யூதனூடைய குலதெய்வாம் தான் யெகோவா தேவன் என்றும் அப்படி என்றால் அவர்கள் சொல்லுவதை பார்த்தால் கிறிஸ்துவை கூட அவர்கள் உபயோகித்த வார்த்தைக்கு ஆளாக்குகிறார்கள் போல்!! இயேசு கிறிஸ்து யூதனாக பிறந்து யூத முறைபடி வாழ்ந்து, ஆனால் பேதுருவின் விசுவாச அறிக்கையின் மேல் சபையை நிறுவியவர்!!
மத். 16:13. பின்பு, இயேசு பிலிப்புச் செசரியாவின் திசைகளில் வந்தபோது, தம்முடைய சீஷரை நோக்கி: மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார். 14. அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான் ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் எரேமியா, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள். 15. அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யாரென்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். 16. சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். 17. இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். 18. மேலும் நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாயிருக்கிறாய், இந்தக்கல்லின் மேல் என் சபையைக்கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.
பேதுரு சொன்ன அந்த விசுவாசப்பிரமானமே, நீர் (இயேசு கிறிஸ்து) ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்பது தான்!! இதை விசுவசிப்பவர்களே சபையாக கிறிஸ்துவின் சரீரமாக இருப்பவர்களாகிறார்கள்!! ஆனால் கிறிஸ்துவின் பிதாவாகிய யெகோவா தேவனை தன் தேவன் என்று சொல்லுபவன் பொறம்போக்கு என்று சொல்லிக்கொண்டு கிறிஸ்துவை பிதா என்று அறிக்கை செய்யும் ஒரு கூட்டனி பேதுரு சொன்ன அதே விசுவாசத்தை நாங்கள் சொல்வதை என்னி என்னி பரிகாசம் செய்கிறார்கள்!!
கிறிஸ்து யெகோவா தேவனை தன் பிதா என்றும் நம் பிதா என்றும் சொல்லியிருப்பது அந்த கூட்டத்தார் நினைவில் கொள்ளட்டும்!!
ரஸ்ஸலை ஒரு போதும் பின்பற்றுகிறோம் என்கிற ஒரு வார்த்தையையும் சொல்லாமல் இருந்தாலும், வசந்தகுமாரின் சீஷனாக இருக்கும் ஒருவருக்கு அப்படி என்ன தான் ரஸ்ஸலின் மேல் பாசமோ, விட்டு கொடுக்காமல் எழுதுவதை அவர் பதிவுகளை பார்ப்பவர்களுக்கு தெரியும்!!
கிறிஸ்துவே அந்த காணக்கூடாத பிதாவிடத்திற்கு கூட்டி செல்லும் வழி என்பதை என்னுடைய எந்த பதிவும் மறுத்ததோ, மறைத்ததோ கிடையாது!! வசந்தகுமாரை நம்புவோரை காட்டிலும் வேதத்தை நம்பும் எனக்கு கிறிஸ்து தான் பிதாவிடத்தில் என்னை சேர்ப்பவர் என்பது எனக்கு தெரியும்!! ஆனால் கிறிஸ்துவிடத்திற்கு வர காரணமே நீங்கள் யூதர்களின் குலதெய்வம் என்று சொல்லும் யெகோவா தேவன் தான் என்பதை இவர்கள் வசந்தகுமார் சொல்லி தரவில்லை போல்!!
//உம்மை போன்றோரின் முகத்திரையை கிழித்து எறியவே தேவன் எனக்கும் அந்த எலியாவின் ஆவியையும், அந்த யோவானின் ஆவியையும் தந்திருக்கிறார்!! கிறிஸ்துவின் வருகைக்கு முன் எலியா வந்தாக வேண்டும் என்று சொல்லும் வசனம் எல்லாம் உமக்கு புரியாது, அது என்னை போன்றோர் தான் என்று நினைவில் வைத்துக்கொள்ளும்!!
சகோ. சில்சாம் இது உங்களுக்குத்தான். உங்கள் அருமை நண்பர் எழுதியள்ளதை வாசிக்கவில்லையா? இனியும் அவருடன் மோதத்தான் வேண்டுமா? தேவன் இவருக்கு எலியாவின் ஆவியையும், அந்த யோவானின் ஆவியையும் கொடுத்துள்ளாராம். இவர் யோவானா?அல்லது எலியாவா? //
என்னடா சண்டையை பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டதே என்று ஒரு கங்கை எடுத்து போட்டிருக்கிறார் வசந்தகுமாரின் சீஷனான கொல்வின்!! எலியா முந்தி வர வேண்டும் என்று வேதம் சொல்லுவது உங்களுக்கு கோமாளித்தனமாக தான் இருக்கும்!! ஏன் கொல்வின் உமக்கு வசந்தகுமாரின் வேறு பதிவுகள் ஒன்றும் கிடைக்கவில்லையா நேரம் போக்க!! பார்த்து டைப் செய்துக்கொண்டு இருக்க வேண்டியது தானே!! இப்படி எல்லாம் சிண்டு மூட்டி விடுவது இலங்கையின் பழக்கமோ அல்லது அதுவும் வசந்தகுமார் தான் சொல்லிக்கொடுத்ததா? ஏதாவது உருப்படியான காரியங்கள் இருந்தால் கவனியுங்கள், உங்கள் தலைவருடன் மோதும் அளவிற்கு அவரை மனுஷனாகவே நான் கருதுவதில்லை!!
எலியாவின் ஆவி அல்லது யோவானின் ஆவி என்றால் அவர்களின் தன்மையே தவிர வேறு ஒன்றும் இல்லை!! ஏதோ நான் அப்படி இருந்துவிட்டு போகிறேன், ஆனால் நீங்கள் பிசாசின் ஆவியில் நிறைந்து தானே இப்படி பட்ட பதிவுகளில் மகிழ்கிறீர்கள், திரு கொல்வின் அவர்களே!!
//சரித்திர விடயங்களைக் கூட சரியாகச் சொல்லத் தெரியவில்லை. பபிலோனியக் கதைகளையும் கிறிஸ்தவத்தையும் முடிச்சுப் போட்டுப் பார்ப்பதில் எத்தனை நாட்டம் இவர்களுக்கு. மரியாள் வணக்கம் எப்போது திருச்சபைக்குள் நுழைந்தது என தெரியாத பேதைகளாகிவி்ட்டனர். மார்டின் லூத்தர் - அலெக்ஸாண்டர் ஹிஸ்லாப் இடையே 400 ஆண்டுகள் இடைவெளி உள்ளது என்பது கூட தெரியாமல் கண்டதையும் கற்பனை செய்து உளறியுள்ளார்.
இதனை அருமையாக வெளிப்படுத்திய சகோ. ஜோனுக்கு என மனமார்ந்த நன்றிகள். //
சரித்திரத்தை பார்த்து தான் இவர்கள் அனைத்தையும் எழுதுகிறார்கள் போல்!! சரித்திரத்திலிருந்து தான் யார் வேத மாணவர்கள் என்றும், யார் யெகோவா சாட்சிகள் என்றும் எத்துனை தொடுப்பு கொடுத்தும் கற்றுக்கொள்ள விரும்பாத உமக்கு ஏனய்யா சரித்திரத்தை குறித்து அக்கறை!! நீர் வணங்கும் மரியாளுக்கு ஜான் பரிந்து பேசியிருப்பதினால் சரித்திரத்தை பார்க்க விரும்புகிறீறோ!! ஜான் தான் சாத்தானுக்கே பரிந்து எழுதியிருக்கிறார், மரியாள் வணக்கம் எல்லாம் ஒரு பொருட்டா என்ன??
குழப்பத்தின் உச்சியில் இருக்கும் நீங்கள் சார்ந்திருக்கும் சபையை தான் பாபிலோனிய சபை என்று வேதமே சொல்லியிருக்கிறது, இதில் கட்டு கதைகள் ஒன்றும் இல்லை, கட்டு கதைகளை கைவசம் வைத்துக்கொண்டு வசந்தகுமாரின் பெயரை சொல்லி டைப் செய்து அச்சடிப்பது தான் கட்டு கதைகள் என்று நான் சொல்லுகிறேன்!! ஜானும் என்ன நாசுக்காக பாபிலோனிய சபையான கத்தோலிக்க சபையை விட்டுக்கொடுக்காமல் பேசியிருக்கிறார், ஆகவே கொல்வின் நன்றி தெரிவப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லையே!! மரியாளை அங்கிகரித்த கத்தோலிக்க சபை ஆரம்பமான பிறகு தான் "திரித்துவத்தை" போல், மரியாள் வணக்கமும் வந்தது என்பதற்கு எங்களிடம் போதுமான ஆதாரங்கள் இருக்கிறது, இப்பொழுது, ஜான் எந்த ஆவியில் எழுதுகிறார், சாத்தான் முழு பொய்யை அல்ல பாதி உண்மையை பேசியிருக்கிறான் என்று சொல்லுகிறார் போன்றவற்றுக்கு போதுமான ஆதாரங்கள் இருக்கிறது!!