kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Lack of knowledge!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
Lack of knowledge!!


வேத வசனங்களின் பின்னணிகளைப் பற்றிய சபைகளின் அறியாமையும் அக்கறையின்மையும்.

வேதத்தில் உல்ள ஒவ்வொரு புத்தகமும் வெவ்வேறு பின்னணிகளைக் கொண்டவை. அவற்றின் சமூக, அறிவியல், பண்பாடு, மொழிநடை போன்ற பின்னணிகளை தெளிவாக அறியாமல் வேத வசன‌ங்களுக்குப் பொருள் கொள்ள முடியாது. ஏனெனில், வேதத்தின் ஒவ்வொரு புத்தகத்தையும் யார் எழுதியது?, யாருக்கு எழுதப்பட்டது?, எந்த நோக்கத்தோடு எழுதப்பட்டது?, எந்த காலத்தில் எழுதப்பட்டது? என்பதை அறிய வேண்டியது மிக அவசியம். மேலும் வேதத்தில் (எழுதப்பட்டுள்ள) அநேக பழமொழிகள், அடைமொழிகள் யாவும் ஆவைகளுக்கே உரிய பண்பாட்டு பாரம்பரிய பின்னணிகளைக் கொண்டவை. அதுமட்டுமல்ல, வேதத்தில் கிரேக்க எபிரேய மொழிகளைத் தவிர ஆங்காங்கே அராமியம், மற்றும் பாரசீக மொழிகளும் கலந்து வருகின்றன‌.

எடுத்துக்காட்டு:

     "பரதீசு" என்பது பாரசீக வார்த்தையாகும். இத்கற்கு "தோட்டம்" அல்லது "பூங்கா" (சோலை, நந்தவனம்) என்று அர்த்தம். ஆனால் இதற்கு பிற்காலங்களில் பிறமதங்களின் அர்த்தங்கள் ‍ சாயங்கள் பூசப்பட்டன‌.

     மேலும் தோல்சுருள் மூலச்சுவடிகளைப் பற்றிய அறிவு தேவ பில்ளைகளுக்கு மிக மிகக் குறைவகவே இருக்கின்றது. இத்தனை விஷயங்களையும் மனதிற்கொண்டு வேத வசனங்களை பகுத்துப் போதிக்காமல் போனதாலும் வேதம் ஒரு குழப்பத்துக்குரிய புத்தகமாக்கப்பட்டது. இக்காலங்களிலும் அநேக தேவ பிள்ளைகள் இத்தனை விஷயங்களை தங்கள் உபதேசங்களில் பொருட்படுத்துகிறதில்லை.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard