kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசு கிறித்துவை தெய்வமாகத் தொழலாமா: யொவன ஜனம் தளம்!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
இயேசு கிறித்துவை தெய்வமாகத் தொழலாமா: யொவன ஜனம் தளம்!!


யொவன ஜனம் தள நிர்வாகியின் புலம்பல்,
//இயேசு கிறித்துவை தெய்வமாகத் தொழுவதைக் குறித்து கிறித்தவர்கள் என்ற போர்வையில் இணையத்தில் உலவும் சில ஓநாய்கள் தொடர்ந்து சர்ச்சைகளைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது;அந்த குழுக்களுடன் நாம் தொடர்ந்து போராடி வருகிறோம்;முறையான எந்த ஆரோக்கிய உபதேசத்துக்கும் கீழ்ப்படியாத இவர்கள் தங்கள் மாயமான உபதேசத்தினால் பலரையும் குழப்பி வருகின்றனர்;பொதுவாகப் பார்த்தால் அவர்களிடம் எந்த மாறுபாடும் தெரிவதில்லை.

உதாரணமாக சுந்தர் என்பவர் தனது சத்தியத் தடுமாற்றத்தின் உச்சகட்டமாக பரிசுத்தாவியானவருக்கே புதிய கொள்கைகளைக் கற்பித்து துருபதேசம் செய்துவருகிறார்.

அன்பு எனும் பெரியவர் கிருபையையும் கற்பனையையும் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கிறார்;கிறித்தவர்களுக்கே அதில் தெளிவு இல்லாததால் இவரையும் குற்றஞ்சாட்டி நிரூபிக்கமுடியாது; அதானே,ஆண்டவருடைய கற்பனைகளான பத்து கற்பனை எப்படி ஒழியும் என்ற மனப்போக்கே பலரிடமும் காணப்படுகிறது;இதனால் கிருபையின் மார்க்கத்துக்கு பகிரங்க சவால் விடப்பட்டுள்ளது.

இதனை எதிர்ப்பது போல கோவை பெரியன்ஸ் காட்சியளித்தாலும் அவர்கள் இயேசுவின் தெய்வத்தன்மையைக் குறித்து உருவாக்கி வைத்திருக்கும் கொள்கைகளும் இன்னும் அவர்கள் வேத வசனங்களை வியாக்கியானம் செய்யும் நிறக்குருடன் மனோபாவமும் மிகவும் ஆபத்தானது;அவர்கள் மீட்கமுடியாத நிலைக்குச் சென்று விட்டனர் என்பதே நிதர்சனமான உண்மையாகும்;ஏனெனில் அவர்களிடம் இணக்கமான தன்மையோ நட்புணர்வோ சிறிதும் இல்லை என்பது தெளிவு;ஒரு இஸ்லாமியனிடமும் இந்து வெறியனுடனும் கூட இசைந்து போகும் இவர்கள் சத்தியத்தை எதிர்த்து தங்களுக்கு கேடுகளை வருவித்துக் கொள்ளுகிறார்கள்.//

இந்த‌ எழுத்துக்க‌ளை பார்த்தாலே யாரிட‌ம் "இண‌க்க‌மான‌ த‌ன்மை, ந‌ட்புண‌ர்வு சிறிதும் இல்லை" என்ப‌தை வாசிப்ப‌வ‌ர்க‌ள் புரிந்துக்கொள்வார்க‌ள்!!

ரோம் 2:1. ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி, போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை; நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய்.

இப்ப‌டி ஒரு நிலையில் இருந்துக்கொண்டு இவ‌ர் எப்ப‌டி தான் பிற‌ரை வாய்க்கு வ‌ந்த‌ ப‌டி பேசி அல்ல‌து எழுதி வ‌ருகிறாரோ!!

தெய்வ‌த்த‌ன்மையைக் குறித்து இவ‌ர்க‌ள் உருவாக்கியிருக்கும் கொள்கைக‌ள் இவ‌ர்க‌ளுக்கு வேத‌த்திலிருந்து அல்லாம‌ல் பாட‌ல்க‌ள், பாட‌ற்புத்த‌கங்க‌ளிலிருந்தும், பெரிய‌ ஊழிய‌ர்க‌ளின் போத‌னை ம‌ற்றும் ம‌னித‌ ஜெப‌ங்க‌ளிலும் இருந்து தான் இவ‌ர்க‌ள் விசுவாச‌ம்!! ஆக‌வே வேத‌த்தில் இருக்கும் எளிதான‌ உண்மைக‌ளை இவ‌ர்க‌ள் புரிந்துக்கொள்ள‌ மாட்டார்க‌ள்!! அதை குறித்து எழுதுப‌வ‌ர்க‌ளை தூஷித்துக்கொண்டே இருப்பார்க‌ள்!! இன்னோரு மார்க்க‌த்தை சேர்ந்த‌வ‌ர்க‌ளை "வெறிய‌ர்க‌ள்" போன்ற‌ நாக‌ரீக‌மான‌ வார்த்தைக‌ளை உப‌யோகிக்கும் இவ‌ர் ந‌ட்புண‌ர்வை குறித்து பேச‌ த‌குதியில்லாத‌வ‌ராகிறார்!!

கிறிஸ்த‌வ‌த்தின் சுமைத்தாங்கி என்று த‌ன்னை நினைத்து, கிறிஸ்துவ‌ம் இவ‌ர‌து சொந்த‌ சொத்து என்றும் நினைக்கும் இவ‌ர் அந்த‌ கிறிஸ்துவ‌த்தின் ஆதார‌ புத்த‌க‌ம் பாட‌ல்க‌ளோ, ஜெப‌ங்க‌ளோ அல்ல‌, தேவ‌னின் வார்த்தை அட‌ங்கிய‌ வேத‌ம் தான் என்றும், விசுவாச‌ம் என்ப‌து அதிலிருந்து தான் வ‌ர‌வேண்டும் என்ப‌தை கூட‌ புரியாத‌வ‌ராக‌ இருக்கிறார்!! இவ‌ர் சொல்லுவ‌து கிறிஸ்த‌வ‌ம் என்கிற‌ ம‌ற்றோரு மார்கம், நாங்க‌ள் சொல்லுவ‌து வேத‌த்தில் இருக்கும் ச‌த்திய‌த்தை!! அது நிச்ச‌ய‌மாக‌ பாட‌ல்க‌ளையும் ஜெபங்க‌ளையும் ந‌ம்பி ச‌த்திய‌த்தை சொல்லுப‌வ‌ர்க‌ளுகு புரியாது!! பாட‌ல்க‌ளையும் பாட‌ற்புத்த‌க‌ங்க‌லையும் எழுதிய‌வ‌ர்க‌ல் ம‌னித் ஆவியினால் மாத்திர‌மே!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
RE: இயேசு கிறித்துவை தெய்வமாகத் தொழலாமா: யொவன ஜனம் தளம்!!


யொவன ஜனம் தளம்:
//இயேசுவானவரின் தெய்வத்துவத்தைக் குறித்து வேதம் சொல்லும் போது...
"ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது." (கொலோசெயர்.2:9)

அதாவது தேவத்துவத்தின் ஒரு பகுதி இயேசுவில் இல்லை;இயேசுவுக்குள் தெய்வத்துவத்தின் அனைத்தும் இருக்கிறது//.

இயேசுவானவர் என்றால் இயேசு ஆனவர் தானே!! ஏன் அவருக்குள் தேவத்துவத்தின் பரிபூரணம் இருந்தது தெரியுமா,

யோவான் 3:34. தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார், தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார்.

ஒருவருக்குள் தேவத்துவம் இருப்பதற்கும் ஒருவர் தேவனாக‌ (பிதாவாகிய தேவன்) இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது!! தேவனால் அனுப்பட்டவர் என்று சொல்லும் வசனத்திற்கு திருத்துவம் பேசும் "கிறித்துவர்களிடம்" பதில் இல்லை, இருக்காது!! அவரே தேவன் என்றால் அவருக்கு ஏன் தேவன் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்தாராம்!!

இன்னும் இருக்கு,

சிலுவையில் இருக்கும் போது,
மாற் 15:34. ஒன்பதாம்மணி நேரத்திலே, இயேசு: எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.

தேவன் தன்னையே ஏன் கைவிட்டீர் என்று கூப்புடிகிறாரோ!! ஆனால் தேவ குமாரன் தன் தேவனிடத்தில், என்னை ஏன் கைவிட்டீர் என்று வாசித்தோமென்றால் சரியாக தான் இருக்கும்!!

இயேசு கிறிஸ்துவும் தேவன் தான், ஆனால் பிதாவாகிய தேவன் கிடையாது!! பிசாசைக்கூட தான் தேவன் என்று வேதம் சொல்லுகிறது!!

1 கொரி 8:5. வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேக கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும், 6. பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு,

கிறிஸ்து பிதா இல்லை, பிதாவின் குமாரன் என்று வேதம் தெளிவாக சொல்லும் போது, இந்த திருத்துவம் சொல்லுபவர்கள் அதை ஏற்றுக்கொள்வதில்லை, ஏனென்றால், பாரம்பரியப் பாடல்கள், துதிப்பாடல்கள் சிலரின் ஜெபங்களை வைத்து தானே அவர்களின் விசுவாசம்!! வேதத்தில் எத்துனை இடத்தில் இயேசு கிறிஸ்து தேவனின் குமாரன் என்று சொன்னாலும், இல்லை இல்லை என்று ஏதோ ஒரு வசனத்தை சரிவர புரியாமல் அதை எழுதி விடுவது, கொலோ 2:9ஐ எழுதியது போல்!!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

யொவன ஜனம் தளம்:
//"ஜீவாதிபதியைக் கொலைசெய்தீர்கள்; அவரைத் தேவன் மரித்தோரிலிருந்தெழுப்பினார்; அதற்கு நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம்." (அப்போஸ்தலர்.3:15)

"மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்."(வெளிப்படுத்தல்.1:18)

மரணம் என்பதன் புதிய பொருள் இதன்மூலம் விளங்குகிறது;மரணம் என்பது ஒரு சரீரத்திலிருந்து ஆவியானது வெளியேறுவது மட்டுமே என்றும் அந்த சரீரம் மீண்டும் அதே தன்மையில் உயிரடையும் என்பதையும் இங்கே சிருஷ்டிகர் நிகழ்த்தி காட்டுகிறார்.எனவே தெய்வம் மரிக்கலாமா என்ற சர்ச்சையும் இங்கே நிறைவடைகிறது;அவர் வெளியே சென்றார், மீண்டும் உள்ளே வந்தார்,ஆக‌ எல்லாம் சரியாகவே நடந்தேறியிருக்கிறது.//

இப்ப‌டிப்ப‌ட்ட‌ ஒரு பித‌ட்ட‌மான‌ அரைவேக்காடான‌ விள‌க்க‌ம் யாராவ‌து கேட்ட‌து உண்டா!? ம‌ரித்தேன் என்று இயேசு சொல்லுவ‌தைக்கூட இவ‌ர்க‌ள் க‌ண்க‌ளுக்கு ம‌றைக்க‌ப்ப‌ட்டு, அவ‌ர் என்ன‌மோ கூடு விட்டு கூடு பாய்ந்தார் என்கிற‌ அர்த்த‌த்தில் விள‌க்க‌ம் வ‌ந்திருக்கிற‌து!!

தேவ‌ன் ம‌ரிக்க‌ முடியாது என்று வேத‌ம் சொல்லுகிற‌து, அவ‌ர் ஒருவ‌ரே சாவாமை உள்ள‌வ‌ர், அந்த‌ தேவ‌ன் யார் என்று 1 கொரி 8:6 சொலுகிற‌து!! இதை ஏற்றுக்கொள்கிற‌ திருத்த‌வாதிக‌ள், கிறிஸ்து தான் பிதா என்று நிருபிக்க‌, இயேசு கிறிஸ்து ஏற்றுக்கொண்ட‌ ம‌ர‌ண‌த்தை கொச்சைப்ப‌டுத்தி அவ‌ர் கூடு விட்டு கூடு பாய்கிறார் என்று பித‌ற்றி கொண்டு த‌ங்க‌ளை கிறிஸ்த‌வ‌ர்க‌ள் என்று சொல்லிக்கொண்டு கேவ‌ல‌ப்ப‌டுத்துகிறார்!!

இயேசு கிறிஸ்துவே சொல்லுகிறார் நான் ம‌ரித்தேன் என்று அதை கூட‌ ந‌ம்ப‌ ம‌றுக்கிறார்க‌ள் இந்த‌ திருத்துவ‌ கோட்பாடு உள்ள‌வ‌ர்க‌ள், இல்லை இல்லை அவ‌ர் ம‌ரிக்க‌வில்லை என்று வேத‌த்திற்கு புற‌ம்பான‌, வேத‌த்தில் இல்லாத‌ கூடு விட்டு கூடு பாயும் மாந்த‌ரீக‌த்தை க‌ற்பிக்கிற‌து யொவ‌ன‌ ஜ‌ன‌ம் த‌ள‌ம்!!

ம‌ரித்திருந்த‌வ‌ரை, ம‌ரித்தோரிலிருந்து தான் தேவ‌ன் எழுப்பிய‌த‌ற்கு சாட்சிக‌ளாக‌ அப்போஸ்த‌ல‌ர்க‌ள் இருந்தார்க‌ள் என்று அவ‌ரே ஒரு வ‌ச‌ன‌த்தை கொடுத்து அதை ம‌றுத்து பேசிகிற‌து கேவ‌லாமாக‌ இருக்கிற‌து!! இல்லாத‌ ஒன்றை நிரூபிக்க‌ அவ‌சிய‌மே இல்லாத பிர‌யாச‌ம் எடுத்துக்கொண்டிருக்கிறார்க‌ல்!!

பிதாவை பிதா என்றும் குமார‌னை குமார‌ன் என்று பார்த்தால் இந்த‌ குழ‌ப்ப‌மே வ‌ராது!! குமார‌ன் ம‌ரிப்ப‌த‌ற்காக‌ தான் இந்த‌ பூமியில் வ‌ந்தார் என்றும், அவ‌ர் உல‌க‌ தோற்ற‌ முத‌ல் அடிக்க‌ப்ப‌ட்ட‌ ஆட்டுக்குட்டியாக‌ இருக்கிறார் என்று வ‌ச‌ன‌ம் சொல்லுகிற‌து!! இயேசு கிறிஸ்து ம‌ரிக்க‌வில்லை என்ப‌து துர் உப‌தேச‌ம், ம‌னித‌ போத‌னை!! இயேசு கிறிஸ்து ம‌ரிப்ப‌த‌ற்காக‌ வ‌ந்தார், அவ‌ரை பிதா "ம‌ரித்தோரிலிருந்து" எழுப்பினார் என்று தான் வேத‌ம் சொல்லுகிற‌து!! ம‌ரிக்க‌வில்லை என்று சொல்லுவோர், சாத்தானின் போத‌னை த‌ருகிறார்க‌ள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

யொவன ஜனம் தளம்:
//"ஆகையினால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள் என்றான்."(அப்போஸ்தலர்.2:36)

இங்கே ஆண்டவரும் கிறித்துவும் என்பதில் அனைத்தும் அடங்கும்;அதாவது அவரே அனைத்துக்கும் அதிகாரியாகிறார்; அதாவது கிறித்துவின் தன்மையில் தம்மை வெளிப்படுத்தின தேவன் தாம் சிருஷ்டித்த மாம்ச இயேசுவுக்கு புதிய ஸ்தானத்தைக் கொடுத்தார்.இதன் அடுத்த கட்டம் அடுத்துவரும் வசனத்தில் நிறைவேறும்.//

ஆண்டவர் என்றால் என்ன கர்த்தர் என்றால் என்ன என்று கூட தெரியாமல் இவர்கள் விளக்குவது, புரிந்துக்கொண்டது, தேவனும் பிதாவும் ஒருவரே என்று!!கிறிஸ்து தான் தேவ‌னின் த‌ன்மையில் வெளிப்ப‌ட்டாரே அன்றி தேவ‌ன் கிறிஸ்துவின் த‌ன்மையில் வெளிப்ப‌ட்ட‌தாக‌ எந்த‌ வ‌ச‌ன‌மும் சொல்ல‌வில்லை!! தேவ‌ன் இயேசுவை ஆண்ட‌வ‌ரும் கிறிஸ்துவுமாக்கினார் என்று தான் சொல்லுகிற‌து த‌விர‌, கிறிஸ்து த‌ன்னை தேவ‌னாக்கினார் என்று எந்த‌ வ‌ச‌ன‌மும் இல்லை!! கிறிஸ்து த‌ன்னை தேவ‌னின் குமார‌ன் என்று தான் சொல்லிக்கொண்டார், ஏனென்றால் அவ‌ர் தான் ச‌ர்வ‌ சிருஷ்டிக்கும் முந்தின‌ பேறுமான‌வ‌ர் என்று வேத‌ம் சொல்லுகிற‌து கொலோ1:16!! ஒருவ‌ர் இன்னோருவ‌ருக்கு த‌ருகிறாரோ, செய்கிறாரோ, உய‌ர்த்துகிறாரோ என்றால் அவ‌ர் எப்ப‌டிப்ப‌ட்ட‌வ‌ராக‌ இருக்க‌ வேண்டும், உயர்த்தப்ப‌ட்ட‌வ‌ரை காட்டிலும் தாழ்ந்திருப்ப‌வ‌ரா!! யோசிப்பீர்க‌ளா கிறிஸ்த‌வ‌ர்க‌ளே!!

//"சகலமும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்."(1.கொரிந்தியர்.15:28)

இங்கே கீழ்ப்பட்டிருத்தல் என்பது ஆதியில் இருந்த தன்மையே; எப்போதுமே வார்த்தையானது ஆவியில்லாமல் செயல்படவில்லையே;எனவே ஆவியே முந்தினது என்றும் ஆவியிலிருந்து ஆவியின் அதிகாரம் மற்றும் வல்லமையோடு வார்த்தையானது வெளிப்பட்டு தன் காரியமாகும்படி வாய்க்கும் என்பதும் விளங்குகிறது.//

இங்கே கீழ்ப்ப‌ட்டிருத்த‌ல் என்ப‌து ச‌க‌ல‌மும் முடிந்த‌ பிற‌கு என்று தான் இத‌ற்கு முந்த‌ய‌ வ‌ச‌ன‌ம் சொல்லுகிற‌து, பார்த்தீர்க‌ளா எப்ப‌டி எல்லாம் ஒரே ஒரு வ‌ச‌ன‌த்தை எடுத்துக்கொண்டு அத‌ற்கு வேத‌ புற‌ட்ட‌ர்க‌ள் அர்த்த‌ம் க‌ற்பிக்கிறார்க‌ள்,

1 கொஎஇ 15:24. அதன்பின்பு முடிவு உண்டாகும்; அப்பொழுது அவர் சகல துரைத்தனத்தையும் சகல அதிகாரத்தையும் வல்லமையையும் பரிகரித்து, தேவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார். 25. எல்லாச் சத்துருக்களையும் தமது பாதத்திற்குக் கீழாக்கிப்போடும்வரைக்கும், அவர் ஆளுகைசெய்யவேண்டியது.26. பரிகரிக்கப்படுங் கடைசிச் சத்துரு மரணம். 27. சகலத்தையும் அவருடைய பாதத்திற்குக் கீழ்ப்படுத்தினாரே; ஆகிலும் சகலமும் அவருக்குக் கீழ்ப்படுத்தப்பட்டதென்று சொல்லியிருக்கும் போது, சகலத்தையும் அவருக்க் கீழ்ப்படுத்தினவர் கீழ்ப்படுத்தப்படவில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. 28. சகலமும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்.

வ‌ச‌ன‌த்தை இப்ப‌டி தான் வாசிக்க‌னும்!! எல்லாம் முடிந்த‌ பிற‌கு (அதாவ‌து தேவ‌ன் நிய‌மித்த‌ திட்ட‌ங்க‌ள் தான்) குமார‌னாகிய‌ கிறிஸ்து எல்லாவ‌ற்றிலும் பிதாவாகிய‌ தேவ‌னுக்கு கீழ்ப்ப‌ட்டிருப்பார் என்று தான் வேத‌ம் சொல்லுகிறது!! இப்ப‌டி தான் கால‌ம் கால‌மாக‌ ஏமாற்றி வேத‌த்தை புர‌ட்டி அதிலிருந்து ஆதாய‌மும் பிழைப்பும் ந‌ட‌த்தி வ‌ருகிறார்க‌ள் இவ‌ர்க‌ள்!! க‌த்தோலிக்க‌ ச‌பையை விக்கிர‌க‌ ச‌பை என்று சொல்லிவிட்டு அவ‌ர்க‌ள் கொண்டு வ‌ந்த‌ திருத்துவ‌ உப‌தேஃப்ச‌த்தை தான் க‌ண்மூடித்த‌ன‌மாக‌ பின்ப‌ற்றுகிறார்க‌ள் இந்த‌ "குறுட்டு ஆவியை" பெற்ற‌வ‌ர்க‌ள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

யோவான் 3:34. தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார், தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார்.

கிறிஸ்துவின் மேல் அளவில்லாமல் பரிசுத்த ஆவி ஏன் ஊற்றப்பட்டது? இயேசு தாம் ஊழியம் செய்த அந்த முன்றை ஆண்டு காலத்தில் பல பலத்த அற்புதங்கள் செய்தார், கடலை பார்த்து அமைதலா இரு என்றார், 5 அப்பம், 2 மீன்களினார் 5000 பேருக்கு மேற்பட்டோரின் பசியாற்றினார், பலரை மறுபடியும் உயிருடன் எழுப்பினார்!! இன்னும் எழுதப்படாத பல அற்புதங்களை செய்தார் என்கிறது வேதம்!! இது எல்லாம் ஒரு மனுஷனின் ஆவியால் செய்ய முடியாது என்பதால் தான் தேவன் கிறிஸ்துவின் மேல் அளவில்லாமல் தன் ஆவியை (வல்லமையை) ஊற்றினார்!!

யொவன ஜனம் தளம்:
//ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,
பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசு கிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்." (Phப் 2:9,10,11)
எல்லா நாமத்துக்கும் மேலான நாமம் யூதருடைய நம்பிக்கையின்படி "யாவே" சிருஷ்டிகருடைய நாமமே;அதற்கும் மேலாக இவருடைய நாமம் உயர்த்தப்பட்டது;"

ஏசாயா 42:8 நான் கர்த்தர், இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்.

க‌ர்த்த‌ர் என்று த‌மிழ் வேதாக‌ம‌த்தில் எழுதியிருந்தாலும் அங்கே யெகோவா என்று தான் இருக்கிற‌து!! ஏனென்றால் க‌ர்த்த‌ர் என்ப‌து பெய‌ர் கிடையாது!! நான் யெகோவா, இது என் நாம‌ம் என்கிறார் தேவ‌ன்!! மேலும் அவ‌ரின் ம‌கிமையை அவ‌ர் வேறு யாருக்கும் கொடுப்ப‌தில்லை என்கிறார்!! இப்ப‌டி யாருக்கும் அவ‌ருக்கு ச‌ம‌மாப‌ ம‌கிமை கொடுக்காத போது கிறிஸ்துவை யெகோவா தேவ‌னுக்கும் மேலாக‌ உய‌ர்த்துனார் என்ப‌து முட்டால்த்த‌ன‌மான‌ விள‌க்க‌மாகும்!! தேவ‌ன் யார் என்று புரிந்துக்கொல்லாத‌வ‌ர்க‌ளின் அறிவ‌ற்ற‌ புல‌ம்ப‌ல் தான் இது!! வ‌ச‌ன‌த்தை ஒழுங்காக‌ வாசிக்க‌னும்!! "பிதாவாகிய‌ தேவ‌னுக்கு ம‌கிமையாக‌" தான் கிறிஸ்துவை க‌ர்த்த‌ர் என்று க‌வ‌னிக்க‌வும், "தேவ‌ன் என்று இல்லாம‌ல்" க‌ர்த்த‌ர் என்று பூத‌ல‌த்தோர், பூமியின் கீழானோருக்கு மேலாக‌ அவ‌ரை உய‌ர்த்தினார்!! ஒருவ‌ர் உய‌ர்த்தினார் ம‌ற்றோருவ‌ர் உய‌ர்த்த‌ப்ப‌டுகிறார் என்றால் யார் இதில் பெரிய‌வ‌ராக‌ இருக்க‌ முடியும்!!

என் பிதா என்னிலும் பெரிய‌வ‌ர் என்று தான் இயேசு கிறிஸ்து சொல்லுகிறார்!! யெகோவா தேவ‌னை குறைத்து பேசுவோரை குறித்து தான் "ப‌ரிசுத்த‌ ஆவிக்கு விரோத‌மாக‌ செய்ய‌ப்ப‌டும் பாவ‌ம் இம்மையிலும் ம‌றுமையிலும் ம‌ன்னிக்க‌ப்ப‌டாது என்று சொல்ல‌ப்ப‌ட்டிருக்கிற‌து!! யெகோவா தேவ‌னின் நாம‌த்தை தூஷிப்ப‌வ‌ர்க‌ள் ச‌ற்றே ஒதுங்கியிருங்க‌ள், உங்க‌ளுக்கு அவ‌ரை ப‌ற்றி தெரிய‌வில்லை என்றால் முத‌லில் தெரிந்துக்கொள்ளுங்க‌ள்!! திருத்துவ‌ம் என்கிற‌ உப‌தேச‌த்தில் ஊறி போய் அதை விட்டு வெளியேற‌ முடியாம‌ல், இருக்கும் எல்லா வ‌ச‌ன‌ங்க‌ளையும் இப்ப‌டி திரித்து பேசாதீர்க‌ள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
இயேசு கிறித்துவை தெய்வமாகத் தொழலாமா: யொவன ஜனம் தளம்!!


பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் கர்த்தர் என்று இருக்கிறது!! இந்த இரு கர்த்தரும் ஒன்றா என்று கேட்டால், இல்லை!! பழைய ஏற்பாட்டு கர்த்தர் "யெகோவா தேவனின்" நாமம்!! தமிழில் தான் பழைய ஏற்பாட்டில் துனிந்து "கர்த்தர்' என்று போட்டிருக்கிறார்கள், மற்ற மொழிப்பெயர்ப்புகளில், மலையாளம், தெலுங்கு, கண்ணடம் உட்பட பல மொழிகளில் யெகோவா என்றே இருக்கிறது!!

கிங் ஜேம்ஸ் மொழிப்பெயர்ப்பில் (LORD) என்றும் (lord) என்றும் இருக்கும்!! (LORD) என்று யெகோவா தேவனையும் (lord) என்பது இயேசு கிறிஸ்துவை குறிக்கும்!!

சங்கீதம் 110:1 கர்த்தர் (LORD) என் ஆண்டவரை(lord) நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்கு பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார்.

King James Version (KJV)

Psalm 110

1The LORD said unto my Lord, Sit thou at my right hand, until I make thine enemies thy footstool.

American Standard Version (ASV)

Psalm 110

A Psalm of David.

 1Jehovah saith unto my Lord, Sit thou at my right hand, Until I make thine enemies thy footstool.


யெகோவா தேவ‌னை க‌ர்த்த‌ர் என்றும் இயேசு கிறிஸ்துவை ஆண்ட‌வ‌ர் என்றும் இங்கு சொல்ல‌ப்ப‌ட்டிருக்கிற‌து!! கிறிஸ்த‌வ‌ர்க‌ளுக்கு க‌ர்த்த‌ர் என்ற‌வுட‌ன் ப‌ழைய‌ ஏற‌பாட்டில் கொடுக்க‌ப்ப‌ட்ட‌தும் புதிய‌ ஏற்பாட்டில் கொடுக்க‌ப்ப‌ட்ட‌தும் ஒன்றே என்று "தெளிவில்லாத‌ போத‌க‌ர்க‌ளும்" "திருத்துவ‌ம் போதிப்ப‌வ‌ர்க‌ளும்"  துர் உப‌தேச‌மாக‌ த‌ங்க‌ளின் அறிவின்மையை வெளிப்ப‌டுத்துகிறார்க‌ள்!!

ஆக‌வே தான் தேவ‌ன் சாவாமையுள்ள‌வ‌ர் என்ற‌வுட‌ன், கிறிஸ்துவும் ம‌ரிக்க‌வில்லை, அவ‌ர் கூடு விட்டு கூடு பாய்ந்தார் என்று இயேசு கிறிஸ்துவின் உன்ன‌த‌மான‌ ப‌லியை கொச்சைப்ப‌டுத்தி அவ‌ர் சிந்திய‌ இர‌த்த‌த்தை த‌ன் கால்க‌ளுக்கு கீழ் போட்டு குழைக்கிறார்க‌ள்!!

மேலும், நான் ஆதியும் அந்த‌மும், அல்ஃபாவும் ஒமேகாவும், தொட‌க்க‌மும் முடிவுமாய் இருக்கிறேன்ன் என்று தான் த‌ன்னை குறித்து இயேசு கிறிஸ்து சொல்லியிருக்கிறாரே த‌விர‌, யெகோவா தேவ‌னை போல்,

ச‌ங். 90:2. பர்வதங்கள் தோன்றுமுன்னும், நீர் பூமியையும் உலகத்தையும் உருவாக்குமுன்னும், நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர்.

ச‌ங் 93:2. உமது சிங்காசனம் பூர்வமுதல் உறுதியானது; நீர் அநாதியாயிருக்கிறீர்.

ஆதிக்கும் அநாதிக்கும் த‌மிழ் ப‌ண்டித‌ர்க‌ளுக்கு அர்த்த‌ம் தெரியும் என்றே நினைக்கிறேன்!!

கிறிஸ்த‌வ‌ர்க‌ளே, த‌ய‌வு செய்து இயேசு கிறிஸ்துவும் யெகோவா தேவ‌னும் ஒருவ‌ரே என்று சொல்லி தேவ‌னையும் க‌ர்த்த‌ரையும் கொச்சை ப‌டுத்தாதீர்க‌ள்!!

யோவான் 17:3. ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.

இந்த‌ ஒன்றான‌ மெய்த்தேவ‌னையும், அவ‌ரின் குமார‌னையும் குறித்தான‌ தெளிவை வேத‌த்தில் இருந்து பெறுங்க‌ள், பாட‌ற்புத்த‌ங்க‌ளும், துதிப்பாட‌ல்க‌ளும், சில‌ ஜெப‌ங்க‌ளும் ம‌னித‌ர்க‌ளின் க‌ற்ப‌னையே த‌விர‌ வேத‌ வார்த்தைக‌ள் அல்ல‌, இவைக‌ளை ந‌ம்பி உங்க‌ள் விசுவாச‌த்தை வள‌‌ர்க்காதீர்க‌ள்!!

இன்னும் இருக்கிற‌து.........



-- Edited by bereans on Wednesday 1st of December 2010 08:07:48 AM

__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

யொவன ஜனம் தளம்:
//"மேலும், தேவன் ("ஏலோஹிம்") மோசேயை நோக்கி: நான் யேகோவா, சர்வவல்லமையுள்ள தேவன் ("எல்ஷடாய்")என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன்; ஆனாலும் யேகோவா என்னும் என் நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை."(யாத்திராகமம்.6:2,3)//

ஏலோஹிம் என்ப‌து தேவ‌னை மாத்திர‌ம் இல்லை, தேவ‌தூத‌ர்க‌ள் ஏன் சில‌ இட‌ங்க‌ளில் ம‌னித‌ர்க‌ளையும் குறிக்கும் சொல்லாக‌ இருக்கிற‌து!! ஏலோஹிம் என்றால் தேவ‌ன் இல்லை, மாறாக‌ "ச‌ர்வ‌வ‌ல்ல‌வ‌ர்" ஆங்கிள‌த்தில் "Almighty", "Power" அர்த்த‌ம் வ‌ரும், தேவ‌ன் என்று வ‌ராது!!


சங் 8:5  நீர் அவனை தேவதூதரிலும் சற்று சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர்.

இங்கு தேவதூதர் "ஏலோஹிம்" என்று கொடுக்கப்பட்டிருக்கிறது!!

_____Strongs_____

H430  'elohiym  el-o-heem'
plural of H433;

gods in the ordinary sense; but specifically used (in the plural thus, especially with the article) of the supreme God; occasionally applied by way of deference to magistrates; and sometimes as a superlative.
KJV: angels, X exceeding, God (gods)(-dess, -ly), X (very) great, judges, X mighty.

யேகோவா என்பது தான் தேவனின் நாமமே தவிர, ஏலோஹிம், எல்ஷடாய், போன்றவைகள் பண்புகளே!! இயேசு கிறிஸ்துவை யெகோவா என்று சொல்லுவது தேவதூஷனத்தின் உச்சம்!!

//இதே "இருக்கிறேன்" என்ற சொல்லை இயேசுவும் தம்முடைய போதனையில் அடிக்கடி பயன்படுத்துவதையும் கவனிக்கவேண்டும்; அதாவது "இருக்கிறேன்" என்ற சொல்லானது இறந்த காலத்தின் சொல்லாகவோ எதிர்காலத்தின் சொல்லாகவோ இல்லாமல் நிகழ்காலத்தின் சொல்லாகவே இருக்கிறது.//

"இருக்கிறேன்" என்று சொன்ன ஒரே காரணத்தினால் இயேசு கிறிஸ்து தான் அந்த யெகோவா தேவன் என்கிற கருத்து அபாயகரமானது!!

இருக்கிறேன் என்ப‌தை ப‌வுலும் தான் உப‌யோக‌ப்ப‌டுத்தியிருக்கிறார்!!

I கொரிந்தியர் 15:10 ஆகிலும் நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன்



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Veteran Member

Status: Offline
Posts: 46
Date:
RE: இயேசு கிறித்துவை தெய்வமாகத் தொழலாமா: யொவன ஜனம் தளம்!!


Do you know what is meaning of god and divinity. God means ultimate judge. Divinity means god who is not judged by any one about his all actions.

__________________
T.balaji


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//நாலு எழுத்து படிச்சிட்டு அதான் "ABCD" ஆட்டம் போடற இவங்களுக்கே இவ்வளவு "இது" இருந்தால் இது எதுவுமே இல்லாதவர்களிடம் சத்தியத்தைக் கற்ற நமக்கு எவ்வளவு இருக்கவேண்டும்..?!

எதுக்கெடுத்தாலும் "மொழிபெயர்ப்பு கோளாறு " என கொக்கரிக்கும் மதியீனத்தையே சொல்கிறேன்;வேதமோ ஏன் பேப்பரோ அச்சு இயந்திரமோ இல்லாத காலத்தில் எப்படி விசுவாசித்தார்கள்,யாருடன் பேசி யாரால் அதிசயங்களை கண்டார்கள் என்பதை இந்த அறிவுஜீவிகள் சிந்திக்கிறதில்லை..!
இதுக்கும் விட்டுக்கொடுக்காமல் ஒரு விளக்கம் கண்டிப்பாக தருவர்;எனவே அவன் நடையானது மாறி மாறி விகாரப்படும் என வேதம் சொல்லுகிறது.//

எதுவுமே இல்லாத‌வ‌ர்க‌ளிட‌ம் ச‌த்திய‌த்தை க‌ற்று கொண்டீர்க‌ள் என்ப‌து நீங்க‌ள் சொல்லி அல்ல‌ உங்க‌ளின் ப‌திவுக‌ளே காண்பிக்கிற‌து!!

யோவான் 8:26. உங்களைக்குறித்துப் பேசவும் நியாயந்தீர்க்கவும் எனக்கு அநேக காரியங்களுண்டு. என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர்; நான் அவரிடத்தில் கேட்டவைகளையே உலகத்துக்குச் சொல்லுகிறேன் என்றார்

யோவான் 17:8. நீர் எனக்குக் கொடுத்த வார்த்தைகளை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்; அவர்கள் அவைகளை ஏற்றுக்கொண்டு, நான் உம்மிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேன் என்று நிச்சயமாய் அறிந்து, நீர் என்னை அனுப்பினீர் என்று விசுவாசித்திருக்கிறார்கள்.

எதையுமே தெரியாத‌வ‌ர்க‌ள் இப்ப‌டி வ‌ச‌ன‌ங்க‌ளை எல்லாம் ப‌டித்திருக்க‌ வாயிப்பில்லை தான்!! ஏதோ நாலு எழுத்து ப‌டித்த‌வ‌ர்க‌ளிட‌ம் நாங்க‌ள் ப‌டிக்க‌ க‌ற்று கொண்ட‌து, எங்க‌ளுக்கு சுய‌மாக‌ வேத‌த்தை ப‌டிக்க‌ வைத்திருப்ப‌து எங்க‌ளுக்கும் எங்க‌ள் விசுவாச‌த்திற்கு பிர‌யோஜ‌ன‌மாக‌ தான் இருக்கிற‌து!! பார‌ம்ப‌ரிய‌ பாட‌ல்க‌ள், ஜெப‌ங்க‌ள், விசுவாச‌ அறிக்கைக‌ள் மேல் விசுவாச‌த்தை வைக்காம‌ல், வேத‌ம் இந்த‌ மொழியில் இப்ப‌டி இருக்கிற‌து, அதில் ஏன் இப்ப‌டி இருக்கிற‌து என்ப‌தை "ஆராய்ந்து" பார்க்க‌ எங்க‌ளை தூண்டியிருக்கிற‌து!! பெரிய‌ ஊழிய‌ர் சொல்லிவிட்டார் என்கிற‌ ஒரே கார‌ண‌த்திற்காக‌ அதை ந‌ம்பபும் ப‌ழ‌க்க‌ம் இல்லாம‌ல், பெரேயா ப‌ட்ட‌ன‌த்தார் போல் அதே ம‌னோவாஞ்சையில் நாங்க‌ள் இருக்கிறோம்!! உங்க‌ள் குழ‌ப்ப‌ங்களை வெளிப்ப‌டுத்தி உங்க‌ளிட‌ம் மேயும் ஆடுக‌ளை நாங்க‌ள் பிடுங்கி விடுவோம் என்கிற‌ அச்ச‌ம் உங்க‌ளுக்கு தேவை இல்லை!! அது ச‌பை ந‌ட‌த்துவோரின் ப‌ழ‌க்க‌ம்!! ச‌த்திய‌ம் சொல்லுவ‌து மாத்திர‌மே எங்க‌ள் வேளை!! பிதா ஒருவ‌னை இழுக்காவிட்டால் அவ‌ன் இயேசு கிறிஸ்துவிட‌ம் வர‌ முடியாது என்று வேத‌ம் எங்க‌ளுக்கு சொல்லி த‌ந்திருக்கிற‌து!

உங்க‌ள் த‌ள‌ம் போல் க‌விதை ந‌ய‌த்துட‌ன் எழுதி ஜ‌ன‌ங்களை க‌வ‌ரும் த‌ந்திர‌ம் எங்க‌ளுக்கு இல்லை, அத‌ன் அவ‌சிய‌மும் இல்லை!! ஏனென்றால் ச‌த்திய‌ பாதையில் ந‌ட‌ப்போர் மாத்திர‌மே குறுகிய‌ வாச‌லை அறிந்துக்கொள்வார்க‌ள், விசால‌மான‌ பாதையும் இருக்கிற‌து அதில் அநேக‌ர் ந‌ட‌ப்பார்க‌ள் என்று தான் வேத‌ம் எங்க‌ளுக்கு சொல்லி த‌ருகிற‌து!!

TRINITY IS A MYSTERY YET MAJORITY BELIEVE IT WITHOUT QUESTIONING!! TRUTH IS A SWEET STORY OF REDEMPTION, BUT ONLY A FEW UNDERSTAND THAT!!

திருத்துவ‌ம் ஒரு இர‌க‌சிய‌மாக‌ (வேத‌த்தில் இல்லாத‌) இருந்தாலும் அதை அநேக‌ர் க‌ண்மூடி கேள்வியே இல்லாம‌ல் ஏற்றுக்கொள்கிறார்க‌ள்!! ச‌த்திய‌ம் மீட்பின் சுவையான‌ க‌தையாக‌ இருந்தாலும் வெகு சில‌ரே அதை ஏற்றுக்கொள்கிறார்க‌ள்!!

வேத‌ம் சொல்லுவ‌தும் இதுவே!!

மொழிபெயர்ப்பு கோளாறு இருக்க போய் அந்த உண்மையை சொன்னால் கூட இவர்களுக்கு ஜீரனமாவதில்லை!! கிங் ஜேம்ஸ் மொழிப்பெயர்ப்பு தன் அடுத்த பதிவிலேயே ஆயிர கணக்கான தவறுகளை திருத்தியது!! நம் "பரிசுத்த வேதாகமம்" அப்படியே அந்த தவறுகளுடான் பிரசுரிக்கிறது, கேட்டால் அட்டையிலேயே ஒரு பொய்!! வேறு எதில்வேண்டுமென்றாலும் விட்டுக்கொடுக்கலாம், சத்தியத்தை காலில் போட்டு மிதிப்பவர்களிடம் ஏன் விட்டு கொடுக்க வேண்டும்!! அநாகரீகமாக, எழுதுவோரையும், அவர் அப்படி எழுதுவது நியாயம் தான் என்று கருத்தை அல்ல, அவர் குணத்தை சரி என்று சொல்லும் அவர் விசுவாசிகளின் எழுத்துக்களையும் ஏன் விட்டு கொடுக்க வேண்டும்!! நாங்கள் ஒன்றும் அவர்களை போன்று சாபம் விடுவதில்லையே!! எங்கள் கோபம் தனிப்பட்ட மனிதன் மேல் கிடையாது, அவர்கள் 'ஒன்றும் இல்லாதவர்களிடம் கற்று கொண்ட சத்தியத்தை" அநாகரீகமாக சொல்லுவதன் மேல் தான்!!

அநாகரீத்தை விட்டு விட்டு நேரடியான விவாதத்திற்கு, ஆரோக்கியமாக வசனத்தை மாத்திரம் வைத்து இவர்களால் ஒரு போதும் வாதாட முடியாது!! ஆகவே தான் ரவுடித்தனம் செய்து என்னமோ கிறிஸ்தவத்திற்கு இவர்கள் அதிபதிகள் போல் நடந்தும் எழுதியும் வருகிறார்கள்!! வசன ஆதாரத்தை கான்பிக்க முடியாமல் தினறுகிறார்கள் "ஒன்றும் இல்லாதவர்களிடம் சத்தியத்தை" கற்று கொண்ட கூட்டத்தார்!!

யோவான் எழுதிய ஒரு சுவிசேஷமே போதும், பிதாவாகிய தேவன் யார் என்றும் கிறிஸ்து யார் என்றும், புரிவதற்கு!! அதை கூட வாசிக்க மனமில்லாம, பாரம்பரிய பாடல்கள், துதிப்பாடல்களினால் தங்கள் விசுவாசத்தை வளர்ப்போர் இப்படி தான் ரவுடித்தனமா எழுதுவார்கள்!! அவர்களுக்கு வசனம் முக்கியம் இல்லை, தாங்கள் என்ன கற்றுக்கொண்டோம் என்றும், தாங்கள் என்ன எழுதுகிறோம் என்பது தான் முக்கியம்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

தமிழ் வேதாகமத்தை மொழிப்பெயர்த்த "பரிசுத்தவான்களுக்கு" வக்காலத்து வாங்கு வக்கில் சில்சாம் அவர்களிடம் ஏன் சில வசனங்கள் அடிஅப்பு குறி()க்குள் போடப்பட்டிருக்கிறது என்று கேட்க முடியுமா!? அதே நிறுவனத்தில் இருக்கும் மற்ற மொழியில் உல்ள பரிசுத்தவான்கள் என்ன வேறு ஆவியில் நிறைந்தவர்களா!! தமிழ் வேதாகமத்தில் கொடுக்கப்பட்டுல்ள 1 யோவான் 5:7 அதுவும் அடைப்புகுரிக்குள் தான் கொடுக்கப்பட்டிருக்கிறதே, வேதாகம சொசைட்டியின் மற்ற மொழி "பரிசுத்தவான்களுக்கு" தமிழ் வேதாகமத்தை மொழிப்பெயர்த்தை "பரிசுத்தவான்களுக்கு" சொல்லி கொடுத்த "ஆவி" வரவில்லையோ, அவர்கள் மாத்திரம் 1 யோவான் 5:7ஐ விட்டு விட்டார்களே (பாவம்)

திரு சில்சாம் அவர்களுக்கு சொல்லி கொள்வது என்னவென்றால் நாங்கள் சொல்லி ஏதோ ஒரு சிலர் தான் இடற முடியும், ஆனால் உங்கள் போன்ற "சுவிசேஷர்கள்" "ஊழியர்களுக்கு" கூட்டம் அதிகம்!! பிசாசானவன் இந்த குறைந்த கூட்டத்தை விட்டு விட்டு பெரிய கூட்டத்தை தான் வசியப்படுத்துவான், அதை தான் செய்துக்கொண்டு இருக்கிறான்!! தங்களின் செவிக்கு தினவான வார்த்தைகளினால் தங்கள் தளத்தை நிறப்பி வருவோரை மாயைக்குள் இட்டு செல்லுங்கள்!!

கேட்டுக்கு போகிற வாசல் விசாலமாக இருக்கும், அநேகர் அதில் நடந்து செல்வார்கள் என்பது தான் வசனம்!! முடிந்தால் மறுத்துவிடுங்கள்!! எங்களுக்கு வசனமும் வார்த்தையும் தான் முக்கியம், உங்களை போன்ற "தமிழ் ஞானம்" இல்லை!! மேலும் "மூல வியாதியில் முக்குவோர்" யார் என்றால், உட்கார்ந்து "உழைக்க மனம்" இல்லாதவர்கள் தான்!! நாங்கள் உழைத்து அதன் பின் கிடைக்கும் நேரத்தில் தான் தேவ வார்த்தைகளை சொல்லி வருகிறோம்!! இது எங்களுக்கு "முழு நேர தொழில்" உங்கள் பானியில் "முழு நேர ஊழியம்" கிடையாது!! நேரம் எடுத்து, யோசித்து, அநேகரை கேட்டுக்கு செல்லும் பாதையில் நடத்தவும் பிசாசின் உபதேசங்கள் கொடுத்து அநேகரை வசப்படுத்த "வாழ்த்துக்கள்" தங்களின் "ஊழியம்" யாருக்கு என்று வெளிப்படும் நாள் விரைவில் வரும்!! அந்த நாள் வரும் போது யார் வெட்கப்பட்டு போவார்கள் என்பதை பார்க்கலாம்!!

உங்களை போன்று நாங்கள் யாரையும் "நரகத்திற்கு" தள்ளுவதில்லை!! பிதாவை பிதா என்றும், குமாரனை குமாரன் என்றும் அழைக்கிறோம்!! பிதாவிற்கான மகிமை பிதாவிற்கும் குமாரனுக்கு உரிய கனம் இயேசு கிறிஸ்துவிற்கு செலுத்துகிறோம்!! "எல்லா மனுஷர்களும்" இரட்சிக்கபடுவார்கள் என்பதையும் வேதம் சொல்லுவதன் மூலம் அறிந்திருக்கிறோம்!! ஆனால் உங்கள் போன்ற ஊழியர்கள் அதையும் மறுப்பார்கள்!! கிறிஸ்து மரித்தார் என்று வேதம் சொல்லியும் இல்லை இல்லை அவர் மரிக்கவில்லை, கூடு விட்டு கூடு பாய்ந்தார் என்று சொல்லுவீர்கள், ஏனென்றால் உங்களின் விசுவாசத்தை பாரம்பரிய பாடல்கள், துதி பாடல்கள் மூலமாக வலர்த்து வருகிறீர்கள்!! உங்களை போன்றவர்கள் பரப்பிய பொய் பிரச்சரமான "இயேசு கிறிஸ்து மரிக்கவில்லை" அவர் கூடு விட்டு கூடு பாய்ந்தார், என்பதிலிருந்து தான் சில மார்க்கத்தாரும், சில "அறிஞர்களும்" கிறிஸ்து சாகாமல், சிலுவையில் இருந்து தப்பித்து விட்டு "காஷ்மீர்" போன்ற இடங்களில் கல்லறை வைத்துக்கொண்டார், என்று துனிகரமாக சொல்லுகிறார்கள்!! இதற்கு வேறும் ஆதாரமும் உங்களை போன்ற "ஊழியர்களே" என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Veteran Member

Status: Offline
Posts: 46
Date:

Yes, 1 john 5:7 not found in 15 century manscript

__________________
T.balaji


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

மிருகங்களையே வனங்கி வந்த நபர் பார்ப்பவர்களையெல்லாம் மிருகமாக தான் பார்ப்பார் போல்!! பல தெய்வங்களை வனங்கி இருந்தவருக்கு இங்கேயும் அதையே தான் தேடுகிறது!! ஆகவே ஒன்றான மெய் தேவன் என்று சொல்லுவதையே தூக்கி சாப்பிட்டு அவர் திரியேக தேவன் என்று சொல்லி திரிந்து ரவுடித்தனம் செய்வது அசிங்கமாக இருக்கிறது!!

தமிழ் பரிசுத்தவான்களுக்கு ஆவியானவர் சொல்லி கொடுத்திருக்கிறார்!! மளையாலத்திலோ, தெலுங்கிளோ, கன்னடத்திலேயோ அவர் மறந்துவிட்டார் போல் ஆகவே தான் அங்கே அவர்கள் "தமிழ் வேதாகமத்தில்" சொறுகியது போல் சொறுகவில்லை!!

//யோவான்.1:12 மற்றும் 3:16 மட்டும் அடங்கிய குட்டியூண்டு வேதம் கூட என்னுடைய இரட்சிப்புக்குப் போதுமானது;கெளம்புப்பா..!//

உம்மை போன்றோர் தான் பாடல்களில் விசுவாசத்தை வளர்க்கிறவர்களாச்சே, வசனமே இல்லாமல் இருந்தால் கூட தான் பேசுவீர்களே!! நாய் சூரியனை பார்த்து ஊளையிட்டாலும் சூரியனுக்கு பிரச்சனை இல்லை!! போப்பா!! உம்முடைய தளத்தில் இருக்கும் ஆடுகளை மெய்த்து அதுகளுக்கு தீனி போட்டு கொண்டு இரு!! இத்தோடு அநாகரிகமாக எழுதுவதை நிறுத்திக்கொள்ளும், இனியும் சாக்கடைக்குள் கால் விட நாங்கள் விரும்பவில்லை!!

//இவ்வளவு எழுதிய பிறகும் சில மிருககுணமுள்ள மனிதர்கள் தொடர்ந்து அடுத்தடுத்த அஸ்திரங்களை எடுத்து வீசுகிறார்கள்;இதோ மற்றுமொரு புரட்டு..."15ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட கிரேக்க கையெழுத்துப் பிரதிகளில் 1.யோவான்.5:7 இடம் பெறவில்லை;15ம் நூற்றாண்டுக்குப் பிறகே உள்நோக்கத்துடன் திரித்துவக்காரர்களால் அது சேர்க்கப்பட்டது " என்கிறார்கள்; சரி இருக்கட்டும், என்ன பிரச்சினை? //

உம‌க்கு தான் 300 வ‌ருட‌ம் முன் வ‌ந்த‌ வேத‌ம் மாத்திர‌ம் தானே தெரியும், இத‌ற்கு உம‌க்கும் ச‌ம்ப‌ந்த‌மே கிடையாது!! உமக்கு புரியாது!! உம‌க்கு தெரியாத‌ விஷ‌ய‌த்தில் ஏன் த‌லையிட‌வேண்டும்!! நீர் என்ன‌ கிறிஸ்துவ‌த்தை குத்த‌கைக்கு எடுத்து இருக்கிறீரோ!! நீர் சொல்லியும் அல்ல‌து எழுதிய‌தை அப்ப‌டியே நாங்க‌ள் ஏற்றுக்கொண்டு வ‌ர‌ வேண்டும் என்கிற அவசியம் எங்களுக்கு இல்லை!! அத‌ற்கு உம்முடைய‌ த‌ள‌த்தில் இருப்பார்க‌ள் உம்மை துதிப்பாடிக்கொண்டு, அவ‌ர்க‌ளிட‌ம் போய் 300 வ‌ருட‌த்தில் வ‌ந்த‌தையே சொல்லிக்கொண்டு இருப்பா!!

//அதான் உங்களுக்கு இரட்சிப்பு என்பதோ- சுவிசேஷம் என்பதோ தேவையில்லையே பிறகு ஏன் கெடந்து தவிக்கவேண்டும்?//

இந்த‌ ஒரு வ‌ரியே போதும் நீர் எங்க‌ளை எந்த‌ அள‌விற்கு ப‌டித்திருக்கிறீர் என்று!! ஒருவ‌னை ம‌ட்டப்ப‌டுத்தி எழுதுவ‌தை த‌விற‌ உம‌க்கு வேறு வேலையே இல்லையா!! இதுவே கடைசியாக இருக்கட்டும், இப்படி ஆதார‌ம‌ற்ற குற்ற‌ம் சாட்டுத‌ல்!! கிறிஸ்த‌வனாக‌ இருந்தால் ஆரோக்கிய்மான‌ வ‌ச‌ன‌னத்தை கொண்டு வாதாடும் சும்மா‌ தெருக்கார‌னை போல் எழுத‌வேன்டாம்!! உம‌க்கு தெரிந்த‌தை உம்முடைய‌ த‌ள‌த்தில் வைத்துக்கொள்ளும், எங்க‌ளை எங்க‌ள் வேலையை பார்க்க‌ விடும்!! சுவிசேஷ‌ம் என்றால் என்ன‌வென்று தெரியாத‌வ‌ர்க‌ளுக்கு சுவிசேஷ‌ம் என்கிற‌ வார்த்தையை ப‌ய‌ன்ப்ப‌டுத்த‌ கூட‌ அருக‌தை கிடையாது!!

முடிந்தால் வ‌ச‌ன‌த்தை கொண்டு வாதாடும், தேவையில்லாத‌ அநாக‌ரீக‌ம் த‌ள‌ங்க‌ளில் கொண்டு வ‌ர‌வேண்டாம்!! எழுதுவ‌த‌ற்கு முன் என்ன‌த்தை எழுதுகிறோம் என்று எங்க‌ள் த‌ள‌த்தை வாசித்து பிற‌கு எழுதும்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

நாய்களுடன் போராடும் தெருக்காரனுடன் போராடி நமக்கு தான் நேரம் விரியம்!! சாக்கடைக்குள் காலை விட்டால் நமக்கு தான் நாற்றம்!!

நாகரீத்தை குறித்து வாய்கிழிய பேசும் சில்சாமின் வார்த்தைகளை வாசகர்கள் கவனிக்க என் பதில்கலை நிறுத்தி விட்டு அவர் என்ன எழுதுகிறார் என்று தொடுப்பை கொடுக்கிறேன்!! முதுகெலும்பு இல்லாமல் இங்கே இருந்த பதிவுகளை நீக்கிவிட்டு ஓடி போனவருக்கு மருபடியும் இந்த தளத்தில் மேல் என்ன தான் தாகமோ, எங்களுக்கு தெரியாமலயே வந்து போகிறாரே!! பெண் பெயர் வைத்து ஒரு புனைபெயர் வேறு!!

தமிழ் வேதம் மாத்திரம் என்ன வானத்திலிருந்து தூதர்கள் வந்து கொடுத்து போனார்களா!! அதே காய்ந்து போன ரொட்டிக்காரர்களை பார்த்து மொழிபெயர்த்தது தான் என்று "மொழி வெறியருக்கு" தெரியவில்லை போல்!! நாங்கள் மொழி பற்று வேண்டாம் என்று சொல்லவில்லை ஆனால் அதற்காக அதில் உள்ள தப்பிதங்களையும் கண்மூடித்தனமாக ஏற்று கொள்ளும் அளவிற்கும் இல்லை!!

இயேசுவை அப்பா என்றும் பிதாவை இயேசு என்று சொல்லுவதும் இருவரை (சாரி மூவரை) ஒருவர் ஆக்குவது இவர் இருந்த பழைய மார்க்கத்தின் சுவடுகள் தான்!! வசனம தெளிவாக இருக்கிறது, இவரின் புரிந்துக்கொள்ளுதல் அப்படி என்றால் நாம் தான் என்ன செய்ய முடியும்!! உங்கள் வீட்டு நாய்க்குட்டிக்காவது ஒழுங்காக‌ சொல்லி தர வேண்டியது தானே, எங்கள் வீட்டு பக்கம் காதை நீட்டி அறைகுறையாக புரிந்து உங்களிடம் கேட்கிறதே!!

300 வருடங்களுகு முன்னானதை மாத்திரம் கையில் வைத்துக்கொண்டு ஆதி சபையை பற்றி பேசவே தகுதி கிடையாதவர்கள் எங்களுக்க்கு அறிவுறை வளங்க வேண்டியதில்லை!! சுவிசேஷம் என்றால் என்ன என்று கூட தெரியாமல் சொல்லுவது எல்லாம் சுவிசேஷம் என்று பிதற்றும் கூட்டம் என்னத்தை சாதிக்க போகிறது என்று புரியவில்லை!! மனுஷக்குமாரன் வரும் போது விசுவாசத்தை காண்பாரோ என்கிற வசனம் இவர்களின் பார்வைக்கு தெரியவில்லை போல்!! அதான் பாடல்கலை வைத்து விசுவாசத்தை வளர்த்தவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை!! சண்டைக்காரன் போல் யாரிடமும் சுவிசேஷம் சொல்ல சொல்லி கட்டளையில்லை!! எல்லா மொழிகளிலும் வேதம் வந்து விட்டது, சுவிசேஷம் எல்லா இடங்களுக்கு போய் விட்டது, ஏற்பவர்கள் தான் மனம் மாறுவார்களே தவிர உங்களை போல் மதம் மாற்றுவது தேவ நோக்கம் கிடையாது!!

உங்களுக்கு ஒரு கொசுறு செய்தி. உலகத்திலேயே வேகமாக வளர்ந்துக்கொண்டு இருக்கும் மதம் இஸ்லாம் தான்!! கிறிஸ்தவத்திற்குள் சபைகள் வேண்டுமென்றால் அதிகமாகிக்கொண்டு இருக்கலாம், ஆனால் சதவிகிதம் குறைந்துக்கொண்டு தான் போகிறது!! தேவ வசனம் நிறைவேறியே தீரும், மனுஷர்களின் வாஞ்சைகள் இல்லை!! முதலில் அவர் வழி என்னவென்று தெரிந்துக்கொள்ளுங்கள் அப்புறம் உங்கள் விருப்பத்தை நிறைவேற்றலாம்!!

நாங்கள் எங்கே இருக்க வேண்டும் என்று தெருக்காரர்களிடம் கேட்டு தெரிந்துக்கொள்ளும் நிலையில் நாங்கள் இல்லை!!

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=39729174



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

bereans wrote:
//முடிந்தால் வ‌ச‌ன‌த்தைக் கொண்டு வாதாடும்//

வசனம் இல்லாததால்தானே இத்தனை ஆத்திரமும் வேகமும்!

“நானே அவர்” என இயேசு சொன்னதை “நானே அவர் (யெகோவா)” என வசனங்களைப் புரட்டினால்தான் இவரது திரித்துவக் கொள்கையை நிரூபிக்க முடியுமேயொழிய நேர்மையாக வசனங்களைக் கையாண்டு இவரது திருத்துவக் கொள்கையை ஒருபோதும் நிரூபிக்க இயலாது.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

நன்றி அன்பர் அன்பு அவர்களே!

ஒன்று வசனம் தெரியாது!! அடுத்தது இருக்கும் வசனத்தை தப்பிதமாக பாரம்பரியத்துடன் ஒப்பீட்டு புரிந்துக்கொள்வது!! எல்லாவற்றுக்கும் மேல் பாரம்பரிய பாடல்கள், துதிப்பாடல்கள் மூலமாக தன் விசுவாசத்தை வளர்ப்பது!! ஒன்றும் நிருபிக்க முடியாவிட்டால், ரவுடித்தனம் செய்து மிரட்டுவது, சபிப்பது!! இது தான் அவர்களின் பன்புகள்!!

இயேசு கிறிஸ்து உவமையில் பேசியதை அப்போஸ்தலர்களும் தான் புரியாமல் அவரிடம் கேட்க்கிறார்கள், ஏன் உவமைகலில் பேசுகிறீர் என்று, அதற்கு இயேசு கிறிஸ்து சொன்ன பதில்.

மத். 13:10. அப்பொழுது, சீஷர்கள் அவரிடத்தில் வந்து: ஏன் அவர்களோடே உவமைகளாகப் பேசுகிறீர் என்று கேட்டார்கள். 11. அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. அவர்களுக்கோ அருளப்படவில்லை.

சிறு மந்தையை குறித்து பேசினால் அதற்கும் கோபம், புரியாதவர்களுக்கு நான் எழுதுவது புதிராக தான் இருக்கும்!! வேதம் அதையே சொல்லுகிறது!!

தேவன் யார் கிறிஸ்து யார் என்பதை தெரியாமல் யாரை தான் ஆராதிக்கிறார்களோ, எவரை தான் சொல்லி தருகிறார்களோ!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

என்ன செய்வது என்று புரியாதவரின் புலம்பல்.................வசனத்திற்கு பதிலாக சாபத்தையும் ரவுடித்தனத்தை வெளிப்படுத்தும் ஒரு தமிழ் பண்டிதரின் குறைப்பு....

தேவனுக்கு பயந்து இருக்கும் எனக்கு ஒரு புழுவின் சாபத்தின் மேல் எல்லாம் அச்சம் கிடையாது!! எங்கள் விசுவாசத்தை தொடர்ந்து எழுதுவேன்!!  நீர் உண்மையான கிறிஸ்தவன் என்றால் வசனத்தை கொண்டு மோதிப்பார்!! உம்முடைய எழுத்துக்கள் பிசாசின் குனத்தை தான் வெளிப்படுத்துகிறதே தவிர வேறு ஒன்றும் இல்லை!! உம்முடைய சாபத்திற்கு பயந்து இல்லை, உம்மை போல் அறுவறுப்பான ஒரு ஆளுடன் இத்துனை நாட்கள் விவாதித்திருக்கிறேன் என்று நினைத்து வெட்கப்படுகிறேன்!! மற்றப்படி உம் சாபங்களை எல்லாம் உமக்கே வாழ்த்துகிறேன்!! மனிதர்களிடம் பேசலாம் அல்லது குறைந்தப்பட்சம் அந்த குனம் இருந்தால் கூட பேசலாம்....... ஆனால் ...........

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=39729174



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard