kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பைபிள் என்றொரு புத்த‌க‌ம்!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
பைபிள் என்றொரு புத்த‌க‌ம்!!


இறைவன் தள நிர்வாகி எழுதியது:

"சில தளங்களில் தங்கள் கருத்துக்கு ஒவ்வாத அல்லது தங்களுக்கு சிறிதேனும் பிடிக்காத கருத்துக்கள் இருந்தால் உடனே  நீக்கிவிடுவதுபோல, இங்கு நீக்கப்படுவது இல்லை."

சில காலம் முன்பு இந்த தளத்தின் கருத்துக்கு ஒத்து போகாத கருத்துக்களை நான் பதிவு செய்ததால், அதை நீக்கும்படி மன உலச்சலுக்கு உட்படுத்தப்பட்டு அந்த கருத்துக்களை நீக்க நிர்பந்திக்கப்பட்டேன். அதன் பிறகு அந்த தளத்தில் பதிவது கிடையாது. இந்த வரி என் தளத்திற்கு வேண்டுமென்றால் பொருந்தும், ஏனென்றால் கருத்துக்களை நான் நீக்கியதே கிடையாது, ஆனால் தனிப்பட்ட "செறுப்படி விழும்" போன்ற மட்டமான வார்த்தைகளால் "சகொ சில்சாம்" எழுதிய "மேலான கருத்துதை" நீக்கிவிட்டேன். ஆக எல்லா விதமான கருத்துக்கும் இறைவன் தளத்தில் இடம் உண்டு என்பது "பொய்"

"இங்கு எழுதப்படும் கருத்துக்களுக்கு பிற தளங்களில்  விமர்சனம் எழுதுவது பற்றி யாரும் கவலைப்படவேண்டாம்"

யாரும் கவலைப்படவில்லை என்பது புரிகிறது. வசனத்தை ஆராய மனதில்லாவர்கள் ஏன் கவலைப்பட வேண்டும். விமர்சனமும் தனிப்பட்ட மனிதர்கள் மேல் அல்ல, பதியப்படும் கருத்துக்களுக்கு தான் என்பதை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.

"இவ்வாறிருக்கையில், பைபிள் என்றொரு புத்தகத்தை மட்டும்  வைத்துகொண்டு அதற்க்கு உள்ளேயா? வெளியேயா? என்று பார்ப்பது அவசியமற்றது என்றே நான் கருதுகிறேன்."

சங்கீதம் 19:7 கர்த்தருடைய வேதம் குறைவற்றது

பைபிள் என்றொரு புத்தகம் மாத்திரம் தான் என்பவரிடம் தேவன் அந்த "ஒரு புத்தகத்தில்" உள்ள நல்லதையெல்லாம் விட்டு விட்டு அதில் உள்ள நரகத்தை மாத்திரம் வெளிப்படுத்தினார் என்பதில் ஆசரியம் ஒன்றும் இல்லையே!! தாராளமாக எல்லா மதத்தையும் பின் பற்றுங்கள். ஏனென்றால் எல்லா மதங்களும் அந்த மதங்கள் சொல்லும் படி தேவன பேசி தான் ஆரம்பித்து வைத்திருக்கிறார்.  கோவைபெரெயன்ஸ் என்கிற தளம் முற்றிலுமாக வேதத்தை சார்ந்து சத்தியத்தை போதிக்கும் தளம். இந்த தளத்தில் நாங்கள் ஆழமான சத்தியத்தை சொல்லுவதோடு  கிறித்துவத்தில் உள்ள ஓநாய்களின் தீய செயல்களை வெளிப்படுத்துகிறோம், இதில் உள்ள களைகளை  வெளிப்படுத்துகிறோம். மற்றப்படி இந்த தளம் வேறு எந்த மதத்தினரையும் காயப்படுத்தி ஒரு பதிவும் இது வரை வெளியிட்டதில்லை, அது எங்கள் நோக்கமும் இல்லை. இந்த தளத்தில் நாங்கள் விவாத மேடை தொடங்கியதே, இந்த எல்லாம் தெரிந்த தேவ மனுஷர்களிடம் விவாதிக்க தான்.

ஒரு குறிப்பிட்ட‌ மொழிப்பெய‌ர்ப்பை மாத்திர‌மே ந‌ம்பி அது ப‌ரிசுத்த‌ ஆவி கொடுத்த‌து என்று சொல்லி விட்டு இப்பொழுது அது "பைபிள் என்றொரு புத்த‌க‌ம்" ஆக‌ மாறியிருப்ப‌தும் ஆச்ச‌ரிய‌ம் தான். எதை தான் ந‌ம்புவ‌தோ!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

இறைவன் தள நிர்வாகி ஏதோ புது கருத்தை சொல்ல போகிறேன் என்று திரு சில்சாம் அவர்களிடம் வாங்கியிருக்கும் பதிவை பார்க்கலாம்

http://lord.activeboard.com/index.spark?aBID=134574&p=3&topicID=37737972

இறைவன் தள நிர்வாகி ஏதோ நான் தான் அவரின் எழுத்துக்கு எதிரி என்று நினைத்திருக்கிறார் போல். இப்படி வேத புத்தகத்தை மதிக்காத ஒருவருக்கு தேவன் வந்து பல வெளிப்பாடுகளை தருகிறார் என்று சொல்லுவது விந்தையிலும் விந்தை. இருக்கலாம் ஆனால் வருகிறது எந்த தேவன் என்பது தான் கேள்வி??



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

இப்ப்டி ஒரு பதிவுக்காகத்தானே காத்திருந்தோம். தேவ வசனம் "பைபிள் என்றொரு புத்தகம்" ஆகிவிட்டதிலிருந்தே தெரிகிறதா இந்த லூசு மாய்க்கானுக்கு புத்தி பேதலித்துவிட்டதென்று. மீண்டும் அந்தப் புதுமொழிதான் ஞாபகத்திற்கு வருகிறது. "நீ வாயைத்திறக்காதவரை உன்னை முட்டாளென்றுதான் எண்ணியிருந்தேன், உன் வாயைத்திறந்து அதை நிரூபித்துவிட்டாய்". இரண்டு மூடர்களின் வாத்ம் சூடுபிடித்துவிட்டது. வாசகர்களுக்குக் கொண்டாட்டம்தான்!


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=37771036

////ஏய் சோலு சொலிஷனு...ஆத்தும பிசினு...ஏதோ ஒரு கண்றாவி... உன்னுடைய பாராட்டுக்காக நான் இத எழுதல‌...நீ புத்திசாலியா இருந்தா சும்மா வேடிக்கை பாரு... கையாலாகாத நாயி ஊளையிட்டதாம்... டுபாக்கூரு..!

உன்னைத் திரும்ப திரும்ப நான் நாயின்னு மனப்பூர்வமா தைரியமா சொல்லக் காரணம் என்னன்னு தெரியுமா உன்னை பைபிள் கூட நாயின்னு தான் சொல்லுது... அதனால் தான் தைரியமா சொல்றேன்... ஏற்கனவே உன்னை நேரடியா வரச்சொன்னேன் முதுகெலும்பில்லாத மண்புழுவைவிட கேவலான நீயும் உண்மையத் (truth seekers..!) தேடிக்கிட்டு இருக்கே எப்பவாது கண்டுபிடிச்சா சொல்லிவிடு.../////

TRUTHSEEKERS த‌ள‌த்தில் தொட‌ர்ந்து ப‌திவுக‌ளை த‌ரும் (நான், ச‌கோ சோல் சொல்யுஷ‌ன்) நாங்க‌ள் எங்க‌ளை ஊழிய‌க்கார‌ர்க‌ள் என்று வேஷமிட்டு கொள்வதில்லை அப்படி ஒரு பதவியில் எங்களுக்கு நம்பிக்கையும் இல்லை. தேவன் தரும் வேதத்தின் ஞானத்தை நாங்கள் பகிர்ந்துக்கொள்கிறோம், இது நடக்கது என்றால் இது நிச்சயமாக தேவ சித்தமே! இப்படி ஒரு தளத்தை தேவன் தான் எங்களுக்கு ஏற்படுத்திகொடுத்திருக்கிறார். எங்கள் எழுத்தில் கோபம் வெளிப்படுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை

ஆனால் தங்களையே ஊஊஊஊஊஊஊஉழியக்காரர்(ன்) என்பவர்கள் கிறிஸ்துவை போதிக்கும் அதேவாயில் தான் இப்படி பட்ட வார்த்தைகளும் வெளியிடுவார்கள் என்பதற்கு சாம்பிள் இது. தன்னை ஊழியக்காரன் என்று மார் தட்டுவதற்கு தகுதி இல்லாத அர்ச்சனை இவரின் உண்மையான தன்மையை தான் காண்பிக்கிறது.என்னை பொறுத்தவரையில் ஊழியர்கள் என்று சொல்லி தன்னையே உயர்த்திக்கொள்வதில் ஒரு பிரயோஜனமும் இல்லை. "பெரிய பெரிய" ஊழியர்களை மிகவும் நெருக்கத்தில் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது, அவர்கள் "ஊழியம்" எப்படி என்று தெரியும்! சொன்னால் நாரி போய் விடும். இது தான் இவர்களின் இலட்ச்சனம். எப்படி தான் இன்னும் வாய் கூசாமல் தங்கலை "ஊழியன்" என்று மார்த்தட்டுகிறார்களோ!!

ட்ருத் ஸீக்கர்ஸ் என்கிற எங்கள் தளம் ஊழியர்களின் வியாபாரத்தை கெடுக்கும்படியாக இருப்பதால் தங்களை ஊழியர்கள் என்று சொல்லுபவர்கள் கோபித்துக்கொள்ள தான் செய்வார்கள்! கோபத்தில் அப்படிபட்ட ஊழியர்கள் இப்படி எழுதவும் பேசவும் தான் செய்வார்கள்! தேவனுக்கு மாத்திரமே பயந்து இருக்கும் எங்களுக்கு இந்த பூச்சி ஊழியக்காரர்களுக்கு பயப்பட அவசியமே இல்லை. அவர்களின் சாபங்களை குப்பைத்தொட்டியில் போடகிறோம். இந்த ஊழியர்களை பற்றி இன்னும் எழுதுவோம், இவர்களின் கேவலமான முகத்திறையை கிழித்தெறிவோம்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

இந்த தளத்தில் நாங்கள் வேதத்தை ஆராய தான் பயன்படுத்துகிறோமே தவிர ஆராதிக்க அல்ல, ஆகவே தான் ஒரே ஒரு மொழிப்பெயர்ப்பின் மேல் மோகம் கொண்டவர்களாக இல்லாமல், அநேக மொழிப்பெயர்ப்பை பார்த்து ஆராய்கிறோம். ஒரே ஒரு மொழிபெயர்ப்பை வைத்துக்கொண்டு அது தான் பரிசுத்த ஆவி எழுதி தந்தது என்று நம்புவதே தான் அந்த ஆராதனை. அதை சொல்லும் போது தான் சிலருக்கு கோபம் வந்து எழுதினார்கள், இப்பொழுதோ இப்படியும் எழுதுகிறார்கள். தங்களின் கருத்தில் ஒரு நிலை வேண்டாமா!!

வேதத்தில் உள்ளது படியே வாழமுயற்சிப்பதே பெரிய காரியம் தான், அதுவும் இந்த பொல்லாத பிரபஞ்சத்தில். ஒருவன் நான் முழுமையாக வேதத்தின்படி தான் வாழ்கிறேன் என்று சொல்லுகிறான் என்றால் அவனைவிட ஒரு பெரிய பொய்யன் இருக்க முடியாது!!

வேதம் என்பது தேவன் மனிதர்களை குறித்து வைத்திருக்கும் திட்டங்களை குறித்தான புத்தகம். அது மனிதர்கள் பேசும் ஒரு மொழியில் தான் எழுதப்பட்டிருக்கிறது. அப்படி பட்ட வேதத்தை ஏதோ வித்தியாசமான கன்னோட்டத்தில் பார்க்கிறோம், ஆவியில் பார்க்கிறோம் என்று பிதற்ருவது தான் வேதத்திற்கு செலுத்தும் ஆராதனையாகும். ஆனால் வேதத்தில் கொடுக்கப்பட்டது அனைத்தும் மனிதனுக்கு தேவையானது என்றும் போதுமானது என்பதும் நிச்சயமே!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

வேதம் உலகில் மிகவும் பழைய புத்தகங்களில் முக்கியமானது. கடந்த முப்பது நூற்றாண்டுகளின் புயலிலும் வாழ்ந்து வந்திருக்கும் ஒரு புத்தகம். தேவ வார்த்தைகள் அடங்கிய இந்த புத்தகத்தை இந்த பூமியில் இல்லாமல் செய்ய எத்தனையோ மனிதர்கள் (கிறிஸ்தவர்கள் உட்பட) வீனில் முயற்சித்திருக்கிறார்கள்; அவர்கள் அதை ஒழித்து வைத்திருக்கிறார்கள்; அதை எரித்தும் இருக்கிறார்கள், இதை வைத்திருப்பவர்களுக்கு மரண தண்டனை விதித்திருக்கிறார்கள், எல்லாவற்றுக்கும் மேல், இந்த புத்தகத்தின் மேல் நம்பிக்கை (விசுவாசம்) வைத்தவர்கள் மேல் யுத்தம் செய்து தண்டித்திருக்கிறார்கள், ஆனாலும் அந்த புத்தகம் இன்றும் உயிரோடு இருக்கிறது. இன்று, இதன் எதிரிகள் மரித்து அடங்கியிருக்கிறார்கள்; இந்த புத்தகத்தை எதிர்த்து பல புத்தகங்களை எழுதியவர்கள் நித்திரையில் இருக்கிறார்கள், அவர்கள் மறக்கப்பட்டுமிருக்கிறார்கள்; ஆனால் இந்த வேதம் உலகில் பேசப்படும் பேரும்பாளுமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இன்றும் உயிரோடு இருக்கிறது. இதிலிருந்து ஒரு விஷயம் நமக்கு நிச்சயமாக புரியவேண்டும், இந்த புத்தகத்தை அழிக்கும்படியாக நடந்த முயற்சிகள் நடுவிலும், இத்துனை எதிர்ப்புகளையும் தாண்டி இன்றும் இந்த புத்தகம் உயிரோடு இருக்கிறது என்றால், இதை காத்துக்கொண்டிருப்பவர் மனிதர்கள் அல்ல, இதில் உள்ள் வார்த்தைகளை தந்த, இந்த புத்தகத்தின் ஆக்கியோன், எல்லாவற்றையும் படைத்த அந்த தேவன் தாமே!!

இப்படி பட்ட ஒரு மகத்துவமான புத்தகத்தை சிலர் "பைபிள் என்றொரு புத்தகம்" என்று சொல்லுவது வேதனையாக தான் இருக்கிறது. வேதத்தை அறியாதவர்கள் சொன்னால் கூட பரவியில்லை, இதை தந்த தேவனே என்னிடம் வந்து பேசுகிறார் என்று சொல்லுபவர்கள் இதன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை தான் எப்படி பட்டதோ!?



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 147
Date:



-- Edited by chillsam on Wednesday 8th of September 2010 05:30:17 PM

__________________
"Praying for your Success"


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

உங்களுக்கு எல்லாம் பிச்சை எடுத்து சாப்பிட்றவன் சொன்னால் கூட தான் சுவிசேஷம். அவன் பரலோகம் போய்விட்டு இப்போ தான் வந்தேன், நரகத்தில் கால் நனைத்து வந்தேன் என்று விடும் புருடாவெல்லாம் இனிக்கும், அது தானே உம்மை போன்றோருக்கு சுவிசேஷம்.

பாபிலோன் சபையில் இருந்து கொண்டே இத்துனை தெனவட்டா!? தேவனுக்கு தெரியும் யாரிடம் எதை காண்பித்து தர வேண்டும் என்று, பிச்சை எடுத்து சாப்பிடும் கும்பலில் தங்களின் சுவிசேஷ பணி வளரட்டும்.

வேதத்தில் இத்துனை புத்தகங்களில் தேவனின் திட்டம் இருப்பதால் தான் அதை எடுத்துக்கொண்டிருக்கிறோம், இதில் முதல் புத்தகத்தை மோசே தான் எழுதினார் என்றால் அதற்கு எல்லாம் சாட்சி கொண்டு வர முடியாது, தேவனின் தன்மைகள் அந்த எழுத்துக்களில் வெளிப்படுகிறது, அதை யார் எழுதியிருந்தால் தான் என்னா!? தள்ளுபடி ஆகாமங்கள் என்று அவர்களை, உங்களை போல் அசுத்த ஆவி நிறைந்த சபைகள் ஒதுக்கவில்லையா.

இந்த 66 புத்தகங்களை தர தேவன் அவர்களில் சில யோக்கியமானவர்கலை பயன் படுத்தினார். ஆனால் உங்களை போல் உழைக்க விரும்பாதோர், நரக பரலோக விஸிட் கதைகளையும் சேர்த்து அதை 666ஆக மாற்றினாலும் ஆச்சரியம் இல்லை, அந்தி கிறிஸ்துவின் ஆவி உடையவர்களே!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 147
Date:



-- Edited by chillsam on Wednesday 8th of September 2010 05:30:06 PM

__________________
"Praying for your Success"


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

தம்பி, உங்கள் கூட்டத்தார் போல் பிறரை சுரண்டி சாப்பிடாமல் இருப்பதால், எனக்கு எல்லாம் இரவு நல்ல தூக்கத்தை தான் தேவன் தந்துக்கொண்டிருக்கிறார்!! நல்ல ஆரோக்கியத்துடன் தான் என்னை காத்துக்கொண்டும் இருக்கிறார்!! உங்களை போல் ஊரை ஏமாற்றுவதற்காக முழு இரவு ஜெபம் போன்றவற்றிலும் நான் ஈடுப்படுவதில்லை, என் ஜெபம் வீதியில் நின்று கத்தும் மாயக்காரரை போல் இல்லாமல், பூட்டிய அறைக்குள்ளேயே தான் இருக்கும். என் ஜெபம் எனக்கும் என்னை படைத்தவரிடம் பரிந்து பேசும் என் தலைவனாக இருக்கும் கிறிஸ்துவிற்கும் இடையில் தான், ஆகவே எனக்கு ஊரை கூட்டனுமே, பிசாசை துரத்துனமே என்கிற டென்ஷன் எல்லாம் கிடையாது!!

மத்தேயு 6:5 அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப் போலிருக்கவேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

உம்முடைய கூட்டனிக்கு தான் இந்த வசனம் என்றாவது புரிகிறதா!! இது போல் இன்னும் இருக்கு,

உமக்கு ஏற்ற பதிலை தான் தந்திருக்கிறேன், 666 குட்டத்தாரே!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard