பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாக்கதக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும், காலங்களையும் நாட்களையும் வருசங்களையும் குறிக்கிறதற்காகவும் உண்டாகடவது என்றார்.
மேலே உள்ள வசன படி நச்சத்திரங்கள் அடையாளங்களுக்காக படைக்கபட்டவையா?
நிங்கள் கூறபோகும் கருத்துகளுக்கு நன்றி.
n.b. Please download Tamil Bible TTF Font through google search to read the quoted verse. It is Gen. 1:14
-- Edited by inigonirmal on Saturday 3rd of October 2009 05:07:00 AM
-- Edited by bereans on Saturday 3rd of October 2009 07:36:55 AM
நட்சத்திரங்கள் படைக்கப்பட்டது ஒரு வேளை திசைகளை கண்டறிய இருக்கலாம். இயேசு கிறிஸ்துவை காண வந்த வான சாஸ்திரிகள் நட்ச்சத்திரத்தை பார்த்து தானே வருகிறார்கள்.
மற்றபடி வேதத்தில் உள்ள எல்லா நட்ச்சத்திரங்களும் இதையே குறிக்காது.
வான சாஸ்திரிகள், நீங்கள் சொன்னப்படியே நட்சத்திரங்களை திசைகளை, வழியை இன்னும் பல விதமாக பயன்படுத்துவார்கள். ஆனால் தேவனை அறிந்திருக்கும் பிள்ளைகள் இந்த நட்சத்திரங்களை வெறும் நட்சத்திரமாக பார்த்தாலே போதும். மற்றபடி நட்சத்திரங்களுக்கு ஆவிக்குரிய அர்த்தங்களும் உண்டு. அது வேதத்தில் அந்த அந்த வசனத்துடன் வாசிக்கும் போது விளங்கும்.
அவர்கள் 'சாஸ்திரிகள்'அதனால் ஒருவேளை திசையை கணித்து அந்த இடத்தைத் தேடி வந்திருக்கலாம். ஆனால் சபையாகிய 'சிறுமந்தை'க்கு அவ்வாறு அடையாளங்களைக் கொண்டு யாரையும் தேடவேண்டிய அவசியமில்லை. "கிறிஸ்துவின் அச்சடையாளங்களைத்" தரித்துக் கொள்ளத்தான் நமக்கு அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் 'அடையாளங்கள்' என்று அனேக காரியங்கள் வேதத்திலுண்டு. அவற்றை ஆராய்ந்தறிவோமானால் அவரது வருகையைப் பற்றி தெளிவாக தெரிந்து கொள்ளலாமே?