kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: daily manna 29/4


Senior Member

Status: Offline
Posts: 107
Date:
daily manna 29/4


" அவர்கள் என்னை நோக்கி மன்றாடும் போது, அவர்களுக்குப் பதிலளிப்பேன்; அவர்களது துன்பத்தில் அவர்களோடு இருப்பேன்; அவர்களைத் தப்புவித்து அவர்களைப் பெருமைப்படுத்துவேன்."     சங்கீதம், 91:15


நமது வருத்தங்களையும், தொந்தரவுகச்ளையும் நாம் நம்பும் நம் தேவனிடத்தில் எடுத்துச்செல்வதே நமது ஆசீர்வாதமான சிலாக்கியம்.

நமது ஆத்துமாவின் ஏக்கங்களையோ அல்லது நம் வாழ்க்கையின் துக்கம் என்னும் கசப்பை நம்மிலிருந்து எடுத்துப்போட வல்லவர் நாம் நம்பும் நம் தேவன். ஆனால் இந்த உலகமும் அதன் காரியங்களும் மாயை. இதனை நமக்கு வெளிப்படுத்த‌ சில அனுபவங்களை நம் வாழ்வில் அனுமதிக்கிறார்.

ஒரு பக்தன் இவ்வாறு பாடுகிறான், " நமக்கு வெறுப்பூட்டும் கடினமான அனுபவமாய் இருந்தாலும் கூட, அவை சில காலம் மட்டுமே ,"என்ற இன்பமான எண்ணம் பிறகு உதிக்கின்றது.

இந்த அனுபவங்களை நமது வாழ்வில் கடந்து செல்ல அனுமதிக்கும் பொழுது, நீதிய்ன் கனி நம்மில் செழித்தோங்கி வளர்ந்து மேலான எண்ணங்களை உறுதிப்படுத்தி,  சுயத்தை அடக்கவும், நேர்மையை நேசிக்கவும், நிதானித்து செயல்படவும், தேவனில் நம்பிக்கையையும், விசுவாசத்தையும் வளர்ந்தோங்கச் செய்கிறது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard