kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: "நான்" என்கிற ஊழியம்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
"நான்" என்கிற ஊழியம்


இன்று நடந்து கொண்டிருக்கும் ஊழியங்களை பார்த்தால், மனித முயற்சியில் இந்த உலகத்தை கிறிஸ்துவமயமாக்குவது என்பது தான் எல்லா ஊழியர்களின் பிரதான முயற்சியாக இருப்பதை பார்க்க முடிகிறது. இது தேவ சித்தமா? உலகம் முழுவதும் இன்று (தேவ ராஜ்யம் வரும் முன்பு) கிறிஸ்தவர்களாக மாறுவது தான் தேவ சித்தமா? "ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார்." லூக். 18:8.

   ஒரு பிரபலமான ஊழியக்காரர் இப்படியாக சொன்னார், "என் தெருவில் கிறிஸ்தவர்கள் இல்லை என்றால், நான் தேவனிடம் மன்றாடுவேன், தேவனே, நான் என்னை தவறு செய்து விட்டேன், இன்னும் நான் என்ன செய்ய வேண்டும், இன்னும் நான் எப்படி சுவிசேஷம் சொல்லி அவர்களை இரட்சிப்பிற்குள் நடத்த வேண்டும்" இப்படியாக இன்னும் பல "நான்" போட்டு கொண்டே பொனார். அதாவது மனிதர்கள் இரட்சிக்கப்படுவதற்கு ஊழியக்காரார்கள் தான் காரணம் என்பது இவர் எண்ணமாக இருக்கலாம். ஆனால் தேவ சித்தம் என்ன என்று தெரிந்துக்கொள்ளும் ஆர்வத்தில் இவர்கள் இல்லையே. ராஜ்யத்தில் இயேசு கிறிஸ்து செய்ய வேண்டியதை இவர்கள் இன்று "கிறிஸ்துக்களாக" இருந்துக்கொண்டு செய்கிறார்களே!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard