கிறிஸ்தவ ஊழியர்களிடம் (அதுவும் நரகத்தை மிகவும் உண்மை என்று நம்பும் கூட்டத்தார்) ஒரு கேள்வி:
சுமார் 60 இலட்ச்சம் மனிதர்களை கொன்று குவித்த ஹிட்லர் செல்லும் இடமும், காந்திஜி போன்ற ஒரு மனிதனும் செல்லும் இடம் ஒன்றே தானா!! இது ஆண்டவருக்கு தான் தெரியும், நாம் யாரையும் நியாயம் தீர்க்க கூடாது, போன்ற சப்பயான பதில்கள் வேண்டாம் (பெரும்பாலும் நமக்கு விடை தெரியாவிட்டால், அதை தூக்கி ஆண்டவரிடம் போட்டு விடுவோம்!!)!!
கேட்டால் "வேதத்தை எல்லாம் ஆராயக்கூடாது பிரதர், மறைவானவைகள் கர்த்தருடையவைகள் பிரதர்". என்பார்கள்.
இன்னும் வேத வசனங்களில் டவுட் கேட்டால் அதற்கு விளக்கமோ, பதிலோ அளிக்காமல் "நீங்கள் உபவாசத்தோடு, முழங்காலில் வேதம் வாசிங்க பிரதர், ஆவியானவர் வெளிப்படுத்துவார்" என்று சாமர்த்தியமாக தப்பித்துக் கொள்வார்கள்.
சமீபத்தில் மரித்த உறவினர் வீட்டில் ஜெபிக்கவந்த ஒரு ஊழியர் (சபை நடத்துகிறாராம்) இப்படியாக ஜெபித்தார். "சகோதரர் நித்திரையாக, சமாதானமாக இருக்கிறார்" என்று ஒருகட்டத்தில் சொல்லிவிட்டு கடைசியில் "இவர் தேவனுக்கு முன்பாக உலகத்துக்காக வேண்டிக்கொண்டிருக்கிறார்" என்று போட்டாரே ஒரு போடு. நாம்தான் விடமாட்டோமே, வெளியில் வந்ததுமே இதைப்பற்றி விளக்கம் கேட்டால் மனிதர் பதில் சொல்லத்தெரியாமல் பேந்தப் பேந்த விழித்தாரே பார்க்கலாம். என்ன கொடும ரெவரன்ட் சார்!