kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஐந்தரை கோடி....!


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
ஐந்தரை கோடி....!


சாது சுந்தர் செல்வராஜ் என்று ஒரு அண்டப்புளுகன். தன்னுடைய சொந்த டி வி சேனலில் இவன் செய்யும் அழும்பு சொல்லிமுடியாது. சமீபமாக இவனும் இயேசுவும் பரஸ்பரம் பேசிக்கொள்வது மற்றவர்களுக்குக் கேட்பதில்லை என்பதால் ஏதோ ஒரு புது கருவி வாங்கவேண்டுமாம். அதற்கு ஜஸ்ட் ஒரு ஐந்தரை கோடி ரூபாய் வேண்டுமாம். அது வாங்கி வைத்துவிட்டால் இவர்கள் பேசுவது எல்லாருக்கும் கேட்கும்படி செய்துவிடலாமாம். 
அதற்கும் ஆமாம் சாமி போட்டு பணம் கொடுக்கத்தான் முட்டாள் கிறிஸ்தவர்கள் மலிந்துவிட்டார்களே?
இதுவும் செய்வாங்க, இதுக்கு மேலேயும் செய்வாங்க....




__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

ஏன், இவர்கள் பிரசங்கம் செய்யும் அந்த "இயேசு சாமி" அவ்வுளவு ஏழையா!! ஒரு ஐந்தரை கோடி இவர்களுக்கு கொடுத்து உதவ முடியாதவரா!! காது இருக்கு என்ரு இவர்கள் பூ சுற்றுவதற்கு அளவே இல்லாமல் போய் விட்டது!! இயேசு கிறிஸ்து யார் என்றும் அவரின் மகத்துவம் என்ன வென்றும் இந்த குருடர்களும், செவிடர்களும் அறிய மாட்டார்கள். இவர்கள் அறிந்தது எல்லாம் ஓசியில் சாப்பிட்டு, இவர்கள் கானும் அபத்தமான கணவுகள் தேவன் தான் கொடுத்தார் என்றும் ஏதோ ஒரு பிசாசிடம் பேசி விட்டு, நாங்கள் இயேசு சாமியிடம் (கிறிஸ்து என்னும் இயேசு என்று இவர்களுக்கு உச்சரிக்கவே வராது) பேசினோம் என்று ஏ.சி ஸ்டுடியோவில் அடுத்தவர்கள் பணத்தில் மேல் வலித்தவர்களாக சோம்பேரிகளாக சோஃப்பாக்களில் உட்கார்ந்து நேரத்தை செலவிட்டு, இன்னும் இப்படி பேச பிச்சை கேட்பார்கள். அதிலும் தமாஷ் என்னவென்றால் இவர்களை போலவே கணவுகள் பார்த்து சொல்லும் மற்றவர்களை இவர்களு குறை கூறுவது. இவர்களுக்கு கொடுத்தால் தீர்க்கதரிசியின் பலனை அடைவார்கள் என்று விளம்பரம் வேறு, இவர்களை போல் உள்ள தீர்க்கதரிசியின் பலன் என்னவென்று பார்ப்போமா,

மத். 7:22. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.

23. அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.

பிரியமானவர்களே, இது தான் இவர்கள் போன்ற தீர்கதரிசிகளுக்கு உண்டான பலன், இதை அடையவா இத்துனை பேர் போட்டி போட்டு கொண்டு பணத்தை தருகிறார்கள்!? இதற்கு அடுத்த வசனத்தை வாசித்து, உங்கள் வீடுகளை கன்மலையின் மேல் கட்டுங்கள், ஏனென்றால் அந்த கன்மலை கிறிஸ்துவே, தயவு செய்து மணல் போல் உள்ள இந்த கள்ள தீர்கதரிசிகள் மீது கட்டாதீர்கள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

தமிழகத்தை சேர்ந்த இன்னோரு ஊழிய வாரிசு குடும்பம் 3.5 கோடியில் தேவனை ஆராதிக்க ஒரு ஆடிட்டோரியம் கட்ட காசு கேட்கும் வேட்டையில் இருக்கிறார்களே! அப்புறம் திறப்பின் வாசல், ஜெப கூடம், ஜெப மைய்யம், ஜெப கோபுரம் போன்றவற்ற கட்ட காசு வேட்டை ஆங்காங்கே நடந்துக்கொண்டு இருப்பது அனைவருக்கும் தெர்நிததே!! இயேசு கிறிஸ்துவோ தனிமையில் ஜெபிக்கும்படியாக அதிகலையிலையில் வனாந்தரித்திற்கு புறப்புட்டு போவாராம், இவர்களை போல் மேற்கொண்டவைகளை கட்டி தான் ஜெபிக்கவேண்டும் என்று சொல்லி தரவில்லை. யாரிடம் கற்றுக்கொண்டு யாரை பிரசங்கம் செய்துக்கொண்டிருக்கிறார்களோ இவர்கள். இதை எழுதுவது இது போன்ற ஊழியர்கள் திருந்துவார்கள் என்று அல்ல, மாறாக வாசிக்கும் ஒரு உண்மை இருதயம் உள்ள கிறிஸ்தவன் இந்த வேஷதாரிகளின் கபடத்தை அறிந்துக்கொள்வார்கள் என்கிற ஆதங்கத்தில் தான். தேவன் தாமே அனைவரையும் வழி நடத்தட்டும்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 147
Date:



-- Edited by chillsam on Wednesday 8th of September 2010 05:05:43 PM

__________________
"Praying for your Success"


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

விரியன் பாம்பு குட்டிகளே, வெள்ளை அடிக்கப்பட்ட கல்லறைகளே, சாத்தானுக்கு பிறந்தவர்களே போன்றவைகளும் வேதத்தில் உள்ள வார்த்தைகளே. "சாத்துனுக்கு ஒப்பு கொடுத்தேன்" என்று பவுல் சொல்லுகிறார். இது எல்லாம் வயிற்றெரிச்சலினால் வந்த வார்த்தைகள் கிடையாது என்பது தாங்கள் அறிவீர்கள் என்று நான் நினைக்கிறேன். இவர்கள் வைத்திருக்கும் பணத்திற்கோ வசதிக்கோ நாங்கள் எதிரி அல்ல, மாறாக அதை சம்பாதிக்க இவர்கள் செய்து வரும் தந்திரங்களுக்கு அதுவும் தேவனின் நாமத்தை பயன்படுத்தி செய்து வரும் "ஊழியங்களை" நிச்சயமாக வெளிப்படுத்து கடமைபட்டிருக்கிறோம். இதில் என்ன தவறு? இவர்கள் போன்றவர்களை வெளியரங்கமாகும் நாள் சமீபமாக தான் இருக்கிறது. யாரையும் ஆதாயப்படுத்தும் நோக்கம் அல்ல, மாறாக ஏமாறுவோரை ஏமாற்றுவோரிடமிருந்து தப்பிக்க செய்யலாமே.

குறும்தகுடகளில் "பரீட்ச்சை எழுதும் பிள்ளைகளுக்கு ஜெபம்" போன்றவற்றை போட்டு சம்பாதித்தார்களே, மாநில அளவில் இடம் பிடித்த மாணவர் பட்டியலை பார்த்தீர்களா!! இனி இவர்களின் ஸ்தாபனங்களில் பணம் கொடுத்து சாட்சிகள் இறக்குமதி செய்வார்கள். இதை பார்த்தும் இன்னும் இந்த வேஷதாரிகளை செய்யும் வியாபாரத்தை நம்ப சொல்லுகிறீர்களா. சரியான வழியை காண்பிக்க முடியாவிட்டாலும் தவறான வழிகளை வெளிப்படுத்துவதும் சிறந்ததே என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. இது அவர் அவர் எடுத்துக்கொள்ளும் விதத்தில் தான் இருக்கிறது. மேலும் நாங்கள் மனுஷர்களை விரோதிகளாக நினைக்கவில்லை, இவர்கள் கையாளும் தந்திரங்களையே சாத்தானின் தந்திரங்களுக்கு ஒப்பிடுகிறோம். மனசாட்சியை திறந்து சொல்லுங்கள், இது சரி தானா என்று!!

வஞ்சிக்கும் மனிதர்களிடம் (வஞ்சிக்கும் ஆவிகளின் தந்திரங்கள்) இருந்து காப்பாற்றுவது நிச்சயமாக தேவனுக்கு செய்யும் ஊழியம் தான். இது போன்ற சாத்தனின் கிரியகளுக்கு துனை போவது தான் யாருக்கு செய்யும் ஊழியம் என்று தெரியவில்லை!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 147
Date:



-- Edited by chillsam on Wednesday 8th of September 2010 05:05:20 PM

__________________
"Praying for your Success"


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

"மேலும் பரீட்சைக்கான ஜெப‌ சிடியின் நோக்கம் மற்றும் இலக்கு கிறித்தவர்களல்ல;எனவே தான் அவர்கள் இந்துக்களின் வழக்குப்படி 'ஆண்டவன்' என்று ஒருமையிலும் 'இறைவன் இயேசு' என்றும் தரம் தாழ்த்தி குறிப்பிடுகிறார்கள்;"

இதை தானே ம‌த‌ வியாபாரிக‌ள் என்று சொல்லுகிறோம். ஒரு திற‌மையான‌ வியாபாரியை போல் யாரிட‌ம் எப்ப‌டி பேச‌ வேண்டும் என்று தேவ‌னையே வியாபார‌ப்பொருளாக‌ வைத்திருக்கும் இவ‌ர்க‌ளை என்ன‌ த‌லைக்கு மேல் வைத்து மெச்சிக்க‌ சொல்லுகிறீர்க‌ளா!!

"நீங்கள் குறிப்பிட்டதுபோல வெற்றிபெற்ற மாணவர்களை விலைகொடுத்து வாங்கி அவர்கள் பெற்ற வெற்றிக்கு இவர்கள் சொந்தங்கொண்டாட முடியாது;இந்த கருத்து வெற்றிபெற்றவர்களைக் கொச்சைப்படுத்துவதாகும்; "

இது ந‌ட‌க்குதா இல்லையா என்று மாத்திர‌ம் பொருத்திருந்து பாருங்க‌ளே!!

"மற்றபடி 'செட்டப்' பண்ணுகிறார்கள்,என்று நாமே சொன்னால் பிறகு நமக்கும் இந்துவெறியனுக்கும் வித்தியாசமில்லாமற் போகும்..!"

வெறி பிடித்த‌வ‌ர்க‌ள் எல்லா ம‌த‌ங்க‌ளிலும் இருக்கிறார்க‌ள், கிறிஸ்த‌வ‌ம் உட்ப‌ட‌. இந்த‌ த‌ள‌த்தில் நான் வேறு ம‌த‌த்தின‌ரை தேவை இல்லாம‌ல் குறை கூற‌ விரும்ப‌வில்லை. ந‌ம் வீட்டை இருட்டாக‌ வைத்துக்கொண்டு அடுத்த‌வ‌ன் வீட்டில் வெளிச்ச‌ம் இல்லையே என்று சொல்லுவ‌து போல் இருக்கிற‌து.

என்னுட‌ன் வேலை பார்க்கும் ஒரு ஹிந்து ச‌கோத‌ரி, "கிறிஸ்த‌வ‌ர்க‌ளை நான் ரொம்ப‌ ந‌ல்ல‌வ‌ங்க‌ன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஒரு முறை ஒரு ச‌ர்ச்க்கு போனேன். அங்கே பிர‌ச‌ங்க‌ம் செய்துக்கொண்டு இருந்த‌வர், ஹிந்துக்க‌ள் எல்லாம் பிசாசை வ‌ன‌ங்குகிறார்க‌ள், என்று ரொம்ப‌வும் கொச்ச‌யாக‌ பேசினார் சார்! என்று என்னிட‌ம் சொன்னார்க‌ள்! ஒரு ம‌த‌ வெறிய‌னின் பேச்சை கேட்ட‌தால் அவ‌ர்க‌ளுக்கு முழு கிறிஸ்த‌வ‌ ச‌முதாய‌மே இப்பொழுது க‌ச‌க்க‌ ஆரம்பித்து விட்ட‌து. இது தான் ந‌ம்ம‌வ‌ர்க‌ள் த‌ரும் சாட்சி. ப‌வுல் கூட‌ விக்கிர‌க‌ங்க‌ள் நிறைந்த‌ அந்த‌ கிரேக்க‌ர்க‌ள் ம‌த்தியில் இப்ப‌டி ப‌ட்ட‌ ஒரு போத‌னையை த‌ர‌வில்லை.

இவ‌ர்க‌ள் (கிறிஸ்துவிற்காக ஊழியம் செய்கிறோம் என்கிறவர்கள்) ப‌ண‌ம் என்னும் பிசாசை தானே என்னிக்கொண்டு இருக்கிறார்க‌ள்!! இவ‌ர்க‌ளே பிசாசை வ‌ண‌ங்கிக்கொண்டு பிற‌ர் பிசாசை வ‌னங்குகிறார்கள் என்று சொல்ல‌ எந்த‌ த‌குதியும் இல்லை.

மேலும் நீங்க‌ள் த‌ந்திருக்கும் "ப‌ழ‌மொழிக‌ளோ, புதுமொழிக‌ளோ" என‌க்கு அர்த்த‌ம் புரிய‌வில்லை. முடிந்தால் விள‌க்க‌மாக‌ எழுதுங்க‌ள்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 147
Date:



-- Edited by chillsam on Wednesday 8th of September 2010 05:05:06 PM

__________________
"Praying for your Success"


Senior Member

Status: Offline
Posts: 147
Date:



-- Edited by chillsam on Wednesday 8th of September 2010 05:04:53 PM

__________________
"Praying for your Success"


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சகோ சில்சாம் அவர்களே,

தாங்கள் இந்த தளத்தின் மேல் வைத்திருக்கும் அன்பிற்கு மிக்க நன்றி. தங்களின் முயற்சியால் அநேகர் இந்த தளத்தை பார்வையிட்டு செல்கிறார்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அதற்கும் நன்றி! இது சபை பாகுபாடற்ற ஒரு கிறிஸ்தவ தளம். நடப்பது அனைத்திலும் தேவனின் சித்தம் இருக்கிறது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையுடையவன் நான். எது நடந்தாலும் தேவனின் மகிமைக்கென்றே நடக்கட்டும்.

நிர்வாகி
கோவைபெரெயன்ஸ்



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 147
Date:



-- Edited by chillsam on Wednesday 8th of September 2010 05:04:40 PM

__________________
"Praying for your Success"


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

முன்பே எழுதியது போல் "நடப்பது அனைத்தும் தேவனின் சித்தமே" அது நம் வெற்றியாக இருந்தாலும் சரி தோல்வியாக இருந்தாலும் சரி என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. அந்த வெற்றியை அல்லது தோல்வியை சந்திக்க நடத்தி செல்பவரும் அவரே. தோல்வி என்றால் அது நம் விசுவாசத்திற்கு வரும் ஒரு சோதனை என்றே நான் என்னுவது. வெற்றி என்றால் அது தேவன் தந்த ஒரு கிருபை என்பது என் விசுவாசம்.

500 பேரா 5 பேரா என்கிறபடி கணக்கு பார்த்து என்ன! வருவோருக்கு பிரயோஜனமாகவும், தேவனின் நாமம் மகிமைப்படவுமே என் முயற்சி. கர்த்தர் நடத்தட்டும்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

சிங்கிளாக வரும் சிங்கங்கள் போதும் இத்தளத்திற்கு. சிறு மந்தை சிறியதுதான். வஞ்சிக்கப்படுவதற்குத்தான் 'அநேகர்' தேவை.

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Member

Status: Offline
Posts: 147
Date:



-- Edited by chillsam on Wednesday 8th of September 2010 05:04:18 PM

__________________
"Praying for your Success"


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

வசனத்திற்கு விளக்கம்தராமல் டாபிக்கை மாற்றி தளத்தைவிட்டே கோபித்துக்கொண்டு ஓடுவதுபோன்ற 'சீன்' காட்டினால் வாசகர்களுக்குப் புரியாதென்று எண்ண வேண்டாம். யாரும் உங்களைப் போன்ற அறிவாளிகளை வருந்தி தளத்துக்கு அழைக்கவில்லை. போய் உங்கள் பித்தலாட்ட 'ஊழியத்தை' தொடருங்கள். முடிவு வரை மாய்மாலத்தில் இருந்து மற்றவர்களையும் உங்கள் பரிசுத்த வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ளச் சொல்லுங்கள்.

வசனத்துக்கு விள்க்கமளிக்க வக்கில்லை வாய் மட்டும் காதளவு நீளுகிறது. கோபம் கொப்பளிக்கிறது. சத்திய வசனம் இப்படித்தான் ஊடுருவிக் கிழிக்கும். பிசாசின் பிள்ளைகள், பேய்த்தனத்துக்கு அடுத்தவைக்ளின் மேல்தான் வாஞ்சை கொள்வார்க்ள்.

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு....

இனித் தவறியும் கூட இத்தளத்துக்கு வரவேண்டாம். நீ பிசாசின் பிள்ளை இல்லை என்று நிரூபிக்க வேண்டுமென்றால் வசனத்துக்கு வசனத்தின் மூலம் பதில் பதி. அதை மட்டும் விட்டுவிட்டு என்ன ஒரு ஆக்டிங். வசனத்தை மதிக்காத எவனுக்கும் நாங்கள் மதிப்பு கொடுப்பதில்லை. வீண்பேச்சு வேண்டாம்.

போய் உங்கள் சுரண்டித்தின்னும் வேலையைத் தொடருங்கள்.   Solution    என்ற வார்த்தைக்கு "தீர்வு" என்ற ஒரு அர்த்தம் உண்டு என்பதைக்கூட அறியாத முட்டாள் போதகனிடம் மாட்டிக்கொண்ட ஆடுகளை நினைத்துத்தான் கவலையாக உள்ளது.

தெரியாமத்தான் கேட்கிறேன் உங்களூக்கெல்லாம் வெக்கமே இல்லையா?

உங்களைப் போன்ற ஓநாய்களுக்குத்தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று கர்த்தர் போதித்தார்.

போ .... போய் பிழைப்பை கவனி!

மஞ்சள் பத்திரிக்கை, நீலப்படம் இதெல்லாம் உன் சபையோடு வைத்துக்கொள் இங்கு உன் ஊத்தைவாயைத் திறந்து நீ யார் என்பதை நிரூபிக்க வேண்டாம்.

வசனத்தைக் கேட்டால் வாயிலிருந்து வரும் வார்த்தைகளைப்பார். நீதான் எந்தப் பாஸ்டர் மனைவி யாரோடு ஓடிப்போனாள் என்று வேறுதளத்தில் பதித்து உதைவாங்கினவனாச்சே. கெஞ்சிக்கூத்தாடி அனுமதிகேட்டு தளத்துக்கு வரவேண்டியது அப்புறம் செருப்படிவாங்கி ஓடிப்போக வேண்டியது. உழைச்சி சாப்பிட்டாதானே சொரணையிருக்கும், காலம்பூரா குடும்பமே அடுத்தவனைச் சொரண்டித்திண்ணா சொரணை எப்படி இருக்கும்?




__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard