kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நரகம் பாதாளம் இருப்பது உண்மையா?


Senior Member

Status: Offline
Posts: 165
Date:
நரகம் பாதாளம் இருப்பது உண்மையா?


சகோதரர்களே!


துன்மார்க்கரும், தேவனை மறக்கிற எல்லா ஜாதிகளும், நரகத்திலே தள்ளப்படுவார்கள். (சங் 9;17)


உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்து போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.

உன் வலது கை உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்து போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும். (மத 5:29,30)


     

மேற்கண்ட வசனம் துன்மார்க்கன்  நரக அக்கினியில் தள்ளப்படுவான்
என்பதை தெளிவாக எடுத்துரைக்க நரகம் என்று ஓன்று இல்லை என்ற போதனை சரியானதா?
 
 



__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Member

Status: Offline
Posts: 18
Date:

நரகம் பாதாளம் எல்லாம் இருக்கிறது, அது இன்று சபைகளில் பேசப்படும் நரகம் பாதாளம் அல்ல சகோதரரே. இந்த நரகம், பாதாளம், படுகுழி, எரிநரகம், அந்தகாரம் எல்லாம் வேதத்தில் இருக்கிறது, இந்த வார்த்தைகளை பிடித்துக்கொண்டு இந்த வார்த்தைகளை தியானித்து, அதினால் வரும் தரிசனங்கள் (!), தேவன் தந்தது என்று கதைகள் பறப்பி வருகிறார்கள் பல முன்னனி ஊழியர்கள் (!). இந்த தரிசனங்கள் தேவன் தந்தது என்று சொல்லுகிறர்வர்கள், அந்த தேவனின் நாமத்தை கூட அறியாமல் இருப்பவர்கள். சாத்தானை கூட தான் இந்த பிரபஞ்சத்தின் தேவன் என்று வேதம் சொல்லுகிறது. அவனும் ஒளியின் தூதனாக வந்து அவனுடைய ஊழியர்களும் உண்டு என்று வேதம் சொல்லுகிறது. கேட்பவர்களின் செவிகளுக்கு தோதாய் இருக்கிறது என்று எதை வேண்டுமென்றாலும் போதிக்கும் கள்ள உபதேசர்கள் கிறிஸ்தவ சாமராஜ்யத்திற்குள் நுழைந்திருக்கிறார்கள். இன்னும் பல மசாலா கருத்துகளை சேர்த்து சொல்லுவது இவர்களுக்கு பொழுது போக்காக இருக்கிறது. பரிசுத்த ஆவி மூலமாக எழுதப்பட்ட வேதம் எபிரேயு மற்றும் கிரேக்கம் ஒரு சில பார்சீக வார்த்தைகளும் அராமிய வார்த்தைகளும் அதில் உண்டு. இதை நகல் எடுத்து அதே மொழியில் எழுதிய கை பிரதிகள் இன்றும் இருக்கிறது. இந்த மூல பாஷைகளை தவிர மற்ற எந்த மொழிபெயர்ப்பு ஆனாலும் சரி, அது மனித திறன், மூளைக்கொண்டு மொழிப்பெயர்க்கப்பட்ட புத்தகமே. இந்த மொழிப்பெயர்க்கப்பட்ட புத்தகத்தை நாம் பரிசுத்த ஆவியின் துனையுடன் (நம் கணவுகள் காட்சிகள், தரிசனங்கள் அல்ல) மாத்திரமே படித்து தியானிக்கனும், ஏனென்றால் அப்பொழுது தான் இயேசு கிறிஸ்து என்ன சொல்லி கொடுத்தாரோ அந்த அர்த்தக் கிடைக்கும். இதை விட்டு விட்டு. தன் சொந்த அனுபவங்கள், கனவுகள் காட்சிகள் என்று சொல்லிக்கொண்டு வேதத்தை வியாக்கியானம் செய்வதே ஒரு பாவம் தான். ஏனென்றால், சொந்த அனுபவங்களோ, கணவுகளோ, காட்சிகளோ, தரிசனங்களோ, இயேசு கிறிஸ்துவின் போதனைகள் ஆகாது.

நரகம், பாதாளம், படுகுழி, எரிநரகம், அந்தகாரம்  போன்ற இந்த வார்த்தைகள் மூல பாஷையில் பார்த்தோமென்றால், எபிரேயத்தில் ஷியோல் (Sheol) என்றும், கிரேக்கத்தில் நரகம், பாதாளம், படுகுழி எல்லாம் ஹேடஸ் (Hades) என்றும் இயேசு கிறிஸ்து யூதர்களிடம் மாத்திரம் பயன் படுத்திய வார்த்தையான எரிநரகம் "கெஹென்னா" (Gehenna) என்றும், பாவம் செய்த தூதர்களை தப்பவிடாமல் அந்தகாரத்தில் வைத்திருப்பதை "டார்ட்டரு" (Tartaru or Tartarus)  என்கிற பதங்கள் வேதத்தில் குறிக்கிறது. எபிரேய ஷியோல்க்கு நேரடியான கிரேக்க பதம் ஹேடஸ் ஆகும். இந்த ஷியோல் அல்லது ஹேடஸ் என்றால், மரித்த நிலை, மரித்தவர் நிலை, மறைவானது, புதைக்கப்பட்டது, கல்லறை, மறைவான இடம் போன்ற அர்த்தங்களே உள்ளது. இதில் எங்கு இருந்து தான் இந்த கள்ள தீர்க்கதரிசிகள், கள்ள அப்போஸ்தலர்கள் இங்கு தான் அக்கினி இருக்கிறது என்று, இந்த அக்கினி தான் இயேசு கிறிஸ்துவை ஏற்காத அனைவரும் போகும் இடம் ஆகும் என்று புலம்புகிறார்கள்.

அவர்கள் ஒழுங்காக வேதத்தை ஆறாய்ந்து பார்த்திருந்தால், "எல்லா மனுஷர்களும் இரட்சிக்கப்பட தேவன் சித்தமாக இருக்கிறார் என்றும்" இதற்காகவே "இயேசு கிறிஸ்து எல்லாருக்காகவும் மீட்கும் பொருளாக தம்மை செலுத்தினார்" (1 தீமோ 2:2-6) என்றும், தேவனின் கிருபையினால் "எல்லா மனுஷர்களுக்காகவும் மரணத்தை ருசி பார்த்தார் இயேசு கிறிஸ்து" (எபி 2:9) என்றும் இருப்பதை என்னோ இந்த கிறிஸ்துவின் ஊழியர்கள் என்று தங்களை சொல்லிக்கொண்டு கபடத்தை போதிப்பவர்கள் பார்க்க மறுக்கிறாகள். கிறிஸ்துவை அறியாதவர்கள் போகும் இடம் தான் நரகம் என்று சொல்லுகிறார்களே, இவர்களே இந்த நரகத்திற்கு போக தான் வேண்டும் என்று கூட அறியாதவர்களாக போதிக்கிறார்களே என்பதின் தான் வேடிக்கை.

இன்னும் தொடரும்.......



__________________


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

eras wrote:

 

  எபிரேய ஷியோல்க்கு நேரடியான கிரேக்க பதம் ஹேடஸ் ஆகும். இந்த ஷியோல் அல்லது ஹேடஸ் என்றால், மரித்த நிலை, மரித்தவர் நிலை, மறைவானது, புதைக்கப்பட்டது, கல்லறை, மறைவான இடம் போன்ற அர்த்தங்களே உள்ளது. 




நல்லது,

தாங்கள் கூறும் இந்த விளக்கங்கள் ஏற்றுக்கொள்ளபட்டாலும் மறைக்கப்பட்ட அந்த இடத்துக்குள் என்ன இருக்கும் என்ன நடக்கும் என்பது ஒரு கேள்வியே!  

"மரித்தவன் ஒன்றும் அறியான்" என்று நீதி மொழிகள் குறிப்பிட்டாலும் எசேக்கியேல் புத்தகம் 32:21ல் "பராக்கிரமசாலிகளில் வல்லவர்களும் அவனுக்கு துணை நின்றவர்களும் பாதாளத்தின் நடுவிலிருந்து அவனோடே பேசுவார்கள்"    என்று குறிப்பிடுகிறது. எனவே நீங்கள் சொல்வதுபோல் பாதாளம் என்ற வார்த்தையை,  "குழி" அல்லது "மறைக்கப்படும் இடம்" என்று எடுத்துக்கொண்டாலும் அங்குள்ளவர்கள் பேசும் நிலையில் இருக்கிறார்கள் என்பது இவ்வசனத்தின் மூலம் புரியவரும்

பொதுவாகதேவன் குறிப்பிட்ட ஒரு வார்த்தைக்கு (அது எந்த மொழியானாலும் சரி) சரியான அருத்தம் என்ன என்பதை தேவன் ஒருவரே அறிவார். அப்படியிருக்கு உண்மையை அறியாமல் அப்படியொரு வேதனையான இடம் இல்லை என்று முடிவாக தீர்ப்பது தவறானது என்றே நான் கருதுகிறேன்.


 



__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

அன்புள்ள சகோதரரே,

    நீங்கள் எழுதிய அந்த வசனம் பிரசங்கி 9:10க்கு முறனாக இருக்கிறது, அதாவது, "நீ போகிற பாதாளத்திலே (ஷியோல்) செய்கையும், வித்தையும் அறிவும் ஞானமும் இல்லை" என்கிறது வசனம். அப்படி ஷியோலில் இவை எதுவும் இல்லை என்றால், நீங்கள் எழுதிய எசே. 32:21, என்பது நிச்சயமாகவே எழுத்தின்ப்படி அர்த்தம் கொள்ளும் வசனமாக இருக்க முடியாது. அப்படி ஷியோலில் ஞானமோ, அறிவோ இல்லை என்று தேவன் ஒரு இடத்தில் கொடுத்துவிட்டு, இன்னும் ஒரு இடத்தில் அவர்கள் ஷியோலில் பேசினார்கள் என்றால் அந்த பகுதி முழுவதுமாக வாசித்து பார்க்க வேண்டும். இப்படி எழுதுவது நான் தப்பித்து கொள்வதற்கு என்று என்னாதீர்கள். ஏனென்றால், இது போல் தான் புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து காவலில் உள்ள ஆவிகளுக்கு பிரசங்கித்தார் என்று பேதுரு 1பேது 3:19ல் சொல்லியிருக்கிறார். இந்த இடத்தில் பிரசங்கித்தார் என்றால், அவர் வாயினால் பேசி அவர்களிடம் சொல்லியது இல்லை.

  இப்போ யேகோவா தேவன் தூங்குவதும் இல்லை, உறங்குவதும் இல்லை என்று வாசித்து, அவருக்கு கண்கள் எங்கே என்று கேட்க கூடாது. பரலோகத்தில் அவர் எங்கே படுக்கை போடுவார் என்று கேட்க்க கூடாது. அப்படியே தான் இங்கேயும். இந்த இடத்தில் பேசினார்கள் என்றால், வெளிப்படுத்தினார் என்று எடுத்து வாசித்தால் பொருத்தமாக இருக்கும் என்பது என் பதில்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

சகோதரரே,

நாம் நமது விருப்பப்படி வேத வார்த்தைகளுக்கு வசனம் எடுப்பது சரியானது அல்ல என்றே கருதுகிறேன்! வேதபுத்தகம் ஒருகாலும் உண்மையில்லாத ஒற்றை சொல்வதில்  என்ற நம்பிக்கை எல்லோருக்கும் உள்ளது. அப்படிப்பட்ட புத்தகத்தில் இரண்டுவிதமான வசனங்கள் வருகிறது என்றால் நிச்சயம் இரண்டுமே உண்மையாகத்தான் இருக்கும்.

ஓன்று  உண்மை இன்னொன்று தவறாக மொழிபெயர்க்கப்பட்டு விட்டது அல்லது வேறுவிதமாக பொருள் கொள்ளவேண்டும்  என்று ஏன் எடுக்கிறீர்கள்?

பாதாளத்தில் பல நிலைகளில் ஆத்துமாக்கள் இருக்கலாமே! அதில்  எதையுமே அறியாத தூக்க நிலையும் எல்லாவற்றையும் அறியக்கூடிய துன்பப்படும் நிலையும் இருக்கலாமே எனவேதான் வேதம் இரண்டுவிதமாக சொல்கிறது என்று ஏன் எடுத்துக்கொள்ள கூடாது?

///நீங்கள் எழுதிய அந்த வசனம் பிரசங்கி 9:10க்கு முறனாக இருக்கிறது, அதாவது, "நீ போகிற பாதாளத்திலே (ஷியோல்) செய்கையும், வித்தையும் அறிவும் ஞானமும் இல்லை" என்கிறது வசனம்.///

இந்த வசனம் "ஒருவர் மரித்தபின் போகக்கூடிய பாதாளத்தில்   என்ன நடக்கும் என்பதை அறியும் ஞானம் அவர் பூமியில் வாழ்கின்ற போது  இல்லை" என்ற பொருளில்தான் எழுதப்பட்டுள்ளது என்று நான் கருதுகிறேன்!



__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சகோதரரே,

    வேதத்தை தங்கள் சுய இச்சைக்காகவும் லாபத்திற்காகவும், இளிவான ஆதாயத்திற்காகவும் அர்த்தம் சொல்லுபவர்கள் அநேகர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் ஒரு காரியம் மறந்து போனவர்கள், "தேவன் அன்புள்ளவர்" "தேவன் உலகத்தில் உள்ள மனிதர்களை நேசித்ததால் என்றேன்றும் மரித்த நிலையில் இருக்க வேண்டிய மனிதனை மீட்டு எடுக்கும் படியாக தன் ஒரே பேரான குமாரனை இந்த பூமிக்கு அனுப்பினார்" இது போல் இன்னும் பல வசனங்கள் வேதத்தில் இருக்கிறது, இவை எல்லாம் இவர்கள் கண்கள் பார்க்காதப்படி குருடாகி இருக்கிறது என்றே நினைக்கிறேன். ஆக்கினை தீர்ப்பை அக்கினி தீர்ப்பு என்று திரிப்பவர்கள் கூட்டம் தான் இந்த கூட்டம். ஏன் தெரியுமா, "ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரிப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ள்:ஆக்கபொபடும்படிக்கு, அவர்கள் பொய்யை விசுவாசிக்கத் தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்" 2 தெச. 2:11,12, என்கிற தீர்க்கதரிசன வசனம் இந்த கூட்டத்தார் மூலமாக நிறைவேறுகிறது.

     பிரசங்கி, அந்த வசனத்தில் ஜீவனுள்ள மனிதனையும், பிறகு மரிக்கும் மனிதனைன் நிலையை தான் சொல்லியிருக்கிறார். என்ன செய்வது, இன்று சபைகளில் இருக்கும் பிசாசின் doctrines (அதி 3:4) இதை நம்ப மறுக்க செய்கிறது. மரணம் என்னவென்று சபை போதிக்க தவறி இருக்கிறது. ஆகவே தான் நீங்கள் அந்த இரு பகுதிகளையும் ஜீவனோடு இருக்கும் மனிதனின் நிலை என்று நினைத்து விட்டீர்கள் போல். வசனத்தை ஒரு முறை நன்றாக நிறுத்தி நிதானமாக வாசித்து வித்தியாசத்தை உணருங்கள், வேண்டும் என்றால் "பரிசுத்த வேதாகமம்" என்கிற ஒரே வேதாகமத்தை வைத்து விட்டு, இன்னும் பல மொழிப்பெயர்ப்புகளில் வெளியாகி யிருக்கும் வேதாகமங்களை வாசித்து பாருங்களேன்.

  சரி இந்த வசனம் வாசிக்கும் போது இன்னும் சற்று மேலும் கீழும் உள்ள வசனங்களை வாசித்து பார்க்கலாமே.   "உயிரோடுருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்" பிர. 8:5.  இந்த வசனமும் ஒரே நிலையில் உள்ள மனிதர்களை குறித்து தான் பிரசங்கி எழுதியிருக்கிறாரா?

"இந்த வசனம் "ஒருவர் மரித்தபின் போகக்கூடிய பாதாளத்தில்   என்ன நடக்கும் என்பதை அறியும் ஞானம் அவர் பூமியில் வாழ்கின்ற போது  இல்லை" என்ற பொருளில்தான் எழுதப்பட்டுள்ளது என்று நான் கருதுகிறேன்!" வசனம் தெளிவாக சொல்லுகிறது, "நீ போகிற பாதாளத்திலே (ஷியோலிலே) (அதாவது நீ மரித்து விட்டால்), செய்கையும், வித்தையும் அறிவும் (அதாவது மரித்த பிறகு எந்த அறிவும் இல்லை) ஞானமும் இல்லையே" ஆகவே, "உயிரோடு இருக்கும் போதே, நீ என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறாயோ அதை எல்லம் செய்துக்கோ" என்று பிரசங்கி எவ்வுளவு அழகாக எழுதியிருக்க, எப்படி தான் நீங்கள் சொல்லியிருக்கும் அர்த்தம் வந்தது என்று எனக்கு குழப்பமாக இருக்கிறது. இந்த வசனத்தில் எங்கேயுமே "உயிரோடு இருக்கும் போது பாதாளத்தில் என்ன நடக்கும் என்பதை அறியும் ஞானம் உனக்கு இல்லை" என்று இல்லையே.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

உயிரோடிருப்பவர்கள் தாங்கள் எதிர்காலத்தில் மரிப்போம் என்பதை அறிவார்கள் ஆனால் மரித்து பாதாளத்தில் இருப்பவர்களுக்கு எதிர் காலத்தின் என்ன சம்பவிக்கும் என்பதைப்பற்றி ஒன்றும் அறியார்கள் என்றே இவ்வசனம் குறிப்பிடுகிறது என்றே நான் பொருள்கொள்கிறேன்

"நீ போகிற பாதாளத்திலே, செய்கையும், வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே"

("அறிவும்" என்ற வார்த்தையை "அறியும்" என்று எடுத்துக்கொண்டு தவறாக பொருள் கொண்டுவிட்டேன் மன்னிக்கவும்) 

"மனிதன் மரித்தபின் பாதாளம் என்றொரு இடம் போகிறார் அந்த பாதாளத்தில்  மனிதனின் அறிவோ செய்கையோ அவன் ஞானத்தால் எதையும் செய்யக்கூடிய நிலையோ இல்லை எனவே இந்த பூமியில் செய்யக்கூடியதை முழு பலத்தொடே செய்"  என்று வேண்டுமானால் இதற்க்கு பொருள் கொள்ளமுடியுமேயன்றி தாங்கள் சொல்வதுபோல் மரித்தபின் ஒன்றுமே உணரமுடியாது என்று பொருள் கொள்ள முடியாது!   

சரி சகோதரர் நீங்கள் சொல்வதுபோல் சாலமோன் என்ற ஞானி எழுதிய வார்த்தைகள்படி  "பாதாளத்தில் போகும் மனிதர்கள் எல்லோருக்குமே ஒன்றும் உணர முடியாது" என்றே வைத்துக்கொண்டால். தேவனே எசேக்கியேல் தீர்க்கதரிசிக்கு வெளிப்படுத்தி சொன்ன வார்த்தைகளாகிய;

"பாதாளத்தின் நடுவிலிருந்து பேசுவார்கள்"
மற்றும்
"பாதாளத்தில் நிந்தையை சுமந்துகொண்டு இருக்கிறார்கள்"

போன்ற எதிர்காலம் மற்றும் தொடர் நிகழகாலத்தை குறிக்கும் வசனங்கள் தவறானவைகளா? 
அல்லது
வேதம் முரணான வசனங்களை கொண்டுள்ளதா?



-- Edited by RAAJ on Friday 15th of May 2009 04:16:13 AM

__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

வேதத்தில் முறனான வசனங்கள் ஒன்றும் இல்லை. நமக்கு தோன்றுவது தான் அப்படி. ஏனென்றால் நாம் மனிதர்களின் பார்வையில் அதை வாசித்து அர்த்தம் கொள்ள பார்க்கிறோம். மனிதனை குறித்து தேவ சித்தம் என்னவென்று பார்த்தோமென்றால், முறனாக தோன்றும் வசனங்கள் எல்லாம், நமக்கு சரிவர புரியுமே. மனிதர்களை குறித்தான தேவ சித்தம் 1 தீமோ. 2:4ல் இருந்து நீங்கள் வாசித்தால் புரியலாம். ஆனால் மனித ஞானம் கொண்டு வாசிப்பவர்கள் இந்த வசனத்தின் படி சாத்தியம் இல்லை என்றே என்னுகிறார்கள். அதாவது தேவன் சித்தம் கொண்டிருக்கிறார், ஆனால் அது முடியாத காரியம் என்று தேவனின் திட்டத்தின் மேல் சந்தேகப்பட்டு தேவதூஷனம் செய்கிறார்கள். "சிலர் விசுவாசியாமற்போனாலுமென்ன? அவர்களுடைய அவிசுவாசம் தேவனுடைய உண்மையை அவமாக்குமோ?" ரோம். 3:3. இது தேவனே அனுமதித்த காரியமாகும் (2 தேச. 2 11,12).

மனிதன் பேச வேண்டுமென்றால், அவனுக்கு ஞானம், அறிவு, நினைவுகள் இருக்க வேண்டுமே, இவை எல்லாம் இல்லாமல் போகும் பாதாளத்திலிருந்து அந்த ஐசுவரியவான் எப்படி தான் தன் தற்போதையை மற்றும் தன் சகோதரரின் நிலையை குறித்து பேசினானோ. ஒரு உவமையை உவமை போல் வாசித்தால் தான் அர்த்தம் புரியும். கோதுமை என்றால் கோதுமை அல்ல தேவ பிள்ளைகள், பதர் என்றால் பதர் இல்லை சாத்தானின் பிள்ளைகள் என்று எப்படி வாசிக்கிறோமோ, அப்படி தான் உவமையை வாசித்து புரிந்துக்கொள்ள வேண்டும்.

 எடுத்துக்காட்டாக, "குழப்பத்தின் மேகங்கள் சூழ்ந்திருந்தது" என்றால் நாம் அங்கு மேகங்கள் எங்கே என்று தேடிக்கொண்டிருப்போமா?

"பாதாளத்தில் நிந்தையை சுமந்துகொண்டு இருக்கிறார்கள்" என்றால், நித்திய ஜீவனோடு வாழும்படி மனிதன் படைக்கப்பட்டிருந்தாலும், அவன் மரணம் என்னும் நிந்தைக்குள் சென்று விட்டான். ஆனால் இது மனிதனின் சுய சிந்தனையால் ஏற்பட்ட விளைவு. இந்த நிந்தையிலிருந்து நம்மை விடுவிக்கவே நம் மீட்பராம் இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வந்தார்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

வசனத்தில் 'ஆத்துமாவை நரகத்தில் அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்' என்ற பதமே வந்துள்ளது. மேலும் 'பாவம் செய்கிற ஆத்துமாவே சாகும்', அங்கு உன் யோசனைகள் முதலாய் அழிந்துபோம் என்றுதான் வேதம் மரணத்தைப் பற்றி குறிப்பிடுகிறது..

ஆத்தும மரணம், ஆவிக்குரிய மரணம் என்றெல்லாம் ஒரு பதம் கூட வேதத்தில் இல்லை. மேலும் ஒருவர் இறந்தவுடனேயே நரகத்துக்குப் போகிறார் என்றால் அவருக்கு உயிர்த்தெழுதல் எதற்கு, 'நியாத்தீர்ப்பு' எதற்கு, இரண்டாம் வருகை எதற்கு? தேவன் 'நீ சாகவே சாவாய்' மண்ணாயிருக்கிறாய் மண்ணுக்கே திரும்புவாய் என்றுதான் முதல் மனிதனிடம் கூறினாரே தவிர வேரறெதுவும் இல்லை.

மேலும் பிரசங்கியின் புத்தகத்தில் "மனுப்புத்திரர் தாங்கள் மிருகங்களைப்போல் இருக்கிறார்கள், மனுப்புத்திரருக்கு சம்பவிக்கிறது மிருகங்களுக்கும் சம்பவிக்கும்...இவைகள் சாகிறது போலவே அவர்களும் சாகிறார்கள், ஜீவன்களுக்கெல்லாம் சுவாசம் ஒன்றே; மிருகத்தைப்பார்க்கிலும்மனிதன் மேன்மையுள்ளவன் அல்ல, எல்லாம் ஒரே இடத்துக்குப் போகிறது; எல்லாம் மண்ணிலே உண்டாகிறது, எல்லாம் மண்ணுக்குத் திரும்புகிறது (பிர3:18‍‍ ‍ 20)என்றுதான் உள்ளது. நாம்தான் ஆதியில் சாத்தான் சொன்ன 'நீங்கள் சாகவே சாவதில்லை' என்ற மாபெரும் பொய்யை நம்பி மோசம் போய்க்கொண்டிருக்கிறோம்.

மனிதன் பூமியில் நித்திய நித்தியமாக வாழத்தான் அவன் பூமியில் வாழும்படியான சரீரத்தை கொடுத்திருக்கிறார். மனிதன் பரலோகத்திற்காக படைக்கப்பட்டவன் அல்ல. கிறிஸ்துவன் சரீரமாகிய சபையாகிய சிறுமந்தைக்கு மாத்திரமே கிறிஸ்து பரலோகத்தை வாக்குப்பண்ணியிருக்கிறார். இந்த மரணத்தைப் பற்றிய குழப்பமே மறறெல்லா குழப்பங்களுக்கும் காரணமாகும்.






-- Edited by soulsolution on Wednesday 2nd of September 2009 02:46:41 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

soulsolution wrote:

///வசனத்தில் 'ஆத்துமாவை நரகத்தில் அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்' என்ற பதமே வந்துள்ளது. மேலும் 'பாவம் செய்கிற ஆத்துமாவே சாகும்', அங்கு உன் யோசனைகள் முதலாய் அழிந்துபோம் என்றுதான் வேதம் மரணத்தைப் பற்றி குறிப்பிடுகிறது..

நாம்தான் ஆதியில் சாத்தான் சொன்ன 'நீங்கள் சாகவே சாவதில்லை' என்ற மாபெரும் பொய்யை நம்பி மோசம் போய்க்கொண்டிருக்கிறோம்.

மனிதன் பூமியில் நித்திய நித்தியமாக வாழத்தான் அவன் பூமியில் வாழும்படியான சரீரத்தை கொடுத்திருக்கிறார். மனிதன் பரலோகத்திற்காக படைக்கப்பட்டவன் அல்ல. கிறிஸ்துவன் சரீரமாகிய சபையாகிய சிறுமந்தைக்கு மாத்திரமே கிறிஸ்து பரலோகத்தை வாக்குப்பண்ணியிருக்கிறார். இந்த மரணத்தைப் பற்றிய குழப்பமே மறறெல்லா குழப்பங்களுக்கும் காரணமாகும். ///


அன்பு  சகோதரர் வேதத்தில் சாத்தான் மட்டும்தான்  "நீ சாகவே சாவதில்லை" என்று சொல்லியிருக்கிறானா? 

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து கூட "ஒருவன் ஏன் வார்த்தையை கைகொண்டால் அவன் என்றென்றும் மரணத்தை காண்பதில்லை

என்றும் 

நீதி மொழிகளில் "நீதியின் பாதையில் ஜீவன் உண்டு அங்கே மரணம் இல்லை"போன்ற வார்த்தைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதிலிருந்து நாம் என்ன அறிய முடிகிறது

மனிதன் சாவதர்க்காக  படைக்கப்பப்ட்டவன் அல்ல!அவன்அழிவில்லாமல்  நித்திய நித்யமாக வழ்வதர்க்குதான் படைக்கப்பட்டான் என்பதை வேதம் பல இடங்களில் தெளிவாக குறிப்பிடுகிறது

இங்கு சாத்தான் சொன்ன பொய் என்னவென்றால்

"தேவன் உண்ணக்கூடாது என்று சொன்ன கனியை உண்டாலும் கூட நீங்கள் சாகவே சாவதில்லை" என்பதுதானேயன்றி வேறல்ல! அவன் வார்த்தைக்கு கீழ்படிந்து பாவம செய்தபோது மாமிச மரணம் ஏற்ப்பட்டது ஆனால் ஆத்துமாவோ நித்ய நித்யமாக வாழக்கூடியது.

இயேசு தனது வாயாலேயே சொன்ன ஒரு வசனத்தை நான் மேற்க்கோள் காட்டிவிட்டேன். அதாவது மாமிசத்தை தனியாக கொல்ல முடியும் ஆத்துமாவை தனியாக கொல்ல முடியும் என்பதே அது.

வெளி 20:10 மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்.

வெளி 20:14 அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன.  இது இரண்டாம் மரணம்.
வெளி 20:15 ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.

சாத்தானோடு சேர்ந்து சதாகாலங்களிலும் அக்கினி கடலில் தள்ளப்படு
வாதிக்கப்படுதலே இரண்டாம் மரணம் என்று வேதம் குறிப்பிடுகிறது .

மேலும் ஒற்றை  அழித்தல் என்பது அதை இல்லாமல் போக பண்ணுதல் என்பதை குறிக்கிறது. இங்கு ஆத்துமாவானது  அக்கினி கடலுக்கு போனபிறகு எக்காலத்திலும் மீண்டும் திரும்ப முடியாத நிலயை அடைவதால் "நரகத்தில் தள்ளி அழிக்க" என்று இயேசு குறிப்பிடுகிறார்.






  



__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

[இயேசு தனது வாயாலேயே சொன்ன ஒரு வசனத்தை நான் மேற்க்கோள் காட்டிவிட்டேன். அதாவது மாமிசத்தை தனியாக கொல்ல முடியும் ஆத்துமாவை தனியாக கொல்ல முடியும் என்பதே அது. 

வெளி 20:10 மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள். 

வெளி 20:14 அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன.  இது இரண்டாம் மரணம். 
வெளி 20:15 ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான். 

சாத்தானோடு சேர்ந்து சதாகாலங்களிலும் அக்கினி கடலில் தள்ளப்படு 
வாதிக்கப்படுதலே இரண்டாம் மரணம் என்று வேதம் குறிப்பிடுகிறது . 

மேலும் ஒற்றை  அழித்தல் என்பது அதை இல்லாமல் போக பண்ணுதல் என்பதை குறிக்கிறது. இங்கு ஆத்துமாவானது  அக்கினி கடலுக்கு போனபிறகு எக்காலத்திலும் மீண்டும் திரும்ப முடியாத நிலயை அடைவதால் "நரகத்தில் தள்ளி அழிக்க" என்று இயேசு குறிப்பிடுகிறார்.] 

சகோதரரே, முதலில் வெளிப்படுத்தின விஷேசம் ஒரு குறியீட்டுப் புத்தகம் அதில் உள்ள வார்த்தைகள் அத்தனையையும் நாம் நேரடி அர்த்தம் கொண்டால் குழப்பமே மிஞ்சும். மரணத்தையும் பாதாளத்தையும் எப்படி அக்கினிக்கடலிலே தள்ளமுடியும்? இவையெல்லாமே symbolic language ஆகும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள மிருகம் உண்மையான மிருகமல்ல, சூரியன் சூரியன் அல்ல, இரண்டு சாட்சிகள் மனிதர்கள் அல்ல, அக்கினி அக்கினியல்ல. வேதத்தில் அக்கினி அழிவைக்குறிக்கவும், ஒருசில இட்ங்களில் பரிசுத்தப்படுத்துவதைக்குறிக்கவுமே பயன்படுத்தப்ப்ட்டுள்ளது. எரியும் நெருப்பில் எதைப்போட்டாலும் அழிந்துபோய்விடும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. மேலும் இந்த சதாகாலங்களிலும் என்ற பதத்திற்கு கிரேக்க பதத்தில் forever and ever என்ற அர்த்தம் இல்லை.

நம்முடைய புரிந்துகொள்ளுதலின் பிரச்சனை என்னவென்றால் காலா காலமாக நம்முடைய அறிவில் பதிந்துள்ள தவறான பதிவுகளை ஆதாரமாக வைத்து செயல்படுகிறோம்.

உதாரணம்: கோதுமை, பதர், கோதுமை, களை உவமையை எடுத்துக்கொள்வோமே.


நம்முடைய புரிந்து கொள்ளுதல்:‍

கோதுமை ‍‍‍= பரிசுத்தவான்கள், விசுவாசிகள், ஆண்டவருக்கு உகந்தவர்கள்

பதர், களை = பாவிகள், 'இரட்சிக்கப்படாதவர்கள்'

அக்கினி = அக்கினி



என்ன ஒரு அநியாயம் பார்த்தீர்களா?
ஆக ஒருசில விஷயங்களி நேரடி அர்த்தமாகவும், மற்றவைகளை மறைமுக அர்த்தமாகவும் கொண்டால் வேடிக்கையும், வினோதமுமாக இருக்கும். தேவன் வெள்ளாடுகளைத்தானே தண்டிக்கப்போகிறார் அதனால் மனிதனாகிய எனக்கென்ன என்று கூட நாம் கூறலாமே? உங்களது கூற்றுப்படியே பார்த்தால் 'ஆத்துமா' என்றால் என்ன? அதற்கு வடிவம் உண்டா? சரீரமற்ற நிலையில் அது எப்படி பார்க்க, பேச, உணர முடியும்? அப்படி அதற்கு இதெல்லாம் இருக்கும்பட்சம் அதுவும் மூச்சுவிடவேண்டும், சாப்பிடவேண்டும், தூங்கவேண்டுமே? இவைகளெல்லாம் இருக்கும் பட்சம் அதுவும் வயதாகி மரிக்கவேண்டுமே.

தேவன் 'மனிதனை' மனிதனாகவேதான் படைத்தார் என்று வேதம் சொல்லுகிறது. ஆக ஒரு மனிதன் மனிதனாக இருப்பதற்கு அவனுக்கு 'மாமிச சரீரம்' அவசியம். அவன் மீண்டும் மாமிச சரீரத்தில் 'உயிர்த்தெழும்போது'தான் existence க்கு வருகிறான்.

நீங்களே ஆத்துமாவைக் கொல்ல முடியும் என்கிறீர்கள், அதேசமயம் நித்திய வாதைதான் அழிவு என்கிறீர்கள். ஒருவன் உயிரோடிருந்து வாதிக்கப்படும்போது அதைப்போய் அழிவு என்று கூறுவது குழப்பத்தை விளைவிக்கும் கூற்றாகும்.

இயேசுகிறிஸ்து சொன்ன அந்த வசனத்துக்கு உள்ளான அர்த்தம் மனிதன் உன் ச‌ரீரத்தை மாத்திரம் கொல்ல முடியும்(முதல் மரணம்), அவனால் நீ மறுபடியும் உயிர்த்தெழுந்து வாழப்போகும் வாய்ப்பைத் தடுக்க முடியாது, ஆனால் உயிர்த்தெழுந்த பின்பும் தேவனுடைய ராஜ்ஜியத்தில் தகுதியடையாவிட்டால் நீ இரண்டாம் மரணமாகிய நித்திய அழிவுக்குப் போய்விடுவாய், அதன்பின் வேரொரு 'உயிர்த்தெழுதல்' இல்லை என்பதாகும்.
"ஒருவன் ஏன் வார்த்தையை கைகொண்டால் அவன் என்றென்றும் மரணத்தை காண்பதில்லை என்றுதான் இயேசுகிறிஸ்து சொன்னாரேயன்றி அவன் 'ஆத்துமா' மரணத்தைக் காண்பதில்லை என்று சொல்லவில்லை.

"பாவம் செய்கிற ஆத்துமாவே சாகும்" எசே18;4,20 என்று வேதம் கூறுகிறது. இதனை "பாவஞ்செய்கிறவன் சாவான்" (Refer GoodNews Bible) என்று தமிழிலும் சரியாக மொழிபெயர்த்திருந்தால் இந்த ஆத்துமா பிரச்சனையே வந்திருக்காது.
மனிதன் நித்திய் நித்தியமாக பூமியில் ஒரு மாமிச சரீரத்தோடு வாழவே தேவன் படைத்தார் அதை கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக நிறைவேற்றப்போகிறார், மரித்த அத்துனை மானிடரும் எழுப்பப்பட்டு இரட்சிக்கப்பட(நித்திய அழிவாகிய இரண்டாம் மரணதிலிருந்து)ப்போகிற அந்த மாபெரும் நிகழ்வைத்தான் பரலோக ராஜ்ஜியம் என்று வேதம் முழுவதும் எழுதப்பட்டுள்ளது.

இதுவே "எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தி" லூக்2:10 ஆகும். மனிதன் தான் ஆத்துமாவேயன்றி, மனிதசரீரத்துக்குள் ஆத்துமா இல்லை. MAN IS A SOUL NOT MAN 'HAS' A SOUL.




__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

தமிழ் மொழிப்பெயர்பான நரகம் என்கிற வார்த்தையின் ஆங்கிள வார்த்தையான ஹெல் (Hell) க்கு என்ன அர்த்தம்!?

வெப்ஸ்டர்ஸ் அகராதி மூன்றாம் பதிப்பில், ஹெல் (Hell) என்கிற வார்த்தை "ஹெலன்" (helan) என்கிற வார்த்தையிலிருந்து மருவி வந்த வார்த்தை. இதன் அர்த்தம் "முழுதும் மறை , நன்கு மறைத்துவை" (concealed, hidden). இந்த வார்த்தை எந்த விதத்திலும் உஷ்னத்தையோ, அக்கினியையோ, அவியாத அக்கினியையோ, நித்திய அக்கினியையோ அர்த்தமாக கொண்டது கிடையாது!! பழம்காலத்து ஆங்கிளத்தில் "ஹெல்லிங் பொடெடோஸ்" (Helling potatoes) என்றால் உருளைக்கிழங்குகளை தீயில் இடுவது என்று இல்லை, உருளைக்கிழங்குகள்கை  பத்திரப்படுத்தி அல்லது மறைத்து வை என்றே அர்த்தம்!!

கோலிய‌ர் என்சைக்லோபீடியா (1986, பாக‌ம் 12 ப‌க்க‌ம் 26) இப்ப‌டியா "நர‌க‌"த்தை (Hell) குறித்து சொல்லுகிறது: முத‌லாவ‌து இந்த‌ வார்த்தை ப‌ழைய‌ ஏற்பாட்டின் ஷியோல் ம‌ற்றும் புதிய‌ ஏற்பாட்டின் ஹேட‌ஸ் என்ப‌த‌ற்கு உண்டான‌ ஆங்கிள‌ வார்த்தை. ஷியோல் என்றால் "ம‌ரித்தோரின் நிலை" அல்ல‌து "ம‌ரித்த‌வ‌ர்க‌ள் வைக்க‌ப்ப‌ட்டிருக்கும் இட‌ம்" என்ப‌தை அனைவ‌ரும் அரிந்திருக்கிற‌ப்ப‌டி, ஷியோலுக்கும் இன்று பிர‌ப‌லமாக‌ அர்த்த‌ம் அவியாத‌ அக்கினியான‌ இட‌த்திற்கும் கொஞ்ச‌ம் கூட‌ ச‌ம்ப‌ந்த‌மே கிடையாது.

இன்று நரகத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கும் அர்த்தம் டாண்டேயின் "டிவைன் காமெடி" மற்றும் மில்டனின் "பாராடைஸ் லாஸ்ட்" என்கிற புத்தகங்களில் இருந்து வந்த அர்த்தமாகும், இது மூல அர்த்தமான "முழுவதும் மறைவானது"ஐ விட்டு சுத்தமாக திசை திருப்பும் அர்த்தமாகும். க்ரோலியர் யுனிவர்சல் என்சைக்லோபீடியா (1971, பாகம் 9 பக்கம் 205) நரகம் (Hell) என்கிற தலைப்பின் கிழ் இப்படியாக சொல்லுகிறது,: "ஹிந்துக்களும், பெளத்தர்களும் "நரகம்" என்பதை "ஆவியில் சுத்திகரிப்பும், நிரந்தர வாசம் செய்யும் ஒரு இடம்" என்றும், "இஸ்லாத்தில் நித்திய தண்டனைக்கு உண்டான இடம்" என்றும் இருக்கிறாது. மரணத்திற்கு பிறகு உண்டாகும் வேதனைகளை குறித்து எகிப்த்து மற்றும் பாபிலோனிய புறஜாதி மதங்களிலும் உண்டு. பாபிலோனிய மற்றும் அசீரிய நம்பிக்கைகளில், "கீழான உலகம்....பயம் நிறைந்த இடம்....பிசாசுகளும் அவர்களின் கடவுள்கலும் ஆளுகை செய்த்து அக்கினி நிறைந்த இடம்" என்றும் உண்டு. எகிப்த்தியர்களின் மத புத்தகங்கள் 'அடுத்த உலகம்" என்றால் அக்கினி நிறைந்த குழி என்றும், சபிக்கப்பட்டவர்களுக்கான இடம்" என்று இருக்கிறது ஆனால் "என்றென்றும் எரிந்துக்கொண்டிருப்பார்கள்" என்பதை அவர்களின் புத்தகங்களும் சொல்லுவதில்லையாம். ஆதாரம்:மாரிஸ் ஜாஸ்ட்ராவ் எழுதிய பாபிலோனிய அசீரிய மதங்கள் என்கிற புத்தகதில் 581ம் பக்கம் மற்றும் 1960ல் வந்த "மரித்தோரின் புத்தக"த்தின் (The Book of Dead) 135 முதல் 200 பக்கங்கள் வரை.

தொடரும்.........



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Veteran Member

Status: Offline
Posts: 46
Date:

Take adam as example. Command may cause to sin. Sin cause to death. Death cause to grave. Grave cause to under world . Just reverse as jesus. Under world to grave. Grave to death. Death to sin. Sin to command. All become as adam's. Another test. Amen

__________________
T.balaji


Veteran Member

Status: Offline
Posts: 80
Date:

பொதுவாக இன்று எல்லா மதங்களின் (கிறிஸ்துவர்கள் உட்பட) ஓட்டுமொத்த நம்பிக்கை என்னவெனில் நரகம் என்பது பாவஞ்செய்த ஆத்மாக்களை கடவுள் நித்திய அக்கினியிலே போடுவித்து அவர்களை சதாகாலமும் வாதிப்பார் என்றே நம்புகின்றனர். மேலும் மனிதனை தேவன் சிருஷ்டிப்பதற்கு முன்பே, கோடிக்கணக்கான மக்களை வதைக்க தேவையான இடமாகிய நரகத்தை படைத்தார் எனவும் சிலர் விசுவாசிக்கின்றனர். அதுமாத்திரமல்ல சாத்தானே நரகத்திற்கு பொறுப்பாளியாகவும் அவனுடைய கையில் நரகத்தின் திறவுகோல் இருப்பதாகவும், அவருடைய வீடு எரிகின்ற அக்கினியின் நடுவில் இருப்பதாகவும் நம்புகின்றனர்.மேலும் நரகத்தில் மனிதனை போடும்போது அவனுடைய உடல் வேகாமலும் அதே சமயத்தில் உயிரோடு வேதனை தருவதாகவும் சதாகாலங்களிலும் தருவதாகவும் சிலர் நம்புகின்றனர். இன்று அநேக ஊழியக்காரர்கள் நரகம் சென்று பார்த்ததாகவும் அங்கு கோடானகோடி ஜனங்கள்“ஐயோ” “அம்மா” என ஓயாமல் கூச்சலிட்டு வருவதாகவும் பிரசங்கங்களிலும், புத்தகங்களிலும் எழுதி வருகின்றனர்.ஜனங்களில் அநேகர் நரக வேதனைக்கு பயப்பட்டு இயேசுவை ஏற்றுக் கொள்கின்றனர். சகோதர, சகோதரிகளே! இவைமட்டுமல்லாது சில ஆலயங்களில் நரகம் பற்றிய கார்ட்டூன், படங்கள் இன்று கூட மாட்டி வைத்துள்ளனர்.அவ்வாறிருக்கும் போது ஓரு சிந்திக்கும் கிறிஸ்தவன் இது பற்றிய முழுமையான ஆராய்ச்சி செய்து வேதம் இது சம்பந்தமாக மகா பரிசுத்தமான விசுவாசமாயிருக்கமல்லவா!. அநேகர் இது சம்பந்தமான ஆராய்ச்சி இல்லாமல் இருப்பதை நாம் இவ்வுலகில் காணமுடிகிறது. இப்போதும் மிகவும் கவனத்துடன் ஆராய முயற்சிப்போம். வேத ஆராய்ச்சிக்கு செல்லுமுன் இவ்விஷயத்தைப் பற்றி மனித பார்வையில் முதலில் அலசுவோம்.உலக நீதிமன்றத்தில் நகை திருடிய திருடனுக்கு விசாரணை நடைபெற்று வாத பிரதிவாதம் முடிவடைந்தவுடன் அவருக்கு மரண தண்டனை விதித்தனர்.ஏனெனில், அப்போதுதான் மற்ற யாரும் அதுபோன்ற செயல்களை செய்யமாட்டனர் என முடிவு செய்தனர். உடனே ஜனங்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து, ஓருவரை கொலை செய்தவருக்கு என்ன தண்டனை கொடுப்பீர்கள் என கேட்டனர். ஆகவே, நகை திருடியவருக்கு அவர் திருந்தி வாழும் வகையில் அவருக்கு ஓரு நீதியான தீர்ப்பு வழங்க வேண்டினர். அதுமட்டுமல்ல, இன்று உலகில் இலட்சம் பேரை கொலை செய்தவருக்கு சில நாட்கள் சென்று மரணதண்டனை கொடுக்க திட்டமிடும் போது உலகமே அதை எதிர்க்கின்றதே! பாவி ஜனங்களுக்குள்ளேயே நீதியான தீர்ப்பு, மன்னிப்பு, அன்பு இருக்கும்போது மகாபரிசுத்தமான தேவனை சற்று யோசித்துப்பாருங்கள். சங்கீதம் – 89:14 ல், “நீதியும் நியாயமும் அவருடைய சிங்காசனத்தின் ஆதாரம்” என்று வாசிக்கிறோம். உலகில் பாவியில்லாமல் பரிபூரண மனிதன் யாரேனும் உண்டா? முதலில் யோசிக்க வேண்டும். ரோமர் – 3:9-11, 2 நாளாகமம் – 6:36. ஆக பாவியான ஓரு மனிதனுக்கு நீதியான தண்டனைதான் என்ன?மற்றுமொரு உதாரணம்v மனிதனுக்கு ஓரு நாள் என்பது 24 மணி நேரம்.v உறக்கத்திற்கு 8 மணிநேரம். இதில் பாவஞ் செய்ய முடியாது.v வேலைக்காக 8 மணிநேரம். இதிலும் பாவம் அதிகம் செய்ய முடியாது.v காலைக்கடன்கள் மற்றும் உணவிற்கு 2 மணிநேரம்.ஆக, 1 நாளில் 6 மணிநேரம் மாத்திரமே மீதம் உள்ளது. இதில் தொடர்ந்து பாவஞ்செய்தால் ஓருவருடைய வாழ்க்கையில் எத்தனை வருடங்கள் பாவஞ்செய்யலாம்.1 நாளைக்கு 6 மணிநேரம் என்பது ¼ நாளாயிருக்கும் போது ஓருவர் 80 வருடம் உயிர்வாழ்ந்தால் (குழந்தை மற்றும் முதுமை பருவம் உட்பட) சராசரி 20 வருடம் பாவஞ்செய்ய முடியும். ஆக, 20 வருட பாவத்திற்கு கோடி கோடி ஆண்டுகள் நித்திய அக்கினி வேதனை ஸ்தலத்தில் தண்டனை தந்தால் அது நீதியான தீர்ப்பாக அமையுமா? பாவத்தின் சம்பளம் நரகம் என்று வேதம் சொல்கிறதா? இல்லை. ரோமர் – 6:23 ன் படி,“பாவத்தின் சம்பளம் மரணம்” ஆகும். ஆக, இதுபற்றி தேவனுடைய வசனத்தில் தெளிவான ஆராய்ச்சி செய்வது மிகமிக முக்கியமானது என இப்போது புரிந்திருப்பீர்கள். நரகம் (Hell)என்பது ஓரு ஆங்கில வார்த்தையாகும். தமிழில் நரகம் என்பது நரர்+அகம் = நரகம். அதாவது மனிதர் இருக்கும் இடம். ஆங்கிலத்தில் இதனுடைய உண்மையான பொருள் “Hell” – “to Cover” or to “ Conceal” புதைத்தல் அல்லது மறைத்தல் என்றே பழைய ஆங்கில அகராதியில் தரப்பட்டுள்ளதை காண்க. அக்காலங்களில் விவசாயிகள் இவ்வார்த்தையை பயன்படுத்தினர் எவ்வாறெனில், “I must hell my Potatoes as in burying them in the ground”.“அதாவது விதைக்கிழங்குகளை நான் மண்ணில் புதைக்கிறேன்” என்பதாகும். மேலும் வீட்டிற்கு கூரை வேய்வதற்கு “I must hell my house” என்று கூறுவார்கள். ஆனால், இக்காலங்களில் இதன் பொருள் “நித்திய வேதனை ஸ்தலம்” என அர்த்தம் மாற்றப்பட்டுள்ளது. இப்போது வேதம் கூறுகிற நரகம் பற்றிப் பார்ப்போமா? ரோமர் – 6:23 ல், “பாவத்தின் சம்பளம் மரணம்” என்றே தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆங்கில் வேதாகமத்தில் 4 வார்த்தைகள் மூல பாஷையிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அவை பழைய ஏற்பாட்டில் ஓரே ஓரு எபிரேய வார்த்தையும், புதிய ஏற்பாட்டில் 3 கிரேக்க வார்த்தைகளாகும்.பழைய ஏற்பாடுபுதிய ஏற்பாடு(எபிரேய)சீயோல் (SHEOL) (கிரேக்க)1. ஹேடிஸ் (Hades)2. டார்டாரு (Tartaroo)3. கெஹன்னா (Gehanna) இந்த வார்த்தைகளில் ஆராய்ச்சியே நமக்கு நரகம் பற்றிய சத்தியம் புரிந்து கொள்ள வைக்கும். Hell நரகம் என்ற வார்த்தை மட்டும் இரு ஏற்பாட்டிலும் சேர்த்து 53 தடவைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. (பழைய ஏற்பாட்டில் 31 முறையும், புதிய ஏற்பாட்டில் 22 முறையும்) (Ref : STRONG’S CONCORDANCE FOR HEBREW & GREEK WORDS) முதலில் பழைய ஏற்பாட்டில் வரும் SHEOL என்கிற வார்த்தை மொத்தம் 65 முறை வருகிறது. 31 முறை நரகம் என்றும், 31 முறை பாதாளம் (Grave) என்றும், 3 முறை குழி (Pit) என்றும்,மொத்தம் – 65 முறை மொத்தமாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. SHEOL - என்றால் – World of dead – grave, hell, pit (மரித்தவர்களின் உலகம், பாதாளம், நரகம், குழி என்று பொருள்படும். Ref : Strong’s – Heb. Concordance Page 111 No. 7585. 65 முறை வரும் சீயோல் என்ற வார்த்தை 65 முறையும் ஓரே விதமாக மொழிபெயர்க்கப்படாமல் நரகம், பாதாளம், குழி என்று மூன்று வகைகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. American Standard version, Revised Standard version, Lamsa version - போன்ற மொழிப்பெயர்ப்புகளில் SHEOL (சீயோல்) என்ற வார்த்தை மொழிப்பெயர்க்கப்படாமல் அப்படியே போடப்பட்டுள்ளது.ஏனெனில், தேவனுக்கு பயந்த மொழிப்பெயர்ப்பாளர்கள் மேல் வந்த நிர்பந்தத்தின் நிமித்தம் அவர்கள் பொய் சொல்ல விரும்பாமல் அப்படியே அவ்வார்த்தைகளை போட்டு விட்டனர். 65 முறை வரும் வார்த்தை முழுமையாக ஆராய்ச்சி செய்ய வேண்டும். ஆனால், நாம் முக்கியமான 9 இடங்களில் வருவதையே ஆராய்வோம். சங்கீதம் – 9:17 ல், “துன்மார்க்கரும் தேவனை மறக்கிற எல்லா ஜாதிகளும் நரகத்திலே தள்ளப்படுவார்கள்”. ஆனால்,NIV பைபிளில் பார்க்கும்போது, “All the wicked shall Return to grave” என்று வருகிறது.அதாவது, ஏற்கனவே, நாம் சில பாடங்களில் பார்த்தபடி மனிதன் இப்போது மரித்தபின் 1000 வருட ஆட்சியில் உயிர்தெழுதல் வாய்ப்பும், பின் ஓவ்வொரு தனி நபரின் தனித்தனி நியாயத்தீர்ப்பு (அதாவது மீண்டும் சுயாதீனப்படி, சத்தியத்தை ஏற்று நடக்கும் வாய்ப்பு) நடக்கும் போது மனப்பூர்வமான பாவிகள் மீண்டும் கல்லறைக்கே திரும்புவார்கள் என்பதே மேற்சொன்ன வசனத்தின் பொருளாகும். ஆதியாகமம் 37:35 ல், யோசேப்பின் மரணம் அவன் தகப்பனுக்குத் தெரிவிக்கப்படும் போது, ....நான் துக்கத்தோடே என் குமாரனிடத்தில் பாதாளத்தில் இறங்குவேன் என்றான்... இங்கு மகன் யோசேப்பு மரித்ததால் தானும் அவ்வாறே மரிக்க விரும்புவதையே அவ்வாறு தெரிவிக்கிறார் என்பது புரிகிறது.

இவ்விரு வசனங்களிலும், சீயோல் என்ற வார்த்தை பாதாளம், கல்லறை, குழி என்று பொருள்படுகிறதே தவிர கொழுந்து விட்டு எரியும் அக்கினியாக எவ்வாறு எடுத்துக் கொள்ள முடியும். மேலும், அக்கினி இருக்கும் இடத்தில் வெளிச்சம் இருக்க வேண்டுமெயொழிய, யோபு 10:21 ல்,காரிருளும் மரணந்தகாரமுமான இருண்ட தேசமும், ஓளியும் இருளாகும் தேசமுமாகிய, போனால் திரும்பிவராத தேசத்துக்கு நான் போகுமுன்னே,.... என்று உள்ளதை கவனிக்கவும். மேலும், நரகத்தில் பாவிகள் துன்மார்க்கனின் ஓயாத கூச்சலும் வேதனையும், குழப்பமும் இருக்கும் என விசுவாசித்தால் தேவனுடைய வசனத்தில், சங்கீதம் 31:17 ல், ......துன்மார்க்கர் வெட்கப்பட்டுப் பாதாளத்தில் (SHEOL) மவுனமாயிருக்கட்டும்.சங்கீதம் 115:17 ல், மரித்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் கர்த்தரைத் துதியார்கள்

மேலும், துன்பத்தில் மன உளைச்சலிலும் இருப்பதற்கு பதிலாக, சங்கீதம் 88:11,12 ல், பிரேதகுழியில் (SHEOL) உமது கிருபையும், அழிவில் உமது உண்மையும் விவரிக்கப்படுமோ? இருளில் உமது அதிசயங்களும் மறதியின் பூமியில் உமது நீதியும் அறியப்படுமோ? இங்கு மறதியின் பூமி என்று அழைக்கப்பட்டுள்ளதைக் காண்க.யோபு 14:13 ல், நீர் என்னைப் பாதாளத்தில் (SHEOL) ஒளித்து, உமது கோபம் தீருமட்டும் என்னை மறைத்து, என்னை திரும்ப நினைக்கும்படிக்கு எனக்கு ஓரு காலத்தைக் குறித்தால் நலமாயிருக்கும்.சங்கீதம் 86:13 ல், .......என் ஆத்துமாவைத்தாழ்ந்த பாதாளத்திற்குத் (SHEOL) தப்புவித்தீர்.Ref. Eng. KJV.

பிரசங்கி 9:10 ல், ......நீ போகிற பாதாளத்தில் செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.அதாவது ஓருவன் மரித்தால் அவன் இல்லாமல் போய் விடுவதையே குறிக்கிறது.யோனா 2:1-2 ல், ஓரு அருமையான விளக்கம் பார்க்கவும். .......நான் பாதாளத்தில் (SHEOL)வயிற்றிலிருந்து கூக்குரலிட்டேன். நீர் என் சத்தத்தைக் கேட்பீர்.Ref. KJV மீனின் வயிற்றை “Belly of Hell” என்று அழைக்கப்படுகிறது.ஆக, மீனின் வயிற்றை எரிகிற அக்கினி ஸ்தலம் என எடுத்துக் கொள்ள முடியுமா? இன்றும் பழைய ஏற்பாட்டில் வரும் மற்ற எல்லா வசன பகுதிகளையும் இணைப்பில் தரப்பட்டுள்ளது. ஆராயும்.ஆக, எல்லா கல்லறை தோட்டங்களிலும் நரகம் என்று போர்டு வைத்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும். இப்போது புதிய ஏற்பாட்டில் வரும் 3 கிரேக்க வார்த்தைகளைப் பற்றி ஆராய்வோம்.

1. Hades – (ஹேடீஸ்) இந்த வார்த்தையின் பொருள் என்னவெனில் SHEOL (சீயோல்) என்ற எபிரேயச் சொல்லின் அர்த்தமே சரியான இதனுடைய பொருளாகும். (உதாரணம்) எவ்வாறு தண்ணீர் என்ற தமிழ் வார்த்தைக்கு ஆங்கிலத்தில் Water என்றும், ஹிந்தியில் பாணி என்றும் கூறுகிறோமோ அதேபோல, சங்கீதம் 16:10 ல், வசனமும், அப்போஸ்தலர் 2:27 ல், வரும் ஓரே வசனமாயிருப்பதினால், என் ஆத்துமாவை பாதாளத்தில் விடீர் (SHEOL)..... அப்போஸ்தலர் 2:27 ல், “Hades”ஆக இரண்டும் ஓரே அர்த்தமே உள்ளது என தெளிவாக புரிந்துகொள்ளலாம்.

அப்போஸ்தலர் 2:31 ல், நம் கர்த்தர் கூட நரகம் அல்லது ஹேடீஸ்-ல் மூன்று நாட்கள் இருந் தார் என்றால் மூன்று நாள் மரித்த நிலைமையில் இருந்தார் என்றே பொருள்படுகிறது. நரகத்தின் திறவுகோல் சாத்தானுடைய கையில் உள்ளது என அனைவரும் விசுவாசிக்கும் போது,வெளி 1:18 ல், இயேசு கூறும்போது, .......நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவு கோல்களை உடையவனாயிருக்கிறேன்.என்று கூறுகிறாரே. இதன் பொருள் என்ன?

திறவுகோல் : 1மரணம் இந்த யுகமுடிவில் மரண நிலையில் இருக்கும் உயிரோடே மரித்தோரை குறிக்கும். லூக்கா 9:60 ல், மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும். அதாவது அம்மாதிரியான ஜனங்களை ஜீவனுக்கு கொண்டு வரும் திறவுகோல். 2 தீமோத்தேயு 4:1 ல், .......உயிரோடிருக்கிறவர்களும், மரித்தவர்களும்.....

திறவுகோல் :2. பாதாளம் / Hadesகல்லறைக்கே சென்று விட்ட மரித்தோர் இவர்களையும் நம் கர்த்தர் மீண்டும் உயிரடையச் செய்யும் திறவுகோல், ஆங்கிலத்தில் Rev : 1:18ல், And have the keys of “hell and death” Ref : KJV Eng.

மேலும், மத்தேயு 11:23 ல், .......வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாள பரியந்தம் தாழ்த்தப்படுவாய்......மேலும், லூக்கா 10:15 ல், Ref: KJV Eng. “Shall be thrust down to hell (Hades). இங்கு நாம் இஸ்ரயேலில் இருந்த ஓரு பட்டணத்தைக் குறித்து பார்க்கிறோம். இப்பகுதியிலே நம் கர்த்தர் அநேக காரியங்களையும் பிரசங்கங்களையும் இங்கு செய்த படியினால், (லூக்கா 17:24) இப்பட்டணம் அறிவிலும், ஞானத்திலும் சிறந்து விளங்கியதால், இது வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே என்று சொல்லப்பட்டுள்ளது.ஆனால், இப்பட்டணம் (ஜனங்கள்) தேவனுடைய சகாயங்களை மறுதலித்துப் போனதினால், இது கர்த்தரால் சபிக்கப்பட்டது. மேலும், இப்பட்டணம் உண்மையில் இருந் ததா என்று சொல்லுமளவிற்கு முற்றிலும் அழிக்கப்பட்டது.

புதைபொருள் ஆராய்ச்சியாளர்களில் கூட கண்டுபிடிக்கப்படாமல் போனது. ஆக, இப்பட்டணம் Brought down to hell” எனும்போது நகரத்தின் அழிவை அல்லது இல்லாமல் போவதையே குறிக்கிறது.மத்தேயு 16:18 ல், கர்த்தர் பேதுருவிடம், ........நீ பேதுருவாய் இருக்கிறாய். இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் (Hades) – (in Eng. Hell) வாசல்கள் அதை (சபை) மேற்கொள்ளுவதில்லை. எனும்போது சுவிசேஷம் யுகத்தில் சபையில் அநேகம் பரிசுத்தவான்கள் (சபை) இரத்த சாட்சிகளாக மரித்தாலும், கர்த்தரின் வல்லமையினால் சபை கல்லறையிலிருந்து மிகவும் உன்னதமான உயிர்த்தெழுதலை பெறும் என்பதே இவ்வசனத்தின் மிகச்சரியான பொருளாகும்.மேலும், நரகத்தில் மக்கள் சென்றுவிட்டால் விடுதலையே கிடையாது என்பதே இன்று அநேகரின் விசுவாசம். ஆகவே, தேவனுடைய வசனத்தில் ஆராய்ந்தால்,

வெளி 20:13,14 ல், ......மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஓப்புவித்தன.Ref in Eng. KJV→ And the Sea gave up the dead which were in it; and death and hell (grave) delivered up the dead……And death and hell (the grave) were cast into the lake of fire. This is the second death.”

இங்கு நரகத்திலிருந்து மக்கள் வெளியே வருவதோடு மரணமும் நரகமுமே அக்கினிக்கடலில் தள்ளப்பட்டன எனும்போது நரகமே அக்கினிகடலாக இருக்கும்போது மற்றுமொரு அக்கினிக்கடலில் தள்ளப்பட வேண்டுமா? இதன்பொருள் என்னவெனில் 1000 ஆம் ஆண்டு அரசாட்சியின் முடிவில் கடைசி சத்துருவாகிய மரணத்தை நிரந்தரமாக இவ்வுலகில் இல்லாமல் செய்வதையே குறிக்கிறது. 1 கொரிந்தியர் 15:26 ல், பரிகரிக்கப்படும் கடைசி சத்துரு மரணம்வெளி 21:4 ல், இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை முந்தினவைகள் யாவும் ஓழிந்து போயின என வாசிக்கிறோம். 

CON. NEXT PAGE



-- Edited by Guru on Friday 11th of March 2011 02:11:13 PM

-- Edited by Guru on Friday 11th of March 2011 02:13:38 PM

-- Edited by Guru on Sunday 13th of March 2011 11:14:17 PM

__________________



விசுவாசிகிறவனுக்கு எல்லாம் ௬டும் ...


Veteran Member

Status: Offline
Posts: 80
Date:

PLS CON.

2. Gehenna(கெஹன்னா) இது புதிய ஏற்பாட்டில் வரும் 2-வது கிரேக்க வார்த்தையாகும், இதுவும் நரகம் என்றே 12 முறை மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. நாம் ஓரே ஓரு வசனப்பகுதியை ஆராய்ந்தால் இதன் விளக்கமும் எளிதாக புரிந்து கொள்ளலாம்.மாற்கு 9:43 - 48 வசனங்களில்,உன் கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத் தறித்துப்போடு. நீ இரண்டு கையுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்தில் போவதைப் பார்க்கிலும், ஊனனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.இப்பகுதியில் வந்துள்ள அவியாத அக்கினியுள்ள நரகம்மூல பாஷையில் கெஹன்னா Gehennaஎன்ற வார்த்தை வருகிறது. Ref. Strongs Exh. Concordance under the Caption “Hell”.

கிரக்க பாஷையில், கெஹன்னா என்பதை எபிரேயு பாஷையில் HINNOMஇன்னோம் பள்ளத்தாக்கு என அழைப்பர். இப்பள்ளத்தாக்கு எருசலேம் நகருக்கு வெளியில் பட்டணத்தினுடைய கழிவுகள், குப்பைகள், இறந்து போன மிருகங்களின் உடல்கள், சிலுவையில் மரித்துப் போன குற்றவாளிகளின் உடல்கள், இப்பள்ளத்தாக்கில் போடப்பட்டு எரிக்கப்படும். கழிவுகள், குப்பைகள் உயரமானவுடன் நெருப்பு வைக்கப்பட்டு குறைக்கப்படுவதுடன், நெருப்பில் அழியாத பொருட்கள், உடல்களில் புழுக்கள் தோன்றி அவைகளை அழிக்கும். உயிருள்ள எந்த பொருளும் அதில் போட அனுமதியில்லை.

பழைய ஏற்பாட்டின் காலத்தில், இப்பள்ளத்தாக்கில் இஸ்ரயேல் ஜனங்கள் தோப்பேத் என்னும் விக்கிரக கடவுளுக்காக தங்கள் குழந்தைகளை அக்கினியில் போட்டார்கள். (எரேமியா 7:31 ல், வாசித்தறியவும்.) மேலும், எரேமியா 32:35 ல், இஸ்ரயேல் ஜனங்கள் மோளேகுக்கென்று இப்பள்ளத்தாக்கில் தங்கள் குழந்தைகளை தீக்கடக்கப்பண்ணினார்கள். அவர்கள் இந்த அருவருப்பான காரியத்தை செய்ய வேண்டுமென்று நான் அவர்களுக்கு கற்பித்ததுமில்லை. அது என் மனதிலே தோன்றினமில்லை என தேவன் கூறுகிறார்.இவ்வாறு செய்து வந்த இஸ்ரயேல் ஜனங்களே, பின்பு இது அருவருப்பான தேவனுக்கு விரோதமான காரியம் என்று எண்ணி, அப்பள்ளத்தாக்கையே பின்பு குப்பை கூளம் போடும் இடமாக்கினார்கள். இதுவே கெஹன்னா (Gehenna) ஆகும்.

இவ்வசனப் பகுதியில் அக்கினி அவியாமலும், புழு சாவாமலும் இருக்கும் எனும் போது இப்பள்ளத்தாக்கில், எப்போதும் அக்கினி புகைந்து கொண்டும், நெருப்பில் அகப்படாத பொருட்களில் புழுக்கள் சாகாமலும் இருந்து கொண்டே இருக்கும். ஆக, அக்கினியும், புழுவும் ஓரு பொருளின் அழிவின் வேலையை ஓயாமல் செய்து கொண்டிருக்கும் என்பதே, நம் கர்த்தர் இங்கு கூறினதின் பொருளாகும். மேலும் இவ்வசனப் பகுதியை சொல்லர்த்தமாக எடுத்துக் கொண்டால் என்ன ஆகும் என்பதை யோசிக்க வேண்டும்.நாம் அனைவரும் கையில்லாதவர்களாகவும், கண், கை, கால் இல்லாதவர்களாகவும் இருக்க வேண்டும். ஏனெனில் நம் உடலே நமக்கு எவ்வளவு முறை இடறல் உண்டாக்குகிறது என்று உணர வேண்டும். ஊனமாய் தேவனுடைய இராஜ்யத்தில் யாராவது பிரவேசிப்பார்களா?

ஆக, இப்பகுதியானது அடையாள மொழியில் அல்லது உவமை பாணியில் நம் கர்த்தரால் சொல்லப்பட்டுள்ளது. மேலும், இப்பகுதியானது தம்முடைய சீஷர்களுக்கு அவரால் சொல்லப்பட்டது.வசனம் 43 ல், கையைத் தறித்துவிடு எனும்போது உண்மையான கிறிஸ்துவின் உபதேசம் கேட்டு அவரை பின்பற்ற முடிவெடுக்கும்போது நம் பழைய உலகத்தின் பிரகாரம் நண்பர்கள் (வலது கை, இடது கை) நம்மை பாவ வழிக்கு அழைத்தால் உடனடியாக அவர்களுடைய பழக்கங்களை வெட்டி விடுவதையே குறிக்கிறது. ஆனால், இது அநேகருக்கு இக்காலங்களில் மிகவும் கடினமான ஓன்று.

வசனம் 45 ல், கால் உனக்கு இடறல் உண்டாக்கினால் அதை தறித்துவிடு எனும்போது, கிறிஸ்துவுக்குள் வரும் முன்பு, நாம் சென்ற அநேக பாவ இடங்களையே குறிக்கிறது. இப்போது நாம் அப்பழக்கங்களை நிறுத்திவிடுவதையே குறிக்கிறது. சில இரகசியமாக கூட இவ்விடங்களுக்கு செல்லும் பழக்கத்தை தாமாகவே விட்டுவிட வேண்டும். வசனம் 47 ல், கண் என்று குறிப்பிடுவது, கிறிஸ்துவின் உபதேசம் ஏற்றுக் கொள்வதற்கு முன் நம் பார்வை அல்லது கண்களின் இச்சைப்படி நடந்திருப்போம். ஆனால், இப்போது இரகசியமாகக் கூட நம் பார்வை இருக்கக் கூடாது என்பதையே இங்கு விளக்குகிறார்.

கிறிஸ்துவின் உபதேசம் கேட்டு அதே நேரத்தில் உபயோகமில்லா தொலைக்காட்சி நிகழிச்சிகளை இச்சையுடன் எல்லார் முன்பாகவோ, அல்லது இரகசியமாகவோ பார்த்தால் அது கிறிஸ்துவைப் பின்பற்றும் வழியா?ஆக, இங்கு உபயோகப்படுத்தப்பட்ட அக்கினியும், புழுவும் இரண்டாம் மரணத்தையே குறிக்கிறது. பார்ப்பதற்கு முதல் மரணமும், இரண்டாம் மரணமும் (First & Second Hell) ஓரே மாதிரி தோன்றினாலும் இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது. எப்படியெனில், இப்போது யார் மரணமடைந்தாலும் அவர்கள் கல்லறைக்கு செல்கின்றனர் (Hell). ஆனால், மீண்டும் உயிரடையலாம். ஆனால், 1000 ஆண்டில் எல்லா வாய்ப்புகளும் அளிக்கப்பட்டு, மனப்பூர்வமாய் பாவஞ்செய்பவர்களுக்கு இனி உயிர்த்தெழுதலே இல்லை, இது இரண்டாம் மரணம் இதுபற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.

மத்தேயு 10:28 ல், ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டாம், ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே (கெஹன்னா) அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள் எனும்போது, மீண்டும் ஜீவன் இல்லாமல் செய்ய மனிதருக்கு சாத்தியம் இல்லை. ஆனால், மனப்பூர்வமாய் பாவஞ்செய்கிறவர்களை முற்றிலும் அழிக்க தேவனுக்கு அதிகாரம் உண்டு.வெளி 21:3ஏசாயா 26:10 என்பதையே இங்கு காட்டுகிறது. இதில் சாத்தானும் அவனை பின்பற்றும் தூதரகளும் அடங்குவர். வெளி 20:9மத்தேயு 25:4. இது தெளிவாக இரண்டாம் மரணத்தையே குறிக்கிறது. இதுவே பாவிகளின் நித்திய நியாயத்தீர்ப்பு ஆகும். எக்காலத்திலும் தேவ திட்டத்தில் பாவத்தின் சம்பளம் மரணமேயாகும். ரோமர் 6:23. இம்மரண நிலையே வேதத்தில் நரகம், பாதாளம், குழி என சொல்லப்பட்டுள்ளதே தவிர, அவியாத அக்கினி என புரிந்து கொள்வது எவ்வாறு ஏற்புடையதாகும்.

3. TartarooTartarus(டார்டாரூ) இவ்வார்த்தை கூட நரகம் என்றே மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால், வேதத்தில் ஓரே ஓரு முறை மட்டும் இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. 2 பேதுரு 2:4 ல், பாவஞ்செய்த தூதர்களைத் தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே (டார்டாரூ கிரேக்கு) தள்ளி நியாயத்தீர்ப்புக்கு ஓப்புக் கொடுத்து…”இங்கு, பேதுரு அப்போஸ்தலர் பயன்படுத்தியடார்டாரூ என்ற வார்த்தையை மொழி பெயர்ப்பாளர்கள் எவ்வாறு மொழி பெயர்ப்பது என புரியாமல, பாவஞ்செய்த தூதர்களாக இருப்பதினால் அவர்களுக்கு நரகம் என மிக தைரியமாக போட்டுவிட்டனர்.

பேதுரு அப்போஸ்தலர் பயன்படுத்திய இவ்வார்த்தை கிரேக்க புராணங்களில் டார்டாரஸ் / TARTARUS என்ற வார்த்தைக்கு ஏறத்தாழ பொருந்திவருகிறது. டார்டாரஸ் என்றால், சிறை அல்லது படுகுழி (DARK ABYSS or PRISON) என்று பொருள். ஆனால், டார்டாரூ Tartarooஎன்றால் ஓரு இடம் என்பதைவிட ஓரு செயலுக்கே பொருந்தி வருகிறது. (Refer More to an act than to a place). எபேசியர் 6:12 ல், ...வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின்.... என்றும், எபேசியர் 2:2 ல், சாத்தான் பற்றி, ....ஆகாயத்து அதிகாரபிரபுவாகிய... எனவும் வாசிக்கிறோம். ஆக, இங்கு சிறை அல்லது படுகுழி என தூதர்களுக்குச் சொல்லும்போது பரலோகமாகிய உன்னத வாசஸ்தலத்திலிருந்து பூமியை சுற்றியுள்ள ஆகாய மண்டலம் அவர்களுக்கு பாதாளம் ஆகும். ஆனால், மனிதருக்கு பாதாளம் என்றால் பூமிக்கடியில் (6 அடிநிலம்) குறிக்கிறது.

அந்தகாரச் சங்கிலிகளினால் கட்டி எனும்போது இருளில் அல்லது இரவு நேரங்களில் மாத்திரமே அவர்களால் சில நபர்கள் மூலம் (Mediums) (Witch craft) அஞ்சனம் மூலமும் கிரியை செய்யமுடியும். மரித்தவர் போன்று வருவது உட்பட அநேக வஞ்சகங்களை செய்வது, இவர்களின் நியாயத்தீர்ப்பு பற்றி,மத்தேயு 25:41 ல், அழிவே என வேதம் தெளிவாக கூறுகிறது. ஆக, இவ்வார்த்தையில் நித்திய வேதனை ஸ்தலம் அல்லது அக்கினி என்ற அர்த்தம் வருவதில்லை.நரகம் ஓரு நித்திய வேதனை ஸ்தலம் என நம்புகிறவர்கள் வேதத்தில் வரும் எட்டு வசனப்பகுதியை வைத்தே நம்புகின்றனர். ஆனால், இந்த எட்டு பகுதிகளும் ஆச்சரியமான அடையாள மொழியில் (Highly Symbolic) சொல்லப்பட்டிருக்கிறதே தவிர சொல்லர்த்தமான (Literal) முறையில் இல்லை. அதில் 2 இடங்களில், வெளி 14:10,11 மற்றும் 20:10.

வெளிப்படுத்தின விசேஷம் முழுவதும் அடையாள மொழியில் உள்ளது. இன்னும் 2 இடம் கர்த்தருடைய உவமையில் வருகிறது (மத்தேயு 25:31-46 மற்றும் லூக்கா 16:19-31). இன்னும் 2 இடம் (மாற்கு 9:42-48,49). ஓரு இடம் ஏசாயா 66:24, மற்றுமொருமிடம் யூதா 7 இவ்வசன பகுதியினை கவனமாக ஆராய்ந்தால் நித்திய வேதனை ஸ்தலமாக இல்லை. மாறாக, முழுமையான அழிவை (Extinction of Life) குறிக்கிறது. சங்கீதம் 145:20 ல்,துன்மார்க்கர் யாவரையும் அழிப்பார் என வாசிக்கிறோம்.மேலும், தேவன் தம்மை தொழுது கொள்ளுகிறவர்கள் தனக்கு பயந்து (Fear) தொழுது கொள்ள வேண்டுமென்று விரும்பாமல், யோவான் 4:24 ல், ....ஆவியோடும் (with sound mind) உண்மையோடும் தொழுது கொள்ளவேண்டும்.என்று விரும்புகிறார்.

வேதத்தில் நாம் எங்கு பார்த்தாலும் தேவன் அன்புள்ளவராக இருக்கிறார் எனும்போது பாவிகளுக்காக இயேசு மரித்து அவர்களை இரட்சிப்பார் என விசுவாசிக்கும் யாவரும், இந்த நித்திய வேதனை ஸ்தல உபதேசத்தினை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.மேலும், ஜனங்கள் தங்கள் குமாரரை தீக்கடக்கப்பண்ணுவதையே விரும்பாத தேவன் எவ்வாறு கோடிகோடி மக்களை அக்கினியில் விடுவார்? (உபாகமம் 18:9-14)யோவான் 3:16 ல், தன் குமாரனையே தந்து ஈடுபலியாக்கி மனிதருக்கு இரட்சிப்பு அருளியிருக்கிறாரே. மேலும், ரோமர் 5:8 ல், நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே தேவன் நம்மேல் வைத்த அன்பை தமது விளங்கப்பண்ணுகிறார்.ரோமர் 5:10 ல், நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஓப்புரவாக்கப்பட்டோமானால், ஓப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.

ஆகவே, எசேக்கியேல் 33:11 மற்றும் 18:32 வசங்களில், தேவன் துன்மார்க்கர்களுடைய மரணத்தை விரும்பாமல், அவன் தன் வழியை விட்டு திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன். நீங்கள் ஏன் சாக வேண்டும். என்கிறாரே, தேவனுடைய அளவற்ற அன்பு, நீதியான தீர்ப்பு யோசித்துப் பாருங்கள்.ஆகவே, நரகம் ஓரு நித்திய வேதனை ஸ்தலம் என்று கூறுவது சுலபம், ஆனால் அதை நிரூபிப்பது அவ்வளவு சுலபமானதல்ல, முடியாது. அப். பவுலும் கூட தன் நிருபத்தில் எந்தவொரு இடத்திலும் இது பற்றி பேசவேயில்லை என்பதைக் கருத்திற் கொள்க.எபிரேயர் 12:29 ல், நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே தவிர நெருப்பில் ஜனங்களை போடுகிறவரல்ல. அப்படியொரு ஸ்தலம் தேவ திட்டத்தில் இல்லாததற்கு நாம் எத்தனை நன்றியுள்ளவர்களாயிருக்க வேண்டும்.




__________________



விசுவாசிகிறவனுக்கு எல்லாம் ௬டும் ...
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard