kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கர்த்தருடைய பந்தி.....


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
கர்த்தருடைய பந்தி.....


ராப்போஜனம், கர்த்தருடைய பந்தி என்று சொல்லப்படும் இந்த சடங்குமாத்திரம் ஏன் ஒவ்வொரு சபைப்பிரிவுகளிலும் வித்தியாசமான முறைகளில் கடைபிடிக்கப்படுகிறது. கர்த்தருடைய பந்தியின் நோக்கம்தான் என்ன? அதற்கு expiry date உள்ளதா? உண்மையான, வேதம் சார்ந்த முறை மற்றும் Frequency தான் என்ன? கொஞ்சம் விளக்குங்களேன்?

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

இராபோஜனத்தை அதிகாலையிலும், காலை வேலையிலும், மதியத்திலும், சாயங்களாத்திலும், தினந்தோரம், வாரம்தோரும், மாதம் ஒரு முறை, பெரிய பாஸ்டர் வரும் போது, பிஷப் வரும் போது என்று சபைகள் இராபோஜனத்தின் அர்த்ததையே குழைத்து வைத்திருக்கிறார்களே!

யூதர்கள் வருடத்திற்கு ஒரு முறை பஸ்கா பண்டிகையை ஆசரித்தார்கள். இயேசு கிறிஸ்துவோ அதே நாளிலே நினைவுகூறும் படியாக ஏற்படுத்திய அந்த இராபோஜனத்தை வருடத்திற்கு ஒரு முறை இராத்திரியில் அனுசரிப்பது தானே சரியாகும். எப்படி ஞானஸ்னானம் எடுப்பதற்கு ஒரு சட்டம் வைத்திருக்கிறார்களோ, அப்படி இதில் எந்த ஒரு ஒழுக்கத்தையும் கடை பிடிப்பதில்லை. (ஆவியானவர் இவர்களிடத்தில் இந்த விஷயங்களை குறித்து சொலுவதில்லையா, அல்லது அவர் சொல்லியும் இவர்கள் தான் மீறுகிறார்களா)!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

ஞானஸ்னானத்தை போல் இராபோஜனம் அல்லது கர்த்தர் பந்தி ஒரு கிறிஸ்தவனுக்கு மிகவும் முக்கியமாக் பின் பற்ற வேண்டிய கட்டளைகள்.

ஞானஸ்னானம் ஏதோ பெரும்பாளுமான சபைகள் ஓரளவு ஒற்றுமையாக தான் செய்கிறார்கள், ஆனால் கர்த்தர் பந்தியில் மாத்திரம் இந்த ஒற்றுமை இல்லையே!

இந்த தலைப்பை இன்னும் அதிகமாக விவாதிக்கலாமே!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard