kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நாங்கள் கிறிஸ்தவர்கள்!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
நாங்கள் கிறிஸ்தவர்கள்!!


மத்தேயு 4:10. அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.

பிதா ஒருவரையே ஆராதனை செய்ய வேண்டும் என்று சொன்ன கிறிஸ்து இயேசு ஒரு யெகோவா சாட்சி என்றால் நாங்களும் யெகோவா சாட்சிகளே!!

அப்போஸ்தலர் 4:10. உங்களால் சிலுவையில் அறையப்பட்டவரும், தேவனால் மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டவருமாயிருக்கிற நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலேயே இவன் உங்களுக்கு முன்பாகச் சொஸ்தமாய் நிற்கிறானென்று உங்களுக்கும், இஸ்ரவேல் ஜனங்களெல்லாருக்கும் தெரிந்திருக்கக்கடவது. 11. வீடு கட்டுகிறவர்களாகிய உங்களால் அற்பமாய் எண்ணப்பட்ட அவரே மூலைக்குத் தலைக்கல்லானவர். 12. அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.

இரட்சிக்கப்பட கிறிஸ்து இயேசு ஒருவரின் நாமமே என்று அப்போஸ்தலர்கள் கிறிஸ்து இயேசுவை தேவனாக அல்ல, இரட்சகராக போதித்தார்கள், அதையே நாங்கலும் போதிப்பதினால் "ஒன்லி ஜீஸஸ்" ஆகிறோம்!!

யோவான் 5:39 வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே.
அப்போஸ்தலர் 17:11 அந்தப் பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப்பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள்.

இப்படி வேதத்தை ஆராய்ந்து பார்த்து தான் விசுவாசத்தை வளார்க்க வேண்டும் என்பதை பின்பற்றுவதால் நாங்களும் "வேத மாணாக்களே"!!

I கொரிந்தியர் 3:16 நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?

இப்படி தேவனின் ஆவி எங்களுக்குள் வாசம் செய்து அதன் படி வழிநடத்தப்படுகிறோம் என்று இருப்பதால் நாங்களும் "பெந்தகோஸ்தே மக்கள்" தான்!!

1 கொரிந்தியர் 13:13. இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது.

இப்படி மற்ற எல்லாவற்றிலும் அன்பையே பிரதானமாக வைத்திருக்கும் கத்தோலிக்கர்கள் என்பதால் அந்த அன்பை கொண்டிருப்பதால் நாங்களும் கத்தோலிக்கர்களே!!

மத்தேயு 28:20. நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்;
அப்போஸ்தலர் 11:26 அவர்கள் ஒரு வருஷகாலமாய்ச் சபையோடே கூடியிருந்து, அநேக ஜனங்களுக்கு உபதேசம்பண்ணினார்கள். முதல்முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று.

இப்படி அப்போஸ்தலர்கள் வாயிலாக மாத்திரமே வந்த கிறிஸ்துவின் போதனைகள் மூலமாக கொண்டிருக்கும் விசுவாசத்தையும், அவரை பின்பற்றுவதில் உள்ள வாஞ்சையினால் நாங்கள் "கிறிஸ்தவர்கள்"!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard