kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மீண்டும் ஜோசஃப்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
மீண்டும் ஜோசஃப்


மீண்டும் ஜோசஃப்

யோவான்4:21. அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது.

23. உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.

24. தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.

25. அந்த ஸ்திரீ அவரை நோக்கி: கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார் என்றாள்.

26. அதற்கு இயேசு: உன்னுடனே பேசுகிற நானே அவர் என்றார்.

28. அப்பொழுது அந்த ஸ்திரீ, தன் குடத்தை வைத்துவிட்டு, ஊருக்குள்ளேபோய், ஜனங்களை நோக்கி:

29. நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்; அவரை வந்து பாருங்கள்; அவர் கிறிஸ்துதானோ என்றாள்.

34. இயேசு அவர்களை நோக்கி: நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது.

42. அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள்.

பிதா வேறு குமாரன் வேறு என்பதற்கு இந்தப்பகுதி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ஆனால் மிஷனரி மயக்கத்தில் இருந்தால் சத்தியம் எங்கே விளங்கப்போகிறது. இயேசு நீ தொழுதுகொள்ளும் பிதாவாகிய தேவன் நான் தான் என்று ஒரே ஒரு முறை சொல்லியிருந்திருந்தால் பிரச்சனையே இருக்காது. ஆனால் கிறிஸ்து தன்னைக் கிறிஸ்து, மேசியா என்றே திட்டவட்டமாக கூறினார். அதே சமயம் பிதாவைத் தொழுதுகொள்வதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கிறார். அவர் மெய்யாய் உலக ரட்சகர் என்று அறிந்து விசுவாசித்தார்கள் என்று பார்க்கிறோம். நாம் புரிந்துகொண்டதோ அவர் உலகத்தை ரட்சிக்கமாட்டார் என்பதே. இந்த சமாரிய ஸ்த்ரீ போய் மிஷனரி ஊழியம் செய்ததால்தான் முழு கிராமமும் விசுவாசிகளாகி ஊழியமும் செய்யப் புறப்பட்டுவிட்டார்களோ....

கிறிஸ்துவின் மூன்றரை வருட அற்புத அடையாளத்தோடு கூடிய ஊழியத்திலேயே மிஞ்சியது வெறும் 120 பேர்தான். ஏனென்றால் பிதா இழுத்துக்கொண்டது அத்தனைபேரை மட்டுமே.

//தான் கண்ட ரட்சிப்பை தனது அயலகத்தாரிடம் சொல்வது வீண் என்கின்றனர். இது கடைந்தெடுத்த சுய நலம் தானேயென்றி வேறென்ன‌?

வேத ஆராய்ச்சி செய்கிறேன் பேர்வழி என்பவர்கள் யாரையும் வாருங்கள் என அழைக்கமாட்டார்களா? அப்படி அழைப்போம் என்றால் தாங்கள் ஆராயும் வேதத்தில் ஏதோ ஒன்று விஷேச‌மாக இருப்பதால் தானே. அந்த விஷேசம் என்ன? இயேசுவின் மீட்பு தானே, அதைத்தானே மிஷனரிகள் வட இந்திய மா நிலங்களில் உயிரையும் துச்சமாக நினைத்து அறிவிக்கிறார்கள், இது உங்களுக்கு தவறாக தெரிகிறதா?

ஒருவேளை நாங்கள் யாரையும் அழைப்பதில்லை என்பவர்கள் எதற்கய்யா ஆராய்ச்சி செய்யவேண்டும்,//

ரட்சிப்பு என்றால் என்ன என்பதிலேயே குழப்பம். அதிலும் நான் போய் சொன்னால்தான் இரட்சிப்பு இல்லாவிட்டால் தேவனால் ஒருபோதும் ஒரு நபரை இரட்சிக்க முடியாது இருந்தாலும் நான் எப்போதாவது, யாருக்காவதுதான் சுவிசேஷம் சொல்வேன்... இதுதான் ஜோசஃப் கடைந்தெடுத்த சுயநலம். 

நாங்கள்தான் கிறிஸ்து எல்லாரையும் இரட்சிப்பார் என்கிறோம், அவன் கேள்விப்பட்டாலும் படாவிட்டாலும். நீங்கள் அதெப்படி, இரட்சிப்பு என் கையிலும் ஏற்றுக்கொள்பவன் கையிலும்தான் இருக்கிறது என்று அபத்தமாக சொல்கிறீர்கள். யார் சுயநலம்?

 

அந்த விசேஷமே எல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள் என்பதுதான். உயிரையும் துச்சமாக மதித்து மீட்பை அறிவிக்கிறார்கள் சரி, இதுவரை அறியாமல் மடிந்தவர்கள் கதி என்ன? அவர்களுக்கு தேவன் ஒரு திட்டம் வைத்திருப்பார் அவர் நீதியுள்ள நியாயதிபதி என்று பழைய பாட்டை பாடுவீர்கள். ஏற்கனவே அறியாமல் மடிந்தவர்களுக்கு தேவன் ஒரு திட்டம் வைத்திருப்பது உண்மையானால் இப்போதும் அறியாமல் மரிப்பவர்களுக்கும் அதே திட்டத்தைத்தான் வைத்திருப்பார். இல்லாத தண்டனையை கற்பனையாய் யூகித்து ஜனங்களைக் காப்பாற்றுகிறோம் என்று தங்கள் உயிரையும் துச்சமாக மதித்து அறிவித்துக்கொண்டே இருப்பதால்தான் "அவர் வரும்போது விசுவாசத்தைக் காண்பாரோ" எனுமளவு வட இந்தியா முழுவதும் விசுவாசத்துக்குள்ளாக இருக்கும் என்பீரோ?

//சீடர்கள் போகாத இடங்களில் வார்த்தை சென்றது என்றார், வார்த்தை எப்படி ஐயா சென்றது கால் முளைத்தா சென்றது. வார்த்தையையும் மிஷனரிகள் தானே கொண்டு சென்றனர்.//

கி.பி மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கிட்டத்தட்ட 1500 வருடங்கள் வேதமே இல்லை எந்த மிஷனரியும் இல்லை. வேதம் அச்சிடப்பட்ட பிறகே மிஷனரிகள் அனுப்பப்பட்டனர்... அரைகுறை சத்தியத்தோடு என்பதை நினைவில் கொள்க.

இந்த 1500வருடங்களில் வாழ்ந்து மடிந்த கோடாகோடி ஜனங்கள் என்ன ஆவார்கள்? ஏதோ மிஷனரிகள் போய் அறிவித்து கோடி கோடியாய் ஜன்ங்கள் இரட்சிக்கப்பட்டதுபோல பேசுகிறீரே. இஸ்லாம் அதைவிட வலுவாக வளர்ந்து வருகிறது, வருடா வருடம் வரும் அய்யப்ப பக்தர்களையும், திருப்பதியில் அலைமோதும் கூட்டத்தையும் பாரும் கிறிஸ்தவம் எந்த லட்சணத்தில் உள்ளது என்பது தெரியும்.

ஏதோ சுவிசேஷம் அறிந்து விசுவாசித்தாலே பரலோகம் என்பது போல மாயையை தோற்றுவிக்கிறீர்களே...  விசுவாச வாழ்வு கிறிஸ்துவைப் போல, பவுலைப்போல முடிவுப்பரியந்தம் நிலை நிற்பதாகும். எங்கே அப்படி இருக்கும் ஒரு நபரையாவது காண்பியும் பார்க்கலாம்...?

மிஷனரிகள் போனார்களாம்,,, அப்படியே எழுப்புதல் நடந்து உலகமே இன்று மனந்திரும்பிவிட்டதாம்...

 

எந்த உலகத்தில் இருக்கிறீரோ ....

 

பாவம்.



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

.//மிஷனரிகளின் தியாகத்தை அற்பமாக நினைப்பது அவர்கள் சிந்திய ரத்தத்தையும் வியர்வையையும் மிதிப்பதற்கு சமம்.//

கிறிஸ்து எல்லாருக்காகவும் இரத்தம் சிந்தி எல்லாரையும் ஏற்கனவே மீட்டுவிட்ட நற்செய்தியை அறியாமல், முட்டாள் மிஷனரிகள் மூடத்தனமாக இரத்தம் சிந்தியதை உயர்த்திப்பேசுவது கிறிஸ்துவின் இரத்தத்தைக் காலின்கிழ் போட்டு மிதிப்பதற்கு சமம். மனிதனால் உருவாக்கப்படும் இந்த மிஷனரிகள் மற்றவர்களால் 'பிரெய்ன் வாஷ்' செய்யப்பட்டு அனுப்பப்படுபவர்களாவார்கள். முட்டாள்தனமாக இவர்கள் போய் உதைவாங்கி மரித்தால் தியாகியாகிவிட மாட்டார்கள். மிஷனரிப்பணி உண்மையாக இருக்கும்பட்சம் 2000 வருடங்களில் ஏன் இத்தனை குறைவான ரிசல்ட்.... 

அது சரி மிஷனரிப்பணி அத்தனை உன்னதமானதாகப் பட்டால் முதலில் நீங்கள் ஏன் போகவில்லை...?

அழைப்பு இல்லையோ?

 

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//மிஷனரிகளின் தியாகத்தை அற்பமாக நினைப்பது அவர்கள் சிந்திய ரத்தத்தையும் வியர்வையையும் மிதிப்பதற்கு சமம்.//

இயேசு கிறிஸ்து என்கிற தேவக்குமாரன் இந்த உலகத்தின் இரட்சிப்பிற்காக இரத்தம் சிந்தியிருக்கிறார்!! அவரின் இரத்தம் சிந்துதல் எல்லா ஜனங்களின் இரட்சிப்புக்கு என்கிற சுவிசேஷத்தை போதிக்காத உங்கள் கூட்டம் காலகாலமாக கிறிஸ்துவின் இரத்தத்தை அவமாக்கிக்கொண்டு இருக்கிறார்கள்!! அந்த இரத்தத்தின் மதிப்பை புரிந்துக்கொள்ளாதவர்களான உங்களுக்கு மிஷ்னரிகள் சிந்திய இரத்தம் பெரிதாக தெரிகிறதோ!!

//ஒருவேளை நாங்கள் யாரையும் அழைப்பதில்லை என்பவர்கள் எதற்கய்யா ஆராய்ச்சி செய்யவேண்டும், கரண்ட் பில் செலவாவது தான் மிச்சம்.//

எங்க வீட்டு கரண்ட் பில்லை கட்ட  நான்ங்கள் காணிக்கை பெட்டிகளை ஏந்துவது கிடையாது, கவலைப்படாதீர்கள், உங்களிடமும் அதை கேட்கமாட்டோம்!!
இவர்களின் ஊழியர்கள் போடும் வேஷம், மேக் அப், அதற்கான ஃபோகஸ் லைட், ஊரையே அளர வைக்கும் மைக் சத்தம், தற்பெருமை பேசி செல்வதற்கு ஸ்பீக்கர்ஸ், இதற்கு உண்டாகும் கரண்ட் பில் கட்ட காணிக்கை பிச்சை!! ஆனாலும் கிறிஸ்துவினால் எல்லாரையும் இரட்சிக்க முடியும் என்பதை சொல்ல துப்பில்லாத தாந்தோன்றி கூட்டம்!! ஒரு மணி நேரத்திற்கு என்று ரேட் ஃபிக்ஸ் பண்ணி ஊழியம் செய்யும் ஓநாய்கள்!! இப்படி பட்ட "அழைப்பை" விட, நாங்கள் ஒரு மனதாக கூடி வேதத்தை பகிர்ந்துக்கொள்வதில் ஒரு தவறும் இல்லை!! நாங்கள் அழைத்தால் நீங்கள் வர தையாரா, இல்லையே!! அப்புறம் என்ன நாங்கள் யாரையும் அழைக்கிறோம், அழைக்காமல் போகிறோம்!! ஆனால் பிதா அழைக்காமல் ஒருவனும் கிறிஸ்துவிடம் வந்து சேர முடியாது என்பதை அறிந்திருக்கிறோம்!! எங்களையும் அழைத்தவர் அவரே!!

//நாலு பேர் கூடி வேதத்தை ஆராய்ந்து விட்டு கலைந்து செல்வது தான் நோக்கம் என்றால்.. அது என்ன ராஜேஷ் குமார் நாவலா? இல்லை க்ரூப் ஸ்டடி செய்யும் கடினமான பாடமா?//

ஒநாய்களின் கதை கேட்டு வளர்ந்த கிறிஸ்தவ மண்டலத்திற்கு க்ரூப் ஸ்டடி செய்ய தெரியாது!!! ஏன் தெரியுமா, அவன் அவன் தனியாக தன் பெயருக்காகவும், தன் பரம்பரையின் பெயருக்காகவுமே "ஊழியம்" செய்கிறான்!! ஆங்கே எல்லாம், ஒருவன் மேடையில் இருப்பான் மற்றவர்கள் ஆமாஞ்சாமி போடுவார்கள்!! இங்கே அப்படி இல்லை!! எங்களுக்கு வேதம் கடினமான பாடம் தான், ஆனால் தேவனின் வல்லமையுள்ள ஆவியினால் எங்களுக்கு அதில் உள்ள இரகசியங்களை புரியவைக்கிறார்!! அங்கே புதிய இரகசியங்களை உருவாக்கி தருகிற ஒருவன் இருக்கிறான்!! அதான் திரித்துவம் போன்ற உபதேசம் பிறந்தது!! உங்கள் கூட்டத்திற்கு ராஜேஷ் குமார் நாவலே புரியாது, வேதம் எங்கே புரிய போகிறது!!

//இயேசுவின் மீட்பின் செய்தியை (அவரை தொழத்தக்கவராக ஏற்றுக்கொள்ளாவது வேறு விஷயம்) முக்கியமாக நினைக்காததால் தான் அதை அறிவிக்கும் தாகம் இல்லை, இருக்கிறவர்களையும் நக்கல் அடிக்கிறார்கள்.//

நாங்கள் பவுலையும் பேதுருவையும் நக்கல் அடித்ததாக‌ ஒரு வரியாவது காண்பியுங்கள் பார்க்கலாம்!! மீட்பு என்றால் என்னவென்று தெரியாத ஓநாய் கும்பள் கூட்டம் கூட்டமாக மீட்பின் செய்தியை சொல்லுகிறதாம்!! நாங்கள் அறிவிக்கிறோமே, கிறிஸ்து சிந்திய இரத்தம் எல்லாரையும் இரட்சிக்கும் என்று!!! இயேசு கிறிஸ்துவையே நக்கல் செய்யும் கூட்டத்தை சேர்ந்த நீங்கள் இதை எல்லாம் பேசக்கூடாது!! உங்களுக்கு அத்துனை தாகம் இருந்தால் நீங்களே ஒரு மிஷனரியாக போகவேண்டியது தானே!! கேட்டால் என்னை அழைக்கவில்லை என்று சுலபமாக ஒரு பொய்யை சொல்லி விடுவீர்கள்!! எங்களுக்கு என்ன இது கூடவா தெரியாது!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

இவர்கள் மிஷ்னரிகள் என்றும் இரத்தம் சிந்தியவர்கள் என்றும், வியர்வை சிந்தியவர்கள் என்றும் சொல்லுபவரை சக மனிதனாக மதிக்கிறோம், ஆனால் அவர்களின் (கள்ள‌)போதனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை!! இந்தியாவிற்கு வந்த பெரும்பாளுமனோர் ப்ரொடெஸ்டண்ட் மிஷ்னரிகளே!! அப்படி என்றால் இன்றைய பெந்தகோஸ்தே சபையார் ப்ரொடெஸ்டெண்ட் சபைகளுக்குள் இருக்க வேண்டியது தானே!! மிஷ்னரிகள் மிஷ்னரிகள் என்று பிதற்றிக்கொள்ளும் கூட்டம் ஏன் ப்ரொடெஸ்டெண்ட் சபைகளுக்கு போவது கிடையாது!! ஏன் அவர்களின் போதனையை ஏற்றுக்கொள்வது கிடையாது!!

அப்படி என்றால் மிஷ்னரிகள் உண்மையிலேயே வேத சத்தியங்களை போதித்தார்களா!! இல்லை!! அவர்கள் ஆழமாக சத்தியத்தை போதிக்காமல், கிறிஸ்து இயேசுவை அவர்கள் செய்யும் சேவைகள் மூலமாக சொன்னார்கள்!! அவ்வளவே!! இந்த மிஷ்னரி பணி, எல்லா மதங்களிலும் நடக்கிற ஒன்று தான்!! உலகத்தில் இலட்ச்சக்கனக்கில் மிஷனரிகள் இன்றும் இருக்கிறார்கள்!! அதை எல்லாம் விட்டு விட்டாலும், கிறிஸ்தவ மிஷ்னரிகள் என்று எடுத்துக்கொண்டால், அதிலும் கத்தோலிக்கர்கள் தொடங்கி இன்றைய சபை வரையுள்ள மிஷ்னரிகள் இருக்கிறார்கள்!! இந்த மிஷ்னரிகள் அனைவரும் ஒரே விசுவாசத்தை போதிப்பார்களா என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்!! அவர்கள் சார்ந்த சபை போதனைகளை தான் அவர்கள் சொல்ல முடியும்!! ஒரு கத்தோலிக்க மிஷ்னரியும் அதே வேதத்தை வைத்துக்கொண்டு மரியாளை போதிக்கிறானே, மிஷ்னரிகளுக்காக இத்துனை பேசுகிற இந்த கூட்டத்தார், அவரும் வேதத்தை வைத்திருக்கும் மிஷ்னரி தானே என்று அவர் கொடுக்கும் போதனைகளை ஏற்றுக்கொள்வாரா!!

இது ஒரு வகையான ஹீரோ வர்ஷிப்!! அவ்வளவே!! ஹீரோ எது செய்தாலும் சரி என்று சொல்ல ஒரு முட்டாள் கூட்டம் இருக்கிறது!! அவர்களுக்கு சிந்திக்க தெரியாது!! அப்படியே தான் ஜோஸப்பும்!! மிஷ்னரிகள் எதை போதித்தால் என்ன, எந்த சபையை சார்ந்தவர்களாக இருந்தால் என்ன, அவர்கள் தியாகிகள் என்கிற எண்ணத்துடன் அவர்களுக்கு இத்துனை வக்காலத்து வாங்குகிறார்!! இந்தியாவிற்கு கத்தோலிக்க மிஷ்னரிகள் தான் அதிக எண்ணிக்கையில் வந்தார்கள், அவர்கள் ஸ்தாபித்த கல்வி நிறுவனங்கள், ஆஸ்பத்திரிகள் இன்னும் இருக்கிறது!! போக வேண்டியது தானே கத்தோலிக்க ஆலயங்களுக்கு மரியாள் ஆராதனையை கேட்க!!

இயேசு கிறிஸ்துவினால் எல்லாரையும் இரட்சிக்க முடியாது என்று சொல்லுகிற கூட்டத்தை இந்த தளம் கள்ள உபதேசத்தார், கள்ள போதகர், கள்ள தீர்க்கதரிசி, கள்ள மிஷ்னரி என்று தொடர்ந்து சொல்லும்!! அவர்கள் கிறிஸ்து விரோதி கும்பல், தொடக்க முதல் தேவத்துவத்தை கூறு போட்டு, பிதா தான் கிறிஸ்துவாக அவதரித்தார் என்றும் போதிக்கும் கூட்டம்!! கிறிஸ்து இரத்தம் சிந்தினார், சரி தான், ஆனாலும் அவரால் எல்லாரையும் இரட்சிக்க முடியாது என்று சொல்லுகிற எந்த ஊழியக்காரனையும் இந்த தளம் ஏதிர்க்கும்!!

//மீட்பு என்றால் தெரியாத கூட்டம் அல்ல, மீட்கப்பட்ட கூட்டம், உமக்கு தெரிஞ்ச மீட்பு என்பது உங்க குரு நாதன் ரசல் ஓதிவிட்டு போனது. அது எங்களுக்கு தெரியாதது நல்லதுதான். கிறிஸ்துவின் மீட்பின் செய்தியை அறிவிப்பவன் ஒவ்வொருவனும் மிஷனரி தான், ஆத்தும ஆதாயம் செய்பவன் ஞானவான் என பழைய ஏற்பாட்டிலேயே இருக்குதே. ஆதாயம் செய்யிறதுன்னா என்ன சாரே. அதுவும் போக தானியேல் அனேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள்ன்னு சொல்றாரே, இதுக்கு ரசல் என்ன சார் எழுதி வச்சிருக்கார்...//

இங்கே பார் டாக்டர்!! மோத வேண்டும் என்றால் நான் எழுதுவதை வைத்து மோது , தேவையில்லாமல் ரஸ்ஸல் அவன் இவன் என்று எழுதவேன்டிய அவசியம் இல்லை!! எழுத வக்கில்லாதவனுக்கு ஏதாவது ஒரு நொண்டி சாக்கு வேண்டும்!! மீட்கப்பட்ட விட்டீர்களா!!? வாழ்த்துக்கள்!! போங்க எங்களுடன் விழக்காடுவதை விட உங்கள் தெருவில் போய் உங்கள் மிஷனரி பணியை நிறைவேற்றுங்கள்!! அதற்காவது அழைப்பு இருக்குதானு பாருங்க!! ஆமா இவர் வைத்திருக்கும் வேதத்தில் பழைய ஏற்பாட்டிலேயே கிறிஸ்துவிற்காக ஆத்துமா ஆதாயத்தை பற்றி இருக்கிறதாம்!! போங்கய்யா போய் எங்கேயாவது ஆத்தும ஆதாயம் செய்து திரியவேண்டியது தானே!! மாடிவீட்டில் உட்கார்ந்து மிஷ்னரிகள் வாழ்க என்று கோஷம் போடுவதை விட மிஷ்னரிகளாக மாறிவிட வேண்டியது தானே!! மானங்கெட்டவர்களே!!

//ஒருவேளை நீர் கேட்டாலும் கொடுப்பதாக இல்லை. விதைப்பு காலத்தில் ஏசி ரூமில் காலாட்டிக்கொண்டிருப்பவனுக்கு அறுப்பு காலத்தில் ஒண்ணும் கிடைக்காது. ஊழியம் என்றால் உமக்கு ஏன் போகஸ் லைட்டும், ஏ.சி காரும் மட்டும் தெரியுது, ஒவ்வொரு வாட்டியும் இதையே சொல்றத பாத்தா கிடைக்கலயோன்னு எரிச்சல்ல புலம்புற மாதிரி தெரியுது சாரே. நீர் அழைக்கிறீரா இல்லையா, அதுக்கு எதுக்கு ஒரு சப்பக்கட்டு.//

இதோ கிறிஸ்து வருகிறார் என்றும் போதித்து விட்டு, இது விதைப்பின் காலம் என்றும் போதிப்பதிலேயே நீர் எந்த அளவிற்கு வேதத்தில் தேர்ந்தவர் என்பது எங்களுக்கு தெரியும்!! நாங்க எங்க சொந்த காசில் ஏசி வாஙியிருக்கோம்ப்பா!! உங்க தேஞ்சு போன சபைகள் மாதிரி பிச்சை எடுத்து ஏசி வாங்கவில்லை!! போதுமா!! எங்க வீட்டிலே நாங்க காலையும் ஆட்டுவோம் படுத்தும் தூங்குவோம்!! உமக்கு ஏன் எரிகிறது!! உம்முடைய ஊழியம் வெறும் வெத்து வேட்டான ஃபோக்கஸ் லைட் மட்டுமே!! மனவியாதி போன்று மிஷ்னரிவியாதி பிடித்திருக்றவர்களிடம் என்னத்த சொல்ல முடியும்!!

சீகன் பாலக்குடன் வேதத்தை மொழிப்பெயர்க்க அநேக பிராமனர்களும் இருந்தார்களே, அவர்களுக்கு ஒரு கோவில் கட்டி கும்பிட வேண்டியது தானே!! நீர் செய்வது ஹீரோ வர்ஷிப் அன்றி வேறு ஒன்றும் இல்லை!! அதை முதலில் புரிந்துக்கொள்ளும்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//இயேசு ரத்தம் சிந்தியிருப்பது எவ்வளவு பெரிய காரியம், எல்லா ஜனங்களையும் ரட்சிப்புக்குள்ளாக வழி நடத்தும் திட்டம் தான், இதை கூட புரியாமல் உம்முடன் பேசிக்கொண்டிருக்கவில்லை. இதை அறிவிக்க 1ம் நூற்றாண்டு சீடர்களுக்கு மட்டும் தான் கட்டளை கொடுத்தார் என்பது முட்டாள்த்தனம். அறிவிக்காவிட்டால் மக்கள் எப்படி கேள்விப்படுவார்கள் அப்ப 1ம் நூற்றாண்டோடவே எல்லாம் முடிஞ்சு போச்சா. இயேசுவின் சீடர்கள் காலத்தோடவே இது முடிவுபெறவேண்டும் என்று இருந்திருந்தால் நீர் இப்போது என்ன செய்து கொண்டிருந்திருப்பீர் என கேட்டு பல காலம் ஆகிவிட்டது....//

முதல் நூற்றாண்டில் இறுதிக்குள் அப்போஸ்தலர்கள் மூலம் எழுத வேண்டியதை எழுத வைத்துவிட்டார்!! அந்த எழுத்து எப்படி எல்லாம் பிற தேசங்களுக்கு போக வேண்டுமோ அப்படி எல்லாம் சென்றது!! அதற்கு கருவிகளாக சில மனிதர்கள் பயன்ப்பட்டார்கள்!! அதற்காக அவர்களுக்கு கோவில் கட்டி கும்பிட முடியாது!! மற்றபடி வேதத்தில் என்ன எழுதப்பட வேண்டும் என்பது அப்போஸ்தலர்களுக்கு மாத்திரமே நியமிக்கப்பட்டிருந்தது!! ஏன், பவுல் கூடவே இருந்த தீமோத்தேயுவும் தான் சபைகளுக்கு மடல் எழுதியிருப்பார்!! அதை எல்லாம் உங்கள் வேதத்தில் வைத்திருக்கிறீர்களா!! இல்லை தானே!! தேவன் நியமிக்கப்பட்டவர்கள் எழுதிமுடித்தவுடன் இனியும் புதுசாக ஒன்றும் தேவை இல்லை!! அந்த எழுத்து எப்படி எல்லாம் அழிக்கப்பட முயற்சிக்கப்பட்டதும் என்பது (கத்தோலிக்க கூட்டத்தாரால் தான்) சரித்திரம்!! ஆனாலும் தேவன் நியமித்த எழுத்துக்களை ஒரு கொம்பனாலும் அழிக்க முடியவில்லை!! அந்த எழுத்து மீண்டும் எல்லார் கைகளிலும் வர தேவன் சிலரை நியமித்தார்!! உங்களுக்கு குயவனை காட்டிலும் பாத்திரம் தான் பிடித்திருக்கிறது என்பதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்!!

தானியேல் 12:4. தானியேலாகிய நீயோவென்றால், முடிவுகாலமட்டும் இந்த வார்த்தைகளைப் புதைபொருளாக வைத்து வைத்து, இந்தப்புஸ்தகத்தை முத்திரைபோடு; அப்பொழுது அநேகர் இங்குமங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போம் என்றான்.

இப்பொழுது நிறைவேறிக்கொண்டு இருக்கிறது!!


//மிஷனரிகள் உழைத்ததால் தான் உமக்கு ஆராய்ச்சீ செய்ய வேதாகமம் கையில் இருக்கிறது, அவர்களை அற்பமாக நினைக்கும் நீரும் உமது சகாவும் எந்த மான ரோஷத்துடன் பைபிளை கையில் தூக்குகிறீர்கள் என தெரியவில்லை. நன்றிகெட்டதனத்தின் உச்சகட்டம், அன்றைக்கு சீகன் பால்கு பெருமுயற்சி எடுத்ததால் தான் பைபிள் அச்சில் ஏறியது, அதையே வெக்கங்க்கெட்டுபோய் உங்க சகா நக்கல் அடிக்கிறார், அந்த கால தமிழ் புரிந்திருக்காதா இருக்கும் ஆனால் அதை ஒத்துக்கொள்ளும் மன நிலை இல்லை, நீங்க எந்த காலத்தில் யாரைத்தான் மதித்திருக்கிறீர்கள்..//

மிஷனரிகளுடன் இந்த ஊரின் மொழி தெரிந்தவர்களும் தான் பாடுப்பட்டார்கள்!! தேவனுக்கு தன் வார்த்தையை எப்படி எங்கே யாரிடம் கொண்டு போக வேண்டும் என்பது தெரியும்!! அதற்காக அவர் யாரையும் பயன்படுத்துவார்!! இந்த நேரத்தில் பவுல் சொல்லுவதை கவனிக்க வேண்டும்:

1 கொரிந்தியர் 3:5. பவுல் யார்? அப்பொல்லோ யார்? கர்த்தர் அவனவனுக்கு அருள் அளித்தபடியே நீங்கள் விசுவாசிக்கிறதற்கு ஏதுவாயிருந்த ஊழியக்காரர்தானே. 6. நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், தேவனே விளையச்செய்தார். 7. அப்படியிருக்க, நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும்.

அப்பேற்பட்ட பவுல் அப்படி இருந்தார்!! சீகன் பால்க்கும் அப்படி தான் இருந்திருக்கலாம்!! ஆனால் அவர் பெயரை சொல்லி நீங்கள் தான் அதிகமாக குதிக்கிறீர்கள்!! வேதபுத்தகம் ஒன்றும் சீகன் பாலக்கின் தனிப்பட்ட குடும்ப சொத்து கிடையாது, நாங்கள் அதை உபயோகிப்பதால் வெட்கம்கெட்டு போவதுமில்லை!! நீங்கள் தான் மெச்சிக்கனும் அந்த தமிழ் மொழிப்பெயர்ப்பை!! இஸ்ராஹேல் என்பதை இஸ்ரவேல் என்று வாசிப்பதில் அப்படி என்ன தான் பெருமையோ!!

அது சரி ஆங்கிள மொழிப்பெயர்ப்புக்கும் உங்கள் சீகன் பாலக்கு தான் காரணமோ!! இல்லை ஆராய்ச்சி செய்யக்கூடாது என்று எதும் காப்பி ரைட் வாங்கி வைத்திருக்கிறீர்களா!!??

//ஒருவேளை நீர் கேட்டாலும் கொடுப்பதாக இல்லை. விதைப்பு காலத்தில் ஏசி ரூமில் காலாட்டிக்கொண்டிருப்பவனுக்கு அறுப்பு காலத்தில் ஒண்ணும் கிடைக்காது. ஊழியம் என்றால் உமக்கு ஏன் போகஸ் லைட்டும், ஏ.சி காரும் மட்டும் தெரியுது, ஒவ்வொரு வாட்டியும் இதையே சொல்றத பாத்தா கிடைக்கலயோன்னு எரிச்சல்ல புலம்புற மாதிரி தெரியுது சாரே. நீர் அழைக்கிறீரா இல்லையா, அதுக்கு எதுக்கு ஒரு சப்பக்கட்டு.//

ஒரு வேளை நீர் கொடுத்தாலும் நான் வாங்குவதாக இல்லை!! அறுவடையின் காலத்தை விதைப்பின் காலம் என்று சொல்லுபவன் மூடன்!! எப்போ விதைப்பின் காலம் என்றும், எப்போ அறுப்பின் காலம் என்றும் தெரியாத நீர் மிஷனரிகளின் ஊதுகுழல், அவ்வளவே!! எல்லாவற்றையும் ஊதி பெரிதுப்படுத்திக்கொண்டு இருக்கிறீர்!! உம்முடைய ஊழியர்கள் முற்சந்தியில் மேக்ப்போட்டு, ஃபோகஸ் லைட், மைக்செட், மணிக்கு இத்துனை தொகை என்று பேசி தானே "விதைக்கிறார்கள்"!! அந்த மாதிரி விதை எல்லாம் சொத்தை, அது முளைக்காது!! நாங்கள் எங்கள் செலவில் ஏசி ரூமில் உட்கார்ந்து காலாட்டிக்கொண்டிருந்தாலும் தேவன் செய்ய வேண்டியதை செய்ய வைத்துக்கொண்டு இருக்கிறார்!! கள்ள கோமாளிகளை அப்படி சொன்னால் உமக்கு ஏன் பத்திக்கிட்டு வருது, உமக்கு பங்கு வந்து சேர மாட்டெங்கிறதா!!

//ஆனா நரிக்கதை கேட்டு வளர்ந்த கும்பலுக்கு அது தெரியும் அல்லவா!!!!!!. மிஷனரிகள் பரம்பரைக்காக ஊழியம் செய்யவில்லை, முதலில் அர்ப்பணிப்புடன் ஊழியம் செய்வது என்றால் என்னன்னு தெரிஞ்ச்சுட்டு வாங்க. யார் தலையிலயும் கையை வைக்கும் முன் ஜாக்கிரதையாயிருன்னு தான் பவுல் சொல்லியிருக்காரேயன்றி கையையே வைக்காதேன்னு சொல்லல, இந்த எளிதான நேரடி விஷயமே புரியல, என்ன ரகசியத்த தெரிஞ்சு கிழிச்சீங்களோ.//

ஏன் உம் தலையில் யாரும் கைவைக்கவில்லையா!!?? இதுவரை கைய்யை வைத்து பாதி பேரை காட்டுக்கு அனுப்பியதை தவிர வேறு என்னத்தை சாதித்தீர்களோ!! கை வைப்பதில் எல்லாம் ஒரு இரகசியம் என்று உங்கள் மேக் அப் கோமாளிகள் தான் சொல்லுவார்கள்!! எங்களுக்கு அதில் ஒரு இரகசியமும் கிடையாது!!

//மீட்பு என்றால் தெரியாத கூட்டம் அல்ல, மீட்கப்பட்ட கூட்டம், உமக்கு தெரிஞ்ச மீட்பு என்பது உங்க குரு நாதன் ரசல் ஓதிவிட்டு போனது. அது எங்களுக்கு தெரியாதது நல்லதுதான். கிறிஸ்துவின் மீட்பின் செய்தியை அறிவிப்பவன் ஒவ்வொருவனும் மிஷனரி தான், ஆத்தும ஆதாயம் செய்பவன் ஞானவான் என பழைய ஏற்பாட்டிலேயே இருக்குதே. ஆதாயம் செய்யிறதுன்னா என்ன சாரே. அதுவும் போக தானியேல் அனேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள்ன்னு சொல்றாரே, இதுக்கு ரசல் என்ன சார் எழுதி வச்சிருக்கார்...//

கண்டிப்பாக மீட்பு என்றாலே என்னவென்று தெரியாத கூட்டத்தின் அங்கத்தினர் தான் நீர்!! நான் ஒரு போதும் ரஸ்ஸலை என் குரு நாதனாக ஏற்றுக்கொண்டதாக எழுதியதே கிடையாது!! சும்மா வீம்பிற்கு எழுதி அப்புறம் மரியாதையை கெடுத்துக்கொள்ளாதீர்!! தேவை இல்லாமல் செத்து போன ஒரு மனுஷனை என்னுடன் சம்பந்தப்படுத்தி பேச வேண்டாம் என்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்!!

ஆத்தும ஆதாயம் என்று எதை குறித்து எழுதப்பட்டிருக்கிறது என்பதை கூடவா வாசித்து புரியவில்லை!! கிறிஸ்துவின் மீட்பின் செய்தி  இல்லை டாக்டர் அவர்களே, கிறிஸ்துவினால் உண்டாகும் மீட்பின் செய்தியை தான் நாங்கள் சொல்லுகிறோம்!! மீட்பின் செய்தியை சொல்லுபவர்கள் மிஷனரிகள் என்கிற புதிய வியாக்கியானத்தை கொடுத்திருக்கிறீர்கள்!! மன்னிக்கனும், நாங்கள் மிஷனரிகள் கிடையாது!! அப்படி ஒரு போலித்தனத்தை உடுத்தி கொள்ள விரும்பவும் இல்லை!! வேதத்தில் இல்லாத வார்த்தைகளை சாதிக்க எப்படி எல்லாமோ யோசிப்பீங்க போல்!! திரித்துவம், மிஷ்னரி, திரியேகத்துவம், பரிசுத்த ஆவியான தேவன் போன்றவை வேதத்தில் இல்லை, ஆனால் அதற்காக தான் எத்துனை வைராக்கியமாக புலம்புகிறீர்!!

முதலில் சாலமோன் நீதிமானா அல்லது நாத்தீகனா என்பதை கூடி சேர்ந்து முடிவு செய்யுங்கள், பிறகு அவர் எழுதிய ஆத்தும ஆதாயத்தை பற்றி பேசலாம்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//ஆமாமா மதிப்பு கொடுக்குறதுன்னா என்னன்னு உம்மை கேட்டு தான் தெரிஞ்சுக்கணும். மிஷனரிகள் கள்ள போதனைகளை கொண்டு வந்தார்களா? நீங்க சொல்ற கள்ள போதனையின் வெளிச்சத்தில் மிஷனரிகள் கொண்டுவந்தது கள்ள போதனையா தான் தெரியும். புரொட்டஸ்டண்ட் சபைக்கு போவது கிடையாதுன்னா என்ன அர்த்தம். முதலில் சபை சரித்திரத்தை தெரிந்துவிட்டு பேசும். தமிழகத்தின் தென் பகுதிகளில் மிஷனரி பணி எப்படி நடந்துன்னு தெரியுமா? மிஷனரிகள் போதிப்பது வேதத்தை வைத்து தான். எந்த விதத்திலாவது கிறிஸ்து அறிவிக்கப்படுகிறாரே என பவுல் சந்தொஷப்படத்தான் செய்தார். பவுல் முதல் இன்றைய மிஷனரிகள் வரை கிறிஸ்துவைதான் போதிக்கின்றனர், கிறிஸ்துவை தொழ வேண்டாம் என போதித்திருந்தால் இன்றைக்கும் கிறிஸ்தவம் யூத மதத்தின் ஒரு பிரிவாக தான் இருந்திருக்கும். அன்றைக்கு ரோம பேரரசர்கள் முதலில் கிறிஸ்தவர்களை யூத மதத்தின் பிரிவாக தான் கருதினர், அதனால் தான் முதலில் கிறிஸ்தவர்கள் சற்று பாதுகாப்புடன் இருந்தனர், எப்போது ரோம அரசர்களுக்கு கிறிஸ்தவர்கள் என்பது வேறு என தெரிய வந்ததோ அப்போதிலிருந்து தான் கிறிஸ்தவ போதனைகளை கவனிக்க தொடங்கினர், சபையும் உபத்திரவ காலத்துக்குள் சென்றது, //

அதான்ய்யா சொல்லுகிறேன், மிஷ்னரிகள் ஒன்று கத்தோலிக்கர்களாக வந்தார்கள் அல்லது அதன் பின் ப்ரொடெஸ்டெண்ட் சபையை சேர்ந்தவர்களாக இருந்தார்கள்!! நீர் அதே விசுவாசத்திலும் அந்த சபைகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறீர் என்றால் பேசும்!! சபை சரித்திரம் தெரிந்திருந்தால் நீர் இப்படி பேச மாட்டீர்!! உமக்கு தமிழகத்தின் தென் பகுதியை விட்டால் வேறு ஒன்றும் தெரியாது!! ஏனென்றால் இப்பொழுது மளிகை கடைகள் பெறுகியது போல் தென் தமிழகத்திலிருந்து தான் ஊழியத்தை தொழிலாக செய்யும் கூட்டம் கிளம்பியிருப்பதையும் நான் அறிவேன்!! தென் தமிழகம் மட்டும் தான் உமக்கு உலகம், ஏனென்றால் நீரும் அதே பகுதியை சேர்ந்தவராக இருப்பீர் போல்!! இன்று ப்ரொடஸ்டண்ட் மண்டலத்தில் என்ன கூத்து நடக்கது என்பதுன் எங்களுக்கு தெரியும், எத்துனை பேர் வாய்தா வங்கிக்கிட்டு இருக்கிறார்கள் என்பது தெரியும்!!

கிறிஸ்து தன்னை தொழுதுக்கொள்ள ஒரு போதும் சொல்லவில்லை!! இதற்கு மேல் விவாதிக்க இதில் ஒன்றும் இல்லை!! நீர் தேஞ்சு போன ரிக்கார்ட் ப்லேயர் போல் பாடியதையே பாடிக்கொண்டு இரும்!! கிறிஸ்துவை பின்பற்றும் சீஷர்கள் தான் கிறிஸ்தவர்கள் என பெயர் வாங்கினார்களே தவிர, கிறிஸ்துவை தொழுதுக்கொள்வதால் அல்ல என்பதை மறந்து விடாதீர்!!

//யோவ், கிறிஸ்து எல்லாருக்கும் தான் ரத்தம் சிந்தினார், அப்புறம் எதுக்கு கிறிஸ்து இதை எல்லாருக்கும் அறிவிக்க சொன்னார், நீங்க காலாட்டிக்கொண்டிருப்பதற்காக, கிறிஸ்துவின் பிரதான கட்டளையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள், சீடர்களின் காலம் வரைக்கும் தான் நற்செய்தி அறிவிக்க வேண்டும் என எங்க்காவது சொல்லியிருக்கிறாரா. உலகத்தின் முடிவு பரியந்தமும் உங்களுடன் இருக்கிறேன் என ஏன் சொன்னார், உம் கணக்குப்படி 1ம் நூற்றாண்டோடவே உலகம் முடிஞ்ச்சிருச்சா. மிஷனரிகளை ஹீரோ வொர்ஷிப் பண்ணல, கிறிஸ்துவை தொழத்தக்க தெய்வமாக ஏற்றுக்கொள்ளாததால் தான் அவர் அறிவிக்கப்படுவது உங்கள் நரிக்கூட்டத்திற்கு எரிச்சலாக இருக்கிறது. கிறிஸ்துவை பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்கு பைத்தியமாய் இருக்கிறது என வேதம் சரியா தான் சொல்லியிருக்கு.//

நீர் போக வேண்டியது தானே!! உம்மால் போக முடியவில்லை தானே!! நீர் படித்து முடித்து பட்டம் பெற்று என்ன வாலையா ஆட்டிக்கிட்டு உட்கார்ந்திருக்கிறீர்!! நான் காலாட்டிக்கொண்டிருந்தா உமக்கு ஏன் எரிச்சல்!! நீர் எல்லாவற்றையும் விற்று விட்டு போக வேண்டியது தானே!! சும்மா தென் தமிழகம் என்று ஒரு பகுதியை பிடித்துக்கொண்டு பேசிக்கொண்டிருக்கிறீர்!!

போய்யாபோ!! என்னமோ எங்கள் தளம் பக்கம் தலைவைத்து படுக்க மாட்டேன் என்று வீராப்பு பேசினீர்!! உம் வீராப்பு என்னவென்று தெரிந்து விட்டது!! இப்படி என்னை யோவ் என்று சொல்லிகொள்வதை காட்டிலும் போய் உம் தென் தமிழகத்தில் வீதி வீதியாக திரிய வேண்டியது தானே, உம் வேறு சுவிசேஷத்தை சொல்லிக்கொண்டு!! அதான் நீர் சொல்லுகிறபடி கிறிஸ்துவினால் எல்லாரையும் இரட்சிக்க முடியாது, ஆனாலும் நாங்கள் அந்த வேறு ஒரு இயேசுவை தான் தொழுதுக்கொள்கிறோம் என்று!!

உம் ஓநாய்க்கூட்டத்துடன் தான் நாங்களும் ஊழியம் என்று நம்பிக்கையோடு செய்துக்கொண்டிருந்தோம்!! பிறகு தான் தெரிந்தது திரித்துவம் போதிக்கும் அந்த ஓநாய் கூட்டம் வியாபார கூட்டம் என்று!! உமக்கு வேதத்தில் உள்ள கிறிஸ்து யார் என்று தெரியாது, உமக்கு தெரிந்தது மிஷ்னரிகள் போதித்த கிறிஸ்து!! யார் பைத்தியம் என்பது நீர் புரிந்துக்கொள்வீர்!! போய் எங்கேயாவது ஆத்தும ஆதாயம் செய்துக்கொண்டு கண்ணுக்கு தெரியாத "ஆத்துமா"க்களை கூட்டி சேர்த்துக்கோ!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//சரி விங்கமாண்டர். நீ எழுதுவது போதிப்பது எல்லாம் ஏதோ ஒரு காலத்தில் ரசலின் போதனைகள் தானே, சொன்னவுடன் உண்மை சுடுதோ. நாங்கள் தெருவில் போய் நிறைவேற்றிக்கொள்கிறோம். அதான் வசனம் இருக்கே உமக்கு தெரியலன்னா என்னய்ய பண்ண முடியும். ஒரு வேளை தெரிந்திருந்தாலும் அதை ரசலின் போதனைகளை வைத்து தான் பார்ப்பீர். காணாமல் போன அந்த 1 ஆட்டிற்காக தான் தேவன் கவலைப்பட்டார், போன ஆடு என்னைக்காவது ஒரு நாள் ராஜ்யத்தில் கற்றுக்கொள்ளும் என விட்டுவிட்டாரா? //

என்னமோ நீ மட்டும் பிறந்தவுடன் கைய்யில் வேதத்துடன் பிறந்து வந்தது போல் எழுதுகிறாயே!! நீயும் யாரோ எழுதியதை யாரோ சொல்லியதை தானே சொல்லிக்கொண்டிருக்கிறாய்!! பிறகு என்ன!! உமக்கு ஒன்றும் தெரியவேண்டும், ரஸ்ஸலுக்கு பல நூற்றாண்டுகள் முன்னமே அப்போஸ்தலர்கள் அதன் பின் ஏரியஸ் பிறகு அவரை போன்று எழுதிய பலர் இருக்கிறார்கள்!! நீர் திரும்ப திரும்ப ஏதோ இரஸல் சொல்லுவதை தான் நான் எழுதுவது மாதிரி எழுதி உமக்கு இரஸ்ஸல் ஒருவரை தான் தெரியும் என்று காண்பிக்கிறீர்!!

காணாமல் போன 1 ஆடு என்னவென்றே உமக்கு தெரியாது!! அவர் யாரை ஆடு என்று சொன்னார் என்பது கூட தெரியாமல் நீர் தான் பிதற்றிக்கொண்டு இருக்கிறீர்!!

யோவான் 12:32 நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்ளுவேன் என்றார்.

அவர் எல்லாரையும் இழுத்துக்கொள்ளுவேன் என்கிறார், ஆனால் நீரும் உம்முடைய கோமாளி கூட்டமும் அது முடியாது என்று சொல்லிவருகிறீர்கள்!!

//நீர் எழுதும் இது போன்ற கழிசடை கமெண்டுக்களுக்கு பதில் எழுதி என்னை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை. சீகன் பால்கின் முயற்சிகள் தான் முக்கியமேயன்றி அவர் எடுத்திருந்திருக்காவிட்டால்........ அவரை யாரும் கோவில் கட்டி கும்பிடவில்லை கும்பிட சொல்லவும் இல்லை அவரது முயற்சியை கூட நன்றிகெட்டத்தனமாக பகடி செய்கிறீர்கள். கிறிஸ்துவை பற்றி போதிப்பதற்கு எதிர்ப்பவனுக்கு விதைப்பின் காலம் பத்தி தெரியாது சாரே, எனது வேத அறிவுக்கு நீ சர்டிபிகேட் தரவேண்டாம், நான் குறைவுள்ளவன் தான் என்னை நிறைவாக்குகிறவர் கிறிஸ்து.//

இதில் என்ன கழிசடை இருக்குது!! சீகன் பாலக்கு தமிழ் கற்றுக்கொள்ள சிலர் தேவைப்பட்டர்களே, அவர்கள் மூலமாக தானே அவர் வேத பணியை செய்திருக்கிறார்!! பிறகு என்ன அவர்களையும் தானே தேவன் பயன்ப்படுத்தியிருக்கிறார், உங்கள் பாஷையில் அவர்களும் அப்போஸ்தலர்கள் தானே!! நீர் தானே கோவில் கட்டி கும்பிடாத குறையாக மெச்சிக்கிட்டு இருக்கிறீர்!! ஒரு சீகன் பாலகு இல்லை, இன்னும் அநேகர் மூலமாக வேதம் கைகளில் வந்திருக்கிறது!! அதான் வசனம் எழுதியிருந்தேனே, படிக்கவில்லையா!! நீர் பாய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும், விளைய செய்கிற தேவனுக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம்!!

எல்லாவற்றுக்கு ஒரு காலம் என்று பிரசங்கி எழுதியிருக்கிறார்!! ஓஹோ, பிரசங்கி எழுதிய சாலமோன் தான் பிரசங்கி எழுதும் போது மாத்திரம் நாத்தீகனாகிவிட்டாரே!! காலத்தை குறித்து அவர் எழுதியதை நீர் நம்ப மாட்டீரே!!

மத்தேயு 13:39. அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு; அறுப்பு உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவதூதர்கள்.

இது உலகத்தின் முடிவு என்று காது கிழிய மைக்செட் வைத்து கத்தி கூச்சலிடும் உம் ஊழிய ஓநாய்களுக்கு இது தான் விதைப்பின் காலமோ!! அறுப்பு உலகத்தின் முடிவு என்று வசனம் சொல்லியும் சும்மா விதைக்கிறோம் விதைக்கிறோம் என்று சொல்லி தங்கள் வீடுகளை பிறரின் பணத்தில் விதைத்துக்கொண்டு இருக்கிறார்கள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

மாடரேட்டர் அவர்களே, ஃபேஸ் புக் கில் இருப்பதுபோல "Like" போன்ற வசதிகளை நமது பதிவுகளுக்கும் தந்தால் உகந்ததாக இருக்கும். உங்கள் தெளிவான பதில்களை "Like" செய்யும் அன்பர்கள் ஏராளம் உண்டு.



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

நண்பர் ஜோசஃப் அவர்களே, "இயேசு கிறிஸ்துவினால் எல்லாரையும் இரட்சிக்க முடியவே முடியாது" என்று ஒரே ஒரு பதிவு செய்தால் நாங்கள் இந்தத் தளத்தையே மூடிவிடுகிறோம் என்று சொல்கிறோம். தயவு செய்து அதற்கான முயற்சியில் ஈடுபடவும். சும்மா மிஷனரி, அது இது என்ற வெட்டிப்பேச்சு வேண்டாமே. நீங்கள் அறிந்த சத்தியத்தைத்தான் தெளிவாக எழுதச் சொல்கிறோம். செய்வீரா? வெட்டிப்பேச்சை விட்டு விட்டு..,

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//அதான் பிரச்சனையே கிறிஸ்துவை தொழத்தக்க தெய்வமாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் தான் இவ்வளவு எரிச்சல் வருகிறது.....தொழாதவன் எப்படி பின்பற்ற முடியும். இதுக்கு மேல விவாதிக்க ஒண்ணும் இல்லை.//

இல்லாததை ஏனய்யா ஏற்றுக்கொள்ள வேண்டும்!! அவர் சொல்லியதை பின்பற்றி அவரின் தேவனும் என் தேவனுமான பிதாவாகிய தேவனை தொழுதுக்கொள்கிறோம்!! இது தான் கிறிஸ்துவை பின்பற்றுவது!!

சங்கீதம் 96:9. பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் (யெகோவாவை) தொழுதுகொள்ளுங்கள்; பூலோகத்தாரே, நீங்கள் யாவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள்.

பழைய ஏற்பாடானாலும் சரி புதிய ஏற்பாட்டில் கிறிஸ்து சொல்லியதானாலும் சரி, எல்லாருமே பிதாவை தான் தொழுதுக்கொள்ள வேண்டும் என்றே இருக்கிறது!!

//இப்பவும் உம் தளத்துக்கு நான் வர்றதில்லை, யௌவன ஜனம் தளத்திற்கு எடுத்து வரப்படும் பதிவுகளுக்கு தான் பதில் அளிக்கிறேன், உனக்கு ரோஷம் இருந்தால் நான் என்ன எழுதியிருக்கேன்னு பார்க்காம வேலையை பத்துட்டு போகவேண்டியது தானே, இல்லை வருவேன் பார்பேன் எழுதுவேன் என்றால் அதற்கு பதில் இப்படி தான் இருக்கும். //

ஆமா, ஆமா, அதான் இங்கே இருப்பதை அப்படியே அங்கே தூக்கி போட படுகிறதே!! ஆனால் இந்த பதில்கள் எல்லாம் உங்களுக்கு எதிராக நியாயத்தீர்ப்பின் நாட்களில் சாட்சிக்கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை!! லூசுத்தனமாக எழுத வேண்டாம், என்ன!! நீ தான் கோவைபெரேயன்ஸ் தளம் பக்கம் தலைவைக்க மாட்டேன் என்று சபதம் விட்டாய்!! நான் அப்படி ஒன்றும் சொல்லவில்லை!! உன்னால் தான் உன் வைராக்கியத்தில் இருக்க முடியவில்லை, என்னை ஏன் குறை கூறுகிறாய்!!

//அந்த வேறு சுவிசேஷத்தை தெருதெருவாக மிஷனரிகள் பிரசங்க்கித்ததால் தான் நீர் இன்னைக்கு கையில் வேதத்தை வைத்து ஆராய்ச்சீசீ பண்ணிட்டிருக்கீர் //

அய்யா!! போதுமய்யா உம் மிஷ்னரிகளின் துதிப்பாடல்!! என் கைய்யில் வேதம் வர தேவனே காரணம்!! அவருக்கே நான் நன்றி தெரிவிக்கிறேன்!! போதுமா!!

//உம்மை மாதிரி நரிக்கூட்டத்தில் இருப்பதை விட... வேணாம் விடும் இதுக்கு மேல எழுதி என்னை தரம் தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை.//

ஆமா, ஓநாய்க்கூட்டமே மேல் என்று போய் விடும்!! யாரும் உம்மை இங்கே தாம்பூலம் வைத்து அழைக்கவில்லை!! என்னமோ தரத்தை பற்றி எல்லாம் எழுதுகிறீரே!! இதற்கு மேலும் நீர் தரம் கெட்டு எழுத வேறு என்ன இருக்கிறது!!

//உமக்கு எப்படி கோயம்புத்தூரின் ஏ.சி ரூம் மட்டும் தான் தெரியுமோ அதே போல் தான். நீர் எப்படி பைபிளை முதலில் தூக்கினீர், யார் மூலமா உம் முன்னோர் கிறிஸ்துவை பற்றி அறிந்தார்கள் என்பதை யோசித்து பாரும். ஒருவேளை எல்லாரும் உம்மை மாதிரி காலாட்டிக்கொண்டே உட்கார்ந்திருந்தால் நீர் இப்படி வக்கணையா பைபிளை கையில் வச்சி பேசிட்டிருப்பீரா.

 சபை சரித்திரம் உம்மை விட எனக்கு நல்லாவே தெரியும். ஊழியத்தை தொழிலாக செய்யும் கூட்டம்.... பணத்தை பாதுகாப்பது பற்றி மட்டும் தெரிந்தவருக்கு ஊழியத்தால் பணம் பண்ணுபவர்கள் தான் கண்ணில் தெரிவார்கள், தியாக உள்ளத்தோடு கிறிஸ்துவை அறிவிப்பவர்கள் உன்னை போன்றோருக்கு இகழ்ச்சியாக தான் தெரிவர். //

என் தேவன் கோவையையே ஏ.சியாக வைத்திருக்கிறார், நான் என் ரூமில் எல்லாம் அதை வைப்பதில்லை!! நான் வேதத்தை தூக்கினது, என் முன்னோர்கள் தேவனை அறிந்தது, எல்லாவற்றுக்கும் தேவனே காரணம்!! அது எல்லாம் உமக்கு புரியாது!! நீர் காலாட்டாமலே இருப்பதால் தான் உம் தெருவே இன்று கிறிஸ்தவர்களாக இருக்கிறார்களோ!! பரவாயில்லையே!! உம் பக்கத்து விட்டிலேயே உம்மால் இது வரை சொல்லியிருக்க முடியாது, மிஷனரிகளை பற்றி வக்கனையாக பேசுவது பெரிது அல்ல, அவர்கள் செய்ததில் ஒரு சதவ்கிதமாவது உம்மால் செய்ய முடியாது!!  மேலும் பைபிளை கைய்யில் மாத்திரம் இல்லை, மொபைலிலும் வைத்திருக்கிறேன், புரிகிறதா!! அதான் தடுக்கி விழுந்தா ஈ.எல்.எஸ், சி.எல்.எஸ் போன்ற பல கடைகள் இருக்கிறதே, அங்கே இருந்து நானே வேத புத்தகங்களை வாங்கிக்கொள்கிறேன்!! போதுமா!!

என் பணத்தை இல்லை, உம்மை போலவும், இன்னும் தசமபாகம் வாங்கி அதை வங்கிகளில் போடும் அட்"ஊழிய" காரர்களின் பணத்தையும் தான் பாதுகாக்கிறோம்!! இப்ப என்ன அதுக்கு!! ஊழியம் என்கிற பெயரில் ஓசியில் சாப்பிடும் ஓநாய் கூட்டத்தை குறித்து நான் எழுதினால் உமக்கு ஏன் எரிகிறது!!

இங்கே பாரும், நான் இப்படி தான் போதிக்கிறேன், உமக்கு பிடிக்கிறப்படி எல்லாம் போதிக்க முடியாது!! உமக்கு எரிச்சலாக இருந்தால் நாங்கள் எழுதியதை வாசிக்காதீர்!! போய் மிஷ்னரியாக மாற வேண்டியது தானே!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//அப்போஸ்தலன், இந்த பட்டத்தை குறித்து மேசியாவின் எதிரிகள் எதையெதையோ கற்பனை பண்ணி எழுதிக்கொண்டிருக்கின்றனர் அப்போது அப்போஸ்தல பணியின் முக்கியத்துவத்தை குறித்து ஸ்மித் விகிள்ஸ்வொர்த்தை குறித்து படிக்கும் போது காண நேர்ந்தது.//

அப்போஸ்தலனை குறித்து வேதம் சொல்லுவதை விட்டு விட்டு இப்படி விகிள்ஸ்வொர்த் என்று படித்துக்கொண்டிருந்தால் வேறு என்ன தெரியும்!!

//நவீன கால அப்போஸ்தலன் என பிறர் விகிள்ஸ்வொத்தை அழைத்தாலும் அதை அவர் கனமாக எண்ணாமல் தனக்கு அளிக்கப்பட்ட வரங்களை விட தேவ வல்லமை வெளிப்படுவதே முக்கியம் என்றார். ஆனால் இதையும் பாருங்கள் இந்த நிர்விசாரிகள் இகழுவார்கள். அவரது கூட்டங்களில் வெளிப்பட்ட தேவனுடைய வல்லமையையும் அவரது ஊழியத்தால் அமெரிக்க கண்டம், நியூசிலாந்து, ஸ்வீடன், அன்றைய சிலோன் எவ்வாறு அசைக்கப்பட்டது என்பதை வரலாறு பதிவு செய்து வைத்துள்ளது. அவரது ஊழியத்துக்கான பலன் இன்றும் இத்தேசங்களில் காணப்படுகிறது. விகிஸ்ஸ்வொர்த் போன்றோர் போகஸ் லைட்டுக்காகவும், ஏ.சி ரூமுக்காக அலையவும் இல்லை. //

அது நவீன காலத்து அப்போஸ்தலன் கிடையாது, விசுவாசத்தின் அப்போஸ்தலன் (Apostle of Faith) என்று தான் விகிள்ஸ்வொர்த்தை குறித்து இருக்கு!!

அமெரிக்க கண்டம் முதல் ஐரோப்பா வரை இன்று சபைகள் மதுபான மண்டபங்களாக மாறி வருவது தெரியவில்லையா!! வரலாறு இனி இதையும் பதிவு செய்யும்!! இது அசைவு இல்லை, அழிவு!! அசைக்க போவது தேவன் ஒருவரே, அப்ப இருக்கு உங்க கூட்டாளிகளுக்கு!! அப்ப தெரிந்துக்கொள்வீர்கள் அசைவு என்றால் என்னவென்று!!

அப்போஸ்தலன் யார் என்பது மிஷ்னரிகளையும் சேர்த்து தொழுதுக்கொள்வோருக்கு புரிய வாய்ப்பே இல்லை!!

//மிஷனரிகளை இகழுவதால் இந்த நரிகளை நாம் எதிர்க்கவில்லை, கிறிஸ்து அறிவிக்கப்படுவதை இவர்கள் எதிர்ப்பதை தான் கண்டிக்கிறோம். //

ஓநாய்களின் கூட்டம் கிறிஸ்துவை அறிவிக்கவில்லை!! தங்களை அப்போஸ்தலர்கள் என்றும், தீர்க்கதரிசிகள் என்றும், போதகர் என்றுமே சொல்ல விரும்புகிறது!! கிற்ஸ்துவினால் எல்லாரையும் இரட்சிக்க முடியாது என்கிற இந்த ஓநாய் கூட்டம், எங்கள் சபைக்கு வாங்க நாங்க உங்களை பரலோகம் கூட்டி செல்கிறோம் என்று ஊளையிடுகிறது!! இந்த ஓநாய்க் கூட்டம் கிறிஸ்துவை இகழ்ந்து பேசி வேறு ஒரு இயேசுவை போதிக்கிறது!!

நாங்கள் சுவிசேஷமாக சொல்லுவதே கிறிஸ்துவினால் எல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள் என்று!! ஆனால் உம் ஓநாய் கூட்டத்தினரால் இப்படி ஒரு போதும் சொல்ல முடியாது!! ஏனென்றால் ஓநாய் கூட்டத்தின் பிரதான போதனையே "நரகத்திற்குள்" போவது தானே!! கோமாளிகள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

ஜோஸப்:
//எல்லாரும் என்றால் எல்லாருமா? அப்புறம் எதற்கு அழைக்கப்பட்டவர்கள் அனேகர் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் சிலர் என்று இருக்கிறது. பலமுறை எரிகிற நரகத்தை பற்றி சொல்லியும் அதை 6 க்கு 4 குழி என்கிறீர்கள். அந்த நரகத்துக்கு பாத்திரமானவர்கள் யார். அவர்கள் இழுத்துக்கொள்ளப்படுவார்களா? என்னய்யா கதை இது. எல்லாரையும் என்றால் எல்லா ஜாதியாரையும் இனத்தாரையும் என்று தான் அர்த்தமாகும். அனைத்து ஜாதியாரிலும் அவரை நிராகரிப்போரும் உண்டு. //

எல்லாரும் என்றால் எல்லாரும் தான்!! எல்லாரும் என்பதற்கு வேறு ஒரு அர்த்தம் இருக்கவே முடியாது!!

ALL means ALL!! Nothing less, not even one less!!

நீங்கள் தான் டாக்டர் கதைகளை (கிரேக்க புராண) நம்பி நரகம் என்றால் தீ எரிந்துக்கொண்டு இருக்கும் இடம் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறிர்கள்!! அதோடு கூட உங்கள் முனோடிகளான கத்தோலிக்க சபை, ப்ரொடஸ்டண்ட் சபைகள் கொண்டு வந்த கொடுமையான தியரி தான் தீ எரிந்துக்கொண்டிருக்கும் நரகம்!!

ஹெல் (ஹேடஸ்) என்கிற ஒரே வார்த்தையை வைத்து பலவிதமான கதைகள் கட்டுவது உம் கூட்டத்தார் தான்!! நாங்கள் சொல்லும் வேதத்தில் இருக்கும் நரகத்திற்கு எல்லாரும், எல்லாரும் என்றால் ஒருவர் விடாமல் எல்லாரும் தான் பாத்திரமானவர்கள்!! அந்த நரகத்தின் வல்லமையிலிருந்து இழுத்துக்கொள்ளவே கிறிஸ்து "எல்லாரையும் மீட்கும் பொருளாக" தம்ம கொடுத்தார்!! உங்களுக்கு இது புரியாது!! ஏனென்றால் எல்லாரும் என்றால் எல்லாருமா? என்று அல்லவா கேட்க்கிறீர்கள்!! எல்லா ஜாதியாரையும் இனத்தாரையும் என்றாலும் எல்லாரும் என்றாலும் ஒன்று தான்!! அவர் யாரையும் நிராகரிக்கப்போவதில்லை, உங்களையும் தான்!! இன்று நீங்கள் எவ்வுளவு தான் தேவனை தப்பாக பேசினாலும், கிறிஸ்துவின் மீட்கும் பொருளின் பயனாய் நீங்களும் "இரட்சிக்கப்படுவீர்கள்"!! கவலைப்படாதீர்கள்!!

//நீங்க தான் தமிழ் பைபிளிலேயே இஸ்ரவேல் என எழுதப்பட்டதை நக்கலடிப்பவர்கள் ஆயிற்றே, மூல பாஷையில் ஏதாவது ( நீர் வைத்திருப்பது ஒரிஜினலா?) பார்த்து வழக்கம் போல சொல்லும்.//

Israél: Israel, the name of the Jewish people and their land
Original Word: Ἰσραήλ, ὁ
Part of Speech: Proper Noun, Indeclinable
Transliteration: Israél
Phonetic Spelling: (is-rah-ale')
Short Definition: Israel
Definition: (Hebrew), Israel, surname of Jacob, then the Jewish people, the people of God.

கட்டுகதைகளை கேட்டு வேதத்தை வாசிக்க கூடாது டாக்டர்!! இஸ்ரஹேல் என்பதை இஸ்ரவேல் என்று சிலர் மொழிப்பெயர்த்தாலும் அதை ஏன் ஏற்றுக்கொள்ளவேண்டும்??

//பூமியில் இருந்து மரத்தில் தூக்கப்பட்டபோது அவரது மரணத்தின் வழியான ரட்சிப்பை அனைத்து இனத்துக்கும் பொதுவானதாக்குகிறார். எப்படி ஆதி மனிதன் விலக்கப்பட்ட கனியை புசிக்கவோ புசிக்காமல் இருக்கவோ முடியுமோ அதே போல இரட்சிப்பை பற்றி ஏற்றுக்கொள்ளவோ நிராகரிக்கவோ மனிதனுக்கு முடிவு செய்யும் காரணி உண்டு. வாசற்படியில் நின்று தட்டுகிறேன் என்று தான் சொல்கிறார் ஒருவன் அவர் சத்தத்தை கேட்டு (கேட்காமல் இருக்கவும் முடியும்) கதவை திறந்தால் (திறக்காமல் இருக்கவும் முடியும்) அவனோடு போஜனம் பண்ணுவேன் என்றார். //

அது மரத்தில் தூக்கப்பட்டபோது இல்லை டாக்டர்!! அது உயிர்த்தெழுந்து உன்னதங்களுக்கு சென்ற பிறகு!! மரத்தில் தூக்கப்பட்டது அவர் தன்னை எல்லாருக்காகவும் மீட்கும் பொருளாக தம்மை கொடுத்தத்தை காண்பிக்கிறது!! உன்னதங்களுக்கு ஏறி பிதாவின் வலது பக்கத்திலிருந்து ஒரு பிரதான ஆசாரியராக இருந்து சபைக்காக பரிந்து பேசுபவராக இழுத்துக்கொள்கிறார், அப்படியே உலகத்திற்கும் தேவனுக்கும் மத்தியஸ்தராக இருக்கிறார்!! எல்லாரையும் இழுத்துக்கொள்ளுகிறார் என்பது இங்கே தான் நடைபெறுகிறது!! ஆதாம் பழத்தை புசிப்பான் என்று முன்னமே தீர்மானிக்கப்பட்ட ஒன்று தான், ஆகவே தான் கிறிஸ்து உலகதோற்ற முதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாக வைக்கப்பட்டிருந்தார்!! ஏதோ ஆதாம் தேவனுக்கு தெரியாமல், பழத்தை புசிக்கவில்லை, அல்லது புசிப்பானா மாட்டானா என்பது தேவனுக்கு தெரியாது என்று சொல்லுவது தேவனின் சர்வவல்லத்துவமையை எதிர்த்து கேட்பதாகும்!! அவர் தட்டும் போது சவுலாக இருந்தாலும் திறந்தே தீருவார்கள்!!

//எல்லாருக்கும் ரத்தம் சிந்தியாகிவிட்டது அதனால் எல்லாருமே (அவர்கள் எப்படியிருந்தாலும் ரட்சிக்கப்படுவார்கள்) என்றால் அதை அவர் தனது சீடர்களுக்கு அறிவிக்க சொல்லி தேவையே பட்டிருக்காது. //

எல்லாருக்காகவும் இரத்தம் சிந்தப்பட்டதன் நோக்கம் தெரியாதவரையில் உங்களை போன்றோர் இதையே தான் சொல்லிக்கொண்டு இருப்பீர்கள்!! இரத்தம் சிந்துதல் எல்லாரையும் மரனத்திலிருந்து உயிர்த்தெழசெய்வதற்காக கொடுக்கப்பட்ட பலி!!  இந்த சுவிசேஷத்தை ஏற்று வெகு சிலர் சபையில் கிறிஸ்துவின் சாயலாக உருவாக்கப்படுகிறார்கள், இது கிறிஸ்து பரமேறியது முதல் உயிர்த்தெழுதல் மட்டும் நடக்கும், சபைக்கான தேர்வு நடந்துக்கொண்டே இருக்கும்!! இதில் நானா, நீங்களா என்பது எனக்கு தெரியாது!! சீடர்களுக்கு சொன்னது சுவிசேஷத்தை அறிவிக்க சொன்னது, நரக போதனையை அல்ல‌!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//உமக்கு பதில் எழுதக்கூடாது என்பது என் வைராக்கியம் அல்ல ஆனால் உமது தளத்திற்கு வரக்கூடாது என்பது தான் எனது வைராக்கியம். நியாயத்தீர்ப்பில் சாட்சி யாருக்கு எது கொடுக்கும் என பார்ப்போம், காலத்துக்கு முன் நீர் நியாயந்தீர்க்கவேண்டாம். தேவனே நியாயம் தீர்ப்பார்.//

நியாய்த்தீர்ப்பு என்பது உயிர்த்தெழுதலுக்கு பின் உண்டு என்று வேதம் சொல்லுவதை சொல்லுகிற நாங்கள் ஒரு போதும் நியாயத்தீர்க்க அவசியம் இல்லை!!

//மதுபான மண்டபங்களாக மாறுவது பற்றி உங்களுக்கு ஏன் சார் கரிசனை, அஃதான் எல்லாரும் இழுத்துக்கொள்ளப்படுவார்கள் அல்லவா?//

எனக்கு கவலை இல்லை டாக்டர்!! இருக்கிறதை சொல்லுகிறேன், அவ்வுளவே!! இப்பவும் சொல்லுகிறேன், இவை எல்லாம் நடப்பது வேதத்தில் இருக்கிறபடியே தான், அதாவது மனுஷகுமாரன் வரும் நாட்களில் விசுவாசத்தை காண்பாரோ!! இழுத்துக்கொள்வேன் என்று கிறிஸ்து சொல்லுவதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது!!

//விகிள்ஸ்வொர்த்தை ப‌ற்றி தேடிப்பிடித்து வாசித்தீராக்கும். அவ‌ர் இயேசுவை தெய்வ‌மாக‌ தொழுத‌வ‌ர் என்று தெரியுமா? மிஷ‌ன‌ரிக‌ளை யாரும் தொழுதுகொள்ள‌வில்லை, லூசுத்த‌ன‌மாக‌ எதையாவ‌து கிறுக்காதீர். மிஷ‌ன‌ரிக‌ள் கிறிஸ்துவின் ர‌ட்சிப்பை ப‌ற்றி அறிவித்த‌தை உங்க‌ள் ந‌ரிக்கூட்ட‌ம் ப‌க‌டி செய்வ‌தை தான் க‌ண்டித்து எழுதுகிறோம், ஏனெனில் கிறிஸ்துவின் ர‌ட்சிப்பு என்ப‌த‌ற்கு ம‌னம்திரும்புத‌ல் தேவை, அவரை ரட்சகராக ஏற்றுக்கொள்ளுதல் தேவை,உங்க‌ளுக்கு தான் அவ‌ன‌வ‌ன் எப்ப‌டி யிருன்தாலும் ப‌ர‌வாயில்லை அல்ல‌வா. அப்ப அறிவிக்க‌ப்ப‌டுவ‌து உங்க‌ளுக்கு ப‌க‌ ப‌க‌ வென்று எரிய‌த்தானே செய்யும். //

விகிள்ஸ்வொர்த்தை பற்றி மட்டும் இல்லை இன்னும் நிறைய பேரை தேடிப்பிடித்து வாசிக்கிறேன்!! இவர்கள் எப்படி எல்லாம் வேதத்தை விட்டு விளகி போதித்தார்கள் என்று, இவர்கள் மூலமாக தேவனின் வசனம் எப்படி எல்லாம் நிறைவேறுகிறது என்று!! மிஷ்னரிகள் கிறிஸ்துவின் இரட்சிப்பை போதித்தார்கள், நாங்கள் கிறிஸ்துவினால் உண்டாகும் இரட்சிப்பை போதிக்கிறோம்!! உங்கள் போதனைப்படி கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத அனைவரும் நரகத்திற்கு போய் விடுவார்கள் என்றால் எதற்கு நியாயத்தீர்ப்பு!! யாற் கற்றுக்கொள்வார்கள்!!

//நீர் உம் முன்னோர் எல்லாம் தேவனை பற்றி அறிந்தது தேவனுன் காரணம் என்கிறீர், நீர் கண்டுகொண்டது உண்மையான ரட்சிப்பாயிருந்தால் அதை அடுத்தவருக்கு அறிவிப்பது உமக்கு அபத்தமாக இருக்காது. இல்லையென்றால் அதை அறிவிப்பவன் உமக்கு அபத்தமாக தான் தெரிவான்.//

ஒவ்வொருவனுக்கும் தேவனை அறிந்துக்கொள்ள அவர் காலம் வைத்திருக்கிறார்!! அதை நான் முடிவு செய்வதில்லை, தேவன் முடிவு செய்கிறார்!! இரட்சிப்பை இனிமேல் தான் காணப்போகிறேன், ஏனென்றால் இரட்சிப்பு என்பது மரணத்திலிருந்தே தவிர வேறு ஒன்றும் இல்லை!!

//சரி தானியேலில் 12:3 ல் வரும் வசனத்துக்கு என்ன அர்த்தம், நீதிக்கு உட்படுத்துதல் என்றால் என்ன‌?//

நீதி என்பதே தேவனை அறிந்துக்கொள்வது தான்!! இந்த வசனமும் அதை தான் சொல்லுகிறது!!

ஏசாயா 26:9 என் ஆத்துமா இரவிலே உம்மை வாஞ்சிக்கிறது; எனக்குள் இருக்கிற என் ஆவியால் அதிகாலையிலும் உம்மைத் தேடுகிறேன்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் பூமியிலே நடக்கும்போது பூச்சக்கரத்துக்குடிகள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள்.

இது தானுங்கோ நீதிக்கு உட்படுத்துதல்!! அது சரி, இவர்கள் எல்லாரும் தான் நரகம் போய்விடுவார்களே, பாவம் தேவன் தெரியாமல் தானியேல் மூலமாக ஒரு தீர்க்கதரிசனத்தை எழுத வைத்த்திருக்கிறார்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//1) இவர்கள் சொல்வது எல்லாம் உண்மைதான் என வைத்துக்கொள்வோம், எல்லாருக்கும் மீட்பு தியரிப்படி மற்றவர்களுக்கு எப்படியாவது மீட்பு கிடைத்துவிடும், கேடு கெட்ட பாவிக்கே மீட்பு சாத்தியமாகும் போது கிறிஸ்துவை தொழுதுகொண்டு பரிசுத்தவான்களாக மரித்தவர்கள் நிச்சயம் மீட்பை கண்டடைவார்கள், ஒருவேளை ராஜ்யத்தில் கற்றுக்கொள்ளும்போது கூட அது சாத்தியப்படலாம்.//

நல்ல கள்ளன் என்று சபைகளில் சொல்லப்படுபவன் எந்த வித மனந்திரும்புதலும் அடையவில்லை!! அவன் கிறிஸ்துவை தொழுதுக்கொள்ளவில்லை, மாறாக மீட்பர் என்றே அறிவிக்கிறான்!! இதோ அந்த சம்பாஷனை:

லூக்கா 23:40. மற்றவன் அவனை நோக்கி: நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா? 41. நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம் நாம் நடப்பித்தவைகளுக்குத்தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு, 42. இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான். 43. இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

உம்முடைய ராஜியம் என்பது தேவனின் ராஜியமே அன்றி வேறு ஒன்றும் இல்லை!! அந்த ராஜியத்தில் கிறிஸ்து வரும் போது (நல்ல) கள்ளனும் இருப்பான், இதை வாசிப்போரும் இருப்பார்கள்!!

மேலும் எல்லாருக்கும் மீட்பு என்பது தியரி என்று சொல்லி கொச்சை படுத்தாதீர்கள்!! அது தேவ நியமனம், தேவ சட்டம், தேவனின் சித்தம்!! ஏனென்றால் எல்லாரையும் இரட்சிக்கும் படியாகவே கிறிஸ்து இயேசு வந்தார்!! எல்லாருக்காகவும் மரித்தார்!! இது தியரி கிடையாது இது தான் சத்தியம்!! இது தான் சுவிசேஷம்!! இது தான் நடக்கும் என்று வேதத்தில் கிறிஸ்து இயேசுவே சொல்லுகிறார்!!

//2) இந்த இரண்டாவது சாத்தியக்கூறு இருக்கு பாருங்க, அஃதாவது இவர்கள் சொல்வது, நம்பியது எல்லாம் தவறாக இருந்து தொலைத்தால்..... ஏற்கனவே இயேசு தொழத்தக்கவர் அல்லன்னு சொல்லியாச்சு, பரிசுத்த ஆவி ஆள்தத்துவம் இல்லன்னு சொல்லியாச்சு, நரகம்ன்னு ஒண்ணு கிடையாதுன்னு சொல்லியாச்சு, இவ்வளவு பெரிய மீட்பை குறித்து கவலையில்லைன்னு ஆயிடுச்சி, அதை அறிவிப்பவன் கள்ளப்போதகன்ன்னு சொல்லியாச்சு.... இன்னும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குழம்பி அடுத்தவனையும் குழப்பியாச்சு.. கடைசியில் நண்பர்களே.... நினைக்கவே முடியல‌..... கொஞ்சம் யோசிங்க‌//

இது தான் உங்களுக்கும் எங்களுக்கும் இருக்கும் வித்தியாசம்!! நீங்கள் இரட்டை வேடதாரிகள்!! இப்படி இருந்தாலும் லாபம், அப்படி இருந்தாலும் லாபம் என்கிற மாதிரி ஏதோ ஒரு கோட்பாட்டில் ஃபிட் ஆக பார்க்கிறீர்கள்!! எங்கள் விசுவாசம் சத்தியம்!! யூகங்கள் கிடையாது!! இப்படியா, அப்படியா கிடையாது!! ஒரே வழி, அந்த வழி கிறிஸ்துவே, தேவனை அடையும் வழி, தட்ஸ் ஆல்!!

அய்யா, சத்தியம் என்பது உலகத்தில் இருக்கும் அனைவரும் இப்பொழுது ஏற்றுக்கொள்ளும்படியாக வைக்கப்படவில்லை!! அது அநேகருக்கு பொய் என்றும், இடறல் என்றுமே இருக்கிறது, நியமிக்கப்பட்டிருக்கிறது!! சொற்ப ஜனங்களுக்கே அது இந்த கடைசி காலத்தில் (சுவிசேஷ காலத்தில்) வெளிப்பட்டிருக்கிறது!! ஆகவே நீங்கள் இத்துனை கோடி பேர் திரித்துவம் போன்ற மனித தியரியை நம்புவதினால் மாத்திரமே தப்பானது எல்லாம் சரி என்று ஆகிவிடாது!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard