kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மாட்டுதொழுவமா!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
மாட்டுதொழுவமா!!


மாட்டுத்தொழுவத்தில் இயேசு கிறிஸ்து பிறந்தார் என்று பிரபலமான பாடல்களும் பாரம்பரியங்களும் சொல்லி தந்தாலும் வேதம் நமக்கு சொல்லுவதை பார்ப்போம்.

"அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்" லூக் 2:7

இது தான் இயேசு கிறிஸ்து பிறந்த இடத்தை கூறும் வசனம். மரியாள் தன் குழந்தையை பெற்று எடுத்த பிறகு தான் சத்திரத்தில் இடம் இல்லை என்று அறிந்தார்கள். ஏன்? ஏனென்றால், எல்லா ஊர்களிலிருந்தும் அவர்களின் சொந்த ஊரான பெத்லேஹேமிற்கு தங்கள் பெயர்களை பதிவு செய்ய (census) வந்ததினால், சத்திரம் நிறம்பியிருந்தது. அவர்களுக்கு இடம் கிடைத்தது, சத்திரத்திற்கு வரும் மனிதர்கள், தங்களின் குதிரைகளையும், மாடுகளையும் கட்டி, இரவு தங்கவைக்கும் இடமான முன்னனையில் தான் இயேசு கிறிஸ்து பிறந்த பிறகு வைக்கப்பட்டார். ஆட்டு இடையர்களுக்கு இந்த முன்னனை என்ங்கே இருக்கும் என்று நன்றாக தெரிந்திருந்ததினால், அவர்களும் தூதர்கள் சொல்லை கேட்டு உடனே சத்திரத்தின் முன்னனையில் வந்து பாலகனை பார்க்க முடிந்தது.

நான் சில படங்களில், சத்திரக்காரர்கள், யோசேபையும், மரியாளையும், சத்திரத்தில் இடம் இல்லை என்று துரத்துவதை பார்த்திருக்கிறேன். என்ன கொடுமை இது. பாரம்பரியம் இப்படி எல்லாம் செய்ய வைக்கிறது!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

'கந்தைத் துணியோ கர்த்தருக்கு' என்று பாட்டுவேறு சொல்லிக் கொடுத்துவிடுகிறார்கள். மரியாள் ஒரு யூதஸ்த்ரீ அதுவும் தேவதூதனே தோன்றி பேசிய பெண்மனி, தன்னுடைய முதல் குமாரனுக்காக எவ்வளவு முன்னேற்பாடோடு இருந்திருப்பாள்? யோசேப்பும் கூட 'இவன் தச்சனின் மகனல்லவா?" என்று ஜனங்கள் அறியும்ளவு பிரபலமாக இருந்தவர்தான். "lake of fire தமிழில் 'அக்கினிக் கடல்' ஆனதுபோல் நம்மவர்கள்தான் ஊதிப்பெரிதாக்குவதில் அசகாய சூரர்களாயிற்றே?



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard