kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மரணத்தை காணாமல் வாழ்ந்தது யார்?


Senior Member

Status: Offline
Posts: 165
Date:
மரணத்தை காணாமல் வாழ்ந்தது யார்?


யோவான் எழுதிய சுவுஷேச்த்தில் இயேசு இவ்வாறு குறிப்பிடுவதாக உள்ளது:

யோவான் 8:51 ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

யோவான் 11:26 உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்;

இந்த இரு வசனத்திலும் மிக தெளிவாக இயேசுவின் வார்த்தையை ஒருவர் கைகொண்டால் அவர் மரணத்தை காண்பதில்லை என்று இயேசு கூறுவதாக அமர்ந்துள்ளது.

இயேசுவின் மரணத்துக்கு  பிறகு சுமார் 1975௦௦௦ வருடங்கள் கடந்துவிட் நிலையில் எத்தனையோபேர்  இயேசுவை உயிருக்குயிராய்  பின்பற்றிய சரித்திரத்தை கேட்டிருக்கிறோம்.  இதில் பலர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு மரித்திருக்கின்றனர். பலர் சாதாரண மரணத்தை அடைந்துள்ளனர் ஆனால்  இன்று வரை யாரும் மரிக்காமல் வாழ்ந்ததாக நாம் கேள்விப்படவில்லை. எல்லோரும் மரித்துகொண்டுதான் இருக்கிறார்கள். பிறகு வசனம் இவ்வாறு கூற காரணம் என்ன?

இயேசு தவறாக சொல்லிவிட்டாரா?
அல்லது
மனிதர்கள் யாரும் அவர் வார்த்தையை சரியாக கைகொள்ள வில்லையா?

தெரிந்தவர்கள் கொஞ்சம் விளக்குங்களேன்!



__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

"நீ சாகவே சாவாய்"யில் தொடங்குகிறது மரணத்தை நோக்கி மனிதனின் பயணம். "பாவம் செய்யும் ஆத்துமா சாகும்" என்கிறது எசே. 18:4. "பாவத்தின் சம்பளம் மரனம்" என்கிறது ரோம் 6:23. ஆக எல்லோரும் பாவம் செய்வதினால் எல்லோரும் மரிக்கிறார்கள்.  "ஆதாமிற்குள் எல்லோரும் மரிப்பதுபோல்" என்கிறார் பவுல். இவை எல்லாமே சரி. தாங்கள் குறிப்பிட்ட வசன‌மும் சரியே. இயேசு கிறிஸ்து எதையும் தவறாக சொல்லவில்லை. நம் வேத அறிஞர்கள் (!!) தான் தவறுதலாக இதை புரிந்துக்கொண்டு இப்படியும் சாத்தியம் என்கிறார்கள்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

'அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை' என்ற பதத்தை சற்று புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் கிறிஸ்துவின் 'விலைக்கிரயத்தால்' மரணம் என்பது 'நித்திரை'யாக மாற்றப்பட்டதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். இப்போது இந்த சுவிசேஷ யுகத்தில் வசனத்தைக் கைக்கொள்ளும் 'சபை' நேரடியாக (பொதுவான நியாயத்தீர்ப்புக்கு நீங்கலாகி)சாவாமையை சுதந்தரிக்கிறது.(ஏனென்றால் சபைக்கு இப்போது நியாயத்தீர்ப்பு) யோவான் 11:26 உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; உயிர்த்தெழுதலுக்குப்பின் நடக்கும் நியாயத்தீர்ப்பின்போது (இப்போது சபையல்லாத மற்றவர்களது)எசா26:9ன்படி 'உயிரோடிருந்து' அவரை விசுவாசித்து நீதியைக்கற்றுக்கொண்டு பூமியில் நித்திய ஜீவனை சுதந்தரித்துக் கொண்டபின்பு இரண்டாம் மரணத்துக்கும் நீங்கலாகி 'மரியாமல் இருப்பார்கள்'.



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard