kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மெத்தப்படித்த கோல்டா...


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
மெத்தப்படித்த கோல்டா...


மெத்தப்படித்த கோல்டா...

//வேதத்தில் சொல்லப்பட்டிருப்பதால், இலஞ்சம் கொடுத்து காரியம் சாதித்துக் கொள்ளலாம், இலஞ்சம் வாங்கலாம் என்றும் சோல் நினைத்துக் கொண்டிருக்கிறார்.

I கொரிந்தியர் 15:29 மேலும் மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், மரித்தவர்களுக்காக ஞானஸ்நானம் பெறுகிறவர்கள் என்ன செய்வார்கள்? மரித்தவர்களுக்காக ஏன் ஞானஸ்நானம் பெறுகிறார்கள்?

வேதத்தில் சொல்லப்பட்டிருப்பதால் சோல் மரித்தவர்களுக்காக ஞானஸ்நானம் எடுக்கலாம் என்று சொல்கிறார்.

அத்துடன், பிரசங்கி எழுதிய சாலமோனே பலரைத் திருமணம் செய்து வாழ்ந்ததால், அது தவறல்ல என்று சோல் கருதுகிறார்!

வேதத்தை வாசிக்கும்போது எது என்ன context இல் சொல்லப்பட்டிருக்கிறது என்று அறிந்து புரிந்து வாசிக்க வேண்டும். நீங்க அப்படி செய்கிறதில்லையாகையில்,  you should be ashamed of yourself.//

லூசுக்கூட்டம்தான் நீங்கள் என்பதை ஆணித்தரமாக நிரூபித்து வருகிறீர்கள்.

மூடப் பெண்மணியே, வேதம் வாசிக்கும்போது அது எப்போது யாருக்கு சொல்லப்பட்டது என்பதை அறிந்து புரிந்து வாசிக்க வேண்டும் என்றுதானே நாங்கள் காது கிழிய கத்திக்கொண்டிருக்கிறோம். சீடர்களுக்கும் அப்போஸ்தலருக்கும் 'கட்டளை'யிடப்பட்ட விஷயத்தை எனக்கு என்று பிடித்துக்கொண்டு மாய்மாலம் செய்வது நீங்களும் உங்கள் கேலீக்கூத்தடிக்கும் கூட்டத்தாரும்தான்.

மேலும் அடிப்படை சத்தியங்கள் மாறுவதில்லை முக்கியமாக பழைய ஏற்பாட்டில் ஒருவகை மரணம், புதிய ஏற்பாட்டில் ஒரு மரணம் இல்லை. அது போலத்தான் இரட்சிப்பு, பாவ மன்னிப்பு, ஈடுபலி எல்லாமே. இவைகளை யாரும் 'கடைபிடிக்க'த் தேவையில்லை.

"ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன் பந்தியிருப்பார்கள்" என்ற வசனத்தைப் பிடித்துக்கொண்டு விபச்சாரம் செய்யச் சொல்லவில்லை.

Context பற்றி எழுத வெக்கமாயில்லை. ஆசீர்வாத வசனம் வேணும்னாமட்டும் பழைய ஏற்பாடு, காரணம் புதிய ஏற்பாட்டில் 'பாடுகள்'தானே ஆசீர்வாதம். அதைச் சொன்னால் ஒருத்தனும் காணிக்கை அனுப்ப மாட்டானே. 

பிரசங்கிதான் நாத்திகனாயிற்றே உங்களைப் பொறுத்தவரை... அவன் எப்படி 'நீதி' மொழிகளை எழுத முடியும்.

ஏன் கிறிஸ்துவே,

லூக்கா 16:9 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்வாருண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்.

என்கிறாரே இதற்கு என்ன அர்த்தம் விளங்கிக்கொண்டீர்களோ?

உங்களுக்கு சாது நாய் சொன்னால் வேத வாக்கு, வேதம் சொன்னால் இடக்கு! இல்லையா?

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான் என்று இயேசு கிறிஸ்து சொல்லியிருக்கிறார். இப்படி எந்த மனிதனாவது, தூதனாவது சொல்ல முடியுமா? நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறார் என்றும் சொல்லியிருக்கிறார். இப்படி எந்த மனிதனாவது, தூதனாவது சொல்ல முடியுமா?//

எல்லாம் "சரி நானே பிதா" என்று ஏன் சொல்லவில்லை?

இவன பாத்தா இவங்கப்பன பாக்க வேண்டாம் அவ்வளவு ஒற்றுமை என்று நிறைய பேர் சொல்லியிருக்காங்க‌..

நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறார் அதேபோல... 

யோவான் 17:21. அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும்(????) வேண்டிக்கொள்ளுகிறேன்.

22. நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி நீர் எனக்குத்தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்.

பாதி வசனத்த பதிச்சு மேதாவித்தனத்த காட்டவேண்டாமே?

"அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்க" என்றால் எல்லாருமே பிதாவா? 

உங்கள் கதைக்குதவாத வியாக்கியானத்தைக் கொண்டுபோய் உங்கள் வேசிமார்க்க சபைக்குச் சொல்லுங்கள்.

நாம் ஒன்றாயிருக்கிறது போல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி... என்றால் ஒரே ஆளாகவா?

அறிவில்லை?

எதற்காக கடிந்துகொள்கிறோம் என்று தெரிகிறதா?

மூட ஜென்மங்கள்...

திருந்தாது....  

வஞ்சக ஆவிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட மூட ஜனம்.



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//நாங்கள் இல்லாவிட்டால் உங்களுக்கும் வேறு போக்கிடம் இருப்பது போல் தெரியவில்லை.//

இப்படியெல்லாம் சமாளிப்பீர்கள் என்று தெரியும். நாங்களும் உங்களுக்காக மெனக்கெட்டு பதிலளிப்பதில்லை சகோதரி.... மூடக்கிறிஸ்தவத்துக்கு நீங்கள் ஒரு ஆக இருப்பதால் தளத்துக்கு வரும் யாருக்கேனும் எங்கள் பதில் பிரயோஜனமாக இருக்கும் என்ற ஒரே நோக்கில்தான் இயங்கிவருகிறோம். எங்களுக்கு விளம்பரம் செய்து தருவதற்கு நன்றி!

நரகத்துக்கு யாரும் போகப்போவதில்லை....

ஏனென்றால் அப்படி ஒரு வார்த்தையே மூல மொழியில் இல்லை.... இல்லவே இல்லை. சாத்தானின் வஞ்சகம்.

பாவத்தின் சம்பளம் மரணம்... மரணம் மட்டுமே...



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//நீங்க சொல்வது ரோட்டின் நடுவில் நின்று கொண்டு கண்ணை மூடிக் கொண்டு, லாரி என்று ஒன்று இல்லை. பஸ் என்று ஒன்று இல்லை. எல்லாம வஞ்சகம், பொய், ஏமாற்று வேலை என்று கத்துவதைப் போல் இருக்கிறது!//

மீண்டும் முட்டாள்தனம். லாரி, பஸ் ஓடுவது எல்லாருக்கும் தெரியும். நீங்கள்தான் இல்லாத நரகத்திலிருந்து ஜனங்களை காப்பாற்றும் முயற்சியில் இருக்கிறீர்கள்... பாவம். லாரி பஸ் பார்ப்பதுபோல எத்தனை பேர் நரகத்தைப் பார்த்தீர்கள்? 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//பிதாவைப் பார்த்திருக்கீங்களா? இயேசு கிறிஸ்துவை? தேவ தூதர்களை?

 

எப்படி நம்புகிறீர்கள்?//

 

பிதா, இயேசு கிறிஸ்து, தேவதூதர்கள் இவைகளெல்லாம் உண்டு என்று மூல மொழி ஒரிஜினல் வேதாகமத்தில் காணலாம். வசனமே சத்தியம். மூல மொழி வேதாகமத்தில் நரகம் என்ற வார்த்தை கிடையவே கிடையாது...

 

ச கோ த ரி...

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

 

//நரக வசனங்கள்:

 

எல்லா வசனத்தையும் நிறுத்தி நிதானமா வாசிங்க. நரகத்திற்குப் போகக் கூடாது என்று தோன்றும்.//

 

இந்த நரகம் மூல பாஷையில் இல்லை என்று எப்பவோ சொல்லியாச்சு....

இந்து பிராமணர்கள் மொழிபெயர்த்த தமிழ் வேதாகமத்தில் இருக்கிறது. மொழிபெயர்ப்புப் பிழை. 

 

 மேலும் அக்கினியில் எதைப்போட்டாலும் அழிந்துதான் போகும்.;

ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள். 

மேலும் நீங்கள் பதித்த ஒரு வசனத்தில் கூட 'நித்திய வாதை', 'வேதனை' என்ற பதம் இல்லவே இல்லை. அழிவைக் குறிக்க இயேசு பிரயோகித்த "கெஹன்னா" என்ற வார்த்தையே தமிழில் "எரி நரகம்" ஆகிவிட்டது. அப்ப எரியாத நரகம் உண்டோ?



-- Edited by soulsolution on Thursday 22nd of September 2011 01:20:03 AM



-- Edited by soulsolution on Thursday 22nd of September 2011 01:20:34 AM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

A divine revelation of Hell - Mary K Baxter
http://spiritlessons.com/mary_k_baxter_a_divine_revelation_of_hell.htm

 

II தீமோத்தேயு 4:4 சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்.

இந்த கதையும் அப்படி பட்ட ஒரு கட்டுக்கதையே!! இதற்கே சாய்ந்துபோகிற சபைகள் இருக்கிறது!! கோல்டா போன்றோர் அந்த சபையை நிறப்பியிருக்கிறார்கள், நிறப்புவார்கள்!!

ஆகவே, கோல்டாஜி,

I தீமோத்தேயு 4:7 சீர்கேடும் கிழவிகள் பேச்சுமாயிருக்கிற கட்டுக்கதைகளுக்கு விலகி, தேவபக்திக்கேதுவாக முயற்சிபண்ணு.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//அதே வெளிப்பாட்டுடன் தான் National Prayer Network 50 நாள் ஜெபம் ஒழுங்கு செய்திருக்கிறது. இதையெல்லாம் கேட்க ஆச்சர்யமா இல்லையா?//

ஆச்சர்யமா தான் இருக்கிறது!!?? எப்படி தான் ஜெபம், உபவாசம் என்று சொல்லி காசு பார்க்கிறார்கள் என்கிற ஆச்சரியம்!! வேதம் ஜெபத்தை குறித்து தெளிவாக எழுதியிருந்தும் இப்படி கூட்டம் போட்டும் கூச்சல் போட்டு, முற்சந்திகளிலும், வீதிகளிலும் நிற்பது தான் ஜெபம் என்கிறார்களே, ஆச்சரியம் தான்!! தேசத்திற்காக ஜெபிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை, ஆனால் அது தேவனின் சித்தமா என்று பார்க்காமல் இருப்பது, ஆச்சரியமாக தான் இருக்கிறது!!

இது போன்றே, இன்னும் பலதை கட்டி வைத்து ஜெபிக்கும் கூட்டத்தார் இருக்கிறார்கள், முழங்கால் யுத்தம் நடத்துவோர் இருக்கிறார்கள், ஏன் இந்தியா எப்பவோ "கிரிஸ்தியா"வாக மாறியிருக்கும் என்று சொன்ன ஓநாய்கள் இருக்கிறார்களே!! அதை எல்லாம் ஒரு "விசுவாசியும்" கேட்கிறார்களா!!?? இந்த "National Prayer Network 50" ஜெபமும் அதற்கான குழுவும் தன் நோக்கத்தில் (பணமோ, புகழோ பார்ப்பதில் தான்) வெற்றி பெறுவார்கள், விசுவாசிகள் வழக்கம் போல் ஏமாறுவார்கள், வஞ்சிக்கப்படுவார்கள்!! ஜெபம் என்றால் எதுவெல்லாம் இல்லை என்பதை இவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளலாம்!!

ஜெபம் இல்லாததை ஜெபம் என்று சொல்லுவதில் ஆச்சர்யமாக இருக்க தான் செய்கிறது!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//இதில் காசு எப்படி பார்க்க முடியும்??//

இது என்ன புது கதை!! காணிக்கை தொட்டிகள், காணிக்கை பெட்டிகள், இந்த ஜெப ஊழியத்தை தாங்க கர்த்தர் உங்களை ஏவினால் உங்களுக்கு முயன்றதை கொடுங்கள் போன்றவை பிறக்கும் இடம் தான் இது போன்ற கூட்டம்!! இப்படி தான் காசு பார்க்க முடியும்!!

//தேவனின் சித்தமா என்று எப்படிப் பார்ப்பது?//

வேதத்திலிருந்து தான்!! உங்கள் சோஃபா ஊழியர்களிடம் வந்து பேசும் "தேவர்கள்" யார் தெரியுமா?? வேதத்தின் தேவன் கிடையாது, ஏனென்றால் வேதத்தின் தேவன் தன்னையும் தன் சித்தத்தையும் வேதத்தில் எழுதியிருக்கிறார்!!

2 தீமோத்தேயு 3:1. மேலும், கடைசிநாட்களில் கொடியகாலங்கள் வருமென்று அறிவாயாக. 2. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய் தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், 3. சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், 4. துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், 5. தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு.

இது நடக்கும் என்கிறது வேதம், இது தேவ சித்தம்!! இப்படிப்பட்டவர்களை விட்டு விலகுவது தேவ சித்தம்!! வாருங்கள் நாம் கூடி இப்படிப்பட்டவைகள் நடக்க கூடாது என்று ஜெபிக்கலாம் என்பது தேவ சித்தத்திற்கு விரோதமான "ஜெபம்"!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//Amen to that prayer!

What they need is a real personal one to one encounter with God!

என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான் என்று இயேசு கிறிஸ்து சொல்லியிருக்கிறார். இப்படி எந்த மனிதனாவது, தூதனாவது சொல்ல முடியுமா? நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறார் என்றும் சொல்லியிருக்கிறார். இப்படி எந்த மனிதனாவது, தூதனாவது சொல்ல முடியுமா?//

ஜெபத்திற்கும் போதனைகளுக்கும் தீர்க்கதரிசனங்களுக்கு ஆமென் சொல்லலாம்!! இயேசு கிறிஸ்துவை பிதா என்று சொல்ல முற்படும் ஜெபத்தை போன்ற வேஷம் தரித்த ஒரு பகுதிக்கு ஆமென் சொல்லலாமா!!??

என்னை கண்டவன் பிதாவைக் கண்டான் என்ற சொன்ன இயேசு கிறிஸ்து நானே பிதா என்கிற ஒரே வார்த்தையில் எல்லா குழப்பத்திற்கும் தீர்வை கொடுத்திருக்கலாமே!! அவர் நோக்கம் அது அல்ல!! அவர் நோக்கமே நீங்கள் பிதாவை இப்பொழுது யார் என்று தெரிய வேண்டாம், கிறிஸ்து யார் என்று அறிய வேண்டாம் எம்பதே!! ஏனென்றால் இப்பொழுது சிலருக்கு அந்த வெளிச்சத்தை கொடுத்து (அதாவதி பிதா வேறு கிறிஸ்து வேறு என்கிற சத்திய வெளிச்சம்) அதன் பின் ராஜியத்தில் இவர்கள் மூலமாக மற்ற அனைவருக்கும் அந்த சத்தியத்தை புரியவைப்பது தான்!!

பிதாவை ஒருவனும் ஒருபோதும் மாம்சத்தில் காண முடியாது என்பதை சொல்ல தான் அப்போஸ்தலர்களிடம் அப்படி சொல்லியிருக்கிறார்!! அதாவது எனக்கு (இயேசு கிறிஸ்து) இருக்கும் அனைத்தும் பிதாவை போலவே தான், என் செயல்பாடுகள், என் வார்த்தைகள், என் அன்பு, ஆகவே நீங்கள் என்னை பார்த்ததே பிதாவை பார்த்தது போல் தான்!!

எந்த மனிதனும் தூதனும் இதை சொல்ல முடியாது ஏனென்றால் கிறிஸ்து ஒருவரே பிதாவின் சாயலாக (Exact image -Xerox copy) இருக்கிறார்!! நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறார் is not about a PHYSICAL attachment or in PERSONAL SENSE!!
மாறாக ஒருவரு மற்றோருவருக்குள் இருப்பது சிந்தையால் மாத்திரமே!!

இந்த ஒன்று இரண்டு வசனங்கள் மற்ற அனைத்து வசனங்களின் அர்த்தத்தையும் பாதிக்காது!! ஏனென்றால் இந்த இரண்டு வசனங்களும் சொல்லுவது உங்கள் கூட்டத்தாருக்கு இப்பொழுது புரியாது, புரிய ஒரு காலம் வருகிறது, அப்பொழுது புரிந்துக்கொள்வீர்கள்!!

And what you need is really a deep study in scripture and thorough knowledge of God which is not possible without His calling!! There are so many false prophets into this world who claim to have a REAL PERSONAL ENCOUNTER with GOD......And the scriptures call them LIARS and HYPOCRITES, so DO WE!! You don't trust the Word of God but rather have faith on these so called one to one REAL PERSONAL ENCOUNTER people!!

யோவான் 10:36 பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா?

பிதாவினால் அனுப்பப்பட்ட இயேசு கிறிஸ்துவை நீங்கள் பிதா என்று சொல்லி தூஷனம் செய்கிறீர்கள்!! நாங்கள் அவரை தேவனுடைய குமாரன் என்று சொல்லுவதினால் நாங்கள் தேவதூஷனம் செய்கிறதாய் நீங்கள் சொல்லலாமா!!??



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//ஆமாம். இவர் அவரோட அச்சு அசலான படம். இவர் மட்டும்தான் அப்படி. வேறு யாரும் இப்படிப்பட்ட உருவ ஒற்றுமையுடம் இருந்ததில்லை. இருக்கவும் முடியாது.

 ஏவாள் ஆதாமின் விலா எலும்பிலிருந்து வந்ததால் ஆதாமைப் போல மனுஷியானாள். அதுபோல் பிதாவின் வார்த்தைதான் இயேசுவாகிய உருவம் என்பதால், இயேசு பிதாவைப் போன்ற ஒரு கடவுள்தான்.//

நாங்களும் இதை தான் சொல்லுகிறோம்!! கிறிஸ்து ஒருவர் தான் தேவனின் தற்சொரூபம்!! வேறு யாருமே கிடையாது!! இது உருவ ஒற்றுமை சமாச்சாரம் கிடையாது, கத்தோலிக்க ஆலயத்தில் இருக்கும் படத்தை வைத்து எதையும் பேசாதீர்கள்!! அங்கே தான் பிதாவுக்கும் தாடி, இவருக்கும் தாடி என்ற உருவ ஒற்றுமையை காண்பிப்பார்கள்!!

ஆதாமின் விலா எழும்பிலிருந்து வந்த ஏவாள்  உருவ ஒற்றுமையில் ஆதாமை போல் இருந்தாளா!!?? என்ன கூத்து பண்ணுரீங்க‌!!?? அது போலவே பிதாவின் வார்த்தை இயேசுவின் உருவம் என்று பிதற்றுகிறீர்கள்!! வார்த்தை என்பது தமிழில் இருந்தாலும் லோகோஸ் என்கிற வார்த்தையை மொழிப்பெயர்த்து வந்ததாக்கும்!! இந்த லோகோஸ் என்றால் ஏதோ ஒருவர் பேசும் வார்த்தை கிடையாது, மாறாக ஒருவர் பேசுவதை எடுத்து வந்து சொல்லும் ஒரு செயல்!!

என்னங்க நீங்க, இயேசுவே தான் பிதா என்கிறீர்கள், இப்போ மெதுவாக நழுவி, இல்லை இல்லை, இயேசு பிதாவில் இருந்து வந்தவர், அவரை "போன்ற" ஒரு கடவுள் என்கிறீர்கள்!! ஏன் ஒரே நிலையில் இருக்க முடிவதில்லை!!

இவர் தான் அவர், அவர் தான் இவர் என்கிறீர்களா, பிதா வேறு குமாரன் வேறு என்கிறீர்களா!!?? இதை மட்டும் தெளிவாக புரியும்படி எந்த விதமான குழப்பமும் இல்லாமல் எழுதுங்களேன்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//அப்ப எது தேவ சித்தப்படியான ஜெபம் என்று கொஞ்சம் சொல்லுங்களேன்.//

நீங்கள் ஜெபிக்கும் விதம்,

மத்தேயு 6:9. நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது; பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; 10. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.11. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.12. எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.13. எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே

இது கிறிஸ்துவே கற்பித்த ஜெபிக்கும் விதம்!!

எப்படி ஜெபிக்க வேண்டும்?

மத்தேயு 6:7. அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்.

இன்று இதற்கு நேர் மாறாக தானே நடக்கிறது!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//அதுக்குப் பேரு ஞானஸ்நானத்தொட்டி பெரேயன்ஸ் அவர்களே. அதுலயா காணிக்கை போட்டீங்க??//

அம்மணி, ஞானஸ்நானத்தொட்டி எல்லாம் தெரியும்!! ஆனால் அந்த அளவிற்கு பணம் / காணிக்கைகள் வாங்குவோர் காணிக்கை தொட்டியை தான் வைத்திருப்பார்கள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//விசுவாசிகள் ஆடம்பரமா வாழலாம் என்று வசனம் சொல்கிறதா?//

எனக்கு தெரியாது; ஆனால் வசனம் சொல்லுகிறது:

3 யோவான் 1:2. பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்.

இதில் ஆடம்பரம் இருக்கிறதா இல்லையா என்பது எனக்கு தெரியாது!! அப்படியே இருந்தாலும் அது நிச்சயமாக அவன் அவன் செய்யும் வேலையின் நிமித்தமே உண்டாயிருக்க முடியுமே தவிர, காணிக்கை பெட்டிகளால் அல்ல‌!!

//அத்துடன், இயேசு கிறிஸ்து வேலை பார்த்துக் கொண்டே ஊழியம் செய்தது போல் தெரியவில்லையே.//

I கொரிந்தியர் 11:1 நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்.

ஆனாலும் இந்த சோஃபா ஊழியர்களை நீங்கள் இயேசு கிறிஸ்து என்று சொல்லுவதும் ஒருவிதத்தில் வேத வசனத்தை நிரூபிக்கிறது!!

மத்தேயு 24:5. ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்.

//One more for you Bereans! Creflo dollar walks on money to make it more annointed??!!//

ஐய்யே!! உங்க ஆட்களை நீங்களே காட்டிக்கொடுக்குறீங்களே!!

//ஜெபிக்கக் கூடாது என்பதுதான் (அவர்கள் தேவனின்) தேவ சித்தம்!//

எங்கள் தேவன் தான் வேதத்தில் இருக்கிறாரே!! நீங்கள் தான் இவரே அவர் போன்ற ஒரு தேவனை வைத்துக்கொண்டு முற்சந்தியில் கூச்சலிடுகிறீர்கள்!!

//வேற வேற தான். வளையல் வேற. கம்மல் வேறதான். இரண்டும் தங்கம்தான்.//

அப்ப வேற வேற தான் என்று ஒப்புக்கொள்கிறீர்கள்!! நல்லது!! திரும்பவும் மாற்றிக்கொள்ள மாட்டீர்களே!!

// தற்சொரூபம் என்றால் என்ன அர்த்தம்?//

அவரை (பிதா) போன்றவரே ஆனால் பிதா அல்ல‌!! There is always a difference between Original and Express Image (Xerox copy)!! You can't say that the Express Image is THE ORIGINAL!! That's ALL!!

//கிடையாதுதான்//

நீங்க தானே உருவ ஒற்றுமை உண்டு என்கிறீர்கள்!! இப்ப கிடையாது தான் என்கிறீர்கள்!! அதான் சொன்னேன் ஒரே நிலையில் இல்லை என்று!! இப்ப சொல்லுவீர்கள் பிறகு மாற்றுவீர்கள்!!

// ????? Grrrrrr........ படத்தைப் பார்த்து,  பார்த்துப் பேசுங்க! இல்லன்னா, சிங்கம் வந்து கடிச்சிடும்!//

அது இப்பவும் உங்கள் தளத்தில் தான் இருக்கிறது!! நீங்கள் வளர்த்தது உங்களை தான் கடிக்கும்!!

//பிசாசு எப்படியெல்லாம் ஆண்டவரை மட்டம் தட்டணுமோ அப்படியெல்லாம் செய்கிறான். உதாரணத்திற்கு கடவுள் என்று பிறர் வணங்கும் தெய்வ உருவங்களைப் பாருங்கள். நான் கானானியர்,எகிப்தியர், பாபிலோனியர், பெலிஸ்தியர் வணங்கிய தெய்வங்களைப் பற்றி சொல்கிறேன்!! ஆயிரம் பதினாயிரம் பேர்களில் சிறந்தவரை, வெண்மையும் சிவப்புமானவரை, சர்வ வல்லமையுள்ள சகலத்தையும் படைத்த ஆண்டவரை பாம்பாகவும் பல்லியாகவும் பார்த்து வணங்கும்படி செய்கிறான். நான் பெரேயன்ஸைப் பார்த்ததில்லை, எப்படி இருப்பார் என்று ஒருத்தர் கேட்க, நான் ஒரு பாச்சானைக் காட்டி இதுதான் பெரேயன்ஸ் என்று சொன்னால் அது எப்படி இருக்கும்? அது பெரெயன்ஸை அவமதிப்பது போன்ற ஒரு செயல்தானே! அப்படித்தான் இயேசு கிறிஸ்துவை வெறும் தூதர் என்று சொல்வதும் அவரை அவமதிப்பதாகும்.//

குழப்பத்தின் உச்சம்!! பாதி பிதாவை குறித்து எழுதிவிட்டு கடைசியில் இயேசு கிறிஸ்துவை "வெறும்" ஒரு தூதர் என்று சொல்லுவதை குறித்து எழுதுறீங்களே!! இயேசு கிறிஸ்து இப்ப தூதர் என்று ஒரு பதிவிலும் நாங்கள் எழுதவில்லை!! இயேசு கிறிஸ்து தொடக்கத்தில் இருந்த நிலையை மாத்திரமே அப்படி சொல்லுகிறோம்!! இதை கூட புரிந்துக்கொள்ளாமல் இருக்கிறீர்கள் என்றால் தேவனின் செயலே இது!!

பெரேயன்ஸை நீங்கள் பார்க்காமல் இருக்கலாம், ஆனால் பார்த்தவர்கள் பலர் இப்பவும் இருக்கிறார்களே!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//கழுவுற மீனில் நழுவுற மீன் மாதிரி பேசுறீங்களே!பயப்படாதீங்க பெரேயன்ஸ்! ஆடம்பர வாழ்க்கை தப்புன்னா தப்புன்னு சொல்லுங்க. சோல் ஒன்றும் சொல்ல மாட்டார்.//

எங்களை என்ன சில்சாம் கோல்டா என்று நினைத்து விட்டீர்களா!!?? ஆடம்பர வாழ்க்கை என்பதற்கு பல அர்த்தங்கள் இருக்கிறது, நீங்கள் எந்த அர்த்தத்தில் கேட்க்கிறீர்களோ!! அடுத்தவனிடம் காசு வாங்கிக்கிட்டு சாதுவை போல் சோஃபாவில் உட்காருவது ஆடம்பரமே!!

//இந்த வசனத்தின் மூலமாக என்ன சொல்ல வர்றீங்கன்னு தெரியவில்லை. ஆனால் இயேசு கிறிஸ்து ஊழியத்தில் ஒரு காணிக்கைப் பை இருந்தது. அவர் வேலை செய்து கொண்டே ஊழியம் செய்தது போல் தெரியவில்லை. அத்துடன் வேலை செய்து கொண்டிருந்த 12 பேரை வேலையை விட்டு விட்டுதான் தன் பின்னால் வரச் சொன்னார்.//

இதிலிருந்து என்ன சொல்ல வருகிறேன் என்பதை விளக்கினாலும் உங்களுக்கு புரியாது!! இருந்தாலும்....... இயேசு கிறிஸ்து ஊழியத்தில் இருந்த 3 1/2 வருடங்கள் நீங்கள் சொன்னது போல் நடந்தது!! 12 பேர் வேலையை விட்டு தான் வந்தார்கள் இல்லை என்று சொல்லவில்லை!! அவை ஒரு காலத்திற்கு மட்டுமே!!

லூக்கா 10:4 பணப்பையையும் சாமான் பையையும் பாதரட்சைகளையும் கொண்டுபோகவேண்டாம்; வழியிலே ஒருவரையும் வினவவும் வேண்டாம்.

லூக்கா 22:36 அதற்கு அவர்: இப்பொழுதோ பணப்பையும் சாமான்பையும் உடையவன் அவைகளை எடுத்துக்கொள்ளக்கடவன்; பட்டயம் இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக் கொள்ளக்கடவன்.

இரண்டையும் கிறிஸ்துவே சொன்னார், ஏதாவது புரிந்தால் நல்லது!! இல்லாட்டி விட்டு விடுங்கள்!! அடுத்தவன் காசில் சோஃபாவில் தைரியமாக உட்காருவோருக்கு வக்காலத்து வாங்கும் உங்களுக்கு இந்த விஷயங்கள் புரியாமல் இருப்பதே நல்லது!!

//எப்படி நீங்க எங்க ஆட்கள் இல்லையோ, அது போல் அவர்களும்(prosperity gospel preachers) எங்க ஆட்கள் இல்லை!!//

ஆனால் என்ன, அவர்களும் தேவனை மூன்றாக கூறு போட்டு விற்பவர்கள் தானே!!

//Xerox copy will look the same as original. உருவ ஒற்றுமை கிடையாதுன்னு சொல்லிட்டு, இப்படி ஒரு உதாரணம் சொல்றீங்க. //

Xerox copy will LOOK like original, BUT Xerox Copy IS NOT the original!!

// நான் சிருஷ்டிகரைப் பற்றி எழுதினேன். இயேசு கிறிஸ்துதானே சகலத்தையும் சிருஷ்டித்தார்??//

சிருஷ்டிகர் (Engineer, Designer) பிதாவாகிய தேவன்!! கிறிஸ்துவின் "மூலமாக" பிதாவாகிய தேவன் சகலத்தையும் சிருஷ்டிப்பை நடத்துனார்!! ஒரு கட்டிடத்தை கொத்தனார் கட்டினார் என்று யாரும் சொல்ல மாட்டார்கள், Engineer, Builder  கட்டினார்கள் என்று தான் சொல்லுவார்கள்!!

// இப்ப என்னவா இருக்கார்?//

தேவனின் வலப்பக்கத்தில் அமர்ந்து சபைக்கு பரிந்து பேசும் பரிந்துரையாளராகவும், தேவனுக்கும் உலகத்திற்கும் மத்தியஸ்தராக இருக்கிறார்!! உயர்த்தப்படவராக இருக்கிறார்!! ஆளுகை செய்ய வரயிருக்கும் ராஜாவாக இருக்கிறார்!! இப்படி எல்லாமுமாக இருந்தாலும் பிதாவிற்கு கீழ்ப்படிந்து இருக்கிறார்!!

//பார்த்தேன். சூலூர் ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தீர்கள்!//

சாரி!! சூலூர் ஏரியில் மீன்பிடி எல்லாம் இருக்குதா என்று கூட எனக்கு தெரியாது!! எனக்கு வங்கி வேலையே சரியாக இருக்குது!! மீன் பிடிக்க வேறு ஆட்கள் இருக்கிறார்கள்!!

//கணக்கு ஒப்புவிக்கற பிசினஸ் எல்லாம் கிடையாது. அவங்க இயேசு ரொம்ப நல்ல இயேசு. எந்தக் கேள்வியும் யாரையும் கேட்கவே மாட்டார்.//

அன்பு அரைகுறையாக வசனத்தை வாசித்து விமர்சிக்கிறார், நீங்கள் ஆமோதிக்கிறீர்கள்!! எதிரிக்கு எதிரி நண்பன் ஃபார்முலா தானே!! வேதத்தில் உள்ள எங்கள் இயேசு நீங்கள் நம்பினாலும் நம்பாமற்போனாலும், நல்லவரே!! ஏற்ற காலத்தில் நீங்களும் அன்பு போலவே தெரிந்துக்கொள்வீர்கள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//// 12 பேர் வேலையை விட்டு தான் வந்தார்கள் இல்லை என்று சொல்லவில்லை!! அவை ஒரு காலத்திற்கு மட்டுமே!!//

???. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்தானே.//

நான் எழுதியது 12 பேரை குறித்து!!

//உருவ ஒற்றுமை கிடையாது என்று நீங்க தான் சொன்னீங்க. இப்ப copy என்று சொல்றீங்க. பிதா தன்னைத்தானே இப்படி ஒரு காப்பி எடுத்துக் கொண்டாரா?//

கொலோசெயர் 1:15. அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்.

//சரி ஏன் தூதன் என்று இப்ப சொல்லக் கூடாது??//

இப்பவும் வேண்டுமென்றால் சொல்லிக்கொள்ளுங்கள், ஒரு தவறும் இல்லை!! தூதன் என்கிற வார்த்தைக்கும் பல அர்த்தங்கள் இருக்கிறது!! நீங்கள் கடிவாளம் கட்டிக்கொண்டு நடந்துக்கொண்டு இருக்கிறீர்கள்!!

I தெசலோனிக்கேயர் 4:16 ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.

//நல்லவர் என்றால் உங்க அகராதியில் என்ன அர்த்தமோ?//

நல்லவர் என்றால் எல்லாரையும் இரட்சிக்க வல்லவர்!! நீங்கள் போதிக்கும் வேறு இயேசு அனைவரையும் "அக்கினியில்" போடுபவராயிற்றே!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//9. தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களை தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு,

 10. எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோமென்று புதிய பாட்டைப் பாடினார்கள்.//

நேரடியான வசனங்களுக்கே தகதிமிதா போடுகிறீர்கள் இதில் வெளிப்படுத்தல் வசனங்கள் வேறு... முயற்சிக்குப் பாராட்டுக்கள் கோல்டா..

வெளிப்படுத்தல் முழுவதும் சங்கேத வார்த்தைகள் என்பதை அறிக. 24 மூப்பரும், 4 ஜீவன்களும் உள்ள படியே ஜீவன்கள் அல்ல. 4 ஜீவன்கள் தேவனுடைய தன்மையைக் குறிக்கும், 24 மூப்பர்கள் வேதத்தின் 24 தீர்க்க தரிசன புத்தகங்களைக் குறிக்கும். சரி போகட்டும், மேற்கண்ட வசனத்தில் தான் தெளிவாக இருக்கிறதே ஆட்டுக்குட்டியானவர் 'அடிக்கப்பட்டு' (சாகடிக்கப்பட்டு), தேவனுக்கென்று மீட்டுக்கொண்டு, எங்கள் தேவனுக்கு முன்பாக‌.... என்பதிலிருந்தே ஆட்டுக்குட்டியானவர் வேறு பிதாவாகிய தேவன் வேறு என்று தெரியவில்லை. மரியாதை செலுத்துவதற்கும் தொழுதுகொள்வதற்கும் வித்தியாசம் உண்டு....



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//தேவனுடைய தனமைகள் தேவனை வணங்கியதா? லாஜிக் இடிக்குதே?//

 

அப்படித்தான் இடிக்கும். அவர்தான் இவர் என்று ஒற்றைக்காலில் நின்று கொண்டு நீங்கள் லாஜிக் பற்றி பேசுவது தமாசாக இருக்கிறது.

நெருப்பில் போட்டாலும் அழியாமல் இருப்பது ரொம்ப லாஜிக்.

யேசு வந்து பேசினார் என்று சாது சொல்வது ரொம்ப லாஜிக்.

ஜெபியாய் ஜெபித்து உலகத்தை ரட்சிக்கப்போகிறோம் என்பது லாஜிக்.

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//புரியாத மாதிரியே பேசுவதில் உங்களை யாரும் மிஞ்ச முடியாது பெரேயன்ஸ் அவர்களே! நான் இயேசு கிறிஸ்துவைப் பற்றிதான் பேசுகிறேன். அவர் அன்று வேலையை விட்டு விட்டு தன் பின்னே வரும்படி மனிதர்களை அழைத்தார் என்றால், ஏன் இன்றும் அழைக்க மாட்டார்?//

பவுலுக்கு பிறகு யாரை தான் அவர் "வந்து" அழைத்தார்!! பவுலுடன் இருந்த தீமோத்தேயு இன்னும் பல ஊழியர்களை "நேரடியாக வந்து" கிறிஸ்து இயேசு அழைத்திருந்தால் உங்கள் சோஃபா ஊழியர்கள் விடும் கரடியை நம்புவோம்!! 12 பேர் (யூதாஸிற்கு பதில் பவுல்) மாத்திரமே கிறிஸ்துவினால் நேரடியாக அப்போஸ்தலர்களாக அழைக்கப்பட்டார்கள்!! அதன் பின் சுமார் கடந்த 200 ஆண்டுகளாக தான் என்னை நேரடியாக "வந்து" அழைத்தார் என்று கரடி விட்டு திரிகிறது ஒரு கூட்டம், அதை வைத்து தன் பரம்பரையை வளர்த்து வருகிறது!!

அங்கே அவர்களை வேலையை மட்டும் இல்லை, எல்லாவற்றையும் விட்டு வர தான் அழைத்தார், அவர்களும் அப்படியே போனார்கள்!! பவுல் சொல்லுகிறார், கிறிஸ்துவிற்காக எல்லாவற்றையும் குப்பையாக எண்ணுகிறார் என்று, ஆனால் எங்களை நேரடியாக வந்து ஊழியம் செய்ய சொன்னார் கிறிஸ்து என்கிற இன்றையவர்கள் அப்படியா எல்லாவற்றையும் விட்டு வர தையாரா? இல்லை, ஏனென்றால் அவர்களின் போதனையே எல்லாவற்றையும் எங்களிடம் கொடுக்க சொல்லி தான் "தேவன்" சொன்னார் என்று!! எந்த தேவன் என்று தான் தெரிவிப்பதில்லை!! இரகசியம்!!

//எல்லாம் தேவ சித்தம் என்றால், நம்முடைய பங்கு என்ன? ஒன்றும் கிடையாதா? அப்ப எதற்காக வேதம் நம் கையில் கொடுக்கப்பட்டிருக்கிறது?//

உங்க பங்கு அவரின் சித்தத்தில் நடப்பது தான்!! அதுவும் அவர் நடப்பிக்கிறபடியே தான்!! வேதம் எல்லா கிறிஸ்தவர்களின் கைகளிலும் தான் இருக்கிறது (கத்தோலிக்கர்கள் தொடங்கி இன்று புதிதாக உங்கள் ஏரியாவில் வந்திருக்கும் சபை வரைக்கும்)!! இந்த ஒரே வேதத்தை வைத்திருந்தும் ஏன் இத்துனை வித்தியாசமான போதனைகளிலும் விசுவாசத்திலும் இருக்கிறார்கள் தெரியுமா!!

மத்தேயு 13:11. அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. அவர்களுக்கோ அருளப்படவில்லை.

எல்லாரும் தான் உவமைகளை கேட்டார்கள், ஆனால் அதை அறியும்படி சீஷர்களுக்கு அருளப்பட்டிருந்தது, கேட்ட மற்றவர்களுக்கு அருளப்படவில்லை!! இரண்டுமே தேவனின் சித்தம் தான்!! ஒரே வேதத்தை கைகளில் வைத்திருக்கும் சிலருக்கு புரியவைக்கிறார், அநேகருக்கு அது என்னவென்று புரிகிறதில்லை!!

//யோவான் 6:70 இயேசு அவர்களை நோக்கி: பன்னிருவராகிய உங்களை நான் தெரிந்துகொள்ளவில்லையா? உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாயிருக்கிறான் என்றார்.

அவர் தெரிந்து கொண்டதும் சோடை போகத்தானே செய்தது. அப்ப தேவ சித்தத்தோடு மனித சித்தமும் கிரியை செய்கிறது என்றுதான் தெரிகிறது?//

உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாயிருக்கிறான் என்று சொல்லுகிறார் என்றால் அவருக்கு தெரியாமலே நடந்துவிட்டது போல்!! அவனை அப்படியாக தான் அவர் தெர்நிதுக்கொண்டார்!! இராத்திரி முழுவதும் பிதாவிடம் கேட்டு அவர் யூதாஸை தேர்ந்தெடுத்தார் என்றால் உங்கள் கூட்டத்தை பொறுத்தவரை பிதாவிற்கு கூட யூதாஸ் அப்படி போவான் என்று தெரியாது போல்!! பழய ஏற்பாட்டிலேயே யூதாஸை குறித்த தீர்க்கதரிசனம் இருப்பது எல்லாம் உங்களுக்கு தெரியாது என்று நினைக்கிறேன்!!

போங்க உங்க சாது ஏதாவது கதை விடுவார், அதை கேட்டு ரசித்துக்கொள்ளுங்கள்!! தேவ சித்தம் என்பதே ஒரு நகைச்சுவை என்கிற தலைப்பில் எழுதுகிறீர்கள் என்றால்...........

//அப்போஸ்தலப் பணிக்கு ஆளெடுத்தார். அதாவது தெரிந்து கொண்டார். அவவளவுதான். அதே போல் எல்லோருக்கும் ஏதோ ஒரு பணி ஆண்டவ்ர் தெரிந்து வைத்திருக்கிறார் என்று தான் நான் நினைக்கிறேன். அதை நிறைவேற்றுவதும் நிறைவேற்றாததும் நம் கையில் தான் இருக்கிறது.//

ஆமா, பரலோகத்தில் பிதாவிடம் கேட்டு தான் ஆள் எடுத்தார்!! தெரிந்துக்கொள்வது என்றால் என்னவென்று தெரியுமா!! ஏதோ ஒரு புகைப்படத்தை காட்டி இவனை தெரியுமா என்பதிலிருந்து கணவன் மனைவியின் தெரிந்துக்கொள்ளுதல் வரை!! ராத்திரி முழுவதும் பிதாவிடம் கேட்டு பெற்றுக்கொண்டவர்களை கிறிஸ்து எந்த அளவிற்கு தெரிந்துதிருப்பார் என்பது உங்களுக்கு "தெரியாது"!!

நிறைவேற்றுவதும் நிறைவேற்றாததும் "நம்" கையில் இருக்கிறது என்றால் தேவன் நகம் கடித்துக்கொண்டு, அடுத்து என்ன நடக்க போகுது என்று உட்கார்ந்திருப்பார் என்கிறீர்களா!!??



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//லூக்கா 21: 36. ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார்.//

இதை அப்படியே கடைபிடித்து 'எப்பொழுதும் ஜெபம்பண்ணி' தூங்கவே தூங்காமல் விழித்திருக்கும் ஏராளம் பேரைத்தான் பார்க்கிறோமே!

Bereans//நிறைவேற்றுவதும் நிறைவேற்றாததும் "நம்" கையில் இருக்கிறது என்றால் தேவன் நகம் கடித்துக்கொண்டு, அடுத்து என்ன நடக்க போகுது என்று உட்கார்ந்திருப்பார் என்கிறீர்களா!!??//

Classic reply...


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
1 2 3  >  Last»  | Page of 3  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard