முத்தான சில கேள்விகளுக்கு வழக்கமான மழுப்பல் தமிழ் கிறிஸ்தவ தளத்தில் படிக்க நேர்ந்தது!! யார் இந்த கேள்விகளை என்று தெரியவில்லை ஆனால் ராஜ்குமார் என்கிற ஒரு திரித்துவ போதகர் (திரித்துவ போதகர் என்றால் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள்) அதை அன்பு57 & கோ. என்று எழுதி இருக்கிறார்!! இவர்களின் இன்னோரு தோஸ்த், விஜய் (அதே திரித்துவ போதகர் தான்) அவர்களின் தளத்திலும் இதே கேள்விகள் இருக்கிறது!! யார் கேட்டிருந்தாலும் மிகவும் தெளிவாக, சரியாக கேட்டிருக்கிறார்!! தமாஷ் என்னவென்றால் அதற்கு பதில் கொடுக்க முடியாதவர்கள், அந்த கேள்விகளை யார் கேட்டிருப்பார்கள் என்பதிலேயே பக்கங்களை நிறப்புகிறார்கள்!! நான் அந்த நல்ல ஆத்மாவின் கேள்விகளை நம் தளத்தில் பதில் கொடுப்போம்!!
கேள்வி #1 பிற மதத்தவர் ஆசீர்வாதத்தைத் தேடி புண்ணிய யாத்திரை செல்லுவதை விமர்சிக்கும் விசுவாசிகள் தாங்கள் ஆசீர்வாதத்தைத் தேடி ஆவிக்குரிய கூட்டங்களுக்கு ஓடுவது ஏன்? இயேசுவின் சீஷராக அவரை பின்பற்றும்படி அழைக்கப்பட்ட நாம் அவர் எப்படி பிதாவின் சித்தம் செய்வதே தமக்கு உணவு என்று வாழ்ந்தாரோ அதையே பின்பற்ற வேண்டுமில்லையா? இயேசு அப்படிச் செய்தபோது அவர் தேவைகள் எல்லாம் பிதாவால் சந்திக்கப்பட்டதே! அவர் எதிலும் குறைவுபட்டதாக வேதத்தில் இல்லையே! நாமும் பிச்சைக்காரராய் வாழ்வது அவரது சித்தமல்ல “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.(மத் 6:33) என்ற வார்த்தைகள் நம்முடைய வாழ்க்கையில் புறக்கணிக்கப்பட்டது ஏன்?
பதில்: ஆவி என்றால் என்னவென்று அறியாதவர்கள் தான் இந்த கூட்டங்களை ஆவிக்குரிய கூட்டங்கள் என்று சொல்லுவார்கள்!! பிற மதஸ்தர் ஏதோ ஒரு பாரம்பரியத்தில் அதில் பயன் இருக்கிறதோ, இல்லையோ, செய்கிறார்கள், அல்லது செல்கிறார்கள்!! ஆனால் ஆவிக்குரிய கூட்டங்களை நாடி தேடி ஓடுவதே, நம்மவர்கள் ஆசீர்வாதங்களை பெறவே!! அதுவும் உலகப்பூர்வமான ஆசீர்வாதங்களை பெறவே!! மனுஷக்குமாரனுக்கு தலை சாய்க்க இடம் இல்லை என்று சொன்ன இயேசு கிறிஸ்துவை போதிக்க ஆடம்பரத்தின் உச்சியில் இருக்கும் தங்களை "தேவ மனிதர்கள்" என்று அழைக்கும் ஒரு கூட்டம் பென்ஸ், ஹோண்டா அக்கார்ட், போன்ற மிகவும் விலை உயர்ந்த கார்களில் பாதுகப்பு படையுடன் வருவார்கள்!! அவர்களுக்கு அவர்கள் பிரசங்கிக்க வரும் ஆவியின் மேலோ, அல்லது அவர்கள் பிரசங்கிக்க வரும் "அருள் நாதர்" மீதோ நம்பிக்கை இல்லாமல் தான் பாதுகப்பு படை சூழ பவனி வருகிறார்கள்!! இந்த கேள்வியை யார் கேட்டிருந்தாலும், நண்பரே, இயேசு கிறிஸ்துவின் சீஷராக இருக்கும் முதல் தகுதியே, தன்னை வெறுத்து தன் சிலுவையை சுமந்து கிறிஸ்துவின் பாதச்சுவடுகளை பின்பற்றுபவனே!! இந்த சீஷத்துவத்தின் ஒரு தகுதியும் இல்லாத இவர்கள் தங்களை எந்த தேவனின் தேவ மனிதர்கள் என்று சொல்லுகிறார்கள் என்பது தான் இரகசியம்!! அவர்களின் தேவன் இப்பிரபஞ்சத்தின் தேவன், ஏனென்றால் அவனிடம் தான் இது போன்ற செல்வங்களுக்கு செழிப்புக்கும் பஞ்சம் இல்லை!! அது மாத்திரம் இல்லை,
பிலிப்பியர் 3:19 அவர்களுடைய முடிவு அழிவு. அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள்.
இவர்கள் கூட்டம் கூட்டுவதே, சுகம் கொடுப்பதற்கு, ஆசீர்வாதம் கிடைப்பதற்கு, செழிப்பு வருவதற்கு!! இவர்களில் ஒரு "தேவ மனிதன்" கூட தேவனின் ராஜியத்தை பிரசங்கிப்பது கிடையாது!! ஏனென்றால் இவர்கள் இந்த பூமிக்கடுத்தவைகளை சிந்திப்பவர்களாக இருக்கிறார்கள்!! எப்படி எல்லாம் பணம் பண்னலாம்!! தங்களின் படங்களை போட்டு குறுந்தட்டுகளாக விற்பனை செய்து அதை வாங்கினாலே ஆசீர்வாதம் வரும் என்கிற மாயைக்குள் நடத்தி ஏழை விசுவாசிகலின் வயிற்றில் அடிக்கிறார்கள்!! பவுல் பேஎதுரு போன்றவர்கள் தாங்கள் வைத்திருந்த அனைத்தையும் விட்டு தான் கிறிஸ்து இயேசுவின் பின் சென்றார்கள், ஆனால் இந்த தேவ மனிதர்கள் ஒன்றும் இல்லாமல் வந்து, பெரிய கோடீச்வரர்களாக திகழ்கிறார்கள்!! இப்ப புரியுதா, இவர்களின் தேவன் யார் என்று!!
மத். 4:8. மறுபடியும் பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து: 9. நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்.
மற்ற மதங்களிலின் செழிப்புக்கு மாத்திரம் இவனை காரணம் காட்டும் இவர்கள், தங்களின் செழிப்புக்கு காரணம் இயேசு என்கிறார்களே, இயேசு கிறிஸ்து சீஷனாக, போதகனாக, அப்போஸ்தலனாக அழைப்பதற்கு செல்வங்களை தருவேன் என்று வேதத்தில் எங்கே சொல்லியிருக்கிறார் என்று யாராவது காண்பிப்பீர்களா!! தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியயும் தேடுவோர் நிச்சயமாக இது போன்ற "ஆவிகளின்" கூட்டங்களுக்கு போக மாட்டார்கள்!!