kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: முழுநேரங்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள்!


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
முழுநேரங்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள்!




புதிய ஏற்பாட்டு சபையில், அதுவும் இந்த காலகட்டத்தில் முழுநேர ஊழியம் என்று ஒன்று இல்லவே இல்லை.
சபை நடத்தி ஊழியம் செய்கிறேன் பேர்வழியென்று ஜனங்களை மோசம்போக்கும் கூட்டத்துக்கும், வேதம் சொல்லும் சத்தியத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. வேதத்தை ஆராய்ந்தறிகிற யாரும் இதை உண்ர்ந்து கொள்வார்கள்.


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

இவர்கள் Benz காருக்கு ஆசைப்படும் சுய விளம்பர ஊழியர்கள். தேவன் என்னிடம் சபையை எழுப்ப சொன்னார், என்னிடம் பிறருக்காக முழு நேரமும் ஜெபிக்க சொன்னார், என்னை ஆலையம் கட்ட பணம் கறக்க சொன்னார், என்னை ஏற்கனவே கிறிஸ்தவ நாடுகளான அமேரிக்கா மற்றும் கனடா நாட்டிற்கு சுவிசேஷம் (!!) சொல்ல போக சொன்னார் போன்ற பிதற்றல்களால் தங்களை Self made full time ministers (சுயமாக முழு நேர ஊழியர்கள்) என்று அறிவித்துக்கொள்வதில் சற்றும் வெட்கப் படுவதில்லையே? பாவம் இவர்களை நம்பி மோசம் போய்க்கொண்டிருக்கும் கிறிஸ்தவ மண்டலம்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

இவர்கள் பெரும்பாலும் தேவன் தன்னை ஊழியத்துக்கென்று 'அழைத்ததாக' கூசாமல் பொய் சொல்லுவார்கள். அவர்கள் தேவன் வயிறு; முழுநேர ஊழியம் என்றாலே தனது எல்லா தேவைகளுக்காகவும் அடுத்தவர் உழைப்பில் சம்பாதித்த பணத்தை எவ்வகையிலாவது 'திருடி' உபயோகிப்பதாகும். தேவன் தருகிறார் என்று இவர்கள் சொல்வதெல்லாம் புருடா. இவர்கள் வண்டியே காணிக்கைகளிலும், மற்ற எல்லாவகை வசூல்களிலும்தான் ஓடிக் கொண்டிருக்கிறது.

அருமை அன்பர்களே! இந்த ஓநாய்களுக்கு சல்லி காசுகூட கொடுக்காதீர்கள்; பதிலாக எத்தனையோ முதியோர் இல்லங்கள், அநாதை ஆஸிரமங்கள், மனநல வளர்ச்சிகுன்றியவர்களை ஆதரிக்கும் அமைப்புகளுக்கு உதவுங்கள்.


-- Edited by soulsolution on Sunday 27th of December 2009 10:18:34 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

இன்று தங்களின் பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் விட்டு விட்டு "ஓநாய்களுக்கு" தசமபாகம், காணிக்கை என்று அள்ளிக்கொடுக்கும் நம்மவர்களை என்ன சொல்ல!! சுய ஆசீர்வாதத்திற்காக இந்த ஓநாய்கள் சொல்லில் ஹிப்னாடைஸ் ஆகி மயங்கி கிடக்கிறார்கள். துனைக்கு துனுக்குகள் மாதிரி ஏதோ சாட்சிகள் வேறு. இருந்தாலும் தங்களின் யோசனை பெரும் கொள்ளையர்களுக்கு திக்.திக்..



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 147
Date:



-- Edited by chillsam on Wednesday 8th of September 2010 04:51:43 PM

__________________
"Praying for your Success"


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

உன் 'பரிசுத்தம்' உன் பதிவுகளில் தெரிகிறது.

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Veteran Member

Status: Offline
Posts: 67
Date:

உண்மை தான். நான் இருக்கும் நாட்டிலே, அதாவது ஜெர்மனியில் இதை நான் நேரில் கண்டேன். தமிழ் சபைகள் பணத்துக்காகவே சபைக்கு ஆள்சேர்ப்பார்கள். அந்தக் குடும்பத்தில் இருக்கும் ஒருவர் கூட வருடக் கணக்கில் எந்த வேலைக்கும் போவதில்லை. சபையில் ஆக குறைந்தது 15 பேர் தான் இருப்பார்கள். வேதாகம பாடசாலையில் வேதபாடம் படிக்காமலே தகப்பன், மகன் அனைவரும் பாஸ்டர். பின்பு அடிக்கடி கனடா, அமெரிக்க, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு குடும்பமாக சுற்றுலா சென்று வருவார்கள். சிந்தித்துப் பாருங்கள்; ஒரு குடும்பத்தில் 5 உறுப்பினர் வீதம் விமான போக்குவரத்துக்கு செலவு மற்றும் போகின்ற இடத்தில் ஏற்படுகிற செலவு ஆக மொத்தத்தில் விடுமுறை கழித்து ஒரு மாதம் பின்பு வீடு வந்து சேர என் கணிப்பின்படி அந்த 5 பேருக்கும் குறைத்து 17000 யூரோ தேவை. அந்தக் குடும்பத்தில் ஒருவருமே வேலைக்கு போவதில்லை என்றால் எப்படி இந்த பணம் வந்தது?

-- Edited by anbu57 on Thursday 27th of January 2011 04:58:45 AM

__________________


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

II தெசலோனிக்கேயர் 3:10 ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே.11 உங்களில் சிலர் யாதொரு வேலையும் செய்யாமல், வீண் அலுவற்காரராய், ஒழுங்கற்றுத் திரிகிறார்களென்று கேள்விப்படுகிறோம்.

இப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர்க‌ள் சாப்பிட‌வே கூடாது என்று வேத‌ம் சொலுகிற‌து, ஆனால் யார் த‌லையில் இவ‌ர்க‌ள் மிள‌காய் அறைத்து இப்ப‌டி 17000 யூரோ செல‌வு செய்ய‌ வைக்கிறார்க‌ளோ!! கேட்ட‌ல் இது தான் தேவ‌னின் ஆசீர்வாத‌ம் என்பார்க‌ள்!! வ‌ச‌ன‌த்திற்கு விரோத‌மாக‌ வாழ்ந்து அவ‌ர்க‌ளுக்கு தேவ‌னின் (இப்பிர‌ப‌ஞ்ச‌த்தின் தேவ‌ன்) ஆசீர்வாத‌ம் நிச்ச‌ய‌மாக‌ கிடைக்கும்!!

இவ‌ர்க‌ளின் க‌ள்ள‌ தீர்க்க‌த‌ரிச‌ன‌மான‌ குறி சொல்லுத‌லை கேட்டு இவ‌ர்க‌ளுக்கு வாரி வ‌ழ‌ங்க‌ அநேக‌ர் இருக்கிறார்க‌ள், சில‌ரை இவ‌ர்க‌ள் 'இர‌க‌சிய‌ கிறிஸ்த‌வ‌ர்க‌ள்" என்பார்க‌ள்!! ஏழைக‌ளுக்கு உத‌வ‌ ம‌றுக்கும் இவ‌ர்க‌ள் இது போன்ற‌ சோம்பேறி கூட்ட‌த்தாருக்கு அள்ளி கொடுப்பார்க‌ள்!! ராஜிய‌த்தில் தான் இவ‌ர்க‌ள் திருந்துவார்க‌ள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard