kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Born Again!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
Born Again!!


யோவான் 3ம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட மறுமடியும் பிறப்பதும் என்பதும் இன்றைய கிறிஸ்தவர்கள் சொல்லும் மறுபடியும் பிறப்பது (born again) ஒன்றாகுமா?



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறப்பதையே மறுபடியும் பிறத்தல் என இயேசு கூறுகிறார் என்பதாக யோவான் 3:3-5 வசனங்களில் பார்க்கிறோம். ஜலம் என்பதும் ஆவி என்பதும் இயேசுவின் வசனங்களையே குறிப்பிடுவதாக பின்வரும் வசனங்களில் பார்க்கிறோம்.

யோவான் 6:63 .... நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கின்றன.
எபேசியர் 5:26 தாம் அதைத் திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாகுகிறதற்கும் .....

எனவே இயேசுவின் வசனங்களைக் கைக்கொள்வதன் மூலம் பரிசுத்தமாகுவதுதான் மறுபடியும் பிறத்தல் என்பதாகும்.


-- Edited by anbu57 on Sunday 18th of October 2009 02:38:26 PM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

இயேசுவின் வசனங்களை கை கொள்கிறவன், மறுபடியும் பிறந்த மனிதன் அல்ல, மாறாக "புதிய சிருஷ்டி"யாக மாறுகிறான். இரண்டிற்கு வித்தியாசம் இருக்கிறது.

புதிய சிருஷ்டி:
"ஒருவன் கிறிஸ்துவிற்குள் இருந்தால், புது சிருஷ்டியாகிறான், பழையது எல்லாம் ஒய்ந்து போயிற்று" 2 கொரி. 5:17. கிறிஸ்துவிற்குள் எப்படி இருக்க முடியும்? அவரின் வசனத்தை கைகொள்கிறவனே. இது மறுமடியும் பிறப்பதாகாது. ஏனென்றல், ஒருவன் முன்பு கிறிஸ்துவை விட்டு தூரமாக இருந்து, பின்பு அவரின் கிருபையினால் அவரின் வசனத்தை கைகொள்கிறவன் இப்பொழுது இருக்கும் சரீரத்திலே தான் இந்த மாற்றம் ஏற்படுகிறது.

மறுபடியும் பிறப்பது:
யோவான் 3:8ல் இயேசு கிறிஸ்து மறுபடியும் பிறந்த மனிதனை காற்றுக்கு ஒப்பீட்டு சொல்லுகிறார். அது உயிர்த்தெழுதலில் தான் சாத்தியம். அதுவும் ஆவிக்குறிய சரீரத்தில் உயிர்த்தெழுபவனுக்கே அது சாத்தியம். இயேசு கிறிஸ்து இப்படி பட்ட ஒரு சரீரத்திலே (ஆவிக்குறிய) இருந்ததினால் தான் அவரால் பூட்டிய கத்வுகளுக்குள் போக முடிந்தது. இது தான் மறுபடியும் பிறப்பது.

இன்று பெந்தெகோஸ்தே சபைகள் சொல்லுவது போல் இரட்சிக்கப்பட்டு அந்நிய பாஷைகள் பேசுவது தான் "மறுப‌டியும் பிறப்பது" என்பது தவறான உபதேசம்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

ஒருவரும் மரிக்காமல் மறுபடி பிறக்க முடியாது. '...நம்முடைய அற்பமான ச்ரீரத்தைத்(மாமிச சரீரம்) தம்முடைய மகிமையான சரீரத்துக்கு(ஆவிக்குரிய சரீரம்) ஒப்பாக மறுரூபப்படுத்துவார் பிலி3:21






"நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்" 2கொரி3:18







"ஜென்மச்ரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்; ஜென்மசரீரமுண்டு, ஆவிக்குரிய சரீரமுமுண்டு". 1கொரி15:44






தெரிந்து கொள்ளப்பட்ட 'சிறுமந்தை'யின் 'ஜெயங்கொள்ளுகிறவர்கள் உயிர்த்தெழும்போது இத்தகைய 'ஆவிக்குரிய சரீரத்தோடு' எழுவார்கள். இதுவே இயேசுகிறிஸ்து சொன்ன மறுபடியும் பிறத்தல்.


-- Edited by soulsolution on Monday 19th of October 2009 02:09:00 AM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard