//ரெண்டு தேவர்கள் உண்டு என்று எங்கே சொல்லப்பட்டு இருக்கிறது? இயேசு "ஒரு தேவன்" (a god) என்றால் அவர் உண்மையான தேவனா அல்லது பிசாசா?
நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிர தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார்.//
நீங்கள் மூன்று தேவன் என்கிறதை காட்டிலும் நான் இரண்டு என்று சொல்லுவதில் ஒன்றும் இல்லை!! இயேசுவை தேவன் என்று அவரின் தகுதியை வைத்து எழுதியிருக்கிறார்கள்!! பிசாசையும் தேவன் என்று தான் வேதம் சொல்லுகிறது!! உங்களுக்கு தேவன் என்றவுடன் வழிப்படவேண்டும் என்கிற துடிப்பு!! நான் இரண்டு தேவன் அல்லது நான்கு தேவனிருக்கிறார்கள் என்று சொன்னதில்லை!! பிதா என்கிற ஒரே தேவன்!! உடனே நீங்கள் அவரின் (Nature and Essence) என்று மனித விளக்கத்தை தருவீர்கள்!! நானோ வசனம் சொல்லுவதை நேரடியாக விசுவாசிக்கிறேன்!! எனக்கு வேதத்தின்படி பிதா என்கிற ஒரே தேவன்!! கர்த்தர் (காக்கிறவர், இரட்சகர், மனுகுலத்தையே தன் பலியினால் இரட்சிக்கிறவர்) ஒருவரே, அவர் கிறிஸ்து!! இவர் உலக தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாக இருக்கிறார் என்கிறது வேதம்!! ஆனால் அதற்கு முன்னமே பிதாவாகிய தேவனின் திட்டத்தில் இந்த இரட்சிப்பு இருந்திருக்கிறது, இயேசு கிறிஸ்து வரும் வரை பழை ஏற்பாட்டினருக்கு அதன் தெளிவு இல்லை, அவர்கள் யாரும் கிறிஸ்து இயேசுவை கண்டதில்லை, மாறாக காண வாஞ்சையாக இருந்தார்கள் என்று தான் வசனம் சொல்லுகிறது!! பிதா இந்த இரட்சிப்பின் திட்டத்தின் ஆக்கியோன் என்பதால் அவரை இரட்சக்கர் என்று பழைய ஏற்பாட்டில் நாம் வாசிக்கிறோம்!! பிதா மரிக்க முடியாது, ஆகவே தன் குமாரனை அனுப்புகிறார்!! அவர் தேவனின் திட்டத்தை நிறைவேற்றியதால் இரட்ச்சகர் (கர்த்தர்)!! பிதா இரட்சிப்பின் திட்டத்தை கொடுத்ததால் இரட்ச்சகர் (கர்த்தர்)!! இவர் தான் அவர் என்றும் அவர் தான் இவர் என்றும் இவருக்குள் அவர் என்றும் அவருக்குள் இவர் என்றும் இவரும் அவரும் ஒன்று தான் என்றும் பல வித விளக்கங்களை வைத்துக்கொண்டு தினறும் உங்கள் நிலை பரிதவிக்க கூடிய நிலை தான்!!
பிதா ஒருவரிடமும் நேரடியாக பேசியதில்லை, அவரின் தூதனானவரே பழைய ஏற்பாடு முழுவதும் தேவன் சொன்னதை சொல்லியிருக்கிறார்!! ஆகவே தான் யோவான் அவரை "வார்த்தை" என்று எழுதுகிறார்!! இந்த வார்த்தை தேவனுடன் இருந்ததால் தேவன் என்று சொல்லப்பட்டிருக்கிறது!! பழைய ஏற்பாடு முழுவதும், கர்த்தரின் தூதனானவர், என்றே இருக்கிறது!!
இயேசுவை பிசாசு என்று நீங்கள் குறிப்பிட்டால் அதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை!! அவரை அறியாமல் இருக்கிறீர்கள்!! அவ்வளவே!!
////இது போல் ஆயிரம் பேர் ஆயிரம் படங்கள் காண்பிக்கலாம், ஆனால் இந்த படங்களில் ஒன்றும் என் வேத வசனத்திற்கு ஈடாகாது, ஒரு வேளை இந்த படம் வேத வசனங்களை சுட்டி காண்பித்திருந்தால் கூட யோசிக்கலாம்!! வசனமே இல்லாத இது போன்ற ஒரு வெறுமையான படங்கள், ஏற்கனவே திரித்துவத்தில் ஊறி போனவர்களுக்கு தான் தேனாட்டும் இருக்கும், என்னை போல் வேதத்தை நம்புவோருக்கு இது ஒரு சாதாரன வரைப்படம்!!//
உங்களுடைய வேத நம்பிக்கையின் லட்சணம்தான் அழகாக தெரிகிறதே! எல்லாரும் பரலோகம் போவார்கள் என்பது எந்த வேதத்தின் நம்பிக்கை? ரிக் வேதமா?//
என்ன உங்கள் போதனையை என் மேல் திருப்பிவிடுகிறீர்கள்!! நான் ஒரு போதும் எல்லோரும் பரலோகம் போவார்கள் என்று சொன்னதில்லையே!! ஒரு சிறிய கூட்டம், இடுக்கமான வாசல் வழியே அதை கண்டுபிடித்து, அதில் பிரவேசித்து, பவுலை போல், பேதுருவை போல் ஓடும் ஒரு சிறிய கூட்டமே பரலோகத்திற்கு தகுதியாக முடியும்!! இயேசு கிறிஸ்துவின் பலியினால் உயிர்த்தெழுதல் என்பதே ஒரு பெரிய பாக்கியம் என்று நான் நினைக்கிறேன்!! உங்கள் திரித்துவ கூட்டத்தார் தான், இயேசுவை நம்புவோர் அனைவரும் பரலோகம் போய்விடுவார்கள் என்று போதிப்பது!! மண்ணிக்கனும் சொல்லாத ஒன்றை சொல்லி புத்திசாலி என்று தங்களை நிரூபிக்க நினைக்காதீர்கள்!! கண்ட கண்டவர்கள் எழுதிய தரிசன புத்தகங்கள், சொப்பன புத்தகங்களை ஆதாரமாக காண்பித்து அதன் மூலம் அனைவரும் பரலோகம் போக முடியும் என்கிற தப்பான கணக்கை நீங்கள் போட்டு விட்டு நான் சொன்னதாக எழுதாதீர்கள்!! என்னுடைய பதிவை Quote செய்ததற்கும் உங்களின் கேள்விக்கும் சம்பந்தமே இல்லை!! வேதத்திற்கும் உங்கள் போதனைகளுக்கு சம்பந்தம் இல்லாதது போல் தான் இதுவும்!!
//பரிசேயர்கள் தியானிக்க, பதிலளிக்க வேண்டிய வசனங்கள்//
இது உங்கள் பரிசேயதனத்திற்கு தோன்றும் கேள்விகள்!! வசனங்களை முழுமையாக கவனித்து வாசித்தாலே அர்த்தம் விளங்கும்!! வசனத்தின் ஒரே ஒரு பகுதியை வைத்துக்கொண்டு இரண்டு நாட்கள் உபதேசிக்க உங்களை போன்ற போதகர்களுக்கு மாத்திரமே அத்துப்படி!!
//நீங்கள் "Selective" ஆக பதிலளிக்காமல் விட்டவைகள்.
இயேசு தேவனில்லை என்றால், அவரிடம் ஜெபிக்கலமா ?//
முதலாவது தேவன் என்கிற ஒரு வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்தால் உங்களுடன் விவாதிக்கலாம்!! மேலும் இயேசு கிறிஸ்துவிடம் அல்ல, இயேசு கிறிஸ்து கற்பித்தப்படி பிதாவிடத்தில் தான் ஜெபிக்க வேண்டும்!! அதை தான் பரிசேயத்தனமாக நீங்கள் பின்பற்றி வருகிறீர்களே!!
எல்லா துதியும் கனமும் மகிமையும் உமக்கு (பிதா) ஒருவருக்கே செலுத்துகிறோம், எங்கள் கர்த்தர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஜெபம் கேளும் எங்கள் நல்ல பிதாவே!!
இந்த வரிகளை பரிசேயத்தனமாக எத்துனை முறை சொல்லியிருந்தும் இயேசுவிடம் ஜெபிக்கலாமா என்பதே தேவையற்ற ஒரு கேள்வி!! பிதாவிடத்தில் தான் கேட்கிறோம், ஆனால் நம் பரிந்துரையாளரின் மூலமாக!!
* "நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிர தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார்."(ஏசாயா 44:6)//
வசனத்தை பார்த்தீர்கள் என்றால், ஒருவர் முந்தினவரும் பிந்தினவருமாக இருந்திருந்தாலும் "மரித்தார்"!! யெகோவா தேவனால் மரிக்க முடியாது, அவர் சாவாமை உள்ள தேவன் என்கிறது வேதம்!!
நீங்கள் கொடுத்த இரு வசனமும் இருவேறு நபர்களை குறித்து தான்!!
// * "கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் (YAWH) பாதையைச் செவ்வைபண்ணுங்கள் என்றும் " (ஏசாயா 40:3) * "பள்ளமெல்லம் உயர்த்தப்பட்டு, சகல மலையும் குன்றும் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி, கரடுமுரடானவை சமமாக்கப்படும் என்றும் "(ஏசாயா 40:4) * "கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும், மாம்சமான யாவும் அதை ஏகமாய்க் காணும், கர்த்தரின் வாக்கு அதை உரைத்தது என்றும் வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாயிற்று." (ஏசாயா 40:5)//
இந்த வசனங்களில் சொல்லப்பட்ட யாவும், தேவனை அறிந்துக்கொள்ள இயேசு கிறிஸ்துவின் மூலமாக செய்யப்படப்போகும் காரியத்தை சொல்லப்பட்டிருக்கிறது!! சொன்னால் நம்பவா போகிறீர்கள்!!
//இது வரை ஒழுங்காக இதை பின்பற்றி இருக்கிறீர்களா? எத்தனை கட்டளையை ஒழுங்காய் கடைபிடித்தால் பாஸ் மார்க் என்று தெரியுமா?//
பரிசேயத்தனமான கேள்வி!! அவர்கொடுத்த கட்டளைகளை பின்பற்ற பிரயாசிக்கிறேன்!! உங்களை போன்று பொய் சொல்ல எனக்கு விருப்பம் இல்லை!! பாஸ் மார்க் போடுவது தேவன், எனக்கு தெரியாது!! எனக்கு இருப்பது விசுவாசம், வேதத்தின் மேல் இருக்கும் விசுவாசம், கிறிஸ்துவுக்கு சீஷனாக இருக்கும் வாஞ்சை!!
//நான் பரலோகம் செல்வதே என் இயேசு தேவனின் பாதத்தில் அமர்ந்து ஆனந்த கண்ணிர் சிந்தி "என்னிடத்தில் என்ன இருந்தது என்று என்னக்காக மரித்தீர் அப்பா" என்று கேட்கத்தான்//
பாட்டு பாடியே இயேசுவை அப்பா என்று ஆக்கிவிட்டவர்கள் இருக்கிறார்கள்!! பிதாவால் மரிக்க முடியாது என்கிறது வசனம்!! பிதாவின் வலது பாரிசத்தில் இருக்கும் இயேசு கிறிஸ்துவிடம் போய் கண்ணீர் சிந்த நீங்கள் என்ன உங்கள் மாம்சத்தில் பரலோகம் போவீர்கள் என்று நினைப்பா?? இயேசுவை அப்பா என்று பிதாவிற்கு முன்பு சொல்லுவதே பிதாவை தூஷிப்பதாகும்!!
//உங்க அளவுக்கு தேவனுடைய வசனத்தை மாற்றி எழுத எனக்கு தைரியம் இல்லாததால் தான்//
பிதா என்கிற ஒரே தேவனை nature and essence என்று சொல்லி மூன்றாக கூர் போட்டு கூவி விற்பதைவிடவா வசனத்தை மாற்ற முடியும்!! யப்பாஆஆஆ.....
//சர்வத்திற்கும் மேலான தேவன் என்றால் யார் என்று சொல்லவே இல்லியே?
மகா தேவன் என்றாலும் யார் என்று இன்னும் சொல்லவே இல்லியே?//
இடையில் கொவினின் பரிகாசம்:
//சர்வத்திற்கும் மேலான தேவன் என்றால் யார் என்று சொல்லவே இல்லியே?
மகா தேவன் என்றாலும் யார் என்று இன்னும் சொல்லவே இல்லியே?
எதற்கெடுத்தாலும் மூலபாஷை என்று சொல்லுபவர்கள் அதற்குரிய சரியான அர்த்தத்தை மூலபாஷையின் பிரகாரமே தரவேண்டும். மூலபாஷை பாண்டித்தியம் உண்டு அல்லவா? மனிதப் போதனைகளைத் தரக்கூடாது.//
தேவன் என்றால் என்னவென்று உங்களுக்கு புரியாதவரையில் உங்களை போன்றோருக்கு எப்படி பதில் கொடுத்தாலும் உங்களுக்கு அது செரிக்காது!! கொல்வின் அவர்களுக்கு தெரிவதெல்லாம் இலங்கை வேதாகம கல்லூரியின் வஸந்தகுமார் அவர்களின் எழுத்துக்கள் மாத்திரமே!! அந்த பண்டிதரிடமே தங்களின் கேள்விகளை கேட்டுக்கொள்ளுங்களே!!
//என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன். (யோவான் 14:14).//
கண்டிப்பாக செய்பவர் குமாரன் தான் ஆனால்,
என் நாமத்தில் யாரிடம் கேட்க வேண்டும் என்றும் அவர் அதற்கு முன்னமே சொல்லிவிட்டார்!! உங்களுக்கு "நான்" என்று இருப்பது போல் கிறிஸ்து இயேசுவிற்கு "நான்" என்பது கிடையாது
யோவான் 14:13. நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன்.14. என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்.
நான் செய்வேன் என்றாலும் அவரின் பிற வார்த்தைகளை பாருங்கள், அவர் சுயமாக எதையும் செய்யாமல், பேசாமல் இருந்து எல்லாவற்றையும் பிதாவிடத்திலிருந்து தான் செய்கிறார் என்கிற வசனங்களை வாசித்தும் உங்கள் சுயத்தை விட்டு விடுங்கள்:
யோவான் 5:30 நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.
யோவான் 7:17 அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான்.
யோவான் 7:18 சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுய மகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை.
யோவான் 7:28 அப்பொழுது இயேசு தேவாலயத்தில் உபதேசிக்கையில் சத்தமிட்டு: நீங்கள் என்னை அறிவீர்கள், நான் எங்கேயிருந்து வந்தேனென்றும் அறிவீர்கள்; நான் என்சுயமாய் வரவில்லை, என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர். அவரை நீங்கள் அறியாதிருக்கிறீர்கள்.
யோவான் 8:28 ஆதலால் இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனை உயர்த்தின பின்பு, நானே அவரென்றும், நான் என்சுயமாய் ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் என்றும் அறிவீர்கள்.
யோவான் 8:42 இயேசு அவர்களை நோக்கி: தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார்.
யோவான் 11:51 இதை அவன் சுயமாய்ச் சொல்லாமல், அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனானபடியினாலே இயேசு யூதஜனங்களுக்காக மரிக்கப்போகிறாரென்றும்,
யோவான் 12:49 நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்.
யோவான் 14:10 நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்.
யோவான் 16:13 சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.
//இந்த வசனங்களில் சொல்லப்பட்ட யாவும், தேவனை அறிந்துக்கொள்ள இயேசு கிறிஸ்துவின் மூலமாக செய்யப்படப்போகும் காரியத்தை சொல்லப்பட்டிருக்கிறது!! சொன்னால் நம்பவா போகிறீர்கள்!!//
இதில் எந்த மாய்மாலமும் கிடையாது!! 5 வயதுக்கு ஏற்ற ஞானம் தங்களிடம் இருப்பதை ஒப்புக்கொண்டதற்கு நன்றி!! தங்களின் 5 வயது அறிவுக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால், இன்னும் கொஞ்சம் வளருங்கள் அதன் பிறகு யோவான் ஸ்நானகன் யாருக்கு வழியை ஆயத்தம் பண்ணினான் என்பதை புரிந்து விடும்!!
"பள்ளமெல்லம் உயர்த்தப்பட்டு, சகல மலையும் குன்றும் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி, கரடுமுரடானவை சமமாக்கப்படும்" என்பதெல்லம் கிறிஸ்து இயேசு வந்தவுடன் நடைபெறவில்லை, மாறாக அது நடக்கும் ஒரு காலம் இருக்கிறது!! அதை தான் தேவனின் இராஜியம் என்கிறது வேதம்!! இதை குறித்து எல்லாம் உங்களுக்கு போதனைகள் இருக்காது!! அந்த ராஜியத்தை குறித்து தான் கிறிஸ்துவும் அவர்களின் அப்போஸ்தலர்களும் சொல்லியிருக்கிறார்கள்!! இதுவும் உங்களுக்கு புரியாது!! வழியை ஆயத்தப்படுத்த சொன்னது, கிறிஸ்துவிற்காக அல்ல, மாறாக தேவனின் ராஜியத்திற்காக!!
இவைகள் நடைபெறும் காலமமும் விதமும் ஏசா 35ல் அழகாக இருக்கிறது, ஆனால் உங்களை போன்றவர்கள் அது இந்த காலம் தான் என்று கரடி விட்டு கொண்டு மேடைக்கு மேடை, என்னிடத்தில் வாருங்கள் இவைகள் எல்லாம் தருகிறேன் என்று சொல்லுகிறார்கள்!!
நெஞ்சிலே கையை வைத்து சொன்னால் நம்பிவிடுவீர்கள் போல்!! சரி நெஞ்சிலே கையை வைத்து சொல்லுகிறேன், யோவான் ஸ்நானகன் வழியை ஆயத்தப்படுத்த சொன்னது, "மனம் திரும்புங்கள் தேவனின் ராஜியம் சமீபமாக இருக்கிறது" என்கிற வழியை தான்!! சுவிசேஷத்தின் வழியை தான்!! நம்புவீர்களா!! நம்பமாட்டீர்களே!!
//இயேசுவை நித்திய பிதா என்று ஏசாயா சொன்னது தூஷணமா?//
நிச்சயமாக இல்லை, ஏசாயா ஒன்றும் உங்களை போல், இயேசு தான் பிதாவாகிய தேவன் என்றும், தேவனுக்கு உரிய மகிமையை கிறிஸ்துவுக்கும் செலுத்தவில்லை!! நித்திய பிதா என்றால் என்னவென்று போதுமான அளவிற்கு எழுதியாகிவிட்டது!!
//என்று நல்லா தெரியும் ஆனா வெளில சொல்லிட்டா அவர்கள் சேவிக்கும் "பிரபஞ்சத்தின் தேவன்" கோவிச்சுகுவார்.//
யார் பிரபஞ்சத்தின் தேவனுக்கு ஊழியம் செய்கிறார்கள் என்பது உங்களின் வசனங்களை பார்த்தாலே தெரிகிறது!! சாத்தான் தேவனின் (பிதாவின்) மகிமைக்கு பங்கம் உண்டாக உங்களை தேர்ந்தெடுத்திருக்கிறான், நீங்களும் அதை திறமையாக செதுவருகிறீர்கள்!!
1 பேது 2:8. அவர்கள் திருவசனத்திற்கு கீழ்ப்படியாதவர்களாயிருந்து இடறுகிறார்கள்; அதற்கென்றே நியமிக்கப்பட்டவர்களாயும் இருக்கிறார்கள்.
இது உங்கள் கூட்டத்தாருக்கு நேர்த்தியான ஒரு வசனமாகும்!! இல்லாத ஒரு திரித்துவத்தை பல வசனங்களில் "பொருத்தி" பார்த்து புரிந்துக்கொள்ள சொல்லுகிறீர்கள்!! நல்ல தமாசு தான் போங்க!!
//நெத்தியடி பதில்கள் சகோதரரே. தொடர வாழ்த்துக்கள்//
வாங்க வஸந்தகுமார் விசிறி அவர்களே!! உங்க பதிவிற்காக தான் காத்திருந்தேன்!! வேதத்தை விட அதிகமாக வஸந்தகுமாரை நாடுகிற உங்களுக்கு என்னை விமர்சிக்க தகுதியும் இல்லை நோக்கமும் இல்லை!! Reference and citation வைத்துக்கொண்டு ஊருகாய் போட்டு பிழைப்பை நீங்கள் நடத்துங்கள்!! எங்களுக்கு வேதம் போதும்!! உங்களுக்கு என்றே தேவன் சில வசனங்களை கொடுத்திருக்கிறார்,
2 தெச 2:12. அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.
இதில் அவர்கள் என்பது உங்கள் கூட்டத்தாரை தான் குறிக்கிறது!! முதலில் ஆற்றில் ஒரு காலும் சேற்றில் ஒரு காலும் வைத்து பேசுகிற உங்கள் நிலையை மாற்றுங்கள்!! விக்கிரக ஆராதனை சபையில் இருந்துக்கொண்டு உங்களுக்கு என்னை விமர்சிக்க தகுதியே கிடையாது!! உங்களுக்கு உங்கள் விக்கிரக சபை (அதை தான் மகா வேசியான பாபிலோனிய சபை என்று வேதம் சொல்லியிருக்கிறதே) அத்துனை தான் பேச கற்று தந்திருக்கும்!! இதற்கு மேல் என்னத்தை எழுதுவீர்கள்!! விரைவில் கட்டுரை தருகிறேன் என்று வசந்தகுமாரின் மற்றோரு புத்தகத்தை கொடுத்து கீழே Reference and citation என்று கொடுப்பீர்கள், இதற்கு மேல் என்ன தெரியும் உங்களுக்கு!! அநாவசையமான இடங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்!! தகுதி இருந்தால் விவாதத்தில் பங்கு பெறுங்கள், வெளியிலிருந்து விசில் அடிப்பவர்கள் என்னை பொறுத்த வரை பேடி குட்டத்தார்!!
மற்றுமோரு வசனம், இதுவும் உங்கள் கூட்டத்தாருக்கே,
1 பேது 2:8. அவர்கள் திருவசனத்திற்கு கீழ்ப்படியாதவர்களாயிருந்து இடறுகிறார்கள்; அதற்கென்றே நியமிக்கப்பட்டவர்களாயும் இருக்கிறார்கள்.
அது எப்படி அவர்கள் என்பது உங்கள் கூட்டத்தாருக்கு இரு வசனங்களிலும் தெளிவாக பொருந்துகிறது!! திருவசனத்திற்கு கீழ்ப்படியாமல் வசந்தகுமாருக்கு கீழ்ப்படிவதினால் இடறுகிறீர்கள், அதற்கென்றே நியமிக்கப்பட்டவர்களாயும் இருக்கிறீர்களே!! ரஸ்ஸலை குறித்து என்னை விட நீங்களே அதிகமாக எழுதியிருப்பதால் எனக்கு உங்களை குறித்து தான் சந்தேகமே!! நீங்கள் அந்த விக்கிரக சபையில் இருந்துக்கொண்டு அவர்களை போல் பாரம்பரியங்களை பின்பற்றுபவர்கள் தானே!! அதே மனநிலையில் இருப்பதால் தான், உங்களுக்கு வேதத்தை விட வசந்தகுமாரை பிடித்திருக்கிறது போல்!! அவருக்கு ஆராதனை செய்தாலும் செய்வீர்கள்!!
//இவர்களுக்கு வேதம் புரிவதில்லை. வசனமும் தெரிவதில்லை. ரஸலின் நூல்களே வேதப் புத்தகம் இவர்களுக்கு. அதை சொல்லுவற்கோ வெட்கம். யெகோவா சாட்சிகளிலிருந்து பிரிந்து வந்தவர்களாயிற்றே.
எப்போதும் ரஸலின் போதனைதான். //
ஆனாலும் வசந்தகுமாரை படித்து படித்து இப்படி மந்த புத்தியுள்ளவர்களாக மாறிவிட்டீர்களே கொல்வின் அவர்களே!! வேதம் தான் தெரியவில்லை என்றால் உங்களுக்கு வரலாறு கூட தெரியவில்லை போல்!! யார் யாரிலிருந்து பிரிந்தார்கள் என்கிறது கூட தெரியாதவராக உங்கள் வசந்தகுமார் நினைப்பதை எழுதுகிறீர்களா!! திரும்பவும் சொல்லுகிறேன், என்னை காட்டிலும் ரஸ்ஸலை அதிகமாக நீங்கள் தான் எழுதி வருகிறீர்கள்!!
Jehovah's Witnesses is a millenarian[1] restorationist[2] Christian[3] denomination[4] with nontrinitarian beliefs distinct from mainstreamChristianity. The religion reports worldwide membership of over 7 million adherents involved in evangelism,[5] convention attendance of over 12 million, and annual Memorial attendance of over 18 million.[6][7] They are directed by the Governing Body of Jehovah's Witnesses, a group of elders located in Brooklyn that exercises the final authority on all doctrinal matters. Witnesses claim to base their beliefs solely on the Bible and prefer their own translation, the New World Translation of the Holy Scriptures.[8] Their central belief is the imminent destruction of the present world system at Armageddon and the establishment of God's kingdom on earth, which they consider to be the only solution for all problems faced by humankind.[9]
The Bible Student movement is the name adopted by a Millennialist[1] Restorationist Christian movement that emerged from the teachings and ministry of Charles Taze Russell, also known as Pastor Russell. Members of the movement have variously referred to themselves as Bible Students, International Bible Students, Associated Bible Students, or Independent Bible Students.A number of schisms developed within the congregations of Bible Students associated with the Watch Tower Bible and Tract Society of Pennsylvania between 1909 and 1932.[2][3] The most significant split began in 1917 following the election of Joseph Franklin Rutherford as president of the Watch Tower Society two months after Russell's death. The schism began with Rutherford's controversial replacement of four of the Society's board of directors and publication of the The Finished Mystery without the board's prior approval, in violation of the Society's charter.[Need quotation to verify][4]
Bible Students was formed by Charles Tez Russel whom you claim to be founder of Jehovah Witness!! At least be sensible to update your knowledge that Joseph Franklin Rutherford was the initiater of Jehovah Witness group!! Please don't show your ignorance before JWs by just reading, copying, pasting and giving Reference and Citation of one Vasanthkumar of Ceylon Bible College!! I hope the above two links should satisfy you, if not then there is something wrong actually with you all
இதோ அடுத்த வசந்தகுமார் பதிவு!! கொல்வின் வேதத்தை சொல்லுகிறாரோ இல்லையோ, வசந்தகுமாரை நிச்சயமாக சொல்லுகிறார், ஏனென்றால் சொந்த சரக்கு இல்லாமல் இப்படி காபி பேஸ்ட் செய்து பழகிய கத்தோலிக்க விக்கிரக சபைக்குள் இருக்கிறவர் தானே!! அங்கே சாமியார்கள் பல ஆண்டுகள் வேதம் படித்தோம் என்று எதையோ சொல்லுவது போல் தான் இவரும் இங்கே செய்துக்கொண்டு இருக்கிறார்!!
வேதத்தை காட்டிலும் வசந்தகுமார் பெரிய வல்லுனரா!! இவர் மனுஷ ஞானத்தில் எழுதுவது எங்களுக்கு தெரியாதா என்ன!! நீங்கள் மெச்சிக்கொள்ளுங்கள் உங்கள் வசந்த குமாரை, எனக்கு என் வேதம் போதும்!! அதை விட்டு விளகியிருப்பது உங்களுக்கும் உங்கள் கூட்டத்தாரும் ஆரோக்கியமாக இருக்கும்!!
சொந்த கட்டுரை எழுதி வேதத்தை '' ஆக கொடுக்க பிரயாசம் செய்யுங்கள், இன்னும் எத்துனை காலம் தான் வசந்தகுமாரை பிடித்து நடப்பீர்கள்!!
இவரின் அபிமான வசந்தகுமாரின் கட்டுரையின் படி பார்த்தோமென்றால்,
மத்தேயு 1:25 அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து, அவருக்கு இயேசு என்று பேரிட்டான்.
லூக்கா 2:7 அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்.
மரியாளுக்கு இயேசு என்பவர் முதல் குழந்தை இல்லை, ஏனென்றால் முதற்பேறானவர் என்பது உண்மையில் முதலில் பெற்று எடுக்கப்பட்டவர் இல்லை என்பது வசந்தகுமாரின் வாதம், வசந்தகுமாரை கண்மூடித்தனமாக பின்பற்றுபவர்களுக்கு இது மாத்திரம் இல்லை, இன்னும் இருக்கிறது வசனங்கள்!!
அப்படி என்றால், அநேகர் உயிர்த்தெழுந்த பிறகு உயிர்த்தெழுந்த இயேசு கூட தன் தகுதியின் நிமித்தம் முதலாவது உயிர்த்தெழுந்துருக்கிறார் என்பது கொல்வினின் அபிமான வசந்தகுமாரின் வாதம்,
கொலோசெயர் 1:18 அவரே சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர்.
முதலில் உயிர்த்தெழுந்திருந்தாலும் உண்மையில் இவர் முதலில் உயிர்த்தெழவில்லை, இவருக்கு முன் பலர் உயிர்த்தெழுந்திருக்கிறார்கள் என்பது தானே வசந்தகுமாரின் விதண்டாவாதம்!! இவர்களுக்கு தேவையான இடத்தில் முதற்பேறானவர் முதலில் பெற்றெடுத்த குழந்தையாம் இல்லாட்டி, முதற்பேறானவர் என்பது உண்மையில் முதலில் பெற்றெடுக்கப்பட்டவர் அல்ல என்கிறார்கள்!! என்னாய்யா கூத்து இது!! இது கொல்வினுக்கும் வசந்தகுமாருக்கும் சேர்த்து எழுதப்பட்ட வசனம்,
II தீமோத்தேயு 2:18 அவர்கள் சத்தியத்தை விட்டு விலகி, உயிர்த்தெழுதல் நடந்தாயிற்றென்று சொல்லி, சிலருடைய விசுவாசத்தைக் கவிழ்த்துப்போடுகிறார்கள்.
ஏனென்றால் வசந்தகுமாரும் சரி, கொல்வின் சரி, இவர்களின் நம்பிக்கையின்படி முதற்பேறானவர் உண்மையில் முதலாவது கிடையாது, அப்படி என்றால் கிறிஸ்து இயேசு மரித்தோரிலிருந்து எழுத முதற்பேறுமானவர் என்பது இவர்களை பொறுத்த வரையில் உண்மையில் கிறிஸ்து இயேசு முதலாவது கிடையாது, கிறிஸ்துவிற்கு முன்னும் பலர் உயிர்த்தெழுந்திருக்கிறார்கள் என்று போதிப்பதாக தானே அர்த்தம்!! உங்களை போன்றோர் தான் விசுவாசத்தை கவிழ்த்துப்போடுகிறார்கள்!!
சும்மா முதற்பேறானவரை முதற்பேறானவர் என்றே அர்த்தம் கொண்டால் வேதம் சரியாக இருக்கும், இவர்களுக்கு எப்படியாவது அடுத்தவர்கள் சொல்லுவதை ஏதோ பெரிய குற்றம் கண்டுபிடித்து புத்தகம் போட்டு காசு சம்பாந்திக்கனும்!! ஆகவே முதற்பேறானவர் இவர்களுக்கு ஏற்றார் போல் இடம் மாறிக்கொள்வார்கள்!! ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை இவர்கள் இப்படி பட்ட புத்தகங்களை நம்பியே கட்டு கதைகளை சொல்லி திரிவார்கள்!!
முதற்பேறானவர் என்பது முதல் குழந்தை தான், இனியும் ஏமாற்றிக்கொண்டும் ஏமாந்துக்கொண்டும் இருக்க வேண்டாம் என்று உங்கள் வசந்தகுமாரிடம் சொல்லி வைய்யுங்கள்!! என்ன!!
வசந்த்குமார் எடுத்துக்காட்டாக சொல்லிய இரண்டு ஒரு வசனங்கள் சங்கீதம் மற்றும் தீர்க்கதரிசன புத்தகங்களின் வசனங்கள் என்பதையும் இவர் எழுதும் முன் நினைவில் வைத்திருந்தால், இப்படி பட்ட ஒரு முட்டா தனமான கட்டுரையை தந்திருக்க மாட்டார்!!
//ஆயினும் இந்நூலினை எழுதியவர் அதன் நிறுவுனர் திரு. ரஸல் அவர்கள் ஆவார். //
வேதமும் வரலாறும் தெரியாமல் வசந்தகுமாரை பின்பற்றும் திரு கொல்வின் அவர்களே!! உங்களுக்கு இந்த இரு தளங்கள் விவரிக்கும் யார் ரஸ்ஸல் என்றும் யார் யெகோவா சாட்சிகளை ஆரம்பித்தார் என்றும்!! இனியும் அரைவேக்காடாக யாரோ எழுதினார் என்று விவரம் தெரியாத புள்ளையாட்டும் பதிவுகளை தராதீர்கள்!! நீங்கள் உன்மையிலேயே படித்தவர் தான் என்றால் இனியும் இப்படி செய்ய மாட்டீர்கள் என்று என்னுகிறேன்!! தப்பான விஷயத்தை தப்பு என்று சொல்லுங்கள், ஆனால் இல்லாத விஷயத்தை சரி என்று சொல்லாதீர்கள்!!
கோமாளிகளின் தளத்திலே எழுதும் வசனங்களுக்கு தவறான அர்த்தம்கொண்ட பல பதிவுகளுக்கு மிகவும் அழகாகவும், சரியாகவும் விளக்கம் கொடுத்து இருப்பது; தங்களிடம் இருக்கும் வேத அறிவை காட்டுகிறது. நான் கூட இந்த பதிவுகள் ஊடாக பல விளக்கங்களை பெற்றுகொண்டேன், அதிக விடயங்களை கற்றுக்கொண்டேன். இருந்தாலும் பிசாசின் தூதனாகிய சில்சாம் போன்ற கிறுக்குப்பிடித்த பதிவுகள் வாசிக்கும்போதே தெரிகிறது இந்த பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர் தலையில் வந்து தங்கியிருப்பது. இவரின் இருக்கும் பிசாசை இயேசு கிறிஸ்து மீண்டும் பூமிக்கு நியாயம் தீர்க்க வரும் போதுதான் இவரில் இருக்கும் இந்த பிசாசை இல்லாது ஒழிக்கலாமே தவிர நாங்கள் ஆய்ரம் பதிவுகளை கொடுத்தாலும் வீன்புக்கும், வீண் விவாதங்களுமே எழுதிக்கொண்டு தன்னுடைய நேரத்தையும், அந்த தளத்தில் இருக்கும் மற்ற கோமாளிகளின் நேரத்தையும் வீண் அடிக்கிறார். தொடருங்கள் சகோதரரே .....
//இவர்களுக்கு வேதம் புரிவதில்லை. வசனமும் தெரிவதில்லை. ரஸலின் நூல்களே வேதப் புத்தகம் இவர்களுக்கு. அதை சொல்லுவற்கோ வெட்கம். யெகோவா சாட்சிகளிலிருந்து பிரிந்து வந்தவர்களாயிற்றே.
எப்போதும் ரஸலின் போதனைதான்.//
குழந்தைப்படம் போட்டால் உங்களை குழந்தை என்று நினைத்துக்கொண்டீர்களோ!! நீர் வசந்தகுமாரை எழுதுவது போல் நான் என்றாவது ரஸ்ஸலை உமக்கோ உம் கூட்டத்தாருக்கோ எழுதியது கிடையாது!! நான் யெகோவா சாட்சி என்றால் யெகோவா சாட்சி என்று சொல்ல வெட்கப்பட மாட்டேன்!! ஆனால் நீர் கத்தோலிக்க சபையில் இருந்துக்கொண்டு வேஷதாரியாக எனக்கு கத்தோலிக்க விசுவாசம் இல்லை என்றால், எது தான் உம் விசுவாசம்!! கால்வைக்க கத்தோலிக்க விக்கிரக சபை, அப்படி என்றால் அங்கே மட்டும் என்ன வசன வாழுதாக்கும்!!
நீர் குழந்தைப்படம் போட்டு உம் தளத்தில் உள்ளவர்களை வேண்டுமென்றால் ஏமாற்றிக்கொள்ளும், ஆனால் விக்கிரக சபையில் இருக்கும் உம்மை போன்றோர் எனக்கு அத்துப்படி!! உமக்கு எத்துனை முறை வேதமாணவர்கள் மற்றும் யெகோவா சாட்சிகளின் விக்கி தொடுப்பை கொடுத்தாலும் அதை வாசிக்க தெரியாமல் உமக்கு இருக்கும் வேத அறிவை போல் தான் வரலாற்றின் அறிவு என்பதை மீண்டும் மீண்டும் நிரூபனம் செய்கிறீர்!! 1874ல் ஆரம்பிக்கப்பட்ட ஒரு கூட்டம் 1931ல் உருவான ஒரு கூட்டத்தாரிடமிருந்து பிரிந்தார்கள் என்பதை உம்மை போன்ற அவதூரு பரப்பும் அறிஞர்களிடம் தான் கேட்டு தெரிந்துக்கொள்ள வேண்டும்!!
எப்பவும் வசந்தகுமாரை எழுதியும் காப்பி பேஸ்ட் செய்தும் இருக்கும் உமக்கு ஏன்னைய்யா இந்த கீழ்த்தரமான புத்தி!!
//மறுபடியும் பதில் தெரியாததால் மழுப்பல். நல்ல திட்ட மட்டும் கை ஓடிய type பன்னதெரியும் //
யோவான் 5:24. என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு;
இது இயேசு கிறிஸ்து சொன்னது, தெரியுமா!! எதற்கெடுத்தாலும் " பார்க்கும் உமக்கு தேவையில்லாத இடங்களில் அதை விட்டு விடுவது மாத்திரம் என்ன யோக்கியத்தனம்!! என்னை பரிசேயன் என்று சொல்லும் முன் நீர் எந்த மார்க்கத்தில் இருக்கிறீர் என்பதை சரிப்பார்த்துக்கொள்ளும்!!
//"அறிவு கொழுந்து" மாதிரி பேசாதிங்க! ஒருவசனத்தை இயேசுவினுடைய தேவத்துவத்திற்கு ஆதாரமாய் காண்பிக்கும் போது இன்னொரு வசனத்தில் அவர் பிதாவை சார்ந்து இருப்பதை சுட்டிகாட்டி அவர் தேவனில்லை என்று மறுப்பது மடமை! . //
நான் அறிவு கொழுந்து தான், உங்களை போன்று அறிவற்றவன் அல்ல!! அவர் பிதாவை சார்ந்து இருப்பதால் அவரை வேதம் சொல்லுகிறபடியான தேவன் என்று நான் ஏற்றுக்கொண்டு தான் இருக்கிறேன்!! ஆனால் சர்வவல்லமையுள்ள பிதாவிற்கு அடுத்து தான்!! வேதத்தை ஏன் உங்கள் கோட்பாடுகளுக்குள் அடக்க பார்க்கிறீர்கள்!! கிறிஸ்து ஒரு போதும் தான் பிதாவைவிட மேலானவர் என்று சொல்லவில்லையே, அவர் சொல்லாததை நீங்கள் சொல்லி யாரை திருப்த்தி படுத்த பார்க்கிறீர்கள், விக்கிரக ஆராதனைக்காரரே!! பாஸ்டரை நம்பியிருப்பவனும் விக்கிரக ஆராதனைக்காரன் தான்!! உங்களுக்கு பதில் எழுத நான் வசனத்தை தான் பயன்படுத்துகிறேன், வசந்தகுமாரையோ, பாரம்பரிய பாடல்களையோ அல்ல!! நீங்கள் தப்பான விசுவாசத்தில் தான் இருக்கிறீர்கள் என்பது நாங்கள் வசனத்தை காட்டுகிறோம் என்று எழுதுவதிலிருந்தே தெரிகிறது!!
//அவர் மனிஷகுமாரன் and also தேவகுமாரன்//
"and also" இது மட்டும் என்ன திருவள்ளுவர் சொல்லிக்கொடுத்த தமிழ் மொழியோ!! பாவம் உங்கள் ஆதரவாளர்களுக்கு புரியாம போக போவுது!!
//சரி யாருடைய உயிருக்கு 30 வெள்ளி காசு விலை நிர்ணயித்தார்கள்?//
உமக்கு வசனத்தை காண்பித்தால் நம்பாவா போக போகிறீர்கள்!! சமபந்தமே இல்லாமல் கேள்வி கேட்க மாத்திரம் தானய்யா உங்களுக்க்கு தெரியும், வசனம் சொன்னால் புரியாது, அப்புறம் ஒன்று கேட்டால் வேறு வசனம் காண்பிக்கிறீர்கள் என்கிற பதட்டம் வேறு!!
//# தேவத்துவம் பத்தி ஒருசத்தமும் இல்லை. அவருக்குள் தேவத்துவம் பரிபூரனமாய் இருக்கிறது என்று ஒப்புகொன்டகி விட்டது ஆனால் அவர் என் இன்னும் சின்ன 'ஒரு' தேவனாக இருக்கிறார் என்று தெரியவில்லை # சர்வத்திற்கும் மேலான தேவன் யாருன்னு இன்னும் சொல்லவில்லை
மகா தேவன் யாருன்னு இன்னும் சொல்லவில்லை.
உங்களுடைய கிறிஸ்தவத்தில் எந்தனை தேவன் (சொல்லவே கூசுது) என்ற கேள்விக்கு பதில் இல்லை.//
முதலில் தேவன் என்றால் என்ன என்று அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று தெரிந்துக்கொண்டாலே போதுமானதாக இருக்கும்!! ஒரே தேவனுக்குள் மூன்று தேவன் என்று பலதெய்வ கோட்பாட்டை உங்கள் கூட்டத்தார் தானய்யா வெளிப்படுத்தி கொஞம் கூட கூச்சமே இல்லாமல் தேவனை கொச்சை படுத்துகிறீர்கள்!! சின்ன தேவன் என்றோ பெரிய தேவன் என்றோ வேதம் சொல்லாத ஒன்றை உங்கள் பிசாசின் தளம் தான் வெளியிட முடியும்!! கிறிஸ்து தேவனின் குமாரன் என்று தான் வேதம் சொலுகிற பிரகாரம் சொல்லுகிறோம்!!
இயேசு "கிறித்துவை" தெய்வமாக தொழுவோர் தான் கிறிஸ்தவர்கள் என்கிற ஒரு புதிய மார்க்கத்தை உருவாக்கியிருக்கும் சில்சாம் மற்றும் அவரின் சீஷர்களுடன் இனியும் கிறிஸ்துவத்தை குறித்து விவாதிக்க மனமில்லை!! வேத வசனங்களை விவாதிப்போமென்றால் அவர்களுக்கு ரஸ்ஸலை விவாதிக்க தோன்றுகிறது!! என் கருத்து ரஸ்ஸல் கருத்துடன் ஒத்து போவதால் நான் ரஸ்ஸலை பின்பற்றுபவனாக இவர்கள் அவர்தூரு பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள்!! வசனத்தை சொன்னால் இவர்கள் ரஸ்ஸலை சொல்லுகிறார்கள்!! ஆக விவாதம் விவாதமாக இல்லாமல் ஒருவர் மேல் ஒருவர் சேற்றை பூசி விடுவது போல் இருக்கிறது!!
பிதாவை கணப்படுத்த முடியாதவர்கள், கிறிஸ்துவிற்கே எல்லா துதியும் கணமும் மகிமையும் என்று இவர்கள் ஜெபிப்பதினால் இவர்கள் ஒரு புதிய மார்க்கத்திற்கு அஸ்திபாரம் போட்டிருப்பது தெரிகிறது!! இவர்களுடன் பேசுவது என் தேவனின் நாமத்தையும் வேதம் சொல்லுகிறப்படி பிதா அல்ல மாறாக குமாரனான கிறிஸ்து இயேசுவின் நாமம் தூஷிக்க ப்படுவதால் இவர்களுடன் விவாதத்தை நிறுத்திக்கொள்கிறேன்!! இவர்களிடம் விலகியிருந்து நான் எந்த நோக்கத்திற்காக இந்த தளத்தை ஆரம்பித்தேனோ அதனை தொடர விரும்புகிறேன்!! எப்படி வேறு மதத்தாரோடு அல்லது வேற்று மார்க்கத்தாரோடு இந்த தளத்தில் விவாதம் இது வரை செய்ததில்லையோ, இனியும் சில்சாம் தலைமையிலான இயேசுசாமியை தெய்வமாக தொழும் இந்த புதிய வேற்று மார்க்கத்தாருடன் விவாதிக்க இனியும் மனமில்லை!!
நான் ரஸ்ஸலை போன்று கருத்து எழுதினால் நான் ரஸ்ஸலின் சீஷனாம், இவர்கள் வஸந்த்குமாரின் எழுத்தை காப்பி பேஸ்ட் செய்வது இவர்களுக்கு உண்டான தைரியமா!! நாம் என்ன ரஸ்ஸலை விவாதிக்கவா இந்த விவாத மேடையை அமைத்திருக்கிறோம்!! என்னமோ இவர்கள் சொல்லிவருவதெல்லாம் இவர்களுக்கு ஏதாவது ஒரு மனிதனிடம் இருந்து கிடைக்காமல் வானத்திலிருந்து வந்தது என்கிற நினைப்பு!!
இவர்கள் இவர்களின் தூஷனங்கலை தொடரட்டும், ஏனென்றால் கள்ள தீர்க்கதரிசிகளும், கள்ள கிறிஸ்துக்களும் தோன்றும் காலம் இது!! மனுஷக்குமாரன் வரும் போது விசுவாசத்தை காண்பாரோ என்கிற வார்த்தைகள் நிறைவேறும்படியாக இவர்கள் தொடர்ந்து இவர்களின் விசுவாசத்தால் உலகத்தை நிறப்பட்டும்!!
மத்தேயு 7:6 பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்; உங்கள் முத்துகளைப் பன்றிகள்முன் போடாதேயுங்கள்; போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும்.
இயேசு கிறிஸ்து சொன்ன இந்த வசனம் எத்துனை சத்தியமானது என்பது இந்த புதிய மார்க்கத்தார் நிரூபித்திருக்கிறார்கள்!!
நீதிமொழிகள் 27:22 மூடனை உரலில் போட்டு உலக்கையினால் நொய்யோடே நொய்யாகக் குத்தினாலும், அவனுடைய மூடத்தனம் அவனை விட்டு நீங்காது.
இந்த வசனத்தின்படியும் அவர்களின் மூடத்தனம் தெரிந்துவிட்டதால் இனியும் அவர்களை நொய்யாக குத்தினாலும் அவர்களின் மூடத்தனம் நீங்காது என்பதை புரிந்துக்கொண்டு நியாயத்தீர்ப்பின் நாட்களில் அவர்களுக்கு எது தெரிவிக்க பாடு படுகிறேனோ அதை கற்று கொள்வார்கள் தேவ அன்பு என்னவென்று அறியாத அந்த கூட்டத்தார்!!
பயந்து ஓடிப்போவதற்கு நான் ஒன்றும் சில்சாமின் தளத்தில் எழுதவில்லை, இந்த தளத்தில் எழுதுவது எழுதாமல் இருப்பது என் சுதந்திரம் என் விருப்பம்!! யாருடன் தர்க்கம் செய்யவேண்டும், யாருடன் செய்யக்கூடாது என்பதை முடிவு செய்பவன் நான்!! சில்சாம் என்கிற கள்ள மார்க்கத்தான் சொல்லுவது போல் பயந்து அல்ல மாறாக அங்கே இருக்கும் ஒரு கலப்பட கூட்டனியிடமிருந்து விலகுவதை வேதத்தின்படி சரி என்று முடிவு செய்து தான் அந்த பிசாசின் சந்ததியாருடன் விலகியிருக்க விரும்புகிறேன்!! சில்சாம் இந்த தளத்தில் பதிந்து பெட்டைத்தனமாகவும் பேடித்தனமாகவும் தன் பதிவுகளை நீக்கிவிட்டு ஓடியதன் பெயர் தான் ஓடுகாலித்தனம் என்று அந்த பிசாசின் தூதனும் அவனின் சகாக்களும் அறிய வேண்டும்!!
இந்த ஓநாய்களை விட்டு விலகும்படி எனக்கு வெளிப்பட்ட வசனங்கள்:
அப்போஸ்தலர் 19:8. பின்பு பவுல் ஜெபஆலயத்தில் பிரவேசித்து, தைரியமாய்ப் பிரசங்கித்து, மூன்று மாதமளவும் தேவனுடைய ராஜ்யத்துக்கடுத்தவைகளைக்குறித்துச் சம்பாஷணைபண்ணி, புத்திசொல்லிக்கொண்டுவந்தான். 9. சிலர் கடினப்பட்டு அவிசுவாசிகளாகிக் கூட்டத்திற்கு முன்பாக இந்த மார்க்கத்தை நிந்தித்தபோது, அவன் அவர்களை விட்டு விலகி, சீஷரை அவர்களிலிருந்து பிரித்துக்கொண்டு, திறன்னு என்னும் ஒருவனுடைய வித்தியாசாலையிலே அநுதினமும் சம்பாஷித்துக்கொண்டுவந்தான்
Acts 19: 8And he went into the synagogue and for three months spoke boldly, persuading and arguing and pleading about the kingdom of God. 9But when some became more and more stubborn (hardened and unbelieving), discrediting and reviling and speaking evil of the Way [of the Lord] before the congregation, he separated himself from them, taking the disciples with him, and went on holding daily discussions in the lecture room of Tyrannus from about ten o'clock till three.
மேலும் இந்த கூட்டனி சார்ந்திருக்கும் விசுவாசங்கள் என்னை இவர்களை விட்டு விலக செய்தது:
I தெசலோனிக்கேயர் 4:3 நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாகவேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. அந்தப்படி, நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருந்து,
வேசிமார்க்கத்தில் இருந்துக்கொண்டு வாய் சவடால் விட்டு கொண்டிருக்கும் கொல்வினிடமிருந்து விலகுவதற்கு தேவன் தாமே இந்த வசனத்தை தந்தார்!!
I தீமோத்தேயு 4:7 சீர்கேடும் கிழவிகள் பேச்சுமாயிருக்கிற கட்டுக்கதைகளுக்கு விலகி, தேவபக்திக்கேதுவாக முயற்சிபண்ணு. I தீமோத்தேயு 5:15 ஏனெனில் இதற்குமுன்னே சிலர் சாத்தானைப் பின்பற்றி விலகிப்போனார்கள். II தீமோத்தேயு 2:16 சீர்கேடான வீண்பேச்சுகளுக்கு விலகியிரு; அவைகளால் (கள்ளப்போதகர்களான) அவர்கள் அதிக அவபக்தியுள்ளவர்களாவார்கள்; II தீமோத்தேயு 2:18 அவர்கள் சத்தியத்தை விட்டு விலகி, உயிர்த்தெழுதல் நடந்தாயிற்றென்று சொல்லி, சிலருடைய விசுவாசத்தைக் கவிழ்த்துப்போடுகிறார்கள்.
தினகரன் பரலோகத்தில் கிறிஸ்துவிர்கு ஆலோசனை சொல்லிக்கொண்டிருக்கிறார் என்கிற விசுவாசத்தில் இருக்கும் சில்சாமிடம் தர்க்கம் செய்யாமல் விலகுவது தான் எனக்கு சரி என்ரு பட்டது!!
இது சில்சாம் எனும் கள்ள போதகனுக்கும், சாத்தானின் கையாளுமாக இருப்பவனுக்கும் அதிகமாக பொருந்துகிற ஒரு வசனம்!!
பெட்டைத்தனமாகவும், பேடித்தனமாகவும் இந்த தளத்திலிருந்து பதிவுகளை நீக்கி ஓடி போன சில்சாமிற்கு என்னை விமர்சிக்கும் தகுதி கிடையாது!! வேசி சபையில் விக்கிரகங்களுடன் இருக்கும் கொல்வின் வெளிநாட்டிலிருந்து வரும் பிச்சயான காணிக்கையில் வாழ்ந்துக்கொண்டிருக்கும் ஒரு சபையில் இருப்பதை மறக்க வேண்டாம்!!
தேவன் எனக்கு தேவையான வேலையை தந்திருக்கிறார்!! நானும் என் வீட்டாரும், என் குடும்பத்தாரும் அதிலிருந்து சாப்பிட்டுகொள்கிறோம்!! காணிக்கை என்கிற பெயரில் போதகன் என்று சொல்லிக்கொண்டு வீடு வீடாக திரிபவன் அல்ல நான்!! அப்படி பட்ட பிச்சையை வாங்கி பிழைப்பு நடத்துபவரிடம் கொல்வின் கொக்கரிப்பு இருக்கட்டும்!! என்னை குறித்தோ என் குடும்பத்தை குறித்தோ நான் வெளிநாட்டவரிடம் எந்த ஒரு தொடர்பும் இல்லாதவனாக இருந்தும் பிசாசின் ஏவுதளில் இப்படியாக எழுதியிருக்கும் கொல்வின், உனக்கு இதுவே இறுதியான எச்சரிக்கை!! தசமபாகம், காணிக்கை, வெளிநாட்டு பணம் இதற்காக ஒன்றும் நான் வரவில்லை, என் சொந்த பணத்தில், என் நிற்றி வியர்வை நிலத்தில் சிந்தி உழைக்கும் வருமானத்தில் பிழைப்பு நடத்துகிறேன்!! என்னை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கும் முன் என்னை அறிந்துக்கொண்டு எழுதுவது உமக்கு நலம்!!
விக்கிரக சபையில் இருப்பவனே தேவனுக்கு பயந்து யாரையும் விமர்சனம் செய்!!