kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பிசாசின் தூதன் சில்சாமின் தளத்தில் சில கோமாளித்தனம்!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
பிசாசின் தூதன் சில்சாமின் தளத்தில் சில கோமாளித்தனம்!!


ஜானின் கோமாளித்தனமும் காமெடியும்!! சில்சாம் போன்றோர் இந்த வடிவேலுவின் அவதாரத்தின் வாசகத்தை வாசித்து நகைக்கிறார்களாம்!! காமேடி எழுதினால் சிரிப்பு தான் வரும், வசனம் புரிந்தால் தான் சிந்திப்பு வரும்!!1

அன்பு அவர்களின் தளத்தின் விதண்டாவாதத்தில் ஈடுப்பட்டிருந்த திரு ஜான் அவர்களுக்கு கேட்ட ஒரு கேள்விக்கு (பதில் தெரியவில்லை என்றால் உங்களுடன் எல்லாம் விவாதிக்க முடியாது என்று ஓடி போவது இப்போதைய லேடஸ்ட் ஃபேஷன் போல்!! அவரின் குருநாதர் சில்சாமின் நடக்கும் ஜானிற்கும் இது வந்ததினால் ஒன்றும் தவறில்லை, இதையும் சில்சாம் நகைச்சுவை உணர்வோடு எடுத்துக்கொள்ளலாமே) வைத்த விளக்க முடியாமால் அவர் நம்மை இஸ்லாமியர்களுடன் ஒப்பீட்டு எழுதியிருப்பதி உண்மையாகவே நகைச்சுவை தான்!!

அட அறியாமையில் இருக்கும் கூட்டத்தாரே, நான் இந்த வசனத்தை உங்களிடம்  மாத்திரம் என்னமோ தேடிப்பிடித்து புதிதாக கேட்கவில்லை, உங்கள் குருநாதரிடம் பல முறை கேட்டும், அதற்கு உங்களை போல் தான் மழுப்பலாக பதில் வந்தது!! இது ஒன்றும் இஸ்லாமியர்களின் வேதத்தில் இருக்கும் வசனம் கிடையாது!! உங்களின் குருட்டு பார்வைக்கு பட மறுக்கும், உங்கள் செவிட்டு காதுகளுக்கு கேட்க மறுக்கும் வசனம்!! ஏனென்றால் உங்கள் கோட்பாட்டிற்கு அடுக்காத வசனம் இது!! ஆகவே தான் வசனத்திற்கு பதில் தராமல் இஸ்லாமியர்களுடன் என்னை ஒப்பீடுகிறீர்கள்!!

இதோ நான் அன்பு அவர்களின் தளத்தில் பதிந்தது,

1 கொரி 15:27. சகலத்தையும் அவருடைய பாதத்திற்குக் கீழ்ப்படுத்தினாரே; ஆகிலும் சகலமும் அவருக்குக் கீழ்ப்படுத்தப்பட்டதென்று சொல்லியிருக்கும் போது, சகலத்தையும் அவருக்குக் கீழ்ப்படுத்தினவர் கீழ்ப்படுத்தப்படவில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. 28. சகலமும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்.

கிறிஸ்துவிற்கு சகலத்தையும் கீழ்ப்படுத்தும் தேவன் கிறிஸ்துவிற்கு கீழ்ப்பட்டவரில்லை என்பது தான் இந்த வசனம் சொல்லுகிறது!! சகலத்தையும் அவருக்கு (கிறிஸ்துவிற்கு) கீழ்ப்படுத்தினவர் (பிதாவாகிய தேவன்) கீழ்ப்படுத்தப்படவில்லை என்பது வெளியரங்கமாயிருக்கிறது!! ஆனால் இந்த வெளியரங்மாயிருக்கும் செய்தி வசனத்தில் இருப்பதால் பிசாசானவன் கிறிஸ்தவர்களின் கண்களை குறுடாக்கி அவன் எப்படி தேவனின் நிலையை அடைய விரும்பினானோ,, அப்படியே கிறிஸ்துவையும் வைக்க சொல்லி ஒரு மனித போதனையை உறுவாக்கியிருக்கிறான்!! அதை கத்தோலிக்கம் என்கிற ஒரு மாபெரும் சபையின் மூலமாக நிறைவேற்றவும் செய்தான், அதை தான் வேதம் இப்படியாக சொல்லுகிறது,

அதற்கு கோமாளித்தனமான பதிலும்,

// "சகலத்தையும் அவருடைய பாதத்திற்குக் கீழ்ப்படுத்தினாரே; ஆகிலும் சகலமும் அவருக்குக் கீழ்ப்படுத்தப்பட்டதென்று சொல்லியிருக்கும் போது, சகலத்தையும் அவருக்குக் கீழ்ப்படுத்தினவர் கீழ்ப்படுத்தப்படவில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. சகலமும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார். (1. கொரி 15:27,28) //

என்னடா, இஸ்லாமியர்களை போல இந்த வசனங்களை இன்னும் இவர்கள் சொல்லவில்லையே என்று நினைத்துகொண்டு இருந்தேன். என் எதிர்பார்ப்பை நிறைவேற்றியதற்கு நன்றி. இயேசு பிதாவை விட "Hierarchy"- ல் கீழ்படிந்து இருப்பார், "தேவத்துவத்தில்" அல்ல. ஒரு அலுவலகத்தில் வேலை பார்க்கும் President- ம் மனிதன் தான், CEO ம் மனிதன் தான். In Nature (or Essence) ரெண்டு பேரும் சமமே.

அட கோமாளி கூட்டமே, Hierarchyல் கீழிப்படிந்து இருப்பவர் என்றாலே நீங்கள் குருத்தனமாக பிரசங்கிக்கும்In Nature (or Essence)  லும் தான்!! President- ம் மனிதன் தான், CEO ம் மனிதன் தான், சரி தான், ஆனால் இருவரும் ஒரே தகுதியிலும் ஒரே வல்லமையிலும், ஒரே தன்மையிலுமாக இருக்கிறார்கள்!! கிறிஸ்துவிற்கு தேவன் என்று சொல்லுவதை ஒரு போதும் நான் தவறு என்று சொல்லவில்லை, மாறாக கிறிஸ்து பிதாவின் அடுத்த நிலையில் இருக்கிறார் என்பதை தான் மேலே சொன்ன வசனத்தின் படி சொல்ல வருகிறேன்!!

அட கோமாளிகளே, முதலில் இயேசு வேறு பிதா வேறா என்பதில் தெளிவாக இருங்கள்!! அல்லது உங்கள் கோமாளி தளத்தில் பதிவிடுங்கள்!! இருவரையும் ஒன்று தான் ஒரு பதிவில் சொல்லகிறீர்கள், அப்புறம் Hierarchy முறையில் கீழ்ப்படிந்து இருப்பார் என்றால் இருவரும் வேறு என்றும் எழுதுகிறீர்களே!! உங்களை போன்றோருக்கு நிலையான ஒரு கோட்பாடே கிடையாதா!! அரசியல்வாதிகள் மாதிரி சந்தர்ப்பத்தை மாத்திரமே பயன்படுத்தும் கோமாளிக்கூட்டமாக அல்லவா இருக்கிறீர்கள்!! முதலில் இயேசுவும் பிதாவும் ஒருவரேயா அல்லது வெவ்வேறா என்பதை முடிவு செய்யுங்கள்!! இருவரும் In Nature (or Essence)ல் ஒன்று தான், ஆனால் Hierarchyல் வெவ்வேறு என்பது நீங்கள் எல்லோரும் குழப்பத்தின் உச்சியில் இருப்பதை காண்பிக்கிறது!! அந்த குழப்பத்தை உங்கள் தலைவன் (பிசாசின் தூதன் சில்சாம்) நகைச்சுவை உணர்வோடு பார்க்கிறாராம்!! ஆமா பின்னே, பிதாவை குறைக்கும் எந்த ஒரு காரியமும் பிசாசிற்கு நகைப்பாக தானே இருக்கும்!!

கோமாளிகளின் வேஷத்தை இன்னும் வெளிப்படுத்துகிறேன்................................


__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Member

Status: Offline
Posts: 9
Date:
RE: பிசாசின் தூதன் சில்சாமின் தளத்தில் சில கோமாளித்தனம்!!


இதே விவாதமேடையில் வேறொரு தலைப்பில் நீங்கள் ஜானிடம் "உங்கள் மேல் தனிப்பட்ட வெறுப்போ, கோபமோ இல்லை" என சொல்லி விட்டு இந்த தொடுப்பில் அவரை வடிவேலு என பகடி செய்கிறீர்கள். கேட்டால் சில் சாம் அப்படி பேசுறார், இப்படி பேசுறார் என்கிறீர்கள். நீங்கள் இயேசுவின் போதனைகளை, அடிச்சுவடுகளை பின்பற்றுவதாக அறிக்கையிடுகிறீர்கள் ஆனால் தன்னை கொலை செய்தவர்களையும் மன்னித்தவர் அல்லவா அவர்.



__________________


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

நண்பர் ஜோஸப்ஸ்நேகா அவர்களை இத்தளத்தில் வரவேற்கிறேன்!!

வந்தவுடன் சூடான ஒரு பதிவை தந்திருக்கிறீகள்! நன்றி!!

ஆனாலும் தங்களின் இந்த குற்றச்சாட்டு ஒரு தலைப்பட்சமாக இருக்கிறதே!! சில்சாம் அவர் தளத்தில் எழுதியதை தான் நான் கொடுத்திருக்கிறேன்!! அவர் தான் சொன்னார் ஜான் அவர்கள் எழுதியதில் பல விஷயங்கள் நகைச்சுவை உணர்வோடு இருக்கிறது என்று!! காமேடி என்றவுடன் எனக்கு வடிவேல் ஞாபகம் வந்தது, நான் ஒன்றும் ஜானை சில்சாம் என்னையோ அன்பையோ குறித்து எழுதுவது போல் எழுதவில்லையே!! நகைச்சுவை உணர்வு நல்லது தானே!! உங்கள் சில்சாம் தானே இதை நகைச்சுவை உணர்வோடு எடுத்துக்கொள்ள சொல்லுகிறார்!!

மேலும் வசனத்திற்கு விளக்கம் கேட்டால், இஸ்லாமியர்கள் என்கிறார்களே!! நான் வேதம் சொல்லுகிறபடி கிறிஸ்துவுடயவன் என்றே என்னை சொல்லிக்கொள்ள பிரியப்படுகிறேன், "கிறித்தவன்" என்று இல்லை!! கேட்டால் "ஸ்" என்பது வட மொழியாம், ஆகவே கிறிஸ்துவை கிறித்து என்று எழுதி வஞ்சக ஆவியில் நிறைந்திருக்கிறார் சில்சாம்!!

இப்பவும் ஜான் மேல் எனக்கு ஒன்றும் தனிப்பட்ட வெறுப்பு கிடையாது என்று தான் சொல்லுகிறேன்!! நான் விவாதிப்பது கருத்துக்களையும் வசனத்தையும் மாத்திரமே!! ஜானை வடிவேலின் அவதாரம் என்று சொல்லியிருப்பது அவருக்கு வருத்தம் அளிக்கிறது என்றால் நிச்சயமாக நான் மண்ணிப்பு கேட்பேன்!!

இதே அறிவுறைகளை தாங்கள் பாஸ்டர் சில்சாமிடம் சொல்லியிருந்தால் இன்னும் கொஞ்சம் பொருத்தமாக இருந்திருக்கும்!! அவர் அன்று என்னையும் என் தகப்பன் தாயையை குறித்து கேட்டதற்கு மாத்திரம் உங்களிடத்தில் நீண்ட இரண்டு நாட்களுக்கு பிறகு ஏதோ போனால் போகிறது, ஒரு கண்டனம் தெரிவிப்பதில் என்ன குறைந்தா போய் விடுவோம் என்று சொல்லும் தொனியில் பதிவை தந்தீர்கள்!! ஆனால் அதை விட மிஞ்சும் வகையில் என் தகப்பன் மரித்ததை நான் சும்மா ஸீன் போட்டு காண்பிக்கிறேன் என்று உங்கள் எல்லோருக்கும் அபிமான பாஸ்டர் சில்சாம் சொன்னது கூட உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா!! அவரை கண்டிக்காத நீங்கள், ஜானை வடிவேலுவின் அவதாரம் என்று எழுதியதற்கு உடனே போர் கொடி தூக்கி விட்டீர்களே, இதை தான் ஒருதலைப்பட்சம் என்கிறேன்!!

ஆனாலும் பரவாயில்லை!! மேலும், நான் கிறிஸ்துவின் சுவடுகளை பற்றிக்கொண்டு நடக்க பிரயாசிக்கும் ஒரு மாணவன் தான் இல்லை என்று சொல்லவில்லை, ஆனாலும் பாவப்பட்ட மனிதன் தானே!! சில சமயம் தடுமாற தான் செய்வோம், ஆனால் சில்சாம் அளவிற்கு தரம் தாழ்ந்து போக மாட்டேன்!! தேவ கிருபையே என்னை அது போன்ற ஒரு மிருகத்தின் எழுத்துக்களை வாசித்தும் பேசாமல் இருக்க வைக்கிறது!! அந்த மிருகத்தை போன்றே எல்லோரும் எழுத துவங்கினால் எல்லா விவாத மேடைகளும் நாறிபோய் விடும்!! இந்த அளவிற்கு இருப்பதே கிறிஸ்துவின் சுவடுகளை பற்றிக்கொண்டு இருக்கிறேன் என்பதற்கு சாட்சி!! ஆனால் கிறிஸ்துவிற்காக வைராக்கியமாக இருக்கிறேன் என்று அடுத்தவர்களை உலகத்தார் போல் விமர்சிப்பது எல்லாம் உங்களுக்கு தெரியவில்லை!!

போகட்டும்!!


__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
பிசாசின் தூதன் சில்சாமின் தளத்தில் சில கோமாளித்தனம்!!


//ஆதாம் தேவனின் ரூபத்தில் தான் படைக்கப்பட்டான் என்று வேதத்தில் இருப்பதை நம்புகிறீர்களா!! அப்படி என்றால் பாவம் செய்வதற்கு முன் வரை ஆதாம், கிறிஸ்து, பிதா எல்லாம் ஒருவரே என்று தான் போதித்துவருகிறீர்களா!!//

இதைத்தான் நான் வேதப்புரட்டு என்கிறேன். இயேசு தேவனுடைய ரூபத்தில் மாத்திரம் இருந்ததாக வேதம் சொல்லவில்லை. அவர் தேவனுக்கு சமம் என்று சொல்லுகிறது மறுபடியும் வசனத்தை வாசியுங்கள்.

இதில் என்ன வேதப்புரட்டை கண்டு கொண்டீர்கள்!! ஆதாம் தேவனின் ரூபத்தில் மாத்திரம் இல்லை, தேவனின் சாயலிலும் இருந்ததாக வசனம் கூறுகிறது, அது மட்டுமல்ல,

ஆதி. 3:22. பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான்;

வேதத்தை புரட்டுவது என்றால், ஒன்றான மெய் தேவனை திரியேக தேவன் என்று சொல்லுவது, வேதத்தில் வசனத்தில் இல்லாததை தன் சொந்த அனுபவங்களை வைத்து சொல்லுவது!! தேவ குமாரனை பிதாவாக அறிக்கை செய்வது!! இவைகள் தான் இருப்பதிலேயே மிகவும் ஆபத்தான, அபத்தமான வேத புரட்டு!! இதை தானே செய்துக்கொண்டு இருக்கிறார்கள் இன்றைய திரித்துவவாதிகள்!!

"அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்.."(பிலிப்பியர் 2:6 )

லூசிஃபர் அப்படி பட்ட ஒரு ஆவிக்குறிய ஜீவியாக இருந்த போது, தேவனுக்கு சமமாக உயர்ந்திருக்கும் என்னம் கொண்டவனாக இருந்தான், தள்ளப்பட்டான், ஆனால் கிறிஸ்து இயேசுவோ, தன் நிலையை உணர்ந்தவராக தேவனுக்கு சமமாக இருப்பது தவறு என்று தெரிந்திருந்தார், அவர் அதை முயற்சிக்கவில்லை!! இதை தான் இந்த வசனம் சொல்லுகிறது!! வேதத்தில் இரண்டு நட்சத்திரங்களை குறித்து வேதம் சொல்லியிருக்கிறது,

ஒன்று,
ஏசாயா 14:12 அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே!

மற்றவர்,
வெளி 22:16 சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார்.


அதாவது ஒருவன் லூசிஃபர், மற்றவர் என் இரட்சகர் கிறிஸ்து இயேசு!! இந்த இரு நட்சத்திரங்களிலும் ஒன்று தேவனுக்கு சமமாக இருப்பதை விரும்பினான், அவன் தள்ளப்பட்டான்!! நீங்கள் அடிக்கடி பிரியமாக சொல்லும் Nature and(or) essence-ல் அவனும் ஆவிக்குறிய ஜீவியாக தான் அவன் இருந்தான்!! ஆனால் மற்றவர், தேவனின் சாயலில் இருந்தும் தேவனுக்கு சமமாக தன்னை உயர்த்த விரும்பாதவராக இருந்தார்!! அதை தான் பிலி 2:6 சொல்லுகிறது!! கிறிஸ்து இயேசு தேவனுக்கு உறிய அந்த ஸ்தானத்தை எந்த விதத்தில் அபகரிக்க நினைக்கவில்லை, அதை கொள்ளை அடிக்கும் பொருளாக நினைக்கவில்லை!! சும்மா வசனத்தை எழுதினால் மாத்திரம் போதாது, ஏன் கிறிஸ்து அப்படி இருந்தார் என்பதை மற்ற வசனங்களை கொண்டு ஆராய்ந்து தான் பார்க்கனும்!! இப்படி கிறிஸ்து இருந்ததால் தான் பிதாவாகிய தேவன் அவருக்கு எல்லா நாமங்களுக்கும் மேலான நாமத்தை கொடுத்தார், பூமியில் பூமிக்கு கீழானோர், அனைவரின் முழங்கால்களும் அவருக்கு முன்பாம முடங்க செய்கிறார்!!

New International Version, ©2010 (NIV)

6 Who, being in very nature[a] God,
did not consider equality with God something to be used to his own advantage;

Darby Translation (DARBY)
6who, subsisting in the form of God, did not esteem it an object of rapine to be on an equality with God;

American Standard Version (ASV)
6 who, existing in the form of God, counted not the being on an equality with God a thing to be grasped,

சாத்தான் எப்படி பிதாவின் சிங்காசனத்தை பற்றிக்கொள்ள நினைத்தானோ, எப்படி திருட நினைத்தானோ, கிறிஸ்து அதை செய்யவில்லை என்பதை தான் வசனம் சொல்லுகிறது!! வசனத்தை சும்மா மேலோட்டமாக வாசித்து கோமாளித்தனமாக எழுதாதீர்கள்!! கிறிஸ்துவே நினைக்காத ஒரு இடத்தை நீங்கள் பெற்று தர விரும்புகிறீர்கள்!! கிறிஸ்து என்றென்றும் பிதாவிற்கு கீழ்ப்பட்டிருப்பார் என்று வசனத்தை காண்பித்தால் அது உங்களுக்கு இஸ்லாமியத்தனமாக படுகிறது!! வேதத்தை வைத்திருந்தால் மாத்திரம் அல்ல, அதில் இங்கே ஒன்றும், அங்கே ஒன்றும் என்று மறைந்திருக்கும் வசனத்தினால் மாத்திரமே புரிந்துக்கொள்ள முடியுமே தவிர, ஏதோ நான் கிறிஸ்துவை பிதா என்று சொல்லிவிட்டால் அவர் மகிமை கூடி விடும் என்று என்னாதீர்கள்!! அதற்கு தான் 1 கொரி 15:27,28ஐ கான்பித்தேன்!! வெளியரங்மாக இருக்கும் விஷயங்கலையே புரிந்துக்கொள்ள‌ முடியாத உங்களுக்கு, பரலோக இரகசியங்கள் புரியவே புரியாது!! இதையும் வசனத்தோடே சொல்லுகிறேன்,

மத். 13:10. அப்பொழுது, சீஷர்கள் அவரிடத்தில் வந்து: ஏன் அவர்களோடே உவமைகளாகப் பேசுகிறீர் என்று கேட்டார்கள். 11. அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. அவர்களுக்கோ அருளப்படவில்லை. 12. உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவன் எவனோ அவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் 13. அவர்கள் கண்டும் காணாதவர்களாயும், கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்துகொள்ளாதவர்களாயும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடே பேசுகிறேன். 14. ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது; அதாவது: காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள்; கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள்.


உங்கள் கூட்டத்தாரை குறித்தே இப்படி சொல்லியிருக்கிறார்!! ஏனென்றால் உங்கள் குருநாதர் சில்சாம் ஏற்கனவே சொல்லியிருக்கிறார் அவர் உணர்வுப்பூர்வமான விசுவாசம் வைத்திருக்கிறார் என்றும், திரித்துவம் என்பது ஒரு உணர்வு பூர்வமான விசுவாசம் என்றும்!!

"அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்.."(பிலிப்பியர் 2:6 )

American Standard Version (ASV)
6 who, existing in the form of God, counted not the being on an equality with God a thing to be grasped,

Young's Literal Translation (YLT)
6who, being in the form of God, thought [it] not robbery to be equal to God,

கொள்ளையடிப்பது அல்லது robbery என்றாலே நமக்கு இல்லாத ஒன்றை அபகரிப்பது, திருடுவது, எடுத்துக்கொள்ளுவது தானே!! இதை தான் வசனம் சொல்லுகிறது, அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும் அவர் பிதாவின் அந்த தகுதியை லூசிஃபர் திருட நினைத்தது போல் கொள்ளையடிக்கவில்லை!! இவ்வுளவு சுலபமான ஒரு வசனத்தை தன் Pre-conceived mind-ல்---ஏதோ கிறிஸ்துவும் பிதாவும் ஒன்று தான் என்று சொல்லி வருகிறீர்களே!! வசனத்தை நீங்கள் தெளிவாக வாசிக்கும் நேரம் வந்திருக்கிறது!! மேலும் ஆங்கிளத்தில் சமம் என்று இல்லாமல் equality  என்றும் சில மொழிப்பெயர்ப்புகளில் இருக்கிறது!! நம் தமிழ் மொழிப்பெயர்ப்பாளர்களும் திரித்துவ சிந்தையுடனே இதை மொழிப்பெயர்த்தன் விளைவு equality   என்கிற பதத்தை சமம் என்று எழுதிவிட்டார்கள்!!

Equality is actually not equal but claiming to be equal!!

கிறிஸ்துவே தன் பிதாவின் நிலைக்கு வருவதை கொள்ளையடிப்பதற்கு சமம் என்று சொல்லிவிட்டார், ஆனால் "கிறித்துவை" வழிப்படுவர்களுக்கு இது புரியவில்லை!! கிறிஸ்து சொல்லாததை சொன்னதாகவும், செய்ய கூடாது என்பதை செய்வதாகவும், சொல்லுங்கள் என்பதை சொல்லாமல் இருப்பதும் தான் உங்கள் பணி என்று நினைக்கிறேன்!!


இன்னும் தொடரும்.............


-- Edited by bereans on Wednesday 23rd of February 2011 08:41:02 PM

__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

"ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக, அவருக்குள் வாசமாயிருக்கிறது."(கொலோசெயர் 2:9)

"பரிபூரணம்" என்ற தமிழ் வார்த்தையை உங்களுக்கு விளக்க வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன்.

என்னை குறித்து புரிந்துவைத்திருப்பதற்காக நன்றி!! அவர் மாம்சத்தில் வந்தபோது என்ன தெரியுமா நடந்தது,

யோவான் 3:34 தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார், தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார்.

தேவன் இயேசு கிறிஸ்துவை அனுப்பினார் (தேவனே இயேசு கிறிஸ்துவாக வெளிப்பட்டார் என்கிற போதனைக்கு எதிரான வசனம்), அனுப்பியது மாத்திரம் இல்லாமல் தமது ஆவியை அலவில்லாமல் கொடுத்திருக்கிறார்!!

அப்போஸ்தலர் 10:38 நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்.

தேவன் தந்த பரிசுத்த ஆவியினாலும், வல்லமையினாலும் அபிஷேகம் பண்னப்பட்டார், தேவன் அவருடனே கூட இருந்தபடியினால், இயேசு கிறிஸ்துவினால் அற்புதங்கள் செய்ய முடிந்தது என்று வேதம் சொல்லுகிறது!!

இது தான் தேவத்துவத்தின் பரிபூரணம்!! பிதாவாகிய தேவன் தன் குமாரனை பூரணமாக அபிஷேகித்தார் என்பதை வசனத்தின் மூலம் அறிகிறோம்!! இயேசு கிறிஸ்து பிதாவை அன்றி எதுவும் செய்ததாக இல்லை!! அவர் பேசியதும், அவர் செய்ததும், அவர் கேட்டு பெற்றுக்கொண்டதும் அனைத்தும் தன் பிதாவினிடத்திலிருந்து பெற்றுக்கொண்டு செய்தார் என்பதை பல வசனங்கள் சொல்லுகிறது!! ஆனால் அதை வாசித்தாலும் பிதா தான் இயேசு கிறிஸ்துவாக வந்தார் என்று தான் பாடிக்கொண்டு இருப்பீர்கள்!! ஒரு விஷயத்தை ஏற்கனவே மனதில் வைத்துக்கொண்டு வசனத்தை வாசீக்காதீர்கள்!! ஏனென்றால் நீங்கள் இன்னும் தேவன் ஒருவரா, ஒருவருக்குள் மூன்றா, மூன்று பேரும் சேர்ந்து ஒருவரா அல்லது இருவர் ஒருவராக இருக்கிறார்களா, ஒருவர் இருவராக இருக்கிறாரா போன்ற பெரும் குழப்பத்தில் இருக்கிறீர்கள்!! தேவையான இடத்தில் பரிசுத்த ஆவியையும் சேர்த்துக்கொண்டு மூன்று என்கிறீர்கள், உங்கள் வசதிக்கு, கிறிஸ்துவும் பிதாவும் மாத்திரமே சமம் என்கிறீர்கள் (ஏனென்றால் பரிசுத்த ஆவியான தேவன் சமம் என்று வசனம் இல்லையே!!) பிதா தான் கிறிஸ்துவாக பூமிக்கு வந்தார் என்றும் சொல்லுவீர்கள், அதற்கு ஒரு வசனத்தை காண்பித்தால் பிதற்றமான ஒரு விளக்கத்தை கொடுப்பீர்கள்!!

சகோ அன்பு அவர்கள் ஜானிடம் நித்திய ஜீவன் தளத்தில் கேட்ட கேள்விக்கு இது வரை அவரிடம் பதில் இல்லை!! ஆனால் நக்கலுக்கும் நைய்யாண்டிக்கும் குறைச்சல் இல்லை!!

இதோ அந்த பதிவு,

John
Member
Posts: 20
Date: 4 days ago

//திரித்துவம் என்றால் என்ன?, அதன் கொள்கைகள் என்ன//

திரித்துவம் என்றால் ஒரே தேவன் ஆனால் அவருக்கு முன்று "ஆள்தத்துவங்கள்" உண்டு. (மன்னிக்கவும்,  மொழி பிரச்சனையினால் ஆங்கிலத்தில் தொடருகிறேன்).The "essence" of God was full in all three Persoalities of God. God's essence is His being. In His being He is Omnipresence, Omnipotence, and Omniscience.

anbu57
Senior Member
Posts: 465
Date: 4 days ago

//திரித்துவம் என்றால் ஒரே தேவன் ஆனால் அவருக்கு முன்று "ஆள்தத்துவங்கள்" உண்டு. (மன்னிக்கவும்,  மொழி பிரச்சனையினால் ஆங்கிலத்தில் தொடருகிறேன்).The "essence" of God was full in all three Persoalities of God. God's essence is His being. In His being He is Omnipresence, Omnipotence, and Omniscience. //

நல்லது சகோதரரே!

உங்கள் கொள்கைக்கு வசன ஆதாரம் என்ன?

மத்தேயு 4:10-ல் இயேசு கூறுகிற தேவனாகிய கர்த்தர் யார்?

ஒரே தேவனுக்குள் உள்ள இயேசு ஏன் தம்மை தேவனுடைய குமாரன் என சொல்ல வேண்டும்?

ஒரே தேவனுக்குள் உள்ள மூவர் யார் என நீங்கள் சொல்லவில்லை; ஆகிலும் பிதா, குமாரன், பரிசுத்தஆவியைத்தான் அந்த மூவராக நீங்கள் சொல்கிறீர்கள் என்ற அனுமானத்துடன் இக்கேள்வியைக் கேட்கிறேன்.

மூவரும் சமமானவர்களா? சம வல்லமையுள்ளவர்களா?

எல்லா கேள்விகளுக்கும் வசன ஆதாரத்துடன் பதில் தாருங்கள்.

anbu57
Senior Member
Posts: 465
Date: 4 days ago

இவ்வசனத்தை சற்று படியுங்கள் சகோ.ஜாண் அவர்களே!

1 கொரிந்தியர் 8:6 பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.

ஒரே தேவனுக்குள் மூன்று ஆள்த்தத்துவங்கள் என்கிறீர்கள். ஆனால் பிதா தான் ஒரே தேவன் என பவுல் சொல்கிறார். அதாவது, உங்கள் கூற்றுப்படி, 3 ஆள்த்தத்துவங்களும் அடங்கிய ஒரே தேவன் பிதாதான் என்றாகிறது. அவ்வாறெனில் ஒரே தேவனாகிய பிதாவுக்குள் அடங்கிய அந்த 3 ஆள்த்தத்துவங்கள் யார் யார்?

John
Member
Posts: 20
Date: 4 days ago

//ஒரே தேவனுக்குள் மூன்று ஆள்த்தத்துவங்கள் என்கிறீர்கள். ஆனால் பிதா தான் ஒரே தேவன் என பவுல் சொல்கிறார். அதாவது, உங்கள் கூற்றுப்படி, 3 ஆள்த்தத்துவங்களும் அடங்கிய ஒரே தேவன் பிதாதான் என்றாகிறது. அவ்வாறெனில் ஒரே தேவனாகிய பிதாவுக்குள் அடங்கிய அந்த 3 ஆள்த்தத்துவங்கள் யார் யார்//

நான் இதற்கு பதில் சொல்லுவதற்கு முன்பு பிதாவாகிய தேவனை "கர்த்தர்" என்று வேதம் எங்காவது விளிக்கிறதா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன். தேவன் மற்றும் கர்த்தர் என்பவை "Interchangable" பதங்கள். குமாரனும் ஏசாயாவில் "வல்லமை உள்ள பிதா" என்று அழைக்கப்படுகிறார்.

25. அந்தச் சமயத்தில் இயேசு சொன்னது: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.

மேலே உள்ள வசனத்தில் ஆண்டவர் யார்?

//மத்தேயு 4:10-ல் இயேசு கூறுகிற தேவனாகிய கர்த்தர் யார்?//

குழப்பமான ஒரு திரித்துவ கோட்பாட்டை வைத்துக் கொண்டு நேரத்திற்கு தகுந்தாற் போல் நிலையை மாற்றிக்கொண்டு மாய்மாலம் செய்துகொண்டு இருக்கிறீர்களே!! தெளிவான திரித்துவத்தையும் உங்களால் சொல்ல முடியவில்லை, தேவன் ஒருவரே, அவரின் குமாரன் என்பவர் தான் இயேசு கிறிஸ்து என்பதையும் ஏற்க மறுக்கிறீர்களே!!

ஆரோக்கியமான விவாதத்திற்கு அழைத்தால், நாங்கள் எந்த விதத்தில் உங்களை தரம் தாழ்த்தி எழுதாமலே உங்கள்  போதகர் உங்களை ஏதோ நாங்கள் காட்டு மிராண்டிகள் போல் டீல் பண்ணுகிறோம் என்கிற ஒரு மாயையை உருவாக்கினாரே!! நாங்கள் அப்படியா செய்தோம்!! எல்லாவற்றுக்கும் தொடுப்பு கொடுப்பவர் இது போன்று நாங்கள் இப்படி எல்லாம் உங்களை தரம் தாழ்த்தி எழுதினோம் என்கிற ஒரு தொடுப்பாவது கொடுத்திருக்கலாமே!! இருந்தால் தானே!! சரி போகட்டும்!!

சகோ அன்பு கேட்ட இந்த கேள்விக்கு தெளிவான பதில் இருக்கிறதா?

தொடரும்..................


-- Edited by anbu57 on Thursday 24th of February 2011 03:34:28 AM

__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//"தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.(II.கொரிந்தியர் 4:4)
(இது உங்களுக்கு 100% பொருந்தும்  )//


அய்யா ஜான் அவர்களே, சாயல் என்பதற்கு அர்த்தம் தெரியுமா? தேவனின் சாயலாக இருப்பது தான் கிறிஸ்து, ஆனால் உங்கள் கூட்டத்தார் அவரை பிதாவின் நிலைக்கு உயர்த்தியது தான் இப்பிரபஞ்சத்தின் தேவனாவன் உங்கள் போன்றோரின் மனதை குருடாக்கி குளிர் காய்கிறான்!! கிறிஸ்து தேவனின் சாயல் என்பதை ஆங்கிலத்தில் இப்படி சொல்லப்பட்டிருக்கிறது,

Hebrews 1:3

Who being the brightness of his glory, and the express image of his person, and upholding all things by the word of his power, when he had by himself purged our sins, sat down on the right hand of the Majesty on high:

I hope you understand what is an Image!! Image can never be the person, but likeness of a person!! And that reads the verse!! Image is not original!! And so Christ is express Image of God the Father, who did not think it a opportunity to consider him equality to God (Phil. 2:6), and who after giving himself as a ransom for the world, sat down not on the Throne of God, but rather on the Right hand of the Majesty on High!!

Choice is yours!!

//நான் இந்த தளங்களுக்கு புதியவன், உங்களுடைய தளத்திலும் அவரை விமர்சிகிரீர்கள், அவரும் உங்களை விமர்சிக்கிறார். நான் எல்லாவற்றையும் படித்து பார்த்து ஒரு "நியாயம்" சொல்லவேண்டுமென்ற அவசியமில்லை.  நான் உங்களுடைய தேவன் "Lucifer" என்று சொன்னதின் காரணம் என்னை நீங்கள் அவமதித்துவிட்டீர்கள் என்று அல்ல, என் அன்பு தேவன் இயேசுகிறிஸ்துவை "மிகாவேல்" , "வணங்கத்தகுதியில்லாதவர்" என்று சொன்னதினாலே தான். //

அதாவது சில்சாம் எழுதும் மட்டமான கீழ்த்தரமான தரகுறைவான வார்த்தைகளை நீங்கள் "நியாயம்" தான் என்று நிதானித்திருக்கிறீர்கள்!! சபாஷ்!! இது போன்ற நீதிபதிகள் தான் கிறிஸ்தவ மண்டலத்தில் இருப்பது அவசியம்!! லூசிஃபரை மடியில் வைத்துக்கொண்டு ஊரையே லூசிஃபர் என்று சொல்லுவது போல் இருக்கிறது உங்களின் வாதம்!! மன்னிக்கனும், நண்பரே என்று சொல்லி முதுகில் குத்தி விட்டு, நாங்கள் ஏதோ உங்களை அவமதித்து விட்டது போல் சொல்லுவதும் உங்கள் "நியாயத்தை" காண்பிக்கிறது!!

மிகாவேல் என்று சொன்னது மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை அல்ல என்பதை என் பதிவை தெளிவாக படித்தீர்களென்றால் புரியும்!! எதிலும் நிதானம் தேவை!! உலகத்தையே பிசாசுத்தனமாக, அடுத்தவர்களின் தாய் தகப்பனையுமே உலகத்தார் மாதிரி அருவருப்பாக பேசுகிற ஒருவரை பக்கத்தில் வைத்துக்கொண்டு, நீங்கள் "நியாயம்" புரிந்திருப்பது உங்களின் நியாயத்தை வைத்து நான் புரிந்துகொண்டேன்!! மேலும் இயேசு கிறிஸ்து என்னமோ உங்களுக்கு தனிப்பட்ட சொந்தக்காரர் என்று என்ன வேண்டாம், இயேசு கிறிஸ்து இந்த உலகத்தின் இரட்சகர்!! இதையே தெரியாமல் நாங்கள் ஊழியம் செய்கிறோம் என்று வேறு சொல்லுகிறீர்களே!! "நியாயம்" தான்!!

//Context -ஐ பார்த்தால் இதை எளிதாக புரிந்து கொள்ளலாம். அவன் வந்து விழுந்ததின் நோக்கம் மன்னிப்பு கேட்கவே; அதுவுமில்லாமல் அவன் விழும்போது பவுலும் சீலாவும் தலைகீழாக தொங்கிக்கொண்டு இருந்தார்கள் (அவர்களுடைய கால்கள் தொழு மரத்தில் மாட்டிவைத்து இருந்தார்கள்). காலில் விழுந்து ஆண்டவரே என்று அழைக்கவில்லை. இங்கே யாரும் ஆண்டவர் என்று அழைக்கப்பட்டவர்கள் எல்லாம் தேவனுக்கு சமம் என்று வாதிடவில்லை. //

Context ‍ஐ இங்கே மாத்திரம் பார்த்தால் போதுமா!! மரியாள் பாதத்தில் விழுந்தது என்ன தொழுதுகொள்ள அல்லது ஆராதிக்க விழுந்தாள் என்று நீங்கள் நினைத்துக்கொண்டு ஏன் Context ‍ஐ  துணைக்கு வைத்துக்கொள்கிறீர்கள்!! Context ‍ஐ பார்க்க வேண்டுமென்றால் எல்லா இடங்களிலும் பாருங்கள்!! ஆண்டவர் என்றும் தேவன் எனும் வார்த்தைகளுக்கு உங்கள் போதனைக்கு ஏற்ற அர்த்தம் எடுத்துக்கொண்டு விவாதிக்கிறீர்கள்!! ஒரே நிலைப்பாடு இல்லையே!!

//அந்த குறைந்த பட்சம் 2 பேர் யார்? இயேசுவை 'உருவாக்குவதற்கு' முன்பு பிதா அன்புகூறக்கூட ஆள் இல்லாமல் தனிமையில் இருந்தாரா?//

நிச்சயமாக இயேசுவை ஜெனிப்பதற்கு முன்பு பிதா தனிமையில் தான் இருந்திருக்க வேண்டும் என்று வசனம் சொல்லுகிறது!! ஒரு ஆதியில் உலகம் சிருஷ்டிக்கப்பட்ட போது அங்கே தேவன்(ர்கள்) என்பதற்கு ஏலோஹிம் (இது பன்மையில் இருப்பதால் உடனே மூன்று என்று திரித்துவவாதிகள் சொல்லுகிறார்கள், ஏன் அது இரண்டாக இருக்கக்கூடாது, ஏன் மூன்றுக்கு மேற்பட்டதாக இருக்க கூடாது?) என்று வேதம் சொல்லுகிறது (ஆதி 1:1)!! ஆனால் தாவீது சங்கீதத்தில் இவை எல்லாம் தோன்றும் முன் தேவன் (ஏல், எலோஹிம் அல்ல) இருந்தார், அவர் அநாதியாக இருந்தார்!! ஆதிக்கும் அநாதிக்கும் நிச்சயமாக வித்தியாசம் இருக்கிறது, நீங்கள் ஒப்பு கொள்கிறீர்களோ, இல்லையோ, ஏனென்றால் உங்கள் தலைவர் இதற்கு நக்கலான பதிவை தான் தந்திருக்கிறார்!!
தேவன் அநாதி (Eternal or Everlasting to everlasting)
கிறிஸ்து ஒரு ஆதியில் எப்படி இந்த உலகம் ஒரு ஆதியில் துவங்கியதோ அது போல்!!

நிச்சயமாக தேவன் தனியாகத்தான் இருந்தார் கிறிஸ்து இயேசு ஜெனிப்பக்கப்படும் வரை!!

//நம்முடைய மகிமை தேவனுக்குள் மறைந்து இருக்கிறது. இயேசுவும் தம்முடைய மனுஷிகத்திலே, மனிதரால் வரும் மகிமையை விரும்பாமல் தேவனால் வரும் மகிமையை விரும்பினார். இதிலே என்ன சொல்லவருகிறீர்கள்?//

இதில் என்ன சொல்லுகிறேன் என்றால், கிறிஸ்து நீங்கள் செலுத்தும் மகிமையை ஏற்றுக்கொள்வதில்லை, மாறாக அவரின் மகிமையை அவர் பிதாவிடத்திலிருந்து தான் பெற்றுக்கொள்கிறார் என்று!! இப்பவும் அவரை மகிமைப்படுத்தியது தேவன் தானே அன்றி விருதாவான வார்த்தைகளால் நீங்கள் அவரை மகிமைப்படுத்துகிறோம் என்று சொல்லி அவரின் நிலையை பிதாவின் நிலையுடன் ஒப்பீட்டு தேவனின் மகிமையை குறைக்கிறீர்கள் என்பதையும் சேர்த்து தான் சொல்ல வருகிறேன்!!

//இந்த பரிசேயர்களின் மடத்தனமான வாதத்தை பாருங்களேன். இயேசு பிசாசிடம் உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர்ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று சொன்னதினால் இயேசு தேவனில்லையாம், இவர்கள் இயேசுவை ஆராதிக்கமாடார்களாம். OK ஒரு வாதத்திற்கு அதை உண்மை என்று எடுத்துக்கொள்ளுவோம். இதே முறையில் இவர்கள் வேதம் வாசித்தால் வேறு எப்படியெல்லாம் இந்த பரிசேயர்கள் இயேசுவை அழைப்பார்கள் என்று பார்க்கலாம் //

இதை தான் மழுப்பல் என்று சொல்லுகிறேன்!! உங்களுக்கு ஒரு வசனத்தை விளக்க முடியவில்லை, அல்லது, அது உங்கள் பாரம்பரிய விசுவாசத்திற்கு விரோதமாக இருக்கிறது என்றால், உடனே கருத்தை சொல்லுபவன் மடையனாகிவிடுவான், பரிசேயனாகி விடுவான்!! அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று சொல்வதற்கு என்ன அர்த்தம் என்று அந்த பிசாசே புரிந்துக்கொண்டான், ஆனால் உங்கள் கோட்பாட்டில் உள்ளவர்களுக்கு அவனுக்கு புரிவது கூட புரியாதே!! இயேசு கிறிஸ்து சொல்லுவதையே ஏற்றுக்கொள்ள மனதில்லாதவர்களாய் உங்களின் கண்களை இப்படி குருடாக்கினவன் யார்!? நாங்கள் இயேசு தேவன் இல்லை என்று சொல்லவில்லை என்பதை மீண்டும் சொல்லுகிறேன்!! இந்த வசனம் அதை சொல்லவும் இல்லை, மாறாக இந்த வசனம் சொல்லுவது, உன் தேவனாகிய கர்த்தரை பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று கிறிஸ்து இயேசு சொல்லுவதாகவே இருக்கிறது!! கிறிஸ்து இயேசுவை மாத்திரம் இல்லை, தேவன் என்று சொல்லப்பட்டவர்கள் அநேகர் இந்த பூமியிலும், வாணத்திலும் இருப்பதாக தான் வசனம் சொல்லுகிறது!! கிறிஸ்து சொன்னதை பின்பற்றும் நாங்கள் பரிசேயர்கள் என்றால் கிறிஸ்து சொல்லாததை பின்பற்றும் உங்களை என்னவென்று சொல்லுவது!!

//"அதற்கு இயேசு: நீ என்னை நல்லவனென்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே.(லூக்கா 18:19)
பரிசேயரின் தீர்ப்பு: இயேசு கெட்டவர்//

இயேசு கிறிஸ்து சொன்னதை நாங்கள் சொல்லுவதினாலும் எங்களை பரிசேயன் என்று சொல்லுவதினாலும், கிறிஸ்துவை நீங்கள் அப்படியே தான் தெரிந்துவைத்திருக்கிறீர்கள் என்பதே அர்த்தம்!! நல்லவன் ஒருவனும் இல்லை என்று கிறிஸ்து சொன்ன பிறகு அவர் சொல்லாததை நான் ஏன் சொல்ல வேண்டும்!?

அட அறியாமையில் இருப்பவர்களே, தேவன் ஒருவரே ஆராதனைக்குறியவர் என்று கிறிஸ்து சொன்னதை அப்படியே நான் ஏற்றுக்கொண்டேன், நீங்கள் தான், அப்படி என்றால் கிறிஸ்து தேவன் கிடையாதா என்று கேள்வி கேட்டு பரிசேயனைவிட மோசமாக இருக்கிறீர்கள்!! பரிசேயனின் நீதி உங்கள் நீதியைவிட மேல் தான்!! அப்படியே தான் , கிறிஸ்து இயேசு, பிதா ஒருவரே நல்லவர் என்று சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண்டு இருக்கிரோம், உங்களை போல் மூடத்தனமாக அப்படி என்றால் கிறிஸ்து
கெட்டவரா என்று எல்லாம் கேள்வி கேட்கும் பழக்கம் கிடையாது!! உங்களின் அதீத கற்பனை!!

//"தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்."(பிலிப்பியர் 2:7)
பரிசேயரின் தீர்ப்பு: இயேசு அடிமை //

மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை தான் அடிமையின் ரூபமெடுத்தார், அந்த நிலையை தான் அடிமைத்தனம் என்று சொல்லப்பட்டிருக்கிறது!! உங்களுக்கு குதர்த்தமா தோன்றும் கேள்விகளை எல்லாம் என் மேல் திணிக்க விரும்பாதீர்கள்!!

//"அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக்கொடுக்கவும் வந்தார் என்றார்."(மாற்கு 10:45 )
பரிசேயரின் தீர்ப்பு: இயேசு ஒரு வேலையாள் //

உங்களுக்கு இயேசு கிறிஸ்து சொன்னதில் என்ன மாற்றம் வேண்டி கிடக்கிறது!! அவரே தன்னை ஊழியம் செய்ய வந்தவர் என்று சொன்னதை உங்கள் கோணலான யோசனைகள், எப்படி எல்லாம் யோசிக்க வைக்கிறது!! அவர் இருந்த நிலையை விட்டு மனிதனாக வந்த போது, அவர் ஒரு மனிதனின் ஸ்தானத்திலிருந்து தான் இவைகளை எல்லாம் சொன்னார்!! நீங்கள் எல்லாம் மாய்மாலம் செய்கிறீர்கள், இயேசு தேவனை தொழுதுகொள்கிரோம் என்று சொல்லி, ஆனால் அவரின் வார்த்தைகளை எடுத்து குதர்த்தம் கொண்டு, அவரை பரிசேயனைவிட கேவலமாக வெளிப்படுத்துகிறீர்கள்!!

இன்னும் தொடரும்.......................


-- Edited by anbu57 on Thursday 24th of February 2011 03:47:20 AM

__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
RE: பிசாசின் தூதன் சில்சாமின் தளத்தில் சில கோமாளித்தனம்!!


//அப்படியா? பார்க்கலாமே.,முதற்பேறானாவர் என்றால் முதல் குழந்தை என்றோ முதலில் பெற்று எடுத்தது என்று அர்த்தம் கிடையாது. பெரும்பாலான சமயங்களில் அது "Divine appointment" ஐ குறிக்கும்
உதரணமாக. தாவிது , ஈசாயின் முதல் குமரான் கிடையாது. எப்பிராயீம் யோசேப்பின் முதல் குமாரன் கிடையாது"

ஆனாலும் கிறிஸ்துவை ஒரு பக்கம் தேவன் என்று சொன்னாலும் உங்கள் புரிந்துக்கொள்ளுதலின்படி அவர் ஒரு Divine Appointee என்பவர் என்பது உங்களின் கோட்பாட்டுக்கே குண்டு வைத்தது போல் இருக்கிறதே!!அதாவது Firstborn என்கிற முதற்பேறானவர் என்றால் முதல் குழந்தை அல்லது முதலில் பெற்று எடுத்தது என்கிற அர்த்தம் கிடையாது என்று சொல்ல வருகிறீர்கள்!! அதை அப்படியே கிறிஸ்து இயேசுவிற்கு பார்த்தால், அவரும் ஒரு Divine appointee  என்று தான் அர்த்தம் கொள்ள வேண்டுமா!! அட அறிவீனத்தின் சிகரத்தில் இருப்பவர்களே, அதை என்னமோ பெரிய அர்த்தம் சொல்லிவிட்டது போல் ஜானை பாராட்டும் ஒரு குருட்டு கூட்டமே,

பேறானவர் கூட முதற் போட்டோமென்றால் Firstborn ஆகிறது, ஒரே சேர்த்தோமென்றால் Onlyborn ஆகிறது!! உங்கள் புரிந்துக்கொள்ளுதலின் படி, தேவனுக்கு அநேக பிள்ளைகள் இருந்து, அதில் கிறிஸ்து இயேசு ஏதோ ஒரு இடத்தில் பிறந்து, ஆனால் அவரை தெய்வீக தேர்வின் (Divine appointment)  படி பெயர் அளவிற்கு முதற்பேறானவர் ஆக்கினார் என்கிறீர்கள்!! இதை விட ஒரு மதியீனத்தை பார்க்க முடியுமா!! கிறிஸ்து இயேசுவே தேவனின் முதற்பேறானவர் மற்றும் ஒரே பேறானவராகிறார்!! பேறானவர் என்பது முதலில் பெற்று எடுக்கப்பட்டவரை தான் குறிக்கும்!! அது பெரும்பாலான சமயங்களில் Divine appointment ஐ குறிக்கும் என்பது ஏதோ தப்பிக்க வேண்டும் என்று எழுதும் சிந்தனை!! என்னை எதிர்த்து எழுத வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காக இருக்கும் வார்த்தைகளையும் வேதத்தை புரட்டுவதை போல் புரட்டாதீர்கள்!! என்ன எழுதுகிறோம் எதற்கு எழுதுகிறோம் என்று நிதானித்து எழுதுங்கள்!! நீங்கள் கொடுத்த இரண்டு மற்றும் இன்னும் பல இடங்களிலும், முதற்பேறானவர் "ஆக்கப்பட்டார்கள்" என்பதே தான் வசனம் சொல்லியிருக்கிறது!! ஆனால் கிறிஸ்து இயேசுவை குறித்து அப்படி அல்ல‌!!

"நான் அவனை எனக்கு முதற்பேறானவனும், பூமியின் ராஜாக்களைப் பார்க்கிலும் மகா உயர்ந்தவனுமாக்குவேன்" (சங்கீதம் 89:27)

AV Ps 89:27 Also I will make him [my] firstborn, higher than the kings of the earth.

ஒருவனை முதற்பேறானவன் ஆக்குவதற்கும் ஒருவர் முதற்பேறானவராக இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது!! இந்த வசனத்தில் ஒருவன் முதற்பேறானவன் என்கிற அர்த்தம் கொள்ளும் ஒரு தகுத்திக்கு உயர்த்தப்படுகிறான்!! ஆனால் கிறிஸ்து இயேசுவை குறித்து அவர் முதற்பேறானவராக உயர்த்தப்பட்டார், அல்லது முதற்பேறானவராக மாற்றப்பட்டார், நியமிக்கப்பட்டார் என்றெல்லாம் கிடையாது!! To make one a Firstborn is different from being a Firstborn!! Christ was not made a Firstborn,rather He was the Firstborn!! நான் எழுதுவதற்கு எதிர்த்து ஒரு குப்பையை எழுதி கைத்தட்டல் வாங்குவதற்கு, இயேசு கிறிஸ்துவை எந்த நிலைக்கும் தள்ளும் அறிவீனர்களாக இருக்கிறீர்களே!! இது தான் உங்களுக்கு உண்டான அறிவா!! இதை வைத்து தான் பிழைப்பு நடத்துகிறீர்களா!! இதை சொல்லி கைத்தட்டு பெறுகிரீர்களா!! உங்கள் மனசாட்சியை (அப்படி என்று ஒன்று இருந்தால்) தொட்டு சொல்லுங்கள், முதற்பேறானவருக்கு நீங்கள் தந்திருக்கும் அர்த்தம் சரியா என்று!!

இதோ கிறிஸ்து இயேசுவை குறித்து,

கொலோ 1:15. அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்.

English Standard Version (ESV)

15 He is the image of the invisible God, the firstborn of all creation.

Common English Bible (CEB)

15 The Son is the image of the invisible God,  the one who is first over all creation,

You hypocrites, Jesus was not made or kept as First born over (of) all creation, but rather He was the First or Firstborn of all creation!! You have a limit for blasphemy!! Don't behave like idiots!! To deny my writings you can fall down to any limit and you say you have a belief that Christ was MADE FIRSTBORN!! You bunch of hypocrites, Fear Lord our God!! Don't bring His esteem to your level of thinking!! First Born is not a Divine appointment in case of Jesus as the verse says!!

கிறிஸ்து இயேசு படைப்பு அனைத்திற்கும் முந்தின பேறானவராக இருந்தார், ஆக்க படவில்லை!! அறிவீன கூட்டத்தாரே (இப்பவும் உங்களை அறிவீனர் என்று நான் எழுதியது தான் முக்கியமாக தெரியுமே அன்றி, அதை குறித்து தான் உங்கள் எரிச்சல் இருக்குமே தவிர, தாங்கள் செய்த குற்றம் நினைவில் வராது) நீங்கள் கிறிஸ்துவை முதற்பேறானவர் என்கிற நிலைக்கு "தள்ள வேண்டாம்" அவர் இயற்பிலேயே முதற்பேறானவர் தான்!! அவர் ஒன்றும் முதற்பேறானவராக ஏற்றுக்கொள்ளவோ, உயர்த்தப்படவோ இல்லை!! என்னை ஏதிர்த்து எழுதுவதாக நினைத்துக்கொண்டு, தேவதூஷனம் செய்யாதீர்கள்!!

//உலகம் பாவத்தில் விழுந்தபின்பு இயேசுவினால் வருகிற மீட்பைக்குறித்து பேசுகிறது. மீட்பில் இயேசு முதல் பேறானவர். திரும்பவும் ரோமர் 8 அதிகாரத்தை எடுத்து வாசியுங்கள். சிருஷ்டிப்பும், மீட்கப்பட்ட ஜனங்களும் சரிரமீட்ப்புக்காக தவிப்பதும் அதில் முதல் பேறனவர் இயேசு என்பதும் தெளிவாகதெரியும்.'

* "தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்.." (ரோமர் 8:29.)//


'மீட்பில் இயேசு முதல் பேறானவர்" என்னய்ய வசனம் இருக்கிறது!! ரோம் 8:29ஆ!! உங்களை போன்ற குழப்பத்தின் உச்சத்திலும் அறிவீனத்திலும், மதியீனத்திலும் இருக்கும் கூட்டத்தாருக்கு, இயேசுசாமியை தொழுதுக்கொள்ள தெரியுமே தவிர, அவரின் நிலையை வசனம் மூலம் உணர தெரியாது!!

ரோம் 8:29. தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்; 30. எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்.

சரீர மீட்புக்காக தவிக்கும் மக்களின் முதற்பேறானவர் இயேசு கிறிஸ்து என்கிற மாதிரியான ஒரு அபத்தம் வேதத்தில் எங்கும் இல்லை!!  தேவனால் தெரிந்துக்கொள்ளப்பட்ட ஒரு கூட்டத்தை கிறிஸ்துவின் சாயலில் மாற்றும்படி தேவன் தாமே அநேகரை அழைத்திருக்கிறார், அவர்கள் இந்த சரீரத்தில் இல்லை, மாறாக உயிர்த்தெழுந்து, கிறிஸ்துவின் சாயலை தரித்துக்கொள்வார்கள், இவர்கள் கிறிஸ்துவிற்கு சகோதரர்களாக‌ (உங்கள் வசதிக்கு இப்ப கிறிஸ்துவை சகோதரர் என்று கூப்பிடுகிறீர்களே, இப்ப அவர் தேவன் இல்லையா?) இருக்கும்பொருட்டு, முழு சகோதர குடும்பத்திற்கு கிறிஸ்து முதற்பேறானவராக இருக்கிறார்!! இதையும், அவர் சிருஷ்ட்டிக்கு  முந்தின பேறானவர் (முதற்பேறானவர்) என்பதற்கும் எந்த தொடர்பும் கிடையாது!! முதற்பேறானவர் என்பதை வேதத்தில் தேடி பதிந்தால் மாத்திரம் பத்தாது, அதை விளக்கவும் தெரியவேண்டும்!! கிறிஸ்து தான் தேவன் என்கிறீர்கள், பிறகு இப்ப மட்டும் அவருக்கு எப்படி சகோதரர்கள் என்று யோசிக்க வேண்டாமா!! கிறிஸ்துவிற்கு சகோதரர்களாகும்படி தேவன் அநேகரை முன்குறித்து, சிலரை அழைத்து சிலரையே தேர்ந்தெடுக்கிறார்!!

1 யோவான் 3:2. பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்.

கிறிஸ்துவிர்கு ஒப்பாக இருப்போம் என்பதை எல்லாம் உங்களை போன்ற அறிவீனக்கூட்டத்தாரால் ஏற்றுக்கொள்ளவே முடியாது, ஏனென்றால் கிறிஸ்துவிற்கு ஒப்பாக இருப்பது என்பது பிறரிடமிருந்து நீங்களும் ஆராதனையை பெற்றுக்கொள்வதாகும் (உங்கள் வாதத்தின்படி)!! தேவனின் தரிசிக்கும்படியாக ஒரு கூட்டத்தை தேவன் சகோதரர்களாக (இதில் ஆண் என்றும் பெண் என்றும், கிரேக்கன் என்றும் இல்லாமல் அனைவருமே) அழைத்திருக்கிறார், அவர்களுக்கு தலையாக கிறிஸ்துவை வைத்திருக்கிறார்!! இதை தான் அநேக சகோதரர்கலுக்கு முதற்பேறானவராக கிறிஸ்து இயேசு என்கிறது வசனம்!!

ஐய்யா உங்களுக்கு எல்லாம் மாய்மாலம் செய்து, வேதத்தை புரட்டி, சும்மா அழுது புழம்பி சபை நடத்தியே பழக்கம் ஆகி விட்டது, கிறிஸ்துவின் நிலையை உணராத குருட்டு ஆசாமிகளால குருடர்களை போல் வழி நடந்தும் நடத்தியும் வருகிற ஒரு கூட்டமாக இருக்கிறீர்கள்!! முதற்பேறானவர் என்று வெதத்தில் ஒர் "தேடுதல்" போட்டு, அது எந்த சந்தர்பத்தில் (அதான் ) உபயோகப்படுத்தப்பட்ட வார்த்தை என்பதை கூட பார்க்காமல் எழுதிவிடுவது, அது என்னவென்றுகூட தெரியாத ஒரு கூட்டம், ஆஹா, என்னாமா விளக்கியிருக்கிறார் என்கிற பாராட்டு!! இப்படி பாராட்டு பெறுவதற்கு தானே உங்கள் அறிவீனர் கூட்டம் இருக்கிறது!! நீங்கள் எத்துனை பேர் சேர்ந்தாலும் சரி, வேத புரட்டில் ஈடுப்படும் உங்களுக்கு கற்றுக்கொள்ளும் ஒரு நாள் வருகிறது!! தேவன் உங்களையும் இரட்சித்து அதன் பின் உங்களுக்கு சத்தியத்தை அறிகிற அறிவை தரவிருக்கிறார், அது வரை பொறுமையாக காத்திருங்கள், ஏனென்றால் இப்பொழுது உங்களுக்கு விளங்கும் காலம் இல்லை (1 தீமோ 2:4,5)


//இயேசு பிதாவுக்கு கிழ்ப்பட்டு மீட்பின் மற்றும் சிருஷ்ட்டிபின் வேலையை செய்வதால் அவர் பிதாவை விட மகிமையில் கிழானவர் போல தெரிகிறது.//

இருப்பதை குருட்டு கண்களால் பார்ப்பதினால் ஏதோ போனா போகட்டும் "போல தெரிகிறது" என்றாவது எழுதலாம் என்று எழுதியிருக்கிறீர்கள் போல்!! ஒருவர் மகிமையை தருகிறார், மற்றொருவர் மகிமயை பெற்றுக்கொள்கிறார்!! இதை தான் வேதம் பல இடங்களில் சொல்லியிருக்கிறது!! இன்னும் புரிய மாட்டேன் என்பது உங்களின் மதியீனமே தவிர வேறு  ஒன்றும் இல்லை!! இயேசு கிறிஸ்து இருந்த நிலை, அதன் பின் மனிதனாக மாம்சத்தில் வந்த ஒரு நிலை, தற்போது இருக்கும் நிலை, மூன்றும் வெவ்வேறு நிலையே!! ஒன்றை மற்றொன்று கூட குழப்பி கூழாக்கி வாழ்துக்கொண்டு இருக்கும் உங்கள் கூட்டத்தாருக்கு வசனம் புரிவதில் நியாயம் இல்லை தான்!!

//இன்னும் யோவான் 1:3- க்கு விளக்கம் கொடுக்கவில்லை. இந்த பரிசேயர்களின் கூற்று படி தேவன் பேச முடியாமல் வார்த்தை இல்லாமல் இருந்தார் பின்பு அவர் வார்த்தையை உருவாகினார் அப்புறம் அந்த வார்த்தையானவர் வானத்தையும், பூமியையும் உருவாக்கினார் என்றால் கிழே உள்ள வசனத்தில் உள்ள ஒருவர் யார்? இதற்க்கு பதில் தெரியவில்லை என்றால் தயவு செய்து எங்கள் ஜனங்களை வஞ்கிகாதீர்கள்//

மதிகேடர்களும், வேதபுரட்டர்களுமே, தேவன் பேச முடியாமல் வார்த்தையை படைத்தர் என்பது உங்களை போன்ற மதிகேடர்களின் நினைப்பாக இருக்கலாம்!! தேவன் மனிதர்களுடன் இடைப்படவே, வார்த்தையான கிறிஸ்துவை (தேவனுக்கு பதிலாக மனிதர்களுடன் பேச) சிருஷ்டித்திருக்கிறார், ஏனென்றால் தேவனை ஒரு போதும் ஒருவனும் மாம்சத்தில் காணமுடியாது!! கிறிஸ்துவால் அன்றி பிதாவிடத்தில் ஒருவரும் வர முடியாது!! உங்களுக்கு பிதாவாகிய தேவனின் மகிமையும் அவரை குறித்தான ஞானம் இல்லை!! தேவ அறிவு இல்லை, ஆகவே தான் கிறிஸ்து தான் அந்த பிதாவாகிய தேவன் என்று பிதற்றுகிறீர்கள்!! நீங்கள் மாத்திரம் அல்ல, உங்களுக்கு பெரும் திரளான ஒரு கூட்டம் இருக்கிரது, எல்லோரும் கேட்டின் வாசல் வழியாக நடக்கும் கூட்டமாக இருந்துக்கொண்டு இருக்கிறீர்கள்!!

//"உன் மீட்பரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவருமான கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே எல்லாவற்றையும் செய்கிற கர்த்தர், நான் ஒருவராய் வானங்களை விரித்து, நானே பூமியைப் பரப்பினவர்."(ஏசாயா.44:24)//

உங்களை போன்ற அறிவீனர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் என்று தான் வேதத்தில் ஜோடு வசனங்கள் இருக்கிறது,

1 கொரி 8:6. பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.

உங்கள் கூட்டத்தாருக்கு இது போன்ற வசனங்கள் பிடிக்காது, ஏனென்றால் இதில் பிதாவாகிய ஒரே தேவன் என்று இருக்கிறதே, கர்த்தராகிய கிறிஸ்து ஒருவர் என்று இருக்கிறது, உங்கள் தலைவரின் எதிரிகளான எங்களை போன்றோருக்கு இந்த வசனத்தை வைத்து என்ன சொல்ல முடியும் என்கிற அச்சம் இருப்பதால் இதை குறித்து உங்கள் கண்கள் கட்டியே தான் இருக்கிறது!!

அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது (நீங்கள் கேட்ட அந்த ஒருவர், பிதா தான், வேறு யார்); அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது (கிறிஸ்துவினால் தான், வேறு யார்)!! உங்கள் தலைவருக்கு மூலம் என்றால் பிடிக்காது, ஆனால் வசனம் சொல்லுவதால் நான் சொல்லியே ஆக வேண்டும்!! அவராலே என்றால், அவரின் திட்டம், (ஒரு சிறந்த பொறியாளர் எப்படி திட்டம் போடுகிறாரோ, அது போன்று தான் அவராலே என்பதாகும்) ஆக பிதாவாகிய தேவனால் நேர்த்தியாக திட்டம் போடப்பட்டுது!! அதை நிறைவேற்றவே, தேவனுக்கு சமமான ஒருவர் (இயேசு கிறிஸ்து) வந்தார், அவர்  மூலமாய் (ஒரு பொறியாளர் வந்து கட்டிடங்களை கட்டுவதில்லை, அதற்கென்று ஆட்கள் இருக்கிறார்கள், இதை எழுதியவுடன் உங்கள் மதிகேட்டை வைத்துக்கொண்டு இதோ பரிசேயர் கூட்டம் இயேசு கிறிஸ்துவை கொத்தனார் என்று சொல்லி விட்டார்கள் என்று எழுதினாலும் எழுதுவீர்கள்) கிறிஸ்துவின் மூலமாய் தேவன் (ஒருவராய் இருந்து போட்ட திட்டம்) போட்ட திட்டம் நிறைவேற்றினார்!!

தேவனால் சகலமும் உண்டாயிருக்கிறது, கிறிஸ்துவின் மூலமாய் சகலமும் உண்டாயிருக்கிறது!! புரிந்துக்கொண்டால் தான் இது சத்தியம், உங்களை போன்ற உனர்வுகளுக்கு இடம்கொடுப்பவர்களுக்கு எல்லாம் இது புரியவே புரியாது!!

இன்னும் தொடரும்..................


__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

// கிறிஸ்து இயேசு, பிதா ஒருவரே நல்லவர் என்று சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண்டு இருக்கிரோம், உங்களை போல் மூடத்தனமாக அப்படி என்றால் கிறிஸ்து
கெட்டவரா என்று எல்லாம் கேள்வி கேட்கும் பழக்கம் கிடையாது!! //

ஆனால் இயேசு "கர்த்தரை பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக" என்று சொன்னதற்கு எதிர்மறையான அர்த்தமாகிய "இயேசுவுக்கு ஆராதனை செய்யக்கூடாது என்று எடுக்கிறீர்களே" அதே முறையில் வாசித்தால் இயேசு கெட்டவர் என்று தான் வரும்.//


நீங்கள் வாசித்து நேரத்திற்கு ஆயிரம் அர்த்தம் கொள்ளலாம், ஆனால் நான் சொல்லுவது ஒரே அர்த்தத்தில் தான்!! உன் தேவனாகிய கர்த்தர் ஒருவருக்கே ஆரதனை செய்வாயாக என்று எழுதியிருப்பதை அப்படியே எடுத்துக்கொள்கிறேன், இயேசுவை ஆராதனை செய்வாயாக என்பதற்கு வசன இல்லாதத்தினால் இல்லை என்கிறேன்!! இதில் எந்த விதத்தில் என் பதில் பூரணமாக இல்லை என்கிறீர்கள்!! எதிர்மறையான அர்த்தம் என்று எடுத்துக்கொள்ள வேண்டுமென்றால் அதற்கு எல்லையே இல்லையே!! உங்களின் பதிவு யாரை திருப்திப்படுத்துவதாக இருக்கிறது என்பது எனக்கு தெரியும்!!

//பி.கு. நான் உங்களை "பரிசேயர்" என்று அழைப்பது, அவர்களுடைய முறைகளை நீங்கள் அனுசரித்து, இயேசுவை தொழ மறுப்பதுதான். இப்போது இயேசு இந்த பூலோகத்தில் இருந்து "நானும் பிதாவும் ஒன்று" என்று சொன்னால் நீங்கள் அவரை கல்லெறிய தயங்கமாட்டீர்கள் என்று எனக்கு தெரியும். மரியாளை போல அவருடைய பாதத்தை முத்தம் செய்யவும் மாட்டீர்கள் அப்படி செய்பவர்களையும் விமர்சிப்பீர்கள் (பரிசேயனாகிய சிமோனைப்போல). நீங்கள் என்னை எப்படி (கேவலமான சினிமாவில் ஆபாச காமடிசெய்யும் ஒருவன் பெயரால்) அழைத்தாலும் கவலை இல்லை, என் அன்பு தெய்வத்தை தொழமறுப்பவர்களிடம் இதைவிட பெரிதாக ஒன்றையும் எதிர்பாக்கமுடியது.//

ஐய்யா ஜான் அவர்களே, உங்கள் குருநாதரின் கேவலமான (சினிமாவை காட்டிலும் தான்) வார்த்தைகள் எல்லாம் உங்கள் கூட்டத்தாருக்கு தேன் சொட்டுவது போல் இருக்கிறது, அவர் அப்படி பேசுவதற்கு தேவன் அவரையும் அவர் குடும்பத்தையும் இப்படி பட்ட ஒரு ஊழியத்தை ஆசீர்வதிக்கும்படி எழுதும் கூட்டத்தில் உள்ளவர்கள்களுக்கு நான் எழுதுவது உங்களுக்கு ஆபாசமாக தெரிகிறது என்பது நீங்கள் வேதத்திற்கு மாத்திரம் அல்ல, உலகத்தின்படியும் குருட்டு கூட்டம் தான் என்பதை நிரூபிக்கிறது!! இயேசு கிறிஸ்து இது வரை வேதத்தில் சொல்லாத புதிய ஒன்றை நீங்கள் தான் சொல்லி வருகிறீர்களே தவிர, இனியும் கிறிஸ்து வந்து தான் சொன்னதை மாத்தி சொல்லுவதற்கு அவர் ஒன்றும் உங்களை போன்ற ஊழியக்காரர் அல்ல!! இயேசு கிறிஸ்துவை தொழ மறுப்பவர் தான் பரிசேயர் என்கிற உங்களுடைய புதிய அர்த்தம் வித்தியாசமாகவும், பரிதாபமாகவும் இருக்கிறது!! வசனத்தை கொண்டு நிரூபிக்க முடியாத ஒன்றை உணர்சிகளை கொண்டு நிரூபிக்க பார்க்கிறீர்கள்!! நீங்கள் கேவலமான ஆபாசத்திற்கு (சில்சாம் எழுதுவதை) கண்களை மூடிக்கொண்டு, நான் என் எழுத்துக்களை உலக மகா ஆபாசம் என்று கருத்துவது தான் சமநிலையோ!! என்னை தீர்ப்பிட உங்களுக்கு அதிகாரமில்லை என்பதை மாத்திரம் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்!!

கொல்வின் :
//சகோ. ஜான் தங்களின் வாதம் மிக அருமை. அவர்கள் தடுமாறுவதைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது. வேதப்புரட்டர்கள் எத்தகைய அநாகரீகமான வார்த்தைகளை பாவித்தாலும் அதனால் மனம் சோர்ந்து போக வேண்டாம்.//

எதற்கெடுத்தாலும் வேதத்தை காட்டிலும், இலங்கை வசந்தகுமாரை தான் வேதம் என்று கருத்தும் கொல்வின் அவர்களே, என்னிடத்தில் எந்த தடுமாற்றமும் கிடையாது, உங்கள் பரிதாபங்களை சேர்த்துவைத்துக்கொள்ளுங்கள் அது வேற்ய் அநேக காரியங்களுக்கு பயன்ப்படும்!! இருக்கும் சபையில் நடக்கும் விக்கிரக ஆராதனைக்காரர்களுடன் உட்கார்ந்துக்கொண்டு, உங்களுக்கு இந்த அளவிற்கு வாய் இருக்க கூடாது!! தேவையில்லாத விமர்சனங்கள் தேவை இல்லை என்கிறேன்!! அநாகரீகமான வார்த்தைகளின் மொத்த உருவமாகிய சில்சாமிடம் உட்கார்ந்துக்கொண்டு மனசாட்சியில்லாமல் அநாகரீகமான வார்த்தைகளை யார் எழுதுகிறார் என்று தெரியாத அளவிற்கு உங்கள் கண்கள் குருடாகிவிட்டது போல்!! நல்ல மருத்துவரை சந்தியுங்கள்!! நீங்கள் இருக்கும் கத்தோலிக்க சபையை காட்டிலும் அநீதியான வேதபுரட்டர்கள் யாரும் இல்லை என்பது எங்களுகும் தெரியும்!! கினற்றுக்குள் இருந்துக்கொண்டு எங்கள் மேல் கல்லை வீசுவதாக நினைக்கவேண்டாம், அந்த கற்கள் உங்கள் மேல் தான் திரும்பும்!! உறுபடியா உங்களுக்கு ஏதாவது இருந்தால் பதிவுசெய்யுங்கள், சும்மா இலாததையும் பொல்லாததையும் ஒரு பொம்பளை மாதிரி இருந்து செய்யாதீர்கள்!! தடுமாறி போய் இருப்பது உங்களை போன்ற வேஷதாரிகளும் கபடதாரிகளும் என்பது எனக்கும் தெரியும்!! சமுதாயத்திற்கு கத்தோலிக்கன் என்றும், விசுவாசத்திற்கு பெந்தகோஸ்தேக்காரன் என்றும் வேஷதாரையாக இருந்துக்கொண்டு யார் தடுமாறிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை உணர்ந்துக்கொள்ளுங்கள்!!

இன்னும் தொடரும்...............


__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

ஜான் எழுதுகிறார்:
//அன்பு சகோதரர் கொல்வின், உங்களுடைய ஆதரவுக்கு நன்றி. இயேசுவின் தேவத்துவம் ஒரு விவாதத்திற்குரிய பொருளாகவே நான் கருதவில்லை. இவர்கள் தவறான முறையில் வாசிப்பதாலும், ஒரு "Preconceived Idea" இருப்பதனால் இவர்களுக்கு விளங்கவில்லையா அல்லது விளங்கததுப்போல நடிக்கீரார்களா என்று தெரியவில்லை //

ஒரு "Preconceived Idea" வில் இருந்திருந்தால், உங்களையோ கொவினை போல் அதே கிணற்றில் உட்கார்ந்துக்கொண்டு கற்களை வீசிக்கொண்டிருந்திருப்பேன்!! என் தேவன் என்னை வேசியான பாபிலோனிய சபையை விட்டு வெளியேற சொன்னதை வேதத்தின் மூலமாக தெரிந்ததினால் தான் வெளியேரினேன், என் சொந்த ஆதாயத்திற்கோ பிழைப்பிர்கோ அல்ல, மாறாக வேதத்தின் மேல் இருந்த என் தாகத்தினால் தான் சத்தியத்தை தேடி வந்தேன், கிடைத்தது, இன்னும் கற்றுக்கொண்டு தான் இருக்கிறேன்!! முழுவதுமாக கற்று விட்டேன் என்கிற மமதையில் இல்லை!!

வெளி 18:4 பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்.

நீங்கள் வாசிப்பதை தவறாக புரிந்துக்கொள்வதால் தான் இத்துனை குழப்பம்!! இன்னும் உங்களால் இயேசு கிறிஸ்துவும் பிதாவும் ஒரே நபரா, அல்லது பிதா குமாரன் என்கிற இரு வேறு நபர்களா என்று சொல்ல முடியவில்லை!! இயேசுவின் தெவத்துவம் என்பது உங்களுக்கு ஒரு பொருளாக இருக்க வாய்ப்பில்லை என்று சரியாக சொனீர்கள்!! ஏனென்றால் வேதம் சொல்லுவதை காட்டிலும் அதிகமாக நினைத்துக்கொண்டு பாவித்துக்கொண்டு இருப்பதாக இருக்கிறீர்கள்!! இத்துனை பேர் விசுவாசிப்பது தப்பாகிவிடுமா என்கிற தடுமாற்றம் தான் அது தவிர வேறு ஒன்றும் இல்லை!!

கொல்வின் அவர்கள் எழுதியது:
//வேதப்புரட்டர்கள் என்ற சொல்லைத்தானே பாவித்தேன்.  அது என்ன மோசமான சொல்லா? //


உங்களுக்குள் அது பழக்கமான நெருக்கமான சொல்லாக இருக்கலாம், எனக்கு நிச்சயமாக அது பிடிக்காத சொல் தான்!! உங்களிடம் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன், நான் யெகோவா சாட்சிகள் கிடையாது என்று, இருந்தால் வெட்கப்படாமல் சொல்லுவேன்!! நான் கிறிஸ்தவன் என்று சொல்லுவதை விட கிறிஸ்துவுடயவன் என்று சொல்லுவதில் தான் பெருமை படுகிறேன்!! நாகரீகமாகவே உங்களிடம் கேட்டு கொள்கிறேன், என்னை அப்படி அழைக்க வேண்டாம் என்று!! யெகோவா சாட்சிகள் என்பவர்களின் தளத்திற்கு சென்று அவர்களின் விசுவாசத்தையும் என் விசுவாசத்தையும் அலசி ஆறாய்ந்து பார்த்து அதன் பின் முடிவு செய்யுங்கள்!! இத்துனை ஆதங்கமாக எனக்கு அறிவுறை சொல்லும் தாங்கள் ஏன் இப்படி ஒருதலைபட்சமாக செயல்ப்டுகிறீர்கள் என்று தான் உங்கள் மேல் எனக்கு கோபம்!! எனக்கு வழங்கிய அதே அறிவுறைகளை தாங்கள் எழுதுக்கொண்டிருக்கும் தள போதகருக்கு சொல்ல வேண்டியது தானே!! வேசியின் மகன் என்று சொல்லியிருக்கிறார் அதற்கு தாங்கள் எழுதுவது, தேவன் உங்களையும் (சில்சாமையும்) சில்சாமின் குடும்பத்தையும் இப்படி பட்ட ஒரு ஊழியத்தை செய்ய ஆசீர்வதிக்கட்டும் என்று!! என் நாகரீகத்தை விமர்சிக்கும் உங்கள் கண்களுக்கு இப்படி பட்ட வார்த்தைகள் மாத்திரம் என்ன குளிரூட்டுவதாக இருந்ததா!! தொடர்ந்து இதை செய்யுங்கள் என்று தானே எழுதுகிறீர்கள்!! என் நாகரீகத்தை குறித்து பேச மாத்திரம் உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது!!

தப்பு செய்பவனை விட தப்பிற்கு உடந்தையாகவும், அந்த தப்பை செய்ய ஊக்கப்படுத்துபவன் இன்னும் அதிக கொடுரமானவன்!! ஏனென்றால் தப்பை சரி என்று நியாயப்படுத்துவதாக் இருக்கிறது!!

வெளி 18:4 பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்.

கொவின் அவர்களே இந்த வாக்கியம் தான் என்னை கத்தோலிக்க சபையை விட்டு வெளியேற செய்தது, போதுமா!! நான் ஒன்றும் உங்கள் ஆட்கள் மாதிரி என்னிடம் தேவன் வந்து பேசி இதை செய்ய சொன்னார் என்று பொய் சொல்லமாட்டேன், மாறாக வசனம் சொன்னதால் கீழ்படிகிறேன்!!

உங்களை வேஷதாரி என்று சொன்னதற்கு காரணம் அதுவே!! சபையின் விசுவாசத்திலும் ஆராதனையிலும் தவறு இருக்கிறது என்று தெரிந்தும் அதிலே உட்கார்ந்துக்கொண்டு நான் இதை பின்பற்றுவது கிடையாது என்று சொல்லுவது எப்படி சரியாகும்!! தேவனின் வசனத்திற்கு கீழ் படியுங்கள்!! என்னை யெகோவா சாட்சிகள் என்று சொல்லும் முன் என் விசுவாசத்தையும் யெகோவா சாட்சிகளின் விசுவாசத்தையும் வாசித்த பின்பு எழுதுங்கள்!!

என்னமோ உங்களின் விசுவாசத்தை கொச்சை படுத்தியதாக சொல்லுகிறீர்களே, இப்படி தான் வேறு மதத்தில் உள்ளவர்களின் விசுவாசத்தையும் உங்களை போன்றோர் பேயின் விசுவாசம், அங்கே சாத்தான் குடியிருக்கிறான், என்றும் இன்னும் கட்டி, சபித்து ஜெபங்கள் ஏறெடுப்பது என்ன எனக்கு தெரியாதா!! உங்கள் பாரம்பரிய விசுவாசத்தை யாரும் தவறாக பேசக்கூடாது என்றால் நீங்களும் அப்படியே இருங்களே!! ஏன் நாங்கள் கொண்டிருக்கும் வேத விசுவாசத்துடன் மோதுகிறீர்கள்!! விவாதம் செய்ய வேண்டும் என்றால் ஆரோக்கியமாக வசனத்தை விளக்குங்கள், உங்கள் ஆட்கள் மாத்திரம் என்னை எப்படி வேண்டுமென்றாலும் எழுதலாம், நான் எழுதுவதை மாத்திரம் குற்றமாக பார்ப்பது சரியாகுமா!!

//தூதர்களுக்கு கால் கிடையாது. எனவே வணங்கமுடியாது என்று  சொல்லும் உங்களை விடவா ஆசிரியர் தாழ்ந்து போய்விட்டார்.//

தூதர்களுக்கோ, ஆவிக்குரிய ஜீவிகளுக்கோ கால் இருப்பதாக வேதத்தில் நான் வாசித்தது இல்லை!! கால் இல்லை என்றும் வாசித்ததில்லை!! ஆனாலும் ஆவிக்குறிய ஜீவிகள், மனிதர்கள் போல் இருக்க மாட்டார்கள் என்கிறதை நம்புகிறேன்!! இதற்கு என்னால் வசனம் நிச்சயமாக இப்போதைக்கு தர முடியாது, ஆனால் கிடைத்தால் நிச்சயமாக தருவேன்!!

//என்றாவது Reference &  Citation உடன் எழுதியுள்ளீர்களா? //

நீங்கள் அப்படி பட்ட பதிவுகளை வாசித்தது கிடையாது, இல்லாவிட்டால் இப்படி பேச மாட்டீர்கள்!! எனக்கு வேதமே  Reference &  Citationன்   புத்தகமாக இருப்பதால் அது எனக்கு போதும்!! இன்னோரு மனிதனின் கருத்தை நான் ஒன்றும் பெரிதாக நினைக்கவில்லை!! நான் ரஸ்ஸலின் புத்தகங்கள் படித்திருக்கிறேன், நிச்சயமாக அதிலிருந்து ஒரு சில கருத்துக்கலை ரசித்திருக்கிறேன், அனைத்தையும் அல்ல, ஏனென்றால் நான் வேத மாணவனும் கிடையாது என்று சொல்ல தான்!! நல்லது சரியானதை எடுத்து வேதத்திலிருந்து சரி பார்த்துக்கொள்கிறேன், ஆனால் அதற்காக அவர்கள் எழுதியது எல்லாம் சரி என்று அவர்களை பெரிய ஆளாக்கி அவர்களின் Reference &  Citation தர அவசியமும் இல்லை!! ஏனென்றால் ஏற்கனவே ஒரே சிந்தையில் இருப்பவர்களின் புத்தகங்கள், அதே சிந்தையில் இருப்பவர்களுக்கு சுகமாகவும், சாதகமாகவும் தான் இருக்கும்!! அப்படி நான் கொடுத்திருந்தாலும் விக்கி போன்ற பொதுவான தளத்தை சுட்டி காண்பித்திருக்கிறேன், அதில் கேட்ட கேள்விகளுக்கு தங்களிடம் எந்த பதிலும் இல்லை!!

//ஒன்றை சுட்டிக் காட்டுங்கள் பார்க்கலாம்?//

நீங்கள் கேட்டு கொண்டதற்காக ஒன்றே ஒன்று, தேவை என்றால் தளத்தில் வந்து பாருங்கள்;

அந்த பகுதி, இதோ,

//Dear Br Harvestsiftings,

You can go to the following links to know more about what you had asked.

1. Bereans Bible Institute:

http://www.bereanbibleinstitute.org/home.html

2. Layman's Home Missionary Movement:

http://en.wikipedia.org/wiki/Laymen's_Home_Missionary_Movement

3. Dawn Bible Students : http://www.dawnbible.com/

4. Associated Bible Students:

http://en.wikipedia.org/wiki/Associated_Bible_Students

The Most interesting part is the difference between The Bible Students and The Jehovah's Witnesses. Christiandom in totality or in part believes that these two groups are one and the same. I think you know about Charles Tez Russel, the founder of Bible Students Movement and of course Rutherford the founder of Jehovah's witness, a one time Bible Student and associate of Charles Russel. I will just give link to a non denominational, and which has nothing to do with Christianity page, the wikipedia encyclopedia which will tell the difference of both. But at large, the Christiandom has already fed in their database, that both the groups are same. Let them think of which I am not bothered, for I belong neither to both these groups.

http://en.wikipedia.org/wiki/Bible_Student_movement

http://en.wikipedia.org/wiki/Jehovah%27s_Witnesses

Please know the difference between these two groups. The second group was formed after the death of the founder of the first group. As from Catholic came out Protestant which further branched out, and then came out the Pentecostal movement would you consider that the Pentecostal churches and the Catholic churches are one and the same in this context.

One more useful link:

http://en.wikipedia.org/wiki/Bible_Students

If you find these useful, pl comment.

Thanks//



தொடருவேன்................


__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//நண்பர் பெரையன்ஸ்க்கு Blood Pressure ஏறுவது அவருடைய எழுத்திலே தெரிகிறது. கேட்ட ஒரு கேள்விக்குகூட இன்னும் அவர் "Upto the Point" பதில் சொல்லவேயில்லை. உதாரணமாக கிழே உள்ள கேள்வியில் தெளிவாகக்கேட்டு உள்ளேன். யேகோவ தேவன் "நான் ஒருவராய் வானங்களை விரித்து, நானே பூமியைப் பரப்பினவர்" என்று சொல்லுகிறார் ஆனால் வானங்களை விரிக்கும் போது அவர் ஒருவரகவா இருந்தார்? அவர் கொடுத்த பதிலில் (?) என்னமோ திட்டி உளறி இருந்தாரே ஒழிய ஒன்றும் உருப்படியாக சொல்லவில்லை

//கிழே உள்ள வசனத்தில் உள்ள ஒருவர் யார்? இதற்க்கு பதில் தெரியவில்லை என்றால் தயவு செய்து எங்கள் ஜனங்களை வஞ்கிகாதீர்கள்

"உன் மீட்பரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவருமான கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே எல்லாவற்றையும் செய்கிற கர்த்தர், நான் ஒருவராய் வானங்களை விரித்து, நானே பூமியைப் பரப்பினவர்."(ஏசாயா.44:24)//

வேத வசனங்களுக்கு குருடாகி போன உங்கள் கண்கள் நான் பதிவு செய்ததை வாசிக்க முடியவில்லை போல்!! ஏனென்றால் 1 கொரி 8:6ஐ சொன்னவுடன் தான் ஓட்டம் எடுப்பீர்களே!! அதில் ஒரே தேவன் என்று கொடுக்கப்பட்டிருப்பது தான் நீங்கள் கேட்ட ஏசாயா 44:25ல் சொல்லப்பட்டிருக்கும் "ஒருவர்"!! கிணற்றில் இருந்தால் வெளிச்சம் தெரியாது, அப்படியே தான் பாரம்பரியம் என்கிற கிணற்றுக்குள் இருந்து கொண்ட உங்களை போன்ரோருக்கு வேதத்தின் வெளிச்சம் தெரியாது!! நீங்கள் கேட்ட அந்த ஒருவரை குறித்து நான் ஏற்கனவே பதிவு செய்திருக்கிறேன்!! நல்ல ஒரு கண் மருத்துவரை போய் சந்தித்து விட்டு வாருங்கள், ஒரு வேளை தெரியவரும்!! தெரியாத இந்த வசனத்தை தந்து மாட்டிக்கொண்டு இருக்கிறீர்களே!! 1 கொரி 8:6ஐ வாசித்தால் உங்களுக்கு அந்த ஒருவர் யார் என்று தெரியும்!! அதற்காகவே சிவப்பில் அத்துனை பெரிதாக காண்பித்தும் உங்களுக்கு தெரியாமல் போனதும் ஏதோ திட்டியதாக எழுதியது மாத்திரம் தெளிவாக தெரிந்திருப்பது உங்கள் இருதயத்தின் நிலையை தான் காண்பிக்கிறது!!

உங்கள் ஜனங்கள் ஏறகனவே வஞ்சிகப்பட்டு இருக்கிறார்கள்!! Blood Pressureக்கு மருந்து இருக்கிறது, ஆனால் உங்களை போன்று வஞ்சிக்கப்பட்ட கூட்டத்திற்கு ஒரே மருந்து இனி வரும் இராஜியம் தான்!! ஆனால் உங்களுக்கு எல்லாம் அப்படி ஒரு ராஜியம் இனி வரும் என்பதில் நம்பிக்கை கிடையாது, உங்களுக்கு பரதீசு என்றால் அதுவும் பரலோகம், பரலோகம் என்றாலும் பரலோகம்!! கிறிஸ்து ஜெபிக்க கற்றுக்கொடுத்த போதுக்கூட "உம்முடைய ராஜியம் வருவதாக, உம்முடய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல், பூமியிலும் செய்யப்படுவதாக" என்று இயேசு கிறிஸ்து சொல்லியிருக்கிறார்!! ஆனால் உங்கள் கூட்டத்தாருக்கு அப்படி ஒரு ராஜியத்தின் மேல் நம்பிக்கை இல்லை!! உங்களுக்கு தெர்நிதது எல்லாம் ஒரு பரலோகம் அது சில சமயம் பரதீசாகிவிடும், மற்றொன்று, நரகம், அதை தான் அடிக்கடி போய் விஸிட் அடித்து வருகிறார்களே உங்கள் "பரிசுத்தவான்கள்"!! மறைந்த தினகரன் ஆரம்பித்து வைத்து போன இந்த விஸிட் இன்று பட்டி தொட்டி சபைகளிலும் வந்து விட்டது!! உங்களுக்கு ராஜியத்தை குறித்து தெரிய நியாயம் இல்லை தான், அதையும் உங்கள் தலைவன் உங்கள் தளத்தில் பதிந்திருப்பதை வாசித்திருக்கிறேன்!! ஆனால், அங்கேயும் உங்கள் கூட்டத்தார், இயேசு சாமி இயேசு சாமி என்று பிதற்றிக்கொண்டு இருப்பார்கள்!! என் கர்த்தர் இயேசு கிறிஸ்து அந்த ராஜியத்தில் ராஜாவாக வந்து உங்களுக்கு பிதா யார் என்று சொல்லி தருவார், அப்பொழுது தெரிந்துக்கொள்ளலாம்!! அது வரை வேதத்தில் இல்லாத ஒரு இயேசு சாமியை தொழுத்துக்கொண்டே இருங்கள்!!  ஏனென்றால்,

ஆபகூக் 2:14 சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தருடைய மகிமையை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.

ஏசாயா 11:9 என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.

தேவனின் ராஜியத்தில் தேவனை அறிகிற அறிவினால் நிறப்படுவீர்கள்!! தமிழ் வேதத்தில் கர்த்தர் என்று பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் கொடுத்ததினால் இரண்டும் ஒன்று தான் என்று மிகவும் புத்திசாலித்தனமாக உங்கள் கூட்டத்தாருக்கு சொல்லி நீங்கள் வேண்டுமென்றால் தப்பித்துக்கொள்ளலாம், ஆனால் இந்த தளத்தில் வரும் வாசகர்களுக்கு இரண்டிற்கும் வித்தியாசம் தெரியும்!!


//எதிர்மறையான அர்த்தம் எடுக்க மாட்டீர்கள் என்றால் இந்த வசனத்தை "இயேசுவை தொழலாமா?" என்ற தலைப்புக்கு உபயோக படுத்தக்கூடாது. இயேசுவை தொழக்கூடாது என்று வசனம் இருக்கிறதா? நீங்கள் தான் எதிர்மறையான அர்த்தங்களில் வசனங்களை உபயோகபடுத்தமாடீர்களே!//

இதே கேள்வியை எத்துனை விதமாக கேட்டாலும் பதில் ஒன்றே!! கொடுக்கப்பட்டதற்கு அதிகமாக எழுதுவது உங்களை பொறுத்தவரை உங்களுக்கு கைவந்த கலையாக இருக்கலாம், ஆனால் எனக்கு அது தேவையில்லை!! உன் தேவனாகிய கர்த்தர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று இயேசு கிறிஸ்துவே சொல்லிய பிறகு நீங்கள் எல்லாம் எந்த இயேசு சாமியை தொழுதுக்கொண்டு காலத்தை ஓட்டுகிறீர்கள்!! எனக்கு வேதம் சொல்லி தருவது, இயேசு கிறிஸ்து போதகர், மத்தியஸ்தர், சபைக்கு பரிந்து பேசுபவர், கிறிஸ்துவின் வழியாக தவிர பிதாவிடத்தில் போக வேறு வழியில்லை, இரட்சிப்புக்கென்று தேவன் கொடுத்த ஒரே நாமம் இயேசு கிறிஸ்து , அவரே வழியும், சத்தியமும், ஜீவனும், அவர் வழியாக தேவனை மகிமைப்படுத்தவும் போன்றவற்றையும் எழுதியிருக்கிறபடியே ஏற்றுக்கொண்டு தான் இருக்கிறேன்!! கொடுக்காத ஒரு விஷயத்தை நான் ஏன் சொல்ல வேண்டும்!!

இயேசு கிறிஸ்து தொழத்தக்க தெய்வம் என்று நீங்கள் சொல்லுவதால் அதற்கு வசனத்தை கேட்டேன், இல்லை என்பதால் எத்துனையோ விதமாக சால்ஜாபு காட்டி, இதையும் அதையும் என்ரு எழுதி விட்டு, சில்சாம் திட்டு எல்லாம் கண்களுக்குள் தேனாக இறங்குதாம், ஆனால் எனக்கு மட்டும் Blood Pressure ஆம்!! உங்கள் தலைவனுக்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயமா!! இது தான் உங்கள் தளத்தில் வருபவர்கள் "நியாயமாக" பார்ப்பார்களோ!!

அட அறிவீனத்தாரே, இயேசுவை தொழலாமா என்கிறதற்கு இயேசுவை தொழலாம் என்கிற வசனம் இல்லை, ஆகவே யாரை தொழலாம் என்று சொல்ல நாங்கள் எடுத்துக்கொண்ட வசனம், மத் 4:10. உங்கள் விசுவாசத்திற்கு ஒரு வசனத்தை எடுத்து சொல்லுவதை விட்டு விதண்டாவாதம் செய்வதில் என்ன பிரயோஜனம்!! இயேசு கிறிஸ்துவே சொல்லி விட்டார், உங்களுக்கு எதற்கு தேவையில்லாத வேலை!! கிறிஸ்துவை பின்பற்றுபவர்களாக இருந்தால் கிறிஸ்து சொன்னதற்கு கீழ்ப்படிவீர்கள், ஆனால் உங்களில் சிலர் இயேசு சாமியையும், சிலர் இயேசு நாதரையும், சிலர் அருள் நாதரையும், சிலர் கிறித்துவையும் தானே வழிப்படுகிறீர்கள், இயேசு கிறிஸ்து யார் என்று உங்களுக்கு தெரியாது!! ஒன்று இயேசு கிறிஸ்துவிற்கு கீழ்ப்படியுங்கள் அல்லது அவர் சொல்லாத வார்த்தைகளை சொல்லி மதியீனராக வெளிப்படாதீர்கள்!!

//ரோமர் 8 ல் "முதற்பேரானவர்" என்றால் மீட்கப்பட்ட சகோதரர்களில் முதற்பேரானவர் என்பது ஏன் உங்களுக்கு புரியவில்லை. அதற்க்கு முந்திய வசனங்களை பாருங்கள். சிருஷ்டியும், ரட்சிக்கப்படவர்களும் மீட்ப்புக்காக தவிப்பதையும் இயேசு அனேக இரட்சிக்கப்பட்ட சகோதரர்களில் முதற்பேரானவர் என்பதும் தெளிவாக இருக்கிறது//

ரோம் 8:29. தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்;

மீண்டும் மீண்டும் தங்களின் மதியீனத்தை மெச்சிக்கொள்ளாதீர்கள்!! கொலோ 1:15ன்படி அவர் சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறனாவர்!! ரோம 8:29ன் படி தேவன் கிறிஸ்துவின் சாயலில் மாற்றப்பட்ட அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராக "இருக்கும் பொருட்டு" சிலவற்றை செய்வதாக இருக்கிறது!! கிறிஸ்துவின் சாயலில் வருபவர், என்ன கிறிஸ்து வருவதற்கு முன்னமே இருந்தார்களா!! கிறிஸ்து மாம்சத்தில் வந்து பலியாக தன்னை கொடுத்து, பரலோகத்திற்கு சென்ற பிறகு சீஷர்கள் என்கிற ஒரு கூட்டத்திலிருந்து, கிறிஸ்துவின் பாத சுவடுகளை பற்றும் சிலரை தேர்ந்தெடுக்கிறார், இப்படி பட்டவர்களுக்கு "முதற்பேறானவராக" கிறிஸ்து வைக்கப்படுகிறார்!! ஆனால் கொலோ 1:15 அவரின் சிருஷ்டிப்புக்கு அடுத்த வசனங்கள்!!

கொலோ 1:15. அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர். 16. ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. 17. அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது.

எல்லா சிருஷ்டிகளும் சிருஷ்டிக்கப்படும் முன் அவர் சிருஷ்டிக்கப்பட்டார் (உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் ஜெனிப்பிக்கப்பட்டர் என்று வைத்துக்கொள்ளுங்கள்)!! அவர் மரித்தோரிலிருந்து எழுந்ததிலும் முதல் பேறானவர், அதாவது உயிர்த்தெழுதலினால் ஜீவன் கிடைத்த முதல் ஆள்!! நான் தங்களிடம் கேட்டது, அவர் அனைத்துக்கும் முந்தின பேறானவரை குறித்து தான்!! அதற்கு விளக்கம் கொடுக்காமல், உங்கள் இஷ்டத்திற்கு ஏதோ ஏதோ எழுதி, தள உறுப்பினர்களும் நீங்கள் என்ன தான் எழுதுகிறீர்கள் என்று புரியாமல், சரி என்னம்மொ எழுதுறார், அது கோவை பெரேயன்ஸிற்கு விரோதமாக இருப்பதாக இருக்கிறது என்பது மாத்திரம் புரிந்து வைத்து, உங்களை வாழ்த்துகிறார்கள்!!

சில்சாம் அவர்களே, தாங்கள் சற்றும் அச்சம் கொள்ள வேண்டாம், உங்கள் மந்தையில் உள்ள ஆடுகள் மேல் எனக்கு எந்த பிரியமும் இல்லை, எனக்கு ஆடு திருடும் சபை புத்தியும் கிடையாது! அது எல்லாம் பாஸ்டர் சாரி பாடர் தொழில் செய்வோருக்கு கைவந்த கலையாக இருக்கும்!! நீங்களும் பாஸ்டர் மண்ணிக்கனும் பாடர் தானே!! உங்கள் தொழில் எனக்கு தேவையில்லை!! உங்கள் பிழைப்பில் தலையிட நான் விரும்பவில்லை!! ஜான் ஏதோ கேட்க்கிறார் என்றும், சில அபிமானிகள் அதற்கு ஏதோ விஜய் அஜீத் படம் பார்த்து விசில் அடித்து ஆராவாரம் செய்வது போல் செய்கிறார்கள் என்று தான் எழுதுகிறேன்!! மற்றப்படி உங்கள் கூட்டத்தாருக்கு நீங்களே தலைவராகவும், பாடராகவும் இருந்து தொடர்ந்து வழி நடத்துங்கள்!! உங்கள் நாகரீகத்துடன் எல்லாம் மோதுவது சாக்கடையில் கல் எறிவது போன்று, என் துனி தான் நாறி போகும்!! நீங்கள் சற்றும் அச்சம் கொள்ளாதீர்கள், உங்கள் பிழைப்பில் நான் ஒன்றும் குறுக்கிட மாட்டேன்!! தாயை நீங்கள் வேசி என்று நினைக்கலாம், எனக்கு அந்த அளவிற்கு மட்டமான புத்தி இல்லை!! உங்கள் அனுபவங்கள் எனக்கு இல்லை!! தாயை வேசி என்று சொல்லுவதற்கு ஏதோ பெரிய கதை சொல்லுகிறாயே, மனுஷன் தானா நீ!! என் தகப்பன் மரித்ததை ஏதோ ஸீன் போடுகிறேன் என்று எழுதினாயே, நீ உனக்கும் உன் சபையாரில் யாருக்காவது இப்படி நேர்ந்தால் இதை தான் சொல்லுவாயா? ஏம்ப்பா அப்பா செத்ததுக்கு எல்லாம் ஸீன் போடுகிறாய் என்று!! இதை எல்லாம் நாகரீகம் என்று கொல்வின், ஜான் இன்னும் எபி என்பவர்கள் இதை எல்லாம் எழுதவும் சொல்லவும் கர்த்தர் கரம் உன்னோடு இருக்கட்டும் என்று அந்த கர்த்தரையே உன் அநீதிகளுக்கு உடந்தையாகவும் பங்காளியாகவும் ஆக்குவது, அவர்களின் இருள் அடைந்த கண்களுக்கு தெரியாமல் இருக்கலாம், ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை இருக்கிறது!!


__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

ஜானின் பிதற்றல்:
//"முதற்பேறானாவர் என்றால் முதல் குழந்தை என்று அர்த்தம், முதலில் பெற்று எடுத்தது என்று அர்த்தம்!!" என்று நீங்கள் பிதற்றியது தவறு என்று நிருபித்த பிறகும் அதையே திரும்ப திரும்ப பிதற்றினால் என்ன அர்த்தம்? ஒரே பொய்யை திரும்ப திரும்ப சொல்லி உண்மையாக்க முயற்சிக்கும் தந்திரமே //

நிரூபித்ததாக நீங்கள் சொல்லிக்கொண்டால் அது உங்கள் மனசாட்சிக்கே!! நான் கண்ணை மூடிக்கொண்டு விட்டதால் எல்லோருக்கும் இருட்டி விட்டது என்கிறபடி இருக்கிறது உங்களின் குருட்டு எழுத்து!! நான் வசனம் எழுதுவது உங்களுக்கு பிதற்றலாக தான் தெரியும் பாரம்பரிய குருடர்களே!!

//கேள்வி: யேகோவா தேவன் வானங்களை விரிக்கும் போது ஒருவராகவா இருந்தார்? அவரேவா பூமியை பரப்பினார்?//

ஆம் யெகோவா தேவன் இவற்றை செய்யும் போது ஒருவராக தான் இருந்தார்!! அழகாக ஒரு உவமையும் ஒரு வசனத்தை வைத்து எழுதியும் உங்கள் கண்கள் குருடாகி விட்டதால் உங்களுக்கு இவைகள் தெரிய வாய்ப்பில்லை!! ஆனால் Laws of Logic (Law of Identity , Law of Non-Contradiction, Law of the excluded middle)
என்று யாரோ ஒருவன் எழுதியதை தான் இவர் வசனத்திற்கு மேலாக நினைத்து வசனத்தை கேட்டால் இதை சொல்லிவிடுகிறார்!! உங்களுக்கு ஏசாயாவின் அந்த வசனத்தை நிரூபிக்கும்பட்யாக தான் 1 கொரி 8:6ஐ கொடுத்தேன், ஆனால் அந்த வசனமோ உங்களின் குருட்டு கோட்பாட்டிற்கு விரோதமாக இருப்பதால் அதை இது வரையில் எழுதாமல் நான் ஏதோ பிதற்றிக்கொண்டிருப்பதாக எழுதி கைத்தட்டுகள் வாங்கிக்கொண்டு இருக்கிறீர்கள்!!

//நண்பர் அன்பு கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்லமால் ஓடிவிட்டேன் என்று ஒரு பொய்யை பரப்பினார்,//

//இதுதான் உங்களுடைய தளத்தில் என்னுடைய கடைசி பதிவு.//


இது தாங்கள் எழுதியது தானே, அல்லது இதையும் நான் தான் எழுதினேன் என்பீர்களோ!! யப்பா, எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை இருக்கிறது திரு ஜான் அவர்களே!!

//யோவான் 1:1 ஆதியிலே வார்த்தை இருந்தது (Past Tense)
John 1:1 In the begining WAS the word.

இந்த அந்தி கிறிஸ்துக்களை பற்றி நன்றாக அறிந்த யோவான் தெளிவாக எழுதியிருக்கிறார் வார்த்தை இருந்தது என்று. நெருப்பு கோழி தன் தலையை மண்ணுக்குள் புதைத்து வைத்து விட்டு உலகமே இருண்டு விட்டது என்று சொல்லுமாம் அதுபோலவே இந்த புரட்டர்களும் திரிந்து கொண்டு இருக்கிறார்கள்.

இவர்கள் விக்கிரகத்தை வணங்கும் ஒருவனை விட கேவலமானவர்கள். இவர்களை வீட்டு வாசலில் ஏற்றாமல் இருப்பது நல்லது. //

ஆதியிலே வார்த்தை இருந்தது என்பதை நான் எங்கேயும் மறுக்கவோ மறைக்கவோ இல்லை!! ஆனால் ஆதியில் தான் இருந்தது, அநாதியாக இல்லை என்று எழுதினால் உங்களுக்கும் உங்கள் தலைவருக்கும் புரியாதே!!

அந்த வார்த்தை தேவனாக இருந்தது!! அந்த வார்த்தை தேவனோடு இருந்தது!! இருவரும் ஒருவரா?

உங்களை போன்றோரை அல்ல, உங்களை விட கேவலமானவர்கள் வீட்டிற்கு வந்தால் கூட நாங்கள் கிறிஸ்துவுடயவர்கள் என்பதால் அவர்களை நன்று உபசரித்து தான் அனுப்புவோம்!! உங்களுக்கு அது இல்லை என்பது எனக்கு தெரியும்!! ஏனென்றால் அடிப்பட்டு கிடந்தவனை கண்டும் கானாமல் போகு மதபோதகர் தானே நீங்கள்!!

நாங்கள் எங்கும் திரிந்துக்கொண்டு இருக்கவில்லை!! கோவையில் என் விலாசம் என் தொலைபேசி எண் எல்லாவற்றையும் தந்து தான் இருக்கிறேன்!! மறைந்து இருந்தோ உங்கள் கூட்டத்தார் சொல்லும் "இரகசிய கிறிஸ்தவன்" என்றோ நான் இல்லை!! அனைவருக்கும் தெரியும் வன்னமாகவே இருக்கிறேன்!! யார் வீடு வீடாக திரிந்து இருக்கிறார்கள் என்பதை நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை!! சரியா!!

//நல்ல கேள்வி சகோ. சில்சாம். யேகோவா தேவன் என்று நினைத்துகொண்டு பிரபஞ்சத்தின் 'தேவனை' வணங்கும் இவர்கள் எல்லாவற்றிற்கும் ஒரு குதர்க்கமான பதில் வைத்து இருப்பார்கள். ரோமர் 9:5 இயேசுகிறிஸ்துவை "சர்வத்திற்கும் மேலாக ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவன்" என்று சொல்லுகிறது. சர்வம் என்றால் என்ன அர்த்தம் என்று இந்த புரட்டர்களுக்கு புரியுமா?//

உங்களுக்கு தான் யெகோவா தேவனை தெரியாது என்று ஏற்கனவே உங்கள் தலைவர் எழுதியிருக்கிறாரே!! அவரை பின்பற்றும் உங்களுக்கு யெகோவா தேவனை தெரிய வாய்ப்பில்லை!! யெகோவா தேவனை தெரியாதை உங்கள் கூட்டத்தார் இயேசு கிறிஸ்துவை யெகோவா என்று சொல்லிக்கொண்டு, இயேசு சாமி என்கிற ஒரு குலதெய்வத்தை தொழுதுக்கொண்டு வருகிறீர்கள் என்று எனக்கும் தெரியும்!! சர்வத்திற்கும் மேலாக ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவன்!! ஸ்தோத்தரம் என்றால் ஆராதனையோ தொழுகையோ கிடையாது!! இதையே வைத்து மீண்டும் மீண்டும் பிழைப்பு நடத்த வேண்டாமே!! என்ன?! குருடர்களுக்கு வசனம் பேசுபவர்கள் புரட்டர்களாக தான் தெரிவார்கள்!!

//    * அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம்.(மத்தேயு 1:23)

இம்மானுவேல் என்றால் "மிகாவேல் நம்மோடு" என்று சொல்ல இந்த புரட்டர்கள் தயங்க மாட்டார்கள் //

அட குருட்டு கூட்டமே, ஒப்பீடு செய்வதற்கு கூட உங்களுக்கு தெரியவில்லையே!!

தேவன் நம்மோடு இருக்கிறார் என்பதற்கும் மிகாவேல் நம்மோடு என்பதும் ஒன்றா!! நான் கிறிஸ்து மாம்சத்தில் இயேசுவாக வரும் முன் தான் 'மிகாவேல்' என்று எழுதினேன்!! பிதா தான் மிகாவேல் என்று எழுதவில்லை!! மந்த புத்திக்காரர்களே உங்களுக்கு இது எல்லாம் புரியாது!! நீங்கள் உங்கள் பாரம்பரியத்தில் இருந்துக்கொண்டு கொட்டிய குப்பையை மெய்ந்துக்கொண்டு அதிலேயே இருந்துக்கொண்டு இருங்கள்!!
தொடரும்................


__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//ஒரு கோரிக்கை: நாம் இருவரும்தான் விவாதித்துகொண்டு இருக்கிறோம் ஆகையால் திட்டும்போது என்னை மட்டும் ஒருமையில் திட்டினால் நலம். அதாவது "அட குருட்டு கூட்டமே" என்பதற்கு பதிலாக "அட குருடனே" என்று திட்டலாம் பொருத்தமாக இருக்கும்//

இந்த நியாயத்தை உங்கள் நண்பர்களான கொல்வின் மற்றும் சில்சாமிடமும் எடுத்து சொன்னால் நலமாக இருக்கும்!! விவாதங்களை திசை திருப்பி விட அவர்கள் என்னை திட்டி தீர்த்து பதில் எழுதுவதிலும் நியாயம் இல்லை என்று ஒப்புக்கொண்டால் நல்லது!! நான் இப்பவும் சொல்லுகிறேன் ஜான் அவர்களே, உங்கள் மேல் எனக்கு எந்த வித தனிப்பட்ட வருத்தம், அல்லது வஞ்சகம் இல்லை, நான் விவாதிப்பது கருத்துக்களுக்காக மாத்திரமே!! உங்களை தனிப்பட்ட முறையில் நான் குருடனே என்று சொல்லுவதில் எனக்கு ஒன்றும் மகிழ்ச்சி கிடையாது!! உங்கள் நண்பர்கள் பேசாது இருந்தால், அல்லது விவாதத்திற்கு மாத்திரம் உதவினால் நலமாக இருக்கும்!! என் கோபத்தில் வெளிப்பாடு அவர்களின் பதிவுகளை பார்த்து தான், அது மட்டுமல்லாமல், "உங்கள் ஜனங்களை" வஞ்சிக்காதீர்கள் என்று நீங்கள் தானே கேட்டுக்கொண்டீர்கள்!! இப்பவும் உங்களை நேரில் சந்திக்க நேர்ந்தால் "சில்சாமை போன்று இரத்த வெறிக்கொண்டு" இருப்பவனாக என்னை பார்க்க முடியாது!! நான் என்றும் அமைதியையும் சமாதானத்தையுமே விரும்புகிறேன்!! சில்சாமுடன் விவாதிக்கும் முன் என் எழுத்துக்களை பார்த்தால் அது தெரியும்!!

//அன்பு அவர்கள் கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்லிவிட்டேன் அவர் தான் "நல்ல கேள்வி நான் விரைவில் பதிலளிக்கிறேன்" என்று சொல்லிவிட்டு அப்புறம் என்னுடன் விவாதிக்க தயாராய் இல்லை என்று சொல்லிவிட்டார். அதாவது நான் என்னுடைய கடைசி பதிவு என்று எழுதுவதற்கு முன்னமே அவர் விவாதிக்க தயாராய் இல்லை என்று சொல்லிவிட்டார். ஆனால் தங்களுடைய கண்ணுக்கு ஏனோ அது தெரியவில்லை //

இப்படு மழுப்பினால் எப்படி!! நானும் தானே அந்த தளத்தில் விவாதித்துக்கொண்டு இருந்தேன்!! தளத்தில் இதுவே என் கடைசி பதிவு என்று அன்பு ஒருவரை மாத்திரம் வைத்து சொன்னேன் என்பது தவறாகும்!! அவர் ஒன்றும் உங்களை நிறுத்த வேண்டும் என்று சொல்லவில்லையே!! அவர் விளகிக்கொள்கிறார் என்று தானே சொன்னார்!! இதுவே கடைசி பதிவு என்று சொல்லிய உங்கள் வார்த்தைகளை தான் சொன்னேன்!! அன்பு உங்களை பதிவுகளை நிறுத்தும்படி சொல்லவில்லையே!! அப்படி என்றால் உங்கள் சுதந்தரத்தில் தானே நீங்கள் வெளியேறினீர்கள்!! அதற்கு நான் பொய்யை பரப்பி கொண்டு இருப்பதாக சொன்னது தவறு தானே!!

//ஆனால் வார்த்தையாகிய இயேசு கிறிஸ்துதான் உண்டான எல்லாவற்றையும் (வானத்தையும் , பூமியையும்) உண்டாக்கினார் என்று இருக்கிறதே? அப்போ யேகோவா தேவன் எப்படி நான் ஒருவராய் வானங்களை விரித்து, நானே பூமியைப் பரப்பினவர் என்று சொல்ல முடியும்?//

நிதானமாக பதில் தருகிறேன், நீங்களும் பொறுமையுடன் வாசியுங்கள்!! எழுத்து பிழை இருக்கலாம், ஆனால் கருத்து பிழையிருக்காது!! நமக்கு ஏற்கனவே இருக்கும் சிந்தையுடன் நாம் எந்த காரியத்தை அனுகினாலும் நாம அதே கண்ணோட்டத்தில் தான் பார்ப்போம்!! என்னை பல சபைகள் சுற்றியவன் என்று கொல்வின் கூட கேட்டார், அதற்கு காரணம் இருக்கிறது!! நானும் ஊழியம் செய்திருக்கிறேன், ஆனால் வருமானத்திற்காகவோ, பெயருக்காகவோ, செல்வ செழிப்பிற்காகவோ கிடையாது, என் சொந்த பணத்தை செலவு செய்து, கோவையிலிருந்து, சென்னை, நாகர்கோவில், திருவனன்ந்தபுரம், திருச்சி போன்ற நகரங்களுக்கு ஒரு பைசா கூட வாங்காமல் ஓடியது உண்டு!! ஒவ்வொரு சபையிலும், வேதத்தை எப்படி எல்லாம் புரிட்டினார்கள் என்பதை அறிந்து தான் வெளியேறினேன்!! நீங்களோ, கொல்வினோ, சில்சாமோ, சொல்லும் இந்த திரித்துவம், திரியேகத்துவம், போன்ற எல்லாவற்றையும் இப்போ நீங்கள் சொல்லும் விளக்கங்களை காட்டிலும், தெளிவாக அருமையாக போதித்து, எத்தனையோ ஜனங்களின் கேள்விகளுக்கு உங்களை விட அருமையாக விளக்கம் தந்திருக்கிறேன்!! அது எல்லாம் இப்பொழுது நினைத்தாலும், என் தேவன் அப்படி பட்ட ஒரு உளையான சேற்றிலிருந்து என்னை தூக்கி எடுத்திருக்கிறார் என்பதை நினைத்து ஆனந்தம் கொள்கிறேன்!! என்ன எதிராளிகளும், திட்டி தீர்ப்பவர்களும் தான் இதினால் பெருகினார்கலே தவிர, வேறு ஒன்றும் இல்லை!! ஆனால் எனக்கு மனிதர்கள் தேவையில்லை, வேதமும் அதில் உள்ள தேவனின் வார்த்தைகளுமே முக்கியம்!! மனிதர்கள் எழுதிய பாடல்களில் "இயேசுவே உம்மை ஆராதிரிக்கிறேன்" போன்ற பாடல்களை நானும் ஆசை தீர பாடியிருக்கிறேன்!! ஆனால் வேதத்தை வாசித்த பிறகு அதன் வெளிச்சத்தில் நான் செய்தததில் பெரும்பாலுமானது தவறே என்று உணர்ந்தேன்!! சத்தியத்தை வாஞ்சையாக தேடியதால், என் தேவன் எனக்கு சகாயம் செய்து அவரின் அன்பை வெளிப்படுத்தினார்!! நான் யெகோவா சாட்சிகளிடமும் பேசி விவாதம் செய்வேன், ஏனென்றால் நான் யெகோவா சாட்சி கிடையாது!! நான் வேத மாணவர்களிடமும் விவாதிப்பேன், ஏனென்றால் நான் வேத மாணவனும் கிடையாது!! நான் இல்லாததை நீங்கள் சொன்னதால் எனக்கு கோபிக்கும் உரிமையில் நான் கோபித்திருக்கிறேன்!! ஏனென்றால் யெகோவா சாட்சிகள் என்கிற ஒரு துருபதேச கூட்டத்தார் இருக்கிறார்கள் என்பது மாத்திரமே உங்களுக்கு தெரியும், ஆனால் அவர்களை குறித்து உங்களுக்கு அரசல் புரசலாக தான் தெரியும், ஏனென்றால் நீங்கள் தான் அவர்களை உங்கள் வீட்டில் சேர்த்துக்கொள்ள மாடீர்களே!!

எனக்கு தெரியும் அவர்களை குறித்தும் அவர்களின் போதனைகளை குறித்தும்!! நீங்கள் விக்கிரக வழிப்பாட்டை தவிர, மற்ற எல்லாவற்றிலும் கத்தோலிக்க விசுவாசத்தில் தான் இருக்கிறிர்கள், அதற்காக உங்களை கத்தோலிக்கன் என்று சொல்ல முடியுமா!! அப்படி தான் நானும், அப்படி தான் எல்லா சபைகளும்!! ஒரு சபையிலும் அப்போஸ்தலர்கள் போதித்ததை பூர்ணமாக போதிப்பது கிடையாது!! பவுல் எழுதுகிறார்,

அப்போஸ்தலர் 20:20 பிரயோஜனமானவைகைளில் ஒன்றையும் நான் உங்களுக்கு மறைத்துவைக்காமல், வெளியரங்கமாக வீடுகள்தோறும் உங்களுக்கு பிரசங்கித்து உபதேசம்பண்ணி,

அப்போஸ்தலர் 20:26 தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்து வைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தபடியினாலே,

இப்படி தேவனின் ஒரு ஆலோசனையையும் மறைக்காமல், இன்னும் இரகசியமாக இருந்த பல விஷயங்களை அவர் வெளிப்படுத்தியும் இருக்கிறார், இப்படி பட்ட பவுல் "திரித்துவம்", "திரியேகத்துவம்" போன்றவற்றை ஒரு முறையாவது, இது ஒரு இரகசியம், அல்லது தேவன் திரித்துவமாக இருக்கிறர், அவருக்குள் மூன்று ஆளத்துவங்கள் (Personalities) இருக்கிறது என்பதை சொல்லவில்லையே!! அவர் ஒன்றையும் மறைக்காமல் வார்த்தைக்கு வார்த்தை, பிதாவாகிய தேவன், குமாரனான கிறிஸ்து இயேசு என்கிற இருவரை குறித்து மாத்திரமே தானே எழுதியிருக்கிறார்!! அப்படி என்றால் கோடா கோடி கிறிஸ்தவர்கள் இன்று நம்பிக்கை வைத்திருக்கும் திரித்துவமோ திரியேகத்துவமோ பவுல் போன்ற அப்போஸ்தலர்கள் சொல்லாமல், மாறாக இப்படி சொல்லியிருக்கிறாரே,

அப். 20:29. நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். 30. உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன்.

அப்படி என்றால் பவுல் சொல்லாத ஒரு திரித்துவம், திரியேகத்துவம், திரியேக தேவன் என்பதெல்லாம், பவுல் போன பின்பு (மரித்த பின்பாக கூட இருக்கலாம்) பவுல் போதித்தவர்களில் சிலரே, மாறுபாடானவைகளையும் மனித பாரம்பரியங்களையும் போதித்து சீஷர்களை (இவர்கள் தான் கிறிஸ்தவர்கள்) கூட விட்டு வைக்காமல் இழுத்துக்கொண்டார்களே!! நான் ஏதோ ரஸ்ஸல் என்பவரை பின்பற்றுகிறேன் என்று அடிக்கடி சொல்லும் சில்சாம், மற்றும் நீங்களும் தெரிந்துக்கொள்ளுங்கள், ரஸ்ஸல் ஒன்றும் பவுல் போனவுடனே வரவில்லையே, ரஸ்ஸல் கடந்த நூற்றாண்டில் தான் வந்தார், அப்படியிருக்க பவுல் நிச்சயமாக ரஸ்ஸலை சொல்லியிருக்க வாய்ப்பில்லை!! ஆனால் பவுல் சென்ற பிறகு தான் கொஞ்ச காலத்திற்குள் கத்தோலிக்க சபை உலகெங்கும் சென்றது!! வேதத்தை மறைத்து மனித போதனைகளை போதித்தது!! அந்த காலத்தை இருண்ட காலம் () என்பார்கள்!! இந்த வேதம் இல்லாமல் எதை அவர்கள் போதித்திருப்பார்கள் என்பதற்கு இன்று கோடா கோடி கிறிஸ்தவர்கள் தான் சாட்சி!! சில்சாம் கூட ஒரு முறை வேதத்தில் நேரடியாக சொல்லாததை ஏற்றுக்கொள்ள கூடாது என்றும், நேரடியாக சொன்னதை விட்டு விடக்கூடாது என்று "நேரடியானதை" குறித்து எழுதியிருந்தார்!! இப்படி பட்ட ஒரு கிறிஸ்தவ பாரம்பரியத்தில் தான் நீங்களும் இருக்கிறீர்கள்!! நான் வெளியேறிவிட்டேன்!!

சரி நீங்கள் கேட்ட அந்த வசனத்திற்கு இதோ விளக்கம்!!

//ஆனால் வார்த்தையாகிய இயேசு கிறிஸ்துதான் உண்டான எல்லாவற்றையும் (வானத்தையும் , பூமியையும்) உண்டாக்கினார் என்று இருக்கிறதே? அப்போ யேகோவா தேவன் எப்படி நான் ஒருவராய் வானங்களை விரித்து, நானே பூமியைப் பரப்பினவர் என்று சொல்ல முடியும்?//

நீங்கள் மீண்டும் 1 கொரி 8:6ஐ நிதானமாக வாசியுங்கள்

1 கொரி 8:6. பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.

அந்த ஒரே தேவனாலே சகலமும் உண்டாயிருக்கிறது, ஏனென்றால் அவர் தான் எல்லாவற்றையும் முனறிந்து தன் சிந்தையில் ஒரு சிறாந்த பொறியாளர் வரைப்படம் (Blueprint) போட்டு வைத்திருப்பது போல் வைத்து அனைத்தையும் செய்தார்!! ஆகவே தான் அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது!! ஒரு பொறியாளர் வரைப்படம் போட்டு மேற்பார்வை மாத்திரமே செய்வார், அது போல் தேவன் எல்லாவற்றையும் தன் பிரமாண்ட அன்பின் திட்டத்தை, சித்தத்தை, தன் குமாரன் மூலமாக செயல்ப்படுத்தினார், ஆகவே தான் கிறிஸ்துவின் மூலமாக சகலமும் உண்டாயிருக்கிறது!! தேவனின் அனைத்து திட்டங்களையும் தேவனின் சித்தத்தின்படியே செய்து முடித்தார், மனிதகுலத்தின் இரட்சிப்பு உட்பட!! ஆகவே தான் "நான் ஒருவராய் வானங்களை விரித்தேன் என்றும் நான் ஒருவராய் பூமியை பரப்பினேன்" என்கிறவர் யெகோவா தேவன், அதை செய்து முடித்தவர், அவரின் குமாரனான கிறிஸ்து இயேசுவே!! தேவனாலே சகலமும் உண்டாயிற்று, (நான் ஒருவராய் வானங்களை விரித்தேன், பூமியை பரப்பினேன், அதாவது அனைத்தையும் குறித்தான திட்டம், சித்தம் எல்லாம் தேவனாலே), கிறிஸ்துவின் மூலம் சகலமும் உண்டாயிற்று (தேவ சித்தத்தையும் திட்டத்தையும் நிறைவேற்றினவர் கிறிஸ்து இயேசு) இது தான் வித்தியாசம், இதை தான் நான் பிதா என்றும் குமாரன் என்றும் வெவ்வேறானவர்கள் என்று சொல்லும் காரணம்!!

இப்படி தேவனின் சித்தத்தையும் திட்டத்தையும் கிறிஸ்து கீழ்ப்படிதலான ஒரு குமாரனாக இருந்து செய்தார் என்று எனக்கு வேதம் கற்றுதந்தது, அந்த குமாரனின் சாயலில் உருவாகவே நான் பிரியப்படுகிறேன், வாஞ்சிக்கிறேன்!! இதையே தான் வேதமும் சொல்லுகிறது!! ஆனால் இந்த சத்தியத்தை இப்பொழுது அனைவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், மாறாக் ராஜியத்தில் ஏற்றுக்கொள்வார்கள்!!

நீங்கள் சொல்லுவது போல், இப்பொழுது ஏற்றுக்கொள்ளுங்கள் இலாவிட்டால் '' என்று வேதம் சொல்லுவதில்லை, மாறாக இப்பொழுது ஏற்றுக்கொள்ளாதவர்கள் பிதா யாரென்று தெரிந்துக்கொள்ளும் நாள் வருகிறது, அதை தான் வேதம் இப்படியாக சொல்லியிருக்கிறது:

ஆபகூக் 2:14 சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தருடைய மகிமையை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.

ஏசாயா 11:9 என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.

உங்களை போன்று இப்பொழுது இல்லாவிட்டால் எப்பவுமே கிடையாது என்பது தேவனின் சித்தமும் திட்டமும் கிடையாது, மாறாக அவரின் அன்பினால் அனைவரும் தேவனை அறிகிற அறிவிற்கு வருவார்கள், அவர் நியமித்த நாளில், அவர் இராஜியத்தில், ஏனென்றால் இப்பொழுது இருப்பதோ, பொல்லாத பிரபஞ்சம்!!

மத். 24:11. அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள்.12. அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம்.

இந்த அநேகர் கூட்டத்தில் யார் இருக்கிறார்கள்!! நீங்களே சொல்லுகிறீர்கள், கோடா கோடி பேர் (நீங்கள் என்றவுடன் நான் எப்போ சொன்னேன் என்று வாதிடவேண்டாம், உங்களை போல் இருக்கும் நண்பர் ஜோஸப்ஸ்நேகா அவர்கள் எழுதியது) இந்த விசுவாசத்தில் இருக்கிறாகள், ஆனால் நான் சொல்லும் இந்த ஒரு சத்தியம் (உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம்) எத்துனை பேர் சொல்லுகிறார்கள், மிகவும் சொற்பமானவர்களே!! ஆகா இயேசு கிறிஸ்து சொன்னது போல இந்த 2000 வருடங்களில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் (தீர்க்கதரிசிகள் என்றவுடன், குறிசொல்லுவர்கள் அல்ல, மாறாக தேவன் இதை சொன்னார் அதை சொன்னார் என்று சொன்னவர்களின் கூட்டத்தை சொல்லுகிறேன்) எழும்பி மனித போதனைகளால் அநேகரை வஞ்சித்திருக்கிறார்கள், அக்கிரமம் என்றால், ஒரு கிரமம் இல்லாமல் இருப்பது, அதாவது யாரை ஆராதிக்க வேண்டும் போன்றவை தான், இந்த அக்கிரமம் அதிகமாகிய்ருப்பதால் அநேகருடைய அன்பும் தணிந்து போயிருப்பது நாம் காணமுடிகிறது (சில்சாம் என்னை திட்ட பயன்படுத்திய வார்த்தைகள் உட்பட‌)!! இந்த அக்கிரமம் இன்னும் தொடரும், உங்களுக்கு இன்னும் கூட்டம் சேரும், மனுஷக்குமாரன் வரும் நாளில் விசுவாசத்தை காண்பேனோ என்று சொன்னது நடந்தேறவேண்டுமே!!

இன்னொன்று சொல்லுகிறேன், ஒரு சிலருக்கே இன்று தேவன் தன் குமாரனின் சாயலில் வளரும் கிருபையை தருகிறார்!! மற்றபடி அனைவரையும் இரட்சித்த பிறகே சத்தியத்தை அறியும் வாய்ப்பை தேவன் வைத்திருக்கிறார்!! ஆனால் இன்று போதிக்கப்படுவதே சத்தியத்தை ஏற்றுக்கொண்ட பிறகே இரட்சிப்பு என்பதே!! இதுவும் வசனத்திற்கு முறனான போதனை தானே!!

1 தீமோ 2:3. நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது. 4. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.

தொடரும்..................

பி.கு. இந்த பதிவு இந்த தலைப்பின் சரியாக இல்லை தான், ஆனாலும் தொடர்ச்சி விட்டு போகாமல் இருப்பதற்காக தான் இதில் பதிவு செய்திருக்கிறேன்!!


__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

அருமையான விளக்கங்கள் சகோதரரே! சத்தியத்தை அறியும் வாஞ்சை இவர்களுக்கு இருந்தால், நிச்சயம் பிதாவானவர் இவர்களின் கண்களைத் திறப்பார்.

1 கொரி. 8:6-ல் “பிதாவாகிய ஒரே தேவன்” என பவுல் தெளிவாகச் சொன்னதை எடுத்துச் சொன்ன பின்னரும், “ஒரே தேவன் பிதாதான்” என நிரூபிக்கவில்லை எனச் சொல்வதிலிருந்து இவர்களின் கண்கள் எவ்வளவாய் மறைக்கப்பட்டுள்ளன என்பதை நான் புரிந்துகொண்டேன்.

பிதாவாகிய ஒரே தேவன் எனும் சொற்றொடருக்கும் ஒரே தேவன் பிதாதான் எனும் சொற்றொடருக்கும் என்ன வித்தியாசம் என்பதுதான் எனக்குப் புரியவில்லை.

மனிதனின் குமாரன் பரிபூரணமாக மனிதத்துவம் உள்ள மற்றொரு மனிதனாகத்தான் இருப்பான். அதுபோல் தேவனுடைய குமாரனாகிய இயேசுவும் பரிபூரணமாக தேவத்துவம் உள்ள மற்றொரு தேவனாகத்தான் இருப்பார். இதில் ஆச்சரியம் எதுவுமில்லை. தேவத்துவம் பரிபூரணமாக இருப்பதாலோ, அவரும் “ஒரு தேவனாக” இருப்பதாலோ, அவரே “ஒரே தேவன் (Unique God)” ஆகிவிடமுடியுமா?

எப்படி ஆதாம் தேவனால் நேரடியாக சிருஷ்டிக்கப்பட்டு தனித்துவமுள்ள (Uniqueness) ஒரு மனிதார இருந்தாரோ, அதுபோலவே பிதாவாகிய தேவன் “இருக்கிறவராக இருந்து (self existense)” தனித்துவமுள்ள ”ஒரே தேவனாக” இருக்கிறார்.

பிதா மற்றும் குமாரன் எனும் 2 ஆள்த்தத்துவங்களுக்கு “ஒரே தேவன் (Unique God)” எனும் சொற்றொடர் பொருந்துமெனில், “ஒரே தேவன்” என்ற சொற்றொடரிலுள்ள Uniqueness எடுபட்டு, அது ஒரு அர்த்தமற்ற சொற்றொடராக ஆகிவிடும்.

//
நீங்கள் ஒரே தேவன் அது பிதா மட்டுமே என்று முடிவு செய்து விட்டு வசனத்தை வியாக்கினம் செய்கிறீர்கள்.//

சரி, “ஒரே தேவன்” என்பது பிதா மட்டுமல்ல குமாரனாகிய இயேசுவும் “ஒரே தேவன்” என்றே வைத்துக்கொள்வோமே! அத்தோடு, பிதாவும் குமாரனும் தனித்தனி ஆள்த்தத்துவமுள்ளவர்கள் என்றும் சொல்லிக் கொள்வோமே! இதனால் யாருக்கும் எந்தக் கஷ்டமும் இல்லை. ஆனால் என்ன, இக்கூற்றை ஒரு காமெடியைப் படிப்பதுபோல படிக்கவேண்டும், அவ்வளவே.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

மன்னிக்க வேண்டும், கடந்த பதிவின் இறுதியில் நான் பதித்த காமெடி, முழுமையான காமெடி அல்ல. இதோ முழுமையான காமெடி.

ஒரே தேவன்” என்பது பிதா மட்டுமல்ல குமாரனாகிய இயேசுவும் “ஒரே தேவன்தான்” பரிசுத்தஆவியும் ஒரே தேவன்தான்”. அத்தோடு, பிதா, குமாரன், பரிசுத்தஆவி என்பவர்கள், 3 தனித்தனி ஆள்த்தத்துவமுள்ள 3 நபர்களுமாவார்கள்.

இதை ஒரு காமெடியாக இரசிக்காமல், சீரியஸான கூற்றாகக் கருதவேண்டுமெனில்:

“பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு” எனப் பவுல் சொல்வதை மறந்துவிடவேண்டும்;

இயேசுவுக்கு அதிகாரத்தைக் கொடுத்தது பிதா, அவரிடமிருந்து அதிகாரத்தைப் பெற்றது இயேசு எனும் உண்மையை மறந்துவிட வேண்டும் (யோவான் 5:22);

மரித்த இயேசுவாகிய தேவனை, உயிரோடெழுப்பியது பிதாவாகிய தேவன் என்பதை மறந்துவிட வேண்டும் (அப். 4:10; 13:10; ரோமர் 4:24; 6:4; 8:11);

தேவனும் பிதாவுமாயிருப்பவரிடத்தில் கிறிஸ்து ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார் என்பதை மறந்துவிடவேண்டும் (1 கொரி. 15:24);

இப்படியாக நாம் மறக்கவேண்டிய விஷயங்களை இன்னும் பலவுண்டு.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//திரித்துவம் என்பது ஒரு "Essential Doctrin" கிடையாது அதாவது திரித்துவம் என்றால் என்ன என்று தெரியாதவன் பரலோகம் போகமாட்டன் என்று நான் சொல்லமாட்டேன் ஆனால் இயேசுவை தொழுதுகொள்ளதவன், திரித்துவத்தை மறுப்பவன்  நிச்சயமாக கிறிஸ்தவன் இல்லை அவன் பரலோகம் போகமாட்டான் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்! பவுல் எந்த இடத்தில் கிறிஸ்து தொழத்தக்கவர் அல்ல என்று சொல்லியிருகிறார்? நாம் விசுவாசிக்கிற எல்லாமே நேரடியாக வேதத்தில் சொல்லப்பட்டு இருக்கவில்லை, நிறைய "Doctrins" ஐ பல்வேறு வசனங்களை கொண்டு நாம் புரிந்து கொள்ளுகிறோம் ஆகையால் பொறுமையாக, நம்முடைய சொந்த விருப்பு, வெறுப்பை வேதத்தில் "Imposit" பண்ணாமல் வேதத்தில் உள்ளதை "Exposit" மாத்திரம் பண்ணினால் திரித்துவத்தை எளிதாய் விளங்கிக்கொள்ளலாம். நீங்கள் நம்பிக்கொண்டு இருக்கிறபடி இயேசு மிகாவேலாக (எபிரெயர் 1:5 அதற்க்கு விரோதமாய் இருந்தாலும்)  இருந்தால் அதையும் பவுல் திரித்துவத்தை விட எளிதாய் சொல்லியிருக்கலாமே?//

திரித்துவத்தை தேவத்துவத்தின் இரகசியம் என்று சொல்லி இப்ப அது ஒன்றும் அவசியமான கோட்பாடு கிடையாது என்று சொல்லுவது ஜகா வாங்குவது போல் இருக்கிறது!! அவசியமோ, அவசியமில்லாத கோட்பாடு, இது தானே உங்கள் விசுவாசம்!! கோட்பாடு அவசியம் இல்லை என்றால் அந்த விசுவாசம் மட்டும் என்ன அவசியமா? என்ன ஒரு தந்திரமான பதில்!! திரித்துவம் அவசியம் இல்லாத கோட்பாடாம்,, ஆனால் அது தான் உங்களை போன்றோரின் விசுவசத்தின் ஆதாரம், இந்த திரித்துவம் தெரியாதவன் எப்படி உங்கள் விசுவாசத்தில் இருக்க முடியும்!! அவன் பரலோகம் போவான் அல்லது போக மாட்டான் என்று நீங்கள் முடிவு செய்யும் அளவிற்கு இருக்கிறீர்கல் என்றால், பெரிய விஷயம் தான்!! இயேசுவை தொழுதுகொள்ளாதவன், திரித்துவத்தை மறுப்பவன் போன்றவைனால் தான் ஒருவன் பரலோகம் செல்ல முடியாது என்றால் பரலோகம் செல்ல இதைவிட ஒரு சுலபமான வழியிருப்பதாக தெரியவில்லை!!

கிறிஸ்தவர்கள் யார்?

அப்போஸ்தலர் 11:26 அவர்கள் ஒரு வருஷகாலமாய்ச் சபையோடே கூடியிருந்து, அநேக ஜனங்களுக்கு உபதேசம்பண்ணினார்கள். முதல்முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று.

வேதத்தில் இதை தவிர வேறு ஒரு வசனம் கிறிஸ்தவர்கள் யார் என்பதை நேரடியாகவோ மறைமுகமாவோ சுட்டி காட்டுவதில்லை!!

இயேசு கிறிஸ்து சொன்னது:

மத். 28:19. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, 20. நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.

இயேசு கிறிஸ்து அப்போஸ்தலர்களிடத்தில் சொன்னதும், அவர் கட்டலையிட்ட யாவையும் அவர்கள் (கேட்பவர்கள்) கைக்கொள்ளும்படி உபதேசம் பண்ணுங்கள்!! யார் அந்த அவர்கள் ? அவர்கள் தான் சகல ஜாதிகளிலும் இருக்கும் சீஷர்கள்!! இயேசு கிறிஸ்து அப்போஸ்தலர்களிடம் அனைவரையும் சீஷர்களாக தான் மாற்ற சொன்னது!! கிறிஸ்தவர்கள் என்பதும் மனிதர்கள் சீஷர்களுக்கு வைத்த பேர்!!

அடுத்து,

மத்தேயு 16:24 அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்

மாற்கு 8:34 பின்பு, அவர் ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் தம்மிடத்தில் அழைத்து: ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்.

லூக்கா 14:27 தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.

இயேசு கிறிஸ்துவின் பின்னால் சிலுவையை சுமந்து செல்பவனே சீஷனாக இருக்கிறான்!! அதாவது சீஷர்கள் தான் கிறிஸ்தவர்கள் என்று இருப்பதால், தன் சிலுவயை சுமன்ந்துகொண்டு கிறிஸ்துவிற்கு பின்னால் செல்லாதவர்கள் சீஷர்களாக அதாவது கிறிஸ்தவர்களாக இருக்க முடியாது!!

சீஷன் என்பவன் தன் போதகன் அல்லது தன் குரு என்ன சொல்லி தருகிறாரோ, அதை மாதிரியாக வைத்து, அவர் செய்வதை பின்பற்றுபவனே!! அப்படி என்றால், மனிதர்கள் தரும் மகிமையை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று சொல்லுகிறவர், எல்லா வற்றிலும் பிதாவை கணப்படுத்துகிறவர், பிதாவிடத்தில் கேட்டு பெற்றுக்கொள்பவர், பிதாவையே சார்ந்து இருப்பவர், இப்படி பட்டவரை பின் பற்றுபவர்களும் கிறிஸ்து செய்தவற்றை தானே செய்ய முடியும்!! இப்படி சீஷர்களாக இல்லாதவர்கள் எப்படி கிறிஸ்தவர்களாக இருக்க முடியும்? அல்லது நீங்கள் சொல்லுவது போல் கிறிஸ்துவை தொழுதுக்கொள்ளாதவன், திரித்துவத்தை மறுப்பவன் பரலோகம் செல்ல முடியாது என்று உறுதியாக சொல்லுன் அளவிற்கு உங்கள் உணர்சிகளே காரணமன்றி, வேத வசனம் அல்ல!! கிறிஸ்துவை தொழுபவன் அல்ல மாறாக கிற்ஸ்துவின் சீஷனாக கிறிஸ்து செய்தவைகளை பின்பற்றுபவனே சீஷன் அல்லது கிறிஸ்துவனாக இருந்து பரலோகம் போக முடியும் என்று நான் உறுதியாக சொல்ல முடியும்!!

மத்தேயு 7:21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.22 அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.

இதற்கு மேல் நேரடியான வேறு என்ன வசனம் உங்களுக்கு வேண்டும் நண்பர் ஜான் அவர்களே!!  கிறிஸ்து சொல்லுகிறார் பரலோகத்திலிருக்கிற பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பான் என்று!! நீங்கள் சொல்லுவது போல் கிறிஸ்துவை கர்த்தாவே கர்த்தாவே என்று தொழுதுக்கொள்ளுபவன் பிரவேசிப்பதில்லை என்று அவர் உறுதியாக சொல்லியிருக்கிறார்!! நீங்கள் சொல்லும்படி கிறிஸ்துவை தொழுதுக்கொள்ளாதவன் பரலோகத்திற்கு உறுதியாக போக மாட்டான் என்பது கிற்ஸ்து சொன்னதற்கு நேர்மாறாக இருக்கிறதே!! இயேசு கிறிஸ்து சொன்னதை பின்பற்றுவதா, உங்களின் உபதேசத்தை பின்பற்றுவதா? 

கிறிஸ்து சொல்லுகிறபடி பிதாவை மகிமைப்படுத்தி, அவரின் சித்தம் செய்து நான் சீஷனாக இருந்துக்கொள்கிறேன்!! கிறிஸ்து சொல்லுவதை பின்பற்றுபவனே சீஷன்!!

//நாம் விசுவாசிக்கிற எல்லாமே நேரடியாக வேதத்தில் சொல்லப்பட்டு இருக்கவில்லை, நிறைய "Doctrins" ஐ பல்வேறு வசனங்களை கொண்டு நாம் புரிந்து கொள்ளுகிறோம் ஆகையால் பொறுமையாக, நம்முடைய சொந்த விருப்பு, வெறுப்பை வேதத்தில் "Imposit" பண்ணாமல் வேதத்தில் உள்ளதை "Exposit" மாத்திரம் பண்ணினால் திரித்துவத்தை எளிதாய் விளங்கிக்கொள்ளலாம்.//

ஆனால் நான் விசுவாசிக்கிற எல்லாமே நேரடியாக வேதத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது!! வேதத்தில் இல்லாததை தான் நான் ஒரு போதும் தினிக்கவில்லை, இருப்பதையே விரிவாக சொல்லி சொல்லுகிறேன்!! ஆனால் வேதத்தில் இல்லாத உங்களின் சொந்த போதனையான "இயேசுவை தொழுதுக்கொள்பவனே பரலோகத்திற்கு போக முடியும்" போன்றவைகள் அத்துமீறலனான தினிப்பு!! பவுல் எல்லா தேவ ஆலோசனைகளை கொடுத்துவிட்டார், திரித்துவத்தை சொல்லவில்லை என்றால் என்ன அர்த்தம், அப்படி ஒரு விஷயம் இல்லை என்று தானே அர்த்தம், அதை ஏன் தினிக்கவும் விளக்கவும் இத்துனை பிரயாசம் எடுத்துக்கொள்கிறீர்கள்!! யார் வெறுப்பை தினித்து (கிறிஸ்துவை தொழுதுக்கொள்ளதவனும், திரித்துவத்தை மறுப்பவனும் பரலோகம் செல்ல முடியாது என்கிற உறுதி) வருகிறார்கள், வேதத்தில் இல்லாததை (திரித்துவம் தான் நேரடியாகவோ, மறைமுகவாகவோ சொல்லப்படவில்லையே) கஷ்டப்பட்டு விளக்க முயற்சிக்கிறீர்கள்!! இல்லாத ஒரு திரித்துவத்தை ஏன் எளிதாயோ கஷ்ட்டப்பட்டோ விளங்கிக்கொள்ள வேண்டும்?

தொடரும்....................


__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//நீங்கள் நம்பிக்கொண்டு இருக்கிறபடி இயேசு மிகாவேலாக (எபிரெயர் 1:5 அதற்க்கு விரோதமாய் இருந்தாலும்)  இருந்தால் அதையும் பவுல் திரித்துவத்தை விட எளிதாய் சொல்லியிருக்கலாமே?//

இயேசு கிறிஸ்து மிகாவேலாக இருந்தார் என்பது ஒரு கோட்பாடு கிடையாது (Neither an essential nor a non-essential doctrine) அது விசுவாசமும் கிடையாது!! இயேசு கிறிஸ்து மிகாவேலாக இருந்தார் என்று விசுவசிப்பவனே பரலோகம் செல்வான் என்பதை நான் ஒன்றும் போதனையாக சொல்லுவதில்லை!! இயேசுவாக மாம்சத்தில் வரும் மும் கிறிஸ்துவின் நிலை என்கிறதை விளக்க தான் இந்த தலைப்பே தவிர, இதை விசுவாசம் கொண்டு இதினால் தேவனுக்கு பிரியமாக இருக்கலாம் என்பதை எல்லாம் நான் சொல்லவில்லை!! ஆனால் திரித்துவம் என்பது இன்றைய கிறிஸ்தவத்தின் அடிப்படை கோட்பாடாக இருக்கிறது, ஆனால் தாங்கள் சொல்லுவதை பார்த்தால் அது ஒன்றும் அவசியமான கோட்பாடு இல்லை என்பது போல் இருக்கிறது!! திரித்துவம் கோட்பாடு அவசியம் இல்லை என்றால், கிறிஸ்து மட்டும் பிதாவின் நிலை என்னவென்று வேதம் தெளிவாக விளக்குவதை நான் அறிவேன்!! இதுவும் எதிர்கேள்விக் கேட்கவேண்டும் என்கிற ஒரே என்னத்தில் கேட்கப்பாட்ட ஒரு கேள்வி என்றே நான் கருதுகிறேன்!! உங்களையோ வேறு ஒருவரையோ கிறிஸ்து மிகாவேலாக இருந்தார் என்பதை ஏற்றுக்கொள்ள சொல்லவில்லையே, தினிக்கவும் இல்லையே, ஆனால் திரித்துவம் அவசியம் இல்லாத ஒரு கோட்பாடு, ஆனால் அந்த கோட்பாட்டை பின்பற்றாதவன் பரலோகம் செல்ல முடியாது என்று சொல்லுவது தான் குழப்பமாக இருக்கிறது!!


//The above picture is nice representation on who is Christian.  When i say "Trinity" is not an essential doctrin what i really meant was "A believer may not be knowing the definition of Trinity but they are saved as long as they didn't deny Trinity " //

இது போல் ஆயிரம் பேர் ஆயிரம் படங்கள் காண்பிக்கலாம், ஆனால் இந்த படங்களில் ஒன்றும் என் வேத வசனத்திற்கு ஈடாகாது, ஒரு வேளை இந்த படம் வேத வசனங்களை சுட்டி காண்பித்திருந்தால் கூட யோசிக்கலாம்!! வசனமே இல்லாத இது போன்ற ஒரு வெறுமையான படங்கள், ஏற்கனவே திரித்துவத்தில் ஊறி போனவர்களுக்கு தான் தேனாட்டும் இருக்கும், என்னை போல் வேதத்தை நம்புவோருக்கு இது ஒரு சாதாரன வரைப்படம்!!

இத்துனை வாக்குவாதங்களும் வந்ததே இந்த திரித்துவம் வேதத்தில் இருக்கிறத இல்லையா என்பதில் தான்!! திரித்துவம் என்கிற வார்த்தை வேதத்தில் இல்லை, உங்கள் உணர்வுகளை கொன்டு இல்லாத ஒன்றை சாதிக்க இப்படி யாரோ வரைந்த படங்கள போட்டு காண்பிக்கிறீர்கள்!! இரட்சிக்கப்படுவதற்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தை தவிர வேறு ஒரு நாமம் கொடுக்கபடவில்லை என்று வேதம் சொல்லுகிறது, ஆனால் உங்களின் ஆங்கிளப்பதிவு, திரித்துவத்தை அறியாவிட்டாலும், பரவாயில்லை அதை நம்புவோர் இரட்சிக்கப்பட்டு இருப்பார்களாம்!! என்ன ஒரு குதர்க்கமான வாதம் இது!! இன்று கிறிஸ்துவத்தின் அடிப்படையாக கருதுகிற திரித்துவத்தை தாங்கள் அவவியமில்லாத கோட்பாடு என்று சொல்லிவிட்ட கையோடு, அவசியம் இல்லை தான், ஆனால் விசுவாசித்தே ஆகவேண்டிய கோட்பாடு என்கிறீர்கள்!! தயவு செய்து நிலையான ஒரு நிலையைல் இருந்து யோசித்து பாருங்கள்!!

ஒன்றை அறியாமலையே அதை விசுவாசிக்க சொல்லுகிறீர்கள், அது என்னவென்று அதை புரியாமலேயே விசுவாசித்தால் கூட இரட்சிப்பு என்கிற புதுவகையான இன்னோரு மனித போதனையை துவக்கியிருக்கிறீர்களே!! இன்னோரு மதத்தில் புரியாமல் செய்வதை தூஷித்து விட்டு உங்கள் மதத்திற்கு மாத்திரம் புரியாத ஒன்றை விசுவாசிக்க சொல்லுவது அபத்தமில்லையா!!

When you say Trinity is a non-essential Doctrine, you personally can mean to any extent!! But to a common man a non-essential means what it says!! A believer becomes a believer only if he knows something, otherwise he cannot be a believer!! And for your kind information, there is nothing like if you deny trinity you are not saved, and you are saved just because you may not know trinity but still you accept it and don't deny it!! Funny, eh!!

தொடரும்....................


__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//இந்த பதிலை (உதாரணம் உள்ளிட) நான் எதிர்பார்த்தேன். அப்படி என்றால் கிறிஸ்து செய்த எல்லாவற்றையும் யேகோவா "ஒருவரே" செய்தார் என்று சொல்ல முடியுமா?//

உதாரணம் உள்ளிட்ட பதிலை நீங்கள் ஏற்கனவே கேட்டிருப்பதால் உங்களுக்கு நிச்சயமாக இதை எப்படி எதிர்க்கவேண்டும் என்று தெரிந்திர்க்கலாமே தவிர அதை புரிந்துக்கொள்ள முடியவில்லை!! கிறிஸ்து செய்த அனைத்தையும் யெகோவா தேவன் "செய்தார்" என்று சொல்லவில்லை, மாறாக "சொல்லிதந்தார்" என்று எடுத்துக்கொள்ளலாம்!! இதையுமே நான் வசனத்தை சார்ந்தே தான் சொல்லுவேன், யாரோ வரைந்த படத்தை வைத்து அல்ல!! தேவன் வரைந்த ஒரு வரைப்படத்தை காட்டிலும் மனிதர்கள் வரைப்படத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களே!!

யோவான் 5:30 நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.

யோவான் 7:17 அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான்.

யோவான் 7:28 அப்பொழுது இயேசு தேவாலயத்தில் உபதேசிக்கையில் சத்தமிட்டு: நீங்கள் என்னை அறிவீர்கள், நான் எங்கேயிருந்து வந்தேனென்றும் அறிவீர்கள்; நான் என்சுயமாய் வரவில்லை, என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர். அவரை நீங்கள் அறியாதிருக்கிறீர்கள்.
இயேசு சொல்லுகிற இந்த தேவனை நிச்சயமாக நீங்களும் அறியாதிருக்றீர்கள்!!

யோவான் 8:28 ஆதலால் இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனை உயர்த்தின பின்பு, நானே அவரென்றும், நான் என்சுயமாய் ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் என்றும் அறிவீர்கள்.

யோவான் 8:42 இயேசு அவர்களை நோக்கி: தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார்.

யோவான் 12:49 நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்.

யோவான் 14:10 நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்.

இப்படி சுயமாக செய்கிறது, பேசுகிறது, வந்தது என்று அவரே சுயமாய எதையும் செய்யாமல் பிதா அவரிடம் என்ன செய்யவேண்டும், என்ன பேச வேண்டும் எல்லாவற்றுக்கும் மேலாக பிதாவிடத்தில இருந்து வந்தேன் என்பது மேலே உள்ள வசனங்கள் சொல்லுகிறது!! நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் கிடைத்திருக்கும் என்றே நினைக்கிறேன்!!

//"வானங்களை விரித்தேன், பூமியை பரப்பினேன்" என்பது Part of Action NOT Part of Plan. ஒரு கட்டடத்தை கொத்தனார் வைத்து கட்டுகிற பொறியாளார் ஒருபோதும் "நான் ஒருவனாய் செங்கலை வைத்தேன்" என்று சொல்ல மாட்டார்//

Part of Action NOT Part of Plan  என்பதை சொல்லுவதற்கு திட்டமான வசனம் உங்களிடத்தில் இல்லை!! ஆனால் இயேசு கிறிஸ்து செய்த எல்லாவற்றையும் பிதா சொல்லிய பிரகாரமே, அவர் செய்தா, பேசினார் என்று இருக்கும் போது நீங்கள் முன்னமே யூகித்திருக்கும் " Part of Action NOT Part of Plan" என்பது தவறாகிவிடுகிறது!!

// நீங்கள் ஒரே தேவன் அது பிதா மட்டுமே என்று முடிவு செய்து விட்டு வசனத்தை வியாக்கினம் செய்கிறீர்கள்.அதாவது "Imposit" பண்ணுகிறீர்கள்.//

நாங்கள் வசனத்தின்படியே இதை சொல்லியிருக்கிறோம், வசனம் இல்லாமல் "Imposit" பண்ணுகிற உங்களை விடவா!! உங்களுக்கு ஒரே தேவன் பிதா என்பதில் நம்பிக்கை இல்லை, ஏனென்றால் வேதத்தில் இல்லாத விசுவசம் உங்களிடத்தில் இருக்கிறது!!

1 கொரி 8:6. பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு,

இதை வாசித்த பிறகும், நாங்கள் தான் ஏதோ விசுவாசத்தை முடிவு செய்து விட்டு வசனத்தை வியாக்கியானம் செய்கிறோம் என்றும் "Imposit" பண்ணுகிறோம் என்பதில் சற்றும் நியாயம் இல்லை தான்!! ஒருவேலை நமக்கு என்று வேதம் சொல்லும் இந்த கூட்டத்தில் நீங்கள் இருந்தால் பிதா என்கிற ஒரே தேவனை அறிந்துக்கொள்ளும் பாக்கியம் இருக்கும்!! வசனம் தெளிவாக இருக்கும் போது, இதில் தனியாக "Imposit" பண்ணி வியாக்கியானம் செய்யும் அளவிற்கு ஒன்றும் இல்லையே!!

வசனம் தெளிவாக இருக்கிறது, வசனத்தில் திரித்துவம் இல்லை, வேதத்தில் திரித்துவம் இல்லை, உங்கள் வார்த்தைகளின்படி அது ஒன்றும் "Essential Doctrine" கிடையாது!! அவசியமில்லாத ஒரு கோட்பாட்டை "Imposit" பண்ண நீங்கள் முயற்சிப்பது சரியா, இல்லை பிதா தான் ஒரே தேவன் என்று வசனம் சொல்லுகிறதை நாங்கள் சொல்லுவது "Imposit" பண்ணிகிறோம் என்று நீங்கள் எங்களை குறித்து சொல்லுவது சரியா!!

//இதே வசனம் ஏன் கிறிஸ்துவும், யேகோவாவும் ஒரே தேவனாக (In essense) இருப்பதற்க்கு உள்ள ஆதாரம் என்று இருக்ககூடாது? //

தேவன் என்பதை "Essence"ல் நாம் தெரிந்துக்கொள்ளவில்லை!! தேவன் யார் என்று வேதம் தெளிவாக சொல்லுகிறது!! இருக்கலாம், இருக்ககூடாது, போன்ற வார்த்தைகளுக்கு என்ன இடம்!! பரம்பரியமான விசுவாசம் இருக்கும் போது உங்களின் வாதம் நியாயம் தான், ஆனால் வேதத்தின்படி பார்த்தோமென்றால் அது சரியல்ல!!

//அதோடு இன்னும் நீங்கள் "தேவத்துவம் தேவனில்லாத ஒருவரிடத்தில் பரிபூரனமாய் இருக்கமுடியுமா?" என்பதற்கு நேரான பதில் சொல்லவே இல்லை//

நான் தந்த பதிலை நீங்கள் வாசிக்காமல் இப்படி எழுதுவதில் நியாயம் இல்லை!! தேவன் கிறிஸ்துவை பரிபூரணமாக அபிஷேகித்தார், அவரை அளவில்லாமல் ஆவியால் நிறப்பினார் என்பது எல்லாம் நேரடியான பதிலாக உங்களுக்கு தெரியவில்லையா!! ஐய்யா ஜான் அவர்களே, வசனத்தை தான் நான் நேரடியான பதிலாக எடுத்துக்கொள்கிறேன், ஏதோ ஒரு வரைப்படத்தை கொடுத்து, இது தான் கிறிஸ்துவ விசுவாசம் என்று சொல்லுவதை விடவா அபத்தம் ஒன்று இருக்கிறது!!

//மரியாளை போல இயேசுவின் பாதத்தை கண்ணீரால் கழுவி முத்தம் செய்வீர்களா? என்பதற்கும் நேரடியாய் பதில் சொல்லவில்லை.//

இயேசு கிறிஸ்து இப்படி ஒரு கட்டளையை கொடுக்கவில்லை!! அப்போஸ்தலர்கள் இதை செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை!! மேலும் மரியாளை பின்பற்ற நான் அழைக்கப்படவில்லை, மாறாக, கிறிஸ்துவையும் அவர் அப்போஸ்தலர்கள் மூலமாக கிடைத்த வார்த்தைகளின்படி நடக்கவே அழைக்கப்பட்டிருக்கிறேன்!! வேதம் இப்படி இருக்க, இந்த 2000 வருடத்தின் கள்ள போதகர்களும், கள்ள தீர்க்கதரிசிகளும் கிறிஸ்துவத்தை வேதத்தின் படி அனுகாமல் பாரம்பரியமாகவும், உணர்வு பூர்வமாகவும் சொல்லியதின் விளைவே உங்களின் இந்த கேள்வி!! இருண்ட காலத்தில் வேதமே இல்லாமல் போதித்ததின் விளைவு தான் இப்படிப்பட்ட கேள்விக்கே இடம் கொடுக்கிறது!! வேதத்தில் கிறிஸ்து பிதாவை மகிமை படுத்துகிறார், ஆனால் நீங்களோ மரியாலை போல் கிறிஸ்துவின் பாதத்தை கண்ணீரால் கழுவி முத்தம் செய்வீர்களா போன்ற உணர்வை தூண்டும் கேள்விகளை வைத்திருக்கிறீர்கள்!! தயவு செய்து வசனத்தின்படியான கிறிஸ்தவத்திற்குள் இருங்கள் "உணர்வுப்பூர்வமான கிறித்தவம்" ஒன்றுக்கும் உதவாது!! பக்கங்கள் நிறப்பலாம், சிந்தனைகள் தராது!!

உங்கள் நண்பரின் கூற்றுப்படி யாரும் யாரையும் மண்ணை கவ்வ வைக்கும் நோக்கத்தில் எழுதவில்லை. வக்கிரபுத்தி அவருடன் இருக்கட்டும்!! புரிந்துக்கொண்டாலும் நல்லது, புரியாவிட்டாலும் காலம் வருகிறது, அனைவரும் புரிந்துக்கொள்ளும்படியான காலம் வருகிறாது, அப்பொழுது புரிந்துக்கொள்வீர்கள், நீங்கள் அடிக்கடி சொல்லுவது போல், "Now or Never" என்று இல்லமால், "If not now, there is a time to learn".

உங்களை மண்ணை கவ்வ வைத்து எங்களுக்கு ஒன்றும் கோப்பையோ பரிசோ கிடைக்க போவதில்லை, மண்ணை கவ்வ வைக்க நாங்கள் வேதத்தை கைய்யில் எடுக்கவில்லை, புரியவைக்கவே!! புரிந்தால் நல்லது, புரியாவிட்டாலும் நல்லதே!!

தொடரும்................................


__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//மரியாளை போல இயேசுவின் பாதத்தை கண்ணீரால் கழுவி முத்தம் செய்வீர்களா? என்ற கேள்விக்கு ஆம், இல்லை என்று ஏன் பதில் தர மறுக்கிறீர்கள்? நீங்கள் செய்கிற எல்லாம் வேதத்தில் அப்படி ஒரு கட்டளை இருக்கிறதா என்று பார்த்து தான் செய்வீர்களா?  மரியாள் அப்படி செய்தது தவறா? //

மரியாள் அப்படி செய்தது தவறா சரியா என்பது விவதத்திற்குறிய விஷயமே இல்லை!!

மரியாள் அப்படி செய்தது ஏன் என்பதை வசனம் விளக்கியிருக்கிறது, உங்களுக்கு சுட்டி காண்பித்திருக்கிறேன்!! உங்கள் கேள்விக்கு நான் இல்லை என்று விடை தரவேண்டும் என்றே எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்!! இயேசு கிறிஸ்து சொன்ன அனைத்தையும் பின் பற்ற முயற்சிக்கிறேன், ஆவிக்கும் மாம்சத்திற்கு என்றும் யுத்தம் இருக்க தான் செய்யும், என் கொபங்கள் அப்படி பட்ட ஒரு மாம்சத்தின் வெற்றியில் விளைவே!! சரி விஷயத்திற்கு வருவோம்,

மரியாளை போல் இயேசுவின் பாதத்தை கண்ணீரால் கழுவ இனி ஒரு சந்தர்ப்பம் இல்லை!! ஏனென்றால் இயேசு கிறிஸ்து இனி மாம்சத்தில் இல்லை!! மரியாள் செய்ததற்காக நான் செய்ய முடியாது!! ஆனால் வேதத்தில் அப்படி ஒரு கட்டளை அதாவது இயேசுவின் பாதத்தில் விழுந்து கண்ணீரால் கழுவி முத்தம் செய்தால் தான் இரட்சிப்பு என்று இருந்திருந்தால் நிச்சயமாகவே செய்வேன்!! இல்லாத ஒரு கட்டளையை சும்மா உணர்வுக்கு மதிப்பு கொடுத்து செய்யும் அளவிற்கு ஞானம் என்னிடத்தில் இல்லை!! நீங்கள் என்னிடத்திலிருந்து "இல்லை" என்கிற பதிலை எதிர்ப்பார்த்தீர்களானல் என் பதில் இல்லை என்பதே தான்!! ஏன் இல்லை என்பதற்கு காரணம், வேதத்தில் கட்டளை இல்லை என்பதே!! இதில் நான் மரியாளை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை!! மரியாள் செய்ததை பார்த்த அப்போஸ்தலர்களே அதை செய்யவில்லை, அதை செய்ய சொல்லி கட்டளையும் கொடுக்க வில்லை!!

மரியாள் செய்தது போல் நீங்கள் செய்வீர்களா என்பது ஒரு அர்த்தமற்ற கேள்வி, உணர்ச்சி வசப்பட்டு எழும்பும் கேள்வி!! அப்படி நீங்கள் செய்தால் தாராளமாக செய்யுங்கள்!! ஏனென்றால் எழுதப்படாத பலதை உங்களை போன்றோர் செய்து வருவதால், இதையும் சேர்த்து செய்வதில் எந்த ஆச்சரியமும் இருக்காது!! கத்தோலிக்க சபையில் இன்றும் இந்த சடங்கு வருடாவருடம் நடக்க தான் செய்கிறது!! பெரிய வெள்ளி அன்று அனைவரும் சென்று ஒரு விக்கிரகத்தின் பாதத்தை முத்தம் செய்து வருகிறார்கள்!! கத்தோலிக்கனாக இருந்த போது இதை நானும் செய்திருக்கிறேன்!! ஆனால் இது போன்ற அர்த்தமற்ற ஒரு சடங்கை இனியும் செய்ய மாட்டேன்!!

நான் கிறிஸ்துவை பின்பற்றி அவரின் சாயலில் வள‌ர தான் அழைக்கப்பட்டிருக்கிறேனே தவிர மரியாளை பின்பற்றுவதற்கு அல்ல என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்!! அப்போஸ்தலர்களை பின்பற்றலாம், ஏனென்றால் அவர்கள் இயேசு கிறிஸ்துவை பின்பற்றினார்கள்!! இதை தவிர வேதத்தில் மரியாள் போல் அநேக பாத்திரங்கள் இருக்கிறார்கள், அவர்கள் அனைவரையும் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை, அவர்கள் எத்துனை பெரிய காரியங்கள் செய்திருந்தாலும்!!

//கிறிஸ்தவத்தில் மொத்தம் எந்தனை தேவன்கள்(?) இருக்கிறார்கள்?//


நான் கேட்கவேண்டிய கேள்வியை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள்!! தேவன் என்றால் என்னவென்று முடிவு செய்துவிட்டு பிறகு இந்த கேள்வியை கேட்டால் நன்றாக இருக்கும்!! ஏற்கனவே வசனத்தை சுட்டி காண்பித்த பிறகும் இப்படிப்பட்ட ஒரு கேள்வி அபத்தமாக இருக்கிறது,

1 கொரி 8:5. வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேக கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும், 6. பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.7. ஆகிலும், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை.

தேவன் என்று வேதத்தில் பலரை சொல்லியிருந்தும் (வசனத்தின்படிய் வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் என்று உண்டே) நமக்கு (உங்களுக்கு தெரியவில்லை, ஆனால் எனக்கு) பிதா என்று நான் கூபிடும் ஒரே தேவன் மாத்திரமே உண்டு!! கிறிஸ்துவை கர்த்தர் என்றே சொல்லுகிற இந்த வசனத்தையும் நான் நம்புகிறேன்!! இந்த கர்த்தர் என்கிறா வார்த்தை பழைய ஏற்பாட்டில் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் அது யெகோவா தேவனுக்கு யெகோவா என்று போடுவதற்கு பதில் கர்த்தர் என்று போடப்பட்டிருக்கிறது!! ஆனால் புதிய ஏற்பாட்டில் கர்த்தர் என்பது யெகோவாவிற்கு போடாமல் காரணப்பெயராக கிறிஸ்துவிற்கு போடப்பட்டிருக்கிறது!! கர்த்தர் என்று அநேகர் இருந்தாலும், கிறிஸ்து ஒருவரே கர்த்தர் என்று வேதம் சொல்லுவதை நாம் நம்புகிறேன்!!

இப்படி ஒரே தேவன் பிதா என்றும் ஒரே கர்த்தர் கிறிஸ்து என்கிற அறிவு எல்லாரிடத்திலும் (கிறிஸ்தவமண்டலத்திற்கு) இல்லையே என்பதை நான் அல்ல அப்போஸ்தலனே எழுதியிருக்கிறார்!! நான் நம்புகிறேன், நீங்கள் எப்படி என்று தெரியவில்லை!!

//எல்லா கேள்விகளுக்கும் விரைவில் பதில் தருகிறேன்.//

உங்கள் பதில்களை எதிர்ப்பார்க்கிறேன்!! வேறு யாரும் அநாவசியமாக / அநாகரீகமாக‌ மூக்கை நுழைத்தாத வரையில் ஆரோக்கியமான விவாதமாக இருந்தால் நன்றாக இருக்கும்!!


__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//ரட்சிப்பின் பாக்கியமே இயேசுவின் பாதத்தில் அமர்வதுதான், உங்களுக்கு அதில் உடன்பாடு இல்லையென்றால் பரலோகம் நிச்சயம் போரடிக்கும்.  உங்களை பரிசேயன் என்று சொல்ல தேவன் எனக்கு கொடுத்த வெளிப்பட்டுக்காய் நன்றி செலுத்துகிறேன் ஏனென்றால் பரிசேயர்களும் இது போலவே கட்டளையின் படி தங்கள் பெற்றோர்களை நேசித்தார்கள், கொர்பான் கொடுத்தார்கள்  கிறிஸ்து அவர்களை மெச்சிக்கொள்ள வில்லை //

உங்களுக்கு வேதத்தில் சொல்லப்படாத காரியங்களில் உடன்பாடு இருந்து அதை வைத்து ஏதோ நீங்கள் பரலோகத்தின் நிச்சயத்தில் இருப்பதை காட்டிலும் அபத்தமானது ஒன்றும் இல்லை!! என்னை பரிசேயன் என்று சொல்லுவதற்கு முன் நீங்கள் எந்த அளவிற்கு இருக்கிறீர்கள் என்று பாருங்கள்!! பரிசேயருக்கு உண்டானது மாம்சத்தினின்படியான கட்டளை!! விபச்சாரம் செய்யாதிருப்பாயாக என்பது அவர்களுக்கு உண்டான கட்டளை ஆனால் ஒரு ஸ்திரியை இச்சயுடன் பார்த்தாலே விபச்சாரம் செய்தாகிவிட்டது என்பது கிறிஸ்துவின் கட்டளை!! அங்கேயும் கட்டளை தான், புதிய ஏற்பாட்டில் கிறிஸ்து சொன்னதும் கட்டளைகள் தான்!! நீங்கள் கட்டளை என்றால் என்னவென்று புரிந்திருக்கும் இலட்ச்சனம் இவ்வுளவு தான்!!

மத்தேயு 28:20. நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்;

இப்படி இயேசு கிறிஸ்து சொன்னதை தான் கைக்கொள்ளும்படி அழக்கப்பட்டிருக்கிறேன்!! உங்களுக்கு வேண்டும் என்றால் வேதத்திர்கு அப்பார்பட்டதை செய்து (இதை தான் கத்தோலிக்க விசுவாசம் என்பது) பரலோகம் சென்று விடுவேன் என்கிற வாஞ்சை இருக்கலாம், ஆனால் பரலோகம் செல்வது என்னமோ, கண்ணீர் சிந்துவதால் அல்ல, கிறிஸ்து உங்களுக்கு (அப்போஸ்தலர்கள் மூலமாக மட்டும்) கட்டளையிட்ட யாவையும் அவர்கள் (சீஷர்கள்; ஒட்டு மொத்த கிறிஸ்தவர்களும் கிடையாது) கைக்கொள்ளும்படி (பின்பற்றுதல்; ஆகவே தான் சீஷனாக இருக்க முடியும்) உபதேசம் (போதனை) பண்ணுங்கள்!! இத்துனை தெளிவாக கிறிஸ்துவே சொன்ன ஒரு வசனம் இருக்கும் போது, என்னை பரிசேயன் என்று சொல்ல சொல்லி எந்த "தேவன்" (இந்த பிரபஞ்சத்தின் தேவன் தானே) உங்களுக்கு வெளிப்பாடு தந்து நீங்கள் அதற்கு நன்றி செலுத்துகிறீர்கள் என்று எனக்கும் தெரியும்!! நீங்கள் தொடர்ந்து நன்றி செலுத்திக்கொண்டிருக்கும் அந்த தேவன் உங்களை வசனத்தை அல்ல பாரம்பரியத்தை பின் பற்றி சொல்லுகிறான், அதை மேன்மையாக நினைத்துக்கொண்டு மரியாள் செய்ததை நீங்களும் செய்ய முடியுமா என்று தேவை இல்லாத ஒரு உணர்வு பூர்வமான கேள்வியினால் நீங்கள் பரலோக சென்று விடுவதாக சொப்பனம் காண்கிறீர்களே!! என்ன நியாயம் திரு ஜான் அவர்களே!! கிறிஸ்து யாரை பரிசேயன் என்று சொல்லுகிறார் என்று வேதத்தின் வெளிச்சத்தில் வாசித்து பாருங்கள்!!

பரிசேயர்கள் வேதத்தை சுமந்துக்கொண்டும் அதில் உள்ளதை புரிந்துக்கொள்ளாத ஒரு கூட்டம், அப்படியே உங்கள் கூட்டத்தார் போல் இருந்தவர்கள் தான்!! உங்களை பரிசேயன் என்று கூட சொல்லமாட்டேன், ஏனென்றால் அதைவிட மட்டமானவர்கள் தான் நீங்கள் எல்லோரும்!! கையின் வேதத்தை வைத்துக்கொண்டு அதை விட்டு விட்டு மனிதர்களின் போதனையில் இருப்பவர்கள்!!

திரித்துவம் கொடுக்கவில்லை தான், ஆனாலும் நாங்கள் பின்பற்றும்வோம் என்பது என்ன வானத்திலிருந்து பிறந்த கட்டளையோ!! பரிசேய சந்ததியாரே, தேவனுக்கு பயந்திருங்கள்!! எதை மனித போதனை என்று சொல்லுவது என்பதை கூட அறியாத குட்டத்தில் இருக்கிறீர்களே!!

//பிதா என்பது personality, தேவன் என்பது "Essence" என்று பொருத்திப்பார்க்காவிட்டால் இந்த வசனம் சரியாக மட்ற வசனங்களோடு ஒத்துபோகாது .  ஒரே தேவன் பிதா என்றால், ஒரே கர்த்தர் கிறிஸ்து தான்,  "உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக" என்ற கட்டளையை நீங்கள் ஏன் மிறுகிறீர்கள்? ஒரே கர்த்தர் இயேசுவென்றால் அவரை ஏன் ஆராதிக்க மறுக்கிறீர்கள்?  கிழே உள்ளவசனத்தில் உள்ள ஒரே கர்த்தர் யார்? //

பிதா என்பது personality என்று தேவன் என்பது Essence என்று "பொருத்திப்பார்க்காவிட்டால்" இந்த வசனம் சரியாக மற்ற வசனங்களோடு ஒத்து போகாது என்று போதிக்கும் உங்களுக்கு இப்படி பொருத்தி பார்த்து தான் அர்த்தம் கொள்ள வேண்டும் என்று எந்த மனிதன சொல்லி தந்தான்!! மனித போதனைகளின் கிடங்காக இருந்துக்கொண்டு நான் மனித போதனையை பின்பற்றுகிறேன் என்று சொல்லுவதை காட்டிலும் அபத்தம் ஒன்றும் இல்லை!! நான் எந்த கட்டளையும் மீறவில்லை, வசனத்தை இயேசு கிறிஸ்து சொன்னபடி வாசியுங்கள்:

மாற் 12:29. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.

இயேசு தம்மை சேர்த்து தான் "நம்முடைய தேவனாகிய கர்த்தர்" என்று சொல்லுவதை உங்கள் கண்கள் வாசிக்க மறுக்கிறதா!! நிங்கள் கொடுத்திருக்கும் உபாகமத்தில் உள்ள வசனமும் சரி நான் கொடுத்திருக்கும் மாற்கு எழுதிய பகுதியிலும் சரி, தேவனாக இருக்கும் கர்த்தர் என்றே இருக்கிறதே தவிர,. வெறுமனே கர்த்தர் என்று இல்லை!! ஏனென்றால் கர்த்தர் என்று சொல்லுக்கு பல அர்த்தங்கள் இருக்கிறது, ஆனாலும் அவை எல்லாவற்றுக்கும் மேலாக தேவன் என்று இருக்கிற கர்த்தர் என்று தான் வாசிக்க வேண்டும்!! Personality என்றும் Essence என்றும் உங்கள் போதகர் செவிக்கு தினவாக சொல்லுவதை கேட்டு இங்கே அப்படியே கொட்டாதீர்கள், இதை எல்லாம் நானும் கேட்டு வந்தவன் தான், நீங்கள் சொல்லிய இவைகளை கிறிஸ்தவ மண்டலத்தில் சொல்லுங்கள், அவர்கள் ஆர்பரிப்பார்கள், ஏனென்றால் மனித போதனைக்கும் வேதத்திற்கு உள்ள வித்தியாசம் அவர்களுக்கு தெரியாது!!


__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//பரலோகத்திலிருக்கிற பிதாவின் சித்தம் அவருடைய குமாரனை அவரை கனம்பன்னுவது போல எல்லாரும் கணம் பண்ணுவதே!

*  குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம்பண்ணாதவனாயிருக்கிறான். (யோவான் 5:23)
*  அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர்தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார். (யோவான் 5:22)

நீங்கள் நிச்சயமாக குமாரனையும் கனம்பண்ணவில்லை அவருடைய பிதாவையும் கனம்பண்ணவில்லை.//

திரு ஜான் அவர்களே, கிறிஸ்துவை தேவ குமாரன் என்று வேதம் சொல்லுகிறபடி அவரை கணம் பண்ணுகிறேன்!! நாங்கள் கிறிஸ்துவின் மூலமாக பிதாவை கணம் பண்ணுகிறோம்!! பிதாவை குறித்து இத்துனை எழுதியும் இப்படி பட்ட ஒரு கேள்வி அறிவீனமான ஒரு கேள்வி என்றே நான் நினைக்கிறேன்!!

//இயேசு அவரே எழும்பினார் என்றும் சொல்லலாம். இவை எல்லாம் திரித்துவதிற்கு உள்ள அதாரங்கள். தேவனும் எழுப்பினார் என்று இருக்கிறது, இயேசுவும் நானே கொடுப்பேன் , திரும்ப எடுத்துகொள்வேன் என்று சொல்லுகிறார்

*  இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார். (யோவான் 2:19)
* ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு (யோவான் 10:18)//

அதாவது அப்போஸ்தலர்களுக்கு புரியாத ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்துக்கொண்டிருக்கிறீர்கள்!!

அட திரித்துவ போதகரே, இதிலும் திரித்துவத்தை பார்க்கிறீர்களே!! கிறிஸ்து பிதாவின் மேல் இருக்கும் விசுவாசத்தினால் தான் தன் உயிர்த்தெழுதலை யோவான் 2:19ல் சொல்லுகிறார்!! மேலும் அவரே பிதாவிடத்தில் "என் ஆவியை உம்மிடம் ஒப்படைக்கிறேன்" என்று சொன்னது யோவான் 10:18ஐ நிறைவேற்றியது!! மற்றபடி இத்துனை வசனங்கள் சொல்லுகிறபடி, தேவன் தாமே கிறிஸ்துவை எழுப்பினார் என்று வேதம் தெளிவாக சொல்லுகிறது!! நீங்கள் கிறிஸ்துவை அல்ல திரித்துவத்தை தேடுவதால் நான் கொடுத்த வசனங்களெல்லாம் உங்களுக்கு இருட்டாக தான் இருக்கும்!!

//நீங்கள் என்ன சொல்லுகிறீகள் என்பது உங்களுக்கே புரிகிறதா? வானத்தை விரிக்கும்போது இயேசுவும் இருந்தார். ஒன்று நான் கட்டளையிட குமாரன் வானத்தை விரித்தார் என்று சொல்லியிருக்கலாம் அல்லது நாங்கள் இருவராய் இருந்தோம் என்றும் சொல்லியிருக்கலாம். "ஒருவராய்" என்றால் ஒன்று பிதா பொய் சொல்லவேண்டும் அல்லது இருவரும் "Essence" இல் ஒன்றாய் இருப்பதால் தேவன் அவ்வாறு சொல்லியிருக்கவேண்டும்//

எல்லாம் (கிறிஸ்து உட்பட‌) தோன்றும் முன் பிதாவிடத்தில் திட்டங்கள் இருந்தது, அதை தான் நான் ஒருவரே வானங்களை விரித்தே, பூமியை பரப்பினேன் என்று சொல்லுகிறார்!! அவர் திட்டம் தீட்டியதை, அவர் சொல்லுவதை, அவர் காட்டியதை கிறிஸ்து செய்து வருகிறார் என்பதற்கு இத்துனை வசனம் கொடுத்தாலும் உங்களுக்கு அதன் வெளிச்சம் இல்லையே!!

//A poor illiterate man may not even understand what is trinity he may not even know there is some one called God the Father but he knows Jesus, Confessed his sins, Accpeted the alien righteousness which comes thru the cross then he is saved (without know there is a Father God exist). This is what i meant "non essential". I don't think you have that option though... //

Jesus came to show who the God is!! And you bunch of hypocrites preach that it is not necessary to know the Father!! Oh the height of Stupidity!! Christ advocates for the Sins!! Through the merit of offering his life for the sins of humanity, it is God who in turn forgives the Sins of the World, through the advocacy of Christ!! It is not only stupidity to preach that one ought not know God the Father, but only Christ, is blasphemy in turn!! I think you belong to Brhanam group whose followers are "Only Jesus" and you are practicing his preaching!! A Non essential is non essential in any sense!! I don't have any other option to understand a non essential other than considering it non essential, though you trinitarians without any verse can make a trinity from bible, you can even convert a non-essential doctrine into trinity!! The whole world is your limit!! Why I told the whole world is because Satan is ruling this World, and you are preaching his Trinity!!

Jesus taught always to pray to the Father in heaven, and addressed him as Abba Father!! and you hypocrites teach one need not address Father!! What a shameless and Blasphemy you people are teaching!!


தொடரும்..............


__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
1 2  >  Last»  | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard