kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்!


Senior Member

Status: Offline
Posts: 165
Date:
மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்!


அப்போஸ்தலர் 2:17 கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்;

16. தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது.

பெந்தேகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் இறங்கிய நிகழ்வுகளையே யோவேல் தீர்க்கதரிசன நிறைவேர்தலாக பேதுரு குறிப்பிட்டிருக்க, ஆயிரம் வருட  அரசாட்சியில் தான் மாமிசமான யாவர்மேலும் ஆவி உற்றபடும் என்ற தங்களின்  கருத்து மாறுபாடாக உள்ளது சற்று விளக்குங்கள்.   
   



__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

ஆம் சகோதரரே,

யோவேல் தீர்க்கதரிசி உரைத்தது "நடந்தேறுகிறது" என்பதற்கும் "நடந்து முடிந்தது"க்கும் வித்தியாசம் இருப்பது புரியும்.

மேலும் கடைசி காலம் என்பது, தேவன் வைத்திருக்கும் தன் ஆதீனத்தின் கடைசி காலம் தான் இந்த "சுவிசேஷ காலம்" அதாவது கடைசி காலம். ஆக யோவேல் சொன்ன ஒரு பகுதி அன்று நடந்தது, அதாவது, "என்னுடைய ஊழியக்காரர்மேலும் என்னூடைய ஊழியக்காரிகள்மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்" இது பெந்தேகோஸ்தே நாளில் நடந்தது, அடுத்த பகுதியான "மாம்ஸ்மான யாவர்மேலும்" என்கிற பகுதி, பெந்தெகோஸ்தே நாள் தொடங்கி, அதன் முடிவு இயேசு கிறிஸ்துவின் அரசாட்சியில் தான் இருக்கும்.

ஏனென்றால், அன்று இந்த ஆவியை பெற்ற ஒரு சில யூதர்கள் மாத்திரம் "மாமிச‌மான யாவரும்" ஆக மாட்டார்கள். ஆனால் மாமிசமான யாவர் மேலும் என்கிற நாள் இனி தான் நிறைவேறும், இன்று வரை நிறைவேறவில்லை.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

"I will pour out my spirit upon all flesh" என்று ஆங்கில வேதாகமம் சொல்கிறது அதை அப்படியே மொழி பெயர்த்தால் "எல்லா மாமிசத்தின் மீதும் எனது ஆவியை உற்றுவேன்"  (அதாவது மாடு கழுதை குதிரை உட்பட) என்றுதான் பொருளாகிறது. ஆனால் அது தமிழில் "மாமிசமான யாவர் மேலும்" என்று மொழி பெயர்க்கபட்டுள்ளது.

இதுபோல் ஆங்கிலத்தோடு ஒவ்வாத பல வசனங்கள் தமிழில் உள்ளது.

இதிலிருந்து தமிழ் மொழிபெயர்ப்பு ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டாலும் அது நேரடியாக எபிரேயு கிரேக்கு பாஷையுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டுள்ளது   என்றே நன் கருதுகிறேன். 

அதாவது     மாமிசம் + ஆன = மாமிசமான

இதன் பொருள் எங்கோ ஒரு இடத்தில் வேறொரு ரூபத்தில் இருந்து இப்பொழுது மாமிசமாகி போனவர்கள்"  என்று பொருளாகிறது.

உலகத்தில் மூன்று விதமான மனிதர்கள் உண்டு அதில் ஒரு வகை மனிதர்கள் உலகம் படைக்கப்படும் முன் வேறொரு ரூபத்தில் இருந்து பின்னர் மமிசமாகி போனவர்கள். அவர்களை பற்றித்தான் வேதம் மாமிசமானவர்கள் என்று சொல்கிறது 

4. நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கே இருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி.
5. அதற்கு அளவு குறித்தவர் யார்? அதின்மேல் நூல்போட்டவர் யார்? இதை நீ அறிந்திருந்தால் சொல்லு.
6. அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது? அதின் கோடிக்கல்லை வைத்தவர் யார்?
7. அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப் பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே.

மேற்கண்ட வசனத்தின் மூலம் தேவபுத்திரர்கள் உலகம் உருவாகும் முன்னேயே இருந்தாரகள் என்பதை அறிய முடியும். இவர்கள் ஒரு காலத்தில் மனுஷ குமாரத்திகளுடன் கூடி மாமிசமாகி போனார்கள் அவர்கள் யாவர் மேலும்தான் என் ஆவியை உற்றுவேன் என்று வசனம் சொல்கிரதேயன்றி, ஆடு மாடு கழுதை போன்ற எல்லா மாமிசத்தின் மேலும் அல்ல!
 
அறிவை வைத்து வேதத்தை ஓரளவுக்குத்தான் ஆராயமுடியும்!

 

 



__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

"மாமிசமான யாவர் மேலும் ஆவியை" ஊறிய பிறகு, அங்கே உங்கள் குமாரர் குமாரத்திகள், மூப்பர் வாலிபர் என்று கொடுக்கப்பட்டது மனிதர்கள் தான் என்று அரியப்படுகிறது. அங்கே கழுதையோ, குதிரையோ தீர்க்கதரிசனம் உரைக்கவில்லை. ஆகவே மாமிசமான யாவரும் என்றால் இங்கே தேவனின் சாயலில் படைக்கப்பட்ட மனிதர்கள் மேல் தான் அன்றி மிருகங்கள் மேல் அல்ல என்பது உறுதி.

பெந்தேகொஸ்தே நாளில் ஊற்றப்பட்ட ஆவியும் மனிதர்கள் மேல் தான் ஊறப்பட்டதே அன்றி மிருகங்கள் மேல் அல்ல. இன்று சபைகளிலும் மனிதர்கள் தான் அந்த ஆவியை பெற வேண்டும் என்று செல்லுகிறார்களே தவிர, மிருகங்களை கூட்டி செல்வதாக நான் பார்த்தது இல்லை.

ராஜ் எழுதியது:
"நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கே இருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி.
5. அதற்கு அளவு குறித்தவர் யார்? அதின்மேல் நூல்போட்டவர் யார்? இதை நீ அறிந்திருந்தால் சொல்லு.
6. அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது? அதின் கோடிக்கல்லை வைத்தவர் யார்?"

இந்த‌ ப‌குதியில் தேவ‌ன் யோபு என்கிற‌ ம‌னித‌னிட‌ம் கேட்கும் கேள்விக‌ள் தான் ப‌திவாகியிருக்கிற‌து. இதில் வ‌ந்த‌ நீ எல்லாம் "யோபு". நான் என்ப‌வ‌ர் தேவ‌னும், விவ‌ரிக்க‌ப்ப‌ட்ட‌ செய‌ல்க‌ள் அனைத்தும் அவ‌ர‌து செய‌ல்க‌ள்.

"7. அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப் பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே."

விடிய‌ற்கால‌த்து ந‌ட்ச‌த்திர‌ங்க‌ள் என்று வேத‌த்தில் இருவ‌ரை குறிப்பிட்டு உள்ள‌து:

1. இயேசு கிறிஸ்து (வெளி. 22:16)
2. லூசிஃப‌ர் என்கிற சாத்தான் (ஏசா 14:12)

தேவ‌புத்திர‌ர் என்ப‌து தேவ‌னின் குமார‌ர்க‌ள் என‌ப்ப‌டும் தேவ‌ தூத‌ர்க‌ள். மேலும் ஆதி. 6:2ல் உள்ள‌ தேவ‌ குமார‌ர்க‌ளும், நீங்க‌ள் குறிப்பிட்ட‌ ப‌குதியான‌ யோபுவின் புத்த‌க‌த்தில் கொடுக்க‌ப்ப‌ட்ட‌ தேவ‌புத்திர‌ர்க‌ளும் ஒன்றே. ம‌னித‌ர்க‌ள் த‌ங்கும்ப‌டியாக‌ ப‌டைப்ப‌க்க‌ப்ப‌ட்டிருக்கும் பூமியை குறித்து தான் தேவ‌ன் யோபுவிட‌ம் விவ‌ரிக்கிறார். அதை ஆவீ ஜீவிக‌ளான‌வ‌ர்க‌ள் பார்த்து ம‌கிழ்கிறார்க‌ள். இது தான் இந்த‌ இட‌த்தில் கொடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌தே த‌விர‌, மூன்று வித‌மான‌ ம‌னித‌ர்க‌ள் என்று எப்ப‌டி இதை புறிந்துக்கொண்டீர்க‌ள் என்று தெரிய‌வில்லை?



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

bereans wrote:
தேவ‌புத்திர‌ர் என்ப‌து தேவ‌னின் குமார‌ர்க‌ள் என‌ப்ப‌டும் தேவ‌ தூத‌ர்க‌ள். மேலும் ஆதி. 6:2ல் உள்ள‌ தேவ‌ குமார‌ர்க‌ளும், நீங்க‌ள் குறிப்பிட்ட‌ ப‌குதியான‌ யோபுவின் புத்த‌க‌த்தில் கொடுக்க‌ப்ப‌ட்ட‌ தேவ‌புத்திர‌ர்க‌ளும் ஒன்றே. ம‌னித‌ர்க‌ள் த‌ங்கும்ப‌டியாக‌ ப‌டைப்ப‌க்க‌ப்ப‌ட்டிருக்கும் பூமியை குறித்து தான் தேவ‌ன் யோபுவிட‌ம் விவ‌ரிக்கிறார். அதை ஆவீ ஜீவிக‌ளான‌வ‌ர்க‌ள் பார்த்து ம‌கிழ்கிறார்க‌ள். இது தான் இந்த‌ இட‌த்தில் கொடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌தே த‌விர‌, மூன்று வித‌மான‌ ம‌னித‌ர்க‌ள் என்று எப்ப‌டி இதை புறிந்துக்கொண்டீர்க‌ள் என்று தெரிய‌வில்லை?

 நீங்கள் சொல்வதுபோல் ஆவிஜீவிகளான  தேவகுமாரர்கள் (ஆதி. 6:2படி) மாமிசமயிருந்த மனுஷகுமாரத்திகளுடன் சேர்ந்ததால் மாமிசமாகி போனார்கள். அவர்களைத்தான் வேதம் மாம்சமான அதாவது மாமிசம் + ஆன என்று சொல்லுகிறது.  அதாவது ஆவி நிலையிலிருந்து மமிசமானவர்கள் என்று பொருளாகிறது.    

தேவ குமாரரையும் தேவ தூதர்களையும் எப்படி ஓன்று என்று நீங்கள் சொல்லுகிறீர்கள்

தேவகுமார்    
தேவபுத்திரர்     -   SON OF GOD

தேவதூதர்        -   The Angels

இந்த வார்த்தைகளில் தங்களுக்கு கொஞ்சமும் வேறுபாடு தெரியவில்லையா? தேவதூதரும் தேவபுத்திரரும் ஓன்று என்றால் எனக்கு கீழ்க்கண்ட வசனங்களை கொஞ்சம் விளக்குங்கள். 
  

ரோமர் 8:14 மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.

ரோமர் 8:19 மேலும் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது.

 




__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

அது போலவே Every knee shall bow, every tongue confesச் என்று கூடத்தான் இருக்கிறது. இதை முழ்ங்கால்கள் யாவும் முடங்கும், நாவுகள் யாவும் அறிக்கையிடும் என்று சரியாக மொழிபெயர்க்கப்‍பட்டுள்ளது. அதற்காக முழ்ங்கால்கள், நாவு உள்ள சகல ஜந்துக்களும் என்று அர்த்தம் கொள்ளலாகாது.




மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள் லூக்3;5 தமிழில், And all flesh shall see the salvation of God என்ற ஆங்கில KJV யிலும், And all mankind will see God's salvation என்று ஆங்கில NIV யிலும் உள்ளது,








அதேபோல் லூக்கா 4:38 தமிழில் 'ஆதாம் தேவனால் உண்டானவன்' என்பது ஆங்கிலத்தில் Adam son of God என்று உள்ளது, ஆக ஆதாமும் தேவபுத்திரன் தானோ?








சூழலை அறிந்து, தேவனுடைய குணாதிசயங்களை கருத்தில் கொண்டு தேவ திட்டத்தை அடிப்படையாக வைத்து வேதத்தை ஆராயும்போதுதான் IT WILL MAKE SENSE. இல்லாவிட்டால் அது இது போன்ற NON SENSE ஐத்தான் விளைவிக்கும்.







மாற்கு 16:15 ல் வரும் "சர்வ‌ சிருஷ்டிக்கும் சுவிஷேசம் அறிவியுங்கள்" என்றால் முதலில் நம் வீடுகளிலுள்ள் ஈ, எறும்பு, கொசுவிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். சற்று common sense ஐ உபயோகிப்பதில் தவறில்லை.


-- Edited by soulsolution on Friday 16th of October 2009 04:31:06 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

தாங்கள் கொடுத்திருக்கும் வசனங்கள் தமிழில் வாசிக்கும் போது சரியாகவே தெரிகிறது, சகோ ராஜ் அவர்களே.

சரி இதை ஆராயும் போது தான் விஷயம் தெளிவாகிறது.

யோபுவில் எழுதப்பட்ட தேவபுத்திரர்கள் (Sons of God in English). எபிரேயு மொழியில் இங்கு வரும் தேவன் (God) என்பது எலோஹிம் (Elohim) என்கிற வார்த்தையின் மொழிப்பெயர்ப்பு. ஏலோஹிம் என்றால் ஒன்றுக்கு மேற்பட்டவர்களை குறிக்கும் சொல். அதாவது, பிதாவாகிய தேவன் மற்றும் இயேசு கிறிஸ்துவினால் படைக்கப்பட்ட தேவ தூதர்களை குறிக்கும் சொல்லே தேவபுத்திரர்கள். படைக்கப்பட்டதினால் புத்திரர் என்கிற நாமத்தை பெறுகிறார்கள். ஏலோஹிமின் புத்திரர்கள் என்று இருந்திருந்தால் ஒரு வேளை நீங்களும் அதை சரியாக புரிந்திருப்பீர்கள்.

இந்த தேவ தூதர்களுக்கு மாம்சத்தில் மறுரூபமாகும் சுதந்திரம் இருந்தது (ஆபிரஹாம் மற்றும் லோத்தை சந்திக்க சென்ற தேவதூதர்கள் இப்படி மாம்சத்தில் தான் போனார்கள்). அதை பயன் படுத்தி தான் ஆதி. 6ல் இவர்கள் மாம்சத்தில் வந்து மனுஷ குமாரத்திகளை திருமனம் செய்து இராட்சதர்களை பெற்றார்கள். ஜலப்பிரலயம் வந்த போது இந்த தூதர்கள் மாமிச வேஷத்தை கலைத்து மீண்டும் தேவ‌தூதர்களாக ஆவிக்குறிய சரீரத்துடன் தப்பிய போது தான் பிடிக்கப்பட்டு அந்தகார சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே (டார்டரு; தீ எரிந்துக்கொண்டிருக்கும் இடம் அல்ல) நியாயத்தீர்ப்புக்கு வைத்தார் (2 பேது 2:4). இந்த தூதர்களை குறித்து தான் "தங்களுடைய ஆதிமேன்மையைக் (ஆவிக்குறிய தகுதிகளை) காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும், மகாநாளின் நியாயத்தீர்ப்புகென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் (டார்டரு) அடைத்துவைத்திருக்கிறார்" என்று யூதா எழுதுகிறார் (யூதா. 1:6)

நீங்கள் தந்த ரோம் 8:14,19 வசனங்களில் வரும் புத்திரர்கள், பிதாவாகிய தேவனின் புத்திரர்களாக கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது இயேசு கிறிஸ்துவிற்கு உடன் சுதந்திரவாளியான ஒரு கூட்டம். இங்கு ஏலோஹிம் என்கிற பதம் இல்லாமல் தேவன் (The கொட் என்று ஆங்கிளத்திலும், ஹோ தியோஸ் என்று கிரேக்க மொழியிலும்) என்று மாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆக இங்கே இயேசு கிறிஸ்துவின் சாயலில் மறு ரூபமாகும் ஒரு கூட்டத்தை தேவனின் புத்திரர்கள் என்று இருக்கிறது. ஆனால் யோபுவிலும் ஆதி 6ல் தேவ புத்திரர்கள் என்றால் ஏலோஹிமின் புத்திரர்கள் என்று இருக்கிறது.

ஆக, இதை அறிய வேண்டும் என்றால் ஆராய்ச்சி அவசியம் தானே சகோதரர் ராஜ் அவர்களே. தமிழில் வாசிக்கும் போது மொழிப்பெயர்ப்பின் காரணமாக உங்களுக்கு இரண்டுமே ஒன்றாக தெரிந்தாலும், அது இரண்டும் ஒன்றல்ல என்பது ஊர்ஜீகமாகிறது. தொட‌ர்ந்து ஆராயுங்க‌ள். ச‌த்திய‌த்தை அறியுங்க‌ள். அந்த‌ ச‌த்திய‌மே ந‌ம்மை விடுத‌லையாக்குமே அன்றி, பெரும்பாளுமான‌ கூட்ட‌த்தார் பிர‌ச‌ங்கிப்ப‌தினால் அல்ல‌.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

Raaj wrote: இதிலிருந்து தமிழ் மொழிபெயர்ப்பு ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டாலும் அது நேரடியாக எபிரேயு கிரேக்கு பாஷையுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டுள்ளது என்றே நன் கருதுகிறேன்.


அப்படி இருக்கும் பட்சத்தில் குறைந்த பட்சம் 'திருத்தப்பட்ட' பதிப்புகள் வந்திருக்க வேண்டும். அல்லது Foot Note என்று சொல்லப்படும் பகுதியிலாவது குறிப்பிடப்பட்டிருக்கவேண்டும். ஆனால் தமிழ் 'பரிசுத்த வேதாகம'த்தில் ஒரே மொட்டையாக உள்ளது, ஒரு முன்னுரை கூட இல்லை. 'இது எபிரெயு கிரேக்கு என்னும் மூல பாஷைகளிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது' என்ற மாபெரும் பொய்யைத்தான் அச்சிட்டுள்ளனர். எதையும் ஒப்பிடவில்லை சரிபார்க்கவில்லை.


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

Old Memories...



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard