kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பாத்திரம் நீங்கக் கூடுமானால் நீங்கட்டும்


Executive

Status: Offline
Posts: 425
Date:
பாத்திரம் நீங்கக் கூடுமானால் நீங்கட்டும்


மனிதனின் பாவத்தைச் சுமந்து, பிதாவின் சமுகத்தை இழந்து, மரிப்பதற்காகவே இவ்வுலகிற்கு வந்த இயேசு, பிதாவே இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என ஜெபிக்கக் காரணமென்ன?(மத்தேயு 26:39)

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

இயேசு கிறிஸ்து மனிதனாக மாம்சத்தில் வந்த போது, மாம்சத்திற்கு உண்டான சகலமும் அவருக்கு இருந்தது என்றே நினைக்கிறேன். அவருக்கு பசி எடுத்தது, தூக்கம் வந்தது, சோர்வு இருந்தது, தாகம் எடுத்தது, அவர் சிரித்தார், துக்கம் கொண்டார், அழுதார். ஆக ஒரு மனிதனுக்கு உண்டான எல்லாம் அவருக்கும் இருந்தது.

பரலோகம் துறந்து, தன் பிதாவின் சித்தம் நிறைவேற்ற வந்த இயேசு கிறிஸ்து, மரணமும் அதற்கு முன்பாக இருக்கும் வேதனையும் அறிந்திருந்ததினால், ஒரு நொடி மாமிசத்தில் அப்படி ஜெபித்தார், ஆனாலும், பிதாவின் மேன்மையான காரியங்களை அறிந்து, அவரின் சித்தம் படி ஆகட்டும் என்று முடித்தார், என்றே நான் நினைக்கிறேன்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

bereans wrote:
//பரலோகம் துறந்து, தன் பிதாவின் சித்தம் நிறைவேற்ற வந்த இயேசு கிறிஸ்து, மரணமும் அதற்கு முன்பாக இருக்கும் வேதனையும் அறிந்திருந்ததினால், ஒரு நொடி மாமிசத்தில் அப்படி ஜெபித்தார், ஆனாலும், பிதாவின் மேன்மையான காரியங்களை அறிந்து, அவரின் சித்தம் படி ஆகட்டும் என்று முடித்தார், என்றே நான் நினைக்கிறேன்//

மரண வேதனையைவிட, உலகத்தின் பாவம் அவர் மீது விழுகையில் பிதாவின் சமுகம் அவரைவிட்டு எடுபடுவதால் உண்டாகும் வேதனையை அறிந்திருந்ததால்தான் அவர் அவ்வாறு ஜெபித்திருப்பார் என நான் கருதுகிறேன்.

ஆகிலும், பிதாவே இந்த வேளையினின்று என்னை இரட்சியும் என்று சொல்வேனோ என யோவான் 12:27-ல் கூறிவிட்டு, இந்தப் பாத்திரம் நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும் என மத்தேயு 26:39-ல் ஜெபிப்பது ஒன்றுக்கொன்று முரணாக இல்லையா?



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

யோவான் 12:27ல் "இப்பொழுது என் ஆத்துமா கலங்குகிறது, நான் என்ன சொல்லுவேன், பிதாவே இந்த வேளையினின்று இருந்து என்னை இரட்சியும் என்று சொல்லுவேனோ". இந்த சம்பவம் அவர் யெருசலேமிற்குள் நுழைந்தவுடன் நடக்கும் ஒர் சம்பவமாகும். மாம்சத்தில் உள்ளதினால் அவர் தன் மரணத்தை நினைத்து கலங்குகிறார் ஆனாலும், அவர் இதற்காக தான் வந்தார் என்று தன் அப்பொஸ்தலர்களிடத்தில் சொல்லுகிறார்.

ஆனால், மத்.26:39ல் அவர் தன் அப்போஸ்தலர்களை விட்டு சற்று தள்ளி தன் பிதாவினடித்தி ஏறெடுக்கும் ஜெபம் தான் "இந்த பாத்திரம் என்னை விட்டு..". ஆனாலும் அவர் முடிப்பது பிதாவின் சித்தம் நிறைவேற வேண்டும் என்றே.

இரண்டு இடங்களிலும் அவர் கலங்குகிறர். ஆனால் யோவானில் வேறு இடத்தில் அதை சொல்லியிருப்பதினால் தான் வந்த நோக்கத்தை மீண்டும் அவர்களிடம் சொல்லுகிறார். கெத்சமனே தோட்டத்திலோ, தன் பிதாவினிடத்தில் ஜெபிக்கிறார்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard