்டிக‌ரிட‌ம் நேர‌டித் தொட‌ர்பு கொள்ள‌ திரும்பும். த‌ங்க‌ளுடைய‌ நெற்றிக‌ளில் தேவ‌னுடைய‌ நாம‌த்தைத் த‌ரித்துக் கொண்டு மீண்டும் அவ‌ர்க‌ள் தேவ‌னுடைய‌ புத்திர‌ர் ஆவார்க‌ள். ( வெளி. 22: 4 ) இவ்வ‌ண்ண‌மாக‌ தேவ‌ன் ம‌னுக்குல‌த்தோடு ஒப்புர‌வாவார். (கொலோ. 1 : 20 )

இராஜ்ய‌ம் தேவ‌ சாய‌லில் ம‌னித‌னை புதுப்பித்து பூர‌ண‌ இருத‌ய‌த்தை ஆவியின் க‌னியினால் தேவ‌ அன்போடு நிறைக்கும். பாவ‌த்தின் அனுப‌வ‌ம் ம‌னித‌ குல‌த்துக்கு கீழ்ப‌டியாமையின் விளைவுக‌ளைத் தெளிவாக‌ போதித்திருக்கிற‌து. ம‌னித‌ இருத‌ய‌த்திலிருந்து கீழ்ப‌டியாமை என்ற‌ வாஞ்சை முற்றிலுமாக‌ வெளியேற்ற‌ப்ப‌ட்டுவிட்ட‌தால் ம‌ர‌ண‌ம் என்ப‌தே கிடையாது. தேவ‌ எண்ண‌ப்ப‌டி ம‌னித‌ குல‌ம் மீண்டும் இந்த‌ப் பூமியை ஆளுகை செய்யும். ( ச‌ங். 8: 5 - 8 ) ச‌க‌ல சிருஷ்டிக‌ளும் தேவ‌னைத் துதிப்பார்க‌ளாக‌ ஏனென்றால் அவ‌ரிட‌த்திலிருந்து ஆசீர்வாத‌ங்க‌ள் புர‌ண்டோடும்.
( ச‌ங். 67:3- 7 )

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard