kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பிரதான தூதனாகிய மிகாவேல் யார் ?


Veteran Member

Status: Offline
Posts: 67
Date:
பிரதான தூதனாகிய மிகாவேல் யார் ?



மிகாவேல் என்றழைக்கப்படுகிற ஆவி சிருஷ்டியைப் பற்றி பைபிள் அதிகமாக குறிப்பிடுவதில்லை. ஆனால் அப்படி குறிப்பிடப்பட்டுள்ள வசனங்கள், மிகாவேல் மும்முரமாய்ச் செயல்பட்டு வருவதாக சொல்கின்றன. பொல்லாத தூதர்களோடு அவர் போரிட்டுக் கொண்டிருப்பதாக தானியேல் புத்தகம் சொல்கிறது; சாத்தானோடு விவாதித்துக் கொண்டிருப்பதாக யூதாவின் நிரூபணம் சொல்கிறது; பிசாசோடும் அவனுடைய பேய்களோடும் யுத்தம் பண்ணிக்கொண்டு இருப்பதாக வெளிப்படுத்தல் புத்தகம் சொல்கிறது. ''கடவுளுக்கு நிகர் யார்''? என்ற தம் பெயரின் அர்த்தத்துக்கு ஏற்ப, மிகாவேல் யெகோவாவின் ஆட்சியை ஆதரித்து, கடவுளுடைய எதிரிகளோடு போரிடுகிறார். அப்படி என்றால், மிகாவேல் யார் ?
சில சமயங்களில், ஒன்றுக்கும் மேற்பட்ட பெயர்களினால் சில நபர்கள் அறியப்படுகிறார்கள். உதாரணமாக, முற்பிதாவான யாக்கோபுவுக்கு இஸ்ரவேல் என்ற பெயரும் இருந்தது. அப்போஸ்தலன் பேதுருவுக்கு சீமோன் என்ற பெயரும் இருந்தது.(ஆதியாகமம் 49:1,2 / மத் 10:2 ) அதுபோலவே, இயேசு கிறிஸ்துவின் மற்றொரு பெயர்தான் மிகாவேல் என்று பைபிள் சுட்டிக்காட்டுகிறது; பூமிக்கு வருவதற்கு முன்னும், பரலோகத்துக்குச் சென்ற பின்னும் அவருடைய பெயர் அதுதான். இந்த முடிவுக்கு வருவதற்கான வேதபூர்வ காரணங்களை இப்போது நாம் சிந்திப்போம்.


-- Edited by Theneer Pookal on Sunday 30th of January 2011 03:04:54 PM


__________________


Veteran Member

Status: Offline
Posts: 67
Date:

பிரதான தூதன். மிகாவேலை 'பிரதான தூதன்'' என்று கடவுளுடைய வார்த்தை குறிப்பிடுகிறது. (யூதா 9 ). இதன் அர்த்தம் ''தலைமைத் தூதன்''  என்பதாகும். பைபிளில், பிரதான தூதன் என்றவார்த்தை ஒருமையில் தான் கொடுக்கப்பட்டிருக்கிறது, பன்மையில் ஒருபோதும் கொடுக்கப்படவில்லை. எனவே, அப்படி ஒரேயொரு தூதன் மட்டுமே இருக்கிறார் என்பதை இது காண்பிக்கிறது. அதோடு, இயேசு பிரதான தூதனின் ஸ்தானத்தோடு சமந்தப்படுத்தி பேசப்படுகிறார். உயிர்தெழுப்பப்பட்ட கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்து 1 தெசலோனிக்கேயர் 4:16 இவ்வாறு சொல்கிறது: ''ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும்( அதாவது, குரலோடும்), தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்'':.  இவ்வாறு இயேசுவின் குரல் பிரதான தூதனுடைய குரலாக இருக்கிறதென விவரிக்கப்பட்டுள்ளது. ஆகையால், இயேசு பிரதான தூதனாகிய மிகாவேல் என்பதை இந்த வசனம் சுட்டிக் காட்டுகிறது. தொடரும் ..

-- Edited by Theneer Pookal on Sunday 30th of January 2011 03:25:03 PM


__________________


Veteran Member

Status: Offline
Posts: 67
Date:

சேனைத் தலைவர். ''மிகாவேலும் அவரைச் சேர்ந்த தூதர்களும் வலுச்சர்ப்பதோடே யுத்தம் பண்ணினார்கள்; வலுசர்ப்பமும் அதைச் சேர்ந்த தூதரும் யுத்தம் பண்ணினார்கள்'' என்று பைபிள் தெரிவிக்கிறது (வெளிப்படுத்தல் 12 :7). ஆகவே, விசுவாசமிக்க தேவ தூதர்களின் சேனைக்கு மிகாவேல் தலைவராக இருக்கிறார். அதே வெளிப்படுத்தல் புத்தகத்தில், தேவ தூதர்களின் சேனைக்கு இயேசு தலைவராக இருக்கிறார் என்று விவரிக்கப் பட்டிருக்கிறது. (வெளிப்படுத்தல் 19 :14 -16 ) ''கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடு'' வருவதாக அப்போஸ்தலர் பவுலும் தெளிவாய்க் குறிப்பிடுகிறார். (2 தெசலோனிக்கேயர் 1 :8 ) ஆக, மிகாவேல் மற்றும் 'அவரைச் சேர்ந்த தூதர்கள்' பற்றியும் இயேசு மற்றும் 'அவருடைய தூதர்கள்' பற்றியும் பைபிள் சொல்கிறது (மத் 13 :41 /16 :27 /24 :31  ::::: 1 பேதுரு 3 :2 ). பரலோகத்தில், விசுவாசமிக்க தேவதுதர்களான இரண்டு வெவ்வேறு சேனைகள் இருப்பதாக, அதாவது மிகாவேலைத் தலைவனாக கொண்ட ஒரு சேனையும், இயேசுவைத் தலைவராக கொண்ட வேறொரு சேனையும் இருப்பதாக கடவுளுடைய வார்த்தையில் எங்குமே குறிப்பிடப்படவில்லை; எனவே பரலோக இஸ்தானத்தில் உள்ள இயேசு கிறிஸ்துதான் மிகாவேல் என்ற முடிவுக்கு வருவது நியாயமாகவே இருக்கிறது.
அடுத்து வேதத்தில் இருந்து சில வசனங்களை எடுத்து பொய்யாக, புரியாமல் போதிக்கும் ஒரு சில துர்உபதேசம் கொண்ட தளத்தின் கேள்விகளை எனது அடுத்த பதிவுகளில் ஆராய்வோம்.....



__________________


Veteran Member

Status: Offline
Posts: 67
Date:

பிரதான தூதன் மிகாவேலும், இயேசு கிறிஸ்துவும் ஒருவர்தானா? என்ற கேள்விகளை  என் முகபுத்தகத்தில் இருக்கும்  நண்பர்கள் வாசித்துவிட்டு குழம்பிப்போய் இருக்கிறீர்கள் என்பது நீங்கள் ஒவ்வொருவரும் எழுதும் பதிவுகளில் இருந்து புரிகிறது. இதில் ஒருவர் எழுதியிருக்கிறார்:
///
மீகாவேலும் இயேசுவும் ஒருவர் தான் என போதிப்பதுதான் தேநீர் பூக்களின் வஞ்சகத்தில் ஒன்று. அதற்காக வருத்தப்படுகின்றேன். மிகாவேல் என்ற நபர்.... எப்படி இயேசுவாக முடியும்? மிகாவேல் மாம்சத்தில் வெளிப்பட்டார் என்று வேதத்தில் எங்கேனும் உண்டா? தூதனாகிய... மிகாவேலைப் படைத்தவர் நமது ஆண்டவராகிய இயேசு. வஞ்சகத்தின் ஆவி எப்படியெல்லாம் கதை திரிக்கின்றது....... தேவ பிள்ளைகளே.... கவனமாக இருங்கள்.... லூசிபர் நான்தான் லூசிபர்... நான் தான் பிசாசு என்று சொல்லிக்கொண்டு வரமாட்டான்..... எச்சரிக்கை...!!! இதைச் சொல்வதற்கு சற்றேனும் நான் அஞ்சிடேன்...ஏனெனில் என்னுடன் இருப்பவர் மீகாவேல் அல்ல.... கிறிஸ்து இயேசுவே என்னில் வாழுகின்றார்....!!! (இங்கு கதை திரித்து விளையாடுபவர்கள் இருப்பதினால் தான் என்னமோ.... நல்ல வேளையாக தேவதூதர்களின் பெயர் லிஸ்டை வேதாகமம் கொடுக்கவில்லை......!!)///

நண்பர்களே, நான் ஒன்றும் எனது கற்பனையாக ஒன்றும் எடுத்துச் சொல்லவில்லை. வேதத்தில் இருக்கும் விஷயத்தையே சொன்னேன். நான் இப்ப விஷயத்துக்கு வருகிறேன். இந்த மிகாவேலின் பெயர் பைபிளில் ஐந்து தடவைகள் மாத்திரமே காணப்படுகிறது. இந்தப் பெயரைக் கொண்டுள்ள அந்த மகிமையான ஆவி ஆள், ''பிரதான அதிபதிகளில் ஒருவன்'', ''உன் (தானியேலின்) ஜனத்தின் புத்திரருக்காக நிற்கிற பெரிய அதிபதி'' எனவும் ''பிரதான தூதன்'' எனவும் குறிப்பிடப்படுகிறார். (தானி 10:13; 12:1; யூதா 9). மிகாவேல் என்பதன் பொருள் ''கடவுளைப்போன்றவர் யார்?” என்பதாகும். இவ்வாறு இந்தப் பெயர் மிகாவேலை, “யெகோவாவின்  ஈடற்றப் பேரரசை உறுதியாய் கடைப்பிடித்து நிற்பதிலும், கடவுளுடைய சத்துருக்களை அழிப்பதிலும் தலைமை தாங்குவார்” என சந்தேகம் இல்லாமல் குறித்துக் காட்டுகிறது.


1 தெசலோனிக்கேயர் 4:16-இல், உயிர்த்து எழுவதை தொடங்குவதற்கு இயேசு கிறிஸ்து கொடுக்கும் கட்டளை '' பிரதான தூதனுடைய சத்தம்'' என விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் யூதா 9-இல் இந்தப் பிரதான தூதன் மிகாவேல் எனச் சொல்லிருக்கிறது. இயேசுவின் கட்டளைக்குரிய சத்தத்தை, அதிகாரத்தில் குறைந்தவரான ஒருவருடைய சத்தத்துக்கு ஒப்பிடுவது தகுதியாய் இருக்குமா? அப்படியானால், நியாயமாகவே, அந்தப் பிரதான துதனான மிகாவேல் இயேசு கிறிஸ்துவே. (கவனத்தைக் கவருவதாய், ''பிரதான தூதன்'' என்ற சொற்றொடர் வேத எழுத்துக்களில் பன்மையில் ஒருபோதும் காணப்படுகிறதில்லை; இவ்வாறு ஒரே ஒருவரே அவ்வாரிருக்கிறார் எனக் குறிப்பாய் உணர்த்துகிறது).

வெளிப்படுத்தல் 12:7-12-இல், கிறிஸ்துவுக்கு அரசதிகாரம் அளிப்பதன் சம்பந்தமாக, மிகாவேலும் அவனுடைய தூதர்களும் சாத்தானுக்கு எதிராகப் போர்செய்து அவனையும் அவனுடைய பொல்லாத துதர்களையும் பரலோகத்தில் இருந்து வெளியே தள்ளிப் போடுவார்கள் என சொல்லியிருக்கிறது. பின்னால் இயேசு பரலோக சேனைகளை இவ்வுலக ராஜ்யங்களுக்கு எதிராக போர் செய்வதில் தலைமை வகித்து நடத்துவதாக சித்தரித்துக் காட்டுகிறது (வெளி. 19:11 -13). அப்படியானால், ''உலகத்தின் அதிபதி'' என்று தாம் விவரித்த பிசாசான சாத்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பவரும் இயேசுவே என்பது நியாயமாய் இருக்கிறது அல்லவா ? (யோவான்  12 :31 ). தானியேல் 12:1-இல் அதிகாரத்துடன் செயல்படும்படி ''மிகாவேல் எழும்பி நிற்பது'' ''யாதொரு ஜாதியாரும் தோன்றினதுமுதல் அக்கால மட்டும் உண்டாயிராத ஆபத்துக்காலத்தோடு சமந்தப்படுத்தி இருக்கிறது. இது, கிறிஸ்து, பரலோகத் தண்டனைத் தீர்ப்பை நிறைவேற்றுபவராக ராஜ்யங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கையில் அவற்றின் அனுபவத்துக்கு நிச்சயமாகவே பொருந்தும். ஆகையால், கடவுளுடைய குமாரன் தாம் பூமிக்கு வருவதற்கு முன்னால் மிகாவேல் என அறியப்பட்டார் எனவும், மேலும் அவர் கடவுளுடைய மகிமைப்படுத்தப்பட்ட ஆவிக் குமாரனாக இப்பொழுது வாசம்செய்கிற பரலோகத்துக்கு திரும்பிச் சென்ற முதற்கொண்டும் அவ்வாறு அறியப்படுகிறார் எனவும் அத்தாட்சி குறித்துக் காட்டுகிறது.

-- Edited by Theneer Pookal on Monday 31st of January 2011 12:35:29 AM


__________________


Veteran Member

Status: Offline
Posts: 67
Date:

திருத்துவத்தின்  பாகமாய்   இருப்பதாகச் சொல்லப்படுவோர் எல்லோரும் நித்தியர், ஒருவருக்கும் தொடக்கம் கிடையாதென பைபிள் போதிக்கிறதா?

மேலே கூறிய தலையங்கத்துக்கு பொருத்தமாகவும், என் நண்பர்களின் பல கேள்விகளை கருத்தில் கொண்டும் கொலோ. 1 :15 ,16 என்ற வசனத்தை ஆதாரமாக எடுத்து பதில் சொல்வது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.  அடுத்து இந்த தளத்து நிர்வாகியாகிய  ''
பெரியன்ஸ்'' என்பவர்   இதன் விளக்கத்தை  ''கிறிஸ்து சிருஷ்டிப்பின் ஆதியானவர்''!!  என்ற திரியில் மிகவும் அழகாகவும் , விவரமாகவும் விளக்கியுள்ளார். அடுத்து இதன் மேலதிக தகவலாக சில கிரேக்க வார்த்தைகளை ஆராய்ந்து பார்த்து விளக்கத்தை பெறுவது இன்னும் அதிகமான நம்பகத் தன்மை வாய்ந்ததாக இருக்கும்.

கொலோ. 1 :15 ,16 .... ''அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்.  ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய''

என்ன கருத்தில் இயேசு கிறிஸ்து ''சர்வ சிருஷ்டிக்கும் முதற் பேறுமானவர்'' என்று எழுதப்பட்டு இருக்கு?

(1 ) ''முதற் பேறு'' என்பது இங்கே பிரதான, மிக அதிக மேம்பட்ட, மிக அதிக மேன்மை வாய்ந்த என்பதைக் குறிக்கிறது எனவும், இவ்வாறு கிறிஸ்து சிருஷ்டிப்பின் பாகமல்ல, ஆனால் சிருஷ்டிக்கப் பட்டவர்களோடு சம்மந்தப்பட்டதில் மிக அதிக மேன்மை வாய்ந்தவர் என விளங்கிக் கொள்ளப் படவேண்டும் எனவும் திருத்துவ கோட்பாட்டாளர் சொல்கின்றனர். அவ்வாறிருந்தால், மேலும் திருத்துவக் கோட்பாடு உண்மையாய் இருந்தால், பிதாவும் பரிசுத்த ஆவியும் சர்வ சிருஷ்டிக்கும் முதற்பேறானவர்கள் என்று ஏன் சொல்லப்படவில்லை? பைபிள் இந்தச் சொற்களை குமாரனுக்கு மாத்திரமே பயன்படுத்துகிறது.''முதற்பேறு'' என்பதன் வழக்கமான அர்த்தத்தின்படி, யெகோவாவின் குமாரர்களடங்கிய குடும்பத்தில் இயேசு எல்லாரிலும் மூத்தவர் என அது குறிக்கிறது.

(2)
கொலோ. 1 :15 .க்கு முன்னால் ''முதற்பேறான'' என்ற இந்தச் சொற்றொடர் 30 க்கும் மேற்பட்ட தடவைகள் பைபிளில் காணப்படுகிறது. உயிருள்ள சிருஷ்டிகளுக்கு அது பயன்படுத்துகிற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இதே அர்த்தத்திலே பயன்படுத்தி உள்ளது. --- அதாவது அந்த முதற்பேறு அந்தத் தொகுதியின் பாகம் என்பதாகும். ''இஸ்ரவேலின் முதற்பேறானவன்'' இஸ்ரவேலின் குமாரரில் ஒருவனே; ''பார்வோனின் முதற்பேறானவன்'' பார்வோனின் குடும்பத்தில் ஒருவனே;  ''மிருகத்தின் முதற்பேராக'' இருப்பவை மிருகங்களே. அப்படியானால், கொலோ. 1:15 இல் அதற்கு வேறுபட்ட அர்த்தத்தை குறித்துக் காட்டும்படி சிலரை செய்விப்பது எது? அது பைபிள் பயன்படுத்தும் முறையா அல்லது அவர்கள் ஏற்கனவே கொண்டுள்ளதும் அதற்கு நிருபணத்தை தாங்கள் தேடுவதுமாகுமா?

(3 )
கொலோ. 1 :16 ; 17 இல் ''அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது ......சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப் பட்டது.'' என்று சொல்லி இருப்பது, இயேசுவையே சிருஷ்டிக்கப்படவில்லை என தவிர்த்து வைக்கிறதா? ''சகலமும்'' என்று இங்கே மொழிபெயர்த்துள்ள கிரேக்க சொல் பான்ட்டா என்பதாகும். இது பஸ் என்பதன் உருமாற்றமாகும் (மிகுதி சேர்க்கப்பட்டு மாறியது) லூக்கா 13:2 இல்; ''மற்ற ...எல்லா'' என மொழிபெயர்த்திருக்கின்றது. JB ''மற்ற எவரை'' என்றிருக்கிறது. NE  ''வேறு எவரை'' என்று சொல்லி இருக்கிறது. (மேலும் NE இல் லூக்கா 21:29-ஐயும் JB இல் பிலிப்பியர் 2 :21-ஐயும் பாருங்கள்). குமாரனைப் பற்றி பைபிளில் சொல்லி இருக்கும் மற்ற எல்லாவற்றுடனும் பொருந்த, NW கொலோ. 1 :16 ; 17 இல் பான்ட்டா என்பதற்கு அதே அர்த்தத்தையே கொடுக்கிறது. இவ்வாறு அதில் ஒரு பகுதியாக; ''அவரைக் கொண்டு மற்ற எல்லாக் காரியங்களும் சிருஷ்டிக்கப்பட்டன ..... மற்ற எல்லாக் காரியங்களும் அவர் மூலமாயும் அவருக்காகவும் சிருஷ்டிக்கப்பட்டன'' என்று வாசிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் சிருஷ்டிக்கப்பட்டவராக, கடவுள் சிருஷ்டித்த சிருஷ்டிப்பின் பாகமாகக் காட்டப்படுகிறார்.

வெளிப். 1 :1 / 3 :14 ''இயேசு கிறிஸ்துவின் வெளிப்படுத்தல், இதைக் கடவுள் அவருக்குக் கொடுத்தார்'' (RS ) ''லாவோதிக்கா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும்,தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாய் இருக்கிற (கிரேக்கில், ஆர்கி) ஆமென் என்பவர் சொல்கிறதாவது''.
(KJ ;DY ;CC ;மற்றும் NW ; அவற்றோடு மற்றவற்றிலும், இவ்வாறு இருக்கிறது) இந்த மொழிபெயர்ப்பு திருத்தமானதா?
இங்கே குமாரன் 'கடவுளுடைய சிருஷ்டிப்பை தொடங்கினவர்' எனவும், அவரே அதன் 'ஆதி மூலகாரணர்' எனவும் பொருள்படுகிறது என்ற கருத்தைச் சிலர் ஏற்கின்றனர். ...
தொடரும் ..
(நண்பர் அன்பு அவர்களே; எனது இந்தப் பகுதியில் ஏதாவது எழுத்துப் பிழை இருப்பின் அதை திருத்தி எழுதவேண்டும் என்று அன்பிடம் அன்பாய் கேட்கிறேன்: நன்றி)



__________________


Veteran Member

Status: Offline
Posts: 67
Date:

ஒக்ஸ்போர்ட், 1968  , பக்கம், 252 - இல் சொல்லப்பட்டபடி நியாயமுறைப்படியான முடிவு என்னவெனில், வெளிப்படுத்தல் 3 :14 இல்  குறிப்பிடப்பட்டுள்ளவர் சிருஷ்டிக்கப்பட்டவர், கடவுளுடைய சிருஷ்டிப்புக்களில் முதல்வர், அவருக்கு ஒரு தொடக்கம் இருந்தது என்பதே. இதை நாம் நீதிமொழிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.   இங்கே, பைபிள் உரை ஆசிரியர்கள் பலர் ஒப்புக்கொள்கிறபடி, நீதிமொழிகள் 8 :1 இன் வசனமாகிய ''ஞானம் கூப்பிடுகிறதில்லையோ? புத்தி சத்தமிடுகிறதில்லையோ''? இங்கே ''ஞானம்'' என்ற சொல் இயேசுவையே குறிக்கின்றது.  அதனை தொடர்ந்து நீதிமொழிகள் 8:22-30  வரை உள்ள வசனம் இவ்வாறு வாசிக்கிறது.
22. கர்த்தர் தமது கிரியைகளுக்குமுன் பூர்வமுதல் என்னைத் தமது வழியின் ஆதியாகக் கொண்டிருந்தார்.
23.
பூமி உண்டாகுமுன்னும், ஆதிமுதற்கொண்டும் அநாதியாய் நான் அபிஷேகம்பண்ணப்பட்டேன்.
24. ஆழங்களும், ஜலம் புரண்டுவரும் ஊற்றுகளும் உண்டாகுமுன்னே நான் ஜநிப்பிக்கப்பட்டேன்.
25. மலைகள் நிலைபெறுவதற்கு முன்னும், குன்றுகள் உண்டாவதற்கு முன்னும்,
26. அவர் பூமியையும் அதின் வெளிகளையும், பூமியிலுள்ள மண்ணின் திரள்களையும் உண்டாக்குமுன்னும் நான் ஜநிப்பிக்கப்பட்டேன்.
27.
அவர் வானங்களைப் படைக்கையில் நான் அங்கே இருந்தேன்; அவர் சமுத்திர விலாசத்தை வட்டணிக்கையிலும்,
28. உயரத்தில் மேகங்களை ஸ்தாபித்து, சமுத்திரத்தின் ஊற்றுகளை அடைத்து வைக்கையிலும்,
29. சமுத்திர ஜலம் தன் கரையை விட்டு மீறாதபடிக்கு அதற்கு எல்லையைக் கட்டளையிட்டு, பூமியின் அஸ்திபாரங்களை நிலைப்படுத்துகையிலும்,
30.
நான் அவர் அருகே செல்லப் பிள்ளையாயிருந்தேன்; நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து, எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன்.
ஆகவே இந்த வசனங்களின்படியும் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவரும்,   தேவனின் மகனாகவும் இயேசு திகழ்கிறார் என்று நியாயம் ஆகின்றது. நன்றி


-- Edited by Theneer Pookal on Saturday 5th of February 2011 10:14:36 PM

__________________


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

தேநீர் பூக்கள் அவர்களின் அருமையான பதிவு நிச்சயமாக பிரயோஜனமாக இருக்கும், சத்தியத்தை விரும்பி அதை தேடுகிறவர்களுக்கு மாத்திரமே, பாரம்பரியத்தில்லும், துதிப்பாடல்களிலும், சில "தேவ மனுஷர்கள்" எழுதிய ஜெபத்தில் தங்கள் விசுவாசத்தை வளர்த்தவர்களுக்கு இது கசப்பாக தான் இருக்கும். தாழ்ச்சி இருந்தால் தான் எதையும் கற்றுக்கொள்ள முடியும்!! எனக்கு தெரியாததையா ஒருவன் போதித்து விட போகிறான் என்கிற மனதோடு எதையும் நோக்கினால் ஒன்றுக்கும் பிரயோஜனமாக இருக்காது!!

//(1 ) ''முதற் பேறு'' என்பது இங்கே பிரதான, மிக அதிக மேம்பட்ட, மிக அதிக மேன்மை வாய்ந்த என்பதைக் குறிக்கிறது எனவும், இவ்வாறு கிறிஸ்து சிருஷ்டிப்பின் பாகமல்ல, ஆனால் சிருஷ்டிக்கப் பட்டவர்களோடு சம்மந்தப்பட்டதில் மிக அதிக மேன்மை வாய்ந்தவர் என விளங்கிக் கொள்ளப் படவேண்டும் எனவும் திருத்துவ கோட்பாட்டாளர் சொல்கின்றனர். அவ்வாறிருந்தால், மேலும் திருத்துவக் கோட்பாடு உண்மையாய் இருந்தால், பிதாவும் பரிசுத்த ஆவியும் சர்வ சிருஷ்டிக்கும் முதற்பேறானவர்கள் என்று ஏன் சொல்லப்படவில்லை? பைபிள் இந்தச் சொற்களை குமாரனுக்கு மாத்திரமே பயன்படுத்துகிறது.''முதற்பேறு'' என்பதன் வழக்கமான அர்த்தத்தின்படி, யெகோவாவின் குமாரர்களடங்கிய குடும்பத்தில் இயேசு எல்லாரிலும் மூத்தவர் என அது குறிக்கிறது.//

சில‌ க‌ள்ள‌ போத‌க‌ர்க‌ளுக்கு இயேசு கிறிஸ்துவை பிதா என்று கூப்பிட்டு (இயேச‌ப்பா) ப‌ழ‌கிய‌வ‌ர்க‌ளுக்கும் போதிப்ப‌வ‌ர்க‌ளுக்கும், இயேசு கிறிஸ்து ந‌ம் மூத்த‌ ச‌கோத‌ர‌ர் என்று ஏற்றுக்கொள்வ‌து சிர‌ம‌ம் மாத்திர‌ம் இல்லை, முடியாத‌ காரிய‌மாக‌ இருக்கிற‌து!! ச‌கோ தேநீர் பூக்க‌ள் இந்த‌ வ‌ச‌ன‌த்தை ஆதார‌மாக‌ கொடுத்திருந்தால் ந‌ன்றாக‌ இருந்திருக்கும் (அப்போ ம‌ட்டும் என்ன‌ புரிய‌வா பொகிற‌து என்று கேட்க்கிறீர்க‌ளா!!)!! ச‌த்திய‌த்தை தேடுவோருக்கும், அதில் வாஞ்சையாக‌ இருப்ப‌வ‌ர்க‌ளுக்கு நிச்ச‌ய‌மாக‌ அது பிர‌யோஜ‌ன‌மாக‌ இருந்திருக்கும்!! அந்த‌ வ‌ச‌ன‌ம்,

ரோமர் 8:29 தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்;

இது எந்த‌ வேத‌த்தில் இருக்கும் வ‌ச‌ன‌ம், ஒரு வேலை வேத‌ மாண‌வ‌ர்க‌ளின் வேத‌த்தில் மாத்திர‌ம் இருக்குமோ!! அது எப்ப‌டி தேவ‌னின் குமார‌ன் அநேக‌ ச‌கோத‌ர‌ருக்குள்ளே முத‌ற்பேறான‌வ‌ராயிருக்க‌ முடியும்!! நாங்க‌ எல்லாம் இயேசு கிறிஸ்துவை பிதா என்று தானே போதித்துக்கொண்டு இருக்கிறோம் என்கிற‌ ச‌த்த‌ம் கேட்க்க‌ தான் செய்கிற‌து!! இன்னும் சில‌ர் நானும் பிதாவும் ஒன்றாக‌ இருக்கிறோம் என்ப‌தை இவ‌ர் தான் அவ‌ர் அவ‌ர் தான் இவ‌ர் என்று போதிக்கிற‌வ‌ர்க‌ளும் இருக்கிறார்க‌ளே!!

தொட‌ருங்க‌ள் ச‌கோ தேநீர்ப்பூக்க‌ள் அவ‌ர்க‌ளே!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Veteran Member

Status: Offline
Posts: 67
Date:

கள்ளப்போதகராகிய துர்உபதேசத்தைக் கொண்ட திரு.சில்சாம் என்பவர், அவரது தளத்தில் எழுதிய ''இயேசுவானவர் பிரதான தூதனாகிய மிகாவேலின் அவதாரமா.? என்ற திரியில் எழுதியகருதுக்களைக் கவனித்தேன். வாசிக்கும் போதே தெரிகிறது, நீர் எந்த ஆவியைக் கொண்டு இப்படி பேசுகிறீர் என்று. சத்தியத்தை சத்தியமாக சொல்லவேண்டும் என்பதே எமது அவா!!! வேதம் எனக்குக் கற்பித்ததை எங்கு வேண்டும் என்றாலும் பயப்படாமல் சொல்வேன்.

அடுத்து  தங்களுக்கு ஒன்றை நினைப்பூட்ட விரும்புகிறேன். நான் யெகோவாவின் சாட்சியும் அல்ல, அவர்களின் போதனைகளை கொண்டவனும் அல்ல. இதை நீர் வேதத்தை சரியாக அறிந்து இருந்தால் எனது பதிவுகளில் இருந்து புரிந்து கொண்டு இருப்பீர்கள்  என்று நினைக்கிறேன். ஜெகோவாவின் சாட்சிகளுடைய போதனைகளில் வெளிப்படுதலில் உள்ள போதகமாகிய 1914 , 144000 ,  இன்னும் பல விஷயங்கள் இருக்கு. இதைப் போன்ற உபதேசங்களை நானோ அல்லது இந்த தள அங்கத்தவர்கள் யாராவது இது தொடர்பாக எழுதி இருகிறார்களா ?

அடுத்து, எங்கள் போதனைகளை யெகோவாவின் சாட்சிக்காரர்கள் மட்டுமா கொண்டுள்ளார்கள் என்று ஆராய்ந்து பாருங்கள். ஒருதடவை ஐரோப்பாவுக்கு வந்து பாருங்கள். எங்களைப் போன்ற போதகங்கள் கொண்ட நுற்றுக்கணக்கான சபைகள் உண்டு. அப்படிப் பார்த்தல் அவர்கள் அனைவரும் யெகோவாவின் சாட்சியா ? நான் பைபிள் மாணாக்கர் என்ற விசுவாச பிரிவை சேர்ந்தவன். ஆகவே உங்களின் குழப்பத்தை இன்றுடன் ஒரு முடிவுக்கு கொண்டு வாருங்கள்.
இயேசு தான் ஆரம்பத்தில் மீகாவேலாக இருந்தவர். அதற்கு வேத ஆதாரமும் கொடுத்துள்ளேன். முடிந்தால் எனது பதிவுக்கு வேத ஆதாரபூர்வமான விளக்கத்தை தாருங்கள். நான் நிச்சயமாக விளக்கம் கொடுப்பேன்.

அடுத்து, வேதாகமத்தில் ''தூதுவர்கள்'' களைக்  குறித்து சரியான, தெளிவில்லாத நிலையே கொண்டு இருப்பது ஆச்சரியமாக இருக்கு. அடுத்து, என் அடுத்த பதிவில் தங்களின் கேள்வியாகிய மிகாவேல் ஆகிய தூதன் எவ்வாறு இயேசு கிறிஸ்து ஆனார்?  என்று விவரிக்கிறேன். பொருத்து இருங்கோ ....



-- Edited by anbu57 on Tuesday 8th of February 2011 07:16:38 AM

__________________


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

வேத வசனம் இந்த கள்ள போதகன் சில்சாமிற்கு தெரியாது, அவருக்கு என்று ஒரு கூட்டனி இருக்கு, இவர் எழுதும் உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுத்து, அந்த உணர்ச்சியில் மயங்கி விழுகிறவர்கள் உண்டு!! இதை வைத்து தான் பிழைப்பு நடத்திக்கொண்டு இருக்கிறார்!! வேத வசனம் தெரியவில்லை, சரி வரலாறாவது தெரியுமா என்றால், அதிலும் பெரிய பூஜ்யம் தான்!! இவர்களுக்கு பல முறை யெகோவா சாட்சிகளின் தொடக்கமும், வேத மாணவர்களிலிருந்து இவர்கள் எப்படி பிரிந்து வந்தவர்கள் என்று ஆதாரத்துடன் பதிவுகளை தந்திருந்தாலும், இவரின் குருட்டு கண்களுக்கு எப்படி வேதம் இருட்டான புத்தகமாக இருக்கிறதோ, அப்படியே தான் இந்த தளத்தில் பதியப்படும் பதிவுகளும்!! இவரின் பழைய மார்க்கதின் தாக்கத்தில் தான் இன்னும் அவதாரம், கிறித்தவம் போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி வருகிறார்!! கிறிஸ்து என்கிற பெயரையே உச்சரிக்க தெரியாத இவரை எப்படி தான் சிலர் போதகர் என்று அழைக்கிறார்களோ!!

நாம் வேத வசனத்துடன் பதிவுகளை தந்தால் இந்த கள்ள போதகன் எல்லா பக்கமும் போய் அழுது ஒப்பாறி வைத்து, தேவத்துவத்தை புரிந்துக்கொள்ளாதவர்களும் அவர்களின் சந்ததிகளும் என்று பேடித்தனமாக சொல்ல மாத்திரமே தெரியும்!! ஒரு பதிவு தருவதிலேயே இவரால் வசனங்களை கொண்டு வாதாட முடியவில்லை என்றால் இவர் எப்படிப்பட்டவர் என்று புரியவைக்கவே இவரை கள்ள போதகன் என்று அழைக்கிறேன்!! வசனத்தை திரித்து அல்லது வசனமே இல்லாமல் போதிப்பவர் கள்ள போதகனாக தானே இருக்க முடியும்!!

சத்தியத்தை ஒரு பெரிய கூட்டம் அல்ல சகோதரனே, மிகவும் சொற்பமானவர்களுக்கு மாத்திரமே!! மற்ற அனைவரும் ராஜியத்தில் தெரிந்துக்கொள்வார்கள்!! ஆனால் இந்த கள்ள போதகனுக்கு இதுவும் தெரியாது!! ஏனென்றால் இவர்கள் மரித்தவுடன், இவர்கள் கொண்டு இருக்கும் "கிறித்து", "அருள் நாதர்", "இயேசு நாதர்" போன்ற தேவர்கள் அனைவரையும் நரகத்தில் போட்டு விடுவார் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையில் இருக்கிறார்கள்!!

இயேசு கிறிஸ்துவை வேதம் ஆலோசனை கர்த்தர் என்று சொல்லுகிறது, மேலும் தன் அப்போஸ்தலர்களிடம் உலகத்தின் முடிவிற்கும் தன் வருகையை குறித்து சொல்லும் போது,

மத். 24:24. ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி,

மத்தேயு 24:5 ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்.

மாற்கு 13:6 ஏனெனில் அநேகர் வந்து, என் நாமத்தைக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்.

கிறிஸ்துவின் நாமத்தை சொல்லிக்கொண்டு, கிறிஸ்துவை போல் வேஷம் தரிப்பவனே கள்ள கிறிஸ்து!! ஆலோசனை கர்த்தர் என்று நம் கர்த்தரை வேதம் சொல்லியிருக்கிறது, ஆனால் இவர்களின் நம்பிக்கை டீ.ஜி.எஸ் என்கிற ஒரு நபர் மரித்து தற்போது பரலோகத்தில் அவர்களின் அருள் நாதருக்கு அடுத்து உட்கார்ந்து அவருக்கு இந்தியாவை குறித்து ஆலோசனை சொல்லுகிறாராம்!! இப்படி பட்ட ஆலோசனை கர்த்தர் நிறை பெயர் இருக்கிறார்கள்!! ஏன் நம் கள்ள போதகன் சில்சாமும் இதை தான் செய்கிறார்!! இவரின் பதிவுகளில் பார்த்தோமென்றால் இவர் கிறிஸ்துவை போல் தமக்கு ஒரு பதவியை கொடுத்து வைத்திருக்கிறார், ஆதாவது ஆலோசனை தந்து ஆத்துமாவை பாதுகாக்கிறாராம் ("Taking care for every Soul through Counseling")!! பூமியில் இன்னோரு கள்ள கிறிஸ்து!!

இவரை போன்ற கள்ள‌ போதகரால் வசனம் நிறைவேறுகிறது என்பது நமக்கு சந்தோஷமே!! இவரின் புலம்பல் தொடரட்டும், நமது சத்தியம் அறிவிக்கும் பயனம் தொடரட்டும்!! தேவன் யாரை நியமித்திருக்கிறாரோ, நிச்சயமாக கேட்பார்கள், உணர்ச்சி வசப்படாமல் வேதத்தை திறந்து இவர்கள் சொல்லுவது சரியா என்று பார்ப்பார்கள்!! தொடருங்கள் சகோதரனே!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 125
Date:

திருத்துவ நம்பிக்கைகளை விடாது பற்றிக்கொண்டிருப்போரை அது என்ன நிலையில் வைக்கிறது?

அது அவர்களை மிக ஆபத்தான நிலையில் வைத்து இருக்கிறது. திருத்துவக் கோட்பாடு பைபளில் காணப்படுகிறதும் இல்லை, பைபல் போதிக்கிறதொடு பொருத்தமாயும் இல்லை என்பதற்கு அத்தாட்சி மறுக்கமுடியாது இருக்கிறது.
இதற்கான விளக்கம் பைபளில் மற்றும் இந்த தளத்தில் போதிய அளவு விளக்கம் கொடுக்கப்பட்டும் இருக்கிறது. திருத்துவ வாதிகள் உண்மையான கடவுளைப் படுமோசமாய்ச் தவறாகச் திரித்துக் காட்டுகிறது.  எனினும், இயேசு கிறிஸ்து பின்வருமாறு கூறினார்:

''உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.
தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்''

இவ்வாறு, தங்கள் வணக்கம் ''உண்மையோடு''' அதாவது கடவுளுடைய சொந்த வார்த்தையில் குறித்துவைக்கப்படுள்ள  சத்தியத்தைப் பொருந்த இல்லாதவர்கள், ':-  

6 . உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கிவருகிறீர்கள்.
7. மாயக்காரரே, உங்களைக்குறித்து:
8. இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது.
9. மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப்போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என்றார்.

இது பைபளின் தெளிவான சத்தியன்களுக்குப்  பதில் மனித
பாரம்பரியங்களைப்  தெரிந்து கொண்டு ஆதரித்து வாதாடும் இன்று கிறிஸ்தவ மண்டலத்தில் உள்ளோருக்கு அதே வலிமையுடன் பொருந்துகிறது. 

திருத்துவதைக் குறித்து, அதன் உறுப்பினர் ''புரிந்துகொள்ளமுடியாதவர்கள்''' என்று அதநேசியன் விசுவாசப்பிரமானத்தில் சொல்லிருகிறது.
இந்தக் கோட்பாட்டைப் போதிக்கிறவர்கள் அது ''மர்மம்'' என அடிக்கடி கூறுகின்றனர்.  ''நாங்கள் அறிந்திருகிறதைத் தொளுதுகொள்கிறோம்''' என்று இயேசு சொன்னபோது சந்தேகமில்லாமல், இத்தகைய ஒரு திருத்துவக் கடவுள் இயேசுவின் மனதில் இல்லை.

''நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்; ஏனென்றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது''  என்று யோவான் எழுதக் கூடியவராக இருந்தார்.


நீங்கள் வணங்கும் கடவுளை நீங்கள் உண்மையில் அறிந்திருக்கிரிர்களா?

1 . வின்னைமையான கேள்விகள் நம் ஒவ்வொருவரையும்  எதிர்படுகின்றனர்:- நாம் சத்தியத்தை உள்ளப்பூர்வமாய் நேசிக்கிறோமா?
2 . எல்லாரும் சத்தியத்தை உண்மையாய் நேசிக்கிர்தில்லை. பலர் சத்தியத்தின் மீதும் கடவுள் மீதுமுள்ள அன்புக்கு மேலாகத் தங்கள்        உறவினர்களின் மற்றும் கூட்டாளிகளின் அங்கீகாரத்தைக் கொண்டிருப்பதைப் வைதிருகின்றனர். 

 II தெசலோனிக்கேயர் 2 : 9. அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும்,
10. கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும். இரட்சிக்கப்படத்தக்கதாய்ச் சத்தியத்தின்மேலுள்ள அன்பை அவர்கள் அங்கிகரியாமற்போனபடியால் அப்படி நடக்கும்.
11. ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு,
12. அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.

யோவான் 5 : 39. வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே.
40. அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை.
41. நான் மனுஷரால் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிறதில்லை.
42. உங்களில் தேவ அன்பு இல்லையென்று உங்களை அறிந்திருக்கிறேன்.
43. நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை, வேறொருவன் தன் சுய நாமத்தினாலே வந்தால் அவனை ஏற்றுக்கொள்வீர்கள்.
44. தேவனாலேமாத்திரம் வருகிற மகிமையைத் தேடாமல், ஒருவராலொருவர் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிற நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்?
 

ஆனால், இயேசு தம்முடைய பரலோகப் பிதாவிடம் செய்த ஊக்கமான ஜெபத்தில் சொன்னது போல: ''ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்''' குறிக்கிறது. மேலும் சங்கீதம் 144:15 - ல் வசனம் பின்வருமாறு கூறுகின்றது.:- ''
இவ்விதமான சீரைப்பெற்றஜனம் பாக்கியமுள்ளது; கர்த்தரைத் தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனம் பாக்கியமுள்ளது''.

 



__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது.
- நெப்போலியன் (
தமிழ் கிறிஸ்தவ சபை )


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

ஜோசப் எழுதுகிறார்:
//இயேசுவும் மிகாவேல் தூதனும் ஒன்று என்று உளறுபவர்கள் இதை சிந்திக்கவேண்டும்.//

இதற்கு அவர் உபயோகப்படுத்தியது யூதா புத்தகத்தின் 9ம் வசனம்!!

யூதா 9: பிரதான தூதனான மிகாவேல் தூதன் மோசேயின் சரீரத்தைகுறித்துப் பிசாசுடனே தர்க்கித்து பேசினபோது அவனைத் தூஷணமாய்க் குற்றப்படுத்தத் துணியாமல்: கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக என்றான்

இங்கே சொல்லும் போது கர்த்தர் கடிந்துக்கொள்வார் என்றும், இயேசு கிறிஸ்துவாக பூமிக்கு மாம்சத்தில் வந்த போது, அதே சாத்தானை மூன்று முறை கடிந்துக்கொள்கிறார் என்கிற வாதத்தை வைத்து, இருவரும் ஒருவராக எப்படி இருக்க முடியும் என்று கேட்டிருக்கிறார்!!!

ஜோசப் அவர்களே, இயேசு கிறிஸ்து மாம்சத்தில் வந்த பிறகு அவருக்கு அளவில்லாத ஆவியை தேவன் குடுத்தார் என்று வேதம் சொல்லுகிறது!!

யோவான் 3:34 தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார், தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார்.

தேவனே வராமல், தேவனால அனுப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளை பேசுகிறார்!! ஆகவே தேவன் சொல்லியப்படியே, கிறிஸ்து சாத்தானை கண்டிக்கிறார்!!

மாம்சத்தில் வரும் முன் மிகாஹேல் தூதன் அவர் நிலையில் பிரதானமாக இருந்தார்!! ஆனால் ஆவிக்குறிய ஜீவியாக இருக்கும் போது எல்லாவற்றுக்கும் பிதாவே நியாயந்தீர்ப்பு தருவார் என்பதால், மோசேயின் சரீரத்தை குறித்து அப்படி ஒன்றை சொல்லியிருக்கிறார்!!

கர்த்தரின் தூதனானவர் பழைய ஏற்பாட்டில் என்னவெல்லாம் செய்திருக்கிறார்!!??

ஆதியாகமம் 16:10 பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: உன் சந்ததியை மிகவும் பெருகப்பண்ணுவேன்; அது பெருகி, எண்ணிமுடியாததாயிருக்கும் என்றார்.

ஆதியாகமம் 22:11 அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர் வானத்திலிருந்து, ஆபிரகாமே, ஆபிரகாமே என்று கூப்பிட்டார்; அவன்: இதோ, அடியேன் என்றான்.

ஆதியாகமம் 22:15 கர்த்தருடைய தூதனானவர் இரண்டாந்தரம் வானத்திலிருந்து ஆபிரகாமைக் கூப்பிட்டு:

ஆதியாகமம் 24:7 என்னை என் தகப்பனுடைய வீட்டிலும் என் இனத்தார் இருக்கிற தேசத்திலுமிருந்து அழைத்து வந்தவரும், உன் சந்ததிக்கு இந்த தேசத்தைத் தருவேன் என்று எனக்குச் சொல்லி ஆணையிட்டவருமான வானத்துக்குத் தேவனாகிய கர்த்தர், நீ அங்கேயிருந்து என் குமாரனுக்கு ஒரு பெண்ணைக் கொண்டுவரும்படிக்கு, தம்முடைய தூதனை உனக்கு முன்பாக அனுப்புவார்.

ஆதியாகமம் 24:40 அவர்: நான் வழிபடும் கர்த்தர் உன்னோடே தம்முடைய தூதனை அனுப்பி, உன் பிரயாணத்தை வாய்க்கப்பண்ணுவார்; என் இனத்தாரிடத்திலும், என் தகப்பன் வீட்டிலும் நீ என் குமாரனுக்குப் பெண்கொள்வாய்.

யாத்திராகமம் 3:2 அங்கே கர்த்தருடைய தூதனானவர் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜுவாலையிலே நின்று அவனுக்குத் தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான்; முட்செடி அக்கினியால் ஜுவாலித்து எரிந்தும், அது வெந்துபோகாமல் இருந்தது.

இப்படி கர்த்தரின் தூதனானவர் என்பதை தங்களின் வேதத்தில் வாசித்து பாருங்கள்!! மிகாஹேல் என்பது லோகோஸ் போன்றே ஒரு காரணப்பெயர்!! கர்த்தரின் தூதனானவர் என்பவரே அந்த மிகாஹேல், அந்த லோகோஸ்!! ஏனென்றால் மிகாஹேல் என்பவர் தேவனின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து அவர் சொல்லியபடியே பழைய ஏற்பாட்டில் செயல்ப்பட்டார், லோகோஸ் என்று தேவனின் வார்த்தைகளை தீர்க்கதரிசிகள், இராஜாக்களுக்கு சொன்னார்!! கிறிஸ்துவாக பூமிக்கு வந்தும் அவர் சுயமாக வரவில்லை என்றும், தேவனால் அனுப்பபட்டவர் என்றும், தேவன் செய்வதை, சொல்லுவதை செய்கிறேன் சொல்லுகிறேன் என்கிறார்!!

ஆகவே மிகாஹேலாக இருந்தவரே, லோகோஸாக இருந்தவரே, இந்த பூமியில் மாம்சத்தில் கிரிஸ்துவாக வந்தார்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard