kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஊடுருவும் சத்தியமும் சில்சாமின் பத(பித)ற்றலும்!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
ஊடுருவும் சத்தியமும் சில்சாமின் பத(பித)ற்றலும்!!


சில்சாம் அவர்களே, நாங்கள் பிஸ்கோத்து தான், எழை முதல் அனைவரின் பசியையும் ஆற்ற கூடிய தன்மையுடையவர்கள்!! சத்தியத்திற்காக கூட்டம் சேர்க்காமால், ஐய்யோ என் தளத்தில் ஒருவனும் எனக்கு ஆதரவாக எழுத மாட்டேன் என்கிறானே என்று ஆதரவு கேட்டு மன்றாடும் பழக்கம் எனக்கு இல்லை!! ஏற்ற நேரத்தில் ஆகாரத்தை எனக்கு என் தேவன் தருகிறார்!! இன்னும் கொஞ்சம் காலம் தான் அது வரையில் ஆட்டம் போடும் இந்த பிசாசின் கோட்பாடுகள், அதன் பின் நீதியின் சூரியன் உதிக்கும் போது அவர் செட்டையின் நிழலில் ஆரோக்கியம் பெற்று, எல்லாவற்றையும் தெர்நிதுக்கொள்வீர்கள்!! இன்று உங்களுக்கு துருபதேசமாக தோன்றுவது எல்லாம் (பிசாசு கண்களை கட்டி வைத்திருக்கானே) நாளை கிறிஸ்துவின் வருகையில் வெளிச்சமாகி விடும், முதலில் கண்கள் கூச தான் செய்யும் (உமது நாமத்தின் இதை செய்தோமே, அதை செய்தோமே, தமிழ் கிறிஸ்தவ தளத்திற்கு பரிந்து பேசினோமே) ஆனாலும் அவரின் கிருபையினால் எல்லாவற்றையும் தெரிந்துக்கொள்வீர்கள்!!

சத்தியம் ஊடுருவி ஒவ்வொரு தளமாக போகும் போது இப்படி தான் கூச்சலிட துவங்குவீர்கள்!! உங்களுக்கு வசனங்களை வைத்து ஆரோக்கியமான விவாதம் நடத்த தெரியாததினால், அடுத்தவனை மிருகம் என்றும், இன்னும் பிசாசின் பார்வையில் வேதத்தில் அவனுக்கு பிரியமான விஷயங்களையும் பெயர்களையும் தேடி பிடித்து கொடுப்பீர்கள்!! வேறு என்ன உறுப்படியா தெரியும்!! சுந்தர் தளத்தில் ஒருவர் சத்தியத்தை கொண்டு வந்ததால் அதை வசன ஆதாரத்துடன் தவறு என்று நிரூபித்து காண்பிப்பதை விட்டு விட்டு, சும்மா கூச்சலிட்டு, மிரட்டி, சபித்து, அடுத்தவர்களை மட்டம் தட்டி, எழுதும் அளவிற்கு தான் உம்மிடம் விஷயம் இருக்கு என்று மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறீர்!!



சில்சாமை எரிச்சலடைய செய்த பதிவுகள்:

1) பரிசுத்த வேதாகமமாகிய “பைபிள்” புத்தகத்தை எழுதியது யார்? (http://lord.activeboard.com/index.spark?aBID=134574&p=3&topicID=40478014)
2) வேதாகமத்தை நாம் எவ்வாறு படிக்க வேண்டும்? (
http://lord.activeboard.com/index.spark?aBID=134574&p=3&topicID=40478125)
3) தேவன் உண்டென்று நாம் அறிய முடியுமா? (
http://lord.activeboard.com/index.spark?aBID=134574&p=3&topicID=40478182)
4) சத்திய வேதாகமம் கூறும் தேவனுடைய தன்மை குணலட்சணங்கள் என்ன? (
http://lord.activeboard.com/index.spark?aBID=134574&p=3&topicID=40478202)
5) வேதாகமத்தில் தம்மை வெளிப்படுத்திய மெய்தேவனின் நாமம் என்ன? (
http://lord.activeboard.com/index.spark?aBID=134574&p=3&topicID=40478234)
6) இயேசு கிறிஸ்து யார்? (
http://lord.activeboard.com/index.spark?aBID=134574&p=3&topicID=40478248)

சுந்த‌ராவ‌து இந்த‌ ப‌திவுக‌ளை விட்டு வைப்பாரா அல்ல‌து, சில்சாம் போன்றோரின் மிர‌ட்ட‌லுக்கு அடி ப‌ணிவாரா என்று பொறுந்திருந்து தான் பார்க்க‌ முடியும்!! அது வ‌ரையில் முடிந்த‌வ‌ர்க‌ள் இந்த‌ தொடுப்பை ப‌ய‌ன்ப்ப‌டுத்த‌லாம்!!

இதை எல்லாம் வாசித்து விட்டு, த‌ன் வீட்டு குப்பையை ச‌ரி செய்யாத‌வ‌ர் அடுத்த‌வீட்டின் தூசியை த‌ட்ட‌ கிள‌ம்பியிருக்கிறார் போப்புக‌ளின் வாரிசு சில்சாம்!! போப்புக‌ளும் ஒரு கால‌த்தில் த‌ங்க‌ளை கிறிஸ்துவின் விகார் (Vicar) என்று சொல்லிக்கொண்டு, நாங்க‌ள் சொல்லுவ‌து தான் கிறிஸ்த‌வ‌ம் என்று இருந்தார்க‌ள், சில்சாம் அதை சுமார் 1700 வ‌ருட‌ங்க‌ள் க‌ழித்து த‌ன்னை மீண்டும் ஒரு போப் என்று என்ன‌த்தில் ந‌ட‌க்கிறார்!! ச‌த்திய‌த்தை பார்த்த‌வுட‌ன் சில்சாமின் விம‌ர்ச‌ன‌ம்;

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=40343255

இவ‌ர்க‌ளின் விசுவாச‌ம் நிச்ச‌ய‌மாக‌ இந்த‌ உல‌க‌த்தில் ப‌ர‌வும் அப்ப‌டி தான் வேத‌ம் சொல்லுகிற‌ர்து, ஆனால் தேவ‌ன் த‌ன் ச‌பையை இந்த‌ உல‌க‌த்திலிருந்து தான் தேர்ந்துக்கொள்வார், அதை நின்று வேடிக்கை பார்க்க‌ தான் பொகிறீர்க‌ள்:

லூக் 18:8 ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார்

ஏசா 60:2. இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும். 3. உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்துவருவார்கள்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

யெகோவா சாட்சிகள், வேதமாணவர்களுக்கும் வித்தியாசம் இல்லையென்றால் கத்தோலிக்கர்களுக்கும் பெந்தகோஸ்தேவினருக்கும் வித்தியாசம் இல்லை!! பெந்தகோஸ்தே சபைகளிலும் ஏஜி, சீபிஎம், ஐபீஏ இன்னும் சில்லரை சில்லரையாக காளான் போல் எத்துனையோ சபைகள் இருக்கிறதே!! அப்படி தான்!1

நான் யெகோவா சாட்சிகள் கிடையாது, ஏனென்றால் யெகோவா சாட்சியாக இருந்திருந்தால் நிச்சயமாக சொல்லுவேன், ஏனென்றால் யெகோவா சாட்சிகள் தங்கலை யெகோவா சாட்சிகள் என்று சொல்லுவதில் பெருமை படுவார்கள், அவர்கள் அதை மறைப்பதில்லை!! உங்கள் கூட்டத்திலிருக்கும் "இரகசிய கிறிஸ்தவர்கள்" போல் அவர்கள் இருப்பதில்லை!! அது என்னவோ இரகசிய கிறிஸ்தவர்கள் என்கிற ஒரு பதத்தை கண்டு பிடித்திருக்கிறார்கள் இந்த கிறிஸ்தவர்கள் என்று கொண்டிருக்கும் பெந்தகோஸ்தேயினர்!! கிறிஸ்துவை அறிக்கை பண்ணாதவனை கிறிஸ்து பிதாவின்டத்தில் அவர்களையும் அறிக்கை பண்ணமாட்டார் என்று பெந்தகோஸ்தே ஊழியர்கள் அவர்களிடம் சொல்லுவதில்லையோ!!

பெந்தகோஸ்தே சபைகளுக்குளேயே இத்துனை பிரிவினை வைத்துக்கொண்டு இவர்களுக்கு இன்னும் யெகோவா சாட்சியனருக்கும் வேதமாணவர்ளுக்கு வித்தியாசம் தெரியாமல் இருக்கிறார்களே!!

http://www.biblegreatmystery.com/  என்கிற இந்த தளத்தை யெகோவா சாட்சிகள் தளம் என்று விமர்சிக்கும் அளவிற்கு தான் இவர்களின் ஞானம்!!

உங்க‌ளை போன்ற‌ பெந்தோலிக்க‌ர்க‌ளிட‌மும் (பெந்தகோஸ்தே சபை என்று சொல்லிக்கொண்டு கத்தோலிக்கர்கள் கொண்டு வந்த திரித்துவம் உட்பட எல்லா கோட்பாடுகளையும் பின்பற்றுபவர்கள்) என‌க்கு விவாத‌ம் ந‌ட‌த்த‌னும் என்கிற‌ வேண்டுத‌ல் ஒன்றும் இல்லை!! முத‌லில் உங்க‌ளுக்குள் இருக்கும் குப்பைக‌ளை சுத்த‌ம் செய்ய‌ பாருங்க‌ள் பிற‌கு அடுத்த‌வ‌ன் வீட்டில் இருக்கும் தூசியை த‌ட்ட‌லாம் என்று சொன்னாலும் புரிய‌ மாட்டேன் என்கிறது!! ஒரு பொதுவான‌ த‌ள‌த்தின் அடிப‌டையில் யெகோவா சாட்சிக‌ளுக்கும் வேத‌ மாண‌வ‌ர்க‌ளுக்கும் உள்ள‌ வித்தியாச‌ங்க‌ளை க‌ண்ட‌றியுங்க‌ள்!!

கொசுறு செய்தி என்ன‌வென்றால், நான் வேத‌ மாண‌வ‌னும் கிடையாது என்ப‌து தான்!! இதை ஏதோ சில்சாம் நம்ப வேண்டும் என்பதற்காகவோ, அவர் திருப்தி பட வேண்டும் என்பதற்காகவுல் இல்லை, உண்மையை சொல்லவே!!

கிறிஸ்துவை தொழுகிறோம் ஆகவே கிறிஸ்தவர்கலாக இருக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு, கிறிஸ்து மாம்சத்தில் இயேசுவாக ஏன் வந்தார் என்று கூட தெரியாமல் இருப்பது குழப்பத்தின் உச்சம்!!

நிச்சயமாக இன்னும் அநேகரை "இரகசிய கிறிஸ்தவர்களாக" மாற்றும் வேலைகள் உங்களுக்கு இருக்கலாம், தாராளமாக செய்யுங்கள்!! எனக்கும் வேலைகள் இருக்கிறது, உங்களை போன்ற ஆவிக்குரிய கூட்டத்தினரால் வஞ்சிக்கப்படுகிற அநேக மக்களிடமிருந்து யாராவது ஒருவராவது, சத்தியத்தின் மேல் தாகம் கொண்டு, வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக வருவார் என்கிற பேராசையில் இருக்கிறேன்!! ஏனென்றால் உங்க கூட்டத்தினருக்கு தெரியாத ஒன்று எனக்கு தெரியும், அதாவது, பிதா ஒருவனை இழுத்துக்கொள்லாவிட்டால் ஒருவனும் கிறிஸ்துவின்டத்தில் வர மாட்டான் என்பது தான்!! முதலில் அதை தெரிந்துக்கொள்ளுங்கள், பிறகு உங்கள் கூட்டனி முயற்சியால் வரும் "அநேகர்" அவர்கள் தானா என்பது புரிய வரும்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

1 யோவான் 4:1. பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.

திரித்துவம் பேசும் இந்த கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியது இன்று அல்ல, யோவான் காலத்தில், அதாவது இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலரான யோவானின் போதனையை கூட கேட்காமல் அநேக கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றினார்களாம்!! இவர்கள் போதனைகள் எந்த ஆவியை கொண்டது என்று யோவான் எழுதுகிறார், மேலும் இந்த கள்ளத்தீர்க்கதரிசிகள் எந்த ஆவியை கொண்டு இருந்தார்கள் என்பதையும் சோதித்தறிய நமக்கு சொல்லியிருக்கிறார்!!

2. தேவஆவியை நீங்கள் எதினாலே அறியலாமென்றால்: மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது.

ஒருவன் தேவனுடைய ஆவி பெற்றிருக்கிறான் என்றால், இயேசு கிறிஸ்து தான் மாம்சத்தில் வந்தார் என்று அறிக்கை பண்ணுவானாம்!! அதை விட்டு விட்டு, தேவன் தான், பிதா தான், சர்வவல்லமையுள்ள தேவன் தான் மாம்சத்தில் வந்தார் என்று சொலுபவன் எந்த ஆவியில் இருக்கிறான் என்பதை மேலும் சொல்லுகிறார்,

3. மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது.

மாம்சத்தில் இயேசு கிறிஸ்து தான் வந்தார் என்பதை அறிக்கை செய்பவனே தேவனின் ஆவியை பெற்றிருக்கிறான். தேவனே மாம்சத்தில் வந்தார் என்று அறிக்கை பண்ணுபவன் இந்த பிரபஞ்சத்தின் தேவனின் ஆவியை பெற்றிருக்கிறான் என்பது நிச்சய்ம்!! யோவான் எழுதியதை தான் நான் சொல்லுகிறேன்!! அந்திகிறிஸ்து இனிமேல் தான் வர போகிறான் என்பது எல்லாம் கிடையாது, அந்த ஆவி யோவான் காலத்திலேயே வந்தாகிவிட்டது, அது பகிரங்கமாக வெளிப்பட ஆரம்பித்தது கான்ஸ்டண்டைன் துவக்கிய கத்தோலிக்க சபையிலிருந்து!! அந்திகிறிஸ்துவின் ஆவி இந்த உலகத்தை சார்ந்த ஆவி, இந்த பிரபஞ்சத்தின் தேவனான சாத்தானின் ஆவியே!!

தன்னை நடத்திக்கொண்டிருக்கும் ஆவியையே நிதானிக்க முடியாதவர், அடுத்தவரின் ஆவியை குறை கண்டுபிடிக்க வந்துவிட்டார்!!

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=40343255



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

மைகோவை என்ப‌வ‌ர் த‌மிழ் கிறிஸ்த‌வ‌ த‌ள‌த்தின் ப‌திவாள‌ர் "க‌டைசி கால‌த்தில்" இப்ப‌டிப்ப‌ட்ட‌ (என்னை தான்) க‌ள்ள‌ தீர்க்க‌த‌ரிசிக‌ள் தோன்றுவார்க‌ள் என்று சில்சாமிற்கு ஆறுத‌ல் கொடுத்தார்!! மைகோவை அவ‌ர்க‌ள் 1 யோவான் 4ம் அதிகார‌ம் வாசித்தால், க‌ள்ள‌ தீர்க்க‌த‌ரிசிக‌ள் தோன்றி அவ‌ர்க‌ள் ந‌ட‌த்தும் ச‌பைக்குள் தான் நீங்க‌ள் இருந்துக்கொண்டு இருக்கிறீர்க‌ள் என்ப‌தை தெரிந்துக்கொள்ளுங்க‌ள்!! க‌டைசி கால‌ம் என்பது "சுவிசேஷ‌ கால‌ம்" என்கிற‌ க‌டைசி கால‌த்தை குறித்து தானே த‌விர‌ 2000 ஆண்டு முடிஞ்சு போச்சு என்ப‌தால் "க‌டைசி காலம்" என்பது கிடையாது!! ஆக‌வே தான் சுவிசேஷ‌ கால‌த்தின் துவ‌க்க‌த்திலேயே, யோவான் கால‌த்திலேயே திரித்துவ‌த்தை துவ‌ங்கிய‌ க‌ள்ள‌த்தீர்க்க‌த‌ரிசிக‌ள் அந்திகிறிஸ்துவின் ஆவியை கொண்டு துவ‌ங்கிவைத்தார்க‌ள் என‌ப‌த‌ற்கு யோவான் எழுதிய‌தே போதுமான‌து!! ந‌ல்ல‌ வேளை அவ‌ர் திரித்துவ‌ம் என்கிற‌ வார்த்தையை உப‌யோகிக்க‌வில்லை, இல்லாவிட்டால் இன்றைய‌ க‌ள்ள‌ போத‌க‌ர்க‌ள் பார்த்தீங்க‌ளா திரித்துவ‌ம் வேத‌த்தில் இல்லை என்று சொல்லுகிறீர்க‌ளே, யோவானே திரித்துவ‌ம் என்கிற‌ வார்த்தையை உப‌யோகித்திருக்கிறாரே என்பார்க‌ள்!!!

1 யோவான் 4:5. அவர்கள் உலகத்துக்குரியவர்கள், ஆகையால் உலகத்துக்குரியவைகளைப் பேசுகிறார்கள், உலகமும் அவர்களுக்குச் செவிகொடுக்கும். 6. நாங்கள் தேவனால் உண்டானவர்கள்; தேவனை அறிந்தவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறான்; தேவனால் உண்டாயிராதவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறதில்லை; இதினாலே சத்திய ஆவி இன்னதென்றும், வஞ்சகஆவி இன்னதென்றும் அறிந்திருக்கிறோம்.

திரித்துவ‌ போத‌னை செய்ப‌வ‌ர்க‌ள் உல‌க‌த்துக்குரிய‌வ‌ர்க‌ள், ஏனென்றால் உல‌க‌த்திலிருக்கும் பெரும்பாளுமான‌ மார்க‌ங்க‌ள் திரித்துவ‌ தேவ‌னை வைத்து தான் வ‌ழிப்ப‌டுகிறார்க‌ள்!! அந்த‌ திரித்துவ‌த்தை இவ‌ர்க‌ள் போதிப்ப‌தால், உல‌க‌மும் (கிறிஸ்த‌வ‌ர்க‌ள் என‌ப்ப‌டுப‌வ‌ர்க‌ள்) இந்த‌ திரித்துவ‌ போத‌க‌த்தை வேத‌த்தில் இல்லாத‌ போதும், இந்த‌ க‌ள்ள‌ தீர்க்க‌த‌ரிசிக‌ளுக்கு செவிக்கொடுத்து கூட்ட‌ம் கூட்ட‌மாக‌ அவ‌ர்க‌ளின் போத‌னைக்கு செவிக்கொடுப்பார்க‌ள்!! வ‌ஞ்சக ஆவி என்னதென்று இவர்களின் போதனை கொண்டு அறிந்திருக்கிறோம்!! வஞ்சக ஆவியின் போதனை "சர்வவல்லமை உள்ள தேவன்" மாம்சத்தில் வந்தார், சத்திய ஆவியின் போதனை "கிறிஸ்துவே' மாம்சத்தில் இயேசுவாக வெளிப்பட்டார்!!

10. நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்திசெய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது.

ஏதோ நம்முடைய முயற்சி, நம்முடைய வைராக்கியம் தான் நம்மை தேவனின் பார்வையில் உட்காரவைக்கிறது என்பதும் கள்ள தீர்க்கதரிசிகளின் போதனையாக இருக்கிறது!! இவர்கள் குமாரனின் "மீட்கும் பொருளை" மட்டம் படுத்தி போதிப்பார்கள், ஆனால் வசனம் சொல்லுவது, தேவனின் அன்பினால் மாத்திரமே இந்த பாவமண்ணிப்பு என்கிற இலவச கிருபை ஒவ்வொருவருக்கும் உண்டாயிற்று!!

இன்னும் வரும்.....................



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

ஆரோக்கியமான விவாதம் நடத்தப்பட்டதென்றால் திரித்துவம் என்பது கட்டு கதை என்று புரிந்துக்கொள்வீர்கள் சில்சாம் அவர்களே!! என்னமோ மேலே உள்ள இந்த படம் எங்கள் நம்ப்கிக்கைக்கு துனையானது என்றால் இல்லை, இதை போட்டவர்களும் வேதத்தின் எதிரிகளே!! திரித்துவம் இரு குழுக்கலாக பிரிந்திருப்பது உங்களுக்கு தெரியுமோ தெரியாதோ, ஆனால் எனக்கு தெரியும்!!

மூண்று தேவ(ன்)ர்கள் இருக்கிறார்கள் என்றும் மூன்று பேரும் ஒரே காலத்திலிருந்தும், ஒரே வல்லமையோடும், இருக்கிறார்கள் என்பவர் ஒரு குழு!! மூவ‌ரும் ஒரே த‌ன்மையில் இருப்ப‌தால் திரித்துவம் என்கிற‌ கோட்பாட்டில் இருப்ப‌வ‌ர்க‌ள்!!

இன்னோரு குழுவின‌ர் இருக்கிறார்க‌ள், இவ‌ர்க‌ள், தேவ‌ன் ஒருவ‌ரே, ஆனால் அவ‌ர் மூன்றாக‌ இருக்கிறார், மூன்றாக‌ செய‌ல்ப்ப‌டுகிறார், என்று சொல்லி திரியேக‌த்துவ‌ம் என்கிற‌ கோட்பாட்டில் இருப்ப‌வ‌ர்க‌ள்!!

தாங்க‌ள் எதிரி என்று எங்க‌ளை நினைத்து, உங்க‌ள் குழுவை சேர்ந்த‌ ஒருவர் போட்ட‌ ப‌ட‌த்தை போட்டு த‌ங்க‌ளின் எதிரி என்று எழுதிய‌தாக‌ தோன்றுகிற‌து!! அத‌ற்கு முக்கிய‌மான‌ கார‌ண‌ம் அதில் உள்ள‌ "ப‌ரிசுத்த‌ ஆவியான‌ தேவ‌ன்" என்கிற‌ ப‌த‌மே, சாரி வேத‌த்தில் இல்லாத‌ எந்த‌ ஒரு ப‌த‌த்தை நான் ஏற்றுக்கொள்வ‌தில்லை!! உங்களுக்குள் இருக்கும் க‌ள்ள‌ போத‌க‌ர்க‌ள் உங்க‌ளுக்கே அடையாள‌ம் தெரியாம‌ல் போன‌து விந்தையாக‌ இருக்கிற‌து!!

சில்சாமின்:
//திரித்துவம் சம்பந்தமான போதனையை எழுத்துக்களால் விவரிக்க ஒருவராலும் கூடாது , அது உணர்வு பூர்வமானது என்று சொன்னாலும் நம்முடைய எதிரிகள் அதனை ஒப்புக்கொள்ளாமல் தொடர்ந்து புழுதி கிளப்பிக் கொண்டேயிருக்கிறார்கள்;//

ஐய்யா போத‌க‌ரே (உப‌ய‌ம் மைகோவை டீசீஎஸ்),இதை நிச்சயமாக எழுதுவீர்கள் என்று தான் காத்துக்கொண்டிருந்தேன்!! எழுத்தில் இல்லாத‌ ஒன்றை நீங்க‌ள் ஏற்றுக்கொள்வீர்க‌ள் என்ப‌தை தான் நான் நீங்க‌ள் பார‌ம்ப‌ரிய‌ விசுவாச‌ வீர‌ன் என்று சொன்னேன்!! உங்க‌ளின் எழுத்தில் அது வ‌ந்த‌து ம‌கிழ்சியே!! எழுத்தில் இல்லாத‌ போது அது எப்ப‌டி தான் உண‌ர்வு பூர்வ‌மான‌ விசுவாச‌ம் என்று தெரிய‌வில்லையே!! உங்க‌ள் உண‌ர்வு பூர்வ‌மான‌ விசுவாச‌க்த்தை நாங்க‌ள் (எதிரிக‌ள்) ஒப்புக்கொள்ளாம‌ல் தொட‌ர்ந்து புழுதி கிள‌ப்பிக் கொண்டு இருக்கிறோம், ச‌ரி, நீங்க‌ள் ஏன் உங்க‌ள் வேறு எதிரிக‌ளான‌ ம‌ற்ற‌ மார்க‌த்தை சேர்ந்த‌வ‌ர்க‌ளின் உண‌ர்வு பூர்வ‌மான‌ விசுவாச‌த்தை கிண்ட‌ல் அடிக்கிறீர்க‌ள்!! உங்க‌ளுக்கு உண‌ர்வு பூர்வ‌மான‌ விசுவாச‌ம் எழுத்தில் இல்லாம‌ல் இருந்தாலும் நீங்க‌ள் சொல்லுவ‌து ச‌ரி, ஆனால் அவ‌ர்கள் உணர்வு பூர்வ‌மான‌ விசுவாச‌ம் கொண்டால் மாத்திர‌ம் உங்க‌ளுக்கு என்ன‌ வேத‌னை!! எல்லாவ‌ற்றிலும் ஒரு நீதி வேண்டும்!!

மேலும், வேத‌ம் என‌க்கு சொல்லுவ‌து, "எழுதிய‌த‌ற்கு அதிக‌மாக‌ என்னாதீர்க‌ள்" 1 கொரி 4:6, பார‌ம்ப‌ரிய‌ விசுவாசிக‌ளுக்கு எப்ப‌டியோ!!!

நேர்மையான விவாதம் என்றால் வசனத்துடன் துருபதேசமான திரித்துவத்தை நிரூபியுங்கள் பார்க்கலாம்!!

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=40541149



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
RE: ஊடுருவும் சத்தியமும் சில்சாமின் பத(பித)ற்றலும்!!


சில்சாம் எழுதுகிறார்:
//நானும் இதேபோல ஆமாஞ்சாமி போட்டால் எல்லோருக்கும் நண்பனாக இருக்கமுடியும்;ஆனாலும் அப்படிப்பட்ட கேடுகெட்ட நட்பை நாம் விரும்பவில்லை.முற்றிப்போன கேஸ்களை நட்புகொள்ளுவதால் முடியும் என்ற அதீத நம்பிக்கையும் நமக்கு இல்லை.//

இவர் அமாஞ்சாமி போட்டு, மண்ணிப்பு கேட்டு எழுதுவதெல்லாம் எங்கள் கண்களுக்கு தெரியாமல் தான் இருக்கிறது!! இவரின் கேடுகெட்ட நட்பெல்லாம் அரைவேக்காடுகளுடன் தான் என்பதையும் நான் அறிவேன்!! வாதத்துக்கு தான் மருந்து (வசனம்) இருக்கிறது விதண்டாவாதத்திற்கு யெளவன ஜனமும், தமிழ் கிறிஸ்தவ தளமும் இருக்கிறது!!

உங்களிடம் விசுவாச ரீதியில் யாரும் நட்பு பாராட்டவில்லை அதற்கு முயற்சிக்வும் இல்லை, அரைவேக்காடுகளுடனும், விதண்டாவாதம் செய்து, ஒரு இடத்தில் சொன்னதை இன்னோரு இடத்தில் மறுத்து பேசுபவர்களுடன் (எழுதுவர்கள்) அப்படி இருக்க வேண்டிய அவசியமும் இல்லை!! ஒரு காலத்தில் தூக்கி எறியப்பட்டு வெளியேறி அழுது கூச்சல் போட்ட சில்சாமிற்கு இன்று தமிழ் கிறிஸ்தவ தளத்தில் நட்பு பாராட்ட முடிந்தது என்றால் அது வெறும் சீப் பாப்பிலாரிட்டிக்காகவே (Cheap Popularity) தான் என்பதையும் அறிவேன்!!

வசனங்களுக்கு வசனத்தினால் பதில் கொடுக்க முடியாதவரிடம், "உணர்வு பூர்வமான" விசுவாசத்தினால் தன்னை கிறிஸ்தவன் என்று சொல்லி பெருமை பாராட்டுபவரிடத்தில் ஒன்றும் நான் கெஞ்சி நிற்கவில்லை!! நாங்கள் முற்றின கேஸாக இருந்தால் பரவயில்லை, பச்சோந்தியாக இல்லை என்கிற நிம்மதி இருக்கிறது!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
ஊடுருவும் சத்தியமும் சில்சாமின் பத(பித)ற்றலும்!!


http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=39729174

//கோவை பெரியன்ஸ் எனும் கள்ள உபதேசத் தளத்திலிருந்து நாம் வெளியேறியதற்கான காரணத்தை ஏற்கனவே தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம்; ஆனால் மல்லாந்துக் கொண்டு எச்சில் உமிழ்வதைப் போல அதன் நிர்வாகி கொக்கரித்துக் கொண்டிருக்கிறார்; பேடித் தனம் போன்ற கடுமையான சொற்களைவிட மோசமான வார்த்தைகளால் நம்மை தாக்கி நம்முடைய சுயமரியாதையை அவதூறு செய்யும்வண்ணமாக அவர்கள் எழுதியபோதும் எப்படியெப்படியோ சமாளித்து அங்கே நிற்க எவ்வளவோ முயற்சித்தோம்; ஆனாலும் வேதம் சொல்லுகிறது, சகோதரனாகிய ஒருவனுக்கு ரெண்டொரு தரம் புத்திசொன்ன பிறகு அவனை விட்டு விலகு:உன்னை ஒரு ஊரார் ஏற்றுக்கொள்ளாவிட்டால் உன் காலில் படிந்த தூசியை உதறி விட்டு வெளியேறு, என்று; அப்படியானால் வெளியேறுபவர்களும் விலகுபவர்களும் பேடிகளா என்ன? //

ஒரு முறை வெளியேறி மீண்டும் ந‌ம் த‌ள‌த்தில் த‌ன் துருப‌தேச‌ங்க‌ள் கொண்டு வ‌ர‌ நினைத்து க‌ள்ள‌த்த‌ன‌ம் சொல்லி நுழைந்த‌வ‌ர் தான் யெளவன ஜனம் தளம் நிர்வாகி!! நாகரீகமாக பேசுவதை அவரிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டு தான்,
"ஆனால் மல்லாந்துக் கொண்டு எச்சில் உமிழ்வதைப் போல அதன் நிர்வாகி கொக்கரித்துக் கொண்டிருக்கிறார்"
"எபேசுவின் துஷ்ட மிருகங்கள்"

வெளியேறியது பெரிய விஷயம் இல்லை, பேடித்தனம் என்று சொன்னது, தன் பதிவுகளை நீக்கிவிட்டு போனது தான், ஏனென்றால், அந்த பதிவுகள் இருந்தால் இவரின் முறன்பாடான விஷயங்கள் வெளி வரும் என்கிற பயம் தான்!! அவர் தளத்திலேயே அவர் ஒரு பதிவில் ஒரு மாதிரியும், அடுத்த பதிவில் வேறு மாதிரியாகவும் எழுதுகிறார் என்பது அவர் தளத்திற்கு ஆமாம் சாமி போடாதவர்கள் வாசித்தார்கள் என்றால் தெரிந்துக்கொள்வார்கள்!!

//அவர்களுடைய அழைப்பின் பேரில் நட்புரீதியில் விவாதிக்கத் துவங்கிய நம்மை எந்த வகையிலும் ஆதாயப்படுத்தமுடியாது என்ற சூழல் வந்ததும் வேறொரு போலி பெயரில் கடுமையாகத் தாக்கி உன்னை யாரும் இங்கே அழைக்கவுமில்லை நீ தாராளமாக நீ வெளியே போகலாம் என்று ஆணவம் பேசியவர்கள் அவர்களே; மேலும் எந்தவொரு பொதுவான உலக நாகரீகம் கூட இல்லாமல் நேரடியாகவே அவன், இவன் என்ற ஏக வசனத்தில் எழுதிய மாண்பு இங்கே பதிவு செய்யப்பட்டிருக்கிறது; நானோ சம வயதுள்ள நண்பர்களை எதிர்கொள்ளும் அளவை மீறாமலே கண்டித்து எழுதியுள்ளேன்; அதுவும் வேதத்தில் எனக்குக் கொடுக்கப்பட்ட வரைமுறைகளை தாண்டாத அளவுக்கே.//

நான் ஒரே முறை அதுவும் இந்த‌ த‌ள‌ம் துவ‌ங்கிய‌ போது தான் அழைத்தேன், வ‌ந்த‌வ‌ர் த‌ன் தெவையில்லாத‌ ப‌திவுக‌ளால் த‌ள‌த்தின் த‌ன்மையை கெடுக்க‌ ஆர‌ம்பித்தார், வெளியேற‌ சொன்ன‌து உண்மை தான்!! வேறு ஒரு போலி பெய‌ரில் இந்த த‌ள‌த்தில் நானே உறுப்பின‌ராக‌ இருக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் இல்லை, இது சில்சாமின் ஒரு கேவலமான் குற்றச்சாட்டு!! ஆனால் இவ‌ரோ ஒரு பெண்ணின் பெய‌ரை வைத்துக்கொண்டு இந்த‌ த‌ள‌த்தில் வ‌ந்தார், இன்னும் வ‌ந்துக்கொண்டு இருக்கிறார் என்ப‌தையும் அறிவேன்!! மிருக‌ங்க‌ள் என்கிற‌ நினைப்பை வைத்திருக்கும் போது அவைக‌ள் வாங்க‌ போங்க‌ என்றெல்லாம் பேசுவ‌து கிடையாது என்ப‌தை சில்சாம் அறிய‌ வேண்டும்!! உம‌க்கு தேவையான‌ ம‌ரிய‌தை கொடுக்க‌ப்ப‌ட்ட‌து, நீராக‌ அதை கெடுத்துக்கொண்டீர்!! ஒரு முறை தொலைப்பேசியில் அழைத்தும் பேசி, இது போன்ற‌ த‌னிப்ப‌ட்ட‌ தாக்குத‌லில் இற‌ங்க‌ வேண்டாம் என்று ச‌ண்டையிட்ட‌து அவ‌ருக்கு ஞாப‌க‌ம் இருக்கும் என்று நினைக்கிறேன்!! அத‌ன் பின் மீண்டும் த‌ன் அரைவேக்காடான‌ ப‌திவுக‌ளை கொண்டு த‌ள‌த்தில் நுழைந்தார், ச‌கோத‌ர‌ன் என்று அழைத்துக்கொண்டு!! அதை எல்லாம் விட்டு வைத்தால் அவ‌ர் நிலை வெளி வ‌ரும் என்கிற‌ பேடித்த‌ன‌த்தால் தான் இந்த‌ த‌ள‌த்திலிருந்த‌ ப‌திவுக‌ளை நீக்கினார் என்று இப்ப‌வும் சொல்லுகிறேன்!! த‌ள‌ம் தொட‌ங்கிய‌ முத‌ல் என் விசுவாச‌த்தை வேதத்தின் படி அறிக்கை செய்து, அதையும் பார்த்து தானே த‌ள‌த்தில் உறுப்பின‌ராக‌ சேர்ந்தார், எங்க‌ள் விசுவாச‌த்தின் உறுதியை தெரிந்த‌ பின்ன‌ரும் எங்க‌ளை ஆதாய‌ப்ப‌டுத்தும்ப‌டி க‌ள்ள‌த்த‌ன‌மாக‌ நுழைந்தார் என்று சொல்லுவ‌தில் என்ன‌ த‌வ‌று!! அவ‌ரின் விசுவாச‌த்தை அறிந்து நான் ஒன்றும் அந்த‌ த‌ள‌த்தில் உறுப்பின‌ராக‌வில்லையே!!

//அதுவும் வேதத்தில் எனக்குக் கொடுக்கப்பட்ட வரைமுறைகளை தாண்டாத அளவுக்கே.//

இரத்தம் கக்கி சாவாய், மூல வியாதி வந்து முக்குவாய், சாபம் உன் சந்தானத்தின் மேல் இறங்கும் என்பதெல்லாம் வேதத்தில் அவருக்கு கொடுக்கப்பட்ட வரைமுறைகள் போல்!! இதை எல்லாம் நான் சொல்லவே இல்லை என்று திரித்துவத்தின் மேல் சத்தியம் செய்தாலும் செய்வார்!! அவர் பன்பு அவ்வுளவு தான்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
RE: ஊடுருவும் சத்தியமும் சில்சாமின் பத(பித)ற்றலும்!!


//இதற்கு மேலும் நீ இங்கே உன் எழுத்துக்களால் கிறித்துவ உலகை மாசுபடுத்தாமல் நேரில் வந்து உன் கோபம் தீர என்னை அடித்துவிட்டு போ என்று அன்புடன் அழைக்கிறேன் அல்லது எங்கே வரவேண்டும் என்றும் சொல் நான் வருகிறேன்;ஆனாலும் உனக்கு எதிரான இந்த போராட்டத்தில் நான் ஓயமாட்டேன்;உன்னை மாத்திரமல்ல,உனது கூட்டம் முழுவதையும் தேடிப்பிடித்து இந்த சமுதாயத்தில் அடையாளங் காட்டுவேன்;நான் முன்வைத்துள்ள வாதத்துக்கு பதில் சொல்ல வக்கில்லாத உனக்கு என்ன எகத்தாளம் வேண்டியிருக்கிறது? உன் கருத்தைச் சொல்ல உனக்கு இருக்கும் உரிமை எனக்கு இல்லையா? நீ என்னை ஒப்பிட்டு குறிப்பிட்டு எழுதுவது போலவே நானும் எழுதுகிறேன்; நீ என்ன ரொம்ப ஆம்பளத்தனமா இங்கே வந்தா பதில் சொல்லுகிறாய்? வேண்டாம், நிறுத்திரு..!//

நீர் வேத‌த்திற்கு புற‌ம்பான‌ திரித்துவ‌த்தையே வ‌ச‌ன‌ம் தெரியாம‌ல் போதித்துக்கொண்டு இருக்கிறாய், நான் ச‌த்திய‌ம் சொல்ல‌ ஏன் த‌ய‌ங்க‌ வேண்டும், அதையும் வ‌ச‌ன‌ம் கொண்டு!! நீர் ஒன்றும் கிறிஸ்த‌வ‌த்தின் அவ‌தார‌ புருஷ‌ன் என்று நினைத்துக்கொண்டு, கிறிஸ்த‌வ‌த்தை உன் தோளில் தாங்கிக்கொண்டு இருக்கிறீர் என்கிற‌ ம‌ம‌தையில் இருக்க‌ வேண்டாம்!! நீர் என்னை என்ன‌ அடையாள‌ம் காண்பிக்கிற‌து, நானே என் த‌ள‌த்தில் எழுதுவ‌தை உம்மை போன்றோர், உம‌க்கு ஜால்ரா போடுவோரும் வ‌ந்து வாசித்துவிட்டு தான் போகிறார்க‌ள்!! துஷ்ட‌ மிருக‌மே, தேவ‌னுக்கு ப‌ய‌ப்ப‌டு, அவ‌ரின் நியாய‌த்தீர்ப்பின் நாளிற்காக‌ காத்திரு!! இது தான் உம‌க்கு நான் சொல்லும் அறிவுறை!! நீ வெத்து வேட்டாக‌ போராடிக்கொண்டு இரும், உம் கூட்ட‌த்தை குறித்து தான் நான் அறிவேனே!! ஒன்றை தெரிந்துக்கொள்ளும், ச‌த்திய‌ம் சிறு கூட்ட‌மாக‌ தான் இருக்கும், கிறிஸ்துவும் அவ‌ர் அப்போஸ்தலர்களான 12 பேரை போல், ஆனால் உன்னை போன்றோர் "இயேசுவை சிலுவையில் அறையும்" என்று க‌த்திய‌ திர‌ள் கூட்ட‌த்தை போல் அநேக‌ராக‌ இருக்கிறீர்க‌ள் என்ப‌தையும் தெரிந்துக்கொள்ளும்!! உம‌க்கு வ‌ச‌ன‌ம் தெரியாது, உம‌க்கு தெரிந்த‌து லோக்க‌லாக‌ பேசுவ‌து மாத்திர‌மே!! நான் ஆம்ப‌ளை தான் ஆனால் நீர் தான் பெண்ணின் பெய‌ரை வைத்துக்கொண்டு பொம்ப‌ளை போல் இந்த‌ த‌ள‌த்தில் வ‌ந்து உம் த‌ள‌த்தில் விஷ‌ம் க‌க்குகிறாய்!! நான் நிறுத்திவிட்டு நாட்க‌ள் ஆகிவிட்ட‌து, நீர் தான் ச‌ர‌க்கு ஒன்றும் இல்லாத‌தால் மீண்டும் என்னை வ‌ம்புக்கு இழுக்கிறீர்!! நான் வேத‌த்தில் ச‌த்திய‌த்தை தொட‌ர்ந்து எழுதிக்கொண்டு தான் இருப்பேன், நீர் உம் புத்தியை காண்பித்துக்கொண்டு இரும்!! உம் கொக்க‌ரிப்பு, கெர்சிப்பு எல்லாம் உம‌க்கு ஜால்ரா போடும் கூட்ட‌ம் நிறைந்த‌ "அநேக‌ருக்கான‌" த‌ள‌ம் இருக்கும் அங்கே போய் சொல்லும்!!

இப்ப‌வும் சொல்லுகிறேன் நீர் மாத்திர‌ம் இல்லை, உம்மை போல் தேவ‌னை மூன்றாக‌ கூறு போடும் திரித்துவ‌வாதிக‌ள் வேத‌த்தை திரித்து போதிப்ப‌வ‌ர்க‌ளை குறித்து தான் 1 கொரி 8:7ல் சொல்ல‌ப்ப‌ட்டிருக்கிற‌து, "ஆனால் இந்த‌ அறிவு அநேக‌ருக்கு இல்லை" என்று!!

//எனவே நீ வசனத்தைக் குறித்து பேசுவதையோ அதற்கு வியாக்கியானம் கொடுப்பதையோ நிறுத்திவிட்டு, உன் தலைவரிடம் பெற்ற கோதுமையை வியாபாரம் செய்ய முயற்சி செய்வதே நல்லது.//

என‌க்கு த‌லைவ‌ன் கிறிஸ்து ஒருவ‌ரே, உம்மை போல் நான் ம‌னித‌ர்க‌ளை ந‌ம்புவ‌து கிடையாது!! கோதுமை வியாபார‌ம் செய்வ‌த‌ற்கு கூட‌ உழைக்க‌ வேன்டும்!! அது எல்லாம் உம‌க்கு வ‌ராது!! உங்க‌ளுக்கு எல்லாம் சோம்பேறியாக‌ உட்கார்ந்தே ப‌ழ‌க்க‌ம் ஆகிஒ விட்ட‌து!! உம‌க்கு வ‌ச‌ன‌ம் தெரியாத‌து வாஸ்த‌வ‌ம் தான், என்னை வ‌ச‌ன‌ம் சொல்ல‌க்கூடாது என்று சொல்லும் உறிமை உம‌க்க்யு யார‌ய்யா கொடுத்த‌து!! நீர் யார் என்னை இது செய் அதை செய்ய‌க்கூடாது என்று சொல்லுவ‌த‌ற்கு, உம‌க்கு என்ன‌ த‌குதி இருக்கிற‌து இதை எல்லாம் சொல்லுவ‌த‌ற்கு, நான் ஒன்றும் உன் வீட்டீல் உட்கார்ந்து சாப்பிடுப‌வ‌ன் கிடையாது, உன் எல்லைக்குள் இருந்துக்கொள்! உன்னை ஒன்றும் பெரிய‌ தீவிர‌வாதியாக‌ நினைத்துக்கொள்ள‌ வேண்டாம்!! வீடு வீடாக‌ சென்று ஒன்றான மெய் தேவனை  மூன்றாக‌ கூறு போட்டு வியாபார‌ம் செய்யும் உம்மை போன்றோரின் முக‌த்திரையை கிழித்து எறிய‌வே தேவ‌ன் என‌க்கும் அந்த‌ எலியாவின் ஆவியையும், அந்த‌ யோவானின் ஆவியையும் த‌ந்திருக்கிறார்!! கிறிஸ்துவின் வ‌ருகைக்கு முன் எலியா வ‌ந்தாக‌ வேண்டும் என்று சொல்லும் வ‌ச‌ன‌ம் எல்லாம் உம‌க்கு புரியாது, அது என்னை போன்றோர் தான் என்று நினைவில் வைத்துக்கொள்ளும்!!

இன்னும் ஒன்று, உம் தளத்தில் வந்து நான் ஒரு போதும் எழுதியதில்லை, பொய்யான செய்தியை பரப்பாதேயும், திரித்துவத்தை போல்!! உம் தளத்தில் நான் உறுப்பினாராக கூட இல்லை என்பதை அனைவரும் அறிவார்கள், ஆனால் நீர் தான் பொம்பளை வேஷம் போட்டு இந்த தளத்தில் நுழைந்திருக்கிறீர்!!

கிறிஸ்து யார் என்று தெரியாதவர்களை தான் பவுல் "எபேசுவின் மிருகங்கள்" என்கிறார், இந்த பதம் உங்களை போன்றோரை தான் சேரும், ஏனென்றால் வேதத்தின் படி இயேசு கிறிஸ்துவை நான் மகா பரிசுத்தமுள்ள தேவனின் ஒரே பேறான குமாரன் என்று தான் அறிக்கை செய்கிறேன், என் தலைவனாகவும், என் மூத்த சகோதரனுமாகவும், என் போதகனாகவும் தான் அறிக்கை செய்கிறேன்!! ஆனால் நீரும் உம் கூட்டனியும், கிறிஸ்துவை பிதாவாக்கி சர்வ வல்லமையான தேவனாக்கி தேவ தூஷனம் செய்து வருகிறீர்கள்!! பிதாவினடத்திலிருந்து மகிமையை பெற்றவர் கிறிஸ்து இயேசு என்றால் பிதா யார் என்றும் கிறிஸ்து யார் என்றும் வேதம் எனக்கு தெளிவாக சொல்லியிருக்கிறது!! அறிவை பெற வேண்டியது நீரும் உம் கூட்டாளிகளும் தான், தேவனின் சித்தம் இருந்தால் தெரிந்துக்கொள்ளும், அல்லது நியாயத்தீர்ப்பின் நாட்களில் தெரிந்துக்கொள்ளும், அங்கேயும் வந்து அடம் பிடிக்காதீர்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

துருபதேச போதகன் சில்சாமின் உணர்ச்சி பூர்வமான விசுவாசம் அவர் இருந்த முந்தய மார்க்த்தின் பாதிப்பு தான் என்பது தெளிவாக இருக்கிறது!! மூடன் எங்கு சென்றாலும் மூடனாகவே இருப்பான்!! அவனுக்கு எத்துனை அறிவுறை கொடுத்தாலும், வசனங்கள் கொடுத்தாலும் அறிவு வளரவே வளராது!! கள்ள உபதேசங்களால் ஏற்கனவே தமிழ் இணையம் நிறம்பியிருப்பதை சுத்தம் செய்யவே எங்களை போன்ற சிலரை தேவன் கொண்டு வந்திருக்கிறார்!!

கள்ள போதகன் சில்சாமின் கருத்து:
//நாம் இயேசுவை தெய்வமாகத் தொழத்தக்கவர் என்று பாட்டு பாடினால் மட்டும் போதாது;இதுபோன்ற டெக்னிக்கலான தாக்குதல்களுக்கும் உரிய பதிலடியைத் தரவேண்டும்,கொஞ்சம் ரோஷமும் கொஞ்சம் வைராக்கியமும் இருந்தால் தமிழ் இணையம் துருபதேசக் கருத்துக்களால் நிரம்புவதைத் தடுக்கலாம்..!//

இயேசுவை தெய்வ‌மாக‌ தொழ‌த்த‌க்க‌வ‌ர் என்று பாட்டு பாடுப‌வ‌ர் நிச்ச‌யமாக‌ வேத‌த்தில் இல்லாத‌து!! துருப‌தேச‌த்தில் மூழ்கியிருக்கும் சில்சாம் போன்ற‌வ‌ரும் அவ‌ரின் த‌ள‌த்தில் என்ன‌ எழுதுகிறோம் என்று கூட‌ தெரியாம‌ல் இவ‌னை அவ‌னை என்று த‌ப்பு க‌ண்டுபிடித்து எழுதும் குண‌ம் ஒன்றே பிர‌தான‌மாக‌ இருப்ப‌தை பார்க்க‌லாம்!! த‌ன் த‌ள‌த்தில் என்ன‌ துருப‌தேச‌ம் இருக்கிற‌து என்று அவ‌ர் க‌ண்க‌ள் குருடாகி போய்விட்ட‌தால் தெரிய‌வில்லை!! சில்சாம் த‌ந்த‌ இந்த‌ ப‌திவு அல்ல‌து என்னை எதிர்த்து எழுதும் ஒன்றாவ‌து வ‌ச‌ன‌த்துட‌ன் இருக்கிற‌தா என்று பார்த்தால் இல்லை!! ஏன், ஏனென்றால் அவ‌ர் இருந்த‌ முந்த‌ய‌ மார்க்க‌த்தின் பாதிப்பு இருப்ப‌தால் இன்னும் அவ‌ர் பார‌ம்ப‌ரிய‌த்தில் இருப்ப‌தால் தான்!! ஆக‌வே தான் இன்னும் பாட‌ல்க‌ள், ஜெப‌ங்க‌ள் என்று போய்க்கொண்டு, வ‌ச‌ன‌ம் இல்லாம‌ல் இருக்கிறார்!!

டெக்னிக்க‌லான‌ தாக்குத‌ல், ரோஷ‌ம் வைராக்கிய‌ம் எல்லாம் இருந்தால் மாத்திர‌ம் போதாது, வ‌ச‌ன‌ம் தெரிய‌வேண்டும்!!

//இறுதியாக ஒரு வேண்டுகோள்: சில விசுவாசிகள் இயேசுவானவர் மீதான பாசத்தின் மிகுதியால் அவரை நம்முடைய மூத்த சகோதரர் என்று சொல்லுவார்கள்;இனி அதையும் கூட நான் சொல்லுவதைத் தவிர்க்கவேண்டும்;ஏனெனில் மேற்கண்ட கருத்திலிருந்தே இந்த எண்ணம் தோன்றி பரவியிருக்கவேண்டும்.//

இந்த‌ வார்த்தைக‌ள் மிக‌வும் ச‌ரியே, உம‌க்கு கிறிஸ்து மூத்த‌ ச‌கோத‌ர‌னாக‌ இருக்க‌ முடியாது, உம்முடைய‌ தேவ‌தூஷ‌ன‌ம் அப்ப‌டி இருக்கிற‌து, நீர் கிறிஸ்துவை பிதா என்று தானே நினைக்கிறீர், அப்ப‌டி தான் இருக்கும்!! அரை வேக்காடு கூட்ட‌த்தின் பாச‌த்தின் மிகுதியால் இந்த‌ எண்ண‌ம் வ‌ர‌வில்லை!! அட‌ மூட‌ர்க‌ளே உங்க‌ளுக்கு எல்லாம் வ‌ச‌ன‌ம் தெரிய‌வில்லை என்று இதினால் தான் சொல்லுகிறேன்,

ரோமர் 8:29 தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்;

முன் குறித்த‌வ‌ர்க‌ளுக்கு தான் இயேசு கிறிஸ்துவை மூத்த‌ ச‌கோத‌ர‌ன் என்றும் அவ‌ரின் உட‌ன் சுத‌ந்திர‌வாளியாகும் த‌குதியும் இருக்கிற‌து, நிச்ச‌ய‌மாக‌ உம் துருப‌தேச‌ கூட்ட‌த்தாருக்கு இல்லை!! இனி இந்த‌ நேர‌டியான‌ வ‌ச‌ன‌த்திற்கும் ஏதாவ‌து ம‌ழுப்ப‌ல் வ‌ருமே!! இதை தான் இயேசு கிறிஸ்து க‌ண்க‌ள் இருந்தும் குருட‌ர்க‌ள் என்று சொல்லியிருக்கிறார்!! ஏதோ தாக்கி எழுத‌வேண்டும் என்கிற‌ ஒரே உண‌ர்ச்சி தான் உம‌க்குள் இருக்கிற‌து, அது உம்முடைய‌ எழுத்தில் தெரிகிற‌து!! வசனத்துடன் மோதிப்பார்க்காதே, சிதறி விடுவாய்!!

நீதிமொழிகள் 27:22 மூடனை உரலில் போட்டு உலக்கையினால் நொய்யோடே நொய்யாகக் குத்தினாலும், அவனுடைய மூடத்தனம் அவனை விட்டு நீங்காது.

//பாவிங்க, தேவத்துவத்தை எப்படியெல்லாம் கூறுபோடறானுங்க‌... இதற்கெல்லாம் பொறுமையாக பதில் எழுதுவதா அல்லது மற்றவர்களைப் போல கண்டும் காணாமற் போவதா? இது தேவ தூஷணம் அல்லவா? இந்த கிறித்தவத்துக்கென்று கட்டுப்பாடே கிடையாதா, இங்குமங்கும் மேய்ந்துவிட்டு, எவன் வேணுமானாலும் எதை வேண்டுமானாலும் எழுதிநம்முடைய தமிழ்க் கிறித்தவத்தை மாசுபடுத்தலாமா?//

தேவ‌த்துவ‌த்தை  கூறு போட்டு வித்துக்கிட்டு, ஒன்றான‌ மெய் தேவ‌னை மூன்றாக‌ வித்துகிட்டு வீடு வீடாக‌ சென்று க‌ள்ள‌ உப‌தேச‌த்தை க‌ளையை போல் ப‌ர‌ப்பிக்கொண்டு இருக்கும் உம் கூட்ட‌னி தான்!! நீர் பொறுமையாக‌ வ‌ச‌ன‌த்தை வாசித்தால் போதும், எது தேவ‌ தூஷ‌ன‌ம் என்று புரிந்து விடும்!! முத‌லில் கிறிஸ்த‌வ‌ன் அல்ல‌து கிறிஸ்த‌வ‌ம் என்று கிறிஸ்துவை சொல்லி ப‌ழ‌கும், கிறுக்கு த‌ன‌மாக‌ எழுதுவ‌தினால் தான் கிறிஸ்துவத்தை  கூட‌ கிறித்த‌வ‌ம் என்று மாற்றியிருக்கிறேரே!! சேர்த்துக்கொள்வ‌தும், மாற்றியெழுதுவ‌தும் உங்களை போன்ற துருப‌தேச‌க்கார‌ர்க‌ளுக்கு கை வ‌ந்த‌ க‌லையாச்சே!! யார் மேய்ந்துவிட்டு எழுதுகிறான் என்று வ‌ச‌ன‌ம் தெரியாத‌ நீர் எழுத‌ தகுதிய‌ற்ற‌வ‌ராக‌ இருக்கிறீர்!! கிறிஸ்த‌வ‌த்தில் உம்மை போன்ற‌ க‌ளையால் நிற‌ப்பும் காரிய‌த்தை நீர் தொட‌ர்ந்து செய்யும்!! ஆனால் த‌ய‌வு செய்து உம்மை கிறிஸ்த‌வ‌ன் என்று சொல்லிக்கொள்ளாதேயும்!! இனி எழுதுவ‌த‌ற்கு முன் வ‌ச‌ன‌ம் இருக்கிற‌தா என்று பார்த்து எழுதும்!! உம் கூட்டாளிக‌ளிட‌ம் பெய‌ர் எடுக்க‌ வ‌ச‌ன‌த்தை கூறு போட்டு விடாதேயும்!! கிறிஸ்த‌வ‌ம் உம்மை போன்ற‌ துருப‌தேச‌க்காரர்க‌ளை ந‌ம்பி இல்லை!! கிறிஸ்த‌வ‌ம் தேவ‌னை ந‌ம்பியிருக்கிற‌து!! வ‌ச‌ன‌த்திற்கு ப‌ய‌ப்ப‌டாத‌ நீரும் உம் கூட்ட‌ளிக‌ளும் நான் எழுதுவ‌து திருத்துவ‌த‌ற்கு அல்ல‌, ஆனால் யெளவ‌ன‌ ஜ‌ன‌ம் போன்ற‌ த‌ள‌த்தில் க‌ள்ல‌ போத‌க‌மும் துருப‌தேச‌மும் எப்ப‌டி இருக்கிற‌து என்று காண்பிக்க‌வே!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

// The name Yehoshua has the form of a compound of "Yeho-" and "shua": Yeho- יְהוֹ is another form of יָהו Yahu, a theophoric element standing for the personal name of God YHWH, and שׁוּוֹשֻׁעַ shua‘ is a noun meaning "a cry for help", "a saving cry",[8][9][10] that is to say, a shout given when in need of rescue. Together, the name would then literally mean, "God is a saving-cry," that is to say, shout to God when in need of help. //

http://en.wikipedia.org/wiki/Yeshua_%28name%29

என்ன‌ தான் இதிலிருந்து புரிகிற‌து என்று இதை காண்பிக்கிறார்?? தியோஃபோரிக் எலிமெண்ட் (theophoric element) என்றால் என்ன‌வென்று தெரியுமா க‌ள்ள‌ போத‌க‌ருக்கு!! யெகோவா தேவ‌னோடு தொட‌ர்புடைய‌ ஒரு தேவ‌னின் பெய‌ர்!! இதில் என்ன‌ த‌வ‌று இருக்கிற‌து!! One who stands for God (Jehovah), என்ப‌து சாதார‌ன‌மாக‌ புரிந்துக்கொள்வோருக்கு!! இயேசு என்ப‌தோடு யெகோவா என்று த‌ந்திருப்ப‌தால், வ‌ழ‌க்க‌ம் போல் திரித்து எழுதுகிற‌ க‌ள்ள‌ போத‌க‌ன் இதிலும் த‌ன் கை வ‌ரிசையை காண்பித்திருக்கிறார்!! முழுவ‌துமாக‌ எதையும் ப‌டிக்க‌ வேண்டும்!!

//இங்கே வேத வார்த்தைகளைத் திரிப்பதற்கு பதிலாக நீர் கடற்கரைக்குச் சென்று அங்கிருக்கும் திரளான மணலைக் கொண்டு கயிறு திரிக்கலாம்;"இதெல்லாம் ஒரு பிழைப்பா" என்று கேட்க வேண்டும் போலிருக்கிறது;ஆனாலும் உம்மைப் போன்றவர்களைத் தாக்கி என்னுடைய நற்பெயரைக் களங்கப்படுத்திக் கொள்ள மனம் வரவில்லையே..//

க‌யிறு திரிப்ப‌து, அதை அடுத்த‌வ‌ன் காலில் போட்டு விழ‌வைப்ப‌து எல்லாம் உம்மை போன்ற‌ க‌ள்ள‌ போத‌க‌னுக்கு கைவ‌ந்த‌ க‌லை, அதை நீரே செய்யும்!! உம‌க்கு ந‌ற்பெய‌ர் என்று ஒன்று இருக்கிற‌து என்று நீரே நினைத்துக்கோண்டால் அத‌ற்கு நான் என்ன‌ செய்ய‌ முடியும்!!

//இயேசு தம்முடைய பிதாவின் நாமத்தினால் இங்கே வந்தார்,அவருடைய ஒவ்வொரு செயல்பாடும் பிதாவின் கிரியை போலவே இருந்தது; இயேசு (Yehoshua.) எனும் பெயரின் மூலபாஷை வார்த்தையின் முதல் எழுத்தே பிதாவின் நாமம் தான்; அதனை மகிமைப்படுத்தவே மீண்டும் மீண்டும் வேண்டுகிறார்.மகிமைப்படுத்தல் என்பதன் மூலம் ஆண்டவர் கோருவது தனது ஊழியத்துக்கான அங்கீகாரம்.அங்கீகாரமே மகிமை எனப்படுகிறது.//

இந்திய‌விலிருந்து வெளிநாடுக‌ளுக்கு துத‌வ‌ர்க‌ளாக‌ செல்ப‌வ‌ரும் தான் இந்திய‌ அர‌சாங்க‌த்தின் நாம‌த்தில் செல்கிறார்க‌ள், அப்ப‌டி என்றால் அவ‌ர்க‌ள் தான் இந்திய‌ அர‌சா!! அவ‌ர்க‌ள் எதை செய்தாலும், இந்திய‌ அர‌சிட‌ம் கேட்டு தான் செய்ய‌ வேண்டும்!! இயேசு கிறிஸ்து அதையே செய்தார்!! பிதா த‌ன் குமார‌னை அனுப்பினார் என்று வ‌ச‌ன‌ம் சொன்னாலும் உம்மை போன்ற‌ குருட‌ர்க‌ளுக்கும் செவிடர்களுக்கும் ஏன் தான் விளங்கிக்கொள்ள‌முடிய‌வில்லையோ!! பிதாவின் நாம‌த்தில் வ‌ந்தார் என்றால் பிதா அனுப்பி வ‌ந்திருக்கிறார், ஆக‌வே தான் கிறிஸ்து சொல்லுகிறார்,

யோவான் 5:30 நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.

யோவான் 7:28 அப்பொழுது இயேசு தேவாலயத்தில் உபதேசிக்கையில் சத்தமிட்டு: நீங்கள் என்னை அறிவீர்கள், நான் எங்கேயிருந்து வந்தேனென்றும் அறிவீர்கள்; நான் என்சுயமாய் வரவில்லை, என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர். அவரை நீங்கள் அறியாதிருக்கிறீர்கள்.

யோவான் 8:28 ஆதலால் இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனை உயர்த்தின பின்பு, நானே அவரென்றும், நான் என்சுயமாய் ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் என்றும் அறிவீர்கள்.

யோவான் 8:42 இயேசு அவர்களை நோக்கி: தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார்.

யோவான் 12:49 நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்.

இயேசு கிறிஸ்துவின் வார்த்தைக‌ளை தாம் யார் என்ப‌தை சொன்னாலும் க‌ள்ள‌ போத‌க‌ன் சில்சாமின் த‌லைமையில் ஒரு கூட்ட‌ம் வ‌ச‌ன‌ங்க‌ள்கை அங்கிக‌ரிக்க‌ ம‌ன‌மில்லாம‌ல், இன்னும் த‌ன் பார‌ம்ப‌ரிய‌த்தில் பித‌ற்றுவ‌தை அவ‌ரின் எழுத்துக்க‌ள் காண்பிக்கிற‌து!! ஒவ்வொரு வ‌ச‌ன‌மும் கிறிஸ்து யாரால் "அனுப்ப‌ப்ப‌ட்டார்" என்று சொல்லுகிற‌தே த‌விர‌, பிதா தான் கிறிஸ்துவாக‌ வ‌ந்தார் என்கிற‌தை அல்ல‌!!

//உங்களுக்குக் கொடுக்க என்னிடம் வசனம் இல்லை'ங்ணா;ஏற்கனவே உரைக்கப்பட்ட வார்த்தையே உங்களை நியாயந்தீர்க்க போதுமானது.//

உம‌க்கு வ‌ச‌ன‌ம் தெரியாது என்று சொல்லுவ‌தில் ஒன்றும் பெரிய‌ ஆச்ச‌ரிய‌ம் இல்லை!! அதை தான் நான் முத‌லிலிருந்தே சொல்லிக்கொண்டு வ‌ருகிறேனே!! பார‌ம்ப‌ரிய‌த்தை வைத்துக்கொண்டு, ம‌ந்திர‌வாதியை போல் ச‌பித்து கால‌த்தை ஓட்டும் உம‌க்கு வேறு என்ன‌ தெரியும்!! வ‌ச‌ன‌ம் தெரியாத‌ உம‌க்கு நியாய‌த்தீர்ப்பு என்றால் என்ன‌ என்று தெரியாது!! உம்முடைய‌ குருட்டு வார்த்தைக‌ளுக்கு நியாய‌ந்தீர்க்கும் அதிகார‌ம் என்று சொல்லுவ‌தெல்லாம் உம்மையே கிறிஸ்து என்று உய‌ர்த்திக்கொள்ளுத‌ல் ஆகும்!! மூட‌னே தேவ‌னுக்கு ப‌ய‌ப்ப‌டும், அவ‌ரின் நியாய‌த்தீர்ப்புக்கு ப‌ய‌ந்திரும்!! உம‌க்கு இந்த‌ வ‌ச‌ன‌த்தையும் காண்பித்துவிடுகிறேன்,

யோவான் 5:22 அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர்தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்.

இப்ப‌டியாக‌ கிறிஸ்துவின் நியாய‌த்தீர்ப்பு ஒன்றுக்கே நான் ப‌ய‌ந்திருப்பேன்!!‌ க‌ள்ள‌ போத‌க‌னான‌ உம‌க்கும் நீர் விடும் வெத்து வேட்டு சாப‌ங்க‌ள் உம‌க்கே உரித்தாக‌ட்டும்!! உம‌க்கு இன்னும் உம் ப‌ழைய‌ மார்க்க‌த்தின் நினைப்பு தீர‌வில்லை போல்!! அனைத்திலும் நான் தான் உச‌த்தி என்கிற‌ அந்த‌ த‌லைக்க‌ன‌ம் இன்னும் உம்மிட‌த்தில் இருக்கிற‌து, முத‌லில் அதை விட்டு வில‌கு, பிற‌கு க‌ண்க‌ள் திர‌க்க‌ப்ப‌டும்!! அது வ‌ரையில் உம‌க்கு வ‌ச‌ன‌ம் சொன்னாலும் புரியாது, வேத‌த்தை காண்பித்தாலும் உமக்கு புரியாது!! என்றைக்கு வசனம் புரிகிறதோ, அன்றைக்கு வாரும் விவாதம் செய்ய‌!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
ஊடுருவும் சத்தியமும் சில்சாமின் பத(பித)ற்றலும்!!


தம்மை போன்ற கள்ள போதகர்களின் சாயம் வெளுத்துவிடும் என்கிற அச்சம் ஒரு பக்கம், தாங்கள் செய்யும் போதனை கள்ள போதனை தான் என்று தெரிந்தும் அதை துனிந்து செய்துக்கொண்டிருக்கும் சில்சாமின் மற்றுமோர் பதிவு:

ஒரே விஷயத்திற்கு அவரின் மாறுபாடான கருத்துக்களை பாருங்கள். கேட்டால் நான் அன்று முதல் இன்று வரை ஒரே கருத்து உள்ளவனாக தான் இருக்கிறேன் என்பார்!! தன்னை கிறிஸ்தவ போலீஸ் என்றும் தன் கருத்துக்களை வேத வாக்கியம் என்றும் பிறரை நம்ப சொல்லுகிறார் அல்லது மிரட்டுகிறார்!! இது விஜய் கேட்ட கேள்விகளோ அல்லது வேறு எவர் மூலமாக வந்ததோ, இது போன்ற கேள்விகள் நிறைய இருக்கிறது, ஆனால் அதற்கு பதில் கொடுக்க அல்லது தெரியாதவர்களின் ஒரே மழுப்பல், "ஊழியர்களை குற்றம் சொல்லக்கூடாது" என்கிற ஒரே ராகம் தான்!! வேதம் இவர்களை ஊழியர் என்று சொல்லவில்லை, இவர்களே தங்களை தாங்களே ஊழியர்கள் என்று நியமித்துக்கொண்டு, வேதத்தில் இல்லாதது, தேவன் என்னிடத்தில் வந்து இதை சொல்ல சொன்னார் என்றும், நான் நேற்று சொப்பனத்தில் பார்த்தது என்றும், பரலோகத்தில் கூட்டி கொண்டு போய் எனக்கு காண்பித்தார் என்றும் சொல்லும் பழக்கமுடையவர்கள்!! இந்த ஓநாய்களிடம் எச்சரிக்கையாக இருப்பதற்கு இது போன்ற கேள்விகள் நிச்சயமாக உதவும்!!

இனி சில்சாமின் இதே கேள்விகளுக்கான பல விதமான கருத்துக்களை பார்த்து இவர் எந்த மனோநிலையில் இருக்கிறார் என்று வாசகர்களே அறிந்துக்கொள்ளுங்கள்!! இவர் போலீஸா அல்லது போலீஸ் வேஷத்தில் இருக்கும் திருடனா என்று முடிவு செய்யுங்கள்!!

விஜய் தளத்தில் பதிந்தவைகள்:

1. chillsam says:
1:18 AM இல் December 6, 2010
நண்பர் விஜய் அவர்களின் கருத்துக்கு ஒப்பாக நம்முடைய தளத்தில் அடியேன் முன்வைத்த ஒரு கருத்து…

ஆடுகளைக் கூட்டிச் சேர்ப்பது மட்டுமல்ல,
அவை சிதறிப் போகாமல் காப்பாற்ற வேண்டும்.

வலைவீசி மீன்களைப் பிடிப்பது மாத்திரமல்ல,
அவை கரையேறுவதற்குள் மீண்டும்
துள்ளி விழுந்துவிடாமல் காப்பாற்ற வேண்டும்.

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=34927703

2. chillsam says:
1:23 AM இல் December 6, 2010
கடந்த சுமார் ரெண்டு வருடமுன்பு அடியேன் தமிழ்க் கிறித்தவ தளத்தில் பதித்து பெரும் வரவேற்பைப் பெற்ற ஒரு கட்டுரையானது..
http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=39725067
நண்பரின் எட்டாவது கேள்வியை எதிரொலிக்கிறது;
வாசித்து நண்பர் தம் கருத்துகளை முன்வைக்க அழைக்கிறேன்.

3. chillsam says:
5:15 AM இல் December 13, 2010
ஒரு பின்னூட்டத்தையே கட்டுரையாக வழங்கிய விஜய் அவர்களைப் பாராட்டுவதா, தனது ‘நச்’ கேள்வியினால் ஒரு கட்டுரையினைப் பிரசவிக்கச் செய்த வாசகரை பாராட்டுவதா என்று தெரியவில்லை; எப்படியோ இதனால் எனக்கும் ஒரு கட்டுரை எழுதும் வாய்ப்பு கிட்டியது; பாராட்டுக்கள்.., இருவருக்கும்..!

2011 எப்படியிருக்கும்..? புத்தாண்டு கணிப்பு..!
http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=39870203

இதையே இவ‌ர் த‌ன‌து த‌ள‌த்தில் இப்ப‌டி எழுதுகிறார்:

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=40993305

 

RE: வெளியே இருக்கும் எதிரிகளும் உள்ளே இருக்கும் துரோகிகளும்
 

நண்பர் விஜய் அவர்கள் கிறித்து சபையின் எழுப்புதலுக்காக ஏங்குபவர்;அவருடைய எழுத்துக்கள் அதனை வாசிக்கும் யாருக்கும் ரெண்டுவித பாதிப்பைக் கொண்டுவரும்;ஒன்று இவரைத் தூக்கியெறியச் செய்யும்;அல்லது வாசிப்பவர் தூக்கியெறியப்படுவார்;இது கொஞ்சம் பழைய கருத்து தான் எனினும் இந்த கருத்து உருவாகக் காரணமான  (எழுப்புதல் தாமதிப்பதேன்..?) புத்தகங்களை விஜய் அதிகமாகப் படித்திருப்பதால் அவர் அந்த புத்தகமாகவே மாறிவிட்டார் போலும்;நாம் இதைவிட பெரிய ஆளையெல்லாம் பார்த்துவிட்டோமல்லவா,இதெல்லாம் நமக்கு சாதாரணம்; அது அப்போ., இது இப்போ., அப்புறம் எப்போ..? என்று மேட்டிமையான கண்களுடன் கேட்டுப் பழகியவர்கள்;

ஒரு திருமண வீட்டில் எச்சில் இலையை எடுக்க ஒரு பணியாளை நியமித்தார்களாம்;அந்த வேலையாள் இலைகளை வேகமாக எடுத்து அடுத்த பந்திக்கு ஆயத்தம் செய்யாமல் அந்த எச்சில் இலைகளை எண்ணிக் கொண்டிருந்தானாம்;வேலைக்குப் பணித்தவன் வந்து சத்தம் போட்டான்,"ஏண்டா, இலையை எடுடா என்றால் அதை எண்ணிக்கிட்டிருக்கிறாயா" என்று..!

அதுபோலவே கிறித்தவ உலகின் மந்தத் தன்மையைப் போக்க பந்தம் கொளுத்திப் போராடும் எம்மைப் போன்ற சிறியவர்களை எள்ளி நகையாடிப் பகடி செய்யும் அகதிகள் பெருகிவிட்டனர்;அவர்கள் எமது கருத்துக்கு மரியாதை தராவிட்டாலும் போகட்டும்,மாற்றத்துக்காக ஏங்கி பெருமூச்சுடன் எழுதும் எங்களை மனமடிவாக்காமலிருக்கலாமே? பிரச்சினை இருப்பதால் தானே கூவுகிறோம்,பிரச்சினையை சரி செய்ய ஒத்துழைக்காமல் அதைக் குறித்து பேச நீ யார் என்பது எவ்வளவு மோசமான மந்தத்தன்மையல்லவா? தீப்பந்தத்தின் வெளிச்சத்தில் ஆக வேண்டியதைப் பார்க்காமல் பந்தத்தின் த‌ன்மையைக் குறித்து ஆராய்ச்சி செய்வது மடமையல்லவா?

விஜய் அவர்களுடன் நமக்கு பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருப்பினும் அவருடைய உணர்வுகளைப் புரிந்துகொண்டு நாம் அவருக்கு தார்மீக ஆதரவு அளித்து வருகிறோம்;ஆனால் அவருடைய புரட்சிகரமான கருத்துக்கள் கள்ள உபதேசிகளின் வாய்க்கு அவலாகி விட்டதை எண்ணி மனம் பதறுகிறது.

விஜய் அவர்களின் "மனதை நெருடும் 10 கேள்விகள்" எனும் கட்டுரையானது பல்வேறு தளங்களில் வைத்து விவாதிக்கப்படுகிறது;அதைக் குறித்த ஒரு கவன ஈர்ப்பைக் கொண்டு வரவிரும்பி இங்கே நம்முடைய தள நண்பர்களிடம் அதைக் குறித்து நாம் பகிர்ந்துகொள்ளுகிறோம்.

தொடர்வது விஜய் அவர்களின் தளத்தில் நாம் பதிவிட்டிருக்கும் ஒரு எச்சரிக்கை...


நண்பர் விஜய் அவர்களுக்கு,தங்களுடைய இந்த பத்து கேள்விகள் அடங்கிய கட்டுரையானது அப்பன் பெயர் தெரியாத பிள்ளையைப் போல அங்குமிங்கும் சிதைந்து திரிந்துகொண்டிருக்கிறது;நீங்கள் உடனடியாக செய்யவேண்டியது தங்கள் கட்டுரைகளைக் குறித்த கண்டிப்பான அறிவிப்பு;இதனால் வீணான குழப்பங்களையும் சர்ச்சைகளையும் நீங்கள் தவிர்க்கலாம்;நீங்கள் எழுதிய நோக்கமானது மறை(று)க்கப்பட்டு எதிரிகளுக்கு அவல் போலாகிவிட்டதை சற்று கவனியுங்கள்..!


http://kovaibereans.activeboard.com/forum.spark?aBID=128972&p=3&topicID=41124215

http://eternal-life.activeboard.com/forum.spark?aBID=134761&p=3&topicID=41118228

http://www.tamilchristians.com/index.php?option=com_ccboard&view=postlist&forum=10&topic=2064&Itemid=287

 

 



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
RE: ஊடுருவும் சத்தியமும் சில்சாமின் பத(பித)ற்றலும்!!


//அந்த ஆதாரத்தின்படி நாம் இவர்கள் மீது சட்டப்பூர்வ‌ நடவடிக்கை எடுக்கமுடியும்; எப்படியெனில் நம்முடைய பொதுவான கிறித்தவ‌ நம்பிக்கைக்கு விரோதமாகப் பேசுவதும் எழுதுவதும் சட்ட விரோதமானதாகும்; எனவே காவல்துறையின் அனுமதியுடன் வீடுவீடாக வரும் இவர்கள் மீது தைரியமாக நடவடிக்கை எடுக்கலாம்;//

வேதப்புத்தகம் ஒன்றும் சில்சாமின் காப்பிரைட் காவியம் கிடையாது என்பது கள்ள போதகனுக்கு தேரியவில்லை போல்!! விரக்தியின் எல்லைக்கு வந்திருக்கும் சில்சாம் பிதற்ற ஆரம்பித்து விட்டார் போல்!!

நமது வேதத்தின்படி உள்ள சத்தியத்தை பின்பற்றுபவர்கள் (கள்ள தீர்க்கதரிசிகள் சொல்லுவது போல் வேத மாணவர்களோ அல்லது யெகோவா சாட்சிகளோ அல்லாதவர்கள்) தமிழகம் எங்கும் பொது மேடை போட்டே வேத பாட வகுப்புகள் நடத்தி வருகிறார்கள்!!

கள்ள விசுவாசத்தை சேர்ந்தவர்கள் கோவையில் கைபிரதிகள் கொடுத்து இந்த வேத வகுப்புகளில் பங்கு பெற வேண்டாம் என்று வீண் முயற்சி செய்த போதிலும், அரங்கம் முழுவதுமாக நிறம்புகிறது (பேய் ஓட்டுவது, கைகளை வைப்பது, ஆவியில் குதிப்பதும் சிரிப்பது, அழுவது, மின்சாரம் தாக்கியது என்று பொய் சாட்சி சொல்லுவது, என் கிட்னியை எடுத்து வேறு ஒன்றை வைத்து போனார் இயேசு சாமி, கான்சர் கட்டியை பிடிங்கி போட்டார் போன்ற உணர்சிப்பூர்வமான சாட்சிகளோ, பிடித்து தள்ளுவது, கண்ணீர் துடைப்பதோ இங்கு நடப்பதில்லை, எல்லாவற்றுக்கும் மேல் நாளைக்கு தீ பிடிக்கும், வருகிற வருடத்தில் ஏதாவது ஒரு மாதத்தில் பூகம்பம் வரும் போன்ற தீர்க்கதரிசனம் சொல்லுவதில்லை) ஆர்வமான இந்த வகுப்புகளில் எந்த விதத்திலும் வேதத்தை புரட்டாமல் நடத்துகிறார்கள் என்பது வருகுற கூட்டம் சாட்சியாக இருக்கிறது!! வித்தைகள் காட்டும் போல் 5 இலட்ச்சம் கூட்டம் எல்லாம் வராது, ஆனால் சத்தியத்தை விரும்பும் பல சபைகளை சேர்ந்தவர்கள் ஆர்வமாக வருகிற அரங்கமாக காணப்படுகிறது!!

ஏதோ ரகசியமாக நடக்கும் வகுப்புகள் அல்ல சில்சாம் அவர்களே, நீங்கள் என்ன உங்கள் கள்ள சகோதரர்களும் தாராளமாக வரலாம், வீடியோ எடுக்கலாம் போட்டு பார்க்கலாம், இல்லாட்டி வித்து வியாபாரம் கூட செய்யலாம்!! நாங்கள் கிறிஸ்தவர்கள் என்று தைரியமாக அறிக்கை செய்வோம், உங்களில் இருக்கும் ஒரு சாரார் போல் இரகசிய கிறிஸ்தவர்கள் கிடையாது!! பகிரங்கமாக நடக்கும் வகுப்புகளுக்கு எதற்கு இரகசியமாக வரனும், யார் வந்தாலும் வரவேற்கிறோம், இலவசமாக அன்றைய வகுப்பின் புத்தகத்தை தருகிறார்கள்!! உங்கள் விசுவாசத்தை சார்ந்த ஊழியர்கள் போன்று வருடாந்தர சந்தா, போஸ்டேஜ் செலவு என்று சம்பாதிக்கும் நோக்கத்தில், எங்கள் கூட்டத்தில் வந்து சுகம் கிடைத்தோரின் சாட்சிகள், குருடர்கள் கண்டார்கள், செவிடர்கள் பேசினார்கள், இந்த புத்தகத்தை வையிற்றின் மேல் வைத்தவுடன் 20 வருடமாக இருந்த வயிற்றுவலி போய்விட்டது என்கிற மாதிரியான விஷயங்கள் அதில் இருக்காது!! இந்த கூட்டத்தில் வேத பாடங்களை தவிர வேறு ஒன்றும் இல்லை!!

அடுத்து வீடு விடாக போவது யார் என்று தெரியுமா!! வேலைவெட்டி இல்லாமல் சோம்பேறிகளாக ஊர் சுற்றுவோர் செய்யும் காரியம் இது!! வருமானத்திற்கு எதை வேண்டுமென்றாலும் பொய்யாக ஒரு ஆறுதல் சொல்லி காணிக்கை பெற்று செல்வோரின் வேலையை யார் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரியுமா!! கினற்றில் இருந்துக்கொண்டு கல்லை வீசினால் அது மீண்டும் உங்கள் கூட்டத்தார் மேல் தான் விழும்!!

//எப்படி இயேசுவை அறிவிக்கச் செல்லும்போது இந்துக்கள் நம்மை எதிரிகளாக பாவிக்கிறார்களோ அதுபோலவே நாமும் இவர்களைப் பாவித்து அதற்கேற்ற மரியாதை(?) கொடுக்கவேண்டும்; தெருப்பொறுக்கிகள் சந்தையில் புகுந்து கலகம் விளைவிக்கத் தூண்டுவதற்கொப்பான முயற்சியாக இதனைக் கருத்தில் கொள்ளவேண்டும்;//

நடுசந்தியிலும் மூட்டு சந்தியிலும் யார் இன்று காணிக்கை தா காணிக்கை தா என்று கதறுகிறார்கள், யார் கிறிஸ்துவை வியாபார பொருளாக ஆக்கிவிட்டார்கள் என்பது கள்ள போதகனுக்கு தெரியவில்லை போல்!! தெருப்பொறுக்கி என்றால் தெருவில் நின்று காணிக்கையை பொறுக்கபவன் என்பது சரியாக தான் இருக்கும், அது எல்லாம் திரித்துவர்களுக்கு கைதேர்ந்த வித்தையாச்சே!! உங்களை போன்றோரை பார்த்து பரலோகத்திலிருக்கும் தேவன் நகைத்துக்கொண்டிருப்பார்!! நீங்கள் ஹிந்துக்களை பாவிகளாக இருக்கிரீர்கள், நரகத்திற்கு போய்விடுவீர்கள் என்று பெரிய பரிசுத்தவான்கள் போன்று பொய் பேசினால் அவர்களுக்கு நிச்சயமாக கோபம் வருவதில் தவறு ஒன்றும் இல்லையே!! சுவிசேஷத்தை சுவிசேஷமாக சொன்னால் யாருக்கும் கோபம் வராது!! தேவன் தன் குமாரனை அனுப்பி எல்லா ஜனங்களும் சந்தோஷம் அடையும்படியான செய்தியை தான் கொடுத்தார், ஆனால் உங்கள் கூட்டத்தார் அதை வெறுப்பின் செய்தியாக உருவாக்கி, உங்கள் கூட்டங்களில் அடுத்தவர்களை சபித்து பேசியே பழகியிருப்பதால் அவர்களுக்கு கோபம் வரத்தான் செய்யும், உம்முடைய கூட்டத்தாரை பார்த்து எதிரிகளாக பாவிக்க தான் செய்வார்கள்!!

//அடுத்து கைப்பிரதிகள் மூலமும் சபையாரை எச்சரிக்கலாம்; மேலும் இவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்னஞ்சல் செய்யவேண்டும்; தொலைபேசி மூலமும் எச்சரிக்கவேண்டும்.மற்றபடி இவர்களுடன் நேரடி விவாதம் செய்வதில் எந்த பயனும் இல்லை; முடிந்தால் அவர்களுடைய கூடுகைக்குச் சென்று அங்கு வஞ்சிக்கப்படும் நிலையிலுள்ளவர்களுடன் அப்பாவிகளைப் போலப் பேசிப்பழகி நட்பை வளர்த்து அவர்களுடைய சூழ்ச்சிகளை அம்பலமாக்கவேண்டும்.//

குறைந்தபட்சம் கோவையில் உங்களின் இந்த முறை தோல்வி அடைந்துவிட்டது!! இதை விட கேவலாமான ஒரு வழியை கள்ளத்தீர்க்கதரிசிகளின் கூட்டத்தாரான இவர்களின் ஆட்களை  தவிர வேறு யார் கையாளமுடியும்!! எங்களுக்கு எல்லாம் ஆடு திருடி பழக்கம் இல்லை அதை செய்வது எங்கள் தொழிலும் அல்ல, ஏனென்றால் தேவன் எங்களுக்கு தேவையான ஆகாரம் தருகிறார் என்று அவரையே நம்பியிருக்கிறோம், ஆனால் வேதத்தை கைகளில் வைத்துக்கொண்டு வசனத்தை சொல்ல மறுத்து பாட்டி கதைகள், பரலோக நரக கதைகள், பாதாள கதைகள், தொட்டு தள்ளிவிடுதல், குறிச்சொலுவது போன்றவற்றைகொண்டு சபை நடத்துவோர் புதிது புதிதாக ஏதாவது வித்தை கையில் வைத்திருக்க வேண்டும், இல்லாவிட்டால் வருமானம் போய் விடுமே!! நாங்கள் ஒன்றும் பூட்டிய அறைக்குள் பேசுவது கிடையாது, இரகசியம் பேசுவது கிடையாது, எதை செய்தாலும் பேசினாலும் பொது மேடையில் (தெரு மேடையில் காணிக்கை எடுப்பதற்காக அல்ல) தான் பேசுவோம் ஆகவே சூழ்ச்சிகளாகவும் அதை அம்பலமாக்கவேண்டும் அலவிற்கு ஒன்றும் இல்லை!! நீங்கள் எல்லாம் தாராளமாக வரலாம், தேவனுக்கு சித்தமாக இருந்தால் உங்கள் ஆட்களும் (சவுல் பவுலாக மாறியது போல்) மாற வாய்ப்பு இருக்கிறது!!

//நம்முடைய வீடுகளில் நடக்கும் சாதாரண ஜெபக்கூடுகைகளை வேத ஆராய்ச்சி கூட்டமாக மாற்றியமைத்து அதில் இதுபோன்ற கள்ள உபதேசங்களைக் குறித்த விழிப்புணர்வை உண்டாக்கவேண்டும்; அதுபோன்ற கூடுகைகளுக்கு இவர்களுடைய உபதேசத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை அழைத்து வந்து பரிசோதித்து சிகிச்சையளிக்கவேண்டும்;.//

உங்கள் வீடுகளில் நடக்கும் ஜெபக்கூடுகளில் வேதத்தை ஆராய்ச்சி செய்ய உங்களுக்கு முடியாது, கண்ணீர் துடைக்க சாட்சிகள் சொல்ல, தங்களை பரிசுத்தவான்களாக நிலைநாட்டவே உங்களை போன்றோருக்கு நேரம் சரியாக இருக்கும், இன்னும் கொஞ்சம் அதிகம் என்றால் பிற மதத்தாரையும் அவர்கள் வழிப்பாடு தளங்களை கட்டி ஜெபிப்பது தெரியும், அதை தான் தொடர்ந்து செய்துக்கொண்டு இருப்பீர்கள், ஏனென்றால் பொய்யை விசுவாசிக்கும் திரித்துவ கூட்டத்தார் மேல் தேவன் வஞ்சிக்கும் ஆவியை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்!! நோயாளிகளாக ஏற்கனவே இருப்பவர்களுக்கு தேவை வேதத்தின் வார்த்தைகளே அன்றி பிற மதங்களையும் சத்தியத்தை சொல்லுவோரை தூஷிப்பதினால் அவர்களுக்கு ஒன்றும் கிடைக்காது!! மேலும் நீங்கள் எல்லாம் உங்கள் மேலும் உங்களின் தந்திரங்களின் மேலும் விசுவாசம் கொண்டு இருப்பதால், சாத்தானை போல் பெறும் திரளான கூட்டத்தை கூட்ட முடிகிறது!! நாங்களோ தேவன் மேல் நம்பிக்கையாக இருக்கிறோம், அவர் யார்மேல் எல்லாம் சித்தம் கொண்டுள்ளவராக இருக்கிறாரோ, அவர்கள் நிச்சயம் சத்தியத்தை அறிந்துக்கொள்வார்கள், சில்சாமையும் சேர்த்து தான் சொல்லுகிறேன்!!

//ஆம், நோயாளிகளை இன்னொரு நோயாளியோ சாதாரணமானவர்களோ பரிசோதிக்கவோ நோயின் தீவிரத்தையறிவோ சிகிச்சையளிக்கவோ முடியாதது போலவே எல்லோரும் இதனைச் செய்யமுடியாது; பயிற்சி பெற்றவர்களே இதனை செய்யமுடியும்; எனவே நிதானமாக வேதத்தைக் கற்கும் ஆரோக்கிய உபதேசக் குழுக்களை உருவாக்கி பயிற்றுவித்து ஊக்குவிக்கவேண்டும்.//

தங்களை பிரித்து காண்பிக்கும் தந்திரத்தை பாருங்கள்!! தன்னை வேத பண்டிதர் என்று நினைத்திருக்கிறார் போல்!! ஆரோக்கிய உபதேசங்கள் வேதத்தில் இருக்கிறது, குழுக்களில் இல்லை!! கூட்டம் கூட்டி ஊக்கு வேண்டுமென்றால் விற்கலாம், சத்தியம் சொல்ல முடியாது, ஏனென்றால் நீங்கள் எல்லாம் உங்களில் சிலர் மாத்திரமே பிரித்தெடுக்கப்பட்டவர்கள் என்று பாவிக்கிறீர்கள்!! மேட்டிமை தான் சாத்தானை தள்ளியது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்!!

//மேற்கண்ட காரியங்கள் (மேசியாவின்) எதிரிகளுக்கு மட்டுமல்ல, அனைத்து தரப்பு கள்ள உபதேசிகளுக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் பொருந்தும்; யார் வேண்டுமானாலும் இதுசம்பந்தமாகக் கேள்விஎழுப்பட்டும், விளக்கம் கேட்கட்டும்; நேரிலோ தொலைபேசியின் மூலமோ விவரம் சொல்ல ஆயத்தமாக இருக்கிறோம்.//

பொது விவாத மேடையில் கேட்ட கேள்விகளையும் பதிவுகளையும் மறைத்த சில்சாமின் வழக்கமான மழுப்பல் தான் இது!! பதிவுகள் நீக்கபடவில்லை, மறைக்கப்பட்டிருக்கிறது, அவ்வளவே!! முதலில் அந்த பதிவுகள் அனைவரும் காணும்படியாக இருக்கட்டும், அதன் பின் இவர் பதில் எழுதட்டும்!! சில்சாம் கிறிஸ்தவர்களின் காவளாலி என்று தான்னை நினைத்துக்கொண்டு இருக்கிறார்!! நாங்களோ தேவனை நம்புகிறோம், அவருக்கு சித்தமானது எல்லாம் இவர்களை போன்ற கள்ள போதகர்களால் ஒன்றும் செய்ய முடியாது!!




உங்கள் கூட்டத்தார் நடத்தும் கூட்டத்தில் ஒரு மதத்தாரின் வழிப்பாடு தளங்களை கட்டி ஜெபித்துக்கொண்டு அவர்களை காயப்படுத்திக்கொள்வதை வீடியோ எடுத்து வெளியிட்டால், உங்களை போன்றோர் கம்பி என்னிக்கொண்டிருப்பீர்கள், தெரியுமா!! வேதத்தில் உள்ளதை நாங்கள் போதிப்பதை என்னமோ சில்சாம் எழுதி வைத்து அதை நாங்கள் திரித்து பேசுகிறோம் என்று அலறிக்கொண்டு கூப்பாடு போடுகிறாரே, மற்றவர்களின் விசுவாசத்தை நீர் பந்தாடுவது உமக்கு சாதாரனமாக இருக்கலாம், ஆனால் அந்த பாரம்பரியத்தில் அந்த விசுவாசத்தில் வளர்ந்தவருக்கு அது தான் மேன்மையானதாக இருக்கும்!! தேவன் யார் மேல் சித்தம் கொண்டு இருக்கிறாரோ அவரை கிறிஸ்துவண்டையில் இழுத்துக்கொள்வார், உம்மை போன்றோரின் கட்டி ஜெபித்தல் பகையை தான் உருவாக்குமே தவிர சுவிசேஷத்தை கொண்டு செல்லாது, ஏனென்றால் சுவிசேஷம் என்றால் என்னவென்று தெரியாத கூட்டத்தை சார்ந்த கள்ள போதகராக இருக்கிறீர்!!

வழக்கமாக சில்சாம் எழுதியதற்கான பதில் தான், இதுஒன்றும் பொன்னான தளம் கிடையாது தொடுப்பு கொடுத்து ஜனங்களை விழசெய்வதற்கு!! நாகரீகம் தொடுப்பு கொடுப்பதில் இல்லை, என்ன எழுதுகிரோம் என்பதில் தான் இருக்கிறது!!


__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//கோவை பெரியன்ஸ் எனும் பெயரில் பிசாசின் உபதேசங்களை எழுதிக்கொண்டிருக்கும் போக்கிலிகள் சிலர் தன்னிலை மறந்து சுயநினைவிழந்த நிலையில் ஆரோக்கிய உபதேசத்துக்காக சத்தியத்தின் வழிநின்று போராடும் நல்ல குடும்பத்தைச் சேர்ந்த நண்பர்களை வரைமுறையில்லாமல் தூஷித்துக்கொண்டிருக்கிறார்கள்;//

உன்னையா எழுதினேன்!! நீ மற்றவர்களின் குடும்பத்தை குறித்து எழுதும் போது உனக்கு இந்த ஞானம் பிறக்கவில்லையா!! நான் அனைவரையும் நல்ல குடும்பத்தில் இருப்பவர்கள் என்று தான் பாவிக்கிறேன்!! உனக்கு நண்பர்கள் என்றவுடன் நல்ல குடும்பத்தார், உனக்கு எதிரி என்பதால் வேசியின் குடும்பத்தார் என்பது நீ உண்மையில் பிசாசின் தூதன் அல்ல, பிசாசின் கூட்டாளி என்றே தெரிகிறது!! மேலும் உன்னை போல் தனிப்பட்ட மனித தாக்குத்தலில் ஈடு படுவது நான் இல்லை, வரைமுறை தூஷனம் என்பது உன்னை பொறுத்த வரை ஒன்றும் இல்லை என்பதற்கு நீ பதிந்த இந்த பதிவே சாட்சியாக இருக்கிறது!! நீ என்ன அவர்களிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு வக்காலத்து செய்கிறாயா, அல்லது அவர்களின் கைத்தடியா!! என்னமோ இனிமே இயேசுவை தொழத்தக்க தேய்வம் இல்லை என்று எழுதினால் மாத்திரமே நான் பதில் எழுதுவேன் என்று பிதற்றினாயே, இப்போ என்ன எதுவும் காசு பணம் அனுப்பி வைத்தார்களா உனக்கு இப்படி எழுத சொல்லி, இல்லை உன்னிடம் எழுதுவதற்கு என்னையும் என் தளத்தையும் விட்டால் வேறு போக்கு இல்லை என்பதற்காகவா!?

//அவர்களுடைய தலைவனான இரஸலின் உபதேசத்தை ஏற்க மறுக்கும் ஒரே காரணத்துக்காக எங்களைப் பகைக்கும் அவர்கள் நாம் எத்தனையோ முறை நல்லெண்ணத்துடன் நீட்டிய நேச‌ கரத்தை தட்டிவிட்டவர்கள்;இதே கோல்வின் அவர்கள் என்னை இவர்களுக்காகக் கண்டித்ததுண்டு;ஆனால் தற்போதோ அவரையே கீழ்த்தரமாக தூஷிக்கத் துவங்கிவிட்டார்கள்;இதற்கு என்ன காரணம்,நாம் அவர்களுடைய வண்டவாளங்களைத் தண்டவாளத்தில் ஏற்றிக்கொண்டிருக்கிறோம்;அதனை சமாளிக்கவே பதிலுக்கு கோல்வினை கத்தோலிக்கர் என்றும் அடியேனை பெந்தெகொஸ்தே என்றும் பொதுவாக பெந்தோலிக்கர் என்றும் அறிவில்லாமல் உளறிக்கொண்டிருக்கிறார்கள்; ஆனால்...

உன் நீல நிறம் மாறிப்போச்... டும்டும்டும்...
(வேத) மாணவன் வேஷம் கலைஞ்சி போச் டும்டும்டும்
நரி வேஷம் தெரிஞ்சு போச் டும்டும்டும் ..! //

நீயா கற்பனை குதிரையை ஓடவிட்டு எது வேண்டுமென்றாலும் எழுதிக்கொள், உன்னை யார் கேட்பார்கள்!! வேலை வெட்டில் இல்லாமல் உட்கார்ந்திருப்பவனுக்கு வேறு என்ன தான் பொழுதுப்போக்கு!! ரஸ்ஸலை ஒரு போதும் நான் என் தலைவன் என்று சொல்லவில்லை!! நீ நீட்டிய நேசக்கரம் தான் பதிவுலகமே அறியுமே!! ஆமா, நீங்கள் எல்லாம் பதிவு கொடுப்பது மாத்திரம் ரொம்ப உசத்தி என்று நினைப்பா!! கொல்வின் ஆரம்பித்து வைத்தை நான் தொடருகிறேன்!! அவரையே கீழ்த்தரமாக என்றால் என்ன அவர் எழுதியதை எல்லாம் நீ பார்த்ததே கிடையாதா!! இல்லை உனக்கு மஞ்சள் காமாலையா!? நான் தான் பகிரங்கமாக எழுதியிருக்கிறேனே, நான் ரஸ்ஸலின் புத்தகங்களை படித்தது உண்டு என்று, பிறகு என்ன என்னமோ இவர்கள் கண்டுபிடித்தார்களாம், எங்கள் வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏற்றினார்களாம்!! எதையும் சமாளிக்க அல்ல, கொல்வின் உண்மையில் இரு சபையில் இருக்கிறார் என்பது அவரே சொல்லியது தான், அதை தான் இரு எஜ்மானன்களுக்கு ஊழியம் செய்கிறவர் என்று எழுதுனேன்!! ஏனய்யா நீங்கள் பதிவு செய்வது உங்களுக்கே மறந்து போகிறதா!? பிசாசுக்கு இன்னும் கொஞசக் காலம் தான் இருக்கிறது என்று உங்களை நல்லா பயன்படுத்துகிறான், ஆடுங்கள், ஆடும் மட்டும் ஆடுங்கள்!!

//அவர்களை "வெறியன்ஸ்" என்று எழுதிவிட்டோமாம்,இதற்காகவே மினக்கிட்டு நண்பர் கோல்வின் பெயரிலேயே தனி தலைப்பிட்டு (கோல்மூட்டும் கொல்வினின் கோமாளித்தனங்கள்!!) கட்டுரை எழுதியிருக்கிறார்கள்;அந்த அளவுக்கு இரஸலின் யெகோவா விசுவாசம் இவர்களை நெருக்கி ஏவுகிறது..! வேதத்தை ஆராய்வதில் தீவிரமாக இருக்கும் நவீன பெரியன்ஸுக்கு இதற்கெல்லாம் எப்படி நேரம் வாய்க்கிறதோ..? அவர்கள் புலம்பும் புலம்பலும் நம்முடைய விளக்கமும் தொடருகிறது...//

இதற்கும் ரஸ்ஸலுக்கும் என்னத்தான் சம்பந்தமோ!! உனக்கு வேறு ஒன்றும் எழுத முடியாதா மானங்கெட்டவனே!!

//இளங்கோ எனும் தனி நபரை நாம் இதுவரை தாக்கியதில்லை;கோவை பெரியன்ஸ் என்ற பெயரில் எழுதும் முகம் தெரியாத நபரின் கருத்துக்களையே எதிர்க்கிறோம்;ஆனால் கோவை பெரியன்ஸ் எனும் (மேசியாவின்) எதிரிகள் கோல்வின் மற்றும் ஜாண் போன்ற கௌரமான பணியிலிருக்கும் மெத்தபடித்த நண்பர்களைக் கீழ்த்தரமாக தனிப்பட்ட முறையில் தாக்கிக்கொண்டிருக்கிறார்கள்;ஆனால் நாமோ அவர்களை எதிரிகள் என்று கூட குறிப்பிட சங்கோஜப்பட்டுக் கொண்டு (மேசியாவின்) எதிரிகள் என்று குறிப்பிட்டு வருகிறோம்.//

கோவை பெரேயன்ஸ் என்கிற எழுத்து பெயர் யார் உபயோகித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பது தளத்தில் உறுப்பினராக இருக்கும் உனக்கு தெரியாதா!? கிறிஸ்துவை தேவக்குமாரன் என்று சொன்னாலும் அவர் கிறிஸ்து தான்!! என்னமோ பெரிய சானக்கிய தந்திரம் நிறைந்தவன் என்று நினைத்துக்கொள்ளாதே!! நீ இறக்குமதியான இடமும் நீ தோன்றின இடமும் எனக்கு தெரியும்!! அந்த புத்தியில் இன்னும் இருக்காதே!! கோவை பெரேயன்ஸ் என்பது ஒரு குழு தான் ஆனால் நான் எழுதுவது பெரேயன்ஸ் என்று மட்டும் தான், அதை கூடவா மூடனுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்!! கொல்வின் ஜான் பொன்ற மெத்தப்டித்த மேதாவிகளை குறித்து தான் வேதம் இப்படி சொல்லியிருக்கிறது,

1 கொரிந்தியர் 1:25. இந்தப்படி, தேவனுடைய பைத்தியம் என்னப்படுவது மனுஷருடைய ஞானத்திலும் அதிக ஞானமாயிருக்கிறது; தேவனுடைய பலவீனம் என்னப்படுவது மனுஷருடைய பலத்திலும் அதிக பலமாயிருக்கிறது. 26. எப்படியெனில், சகோதரரே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்; மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லவர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை. 27. ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார். 28. உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாயெண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார். 29. மாம்சமான எவனும் தேவனுக்குமுன்பாகப் பெருமைபாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார்.

உன் மெத்தபடிப்பு எல்லாம் என் வேதன் ஞானத்திற்கு முன்பு குப்பை!! ஜானையோ கொல்வினையோ நான் தனிப்பட்ட முறையில் தாக்கினேன் என்பதை அவர்கள் சொல்லட்டும், நீ என்ன தரகரா!! உனக்கு என்னை குறித்து தெரியாது!! இங்கே வந்து பாரு, இல்லாட்டி உன் கைக்கூலிகள் இங்கே இருக்கும் அதுங்களை அனுப்பி பாரும், எங்களை தேவன் எப்படி கவுரவமா வைத்திருக்கிறார் என்று!! மேலும் ரஸ்ஸலின் போதனையை யாரும் உங்களிடம் ஏற்றுக்கொள்ள சொல்லவில்லை, என் எந்த பதிவு அப்படி வழியுறுத்துகிறது என்று காண்பித்தால் நல்லது!! லூசுத்தனமாக எழுதுவதை நிறுத்திவிட்டு ஏதாவது வேலை வெட்டி இருந்தால் போய் பாரும்!!

__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

எத்தனை முறை செருப்பலடிப்பது போல பேசியும் புத்திவரமாட்டேன் என்கிறது. ஓரிரு தரம் புத்தி சொல்லிவிட்டு விலக முயற்சித்தாலும்....
கொசுத்தொல்ல தாங்க முடில ப்ரதர்....






__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard