kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பிதா, குமாரன், பரிசுத்த ஆவி பற்றிய வேத விளக்கம்.


Senior Member

Status: Offline
Posts: 125
Date:
பிதா, குமாரன், பரிசுத்த ஆவி பற்றிய வேத விளக்கம்.


திருத்துவ போதனையே நம்புகிறவர்கள் கடவுளில் மூன்று நபர்கள் இருப்பதாக, அதாவது பிதா, குமாரன், ஆவி ஆகிய மூன்று நபர்கள் இருப்பதாக சொல்கிறார்கள். இம்மூன்று நபர்களும் ஒருவருக்கு ஒருவர் சரிசமமானவர்கள் என்றும், சர்வ வல்லமை உள்ளவர்கள் என்றும், ஆரம்பம் இல்லாதவர்கள் என்றும் சொல்கிறார்கள். எனவே, திருத்துவ போதனையின்படி,  பிதாவும் கடவுளும், குமாரனும் கடவுள், பரிசுத்த ஆவியும் கடவுள் என்றாலும் கடவுள் ஒருவர் என்றே வேதப்பதிவுகள் நமக்கு அத்தாட்சிப்படுத்திக் காட்டுகின்றன. இந்த உபதேசத்தை கொண்டிராத எந்த உபதேசமும் துர்உபதேசங்கள் ஆகும்.
அண்மையில் யௌவன ஜனம் மற்றும் இறைவன், தமிழ் கிறிஸ்தவம் போன்ற தளத்தில் பதிந்த சில பதிவுகளை வாசிக்க நேர்ந்தது. அந்த பதிவுகளின் பல பதிவுகள் வேதத்துக்கு பிறம்பாக இருப்பதை காணக் கூடியதாக இருந்தது. இவர்களின் பதிவுகளுக்கு ஏற்றாத் போல இந்த பகுதியில் சிலகருத்துக்களை எழுத சித்தமாய் இருக்கிறேன். .... (சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் எல்லோரையும் விடுதலையாக்கும்)  தொடரும் ..............


-- Edited by Dino on Saturday 5th of March 2011 04:12:58 PM

__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது.
- நெப்போலியன் (
தமிழ் கிறிஸ்தவ சபை )


Senior Member

Status: Offline
Posts: 125
Date:

///எப்போது இங்கே வந்தார்,எதைப் படித்தார் போன்ற எந்த விவரமும் சொல்லாமல் குருடன் யானயைத் தடவியது போல (ஏற்கனவே நிர்ணயித்துக் கொண்ட இரஸலின் போதனைக்கு ஒத்துவரவில்லையோ..? ) பொத்தாம்பொதுவில் எதுவும் சரியில்லை என்பவர் எப்பேற்பட்ட ஆளாக இருப்பார் என்பதையும் ஏற்கனவே அறிந்திருக்கிறோம்; நீங்களெல்லாரும் சேர்ந்து வந்தாலும் அதைக் குறித்து கொஞ்சமும் அஞ்சவேமாட்டேன், அதற்கு ஒரு பதிலே போதும்,அது அப்போஸ்தலர்.4:12 "அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்''. ////

நண்பரே சில்சாம் அவர்களே;  தங்களின் தளத்தில் பொதுவாக இயேசுவை தொழத்தக்க தெய்வம் என்று வாதாடுவது ஒன்றே போதும் தாங்கள் எந்த வித நம்பிக்கைகளை கொண்டுள்ளிர்கள் என்று. அடுத்து தாங்கள் எழுதிய வேதப்பதிவு.... அப்போஸ்தலர்.4:12 "அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்'' 

  இதன் அர்த்தம் அவர்
சர்வவல்லமை உள்ள தேவன் அவரையே தொழுது கொள்ளவேண்டும் என்ற அர்த்ததையா ? கொடுக்கின்றன. கேவலம் சாத்தானுக்கு தெரியும் இயேசு கடவுள் இல்லை என்று ::::  ஆனால் சாத்தானின் தூதர்களாகிய சில்சாம் தள உறுப்பினர்களுக்கு தெரியவில்லை பாருங்களேன்!!!!!!!!!!!!!
 

அடுத்து தங்களின் தளத்தில் நண்பர் கொல்வின் அவர்களின் பதிவுகள் பாருங்கள். அவர் வேதத்தின் பதிவுகளை பேசாமால் யாரோ ஒருவராகிய வசந்த குமார் எழுதிய பதிவுகளை வைத்து, அதே சரியான போதனையாக இருக்கும் என்று நினைத்து வாதாடுகிறார். அதைவிட ஒரு படி மேலே போய் யெகோவாவின் சாட்சி யார்? வேத மாணாக்கர் யார்? என்று கூட தெரியாது மாறி மாறி அதையே பேசும் குழப்ப மனநிலையில் இருபவர்களா நாங்கள்?.  இதே தளத்தில் சகோதரர்  பெரியான்ஸ், அதற்கான பல பதிவுகள்   ஆதாரத்தோடு கொடுத்ததும் திரும்ப திரும்ப  குதர்க்கமாக பேசி இல்லாத ஒன்றை இருப்பதாக சொல்லி  விதண்டாவாதம் பேசும் மூடர்கள் அல்ல நாம். அடுத்து தங்களின் தளத்தில் நண்பர் ஜோன் என்பவர் முக்கி தடுமாறி இயேசு பூமிக்கு வருமுன் என்னவாக இருந்தாரோ அதை நிரூபிக்க முடியாது ,  வேதப் பதிவுகளுக்கு கூடாக  குருட்டுத்தனமாக பதிவுகள் கொடுப்பவர் தானே நீங்கள். வேதத்தை நம்பாது பாரன்பரியங்களை நம்பி விசுவாசம் கொள்ளும் உங்களை போன்ற அநேகரை நாம் இந்த ஐரோப்பா தேசத்தில்  சந்தித்துள்ளோம். அவர்களின் சாட்சி ஒன்றே போதும் தங்களின் விசுவாசம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்று.  இப்ப கூட இயேசு தொழத்தக்க தெய்வம் அல்ல என்று உங்கள் அனைவர்க்கும் தெரியும். உங்கள் மனதில் கையே வைத்து உண்மையாக உணர்ந்து சொல்லுங்கள். உங்களிடமே சரியான நன்பிக்கை இல்லாது போது எதுக்காக இந்த பகல் வேஷம்.:::  மீண்டும் மேலே எனது தலைப்புக்கு வேத ஆதாரத்துடன் பதில் இடும் போது உங்கள் முகத்திரை கிளியும் ::::::: தொடரும் ::::



-- Edited by Dino on Saturday 5th of March 2011 05:21:28 PM

__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது.
- நெப்போலியன் (
தமிழ் கிறிஸ்தவ சபை )


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
RE: பிதா, குமாரன், பரிசுத்த ஆவி பற்றிய வேத விளக்கம்.


இத்துனை நாட்கள் எங்கே இருந்தீர்கள் நண்பரே!!

வேதத்தை நம்பாமல் வசந்தகுமாரின் எழுத்தை "டைப்" செய்து தருகிறாராம் கொல்வின் என்கிறவர் வேசி சபையில் இருந்துக்கொண்டு!!

ஆக்ரோஷமாக பதிவை தர ஆரம்பித்து இருக்கிறீர்கள்!! வேத மாணாக்கள் யார் என்றும் யெகோவா சாட்சி யார் என்றும் ஆதாரப்பூர்வமாக விக்கியின் தொடுப்பை கொடுத்தும் இந்த குருடர்களுக்கு வசந்த குமார் என்கிற ஒரு திரித்துவ போதகன், கள்ள தீர்க்கதரிசி, கள்ள போதகன் அப்படி எழுதவில்லையாம்!! வசந்த குமார் ஒருவேளை இவர்களுக்கு எழுதியிருந்திருந்தால் இவர்கள் ஏற்றுக்கொள்வார்களோ என்னவோ!! சரி இந்த குருட்டு கூட்டத்தார் அதை புரிந்துக்கொள்ளவும் போவதில்லை, ஆனால் இவர்கள் எந்த திரித்துவத்தில் இருக்கிறார்கள் என்பது இவர்களுக்கே தெரியாது என்பதும் இவர்களுக்கு தெரியாது!!

இவர்கள் நம்புவது திரித்துவமா, திரியேகத்துவமா என்பது இவர்களுக்கு தெரியாது!! அதிலும் சில்சாம் என்கிற பிசாசின் தூதன் வேற்று மார்க்கத்திலிருந்து வந்து "கிறித்து" என்கிற ஒரு இயேசுசாமியை தொழுத்துக்கொள்ளுமா, அதை செய்தால் தான் நீங்கள் "கிறித்துவராம்"!!

விநோதமான போதனைகளும், பிதாவை தூஷிப்பதும் இவர்களின் பழக்கம்!! இயேசு தான் பிதா என்பார்கள் ஒரு சமயம், அவரே பிதாவின் வலது பக்கத்தில் இருக்கிறார் என்பார்கள்!! இவர்களின் விடைகள் வேதத்தின்படி இருக்காது மாறாக வசந்தகுமாரை "டைப்" செய்து எழுதுவதிலும், ரஸ்ஸல் யார் என்றும் அவர் எதை நிறுவினார் என்றும், யார் அவர்களின் கூட்டனியில் இருந்து பிரிந்தார்கள் என்றும் இந்த ஞான சூனியர்கள் அறிவது இல்லை, ஏனென்றால் வசந்தகுமார் இவர்களுக்கு அப்படி சொல்லவில்லையாம்!!  என்று ஒன்று இருக்கிறது அதையாவது வாசித்து தெரிந்தால் இவர்களுக்கு தெரியும்!!

பெந்தகோஸ்தே சபையில் இருக்கும் சில்சாம் கத்தோலிக்க சபையில் இருக்கும் கொல்வின் இருவரும் போதிப்பது திரித்துவத்தை தான், பிறகு ஏன் இருவரும் வெவ்வேறு சபையில் இருக்கிறார்கள், நாடகம் தானே!! அப்படி என்றால் வேதத்தில் இவர்களுக்கு நம்பிக்கை இல்லை!!

தொடர்ந்து பதியுங்கள் தினோ அவர்களே!!


__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 125
Date:

///அடே முக்காலுக்கும் மூணு வீசைக்கும் நடுவுல பொறந்த பன்னாடைகளே உங்கள திட்றதுக்கு இதுக்கு மேல வார்த்தைய உருவாக்கி தான் போடணும் போல;வேதத்தில இருந்து மட்டுமே பேசணும்'னு அடம்பிடிச்சி எங்கள் நண்பர்களையெல்லாம் கீழ்த்தரமா தூஷித்த நீங்க மட்டும் எப்படி விக்கிபீடியா உதாரணத்தைக் கொடுக்கலாம்? கொஞ்சமாவது அறிவிருக்கா? எங்களுக்கு தான் வேறு வழியில்லாம தேர்ந்த ஆராய்ச்சியாளர் வசந்தகுமாரையும் அவருடைய ஆராய்ச்சி குறிப்புகளையும் வெச்சு போராடிகிட்டிருக்கோம்..உங்களுக்கென்ன கேடு இரஸல் துணையுடன் அவருடைய ஆறு வேதபாடத்தையே இன்னும் ஒழுங்கா படிச்சு முடிக்கலயே அதுக்குள்ள ஏன் வெளியே வந்துட்டீங்க‌...இரஸல் என்ன சொல்லியிருக்காரு யாருடனும் வாதாடவே கூடாது'ன்னு சொல்லல‌..? அதையே முதலில் கடைபிடிக்க முடியாதவங்க எப்படி அவருடைய போதனையை மட்டும் எடுத்து பேசிண்டிருக்கீங்க‌..? உங்களுக்கு சொந்தமா யோசிக்கத் தெரியாதா? இரஸல் சாப்பிட்ட வண்டுருட்டும் பழத்தை சாப்பிட்டு சாப்பிட்டு உங்களுக்கு புத்தி மழுங்கி போயிருச்சா..?

நீங்கள் பெரிதாகப் பேசிக் கொண்டிருக்கும் நாமமான யெகோவா எனும் நாமத்தைக் குறித்த
அதிர்ச்சிகரமானதொரு தகவலை இங்கே கொடுத்துள்ளேன்;உங்கள் தலையை எதற்குள் கொண்டு சென்று சொருகிக் கொள்ள வேண்டுமோ அது உங்கள் விருப்பம்..! ///
 
 நண்பர் சில்சாம் அவர்கள் !!!!!!!! ஆரம்பித்துவிட்டார் மீண்டும் மீண்டும் இரஸல் புராணம் பாட. யௌவன ஜனம் தளத்தில் இருக்கும் மொத்த சாத்தான்களும் ஒரே விஷயத்தை தான் திரும்ப திரும்ப சொல்றானுவல். கமாண்டோ சாத்தான் சில்சாம் வேதப்பதிவுகள் கொடுக்காமல் வேற எதோ உளறிக்கொண்டு திரிகிறது. இயேசுவை கடவுள் என்று தன் வாயாலே சொல்வாராம், அந்த நாற்றம் பிடித்த வாயாலே அடுத்தவர்களை திட்டுவாராம். அதிலும் அவருக்கு நன்கு தமிழ் தெரியும் என்பதை காட்டுவதட்க்காக சில ''///அடே முக்காலுக்கும் மூணு வீசைக்கும் நடுவுல பொறந்த பன்னாடைகளே''//   போன்ற வசனங்களை பாவித்து திருக்குறள் பாணியில் ரொன்ப இண்டர்லிஜண்டா திட்டுவாராம்.  சில்சாம் சாத்தானே;  இயேசு கிறிஸ்து மேலே இருந்து தங்களது இந்த செயல்களை எல்லாம் பார்த்து சிரிப்பார் என்பதை மட்டும் மறந்துவிட வேண்டாம். ''யெகோவா'' எனும் நாமத்தை என்ன அழகாக திரித்து சொல்றாங்கப்பா .........  இதுபோன்ற போலியான பதிவுகளை வேதமானக்கர் ஆகிய நாங்கள்  அநேகம் தரம் பார்த்துவிட்டு குப்பையிலும் வீசி பல வருடங்கள் ஆகிவிட்டது. முடிந்தால் உருப்படியான வேறு ஏதாவது பதிவுகள் இருந்தால் தாருங்கள்.  யேகோவாவை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் எனது நண்பரே கடவுளுடைய பெயர் - அதன் பயன்பாடும் அர்த்தமும் என்ற திரியில் எழுதிய பதிவுகளை வாசித்து பாருங்கள்.


__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது.
- நெப்போலியன் (
தமிழ் கிறிஸ்தவ சபை )


Senior Member

Status: Offline
Posts: 125
Date:
பிதா, குமாரன், பரிசுத்த ஆவி பற்றிய வேத விளக்கம்.


///எனவே உங்களை எதிர்கொள்ளவும் எதிர்க்கவும் காரணமாக ஒரே ஒரு குறியீட்டை முன்வைத்துள்ளோம்;அது என்னவென்றால் "இயேசுகிறித்துவை தெய்வமாகத் தொழுவோர் மட்டுமே கிறித்தவர்கள்" என்பதாகும்;இது தமிழ் இணையதள உலகில் யௌவன ஜனம் முன்வைத்துள்ள அற்புதமான தீர்மானமாகும்;இதுவரையிலும் இதுபோன்றதொரு வரியை யாரும் எங்கும் வாசித்திருக்க முடியாது என்று நம்புகிறோம்;இதைவிட யெகோவா சாட்சிகளை எதிர்க்க வேறு ஆயுதம் இருக்கமுடியாது;முன்பெல்லாம் இயேசுவை தேவகுமாரனாகக் கூட ஏற்கமறுத்தவர்கள் தற்போது சற்று இறங்கிவந்து அவரை தேவகுமாரனாகவும் இரட்சகராகவும் பெரிய மனது பண்ணி ஏற்றுக்கொண்டுள்ள‌னர்;ஆனாலும் அவர் அடிக்கப்பட்ட‌ சிலுவையைக் குறித்தும் உயிர்த்தெழுதலைக் குறித்தும் வைத்துள்ள‌ விகாரமான வெளிப்பாடுகளை இன்னும் சொல்லவில்லை அல்லது சொல்லுவதற்கு அவர்களுக்கு தைரியமில்லை;

ஆனால் சுவிசேஷத்தை நேர்மையுடன் அறிவிக்கும் சுவிசேடகர்களின் முதலாவது அடையாளம் என்னவென்றால் அவர்கள் பாவத்தின் கொடூரத்தையும் அதற்கு தேவன் செய்த மீட்பின் திட்டத்தையும் குறித்து சொல்லி
இயேசுகிறித்து எனும் அற்புதமான தேவனுடைய புதிய ஏற்பாட்டைக் குறித்து அறிவிப்பதே;வேதம் முழுவதுமே இயேசுகிறித்துவை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது;அவரே பிதாவாகிய தேவனுடைய நேரடி வெளிப்பாடாக இருக்கிறார்;பிதாவாகிய தேவனை ஒருபோதும் பார்த்திராத கேட்டிராத மனுக்குலத்துக்கு இயேசுகிறித்துவே அவர்தம் வெளிப்பாடாக இருக்கிறார்;இந்த சாதாரண அறிவு கூட இல்லாமைக்குக் காரணம் கிறித்துவிடமிருந்த மனத் தாழ்மையில்லாமையே;பிதாவாகிய தேவனைக் குறித்து எதைப் போதித்தாலும் அது இயேசுகிறித்துவை நினைவுபடுத்தவேண்டும்;இல்லாவிட்டால் தேவன் மனுக்குலத்துக்காக செய்த மாபெரும் ஏற்பாட்டைப் புறக்கணித்தவர்களாகும் பயங்கரம் வந்து நேரிடும்.////

சபாஸ் போதகர் சில்சாம் அவர்களே, "இயேசுகிறித்துவை தெய்வமாகத் தொழுவோர் மட்டுமே கிறித்தவர்கள்"  போட்டாரே ஒரு போடு. இயேசுவின் சீஸ்சர்களுக்கு பின் நவீன கால போதகரின் பதிவு. ரொன்ப கேவலமாக இருக்கு தாங்கள் பதிந்த இந்தப் பதிவு. அதில வேற இது தமிழ் இணையதள உலகில் யௌவன ஜனம் முன்வைத்துள்ள அற்புதமான தீர்மானமாகும்... என்ற பில்டப் வேற ... வேதத்தில் இருக்கும் விசயத்தையே பிரட்டிப் பேசும் உங்களைப் போன்ற அசுத்த தூதுவர்களிடம் கொஞ்சம் விலகி இருப்பதே நன்று.

அடுத்து அவர் பதிந்த இன்னுமொரு பதிவு

////அவரே பிதாவாகிய தேவனுடைய நேரடி வெளிப்பாடாக இருக்கிறார்;பிதாவாகிய தேவனை ஒருபோதும் பார்த்திராத கேட்டிராத மனுக்குலத்துக்கு இயேசுகிறித்துவே அவர்தம் வெளிப்பாடாக இருக்கிறார்;இந்த சாதாரண அறிவு கூட இல்லாமைக்குக் காரணம் கிறித்துவிடமிருந்த மனத் தாழ்மையில்லாமையே////   

இப்ப நான் கொடுக்கும் பதிவுகளுக்கு  ஒழுங்காக பதில் கொடுங்கள் பார்ப்போம்.

இயேசு பூமிக்கு வருவதற்கு முன் எங்கு இருந்தார் என பைபல் கற்பிக்கிறது  ?

இயேசு பூமிக்கு வருவதற்கு முன் பரலோகத்தில் வாழ்ந்தார் என பைபள் தெளிவாக போதிக்கின்றது. பெதிலகமில் தான் மேசியா பிறப்பார் என்றும், அவருடைய ஆரம்பம் 'பூர்வத்தில் இருந்தே' வருகிறது என்றும் மீகா என்ற திர்க்கதரிசி முன்னுரைத்தார். ( மீகா 5 :2 ) ஒரு மனிதனாக பிறக்க முன் பரலோகத்தில் வாழ்ந்ததாக இயேசு பலமுறை சொல்லிருந்தார். இதற்கான வேதப் பதிவு இதோ ....

யோவான் 3 :13   ''பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை''.

யோவான் 6 :38 , 62  ''38. என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கிவந்தேன்.
62. மனுஷகுமாரன் தாம் முன்னிருந்த இடத்திற்கு ஏறிப்போகிறதை நீங்கள் காண்பீர்களானால் எப்படியிருக்கும்?
யோவான் 17 : 4 ,5 .... 4.
பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்துமுடித்தேன்.
5. பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும்.

பரலோகத்தில்  ஓர்  ஆவி   சிருஷ்யாக
யேகோவாவோடுஅவருக்கு ஒரு விசேசித்த பந்தம் இருந்தது என்று மேலே இருக்கும் வேதப்பதிவுகள் எமது தலையில் அடித்து சொல்கின்றது.

அடுத்த கேள்வி யெகோவாவின் மிக அருமையான குமாரன் தான் இயேசு என்பதை பைபள் எப்படிக் காண்பிக்கிறது?

யெகோவாவின் மிக அருமையான குமாரன் தான் இயேசு; அப்படிச் சொல்ல தகுந்த காரணங்கள் மற்றும் வேதப்பதிவுகள் இருகின்றன. அவர் கடவுளுடைய முதட்படைப்பாக இருப்தனால் 'சர்வ சிருஷ்டிக்கும் முந்தினவர்' என அழைக்கபடுகிறார். **( யேகோவா சிருஷ்டியாக இருப்பதால் தான் பிதா என்று அழைக்கப்படுகிறார். (ஏசாயா 64 :8 ) கடவுளால் இயேசு சிருஷ்டிக்கப் பட்டதால் கடவுளுடைய குமாரன் என்று அழைக்கப்படுகிறார். இதுபோன்ற காரணங்களுக்காக, மற்ற ஆவி சிருஷ்டிகளும், ஏன் மனிதனான ஆதாமும் கூட, கடவுளுடைய குமாரர்கள் என அழைக்கப்படுகிறார்.- யோபு 1 :6  லூக்கா 3 :38 ::::: (கொலசெயர் 1 :15 ) அந்தக் குமாரன் விஷசித்தவராக இருப்பதற்கு வேறொரு காரணமும் இருக்கு. - அவர்தான் கடவுளுடைய ஒரே பேரான குமாரன். யோவான் 3 :16  இவ்வாறு சொல்கின்றது.

''தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்''.

இந்த அவர்தான் கடவுளுடைய ஒரே பேரான குமாரன் என்ற பதிவுக்கு அர்த்தம் என்ன? இயேசு ஒருவரே கடவுளால் நேரடியாக படைக்கப் பட்டவர் என்று அர்த்தம். அத்தோடு, மற்ற எல்லாவற்றையும் படைப்பதற்கு கடவுள் பயன்படுத்திய ஒரே நபர் இயேசு தான் என்றும் அர்த்தம். கொலேசெய 1 :16  இவ்வாறு சொல்கின்றது.

 ''ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது''. 

அதுமட்டுமா?  ''வார்த்தை'' என்றும் கூட இயேசுவை அழைக்கப்படுகிறார். (யோவான் 1: 14 ) கடவுளின் சார்பாக அவர் பேசினார் என்று இது அர்த்தப்படுத்துகிறது. அப்படி என்றால், பிதாவின் மற்ற ஆவி குமாரர்களுகும் மானிட குமாரர்களுகும் அவர் செய்திகளையும் கட்டளைகளையும் அறிவித்து இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இது போன்ற பதிவுகளின் மேலதிக விளக்கத்தை பெற எனது நண்பன் தேநீர் பூக்கள் எழுதிய  பிரதான தூதனாகிய மிகாவேல் யார் ? என்ற திரியில் வாசித்து பார்க்கலாம்.

அடுத்த கேள்வி முதற்பேறான குமாரன் கடவுளுக்குச் சமமானவர் அல்ல என்பது நமக்கு எப்படி தெரியும்?

துர் உபதேசங்களை கொண்ட சில்சாமின் தள கோமாளிகள் நினைப்பதை போன்று இந்த முதற்பேறான குமாரன் சமமானவராக இருக்கிறாரா??????  பைபல் அவ்வாறு கற்பிக்கவே இல்லை ::இல்லை... இந்த தளத்தின் ஏற்கனவே எழுதிய பல ஆய்ர பதிவுகளின் படியும், வேதப் பதிவுகளின் படியும் அந்தக் குமாரன் கடவுளால் படைக்கப் பட்டவர். அப்படிஎன்றால் அவருக்கு ஓர் ஆரம்பம் இருந்து இருக்கிறது. ஆனால் யேகோவா தேவனுக்கு ஆரம்பமும் இல்லை முடிவும் இல்லை என்று சங்கிதத்தில் இருக்கும் 90 :2  நமக்கு இவ்வாறு சொல்கின்றது.

''பர்வதங்கள் தோன்றுமுன்னும், நீர் பூமியையும் உலகத்தையும் உருவாக்குமுன்னும், நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர்''.

தம்முடைய பிதாவுக்கு சமமானவராக இருக்கவேண்டும் என்று ஒரே பேரான அந்தக் குமாரன் ஒரு போதும் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. குமாரனை விட பிதா பெரியவராக இருக்கிறார் என்று பைபல் தெளிவாக கற்பிக்கிறது. யோவான் 14 :28  1  கொரிந்தியர் 11 :3 ) யேகோவா ஒருவரே ''சர்வவல்லமை உள்ள தேவன்'' ஆதியாகமம் 17:1  சொல்கின்றது. ஆக வேறு எவருமே அவருக்கு நிகர் கிடையாது.

இப்ப சொல்லுங்க சில்சாம் என்ற கள்ளப் போதகரே இயேசு தொழத்தக்க தெய்வமா ?::::  யுத்தம் தொடரும் ... 



-- Edited by Dino on Sunday 6th of March 2011 04:54:48 PM

__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது.
- நெப்போலியன் (
தமிழ் கிறிஸ்தவ சபை )


Executive

Status: Offline
Posts: 425
Date:

பிதாவாகிய தேவனைக் குறித்தும் குமாரனாகிய இயேசுவைக் குறித்தும் அருமையான விளக்கம் கொடுத்து வரும் அன்பான டினோ அவர்களை வாழ்த்துகிறேன்.

தங்கள் விளக்கங்கள் சம்பந்தப்பட்ட நபர்களின் அறிவீனத்தைப் போக்குமோ இல்லையோ, இத்தளத்தினுள் வருகிற அனேகருக்குப் பயனாயிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. தொடரட்டும் தங்கள் உன்னதப் பணி.


-- Edited by anbu57 on Sunday 6th of March 2011 07:58:35 PM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Member

Status: Offline
Posts: 125
Date:
RE: பிதா, குமாரன், பரிசுத்த ஆவி பற்றிய வேத விளக்கம்.


///இன்று மதியம் (06.03.2011@3pm) கோவை வெறியன் போன் செய்து கொஞ்சமும் வெட்கமில்லாமல், அந்த ஆளை நான் வேசியின் மகன் என்று எழுதிவிட்டதாகவும் இனி அதுபோல எழுதினால் வீட்டுக்கே வந்து வெட்டிப்போட்டுவேன் என்று மிரட்டினார்;மேலும் கோர்ட்டுக்கு இழுப்பேன் என்றும் அச்சுறுத்தினார்;மேலும் சரியான ஆம்பளையாக இருந்தால் நேரடி விவாதத்துக்கு வரச் சொல்லியும் சவால் விட்டார்; நான் என்ன செய்யமுடியும்? எனக்கு எந்த பாதுகாப்பும் இல்லை; எனக்கு எது நடந்தாலும் கேட்க யாருமில்லை; ஆனால் இதோ எழுதிவைக்கிறேனே, இதுவே எனது மரண வாக்குமூலமாக இருக்கும்.

நான் இயன்ற மட்டும் மரியாதையாகவே பேசினேன்;அவர் ஏதோ இரத்தகொதிப்பு  (BP) நோயாளியைப் போல படபடப்பாக ஒருமையில் பேசினதால், எனக்கே பரிதாபமாக இருந்தது;கோவை மாவட்டத்துக்குக்காரர்கள் பொதுவாகவே மரியாதைக்கு பேர் போனவர்கள் என்பதால் நான் இயன்ற மட்டும் மரியாதையாகவே பேசினேன்;ஆனாலும் அவர் கட்டுப்பாட்டுக்கு வருவது போலத் தெரியவில்லை;வீட்டிலிருந்த எனது மனைவியும் எனது தம்பியும் மிகவும் பயந்துவிட்டார்கள்;ஆனாலும் அவர்களை அமைதிபடுத்திவிட்டு தொடர்ந்தேன்;இன்று ஞாயிற்றுக்கிழமையாதலால் என்னை சந்திக்க சில குடும்பங்கள் வந்திருந்தால் மிகவும் சங்கடமாக இருந்தது;சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேல் அவரோடு போராட வேண்டியதாக இருந்தது;அவர் கொலை மிரட்டல் விட்டதைக் குறித்து நாம் கவலைப்படவில்லை;ஆனால் நம்முடைய விளக்கங்களை ஏற்க மறுத்து அவற்றை முழுவதுமாக புறக்கணித்து நம்மீது பழிபோடுவதே சங்கடமாக இருக்கிறது; நான் மீண்டும் மீண்டும் தெளிவாகச் சொல்லிவிட்டேன், நான் யாரையும் வேசியின் மகன் என்று எழுதவில்லை; அன்பு எனும் குதர்க்கவாதியே நான் எழுதியவற்றுக்கு இடம் சுட்டி பொருள் விளக்கு என்பது போல பொழிப்புரை எழுதியவன்; நான் அவனிடமே தெளிவாகச் சொல்லிவிட்டேன், நான் இந்த அர்த்தத்திலோ இந்த குறிப்பிட்ட நோக்கத்திலோ எழுதவில்லை என்று;அதற்கு மேலும் ஒரு மனுஷன் விவஸ்தை கெட்டத்தனமாக வந்து கிறுக்கனைப்போல மிரட்டி நீ என்னை வேசியின் மகன் எழுதிவிட்டாய் இனி அப்படி எழுதினால் உன்னை கொலை பண்ணிடுவேன் என்றால் நான் என்ன சொல்லமுடியும்? நான் எழுதினேன் என்று சொல்லுகிறாயே, அதற்கு என்ன செய்வாய்,அது முடிந்துவிட்டது, இனி எழுதினால் என்ன எழுதாவிட்டால் என்ன,என்றேன்.

அந்த குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய கருத்தினை வாசகர் தயவுசெய்து சிரமம் பாராது வாசித்து என்மீது சொல்லப்ப‌டும் குற்றச்சாட்டுக்கு தகுந்த நியாயம் சொல்ல வேண்டுமாய் வேண்டுகிறேன்...இந்த நியாயத்துக்கு நான் யாரிடம் செல்லமுடியும்? நான் யாருக்காக இந்த களத்தில் இருக்கிறேன்? இதனால் எனக்கும் என் குடும்பத்துக்கும் என்ன பலன்? ஒன்றும் புரியவில்லை..!////

சில்சாம் என்ற பெரிய கள்ளனின் பதிவுகளை வாசித்து அதிர்ந்து போனேன்!!!!!!!!!!! காரணம் பொய்யிலே பிறந்த புலவர் மாதிரி எவ்வளவு அழகா திரைவசனம் கொடுக்கிறார் பாருங்க . இதை விட சினிமா படங்களுக்கு கதை எழுத போகலாமே. வேத மாணாக்கரின் ஒரு சகோதரனை பொய்யாக அவமதிப்பது இந்த முழு உலக வேத மாணாக்கரின் நடத்தைகளையும், சாட்சிகளையும் சந்தேகப்படுவதட்கு சமம்.
வேதம்  சொல்கிறது வேலைக்கு போக மனம் இல்லாதவன் சாப்பிடவே கூடாது என்று சொல்கிறது. பிச்சைகாரனை விட கேவலமாக சபை விசுவாசிகளின் காணிக்கைகளை கொண்டு பிச்சை எடுத்து வைறு வழக்கும் கூட்டங்கள் தானே நீங்கள். இந்த செய்தி எல்லாம் உமது சபைக்கு வரும் விசுவாசிகளுக்கு நன்றாக தெரியும். நீ சோம்பேறி என்றும் மக்கள் பணத்தில் உல்லாசமாக வாழும் கள்ளன் என்று:. உம்மைப் போலவே இந்த ஐரோப்பா நாட்டில் பல தமிழ் பேசும் கள்ளப் போதகர்கள் இருகானுவல். அதில் ஒரு சிலர் நிதி மோசடியில் கம்பி எண்ணிக்கொண்டும் இருக்கார்கள். நீ கள்ளன் வேதத்தை சாட்டாக வைத்து இதுவே குடும்ப வழக்கமாக செய்யும் அனைத்தும் எமக்கு தெரியும்.  உம்மைப்போல சில அடி முட்டாள்கள் தனது தளத்தில் வைத்துக்கொண்டு தன் சுயநலத்துக்காக அவர்களின் நேரத்தையும் வீணடித்துக் கொண்டு இது வெல்லாம் ஒரு புலைப்பா:::  தூ தூ :::::::  வேக்கம் கெட்டவனே :::::: உண்மையே பேசு :::  பொய் சொன்ன வாய்க்கும் பொறி கூட கிடைக்காது :::::



__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது.
- நெப்போலியன் (
தமிழ் கிறிஸ்தவ சபை )


Senior Member

Status: Offline
Posts: 125
Date:

///அன்பான சகோதரர் கோல்வின் அவர்களே, அங்கே எழுதும் தினோ (dino) எனும் கள்ளனே இங்கே ராஜ் (raj) என்ற பெயரில் நுழைந்துள்ளதாக சந்தேகிக்கிறேன்;உங்களுடைய சரியான கணிப்புக்காக உங்களுக்கு வாழ்த்துக்கள்;என்னைப் பொருட்படுத்தாது தயவுசெய்து தொடர்ந்து எழுதி இவர்களுடைய முகமூடியைக் கிழித்தெறியுங்கள்; உங்களைப் போல ஆதாரத்துடனும் கட்டுப்பாட்டுடனும் எழுதுவதற்கு எனக்குத் தெரியாது; என்னிடம் இருக்கும் வேகமும் உங்களுடைய விவேகமுமே இவர்களை வீழ்த்துவதற்குப் போதுமானது;தயவுசெய்து என்மீது என்ன வருத்தம் இருந்தாலும் அதனை தளத்தில் பதிக்கவேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்ளுகிறேன்;அவற்றை மின்னஞ்சல் மூலம் எனக்கு தெரியப்படுத்துங்கள்;நான் கடினமாக எதை எழுதினாலும் உங்கள் அன்பான கவலை தோய்ந்த முகமும் நீங்கள் என்னுடைய நற்பெயருக்கு பங்கம் உண்டாகிறதே என்ற அங்கலாய்ப்புடன் சொன்ன அறிவுரைகளும் என் மனக் கண் முன்பாக வருகிறது;ஆனாலும் எனக்கு வேறு வழி தெரியவில்லை;நான் உயிரோடு இருக்கும் வரை இப்படியே இருந்துவிட்டு போகிறேன்;நீங்கள் தொடர்ந்து போராடுங்கள்..!///

திரு; சில்சாம் என்ற கமாண்டோ பிசாசே ......நன்றாக இருக்கு தங்களின் ஊகங்கள் ...... இருண்டவன் கண்களுக்கு கண்டேதேல்லாம் பேய்மாதிரி இருக்குமாம் ::::  அதுபோலவே தங்களின்  பதிவுகளும். அதில் ஒரு வார்த்தை சொன்னிங்க பாருங்க '''
என்னிடம் இருக்கும் வேகமும் உங்களுடைய விவேகமுமே இவர்களை வீழ்த்துவதற்குப் போதுமானது''  இந்த வாய்ச் சவாடலளுக்கு  ஒன்றும் குறை இல்லை. வேதப் பதிவுகள் கொடுத்ததும், ஏற்கனவே கொடுத்த வசனங்களுக்கு சரியான வேத விளக்கம் கொடுக்க துப்பு இல்லை. இதில வேற பந்தாவா பாருங்க. வர வர வடிவேல் போல கொமடி பண்ற ரேஞ்சுக்கு வந்துட்டார் போல ::::: ( நன்றி நண்பர் கொல்வின் அவர்களே, உங்களுக்கான பதில் இன்று மாலைக்குள்  தளத்தில் காணலாம். அத்துடன் நீங்கள் கொடுத்த வேதப்பதிவுகளுகும் நன்றி. இப்பை வேத அறிவை வைத்து இருக்கும் நீங்கள் எப்படி சில்சாம் என்ற பிசாசின் தளத்துக்குள் செல்ல வஞ்சிக்கப்பட்ஈர்கள் .)...


__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது.
- நெப்போலியன் (
தமிழ் கிறிஸ்தவ சபை )


Veteran Member

Status: Offline
Posts: 80
Date:

இயேசு தேவனுடைய குமாரன் என்று விசுவாசிக்காத சில்சாம் சகோதரா !

"உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருடயதோடும், உன் முழு ஆத்துமாவோடும் ,
அன்பு௬ருவாயக", '

என்று இயேசு யாரை பற்றி {எந்த தேவனை } சொன்னார் ???/
யோவான் 20:17 ல் அவர் என் தேவன் என்று யாரை குறித்து சொன்னார் ???
பிதாவே ஒன்றான மெய்தேவன். யோவான் 17:3 ....................... என்று அவர் யாரை குறித்து சொன்னார் ???


__________________



விசுவாசிகிறவனுக்கு எல்லாம் ௬டும் ...


Senior Member

Status: Offline
Posts: 125
Date:

நன்றி சகோதரர் குரு அவர்களே, கேள்வி  கேட்டாலும் கேட்டிங்க, சுருக்கென்று கேட்டிங்க....  பதிலை பொருத்து இருந்து பார்ப்போம்.

கொல்வின் அவர்கள் எழுதுகிறார்.................

/// கோவை பெரியன்ஸ் தேவதூதர்களுக்கு கால்கள் இல்லை என்று கூறுபவர். ஒரு பெரிய தெய்வம் சின்ன தெய்வத்தை படைத்து அதன் மூலம் உலகை படைத்தது என்று கூறுவது சரியா சகோதரரே! யார் குழப்ப மனநிலை என்பது தற்போது புரிகிறதா? இதற்காக தான் உங்களை பபிலோனிய மதத்தார் என்றும் கூறிப்பிடுகிறேன்///

அவரின் பதில் மிகவும் சரியே, தேவன் இந்த உலகத்தை படைக்கும் முதல் மீகாவேலாயையும், தூதர்கலையே முதல் படைத்தார். வேதப்பதிவு கிழ்க்கண்டவாறு பத்தி அளிக்கிறது. கொலோசெயர் 1 அதிகாரம் 15. ''அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்''. என்று சொல்கின்றது. அதற்கு அடுத்த வசனம் சொல்கிறது: ''16. ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது''.
இன்னும் இதப் போன்ற பல பதிவுகள் வேதத்தில் உண்டு.

நீதிமொழிகள்  8 ஆம் அதிகாரத்தை பார்த்தல் 22. கர்த்தர் தமது கிரியைகளுக்குமுன் பூர்வமுதல் என்னைத் தமது வழியின் ஆதியாகக் கொண்டிருந்தார்.
23. பூமி உண்டாகுமுன்னும், ஆதிமுதற்கொண்டும் அநாதியாய் நான் அபிஷேகம்பண்ணப்பட்டேன்.
24. ஆழங்களும், ஜலம் புரண்டுவரும் ஊற்றுகளும் உண்டாகுமுன்னே நான் ஜநிப்பிக்கப்பட்டேன்.
25. மலைகள் நிலைபெறுவதற்கு முன்னும், குன்றுகள் உண்டாவதற்கு முன்னும்,
26. அவர் பூமியையும் அதின் வெளிகளையும், பூமியிலுள்ள மண்ணின் திரள்களையும் உண்டாக்குமுன்னும் நான் ஜநிப்பிக்கப்பட்டேன்.
27. அவர் வானங்களைப் படைக்கையில் நான் அங்கே இருந்தேன்; அவர் சமுத்திர விலாசத்தை வட்டணிக்கையிலும்,
28. உயரத்தில் மேகங்களை ஸ்தாபித்து, சமுத்திரத்தின் ஊற்றுகளை அடைத்து வைக்கையிலும்,
29. சமுத்திர ஜலம் தன் கரையை விட்டு மீறாதபடிக்கு அதற்கு எல்லையைக் கட்டளையிட்டு, பூமியின் அஸ்திபாரங்களை நிலைப்படுத்துகையிலும்,
30. நான் அவர் அருகே செல்லப் பிள்ளையாயிருந்தேன்; நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து, எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன்.
35. என்னைக் கண்டடைகிறவன் ஜீவனைக் கண்டடைகிறான்; கர்த்தரிடத்தில்
தயவையும் பெறுவான்.

இங்கே கொடுத்த வேதப்பதிவுகளின் படி பெரிய தெய்வமாகிய யேகோவா என்னும் நாமம் கொண்ட உன்னதமானவர் , நம் ஆண்டவராகிய இயேசுவை படைத்தது அவர் முலமே மற்ற அனைத்தும் படைத்தார் என்பது உறுதியாகின்றது: ஆகவே இயேசு தொழத்தக்க தெய்வம் அல்லவே அல்ல.


//இவ்வாசிரியரை (அவரது ஆக்கங்கள்) உங்களுக்குத் தெரியாது என்பது யாரோ என்ற வார்த்தை புலப்படுத்துகிறது. பின்னர் அவரை விமர்சிப்பது நகைப்புக்குரியது. நான் இவரின் ஆக்கதில் மட்டும் தங்கியுள்ளேன் என்பதை எதை அடிப்படையாக வைத்து சொல்லுகிறீர்கள். என பல பதிவுகளை வாசித்துள்ளீர்களா? ரசல் பற்றிய பதிவுகளைப் பாருங்கள்.

ஆசிரியரின் ஆக்கத்தில் இடம்பெறும் Citation & Refererce பகுதியியில் எந்த நூல்களிலிருந்து எந்த கருத்துக்கள் எடுத்தாளப்பட்டுள்ளன என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.இதை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும். Library Science கற்றுள்ளேன். ஒரு ஆய்வாளர் Citation & Refererce இல்லாமல் எழுதுவாராயின் அவை ஆய்வு நூலாக ஏற்றுக்கொள்ளப்படாது. இது உலகவிதி முறை. இதை யாராலும் மாற்ற முடியாது. சரியான போதனையா கள்ளப்போதனையா என்பதை வாசகர்கள் தீர்மானிப்பர். நீங்கள் Citation & Refererce உடன் எழுதுகிறீர்களா? அதன் முக்கியத்துவத்தை அறிந்துள்ளீர்களா?////

அவரை எனக்கு தெரியாது என்று யார் சொன்னது? அவர் கனடா, லண்டன், சுவிஸ் வந்து இருக்கும் போது இவர் அப்படி என்னதான் சொல்கிறார் என்று கேட்கவே மினக்கட்டு சென்றேன்.  இவர் கனடாவில் டொராண்டோ என்ற இடத்தில் யெகோவாவின் சாட்சி யார்? என்ற தலைப்பில் கொடுத்த விளக்கம் முன்னுக்கு பின் முரணாக இருந்தது. அப்பவே தெரிந்து கொண்டேன் அவர் எழுதும் புத்தகம் எவ்வாறு இருக்கும் என்று.

///இதற்குரிய பைபிள் ஆதார வசனம் எது? சாத்தனுக்கு இயேசு தேவன் இல்லை என்பது எப்படி தெரியும் என்று எந்த வசன அடிப்படையில் கூறுகிறீர்கள்.   யெகோவா சாட்சிகள் மற்றும் துர்உபதேசக்குழுக்களின் போதனைகளிலிருந்து எடுத்துக்கூற வேண்டாம். ரசல்தான் இப்படி எழுதி வைத்துள்ளார். சிலவற்றை இத்தளத்திலேயே பதித்துள்ளேன். படித்துப் பார்த்தீர்களா?///

இந்தக் கேள்வியே தாங்கள் வீன்புக்கு கேட்பதை போன்று இருக்கு. லூக்கா 4 : 1 -13 பதிவுகளின் படி இயேசுவை பார்த்து  சாத்தான் கேட்கிறான். ''நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்த கல் அப்பமாகும்படி சொல்லும் என்றான்''.  அடுத்த பதிவு சொல்கிறது இவ்வாறு 7. நீர் என்னைப் பணிந்துகொண்டால், எல்லாம் உம்முடையதாகும் என்று சொன்னான்.
8. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.

மேலே கூறிய வேதப்பதிவுகளின் படி உங்களின் கேள்விக்கு பதில் இருக்கு. சாத்தான் தேவனிடமே வந்து ''நீர் தேவனுடைய குமாரனேயானால்''  என்று  கேட்க வாய்ப்பே இல்லை. ஆகவே இயேசு தேவனின் குமாரன் என்று சாத்தானுக்கு நன்றாக தெரியும்.


//
உங்களை அடையாளம் காட்டிக் கொண்டமைக்கு நன்றி. உலகில் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் இயேவை தேவன் என்றே அறிக்கையிடுகிறார்கள். யோவான் 1:1 தெளிவாக சொல்லுகிறது.  இயேசு தேவன் என்று.  துர்உபதேசக் குழுக்களே இதனை நிராகரிக்கிறார்கள். ////

உங்களுக்கு இந்தப் பதிவில் ஏன் இவ்வளவு குழப்பம். நீங்கள் ஒரு தடவை ஏன் நண்பன்  தேநீர்பூக்களிடம் இதே கேள்வியே கேட்டு இருக்கிறிர்கள். அவரும் இதற்க்கான பதிலை
யோவான் 1: 1 ''வார்த்தை'' என்ற திரியில்  விளக்கமாக கொடுத்துள்ளார். தயவு செய்து வாசித்து பார்க்கவும்.

உங்களின் அடுத்த வேதப் பதிவுகளுக்கான விளக்கம் எனது அடுத்த பக்கத்தில் கொடுக்கிறேன். நன்றி






__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது.
- நெப்போலியன் (
தமிழ் கிறிஸ்தவ சபை )


Senior Member

Status: Offline
Posts: 125
Date:

ஜான் எழுதுகிறார் :::::::::

/// பாவத்திலே பெரிய பாவம் இயேசுவை தொழமறுப்பதுதான். இந்த உலகத்தை தேவன் படைத்ததே அவருடைய குமாரனை அவருடைய படைப்புக்கள் (மனிதன் உட்பட) தொழுது கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். கடைசி நாளில் நியாத்திர்ப்பும் ஆதாமுடைய பாவத்தின் அடிப்படையில் மாத்திரம் இல்லாமல், தேவனுடைய குமாரனை நாம் எப்படி ஏற்றுக்கொண்டோம் என்பதை பொறுத்தே! ///

தங்களுக்கு ஒரே வசனத்தில் பதில் சொல்லவேண்டும் என்றால் யோவான் 17 :3  ''
ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்''. இதில் ஒன்றான மெய்த் தேவன் யார் ?  நீர் அனுப்பினவராகிய அந்த நபர் யார் ? பதில் தங்களுடையது.


__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது.
- நெப்போலியன் (
தமிழ் கிறிஸ்தவ சபை )


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சகோதரரே,

மிகவும் தெளிவாக வசனங்களுடன் பதிவுகளை தந்திருக்கிறீர்கள்!! அதே சமயம் பிசாசின் தந்திரங்களை அறிந்தவராக அவைகளுக்கு எப்படி பதில் கொடுக்கலாம என்பதை மிகவும் நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறீர்கள்!!

இவர்களுக்கென்று வேதத்தில் சில வசனங்கள் இருக்கிறது,

மத் 13:10. அப்பொழுது, சீஷர்கள் அவரிடத்தில் வந்து: ஏன் அவர்களோடே உவமைகளாகப் பேசுகிறீர் என்று கேட்டார்கள். 11. அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. அவர்களுக்கோ அருளப்படவில்லை.

வசந்தகுமார் பேசுவதும் எழுதுவதும் என்ன குப்பை என்பது இவர்களுக்கு தெளிவாக இருக்கும், ஆனால் வேதம் சொல்லுகிறதை நம்ப மறுப்பது இவர்களுக்கு அருளப்படவில்லை என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்!!

கொல்வின் அவர்கள் என்னமோ அவர் பதியும் பதிவுகள் ஆய்வுக்கு எடுத்து அநேகர் படித்து டாக்ட்ரேட் வாங்க போவதாக நினைத்திருக்கிறார் போல்!! ஐய்யா எங்களுக்கு Reference, Citation எல்லாம் வேத வசனமே!! அதை காட்டிலும் உங்கள் Library Science பெரியது கிடையாது என்பதை அறிந்திருக்கிறோம்!! எதை துனைக்கு அழைக்க வேண்டுமோ அதை குழி தோண்டி புதைத்து விட்டு, பாரம்பரியங்களில் ஊறி போனவர்களுக்கு மனித பிரகாரமான  Reference and Citation தான் முக்கியமாக படும்!!

இவர்களுக்கும் ஒரு வசனம் இருக்கிறாது,

1 பேதுரு 2:8. அவர்கள் திருவசனத்திற்கு கீழ்ப்படியாதவர்களாயிருந்து இடறுகிறார்கள்; அதற்கென்றே நியமிக்கப்பட்டவர்களாயும் இருக்கிறார்கள்.

ஏனென்றால் இவர்களுக்கு Library Scienceன் படி Reference and Citation தான் வேண்டும் வசனம் வேண்டாம்!! அது வசந்தகுமார் நிறையவே தருகிறார், பாராட்டுக்கள், தொடர்ந்து Reference and Citationக்கு பயந்திருங்கள், வேதத்தை அறிந்துக்கொள்ளும் நாள் வருகிறது, அப்போ தெரிந்துக்கொள்ளலாம்!!

என்னமோ இந்த வானத்திலிருந்து இறங்கிய தூதர்கள் தந்ததோ, அல்லது இவர்களே பரலோகம் போய் வாங்கி வந்தார்களோ!! ஏதோ ஒரு மனிதன் எழுதியதை பேரிது படுத்தாமல் வேததின் பரிசுத்தமான எழுத்துக்களில் உள்ள ஐ பார்த்தாலே போதும்!! அது மக்களிடம் பணம் வாங்கி மாளிகையில் வாழும் ஊழியர்கள் எழுதியது கிடையாது, மாறாக ஆவியில் நிறைந்து மனிதர்கள் எழுதினார்கள்!! உங்களுக்கு எது தேவையோ அதை போட்டுக்கொள்ளுங்கள், எங்களுக்கு வேத வசனம் தான் தேவை, ஆகவே அதை நாங்கள் எழுதுக்கொள்கிறோம்!!


__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 125
Date:

கொல்வினின் வேதப்பதிவுகளுக்கான விளக்கங்கள் இதோ .........

//இயேசு தொழத்தக்க தெய்வம் இல்லை என்று சொல்லுபவர்கள் கள்ள உபதேசக்குழுக்கள்.தாம். இந்த வசனங்கள் எதனைக் எடுத்துக் காட்டுகின்றது//

//ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்தஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்(அப் 20:28)//

கொல்வினின் கூற்றுப்படி பைபளில் உள்ள ஒரு சில வசனங்கள் கிறிஸ்து தான் , தொழத்தக்க தெய்வம் என்று ஒருதளப்பட்சமாக்வும், வேத வாக்கியங்களை ஆராய்ந்து பார்க்காமலும் ஒரு தீர்மானத்துக்கு வருவது முறையாகாது. காரணம் KJ  என்ற மொழிபெயர்ப்பில் இருக்கும் வேதவசனங்கள் அனைத்தும் சரியாக இருக்கும் என்ற முடிவுக்கு வருவதற்கு பிரிதான வேதத்தில் இருக்கும் மொழிபெயர்பையும் ஒப்பிட்டு பார்ப்பது மிக முக்கியம். அந்த வகையில் ஒரு வசனத்தின் வேதப்பதிவுகள் அது சொன்ன காலம், சந்தர்ப்பம், சுழலுக்கு ஏற்றாற்போல வேத வசனம் இருக்கென்றும் பார்க்கவேண்டும். அப்படி என்றால் அப் 20 :28 வசனத்தின் விளக்கத்தை வேறு பைபல் மொழிபெயர்ப்புடன் மற்றும்  KJ மொழிபெயர்ப்பின் அதே அதிகாரத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை அதன் மையப் பொருள் என்னவென்று பார்க்கவேண்டும். 

த்தோலிக்க லத்தீன் மொழிபெயர்ப்பு இவ்வாறு வாசிக்கின்றது:- ''உங்கள் மட்டிலும் சர்வேசுரன் தம்முடைய இரத்ததினால் தமக்குச் சொந்தமாக்கின தமது திருச்சபையே ஆளுவதற்கு இஸ்பிரித்துசாந்துவானவர்  உங்களை மேற்றிராணி மார்களாக இஸ்தாபித்து சர்வ மந்தையின்  மட்டிலும் எச்சரிக்கையாய் இருங்கள்'' ( UN ,KJ ,Dy , NAB இதைப் போன்ற சொற்களைப் பயன்படுத்துகின்றனர் ) எனினும், NW - ல் முன்பகுதி பின்வருமாறு வாசிக்கிறது:- '' தம்முடைய சொந்தமானவரின் (குமாரனின் ) இரத்தம்:''' (TEV -ல் இதைபோன்று இருக்கிறது. 1953 -ல்  அச்சடித்த RS -ல் ''தம்முடைய சொந்த இரத்தத்தால்.''' என்று இருக்கிற போதிலும், அதன் 1971 -இன் பதிப்பில் '''தம்முடைய சொந்தக் குமாரனின் இரத்தத்தால்,'' என்றிருக்கிறது. RO மற்றும் DA -ல் வெறுமென '''தம்முடைய சொந்த இரத்தம்,'' என வாசிக்கப்படுகிறது)

எந்த மொழிபெயர்ப்புகள்  1 யோவான்  1 :7 ''
அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்''.
ஆகிய  வேதப்பதிவுடன் ஒத்திருக்கிறது ? இங்கே  சொல்லி இருப்பதாவது :- ''அவருடைய (கடவுளுடைய) குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்'.'' ( வெளிப்படுதல் 1 :4 -6 ய்யும் பாருங்கள்)  யோவான் 3:16 ல் கூறப்பட்டுள்ள படி, நாம் ஜிவனடையும் படிக்கு, கடவுள் தம்முடைய ஒரே-பேரான குமாரனை அனுப்பினாரா , அல்லது அவர்தாமே மனிதனாக வந்தாரா ? கடவுளுடயதல்ல, அவருடைய குமாரனின் இரத்தமே ஊற்றப்பட்டது.   அடுத்த வேதப்பதிவு தொடரும் ...

__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது.
- நெப்போலியன் (
தமிழ் கிறிஸ்தவ சபை )


Veteran Member

Status: Offline
Posts: 80
Date:

கிறிஸ்துவத்தில் திருத்துவம் தொடங்கப்பட்டது எப்போது?

கி.பி. 325-க்கு பிறகு (Nicea counsil) நிசியா கவுன்சிலில் 
முடிவெடுக்கப்பட்ட மூன்று தெய்வ வணக்கம் (or) திரியேக தேவத்துவம், திருத்துவம் என்ற வணக்கம் துவங்கப்பட்டது


ஏற்கனவே திருத்துவம் வணக்கம் உலகத்தில் இருந்தது.

1. எகிப்து –      - ஓசீரியஸ்,  இஸிஸ்   , நிப்திஸ்
2. பாபிலோன் - சீயூஸ்    ,   ஹீரா      ,  ரீயா
3. ரோமாபுரி – -  ஜீபிடர்    ,   தியானா , மொர்குரி
4. ஜப்பான் -     - பான்       ,   போ         ,  பூ
5. இந்தியா-    -  சிவன்     ,   பிரம்மா   , விஷ்ணு.
6. ஜெர்மனி  -   தோர்         ,  வெட்டன் ,வ்ரிட்கோ.

“தேவன் ஒருவரே”

1தீமோ.1:17 ; நித்தியமும் அழிவில்லாமையும் (சாகாமை) அதரிசனமுமுள்ள ராஜனுமாய் (invisible king) “ஒருவரே” ஞானமுள்ள தேவனுமாயிருக்கிறவருக்கு கனமும் , மகிமையும் சதா காலங்களிலும் உண்டாயிருப்பதாக . ஆமென்.

சங் 83:17;  யேகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் “ஒருவரே” பூமியனைத்தின் மேலும் உன்னதமானவர் என்று மனுஷர் உணரும்படி.

1தீமோ. 2:5 ;  “தேவன் ஒருவரே” தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.

யோவா 17:3;  “ ஒன்றான”மெய் தேவனாகிய (only true God) உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்”

1தீமோ 6:16 ;  “ஒருவராய் ” சாகாமையுள்ளவரும் , சேரக்கூடாத ஒளியில் வாசம் பண்ணுகிறவரும்….

உபா 32:39;40; நான் நானே அவர் ,”என்னோடே வேறே  தேவன் இல்லை.”( சாகாதவர்)

ஏசா 45:5-9;   நான்,யேகோவா ; வேறொருவர் இல்லை. என்னைத்தவிர தேவன் இல்லை.
சங் 136:4;  “ஒருவராய்” பெரிய அதிசயங்களைச் செய்கிவரைத் துதியுங்கள்.

உபா 6:4;  இஸ்ரவேலே கேள்.நம்முடைய தேவனாகிய கர்த்தர், ஒருவரே கர்த்தர்

மல் 2:10  நம் எல்லோருக்கும் ஒரே பிதா இல்லையோ? ஓரே தேவன் நம்மை சிருஷ்டித்ததில்லையோ?

ரோம. 3:29-30;  தேவன் யூதருக்கு மட்டுமா தேவன்  ? புறஜாதிகளுக்கும் தேவனல்லவா? 
ஆம். புறஜாதிகளுக்கும் அவர் தேவன் தான்.….  நீதிமானாக்கிற தேவன் ஒருவரே.

ஆக உலக மக்கள் அனைவருக்கும் யூத கடவுளாகிய யேகோவாவே மெய்யான கடவுள்.  அவர் ஒருவரே

இப்ப பதில் சொல்லுங்க பாக்கலாம் நாங்களும்  யோசிப்போம்ல!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


__________________



விசுவாசிகிறவனுக்கு எல்லாம் ௬டும் ...


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

என்ன சகோதரரே,

இப்படி மொட்டையா வேதத்திலிருந்து எழுதினால் மாத்திரம் போதுமா, Citation and Reference வேண்டாமா? Library Science கொல்வின் போன்றோருக்கு வேத வசனம்  Citation and Referenceஆக தெரியாது என்பது உங்களுக்கு தெரியாதா?? ஒரு பென்னி ஹின்னோ, பால் யாங்கி சோவோ இப்படி எழுதியிருந்தால் அவர்களுக்கு புரியும்!! நீங்க பாட்டுக்கு வசனமா சொன்னா அவர்கள் தினறி போவார்கள் அல்லவா!! வசனத்தை எழுதினால் விஷத்த தூவுகிறார்கள் என்பார்கள் வசன விரோதிகள், ஆனால் வசந்த குமார் அல்லது மாம்சத்திலிருக்கும் வேறு ஒரு மனிதர் அதை எழுதியிருந்தால் அதை வேதமாக ஏற்றுக்கொண்டு Citation and Reference தருவார்கள்!!

இவர்கள் சொல்லும் திரித்துவம் தான் பிற மார்க்கங்களும் போதிக்கின்றன, என்ன செய்ய வேதத்தில் திரித்துவத்திற்கு "" இல்லை என்றாலும் கொல்வின் புரிந்துக்கொள்ள மாட்டேன் என்கிறாரே!! ஆகவே தான் தன் ஆன்மீக குருவான வசந்தகுமாரின் புத்தகங்களிலிருந்து "" காண்பிக்கிறார்!! ஆனால் ஒன்று, வசனத்தை புரட்டுவது எப்படி என்று இவர்களிடமே கற்றுக்கொள்ள வேண்டும்!!

உதாரனத்திற்கு,

யோவான் 10:30 நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.

இப்படி ஒரு வசனத்தை காண்பித்து, பார்த்தீர்களா, இருவரும் ஒருவரே என்று வசந்தகுமாரி அல்லது வேறு ஒரு மனிதனின் "" காண்பித்து விளக்குவார்கள்!! ஒன்றாக இருப்பதற்கும், ஒருவராக இருப்பதற்கு இவர்கள் வித்தியாசம் புரியாமல் யாரோ எழுதியதை கையில் வைத்துக்கொண்டு, வேத புத்தகத்தை புறகனிக்கிறார்கள்!! சரி இதன்படியே பார்த்தோமென்றால்,

யோவான் 17:11 நான் இனி உலகத்திலிரேன், இவர்கள் உலகத்திலிருக்கிறார்கள்; நான் உம்மிடத்திற்கு வருகிறேன். பரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாயிருக்கும்படிக்கு, நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும்.

யோவான் 17:21 அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்.

யோவான் 17:22 நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி நீர் எனக்குத்தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்.

இதில் உள்ள ஒன்றாயிருப்பது என்றால் வேறு அர்த்தமாம்!! என்ன கொடுமை சார் இது!! நாம் ஒன்றாயிருக்கிறதுபோல (ஒருவராக இருக்கிறார்கள் என்று இவர்களின் பிதற்றல்) அவர்களும் ஒன்றாயிருக்கும்படி (இது எத்துனை பேர் என்று தெரியவில்லை, ஆனால் இவர்களின் புரிந்துக்கொள்ளுதலின்படி அவர்கள் எல்லாரும் சேர்ந்து ஒருவரே என்று தானே இவர்கள் போதிக்க வேண்டும்) பிதாவிடம் வேண்டுகிறார்!! இதை கேட்டால் இல்லை, இல்லை, யோவான் 10:30ல் ஒன்றாயிருக்கிறோம் என்றால் மாத்திரமே ஒருவராக இருக்கிறோம் என்று அர்த்தமாம்!!

அவர்களுக்காக இல்லாவிட்டாலும் நம் தளத்தில் சத்தியத்தை தேடி விரும்பி வருவோருக்காக நீங்கள் தொடர்ந்து வேத வசனங்களை கொண்டே எழுதுங்கள்!!

தேவனின் ஆவி தாமே உங்களை நடத்தட்டும்!! நாம் தேவன் தந்த அதே ஆவியில் ஒன்றாக இருக்கிறோம்!!


__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 125
Date:

///என்னை உற்சாகப்படுத்தி வரும் சகோ. மைகோவை மற்றும் சகோ. சில்சாமிற்கு மிக்க நன்றி
இந்த தலைப்பை மாற்ற சொல்லி கேட்க நினைத்திருந்தேன். விடயத்திற்கு சற்றும் பொருத்தமில்லாருந்தது. மாற்றியமைக்கு மிக்க நன்றி.
மற்றும் அந்த பிரமிட்டு படத்தை போட்டு அசத்தி விட்டீர்கள்.
இங்கு தரப்பட்ட விபரங்கள் பல்வேறு நூல்களிலிருந்து திரட்டப்பட்டவை. அவை (Author Name, Title Name, Page No) ஆசிரியர் பெயர், தலைப்பு, பக்க இலக்கம் ஆகியவற்றுடன் தரப்பட்டுள்ளன. ஆர்வமுள்ளவர்கள் சம்பந்தப்பட்ட நூல்களை படித்து தெரிந்து கொள்ளலாம். இன்னும் அநேக வி்டயங்கள் உள்ளபோதும் அவற்றுக்குரிய நூல்மேற்கோள்ஆதாரங்கள் (Citation) இல்லாதபடியால் பதிக்க இயலவில்லை. அவ்வாறு பதிப்பதும் முறையன்று.
ரசல் மட்டுமல்ல அவர்களைப் பின்தொடர்ந்து வந்த யொகோவா சாட்சி தலைவர்கள் பலரும் கள்ளத்தீர்க்கதரிசனங்கள் உரைத்துள்ளனர். அவற்றை ஆதாரத்துடன் பின்னர் பார்ப்போம். இன்று இவர்கள் மற்றவர்களை தூற்றுவது வேடிக்கை.
இவருக்கு அடுத்த தலைவரான Joseph Franklin Rhtherford (1869-1942) பற்றி பார்ப்போம். அடுத்த வாரம் வரை சற்று பொறுத்திருங்கள். இவரை யெகோவா சாட்சிகள் எசேக்கியேல் 9:1-11 இல் முன்னறிவிக்கப்பட்ட சபைக்கான ஏழாவது தூதனாக கருதுகிறார்கள். (Source : J.H. Gerstner, The Teachings of Jehovh's Witnesses, p-17)
குறுகிய காலத்திற்குள்ளே இப்பதிவு இவ்வளவு வரவேற்பைப் பெறும் என்று எண்ணியதில்லை. உற்சாகப்படுத்தி வரும் அனைவருக்கும் என் நன்றிகள். அடுத்த திங்கள் வரை சற்றுப் பொறுத்திருங்கள். ///

ஆரம்பித்து விட்டார் கொல்வின் அவர்கள் அடுத்த படம் தயாரிக்க, சில்ல்சாமின் தளத்தில் இருக்கும் மொத்த தயாரிப்பாளரும் ஒரே மாதிரி இருகனுவல். வசந்த குமார் என்ற மனிதரின் தவக்க புத்தி இவர்களையும் ஒட்டி விட்டது போல ::::: தமிழ் தளத்தில் கொல்வின் அவர்கள் எழுதும் கட்டுரைகூட வசந்தகுமாரின் பதிப்புக்கள் மாறியே இருக்கு. நான் நினைக்கிறேன் இவர் வேதத்தை வாசிப்பதை விட வசந்த குமார் தயாரிக்கும் படத்தை பார்த்து வளர்ந்தவராக இருக்குமோ !!!!! 
//
ரசல் மட்டுமல்ல அவர்களைப் பின்தொடர்ந்து வந்த யொகோவா சாட்சி தலைவர்கள் பலரும் கள்ளத்தீர்க்கதரிசனங்கள் உரைத்துள்ளனர். அவற்றை ஆதாரத்துடன் பின்னர் பார்ப்போம். இன்று இவர்கள் மற்றவர்களை தூற்றுவது வேடிக்கை///

இந்தப்படம் இன்னும் புதிதாக  இருக்கு. பார்ப்போம் இன்னும் என்ன பொய் மலைகளை பொலியப் போறீங்க என்று.
கொல்வின் இயேசு தொழத்தக்க தெய்வமா என்று விவாதிப்பதை விட்டுவிட்டு வசந்தகுமார், மற்றும் யெகோவாவின் சாட்சிகாரங்கள் பற்றிய பதிவுகள் இந்த விவாதத்துக்கு தேவை தானா? எதோ ஒன்றை திசை திருப்ப கொல்வின் அவர்கள் சில்சாம் என்ற கள்ளனுடன் சேர்ந்து நாடகம் நடத்துகிறார் என்று மட்டும் தெரிகிறது. உங்கள் நாடகத்தை தொடருங்கள் ::::....


__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது.
- நெப்போலியன் (
தமிழ் கிறிஸ்தவ சபை )


Veteran Member

Status: Offline
Posts: 80
Date:

அன்பு சகோதரர் டினோ அவர்களுக்கு

நமது சகோதரர் ரசல் தன்னை ஏழாம் தூதன் என்று சொல்லவில்லை , ஆனால் அவரை பின்பற்றி வந்த மற்ற சகோதரர்கள் தான் அவர் மீது கொண்ட பற்றுதலினால்(அவரிடம் இருந்த பணத்தின் )  அவரை ஏழாம் தூதன் என்று வர்ணிக்கிறார்கள்,

இப்போ யார் மேல குற்றம் சொல்றது??????????????????????????


__________________



விசுவாசிகிறவனுக்கு எல்லாம் ௬டும் ...


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

திரித்துவர்கள் வழக்கம் போல் திசைத்திருப்பும் செயல் தான் இது சகோதரர்களே!!

இவர்கள் வேதத்தை காட்டிலும் ரஸலுக்கும், ரூதர்ஃபோர்டுக்கும் நல்ல விளம்பரத்தை தான் தருகிறார்கள்!! இன்னும் ரஸ்ஸலையும் அவர் புத்தகங்களையும் தெரியாதவர்களுக்கு ஒரு இலவச விளம்பரம் தான்!! சத்தியத்தை தேடுவோருக்கு இவர்கள் செய்யும் தூஷனம் போக சற்றாவது நல்ல வழிக்காட்டி விட்டு போகிறார்களே!! நமக்கு ஆயிரம் வேளைகள் இருக்கும் போது இவர்கள் இலவசமாக சில பல நல்ல புத்தகங்களை சிபாரிசு செய்வது செய்வதில் லாபம்!! மற்றபடி சத்தியத்தை நேசிப்பவர்களுக்கு திரித்துவம் சாத்தானின் உபதேசம் என்றும் அதை போதிப்பவர்கள் அவனுக்கு ஊழியம் செய்பவர்கள் என்பதும் தெரியும்!! இப்படி விஷயம் தெரிந்தவர்களுக்கு சில பொக்கீஷங்களையே அறிமுகப்படுத்துகிறார்கள்!!

II கொரிந்தியர் 11:14 அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே.15 ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே; அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும்.

மற்றபடி இவர்கள் எழுதும் குப்பைகளை தான் ஏற்கனவே ஊழியர்கள் என்கிற பெயரில் காசை மாத்திரம் நினைவில் வைத்துக்கொண்டு எத்துனையோ பேர் எழுதி வித்து பென்ஸ் கார், ஜம்போ ஜெட் விமானம், துபாயில் தங்க வைர ஹோட்டல் ரூம், ஹோண்டா அக்கார்ட் கார், போன்றவற்றில் காண்பித்திருக்கிறார்களே!!

ரஸ்ஸலை குறித்து இவர்கள் பாடும் ஒரு தலை ராகம் திரித்துவ போதகர்கள் எழுதியது தானே!! நான் ஒன்றும் ரஸ்ஸலின் விசிறி அல்ல, ஆனால் அவர் செய்திருக்கும், எழுதியிருக்கும் பல புத்தகங்கள், கண்டிப்பாக ஒரு முறையாவது வாசித்து பயன் பெறும் புத்தகமே!!

அவரின் தனிப்பட்ட வாழ்க்கை முறையை நியாயம்தீர்க்கும் இந்த குருட்டு கூட்டம், திரித்துவ போதகர்கள் எப்படி எல்லாம் இருக்கிறார்கள் என்பதை சிந்தித்தால் நலமாக இருக்கும்!! சாக்கடை துர்நாற்றம் தான் அடிக்கும் அவர்களை நாம் விமர்சிக்க தொடங்கினால்!! அன்றாடம் கம்பி என்னிக்கொண்டிருக்கும் சிலர், வேசித்தனம் செய்து மாட்டிக்கொண்டிருக்கும் பலர், மாட்டாமல் இருக்கும் பலர், ஓடிப்போய் திரும்பிய மனைவியர்கள் போன்றோர் இன்றும் திரித்துவ போதகர்களாக, தொலைக்காட்சியிலும், மேடைகளிலும், மினுமினுக்கும் பத்திரிக்கைகளிலும் தோன்றி ஏமாற்றி கொண்டிருப்பது நமக்கு என்னமோ தெரியாது என்று நினைத்திருக்கிறார்கள்!!

தொடர்ந்து ரஸ்ஸலை குறித்தான எல்லா புத்தகங்களையும் இவர்கள் வெளியிட்டால் நல்லா தான் இருக்கும்!! இவர்கள் அதை நிச்சயமாக செய்வார்கள் என்று நம்புகிறேன்!!


__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சகோதரர் தினோ அவர்களே,

நேரம் எடுத்து தாங்கள் கொடுத்து வரும் பதிவுகள் நிச்சயமாக பிரயோஜனமுள்ளதாய் இருக்கிறது, சத்தியத்தை தேடுவோருக்கு மட்டும், மற்றபடி வேதத்தை அறியாது மனிதர்களை ஆராய்பவர்களுக்கு உங்களின் பதிவுகள் புரியாது

திரித்துவர்களின் ஒரு விநோத கணக்கு இருக்கு

1 + 1 + 1 = 1

இது வேதத்தின்படியும், அறிவியலின்படியும் தவறே!! நம் தேவன் குழப்பத்தின் தேவன் என்று இவர்கள் நினைத்திருக்கிறார்கள் போல்!!

தேவன் ஒருவரே சாகாமை உள்ளவர் என்று எழுதினால் அதற்கு கிறுக்கு தனமான ஒரு கதை எழுதி தன் அறிவீனத்தை வெளிப்படுத்தியதை வாசித்தீர்களா!? என்ன செய்வது, அவர் அவருக்கு இருப்பதை தானே வெளிப்படுத்த முடியும்!! தேவன் நமக்கோ வசனத்தின் மூலம அவரையும் அவரின் குமாரனையும், அவர்களின் வல்லமையையும் அறிய செய்திருக்கிறார், ஆனால் இவர்களோ அதே வசனத்தை கொண்டு இடறுகிறார்கள், அதற்கென்று நியமிக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள்!!

நீங்களும் குருவும் கேட்ட கேள்விகளுக்கு அவர்களுக்கு பதில் சொல்ல முடியாத சூழல் உருவாகி இருக்கிறது, தங்களை புத்திசாலிகள் என்று நிரூபிக்க ஆதி முதல் செய்துவந்தது போல் திசை திருப்புவதை ஆரம்பித்து இருக்கிறார்கள்!!

ஆனாலும் நீங்கள் தொடர்ந்து பதிவுகளை தாருங்கள் நண்பரே!!


__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 125
Date:
பிதா, குமாரன், பரிசுத்த ஆவி பற்றிய வேத விளக்கம்.


கொல்வின் அவர்களே, தங்களின் பதிவுகளை வாசித்தேன். வாசித்தவுடன் நான் ரொன்ப கடுப்பு ஆவேன்  என்று  நினைத்திர்களா?  அது தான் இல்லை. உங்கள் பதிவில் நான் வேதப் புரட்டன் என்று எழுதி இருந்திர்கள். அதற்கு அவசியமே இல்லை. இப்படியான வேலைகளை செய்வது உங்களைப்போன்ற கள்ளர்களின் வேலை. அடுத்து வசந்தகுமாரனின் பிரசங்கத்தை கேட்க மினக்கட்டு போனிங்களா என்று கேட்பது உங்களின் அறியாமை. நான் இருக்கும் இடத்தில இருந்து பிரான்ஸ்; சுவிஸ், இத்தாலி, டென்மார்க், ஹோல்லாந்து போன்ற நாடுகளுக்கு  வாகனத்தின் முலம் செல்வது என்றால் (செல்வதற்கு( குறைந்தது இரண்டே மணித்தியாலம் தான். லண்டனுக்கு செல்வது என்றால் விமானச் செலவு வேரும் 30 € கட்டணத்தில் நினைத்தவுடன் செல்லமுடியும். தங்களுக்கு தெரிமோ தெரியவில்லை. என் உறவினர்கள் எல்லா ஐரோப்பா, கனடா போன்ற நாடுகளில் இருப்பது. ஐரோப்பா வாழ் மக்கள் நினைத்தால் எங்கும் போய்வர இங்கு பயண ஒழுங்குகள் நேர்த்தியாக இருக்கு. நண்பினால் நம்புங்க. இல்லாவிடில் அதில் எனக்கு கவலை இல்லை. அடுத்து வசந்தகுமார் பேசியது அனைத்தும் உண்மை. காலம் ஞாபகம் இல்லை. நிங்களே இதை வசந்தகுமாரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.

உங்கள் வேதப்பதிவுக்கு கொஞ்சம் எழுத தாமதம் ஆகிவிட்டது. மன்னிக்கவும். இதற்கு பதில் தெரியவில்லை என்பதை நான் ஏற்றுகொள்ள மாட்டேன். நீங்கள் இதே வேதப் பதிவை இத்துடன் நூறு தடவைக்கு மேலே கேட்டு இருகிங்கள் போல. சகோதரர் பெறேயான்ஸ் அவர்களும், மற்றும் நித்தியஜீவன் தளத்தில் சகோதரர்  அன்பு அவர்களும் இதற்கான கேள்விக்கு பதிகளை கொடுத்து இருக்கிறார். ஏற்கனவே நான் கொடுத்த வேதப்பதிவுகள்  நம்பாது எதோ பேசுவதில் இருந்து புரிகிறது. தாங்கள் விதண்டாவாதம் பேசுகிரிங்க என்று.

அடுத்து யேகோவா சாட்சி காரர்களை பற்றி எதோ உளறி இருந்திர்கள்: எனது விசுவாசம் வேத மாணக்கர  விசுவாச பிரிவை   சார்ந்தது. அத்துடன்   இயேசு தொழத்தக்க தெய்வம் இல்லை என்று நாங்கள் மட்டும் சொல்லகிறோம். இது தான் உங்களின் அறியாமை. ஐரோப்பாவில் எமது விசுவாசத்தை போன்று பல நூறு விசுவாசப் பிரிவுகள் உண்டு . அப்படி என்றால் உங்களின் கருத்துப் படி அவர்கள் எல்லோரும் யெகோவாவின் சாட்சியா? அல்லது அவர்கள் வேத மாணாக்கரா?.....  இந்த விஷத்தை சில்சாம் என்ற வேதப் புரட்டகன் சொல்லவில்லையா? அந்தக் கள்ளனுக்கு தெரிந்தாலும் சொல்லமாட்டான்:

தாங்கள் கேட்ட யோவான் 1 :1 க்கான விளக்கம்  தேநீர் பூக்கள் எழுதிய
யோவான் 1: 1 ''வார்த்தை'' திரியில் இருக்கு வாசித்து பாருங்கள்.  அடுத்து நீங்கள் எழுதிய பதிவு

////
நான் கேட்டேன் என்று உங்களுக்கு எப்படி தெரியும் பேஸ்புக்கில் அவருடன் உரையாடல் நடத்தியது உண்மைதான். அவர்தான் பதில் அளிக்க முடியாமல் ஓடிப்போனார். பின்னர் மூலமொழைி அது இது என்றார். மூலமொழி பற்றிய அறிவில்லாமல் அதற்கு விளக்கம் கொடுக்க முடியாது அல்லவா?
அந்த வார்த்தை ஒரு தேவனாயிருந்தது. ஒரு மிஸிங் என்றார். மூலப்பிரதி ஆதாரம் கேட்டேன். தரவில்லை. சரி உள்ளபடி வசனத்தில் ஒரு என்று சேர்த்தால்  தேவன் பல தேவன்களை உண்டாக்கி வைத்திருப்பார் ஐயத்தை ஏற்படுத்துகிறது. சரி அப்படியே ஒரு டம்மி தேவனை உண்டாக்க வேண்டிய தேவை என்ன? ஒரு தேவனாயிருந்தது என்று சொன்னால் என்ன அர்த்தம் என்று விளக்குவீர்களா?  அலம்ப வேண்டாம்////


இதற்கு வாய்ப்பே இல்லை. காரணம் அவர் எமது சபையில் ஒரு மூப்பர். அத்துடன் ஜெர்மனி நாட்டு இறையியல்  கல்லூரில்  முறைப்படி வேதத்தை  கற்று அறிந்தவர். அத்துடன் எமது சபையில் அவருக்கு பாரிய பொறுப்பு கொடுத்து அதை அவரது வேலை நேரம் போக அவரது ஊழியத்தை மிகவும் வைராக்கியமாக செய்து வருபவர். அப்படி அவரால் உங்களின் வேதப் பதிவுக்கு விளக்கம் கொடுக்கவில்லை என்றால் தங்களுடன் விவாதம் செய்து எந்த பிரயோஜனம் வராது என்று தெரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.  எனக்கே தெரிகிறது  நீங்கள் விதண்டாவாதம் பேசுகிறிர்கள் என்று.  தொடரும் ......


-- Edited by Dino on Wednesday 9th of March 2011 12:32:42 AM

__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது.
- நெப்போலியன் (
தமிழ் கிறிஸ்தவ சபை )
1 2  >  Last»  | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard